Sunday, May 25, 2025

3 charama shlokas of vaishnavites

மங்களமான சரம ஸ்லோகங்கள் பற்றி ....
சரம என்றால் இறுதி  ultimate எனப் பொருள்.  அந்தணர்கள் இறந்தவர்மீது இரங்கல் ஸ்லோகம் சொல்வது வழக்கம். அவர் பெயரை வைத்து இயற்றப்படும்.  அதற்கு சரம ஸ்லோகம் என பெயர். நமக்கு அது எதற்கு. நாம் பகவான் தனது இறுதியான உறுதியான உத்தரவாதம் தந்துள்ள ஸ்லோகங்களை பார்ப்போம். அவையும் சரம ஸ்லோகங்கள் எனப்படும். (மங்களம் எனத்தான் மேலே ஆரம்பித்து உள்ளேன்) 

ஶ்ரீமந் நாராயணர் பக்த வத்ஸலர். ஸரணாகத வத்ஸலர். அவர் தனது பக்தர்களுக்கு புராணங்களில் தான் கட்டாயம் அவர்களை காப்பதாக உறுதி அளிக்கும் 3 சரம ஸ்லோகங்கள் உள்ளன. ஶ்ரீ வைஷ்ணவர்கள் அவற்றை கொண்டாடுவதில் வியப்பு என்ன!  

1. ஶ்ரீராமர் விபீஷண ஸரணாகதி கட்டத்தில் சொன்ன சரம ஸ்லோகம்

ஸக்ருதேவப் ப்ரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே
அபயம் ஸர்வ பூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம

~ என்னை ஒரேமுறை சரண் அடைந்து நான் உன்னைச் சேர்ந்தவன் காப்பாற்று என ஒரு உயிரினம் யாசித்தால்,  அவர்களுக்கு அபயம் கட்டாயம் கொடுப்பேன். இது எனது விரதம்

2. ஸர்வ தர்மான் பரித்யஞ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:

இது கண்ணன் கீதையில் தந்த வாக்குறுதி.
வேறு தர்மங்களை செய்யாமல் விட்டுவிட்டாலும் கவலை கொள்ளாதே. என்னை சரணாகதி அடைந்தாலே போதும். நான் தர்மம் கைவிட்டதால் உண்டான பாவங்களை நீக்கி ஸத்கதி தருவேன்

இந்த ஶ்ரீராமரும் கண்ணனும் அவர்களை சரண் அடைய சொல்கிறார்கள். ஆனால் நம் வராஹ ஸ்வாமி அருளிய மூன்றாவது சரம ஸ்லோகத்தை கொஞ்சம் பார்ப்போம்

3. ஸ்லோகம்
~~~~
ஸ்திதே மனஸி ஸுஸ்வஸ்த்தே ஸரீரே ஸதி யோ நர:
தாது ஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வரூபம் ச மாமஜம் !
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண ஸன்னிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் !!

~~~~|~|||

ஓ பக்தர்களே. நீங்கள் கபம் வாதம் பித்தம் என்ற மூவகை தாதுக்கள் ஸம அளவில் நிற்க,  உடம்பு நலமாக உள்ளபோது உங்கள் மனம் ஆரோக்யமாக ஸாந்தமாக உள்ளபோது பிறப்பற்ற என்னை என் விஸ்வரூபத்தை எப்போதும் நினைத்து பூஜியுங்கள்.
அவ்வளவு தான் உங்கள் வேலை. மனிதனாக பிறந்த வருக்கு இறப்பு நிச்சயம். அது நெருங்குங்கால் உங்கள் உடலானது மரக்கட்டை மற்றும் பாறைபோல அசைய இயலாது கிடக்கும்.  என்னை நினைக்கும் நினைவோ ஸக்தியோ முயற்சியோ இயலாது போகலாம். கவலை வேண்டாம். நான் உன் நிலை அறிவேன். என் பக்தனின் கோரநிலையை நான் நினைப்பேன். உத்தம கதி தந்துவிடுவேன்.

~~~  ஶ்ரீராமரும் க்ருஷ்ணரும் கூட பரமபதம் பற்றி குறிப்பிடவில்லை. ஶ்ரீ பூவராஹரே அந்த பரம புருஷார்த்தத்தை தானே முன் வந்து தருவதாக ப்ரதிஞ்ஞை செய்கிறார்.  அவர்கள் சொன்னது போல  அல்லாது தானே நம்மை நினைப்பதாக சொல்வது மேன்மைதானே !!!.

மூவரும் ஶ்ரீமஹாவிஷ்ணுவின் விபவங்கள் அவதாரங்கள் தான். எனவே ஶ்ரீமந் நாராயணரை ஸரணம் அடைவோம். பாவங்களை தொலைப்போம். நல்ல புத்தி பெறுவோம். இறுதியில் நற்கதி அடைவோமாக~~~~~~~~ வனமாலி

Saturday, May 24, 2025

Never underestimate anybody; Stay Humble - Real incident

*Never underestimate anybody; Stay Humble.* 

THE SALES GIRL IN CHENNAI GIRI STORE, THROUGH THE EYES OF "WASHINGTON POST."

After the Temple Darshan at the Kapaleeswarar Koil at Mylapore, Chennai, we entered the "Giri Trading Stores" 
and started searching for a book on "Thatva Bodha".

We found many people buying various Books and CDs and from their smart walks and accumulation of CDs from Abhang to Aruna Sairam and Bhajans to Bombay Jaishree, sent a nice feeling in us, that we have come to the right place indeed.

I was looking for this Book while my wife started collecting Bharathiar's songs and MS's Music CDs. I searched 
everywhere for this Book.

There was this Girl, standing next to the Cashier, sincerely watching all our movements. A dark complexioned girl, should be from a nearby village, might be 17 or 18 years of age, should not have crossed 8th Std. Might be out of poverty she is here. All my Journalist brain unnecessarily calculated about this Gullible Girl, and though she was repeatedly
watching me, I ignored her and started searching for "Thathva Bodha".

I saw many books from "Sandhya Vandanam" to Swami VIvekananda's "Chicago Speech" after having spent a 
good 40 minutes. I looked at her, she also looked at me curiously.

I did not ask her, knowing fully well that such a girl cannot have any idea of anything, leave alone "Thathva Bodha".

"Sir, may I help you?" (in Tamil)
"Yes. I am looking for 'Thatva Bodha'.
"Sanskrit Text or English/Sanskrit?"
God..she knows. "Sanskrit & English"
"Do you like to have the Publication from Chinmaya Mission or Indu Publications or by Ramakrishna Mutt?"
"I don't know..I just want to only learn. You see.. I don't really know, indeed"
"Do you read Tamil Sir?" "Yes, I am a Tamilian " (thinking to myself how most of mylife time I like to act in most other places that I am not). "Then Sir, you can take this"..she ran to the shelf where I had searched for 30 minutes, removed the books in
the front and came out with a Book in Tamil. "This one in Tamil by N.Sivaraman by Indu Publications. Infact it is simple and wonderful. You have the Sanskrit Text too inside."

My God! Why did I under estimate such a Genius girl? Just because of my arrogance that I am an NRI or just 
because I presumed such a black, dark complexioned gullible girl, who would have come for this job out of absolute poverty, wouldn't have any idea of "Thatva Bodha"?

I decided to change my attitude and realized that I am absolutely an 'Idiot' at this moment in front of this wonderful girl and submitted myself in all humility. "Madam, I really don't have any idea of even who wrote 'Thatva 
Bodha' till yesterday. I just attended a lecture on this subject and was fascinated by the lecture and hence....."

"Did you attend Goda Venkateswara Sastri's lecture in Bharathiya Vidya Bhavan?" 
"Oh God. How did she know?"
He regularly takes classes on such subjects. In fact he is one of the best Sir, in the city on such subjects.
You are interested in such subjects?
Yes Sir, I read a lot about Swami Vivekananda and Ramakrishna and Thathva Bodha incidentally is my favourite Subject.
Do you mean to say you have read "Thatva Bodha?" 
I have read this one by Sivaraman. Once you read it you won't feel like keeping that book on the table at all."

Why what is so great about this Book? Sir, you must be joking that you don't know about 'Thatva Bodha'.
Really. I accept my ignorance.

My wife was watching from the corner, admiring all her CD collections.

Sir, according to me, if you read this it gives the entire Vedanthic Saramsam and to say it in one word you become a bit more humble in life, leaving Ahamkaram once for all.

Is it a fact that reading this simple book one would get so humble?
Of course one should be involved totally into the text. Needs a lot of conviction and devotion.

My wife joined the conversation and she felt this girl is indeed a very very talented, intelligent girl, so she told 
me, "Why don't you interview her for Washington Post?" Why at all you should think of Paris Hilton?

I also felt that I owe something to her. So, I asked her whether she can spare sometime for an interview.

She politely refused, saying "My boss has to give me permission". Besides, many people are looking for guidance 
or help, like you and hence I have to go.

What is your name?
"Kalaivani."

My wife's admiration for her devotion to duty and her total involvement in her work, made her go direct to the Boss and said, "Sir, that girl Kalaivani."
"Yes, very hard working Girl."
"This is my husband Viswanath."
"Nice meeting you Sir".
"He is the Senior Journalist in Washington Post."
The Boss stood up." Washington Post?"
"Yes Sir. I would like to interview this girl. I am highly impressed with her ethics."

The Boss called her. The time was 5:45 PM. "Kalaivani, they have come all the way from USA., They would like 
to spend some time with you. Can you?"

"Sir, there are so many customers waiting for some guidance as it is a rush time. If they can come again 
tomorrow, I can.
"Okay. I can come again tomorrow."
I came back next day morning leaving all my appointments with 'Times of India 'and "Madras Press Club just to see this girl. It was not a rush hour. 

My wife and myself found out, Kalaivani is from a small village near Arcot. She has five sisters, and she is the eldest. Her father was a drunkard and he died a few years ago caring for none of them. Her mother used to work as 
a helper in masonry work and passed away two years back, leaving all the six on the streets.

This girl who had completed her 9th Std. decided to search for a job and 'Giri Trading' came forward to help her out. She brought up all her five sisters with her and with her meagre salary. She is taking care of them. All the five sisters are going to a nearby Chennai Corporation School.

Kalaivani, when did you get this enthusiasm to learn about 'Thatva Bodha'?"

"Sir after joining here, I decided that the best way to be of help to the customers is to know the Subject first. I took small Books on Ramana, Ramakrishna, Swami Vivekananda and started reading. I found the subject so fascinating.
I decided to read other books in Tamil like Bhagavad Gita, and Viveka Choodamani. Thats how...."

"What is your salary?"
"Rs 2,500/ a month, Sir."
"Are you able to manage all your expenses with the 5 sisters?"
"Not at all Sir, but the Boss helps me a lot."
"What is your aim in Life ?"
"I want all my sisters to get education. Then they would easily get employment. Is it not Sir?"
"If I give you Rs. 10,000 per month, for meeting all your expenses, would that suffice?"
"It is indeed too much, but I would accept it only through my Boss."
We took her to the Boss and told him that we would like to send Rs.10,000 every month so that all her sisters' education would be completed.

The Boss said "She deserves it Sir. You can trust me - I will hand over the amount to her every month 
or alternately you can open an account in her name and start transferring to the account."

My friend John Paul, who is the Regional Manager of 'Times of India' had also come with me. He said, "You have done a good thing."
My wife said, "I pray that 'Karpagambal' helps Kalaivani to become an expert in 'Vedantha' and start giving lectures in USA . We can arrange for her lectures."

We left wonder struck! If we go into the interiors of India, how many more 'Jewels' like Kalaivani can 
be found!!

I really became humbled!
Really the above incident teaches you an important lesson. Be humble and open always. Never underestimate others without knowing them. It can be misleading.

Soundarya lahari - Lakshmidhara bhashyam

ஸ்ரீ வித்யா ஸமய மத வைபவம் :

ஸ்ரீஸௌந்தர்யலஹரிக்கு ஸ்ரீலக்ஷ்மீதரர் இயற்றிய "லக்ஷ்மீதரா" பாஷ்யம்

41வது ச்லோகத்திற்கான லக்ஷ்மீதரரின் பாஷ்யத்தில் சிறிது ஸ்ரீவித்யா ஸமயாச்சார மதமே பரம ஸத்யம் என்பதும், அதனுடைய வைபவமும்,

1) அத꞉ ஸமயபூஜகா꞉ ஸமயின꞉ . தேஷாம்ʼ ஷட்சக்ரபூஜா ந நியதா, அபி து ஸஹஸ்ரகமல ஏவ பூஜா. ஸஹஸ்ரகமலபூஜா நாம ஸஹஸ்ரகமலஸ்ய பை³ந்த³வஸ்தா²னத்வேன தன்மத்⁴யக³தசந்த்³ரமண்ட³லஸ்ய சதுரஶ்ராத்மனா, தன்மத்⁴யபி³ந்தோ³꞉ பஞ்சவிம்ʼஶதிதத்த்வாதீதஷட்³விம்ʼஶாத்மகஶிவஶக்திமேலனரூபஸாதா³க்²யாத்மனா ச அனுஸந்தா⁴னம். 

"ஸ்ரீவித்யா ஸமய மத ரீதியில் ப்ரஹ்மோபாஸனையில் விளங்குவோர், ஸமயர் எனப்படுவர். அவர்கள் ஷடாதாரங்களைக் காட்டிலும், முக்யமாக ஸஹஸ்ராரத்திலேயே ஸ்ரீபராசக்தியை வழிபடுவர். ஸஹஸ்ராரமே மஹாபிந்து. சந்த்ர மண்டலமே சதுரச்ரம். பிந்து ஸ்தானத்தில் இருபத்தைந்து தத்வங்களுக்கு அப்பாலுள்ள இருபத்தாறாவது தத்வமான அகண்ட ஸச்சிதாநந்தமான சிவசக்தி ஐக்யத்தை ஸாதாக்யா எனும் ஷோடஸி கலையாக த்யானிப்பர்

2) அத ஏவ ஸமயிமதே பா³யாராத⁴னம்ʼ தூ³ரத ஏவ நிரஸ்தம். ஷோட³ஶோபசாரரூபபூஜாங்க³கலாபஶ்ச தூ³ரத ஏவ..
ததா²ஹி - ஆதா⁴ராதி³ஷட்சக்ராணாம்ʼ த்ரிகோணாதி³ஷட்சக்ரத்வேன தாதா³த்ம்யம், பி³ந்து³ஸ்தா²னஸ்ய ஸஹஸ்ரகமலத்வேன தாதா³த்ம்யம்ʼ, பி³ந்து³ஶிவயோஸ்தாதா³த்ம்யம். ஏவம்ʼ தே³வீஶிவயோஸ்தாதா³த்ம்யமிதி தாதா³த்ம்யத்ரயம். சக்ரமந்த்ரயோ꞉ ஐக்யம்ʼ பூர்வமேவோக்தமிதி, தேன ஸஹ சதுர்தா⁴ ஐக்யம்ʼ ஸமயினாம்ʼ ஸமயாராத⁴னமிதி மஹத்ரஹஸ்யம்..
அத்ர கிஞ்சித் உச்யதே.

"ஸமயம் எனும் மஹாமதத்தில் பாஹ்யாராதனம் முக்யமில்லை. ஷோடஷோபசாரம் முதலானவையும் முக்யமில்லை. ஆறு ஆதாரங்களும், த்ரிகோணம் முதலிய ஆறு சக்ரங்களுடன் தாதாத்ம்யம் ஆகிறது. ஸாக்ஷாத் பிந்துவே ஸஹஸ்ரார சக்ரம். பிந்துவே சிவனுடன் தாதாத்ம்யமாகிறது. தேவிக்கும் சிவனுக்கும் தாதாத்ம்யம். ஸ்ரீசக்ரத்திற்கும் ஸ்ரீவித்யைக்கும் தாதாத்ம்யம். இந்த ஐக்யாநுஸந்தானமே பூஜை.

3)ஸமயினாஞ்சதுர்விதை⁴க்யானுஸந்தா⁴னமேவ ப⁴க³வத்யா꞉ ஸமாராத⁴னமித்யேதத் ஸர்வஸம்மதம். கேசித்து ஷோடா⁴ ஐக்யமாஹு꞉ யதா² - நாத³பி³ந்து³கலாதீதம்ʼ பா⁴க³வதம்ʼ தத்த்வமிதி ஸர்வாக³மரஹஸ்யம். நாத³꞉- பராபஶ்யந்தீ-மத்⁴யமா- வைக²ரீரூபேண சதுர்வித⁴ இதி ப்ராகே³வோக்தம் . பரா த்ரிகோணாத்மிகா, பஶ்யந்தீ அஷ்டகோணசக்ரரூபிணீ, மத்⁴யமா த்³வித³ஶாரரூபிணீ, வைக²ரீசதுர்த³ஶாரரூபிணீ. ஶிவசக்ராணாம்ʼ அத்ரைவ அந்தர்பா⁴வ꞉

"இந்த சதுர்வித ஐக்யாநுஸந்தானமே ஸமயிகளுக்கு முக்யமாகும். இதைத் தவிற ஆறுவித ஐக்யமும் ஸமயிகளுக்கு முக்யம் (ஆறுவித ஐக்யத்தைப் பற்றி ஸுபகோதயத்தில் 12 வது ச்லோகத்தில் உள்ளது. பின்னர் விரிவாய்க் காணலாம். நாத பிந்து கலைகளின் ஐக்யபாவமே இது)

ஆனால் பகவதியின் ஸ்வரூபம் நாத பிந்து கலைகளுக்கு அப்பாற்பட்டது. ஆயினும் நாத பிந்து கலைகளுடனும் அம்பாள் ஐக்யபாவமாக விளங்குகிறாள்

நாதத்தின்‌ ஐக்யம் இங்கே விளக்கப்படுகிறது

நாதம் நான்கு வகைப்படும். பரா, பச்யந்தி, மத்யமா, வைகரீ

பரா -- த்ரிகோணத்தில் ஐக்யம்

பச்யந்தி -- அஷ்டகோணத்தில் ஸமன்வயம்

மத்யமா -- இரண்டு தசாரங்களில் தாதாத்ம்யம்

வைகரீ -- சதுர்தசாரத்தில் தாதாத்ம்யம்

இவையெல்லாம் சக்தி சக்ரங்களாயிற்றே. சிவசக்ரங்களுடன் எவ்வாறு நாதம் ஸம்மேளனம் ஆகிறது என்றால் நவசக்ரங்களிலும், மேற்குறிப்பிட்ட ஐந்து சக்தி சக்ரங்கள், மற்ற நான்கு சிவசக்ரங்களுடனும் அபின்னமாகி விளங்குவதால், நவகோணத்மகாமான மஹாஸ்ரீசக்ரம் நாதத்துடன் ஸமன்வயமாகிறது.

4) ஷட்சக்ராணி மூலாதா⁴ரஸ்வாதி⁴ஷ்டா²னமணிபூரானாஹதவிஶுத்³த⁴யாஜ்ஞாத்மகானி பி³ந்து³ஶப்³த³வாச்யானி பூர்வமேவ உக்தானி. கலா꞉ பஞ்சாஶத், ஷஷ்ட்யுத்தரத்ரிஶதஸங்க்²யாகா வா . ஏவம்ʼ நாத³பி³ந்து³கலாதீதா ப⁴க³வதீதி.
ஸஹஸ்ரகமலம்ʼ பி³ந்த்³வதீதம்ʼ பை³ந்த³வஸ்தா²னாத்மகம்ʼ ஸுதா⁴ஸிந்த்⁴வபரபர்யாயம்ʼ ஸரகா⁴ஶப்³த³வாச்யம். நாதா³தீததத்த்வம்ʼ து த்ரிபுரஸுந்த³ர்யாதி³ஶப்³தா³பி⁴தே⁴யம் 'த³ர்ஶாத்³ருʼஷ்டா த³ர்ஶதா' இத்யாத்³யபரபர்யாய - 'கஏஈல ஹீம்' இத்யாதி³மந்த்ரவர்ணநாமக - பஞ்சாஶத்³வர்ணாத்மக - ஷஷ்ட்யுத்தரத்ரிஶதஸங்க்²யாபரிக³ணிதமஹாகாலாத்மக - பஞ்சத³ஶகலாதீதா ஸாதா³க்²யா ஶ்ரீவித்³யாபரபர்யாயா சித்கலாஶப்³த³வாச்யா ப்³ரஹ்மவித்³யாபரபர்யாயா ப⁴க³வதீதி நாத³பி³ந்து³கலாதீதம்பா⁴க³வதம்ʼ தத்த்வமிதி தத்த்வவித்³ரஹஸ்யம். 

"மூலாதாரம் முதற்கொண்டு ஆஞ்ஞா பர்யந்தம் விளங்கும் ஆறாதாரங்களைத் தாண்டிய ஸஹஸ்ராரம் என்பது பிந்துவைக் கடந்த மஹா பைந்தவஸ்தானமே. அம்ருதகடல் எனவும் ஸுரகா எனப்படுவதும் இதே. நாதாதீதம் எனப்படுவது த்ரிபுரஸுந்தரி முதற்கொண்ட நித்யைகளும், க ஏ ஈ ல ஹ்ரீம் எனப்படும் மந்த்ர எழுத்துக்களுமே. இவளே மஹாவித்யை. ப்ரஹ்மவித்யை. ஐம்பது அக்ஷர வடிவான மாத்ருகாம்பா. 360 கிரண வடிவான ரச்மி மாலா தேவதைகளும் இவளே. பதினைந்து கலைகளுக்கப்பாற்பட்ட பதினாறாவது மஹாகலா. ஸாதாக்ய கலா, சித்கலா என பற்பல விதமாக உணரப்படுபவள்.

பிந்துவைக் கடந்து விளங்கும் ஸஹஸ்ராரத்தில் விளங்குவதாலும், பதினைந்து கலைகளுக்கு அப்பாற்பட்டு விளங்குவதாலும் இவள் பிந்துவிற்கும் கலைகளுக்கும் அப்பாற்பட்டவள். 

நாதத்தைக் கடந்தவள் என்பது முன்னால் கூறப்பட்டது.
 ஆக, நாதம் பிந்து கலை ஆகியவற்றைக் கடந்த ப்ரஹ்மஸ்வரூபிணி ஸாக்ஷாத் மஹாவித்யா த்ரிபுரஸுந்தரி.

4) நிஷித்வாசாரோயம் நிகம விரஹோ அநிந்த்ய சரிதே

"நிஷித்வமான ஆசாரத்தையுடையோர்களால் மூலாதார ஸ்வாதிஷ்டானாதிகளை மட்டும் லக்ஷ்யமாயுடைய பூஜையில் பகவதி த்ருப்தியடைவதில்லை"

5)அத்ர நாத³பி³ந்து³கலானாம்ʼ பரஸ்பரைக்யானுஸந்தா⁴னம்ʼஷோடா⁴ ப⁴வதீதி ஷோடா⁴ ஐக்யமாஹு꞉.. ஏவம்ʼ ப⁴க³வதீ ஷட்³விதை⁴க்யேன ஸம்பா⁴வ்ய பூஜயித்வா ஸாதா³க்²யாயாம்ʼ விலீனோ ப⁴வதி. தத³னந்தரம்ʼ ஷட்³விதை⁴க்யானுஸந்தா⁴னமஹிம்னா கு³ருகடாக்ஷஸஞ்ஜாதமஹாவேத⁴மஹிம்னா ச ப⁴க³வதீ ஜ²டி³தி மூலாதா⁴ரஸ்வாதி⁴ஷ்டா²னாத்மகசக்ரத்³வயம்ʼ பி⁴த்வா மணிபூரே ப்ரத்யக்ஷம்ʼ ப்ரதிபா⁴தி

"நாத பிந்து கலைகளுக்கு அப்பாற்பட்டு விளங்குபவள் பகவதி. ஆனால் நாத பிந்துக்களின் ஐக்யத்திலும் விளங்குகின்றாள். ஸகலத்தையும் ஐக்யப்படுத்தி ஸாதாக்ய கலையில் விலீனமடைவதே மோக்ஷம். இந்த ஐக்யானுபாஸ்தியாலும், குருகடாக்ஷத்தினால் ப்ரஹ்மமாகவே ஆகிற ஸ்திதியினாலும், பராசக்தி மூலாதாரத்திலும், ஸ்வாதிஷ்டானத்திலும் துளையிட்டுப்புகுந்து மணிபூரகத்தில் ப்ரத்யக்ஷமாகிறாள்

-- தொடரும்

ப்ரஹ்மவித்யா ஸ்வரூபிணி காமாக்ஷி பராபட்டாரிகா சரணம்

-- ஸர்வம் லலிதார்ப்பணம்

Friday, May 23, 2025

Story of vedanta desikar

ஸ்வாமி தேசிகன்  -  நங்கநல்லூர்  J K  SIVAN அடைக்கலப்பத்து  --    பாசுரம்  8

ஒவ்வொரு விடியற்காலையும் தூப்புல் கிராம அக்ராஹாரத்தில் அந்த கணீர்  வெண்கல குரல் கேட்கும். அற்புதமான ஸ்லோகங்களை பக்தி பாவத்தோடு பாடிக்கொண்டு உஞ்சவிருத்தி எடுத்து வரும் அந்த முதியவரை கால் அலம்பி நமஸ்கரிக்க காத்திருப்பார்கள்.  ஏற்கனவே  அங்கிருந்த வைணவர்கள் முடிவெடுத்தாயிற்று. இன்று ஒரு வித்தியாச பிக்ஷை பண்ணவேண்டும்.  அவரை மகிழ்விக்க வேண்டும் என்று. 
ஆகவே அன்று வழக்கத்தை காட்டிலும்   அநேகர் ஆர்வமாக  சுவாமி தேசிகர் வரவை எதிர்நோக்கி இருந்தனர்.  தூப்புல் கிராமம்  சிறியது. ஒரு சில  தெருக்கள்மட்டுமே  கொண்ட அக்ரஹாரம்.  அன்று ஏன் அநேகர்  என்ற  காரணம்  அவர்களுக்கு தெரியும். வழக்கம் போலவே  
தனது  உஞ்சவிருத்தி பாத்திரத்தை எடுத்துக்கொண்டு  ஸ்வாமிதேசிகர்  அந்த தெருவில் நுழைவதற்கு முன்பு கணீரென்று  காஞ்சி  வரதராஜ பெருமாள் மீதான ஸ்லோகம்   இசையோடு  அந்த அக்ரஹாரத்தில் நுழைத்து விட்டது.   ஒவ்வொரு வீட்டு வாசலிலும்  அக்ஷதையோடு  ஆண்களும் பெண்களுமாக  பிக்ஷை இடுவதற்கு நின்று   கொண்டிருந்தார்கள்.அவர்களது அக்ஷதையில் விசேஷமாக இன்று பொன்னாலான அரிசி  தானியங்களும் மணிகளும்  கலந்திருந்தன.  

இந்த காலத்தில்  நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்  ஒன்றை ஞாபகப்படுத்துகிறேன்.  தானியம்  விற்பனை செய்யும் வியாபாரிகள்  அரிசி பருப்பு   எடை கூட வேண்டும் என்பதற்காக பொருத்தமான  கற்களையும்  பிளாஸ்டிக் பொருள்களையும் வாங்கி  அந்த அரிசி  பருப்பு தானியங்களோடு கலந்து விற்பனை  செய்கிறார்கள் என்று படிக்கிறோம், யூ ட்யூப் வீடியோ பார்க்கிறோம்.   இதற்கென்றே தானியங்களில் கலக்கும் அதே நிற கற்கள் விற்பவர்களிடம் இருக்கும். நல்லவேளை கலப்படத்தில் கலப்படம் இல்லை.  நியாயமாக கலப்பட கல்  விற்பனை செய்து பணம் சம்பாதித்து வீடு கட்டுகிறார்கள்.

அன்று வழக்கத்தை விட   சீக்கிரமாகவே சுவாமி தேசிகனின் உஞ்சவிருத்தி பாத்திரம்  நிரம்பிவி விட்டதால்  அவர்  வீட்டுக்கு திரும்பினார்.

'' அம்மா கனகவல்லி,  பெருமாள் அனுக்ரஹம் ,   இன்று   சீக்கிரமே திரும்பி விட்டேன்.   இந்தா இதை வைத்து  இன்று பிரசாதம் தயார் செய். வரதனுக்கு  ஆராதனை செய்து பிரசாதம் உண்போம்.''  என்கிறார்  தேசிகன்.

கனகவல்லி  பாத்திரைத்தை வாங்கி பார்த்தவள்  அதிசயித்தாள் .'

'' நாதா, இன்று  என்ன  அக்ஷதையில்  பல பளபளவென்று ஏதேதோ   கலந்திருக்கிறதே''  என்றாள்  மனைவி கனகவல்லி.

தேசிகர்  அக்ஷதை பாத்திரத்தை பார்த்தார்.   இது வரை அவர் அதை பார்க்கவில்லையே.  அதில் அரிசி, தானியங்களோடு   பொன்னும் மணியும் கலந்திருந்ததை கண்டு முகம் வாடியது.  ஒரு குச்சியால்  ''இந்த புழு பூச்சிகளை அப்புறப்படுத்து முதலில் '' என்கிறார்.  ஜன்னல் வழியே  பக்தர்கள்  அடியார்கள் கொடுத்த பொன்னும் பொருளும் வெளியே தூக்கி  எறியப்படுகிறது. இதை   கவனித்துக் கொண்டிருந்த பக்தர்கள் கண்களில் நீர் வழிய அவரை வணங்குகிறார்கள்.
இதனால் அன்று அவர்களது உணவுக்கு தேவையான அரிசியும் குறைந்து விட்டது. அரைப்பட்டினி.
இப்படி வாழ்ந்தவர்கள்  தேசிகர் தம்பதிகள்.   1317ல் அவர்களுக்கு  வரதராஜ பெருமாள்  அனுகிரஹத்தால் பிறந்த மகன் வரதாச்சார்யன்.எப்படிப்பட்ட  அப்பா!  அவரைப் பின்பற்றி வளர்ந்தான் வரதாச்சார்யன்.
அவனுக்கு கருட மந்திரம் உபதேசிக்க  திருவஹீந்திரபுரத்தில் கருடனை நோக்கி தவம் இருக்கிறார். கருடன் வேத ஸ்வரூபி அல்லவா?  பல நாள் விரதம். அங்கே  பெருமாள் சந்நிதிக்கு எதிரே ஒரு சிறு குன்றின் மேல் ஏறி கருட த்யானத்தில் ஆழ்கிறார். கருடன்  நேரில் வந்து காட்சி தந்து,  சுவாமி தேசிகனுக்கு ஹயக்ரீவ மந்த்ர உபதேசம் செய் கிறார்.  

கருடனை வணங்கி நமஸ்கரித்து  பின்னர்  தேசிகன்  கருடன் உபதேசித்த ஹயக்ரீவ மந்த்ர ஜபம் செய்கிறார். தேசிகன்  விருப்பப்படி ''என் நாவை விட்டு நீங்காதே ஹயக்ரீவா''  என்ற வேண்டுகோளை ஏற்ற  ஹயக்ரீவர், தேசிகன்   நுனி நாக்கில் தங்குகிறார்.

''இந்தா  இதை பெற்றுக்கொள். என்னை தினமும் உபாசி '  என்று  ஹயக்ரீவர்  தனது  உருவ  விக்கிரஹத்தை  தேசிகனுக்கு அளிக்கிறார். இன்றும்  அதை தரிசிக்க  நீங்கள் உடனே திருவஹீந்திரபுரம் செல்லவேண்டும்.  தேவநாத சுவாமி ஆலயம் பிரசித்தமானது. பலமுறை சென்று தரிசிக்க எனக்கு பகவான் அனுக்ரஹம் கிடைத்தது என் பாக்யம். 

சென்னைக்கு சற்றே தூரத்தில் கடலூர்  அருகே  இருக்கும்  திருவஹீந்திரபுரம்.  வாய் சுளுக்கிக்கொள்ளுமே என்று பயந்து திருவந்திபுரம்  என்று சுருங்கிய பெயர்.  ஆழ்வார்கள் கொண்டாடும் இந்த க்ஷேத்ரத்தில்   ஹேமாம்புஜவல்லி சமேத தேவநாத பெருமாள் அருள் பாலிக்கிறார்.  தாயாருக்கு செங்கமலவல்லி,  வைகுண்டநாயகி,  அமிர்த வர்ஷிணி   என்றும் திருநாமங்கள்.  

ஆலய  வாசலில்  எதிரே ஒரு சிறு குன்று. 108 திவ்ய தேசங்களில் ஒன்று.    ஆயிரம் வருஷங்களுக்கு முந்தைய  சோழர்கள் கட்டிய  ஆலயம்.   குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு, பட்டயங்கள் உள்ளன. ஐந்து நிலை  ராஜகோபுரம்.  ஹயக்ரீவர் (குதிரை முக  பெருமாள்) ஆதி சேஷன் (வஹீந்திரன் என்று ஒரு பெயர்) இந்திரனை வழிபட்ட ஸ்தலம் என்பதால்  திருவஹீந்திர புரம்.

தேவநாத பெருமாள் சந்நிதி எதிரே உள்ள   அந்த சிறிய குன்றுக்கு  ஒளஷத கிரி என்று  பெயர். இங்கே கெடிலம் என்ற நதி ஆலயத்தை ஒட்டி,  தெற்கு வடக்காக  ஓடுகிறது.  இது மாதிரி வடக்கு  நோக்கியோடும் நதிகள் உத்தரவாஹினி எனப்படும்.

அடைக்களப்பத்து 8 வைத்து ஸ்லோகம்  அறிவோம்:
திண்மை குறையாமைக்கும், நிறைகைக்கும் தீவினையால்,
உண்மை மறவாமைக்கும், உள மதியில் உகக்கைக்கும்,
தன்மை கழியாமைக்கும், தரிக்கைக்கும், தணிகைக்கும்,
வண்மையுடை அருளாளர், வாசகங்கள் மறவேனே ||8||

எனக்கு உன் மீதுள்ள பற்று, நம்பிக்கை சற்றும் குறையாமல் இருக்க உன்னருள் வேண்டுகிறேன் அத்திகிரிசா. எனக்கு ஞானம் தா. எனது முன் வினை பாபங்கள் உன்னை நான் விடாமல் நினைத்து உன் அருள் பாடுவதை மறக்காமல், தடுக்காமல், செய்யவேண்டும். பரிபூர்ணமாக உன்னை சரணடைகிறேன். எனக்கருளவேண்டும் என்னப்பனே. சதா உன் நினைவில், சம்சார பந்தங்களின் தொடர்பு இன்றி நான் வாழ நீ அருளவேண்டும் கஞ்சி வரதராஜா.

Thursday, May 22, 2025

Bhadragiri pulampal

பத்ரகிரியார் புலம்பல்    -   #நங்கநல்லூர்_J_K_SIVAN  

கண்ணுக்கு தெரியவில்லை என்பதால்  காற்று  என்பதே கிடையாது என்று சொல்லலாமா?, உணர்கிறோம்,  சுவாசிக்கிறோம்.....அதனால் உயிர் வாழ்கிறோம். அது மாதிரி தானே, 

எள்ளுக்குள்  எண்ணையும் ,மலருக்குள்  மணமும்,  கரும்புக்குள் இனிமைச் சுவையும் நிரம்பியுள்ளது.  அப்படித்தான்  உள்ளும் வெளியே அண்ட பகிரண்டத்திலும்  பகவான் இருக்கிறான்.   அகப்பொருள்  புறப்பொருள் ரெண்டும் அவனே.
கரும்பை தின்றவன் அது தித்திப்பு, எள்ளைபிழிந்தவன் அதில் என்னை இருக்கிறது,  மலரை முகந்தவன் அது நறுமண ரோஜா, என்று சொன்னதை நாம் அதை அனுபவிக்காமலேயே  ஏற்கிறோம். அப்படித்தான் உள்ளும் புறமும் ஆன்மாவை, பரமாத்மாவை கண்ட  மஹான்கள் சொல்வதை அப்படியே ஏற்க வேண்டும்.  இதை தான் பத்ரகிரியார்

''எள்ளும் கரும்பும்  எழு மலரும் காயமும் போல்உள்ளும் புறமும் நின்றது உற்றறிவதெக்காலம்?'

' என்கிறார்  மனித உடலில் ஆன்மாவாய்  பகவான்  இருக்கிறான்   என்றால் நம்ப யாருமில்லை.   இந்த உண்மையை உணர்ந்து நான்  பரமேசா, உன்னை அறிவது எப்போது?'' என்கிறார்.

உயிர்களைக் கொன்று  அவற்றின் மாமிசங்களைப் புசிப்பது தவறு, பாபம். அதை செய்யவேண்டாம் என்கிறார்.  எவ்வுயிரையும் தன்னுயிராக  பாவிக்கவேண்டும் என்கிறார். அதுவே  நற்றவம் என்கிறார்:
'
' மன்னுயிரைக் கொன்று வதைத்துண்டு உழலாமல் தன்னுயிர்போல் எண்ணித் தவம் முடிப்பது எக்காலம்? 
என்கிறார்

 "மூன்று வளையம் இட்டு முளைத்தெழுந்த கோணத்தில்  தோன்றும் உருத்திரனைத் தொழுது நிற்பது எக்காலம்?"

மூன்று வளையம் என்று   மூலாதாரம், வெளி அல்லது பள்ளியறை எனப்படும் சுழுமுனை மற்றும் சக்தியை சுழுமுனைக்கு கொண்டு சேர்க்கும் பாதை அதாவது காலம்  ஆகியவற்றை சொல்கிறார்.
காலம் இல்லாவிட்டால் எதுவுமே  நகராதே .இந்த மூன்று வளையங்களும்   அண்டம் வெளி,  சக்தி  TIME, SPACE,  ENERGY  என ஒன்றோடொன்று பிணைந்த வலையங்களால் ஏற்படும் முக்கோணம் தான் ருத்ரன்.எப்போது என் மனம் குண்டலினி சக்தியை பிரயோகித்து  யோகமார்க்கமாக ஸஹஸ்ராரம் வரை சுழுமுனையில் பிரவேசித்து ருத்ரா, உன்னை அதில் கண்டு ஆனந்திப்பது??  என்கிறார். 

நாம்கவலையே படவேண்டாம்.  இன்னும்  பல ஜென்மங்
களுக்கு நாம் இதெல்லாம் படித்துக் கொண்டேயாவது இருப்போம். ஒருநாள் நாமும் கடைத்தேறலாம்.

Wednesday, May 21, 2025

Lizard curse to Bheeshma

Aum Shri Ganeshaya Namah

*The Curse of a Lizard that takes effect on the Mighty Warrior Beeshma*

_The Aasana tree is a common Indian deciduous tree. The spines on its bark tell the story of a time dating back to the Mahabharata. The story of Bhishma, before he became Bhishma._

Prince Devavrata, the handsome son of King Shantanu of Hastinapura, rides out of the palace gates one morning upon his chariot. Young and restless, perhaps even a tad reckless, Devavrata is not still the wise old Bhishma, who will live on in the collective memory of Indians for centuries.

The golden glow of the morning sun lights up the capital city. Citizens bow before the prince, making way for his speeding chariot as it rides out of the city limits. Charismatic successor of the kingdom, Devavrata rides into the forest with a young vigour and confident flair.

Chancing upon a large monitor lizard, sprawled across his path, he pulls at the reins of his steeds              .

_'Get out of my way!'_ Devavrata orders the lizard, as he slows down.

Basking blissfully under the outdoor sun, for his daily dose of sunlight, the lizard pays no attention.

_"Out! Out of my way!"_ Devavrata repeats, visibly annoyed as he must bring his chariot to a halt; all because of an impertinent reptile.

The lizard throws him a perfunctory glance before looking away.

_"You slimy creature! The prince orders you to get out of his way!"_ Devavrata fumes.

_"Make your own way around me,"_ replies the lizard indifferently.

Devavrata is furious at the creature's temerity. _"Do you know who I am?"_ he thunders, seething in anger.

_"I have no need to know!"_ the lizard replies nonchalantly.

_"You shall repent your arrogance."_

_"What arrogance? This is my home. You have disturbed me!"_

_"You are an insignificant little lizard. And I am the mightiest of warriors, the Prince of Hastinapura. Why do I waste my time talking to you?"_

Jumping out of his chariot, Devavrata walks to the lizard and picks it up. Not giving it any further thought, he flings the creature out of his path. Rid of the obstacle, the prince mounts his chariot to ride away.

Hurtling through the air the lizard lands upon the trunk of the Aasana tree, by the side of the prince's path. Bark full of spines, the lizard finds itself impaled against the tree-trunk as he shrieks in agony. The prince has picked up the reins in his hand and is about to ride away when the lizard's wail pierces his ears. Turning back, he finds the creature writhing in pain.

_"You may be the Prince of Hastinapura,' gasps the lizard. 'And I but an insignificant little creature…."_

The prince is horrified as he watches and listens.

_"But you have caused me pain and suffering for no fault of mine. And now I hang by the thorns of this tree incapable of living and unable to die. You too shall suffer the same fate."_

Devavrata swallows a lump in his throat.

_"You too shall be impaled and suffer like me someday, unable to live nor able to die!"_ the lizard curses the prince.

Disturbed, Devavrata rides away and the incident is soon forgotten.

Many years later, lying on the bed of arrows on the battle field of Kurukshetra, Devavrata – then Bhishma, remembers the little monitor lizard and bows his head in submission to the machinations of time. 

As he prepares to teach his grand-nephews a lesson or two about being wise rulers, the lizard and its curse play at the back of his mind.

No creature is too low and no royalty too high to escape the cosmic Law. You reap what you sow.

In another version of this story, the incident of the impalement of the lizard takes place in Bhishma's previous birth and not in his youth.

_This is a little-known mythological story about the Aasana Tree. The tree has large pointed spines on its bark when young, which fall off as the tree ages. It is a fairly common tree in the Indian subcontinent and draws its name from its mythological connection with the bed of arrows on which Bhishma lay and died on the battlefield._

To God Alone Be All Praise

Aum Shri Saraswathi Deviye Namo Stuthe

Tuesday, May 20, 2025

Fate and free will

*Fate and Free Will*

The fields of two farmers were identical in size and had similar kinds of soil. They worked equally hard, tilled their lands well and sowed seeds of uniform quality. The rainfall over the fields was neither excessive nor scanty and so the crops grew well. At the appropriate time, they commenced their harvesting. Before they left for their homes on an evening, they were able to behold with joy large heaps of grains, the result of their efforts. There was hardly any difference in the yields obtained by them. 

That night, while they slept, there was a very heavy downpour on one land and only a light drizzle on the other. The next morning, when they went to their lands, one was dismayed to find that the rain had ruined his grains while the other felt relieved that his heaps of grain were intact. 

Thus, notwithstanding the similarity in their efforts, the results they obtained were markedly dissimilar. It was the unfavourable destiny of one farmer and the favourable fate of the other that led to the loss of the former and the gain of the latter. Those who have faith in the Vedas and sastras and are logical do not regard the experiences of humans as just fortuitous. 

Two students wrote an examination. The boy who had studied better answered all except two questions well. The other  managed to answer just two questions correctly. The examiner was an impartial but a lazy man. He scrutinized two of the first boy's answers. They happened to be the incorrect ones. Assuming the other answers too to be incorrect, he awarded the  boy low marks. 

Then, he took up the second boy's answer book. The answers he selected for checking happened to be the correct ones. Taking it for granted that the remaining answers were also correct, he awarded the boy concerned high marks. On seeing the results, the boy who had studied better grieved, while the other rejoiced. Thus, hard work fetched a poor result and poor preparation yielded good marks. Here too, the hand of  destiny is seen. 

*To be continued...*


*Source: From Sorrows to Bliss - Motivating Narratives.*

*Published by the Centre for Brahmavidya, Chennai.*

Monday, May 19, 2025

Five great yajnas

0001.தாய் தந்தையரை பூஜித்தல்

** பிதரோ அர்ச்சாச பத்யு: ச ஸாம்யம் ஸர்வ ஜனேஷுச |
மித்ராத்ரோஹ: விஷ்ணுபக்தி: ஏதே பஞ்ச மஹாமகா ||

தாய் தந்தையரை அர்ச்சிப்பது, பூஜிப்பது, கணவரைப் பூஜிப்பது, மக்கள் அனை வரிடமும் பாகுபாடின்றி ஸமமாக‌ நடப்பது நண்பனுக்கு த்ரோஹம் செய்யாமலி ருப்பது, திருமாலிடம் பக்தி செய்வது ஆகிய இவ்வைந்தும் மாபெரும் வேள்வி களாகும்.

தாய் அனைத்து புண்யநதி ஸ்வரூபமானவள். தந்தையோ அனைத்து தைவ ஸ்வரூபமாக விளங்குபவன்.‌ இவர்கட்குச் செய்யும் சுச்ருஷையோ, பணி விடையோ அனைத்து புண்ய நதி தடாகங்களில் செய்த ஸ்நானத்தின் பலனை யும், எல்லா தெய்வங்களையும் ஆராதித்தின் பலனையும் அளிக்கவல்லது.
இவர்களை மதிக்காதவர்கள் பெரும் துன்பத்தையே பெறுவர்.

நரோத்தமன் ஒரு அந்தணன். முதியோர்களாகிய தாய் தந்தையரை மதித்துப் போற்றி வளர்க்காது, க்ஷேத்ராடனத்திற்குச் சென்று, எல்லா புண்ய நதிகளிலும் நீராடி திவயதேசத்து எம்பெருமான்களையும் வணங்கி வழிபட்டுக் கானகம் சென்று கடும் தவம் புரிந்து வந்தான். ப்ரஹ்மதேஜஸ் வளர்ந்தது. அவன் ஈர வஸ்த்ரத்தை வானத்தில் விரித்தால் அது கீழே விழாமல் அப்படியே உலரும். தலை மீது விரித்துக் கொண்டால் அப்படியே நின்று நிழல்தரும். தவத்தின் பெருமை யால் மிக்க கர்வம் தலைக்கேறிற்று. ஒரு சமயம் கொக்கு ஒன்று இவன் தலைமீது எச்சலிட்டுவிட்டது. இவன் அதை விழித்துப் பார்க்க அது எரிந்து விழுந்தது. இந்த ஜீவஹிம்சையாகிற பாபத்தினால் முன்பு போல் வஸ்த்ரம் வானத்தில் பறக்கவில்லை.‌ தன் தவத்தின் வலிமை குறையுற்றதைக் கண்டு வருந்தினான். அப்பொழுது அசரீரி பேசிற்று. "நரோத்தமா!‌ தர்மிஷ்டரும் ஊமை‌ யுமான சண்டாளரைப் போய் பார். உண்மையை அறிவாய். க்ஷேமம் உண்டாகும்" என்று. உடனே விசாரித்துக் கொண்டு மூகன் வீட்டை அடைந்தான். தூண்கள் இல்லாத வீடு. அதைப் பார்த்து வியந்தான். மூக்கன் நரோத்தமனைக் கவனிக் காமல் தன் தாய்தந்தையருக்கு ஊழியம் செய்து வந்தான். "மூகா! உன் வீட்டிற்கு வந்த அதிதியைக் கவனிக்காமல், வரவேற்காமல் இருக்கலாமா"எனக் கடிந்தான்

மூகன் " விருந்தினரே! எனக்கு பித்ரு சுச்ருஷை தான் முக்கியம். அவர்கள் ப்ரீதியே எனக்கு புண்ணியம். வெறுப்பே பாபம். அவர்களை வலம் வருவது பூ ப்ரதக்ஷணத்திற்குச் சமம். தாய் தந்தையரை வணங்கி வழிபடாது க்ஷேத்ர, தீர்த்தாடனங்களும், தெய்வபக்தியும் வீணானது. எனவே அதை முடித்துப் பிறகு தங்களை உபசரிக்கிறேன். அவசரமானால் பதிவ்ரதையின் வீட்டிற்குச் செல்லு ங்கள். உண்மையை அறிவீர் என்று ஜாடையாகக் கூறினான். நரோத்த மனுக்கு அவள் இருக்கும் வீடு தெரியவில்லை. விழித்தான். அப் பொழுது மூகன் வீட்டி லிருந்து ஒரு அந்தணர் வந்தார். அவர் அழைத்துச் சென்று "சுபா" எனும் பதி வ்ரதையைக் காட்டிவிட்டு மறைந்தார். அவளோ பதி சுச்ருஷையில் மூழ்கியி ருந்தாள். நரோத்தமனைப் பார்த்து விட்டு " எனக்கு இன்னும் சிறிது நேரமாகும். தங்களுக்கு அவசர மானால் துலாதாரனைப் பாருங்கள். அவர் உமக்கு தத்வோப தேசம் செய்வார்" என்றாள். இவனுக்கு மிகுந்த கோபம். இதை யறிந்த பதிவ்ரதை "என்னைக் கொக்கு என்று நினைத்தீரோ" என்றாள். இதைக் கேட்டதும் நரோத்தமன் திடுக்கிட்டான். இது இவளுக்கு எப்படித் தெரியும் என வியந்தபடியே வெளியேறினான்.

சுபாவின் வீட்டிலிருந்து வந்த அந்தணர் வழிகாட்ட துலாதரன் வீட்டை அடைந் தான். அவன் ஒரு வணிகன். நேர்மையைக் கடைப்பிடித்து எல்லோருக்கும் சமநிலையில் நின்று நெய், மாமிசம் போன்ற பொருளை விற்று வந்தான். இடை இடையே தாய்தந்தையருக்குப் பணிவிடை செய்து வந்தான். அவனை அணு கிய பொழுது, ",ஐயா! எனக்குக் கடையிலா இரவு 10 மணி வரை வியாபாரம் நடக்கும். பிறகு பெற்றோர்கட்ககு ஆவண செய்துவிட்டு பிறகு தான் உம்மோடு பேச முடியும். எனக்கு ஓய்வும் ஒழிவும் இல்லாததினால் தாங்கள் அவசரப்படு வதால் அருகிலுள்ள "ஸஜ்ஜனாத்ரோஹகன்" (நல்லோர்களுக்குக கேடு நினைக்காதவன்) என்பவரிடம் செல்லுங்கள். அவர் உமக்கு கொக்கு இறந்த தனுடையவும வானில் ஆடை உலர்ந்தது பற்றியும் காரணத்தோடு விளக்குவார்" என்றார் நம்மைப் பற்றி துலாதரனும் அறிந்திருக்கிறானே என்னை வியப்புடன் புறப்பட்டான் நரோத்தமன். இப்பவும் குருபாகரன் வீட்டில் இருந்து வந்த அதே அந்த வழிகாட்ட ஸஜ்ஜனாத்ரோ ஹகன் வீட்டிற்குச் சென்றான். இவர் வீட்டிற்கு வரும்போது ‌அந்தணர், ஸஜ்ஜனாத்ரோஹனைப் பற்றிய ஒரு சம்பவத்தை (நிகழ்ச்சியை) ச் சொன்னார். இவருக்கு ஒரு நண்பர் உண்டு. அவள் ஒரு ராஜ குமாரன். நண்பருக்கு வெளியூர் செல்ல வேண்டி யிருந்தது. திரும்பி வர ஒரு வாரமாகும். கட்டழகியாகிய தன் மனைவியைத் தன் வீட்டில் துணையின்றி விட்டுப் போக மனமில்லை. எனவே நண்பன் வீட்டில் விட்டுசா செல்வது என முடிவுக்கு வந்தான். புறப்படும்பொழுது மனைவியை அழைத்து வந்து நண்ப னிடம் ஒப்படைத்து" நான் திரும்பி வரும் வரை இவளைப் பாதுகாப்பாயாக. நீயோ‌தர்மிஷ்டன். அறநெறி வழுவாதவன். மேலும் ஜிதேந்த்ரியன்.‌புலன்களை வென்றவன். உன் வீட்டில் விட்டுப் போவதில் எனக்கு பெரு மகிழ்ச்சி" என்றான்.  

நண்பன் "ராஜகுமாரா! உனக்கு உதவுவது என் கடமை. ஆனால் இரவில் நான் தூங்கும் பொழுது, ஒரு அழகிய பெண்ணை எவ்வாறு பாதுகாக்க முடியும். எனவே என் மனைவியோடு என் படுக்கையிலேயே இரவில் படுத்துக்கொள்ள வேண்டும்.அதற்கு நீயும் உன் மனைவியும் சம்மதப்பீர்களாகில் இங்கே விட்டுச் செல்லலாம்" என்றான். ராஜகுமாரன் "நண்பா! அப்படியே ஆகட்டும்," எனக் கூறி விடைபெற்றான்.

ஸஜ்ஜனாத்ரோஹியோ புதன்கரை வென்றவன்.‌ஆயினும் ஊர் மக்கள் வம்பளந் தனர். சில நாட்கள் கழித்து ராஜகுமாரனிடம் அவன் மனைவியை ஒப்படைத்து விட்டுப் பேசினான். "நண்பா! ஊர் மக்கள் எவ்விதக் காரணமின்றி என் மீது பழி சுமத்து கின்றனர்.‌ நீ உன் மனைவியை ஏற்றுக்கொள். நான் அக்னிப் ப்ரவேசம் செய்யப் போகிறேன் எனக்கூறி தீக்குளித்தான்.அவனது உடல் சிறிதும் வேக வில்லை.‌. கருகவில்லை.வானத்தினின்றும் தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர்.
அன்று முதல் ஊர் மக்கள் அவனை மித்ராத்ரோஹி என்றும் ஸஜ்ஜனாத்ரோஹி என்றும் அழைத்தனர்.‌ தான் முன்பு பழித்ததற்கு வருந்தினர் என்று கதையைக் கூறிய அந்தணர் மறைந்தார்.‌‌ 

நரோத்தமன் அவ்வீட்டினுள் சென்று ஸஜ்ஜனாத்ரோஹியை‌சந்தித்தான். அவரோ யாதும் கூறாது "நீர் விஷ்ணு பக்தரிடம் செல்லும். எல்லாம் நன்கு விளங்கும்" எனக்கூறி விடை கொடுத்தார். 

மறைந்த அந்தணரே வந்து வழிகாட்ட அவர் வீட்டை அடைந்தான்.‌அங்கிருந்த விஷ்ணு பக்தன் "'நரோத்தமா! என் வீட்டிலிருக்கும் பரமாத்மாவைக் காண்பா யாக. உனக்கும் எல்லாம் சித்திக்கும் உள்ளே போம்":என்றான். இவன் உள்ளே சென்றதும் ஒரே வியப்பு! இதுவரை இவனுக்கு யார் வழிகாட்டினாரோ அவரே சேஷாஸனத்தில் அமர்ந்திருந்தார். இவரே பரமாத்மா ஸ்ரீமந் நாராயணன் என உணர்ந்தான். இதுவரை உணராததிற்கு வருந்தினான். பரம காருணிகனின் கருணையை நினைத்து அவர் திருவடிகளில் விழுந்து விழுந்து மீண்டும்‌ மீண்டும் வணங்கினான்.‌கண்ணீர் மல்க வாய் விட்டுக் கதறி அழுது புலம்பி னான்.அவனை அரவணைத்து பரமன் பேசுவான்.

" நரோத்தமா!‌ பித்ரு சுச்ருஷையை விட உயர்ந்தது எதுவும் இல்லை.அவர்களைப் போற்றி துதிக்காமல் எத்தகு தவம் புரியினும் அது அவமேயாகும் .சித்திக்காது." என்றார்!
💥💥💥💥💥💥

Saturday, May 17, 2025

Duty is more than pravachana - HH Sri Chandrasekhara Bharati Mahaswamigal

*Continued from yesterday's posting*
 
*Source: ஸ்ரீ குருகிருபா விலாஸம்-இரண்டாம் பாகம்*
 
*இரண்டாம் பாகம்*
*ஞானப் பிரஸூனங்கள்*
 
*8.எல்லோரிடத்தும் அன்பு*
 
மஹா: அவருக்கு உம்மிடத்தில் அவ்வளவு விசேஷ நம்பிக்கை இருக்கிறாப்போலிருக்கிறது. அதனால் உம்மையே நம்பியிருக்கிறார் என்று தெரிகிறது. வரமுடியாது என்று சொல்லி அவருக்கு உதவி செய்ய மறுத்து அவர் மனதைப் புண்படுத்துவது தர்மமாகுமா? வேதாந்தப் பிரவசனத்தைக் கேட்பதினால் உமக்கு ஏற்படக்கூடிய ஸுகத்திலுள்ள ஆசையினால், இன்னொருவரை ஸந்தோஷப்படுத்தக் கூடிய ஸந்தர்ப்பத்தையும் கைவிட்டு அவருக்கு அதனால் ஏற்படக்கூடிய கடுமையான வருத்தத்தை உண்டாக்குவது நியாயமாகுமா?
 
கி: அவர் வியவஹாரம் மிகவும் சிறிய விஷயம். வேறு எந்த வக்கீலும், அனுபவம் சிறிதுமில்லாத வக்கீலும்கூட, அதை நடத்திக் கொள்ளக்கூடும். நானே போய் நடத்த வேண்டுமென்ற அவசியம் இல்லை.
 
கி: ஆமாம். இல்லைதான்.
 
மஹா: உமக்கு எவ்வித சிரமமும் இல்லாமலே அந்த கக்ஷிக்காரருக்கு திருப்தியளிக்க உமக்கு ஸந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. உமக்குப் பணமும் கொடுப்பாரில்லையா?
 
கி: எல்லாம் வாஸ்தவம். எனினும் நாளையப் பிரவசனத்தை இழக்க எனக்கு மனமில்லை.
 
மஹா: தனக்கு வரும் ஒரு லாபத்தை அடையக் கருதி, அதனால் இன்னொருவருக்கு துன்பத்தை உண்டாக்குகிறது நியாயமாகுமா?
 
கி: அதற்கு நான் என்ன செய்யட்டும்?
 
மஹா: விடியற்காலை வண்டியில் போய், கார்யத்தை முடித்துக்கொண்டு மாலையிலோ மறுநாள் காலையிலோ வந்து விடலாம்.
 
கி:அவ்விதம் செய்தேனேயானால், பிரவசனத்தை இழப்பதால் என் மனதைப் புண்படுத்திக் கொள்ள வேண்டி வருமே?
 
மஹா: அது பாதகமில்லை. தனக்கு இன்பம் பிறனுக்கு துன்பம் என்பதைவிட தனக்கு துன்பம் பிறனுக்கு இன்பம் என்பது எவ்வளவோ சிலாக்கியமானது.
 
இவ்விதம் ஸ்ரீமத் ஆசார்யார் ஆக்ஞை செய்தபிறகு, சிறிதும் இஷ்டமில்லாமலே, அவ்வாக்ஞைப்படி நடப்பதற்கு இசைந்தேன். அவர்களும் தமக்குரிய பேரன்பினால் "இதனால் உமக்கு நஷ்டம் ஒன்றும் ஏற்படாது. நாளை ஆரம்பப் பிரவசனத்தில் சொல்வதையெல்லாம் மறு நாளும் சொல்லி விடுகிறேன்" என்று அனுக்ரஹித்தார்கள். இரண்டாம் நாள் பிரவசனம் ஆரம்பிக்கும்போது "நேற்று வராதவர்களின் பொருட்டு நேற்று நடந்த ஆரம்ப பிரவசனத்தின் ஸாராம்சத்தை சுருக்கிச் சொல்கிறேன்" என்று தொடங்கினார்கள். இரண்டு நாட்களிலும் பிரவசனத்தைக் கேட்டவர்கள், முதல் நாள் பிரவசனத்தை விட அதன் சுருக்கமே விஷயங்கள் நிறைந்தும் தெளிவாயும் விளக்கமாயும் மறக்கக் கூடாதவாறும் மனதில் பதியக் கூடியதாகவும் இருந்தது என்று சொன்னார்கள்.
 
இந்த ஸம்பவத்தின் மூலம், ஒரு மனிதன் ஏதோ ஒரு தொழிலில் ஈடுபட்டிருக்கும்போது அத்தொழிலுக்குரிய கடமைகளை சரிவர நடத்துவதே, வேறு எவ்வித உயர்ந்த ஸுகத்தையும் விட, சிலாக்கியமானது என்பதை ஸ்ரீமத் ஆசார்யார் போதித்தார்கள்.
 
*தொடரும்…*

Ramayana in comic book - Sanskrit

Guru bhakti - HH Chandrashekhara Bharati Mahaswamigal

*Source: ஸ்ரீ குருகிருபா விலாஸம்-இரண்டாம் பாகம்*
 
Section 2
 
*ஞானப் பிரஸூனங்கள்*
 
*7.உண்மையான அஹிம்ஸை*
 
அந்த சிஷ்யரும் அப்படியே மறுநாள் காலையில் ஸ்ரீமத் ஆசார்யாரிடம் சென்று உபதேசம் பெற்றுக்கொண்டு ஊர் போய்ச் சேர்ந்தார். பயபக்தியோடு மந்திரத்தை ஜபித்து வந்தார். தன் சாப்பாட்டு விடுதியிலிருந்து எதையும், தீர்த்தம்கூட, அவர் தன் சொந்த உபயோகத்திற்காக எடுத்துக் கொள்வதில்லை. சில வாரங்களுக்குப் பின் தனக்குள் அடியிற் கண்டவாறு நினைக்கலானார்: "என் சொந்த விடுதியில், நானே நேரிலேயே என் மேல்பார்வையிலேயே ஆஹாரவகைகளை தயார் செய்து வருகிறேன். ஆஹாரங்கள் பரிசுத்தமாகவும், அசுத்தம் ஒன்றுமே கலவாமலும் இருக்கின்றன என்பது உறுதியாய்த் தெரிகிறது. அப்படியிருந்தும் அது எதையும் சாப்பிட வேண்டாம் என்று ஸ்ரீமத் ஆசார்யார் ஆக்ஞாபித்திருக்கிறார்கள். ஆதலால், விற்பனைக் கென்று செய்யப்படும் சாமான்களுக்கே ஏதோ அசுத்தியோ தோஷமோ உண்டு என்பது நன்கு தெரிகிறது. விற்பனைக்கென்று தயாரான பதார்த்தங்களுக்கே தோஷமுண்டானால், அவைகளை பணத்திற்கு விற்று விட்டால் இன்னும் அதிகமாகவே அவைகளில் தோஷம் ஏற்படுமல்லவா? அந்த தோஷம் என்ன என்று எனக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் ஸ்ரீமத் ஆசார்யாரின் ஆக்ஞையிலிருந்தே, தோஷம் உண்டு என்பது தெளிவாய்த் தெரிகிறது. இவ்விதம் விற்கிறவனுக்கும் வாங்கித் தின்பவனுக்கும் அசுத்தியை ஏற்படுத்தக் கூடிய இத்தொழில்தான் எனக்கு எதற்காக ?' என்று. இவ்விதம் ஏற்பட்ட எண்ணம் நாளுக்கு நாள் பலப்பட்டு வரவே, இந்த விடுதியையே மூடிவிடுகிறது என்று தீர்மானித்து விட்டார். நல்ல வேளையாக, அவருடைய அதிர்ஷ்டவசத்தினால், வேறொருவர் வந்து இவ்விடுதியையும் அதிலுள்ள எல்லா சாமான்களையும் தானே எடுத்துக் கொள்வதாகச் சொல்லி, இவருக்குப் பெருந்தொகை கொடுத்து பிரியமாய் வாங்கிக் கொண்டார். அந்த சிஷ்யரும் உடனே தன் கிராமத்துக்குச் சென்று ஸன்மார்க்கத்தில் நின்று ஆன்மீக அபிவிருத்தித் துறைகளில் காலம் கழித்து வந்தார். 
 
*தொடரும்…*

Friday, May 16, 2025

Ahimsa- HH Chandrashekara Bharati Mahaswamigal

*Source: ஸ்ரீ குருகிருபா விலாஸம்-இரண்டாம் பாகம்*
 
*ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மஹாஸ்வாமிகளின் திவ்ய மஹிமைகளை எடுத்துக்காட்டும் கட்டுரைகளின் தொகுப்பு*
 
தொகுத்தவர்
 
*ஸ்ரீ ஞானானந்த பாரதீ ஸ்வாமிகள்*
 
Section 2
 
*ஞானப் பிரஸூனங்கள்*
 
*7.உண்மையான அஹிம்ஸை*
 
ஸாமான்யமாக சில ஆஸ்திகர்களுக்கு நாஸ்திகர்களைக் கண்டால் அருவறுப்பும் கோபமும் ஏற்படுவதுண்டு. ஆனால் ஸ்ரீமத் ஆசார்யார் அவர்களிடம் கருணையையே கைக்கொண்டு, அவர்கள் மனம் நோகாமல், அவர்களை எப்படியேனும் தம்மால் இயன்ற மட்டும் நல்வழிக்குத் திருப்பிவிடவே முயன்று வந்தார்.
 
அன்னத்தை விலைக்கு விற்பதை சாஸ்திரங்கள் கூசாமல் வியக்தமாக கண்டித்திருப்பது யாவரும் அறிந்த விஷயம். தர்ம சாஸ்திரம், ஸுகாதார நீதிகள் ஆகிய இவ்விரண்டிற்கும் உரிய விதிகளை மீறித்தான் உணவை விற்கும் தொழிலை நடத்த முடியும். அத்தொழில் செய்துவந்த ஒரு சிஷ்யர் சிருங்கேரிக்கு வந்திருந்தார். அப்பொழுது தானும் ஸ்ரீமத் ஆசார்யாரிடமிருந்து சிவ பஞ்சாக்ஷரீ மந்திரத்தை உபதேசம் பெறவேண்டுமென்ற ஆசை அவருக்கு எழுந்தது. வெகுதூரம் தயங்கிய பிறகு மிக்க பணிவுடன் ஸ்ரீமத் ஆசார்யாரிடம் தெரிவித்துக் கொண்டார். 
 
சிஷ்யர்: தங்களிடம் உபதேசம் பெற வேண்டுமென்ற பேராவல் எனக்கு இருந்து வருகிறது. ஆனால் நான் சாப்பாட்டு விடுதி வைத்து நடத்திக் கொண்டு வருவதால், உபதேசம் பெறுவதற்குத் தகுதியான பரிசுத்தத்தன்மை என்னிடம் இல்லையென்றும் உணர்கிறேன். வேறு தொழிலுக்கு வேண்டிய படிப்பு எனக்கு இல்லாமையினால், பிழைப்பு நடக்க வேண்டியதற்காக இத்தொழிலில் இறங்கும்படி ஏற்பட்டு விட்டது.
 
மஹா: இந்தத் தொழிலில் இருந்துவந்தும்கூட, ஆன்மீக முன்னேற்றத்தில் உங்களுக்குள்ள ஆர்வம் அழிந்து போகாமல் இருப்பது மிகவும் நன்மையே. பகவான் நிச்சயமாய் உங்களுக்கு உதவி செய்வார். உபதேசம் பெற்றால் ஏதேனும் ஒரு சிறு நியமம் விதித்தால், அதை தவறாமல் உங்களால் அனுஷ்டித்து வர முடியுமா?
 
சிஷ்யர்: ஸந்தேகமில்லாமல் முடியும். தங்கள் ஆக்ஞையின்படி சிறிதும் தவறாமல் நடந்து வருவேன்.
 
மஹா: இவ்விதம் சொல்வதைக் கேட்க மிகவும் ஸந்தோஷம். அந்த நியமம் இவ்வளவுதான். உங்கள் தொழிலை நடத்தி வருவதில், உங்கள் விடுதியில் தயார் செய்யப்படும் அன்னமோ,பக்ஷணமோ, பானமோ, எதுவாயிருந்தாலும் அந்தப் பண்டத்தை நீங்கள் சாப்பிடுவதில்லை யென்ற கட்டுப்பாட்டை வைத்துக் கொள்ளுங்கள்; அதுவே போதும்.
 
சிஷ்யர்: தங்கள் ஆக்ஞையின்படி அப்படியே அவசியம் நடக்கிறேன்.
 
மஹா: அப்படியானால் நாளைக் காலையில் இங்கு வாருங்கள். உபதேசம் பெற்றுக் கொள்ளலாம்.
 
*தொடரும்…*

Thursday, May 15, 2025

Facebook and robbery

Dear Facebook lovers.....short story for you...

Three Robbers entered a house. They said to the lady, we don't want to spoil the order of your house and we don't want to harm you, so we are sitting here on the sofa, bring whatever cash and jewelry you have here.

The lady brought cash and jewellery. The leader of the robbers said, "Where is the diamond ring that your husband gave as a gift on your wedding anniversary?"
She kept silent and brought the ring and gave it to them.

Bring the watch that your sister sent from Dubai. She had tears in her eyes while handing over the gift given by her sister.

Now we will drink instant coffee of "Nescafé" with your permission.

After drinking coffee, the head of the Robbers said, "Now bring the leftover pineapple cake from yesterday."

When all the goods had been taken by the Robbers, the woman hesitated and said, "You guys are very professional and ethical robbers. How did you know about the things inside our house?"

The leader of the Robbers fixed the mask on his face and said, Madam, we are your "Facebook friends".

We regularly read your posts. We also check your status.

🤔

Dedicated to all those who post everything on social 
media


*Worth sharing.*

e reader of bhagavad gita & raghuvamsam

Courtesy: Prof.Dr.Amba Kulkarni
Bhagvadgitaa (improved version is available at https://sanskrit.uohyd.ac.in/sbg-ereader/#/ereader)


Government grants for Vedic studies in olden times

வேதப் படிப்பும் அரசு ஆதரவும்

சோழர்காலத்தில் வேதப் படிப்பு படித்தவர்கள் தனியான சிறப்புக்குரியவராக மதிக்கப்பட்டனர். வேதம் கற்பிக்கும் கல்விச் சாலைகளுக்கு நில தானங்கள் பல அரசர்களால் கொடுக்கப்பட்டன.

சோழ மண்டலத்தில் ஐம்பத்தேழு ஊர்களை முதலாம் இராசேந்திரன் 'திரிபுவன மாதேவிச் சதுர்வேதி மங்கலம்' என்ற பெயருடன் ஒரு தொகுதியாக்கி, வேதங்களிலும் சாத்திரங்களிலும் வல்ல பிராமணர் பலருக்கும் பிரம்மதேயமாக வழங்கினான் என்ற செய்தி வேதங்கள் மீதும் சாத்திரங்கள் மீதும் சோழர்கள் கொண் டிருந்த ஈடுபாட்டைக் காட்டுகிறது. இதுபோல், வீர ராசேந்திர சோழனின் கன்னியாகுமரிக் கல்வெட்டு அவ்வரசன் சோழநாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, சுங்க நாடு, குலூத நாடு என்ப வற்றில் மூன்று வேதங்களிலும் வல்ல நாற்பதினாயிரம் பிராமணர் களுக்குப் பிரம்மதேயங்கள் வழங்கி அந்நாடுகளில் நிலைபெற்று வாழுமாறு செய்தான் என்ற செய்தியைக் கூறுகிறது. 

பல ஆயிரக்கணக்கான வேதம் வல்ல வடமொழிப் பிராமணர் கள் சோழப் பெருவேந்தர்களால் தமிழகத்தில் குடியமர்த்தப் பட்டார்கள் என்பதற்கு ஏராளமான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. சோழர் காலத்தில் பிராமணர்களுக்கு தானமாகக் கொடுக்கப் பட்ட பிரம்மதேயங்கள், சதுர்வேதி மங்களங்கள் பல்கிப் பெருகின. பிரம்மதேயமாக மட்டுமில்லாமல் பிற காரணங்களுக் காகவும் பிராமணர்களுக்கு நிலங்கள் தானமாகக் கொடுக்கப் பட்டன. அவை வருமாறு:

வேதம் வல்ல பிராமணர்களுக்கு - பட்ட விருத்தி.

மகாபாரதக் கதையைப் படித்துரைப்பவர்க்கு - பாரத விருத்தி.

அர்ச்சனை செய்பவர்களுக்கு - அர்ச்சனா போகம்.

வேதம் படிக்கும் அபூர்விகள் போன்றோருக்கு உணவளிக்கும் அறச்சாலைகளுக்கு - சாலா போகம்.

இதுமட்டுமல்லாமல் பாஷ்ய விருத்தி, சைவாச்சாரியக் காணி என பல பெயர்களில் இறையிலி நிலங்கள் பிராமணர்களுக்கு வழங்கப்பட்டன.

சோழர் காலத்தில் வேதக் கல்வி வளர்ப்பதற்காக வடமொழிக் கல்வி நிலையங்களும், கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன. இக்கால கட்டத்தில் செயல்பட்ட வேதக் கல்வி நிலையங்களும் அங்கு படிக்கப்பட்ட நூல்கள் குறித்த விவரங்களும் வருமாறு

முதலாம் இராஜராஜன் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 997) பாபநாசம் வட்டம் புள்ளமங்கலம் ஊரில் அமைந்துள்ள பிரம்மபுருஸ் வரர் கோயில் கல்வெட்டானது வேதம் படித்தவர்களுக்குத் தானம் கொடுக்கப்பட்டதைப் பதிவு செய்கின்றது. 'கிழார்க் கூட்டறத்துப் பிரம்மதேயம் புள்ள மங்கலத்து மகாசபையார் அவ்வூர் ஆரீதன் மன்றன் சுவரன் வீட்டின் கூடிப் பேசினர்' அக்கூட்டத்தில் இவ்வூரில் நின்றோதும் சட்டர்களாகிய சாம வேதிகளுக்கும் இருக்கு வேதிகளுக்கும் சட்டபோகமாக நிலமளிக்க முடிவு எடுக்கப் பட்டது இதற்காக, மகாசபையார் ஒரு வேலி நிலத்துக்கு 80 காசும் தோட்டத்துக்கு 10 காசும் ஆக மொத்தம் 90 காசுகளை அளித்து தாளம் கொடுக்க வேண்டிய நிலத்தினை அதன் உரிமையாளர் களிடம் இருந்து வாங்கி வேதிகளுக்கு சட்டபோகமாக அளித்தனர். இக்கூட்டம் பற்றி தட்டொளிக் கொட்டி, காளம் ஊதி ஊர் மக்கள் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது என்பதையே கல்வெட்டு விளக்க மாகப் பதிவு செய்கின்றது."

காமப்புல்லூர் என்ற இடத்தில் வேதப் பயிற்சிப் பள்ளி ஒன்று இயங்கியது இவ்வேதப் பள்ளிக்கு பட்டவிருத்தி நிலம் அளிக்கப் பட்டது.

ஆனியூர் என்ற இடத்தில் வேதம் மற்றும் வடமொழி இலக்கியம் கற்றுத் தரும் பள்ளி ஒன்று செயல்பட்டது. இங்கு வேதம் பாணினியின் இலக்கணமாகிய அஷ்டத்தியாயி ஆகிய றைப் பயிற்றுளிக்க பட்டவிருத்தி நிலம் அளிக்கப்பட்டது. பட்ட விருத்தியாக நிலம் பெற்ற பட்டர் வேதத்தில் ஆழ்ந்த புலமைப் பெற்றிருக்க வேண்டும் என்றும், பாணினி வியாகரணம், அலக் காரம் மீமாம்சத்தில் 20 அதிகாரங்கள் சொல்லிக் கொடுக்கும் ம பெற்றவராக இருத்தல் வேண்டும் என்பன போன்ற விதிகள் உருவாக்கப்பட்

வேதப் பயிற்சிப் பள்ளிகள் நடைபெற்றது பற்றிய கல்வெட்டு செய்திகளில் அங்கு பயின்ற மாணவர்களின் எண்ணிக்கைப் பற்றியும் ஆசிரியர்களின் எண்ணிக்கை பற்றியும் நடத்தப்பட்ட பாடங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்கு அருகில் உள்ள திரிபுவனையில் சாத்திரங்கள் பயிற்றுவிக்கும் வடமொழிக் கல்லூரி செயல்பட்டது. இங்கு 270 மாணவரும் 12 ஆசிரியர்களும் இருந்தனர். பாரதம், இராமா யணம், மனுதர்ம சாத்திரம் முதலியன கற்பிக்கப்பட்டன. ஆசிரி யரும் மாணவரும் கவலையின்றி வாழ வசதிகள் செய்து தரப்பட்டன.

திருவாவடுதுறை, பெருவேலூர் ஆகிய இடங்களில் பிராமண மாணவர்கள் படிக்கும் வடமொழிப் பள்ளிகள் செயல் பட்டன.

திருவொற்றியூர்க் கோவிலில் வடமொழி இலக்கணம்

கற்பிக்க வியாகரணதான வியாக்யாந மண்டபம் ஒன்று இருந்தது. இது குறைவின்றி நடைபெற 65 வேலி நிலம் தானமாக விடப்பட்டது. பாணினி இலக்கணத்தைக் கற்பிக்கும் சிறந்த இடமாக இக்கல்லூரி விளங்கியது. இங்கு பதினான்கு நாள்களில் பதினான்கு பாராயணங்கள் கற்பிக்கப்பட்டன. மேலும் வேதமும், சித்தாந்த நெறிகளும் கற்கும் இடமாகவும் இக்கல்லூரி விளங்கியது?

வேதக் கல்வி கற்பிக்கும் அதே வேளையில் வேதம் ஒப்புவித்தல் போட்டிகளும் அறிவிக்கப்பட்டு பரிசுகளும் அளிக்கப்பட்டன. மேலும் பாரதம் ஓதுபவர்களுக்கும் கொடைகள் அளிக்கப்பட்டது பற்றியும் வேத பாடசாலையில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய பொருட்களைப் பற்றியும் சில கல்வெட்டுகள் பதிவு செய்கின்றன.

கி.பி. 1170 ஆம் ஆண்டு கல்வெட்டின் மூலம் சைமினிய சாமவேதத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை நன்முறையில் ஓதுபவருக்குத் தான் அளிக்கும் நன் கொடையினின்று வரும் வட்டியைக் கொண்டு ஒரு பரிசு வழங்க வேண்டுமென்று ஒருவர் கோயிலுக்கு கொடையளித்துள்ள செய்தியை அறிய முடிகின்றது.

தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு - சி.இளங்கோ
230/-

இந்நூலினை எப்படி வாங்குவது? 

1. எங்களது WhatsApp ல் 097860 68908 தொடர்பு கொள்ளலாம், அல்லது 
2. எங்கள் இணைய தளத்தில் Heritager .in வாங்கலாம். இணையதள பக்கம் பின்னூட்டத்தில் உள்ளது.

எங்கள் முயற்சியில் எவ்வாறு நீங்களும் பங்கெடுக்கலாம்?:

1. எங்கள் நூல் அறிமுக பதிவுகளைப் பகிர்ந்து பலரை சென்றடைய உதவுங்கள்.
2. உங்களுக்கு தேவையா நூல்களை எங்கள் மூலம் பெறுங்கள்.
3. வரலாற்றில் ஆர்வமுள்ள நண்பர்களுக்கு எங்களின் Heritager .in The Cultural Store பற்றி தெரிவியுங்கள்.

உங்களின் தொடர் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றிகள்

Guru bhakti - HH Chandrashekhara Bharati Mahaswamigal

*Source:ஸ்ரீ குருகிருபா விலாஸம்*
 
*தொகுத்தவர்*
 
*ஸ்ரீ ஞானானந்த பாரதீ ஸ்வாமிகள் (முன்னாள் ஸ்ரீ ஆர். கிருஷ்ணஸ்வாமி அய்யர், திருநெல்வேலி)*
 
*Section 2*
 
*ஞானப் பிரஸூனங்கள்*
 
*2.குருபக்தி*
 
ஸ்ரீமத் ஆசார்யார் ஸாதாரண மனிதர்களுடைய மனோநிலைக்கு வெகுதூரம் உயர்ந்த நிலையில் ஆனந்தமாக ரமித்துக் கொண்டிருந்தபடியால், தம்மைக் காணவந்தவர்களோடு ஸாமான்யமான லௌகிக விஷயத்தைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தாலும், அதன் தரத்தை உயர்த்தி அதிலிருந்தும் ஒரு தத்துவம் அறிவதற்கான வழியைக் காட்டுவார்கள். மிகவும் ஸாதாரணமான ஸம்பவத்திலிருந்துகூட அதிக அருமையானதும் உபயோகமுள்ளதுமான விஷயங்களை தெரிந்து கொள்ளுமாறு செய்வார்கள். அதை விளக்கும் உதாஹரணங்களைக் கூறும் முன்னர், அவர்களுக்கு ஸ்ரீ சங்கர பகவத்பாதாசார்யாரிடமும் தமக்கு குருநாதரான மஹாஸந்நிதானத்தினிடமும் (ஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபிநவ நரஸிம்ஹ பாரதீமஹாஸ்வாமிகளிடமும்) இருந்த பக்தியைப் பற்றி சிறிது கூறுவது உசிதமென்று தோன்றுகிறது. அப்பெரியோர்களை ஞானிகள் என்று மாத்திரம் ஸ்ரீமத் ஆசார்யார் பாவிக்கவில்லை. ஈசுவரனே அவ்வுருவங்களில் தோன்றியதாகக் கருதினார். ஸாதாரணமாக யாவரும் அடிக்கடி சொல்லும்
 
*गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुर्गुरुर्देवो महेश्वरः ।*
*गुरुः साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः ॥*
 
என்ற பிரஸித்தமான சுலோகத்திற்கு குருவை பிரஹ்மா, விஷ்ணு, மஹேசுவரர், பரப்ரஹ்மம் இவர்களுக்கு ஸமானமென்று ஸ்தோத்திரம் செய்யவில்லை, இவர்களுக்கும் குருவிற்கும் பேதம் கிடையாது, குருவே அவர்கள், என்றுதான் தாத்பர்யம் என்பது ஸ்ரீமத் ஆசார்யாரின் அபிப்பிராயம். இந்த தத்துவத்தை யாரும் ஒருக்காலும் மறந்துவிட இடம் கொடுக்க மாட்டார்கள்.
  
சிஷ்யர்: எல்லா தேவதைகளையும் தம்மிடம் அடக்கியுள்ள பகவானுடைய விசுவரூபத்தை தியானமூர்த்தியாக வைத்துக் கொள்ளலாமென்று அபிப்பிராயமாயிருந்தால், அவ்வுருவத்தை கல்பிப்பது இன்னும் அதிக கடினமாகவல்லவா இருக்கும்? மேலும் அத்தகைய உருவம், அர்ஜுனன் கண்ட மாதிரி, பிரமிக்கத் தக்கதாகவும் பயங்கரமாகவும் இருக்குமாதலால், பக்தனின் மனதில் கொஞ்ச நேரமாவது நிலைத்துநிற்கக் கூடியதாக ரம்யமாக இருக்காது.
 
*மஹா:* வாஸ்தவம். விசுவரூப மூர்த்தியை கல்பித்துக் கொள்வதும் கஷ்டம்; கல்பித்தாலும் மனோஹரமாக இராது. அவ்விதமான மானஸிக மூர்த்தியை நான் சொல்லவில்லை. 
 
சிஷ்யர்: அப்படியானால் எவ்வித தியான ரூபத்தை சொன்னதாக நான் அறிந்து கொள்ள வேண்டும்? 
 
*மஹா:* சிறிது நேரமாவது மனதில் நிற்கக்கூடியதாக மூர்த்தி இருக்க வேண்டுமானால், அம்மூர்த்தி கல்பிப்பதற்கு ஸுலபமாயிருக்க வேண்டும், மனதிற்கு ரம்யமாகவும் இருக்க வேண்டுமென்று சொன்னீர்களல்லவா? 
 
*சிஷ்யர்:* ஆம். 
 
*மஹா:* புதிதாக கல்பிக்கப்பட வேண்டிய சிரமமேயில்லாமல், ஏற்கெனவே இருப்பதாயிருந்தால், இன்னும்
அனுகூலமல்லவா?
 
*சிஷ்யர்:* அதற்கென்ன ஸந்தேஹம்?
 
*மஹா:* மேலும் அவ்வுருவத்தை நாமாக ரம்யமாகச் செய்வதற்கு அவசியமில்லாமல், அதுவே இயற்கையிலேயே ரம்யமாக அமைந்து விட்டால், இன்னும் நல்லதுதானே?
 
*சிஷ்யர்:* ஆமாம்.
 
*மஹா:* நீங்கள் சொன்ன சிரமங்கள் எல்லாம் வெகு காலத்திற்கு முன் ஜீவித்திருந்தவர்களுக்கு இருந்திருக்கலாம். நமக்கு அவ்வித சிரமங்கள் வேண்டியதில்லை. 
 
சிஷ்யர்: எப்படி?
 
*மஹா:* நமக்கு முன் இருந்த மஹாஸந்நிதானத்தை தரிசித்திருப்பீர்கள் இல்லையா?
 
சிஷ்யர்: ஆம், தரிசித்திருக்கிறேன்.
 
மஹா: அவர்களை ஒரே ஒரு தடவை தரிசித்திருந்த போதிலும் அவர்கள் ரூபம் உங்கள் மனதில் நன்கு பதிந்திருக்கும். நினைத்துப் பார்த்தால் ஸுலபமாக உங்கள் மனக்கண் முன் நிற்கக்கூடிய முறையில் பதிந்திருக்கும். 
 
சிஷ்யர்: வாஸ்தவம். 
 
மஹா: அவர்களுடைய ரூபம் மிகவும் கவர்ச்சிகரமான தென்பதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள். இப்பொழுதும் அம்மூர்த்தியை நம் மனக்கண் முன் நிறுத்துவதில் உண்மையான தனி ஆனந்தம் ஏற்படுகிறதென்பதையும் ஒப்புக் கொள்வீர்கள்.
 
*சிஷ்யர்:* அப்படியேதான். 
 
*மஹா:* மனதில் வருத்திக் கொள்வதில் சிரமமில்லாமை, மனோஹரத்தன்மை என்ற இரண்டு அம்சங்களும் நீங்கள் வேண்டுமென்று சொன்னீர்கள். அவ்விரண்டும் இம்மூர்த்தியில் இருக்கின்றன. மனதை சிரமப்படுத்தி புதிதாக ஓர் உருவத்தை கல்பித்துக்கொண்டு, அதை ரம்யமாகச் செய்துகொள்ளவேண்டிய கார்யமேயில்லை. நீங்களே நேரில் தரிசித்திருக்கிற மூர்த்தி, ஒருவர் மற்றொருவருக்கு எவ்விதங்களிலெல்லாம் ரம்யமாக இருக்கலாமோ அத்தனை விதங்களிலும் கவரக்கூடிய மூர்த்தி; இவ்விதமாக அம்மஹானுடைய மூர்த்தியானது உங்களுக்கு ஸித்தமாகவே இருக்கிறது.
 
*சிஷ்யர்:* சிவனைக் குறித்தோ விஷ்ணுவைக் குறித்தோ ஜபம் செய்யும்போது, முன் மஹாஸந்நிதானத்தின் உருவத்தை மனதில் நிறுத்திக் கொண்டால், முரண்படாதா? 
 
*மஹா:* ஏன் முரண்பட வேண்டும்?
 
*गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुर्गुरुर्देवो महेश्वरः* 
*गुरुः साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः ॥*
 
என்ற சுலோகத்தில் குருதான் பிரஹ்மா, குருதான் விஷ்ணு, குருதான் மஹேசுவரர். குருதான் ஸாக்ஷாத் பரப்ரஹ்மம் என்று சொல்லப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியும். பரப்ரஹ்மமே குருதான் என்று இருக்கும்போது அந்த பரப்பிரஹ்மத்தில் தோன்றிய எல்லாவித பரிச்சின்னமான வியக்திகளும் குருவினிடத்தில் அடக்கமென்பது அவசியம்தானே? ஆகையால் ஒரு குறிப்பிட்ட தேவதையின் தியான சுலோகத்தையோ மந்திரத்தையோ சொல்லும்போது குருமூர்த்தியை உங்கள் முன் நிறுத்திக் கொள்வதில் எவ்வித முரண்பாடும் கிடையாது. அந்த தேவதையும் குருவின் ஸ்வரூபத்தில் சேர்ந்து அடங்கியுள்ளது தானே?

*To be continued..*

Wednesday, May 14, 2025

Leg need not be removed - Periyavaa

🕉️ஜெய் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏🚩🚩

சங்கராம்ருதம் - 1212 

ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்

நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்

 காஞ்சி மஹாபெரியவரின் தொண்டராக பணியாற்றியவர் பாடசாலை வெங்கட்ராம ஐயர். 

முதுமை காலத்தில் இவர் சர்க்கரை நோயால் அவதிப்பட்டார். நாளடைவில் படுத்த படுக்கையான அவருக்கு இடது காலை எடுக்கும் நிலை ஏற்பட்டது.

மஹாபெரியவர் காசி யாத்திரை சென்ற போது அவருடன் நடந்தே சென்றவர் இவர். 

இவரது மகளான லலிதா தீர்வு வேண்டி மடத்திற்குச் சென்றார். சுவாமிகளின் முன்பு கண் கலங்க நின்றார். 
அப்போது மனதிற்குள், 

'உங்க மனசு என்ன கல்லா... 
நான் படுற பாட்டை பார்க்கக் கூடாதா... 

உங்களுக்காக ஓடியாடிய என் அப்பாவுக்கு நீங்கதான் அருள்புரியணும்' 

என அழுதார். 

ஸ்வாமிகள் வலது கையை உயர்த்திஆசியளித்தார்.

.'கவலைப்படாதே...
நான் இருக்கேன்' 

என்பதை உணர்ந்த லலிதா நெகிழ்ச்சி அடைந்தார். 

மறுநாள் மருத்துவமனைக்கு தந்தையும்,மகளும் சென்ற போது மருத்துவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? 'இன்னைக்கு எடுத்த டெஸ்ட் ரிப்போர்ட்ஸ் ரொம்ப ஆச்சரியத்தை உண்டாக்குது. இவரோட காலில் பல்ஸ் ஓடுறது. துடிப்பு நல்லா இருக்கு. அதனால் காலை எடுக்க வேண்டிய அவசியம் கிடையாது' என்றனர்.

இதே மருத்துவர்கள் தான் 'உயிர் பிழைக்க வேண்டுமானால் காலை எடுத்தே ஆக வேண்டும்' என கடந்த இரண்டு மாதமாக வலியுறுத்தினர்.

ஆனால் மஹாபெரியவரின் தீர்மானம் தான் கடைசியில் நிறைவேறியது. 

மறுவாரத்தில் நன்றி சொல்வதற்காக லலிதா காஞ்சிபுரம் சென்றார்.

 அப்போது, மஹாபெரியவர் ஜாடையாக, 
மனசுல இவ வேண்டிண்டு இருக்கா... 
அது அப்படியே பலிச்சுடுத்தாம் 
என அருகில் நின்ற தொண்டர்களிடம் கூறினார். 

பிறகு லலிதாவை பார்த்து, 

கல்லான்னு கேட்டியே... 
கல்லாத்தான் இருந்தேன். 
ஆனா...அழுதியோ இல்லியோ... 
அதில மனசு கரைஞ்சு போயிட்டேன்' என்றார் 
சிரிப்புடன்.

உருக்கமான பிரார்த்தனைக்கு உடனடி பலன் கிடைக்கும் என்பது நிஜம் தானே...

லலிதா நரசிம்மன், கோவை.

 அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபிணம்ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்🙏🙏🚩🚩

Detachment - HH Sri chandarshekhara bharati Mahaswamigal part2

*Continuation from yesterday's posting*
 
*Source:ஸ்ரீ குருகிருபா விலாஸம்*
 
Section 2
 
*ஞானப் பிரஸூனங்கள்*
 
*1.பற்றின்மை*
 
துங்கா நதிக்கரையில் நல்ல வெய்யிலில் கொதிக்கிற கற்படிகளில் ஸ்ரீமத் ஆசார்யார் மணிக்கணக்காக உட்கார்ந்திருந்ததை பார்த்திருக்கிறேன்; அவர்களுடைய கைங்கர்யத்திற்காக ஏற்பட்டவர்கள் மேலேயுள்ள சூர்ய வெப்பத்தையாவது கீழேயுள்ள கல்தள வரிசையின் சூட்டையாவது பொறுக்க முடியாமல் பக்கத்தில் நிழலுள்ள இடம் தேடி நகர்ந்து விடுவார்கள். ஆகையால் ஸ்ரீமத் ஆசார்யாருடைய மனஸ் மாத்திரம் உலகத்திலிருந்து பற்றற்று விலகியிருந்ததென்று சொன்னால் போதாது, அவர்களுடைய சரீரமே பஞ்ச பூதங்களினால் பீடிக்கக் கூடாத்தன்மையை அடைந்திருந்ததென்று தெரிகிறது. பகவத்கீதையில் "ஸாம்ய நிலையடைந்த மனஸ் உள்ளவர்களால் இங்கேயே பிரபஞ்சமானது ஜெயிக்கப்பட்டது" (V19) என்று பகவான் சொல்லியிருக்கும் வாக்கியத்தை ஸ்ரீமத் ஆசார்யார் நன்கு ருசுப்படுத்திக் காட்டினார்கள் என்பதில் ஸந்தேஹமில்லை.

Tuesday, May 13, 2025

How to know seeds in pumpkin & fruits in jackfruit without cutting - Tamil mathematics

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையையும் உங்களால் கூற முடியுமா ?தமிழன்_படைத்த_கணிதம் .⚜ 

கணக்கதிகாரம்_நூலின்_சிறப்பு:🍋 🌽 🌰 

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா ? 

முடியும் என்கிறது நம் தமிழ் செய்யுள். 🐝 

"கணக்கதிகாரம்" கொறுக்கையூரைச் சேர்ந்த காரி_நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல்

"கீற்றெண்ணி முத்தித்துத் கழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலேபாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும் பூசணிக்காய் தோறும் புகல்"

ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "அ" என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90அ" ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது "45அ" ஆகும். அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135அ" ஆகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை அ=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க கிடைப்பது 810 ஆகும். எனவே பூசணியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்.

ஓர் பலாப்பழத்தை பிளக்காமல் அதில் எத்தனை சுளைகள் இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா ? 

சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.ஷ...ரு🌳 

"பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை 
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே 
வேறெண்ண வேண்டாஞ் சுளை."

கணக்கதிகாரம்_விளக்கம் : 🌳 

பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம்.🍆 

நம் முன்னோர்களின் அறிவியல் படைப்புகளில் இதுவும் ஒன்று எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்
அவன் புகழ் என்றும் வாழ்க வாழ்க தமிழ் வெல்க 🌷🧩🌷

Detachment - HH Sri chandarshekhara bharati Mahaswamigal part1

*Continuation from yesterday's posting*

*Source:ஸ்ரீ குருகிருபா விலாஸம்*
 
Section 2
 
*ஞானப் பிரஸூனங்கள்*
 
*1.பற்றின்மை*
 
சில ஸமயங்களில் ஸ்ரீமத் ஆசார்யாளின் பற்றின்மை வெகு தீவிரமாகத் தெரிந்தபோது, மடம் ஸம்பந்தமான லௌகிக விஷயங்களில் அக்கறையில்லையானால் அவர்கள் பீடாதிபத்யத்தில் இருந்து விலகிவிடலாமே யென்றுகூட சிலர்களுக்கு யோசனை தோன்றியிருப்பதுண்டு. அவர்கள் தைர்யமாக ஆசார்யாரிடம் இவ்வெண்ணத்தை தெரியப்படுத்தியிருந்தால் ஸந்நிதானம் ஸந்தோஷமாய் ஏற்றுக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவ்விதம் நடந்திருந்தால் பலவிதத்தில் உலகத்திற்கு பாக்கியக் குறைவே ஏற்பட்டிருக்கும். முக்கியமாக, அத்வைத பீடத்திலிருக்கிற ஒரு மஹான் ஆத்ம ஸாக்ஷாத்காரம் அடைந்து உலகப்பற்று இல்லாமலிருந்தால், அந்த ஆத்ம ஸாக்ஷாத்காரம் ஏற்பட்ட காரணத்தினாலேயே மடத்தின் தலைவராக இருந்துவர தகுதி யுள்ளவரல்ல என்ற அபாயமான ஒரு புதிய நியாயத்தை ஏற்றுக்கொண்டதாக ஆகிவிடும்.
 
ஏகாந்தமாயிருப்பதில் அவர்களுக்கு ஸ்வபாவஸித்தமான மனோபாவம் 1953 ல் நடந்த ஸஹஸ்ரசண்டீ ஹோம ஸமயத்தில் வெகு வெளிப்படையாகத் தெரிந்தது. இந்த அபூர்வமான யாகத்தை தரிசிப்பதற்காக நம் தேசத்திலுள்ள பல பிரதேசங்களிலிருந்து ஆயிரம் பதினாயிரம் கணக்கான பக்தர்கள் வந்து குழுமியிருந்தார்கள். ஸ்ரீமத் ஆசார்யாரை நேரில் தரிசிக்க வேண்டுமென்றும், அவர்களை ஒரு தடவையாவது நேரில் வந்தனம் செய்ய வேண்டுமென்றும் மிக்க அவாவுடன் அவர்கள் வெளியில் வருவதை எதிர்ப்பார்த்துக் கொண்டேயிருந்தார்கள். ஸ்ரீமத் ஆசார்யார் அங்கு செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளைப் பற்றி விவரமாகக் கேட்டுக் கொண்டார்களே தவிர, எத்தனையோ சிஷ்யர்கள் வற்புறுத்திப் பிரார்த்தித்தும், வெளியில் வரவேயில்லை. எல்லாவற்றையும் சின்ன ஸ்வாமிகளையே கவனித்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு, தம் அறையிலேயே தங்கிவிட்டார்கள். கொஞ்சமேனும் அஹந்தையாவது கியாதியில் (புகழில் ) ருசியாவது இருந்திருந்தால், வெளியில் வந்து சில நிமிஷங்களாவது அங்கு கூடியிருந்த சிஷ்யர்களுக்கு தரிசனம் கொடுத்து அந்த ஏராளமான சிஷ்ய ஸங்கத்தினால் செய்யப்படும் வந்தனாதிகளாகிய மரியாதைகளைப் பெறுவதில் ஸந்தோஷித்திருக்கலாம். அவர் நிலை வேறு. உத்ஸவத்திற்கு வந்திருந்த கூட்டமெல்லாம் கலைந்தபிறகு அவர்கள் வெளியில்
வந்தார்கள். அப்பொழுது ஒரு நெருங்கிய பக்தர் ஸ்ரீமத் ஆசார்யாரிடம் "தங்களுடைய தரிசனத்திற்காக ஆயிரக்கணக்கான ஜனங்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். அந்த உத்ஸவகாலம் பூராவும் தங்களையே நினைத்துக் கொண்டிருந்தார்கள். தூரத்திலிருந்துகூட தங்களை தரிசிக்க முடியவில்லையே என்ற தாபம் அவர்களுக்கு வெகுவாக இருந்தது. பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் அவர்கள் மனதில் உறுத்திக்கொண்டே எல்லாரும் திரும்பிப்போனார்கள்" என்று சொன்னார். அதற்கு ஸ்ரீமத் ஆசார்யார் தமக்கு அஸாதாரணமான புன்சிரிப்புடன் தமக்கு அஸாதாரணமான ரீதியில், 'அதுவே நல்லது. நான் வெளியில் வந்திருந்தேனேயானால், ஜனங்களுடைய குதூஹலமோ ஆவலோ அப்பொழுதே தீர்ந்திருக்கும். அடுத்த க்ஷணம் முதற்கொண்டு அவர்கள் என்னைப்பற்றி நினைப்பதை நிறுத்திவிடுவார்கள் என்பதும் நியாயம்தானே?" என்றார்கள். 
 
*To be continued*

Monday, May 12, 2025

Glory of Periya nambi

திருமலை சீனிவாசன்
 மேற்கு மாம்பலம்.

 *சித்திரைத் தேரும் பெரிய நம்பியின் பெருமையும்*

பகவத்ஶ்ரீ ராமானுஜருக்கு மதுராந்தகத்தில் பஞ்ச சம்ஸ்காரம் செய்த ஆச்சாரியன் பெரிய நம்பி. பெரிய நம்பிகள் ஶ்ரீ ஆளவந்தாரின் பிரதான சிஷ்யர்களில் ஒருவர்.

ஆளவந்தாரிடம் ஆழ்ந்த நம்பிக்கையும் மற்றும் ஈடுபாடும் கொண்டவர். ஆளவந்தாரின் கருத்துக்களைப் பரப்பியவர். பிராமண குலத்தில் பிறந்தவர்.
இருப்பினும் ஜாதி பேதம் பாராத வைஷ்ணவர்களில் ஒருவர்.

*ஆளவந்தாருக்கு பெரிய நம்பியை தவிர சிஷ்யர்கள் பலர். *திருக்கோட்டியூர் நம்பி,திருமலை நம்பி,திருமாலையாண்டான், திருவரங்கம் பெருமாள் அரையர்,திருகச்சி நம்பிகள், மாறனேரி நம்பி மற்றும் பலர் இருந்தனர்.*

அதில் பெரிய நம்பிகள் பிராமண குலத்தில் பிறந்தவர். மாறனேரி நம்பி ஒடுக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர். மாறனேரி நம்பி ஆளவந்தாரின் சிஷ்யரான கதையே தனி. ஒரு சமயம் ஆளவந்தார் வயல் வெளியில் தனது சிஷ்யர்களுடன் சென்று கொண்டிருக்கையில் மாறனேரி நம்பி ஏர் உழுது கொண்டு இருந்தார். பின் பசி தீர்க்க, உழுத நிலத்திலுள்ள சேற்று நீரில் சேற்றை கரைத்துக் குடித்து கொண்டிருந்தார்.
ஆளவந்தார், மாறனேரி நம்பியிடம்,"
 பசி தீர்க்க உணவு இருக்கும் போது சேற்றைப் புசிப்பானேன்? என்று வினவ, அதற்கு மாறனேரி நம்பி தலை நிமிர்த்தி," *மண்ணுக்கு மண்* *இடுகிறேன்*!"என்று பதிலுரைத்தார்.

இதைக் கேட்டவுடன் ஆளவந்தார், இவர் சடவாயுவைக் கோபித்த திருகுருகூர் சடகோபரான நம்மாழ்வார் போன்றவரோ! என அன்புடன் பேசினார். மாறனேரி நம்பியும் ஆளவந்தாரை ஆச்சாரியனாக வரித்தார். ஆளவந்தார் ஜாதி பேதம் பாராது அவரை சிஷ்யராக ஏற்றார்.

ஆளவந்தார் தனது திரு மாளிகையைக் ( இல்லம்) கட்டிக் கொண்டு இருந்தார். திருமாளிகை(வீடு) முழுதும் கட்டி முடித்தாகி விட்டது. புண்ணியாவாசனம் செய்திட நாளும் குறித்து இருந்தார். அதற்கு முதல் நாள் மாறனேரி நம்பி, கட்டிய வீட்டைப் பார்த்து விட்டு சென்றார். இதை அறிந்த ஆளவந்தார், சிஷ்யன் மாறனேரி நம்பி திருவடி , பொன்னடி! அந்த திருவடிகள் பட்ட இடம் புனிதமாகி விட்டது, இனிமேல் சடங்கு சம்பிரதாயம் தேவையில்லை. புனிதமாகி விட்ட. இடத்தை இனி மீண்டும் புனிதமாக்குவதா? என்று சொல்லி எல்லா சடங்குகளையும் ரத்து செய்து விட்டார்.இந்த சம்பவம் மாறனேரி நம்பியின் நல் குணத்தையும் நல் ஆத்மாவையும்
மற்றவர்களுக்கு எடுத்து காட்டிட நினைத்தார் ஆளவந்தார்.

இதனிடையே ஆளவந்தார் இராஜ பிளவை நோய்க்கு ஆட்பட்டார். ஆளவந்தார்,
நம் பெருமாளிடம் ஒரு விண்ணப்பம் வைத்தார். நம்பெருமாள்," என்ன ஆளவந்தாரே? என்ன கவலை?" என்று கேட்டார்.
ஆளவந்தாரே," அடியேனுக்கு மோட்சம் உண்டா இல்லையா தெரியவில்லை! இந்த நோய் முன் வினைப் பயன் என்றாலும் இந்த நோயுடன் இன்னும் எவ்வளவு நாள் வாழ வேண்டுமோ என்று தெரியவில்லையே? அடியேனை திருநாட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்!" என்றார். பகவான் புன்சிரிப்புடன் மறைந்தார்.

இதனிடையே ஆளவந்தார், நம்பெருமாளே! நம்பெருமாளே! என்று புலம்பித் தவிப்பதைப் பார்த்த மாறனேரி நம்பி," தாஸன்! அடியேன் ஒரு விண்ணப்பம்! தங்களது நோய்யை அடியேனுக்கு பிரசாதமாய் தாருங்கள்! அடியேன் ஏற்றுக் கொள்கின்றேன்! ஆச்சாரியன் கஷ்டப்படுவதை காண அடியேன் மனமும் கண்களும் வாடுகின்றது. தயை கூர்ந்து விண்ணப்பத்தை ஏற்பீராக!" என்றார்.
ஆளவந்தார் முதலில் சம்மதிக்கவில்லை. கூட இருந்த மற்ற சிஷ்யர்கள் மாறனேரி நம்பியின் ஆச்சாரிய பக்தியைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.
மாறனேரி நம்பி ஆளவந்தாரை மீண்டும் வற்புறுத்தி வேண்டிக் கொண்டார். வேறு வழியில்லாமல் ஆளவந்தார் தனது இராஜ பிளவையை மாறனேரி நம்பிக்கு தத்தம் கொடுத்தார். மாறனேரிக்கு ராஜ பிளவையும் பாதிக்கப் பட்டார். ஆளவந்தார். குணமடைந்தார். சிறிது காலத்தில் ஆளவந்தாருக்கு நோய் நீங்கியது.
எனினும் *ஆளவந்தார் வயதாகி*
*விட்டபடியால் தளர்ந்து போய்* *விட்டார்*. *சில காலம் கழித்து பரமபதம் எய்தினார்.பரமபதம் போகும் முன் தனது* *சிஷ்யர்களிடம்," மாறனேரி நம்பியை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்!"* என்று சொல்லி விட்டு சென்றார்.

இதனிடையே, தாம் ஏற்றுக் கொண்ட ராஜ பிளவை நோய் மாறனேரி நம்பியை வாட்டியது. *தமது ஆச்சாரியனின் கட்டளைக்கு இணங்க பெரிய நம்பி மாறனேரி நம்பியை நன்கு கவனித்துக் கொண்டார்.* *தினமும் அவரை கண்காணித்து, குளிப்பாட்டி, உணவு தருவது போன்ற எல்லா வேலைகளையும் சிரமேற் கொண்டு செய்தார்.சில காலம் கழித்து மாறனேரி நம்பி பரம பதம் எய்தினார். பெரிய நம்பி மாறனேரி நம்பியின் ஈமக்கிரியைகளைச் செய்தார். இதைக் கண்ட மற்றவர்கள் பெரிய நம்பியின் வீட்டை கல்லால் அடித்தனர்.அவரை தள்ளி வைத்தனர்.*
 இதை அறிந்த பகவத்ஶ்ரீ ராமானுஜர் அப்போது முற்றிலும் சீர்திருத்தவாதியாக பரிமணிக்காத காலம். *இராமானுஜருக்கு ஐந்து ஆச்சாரியர்கள் இருந்தார்கள். அதில் ஒருவர் பெரிய நம்பி.எனவே ஒரு சிஷ்யனாக இருந்து பெரிய நம்பியை கவனித்து வந்தார்.* மாறனேரிக்கு செய்யும் தொண்டைப் பார்த்து பகவத் ஶ்ரீராமானுஜர் பிரமித்தார். அவர்,தனக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்த ஆச்சாரியனான பெரிய நம்பியை அணுகி," தாஸன்! அடியேனிடம் ஒரு உத்திரவு இட்டு இருக்கலாமே? ஈமச் சடங்குகளை வேறு யாராவது செய்திருக்கலாமே ! அதற்கு அடியேன் வேறு ஏற்பாடுகள் செய்திருப்பேனே" என்றார்.
உடனே பெரிய நம்பி," *அடியேன் தவறு ஒன்றும் புரியவில்லை! ஶ்ரீ வைஷ்ணவன் என்பதை தெரிந்து கொண்டவன் இப்படித்தான் செய்ய வேண்டும்! ஜடாயுவிற்கு இராமபிரான் ஈமக்கிரியைகளைச் செய்தார் அல்லவா? அந்த இராமபிரானை விட அடியேன் உயர்ந்தவன் இல்லை! விதுரருக்கு தர்மர் ஈமக்கிரியைகளைச் செய்தார்! அவரை விடவா அடியேன் உயர்ந்தவன்? மாறனேரி நம்பி தாழ்ந்தவர் இல்லை! மிகச் சிறந்த வைஷ்ணவர்! அடியேன் மாறனேரி நம்பிக்கு இந்த கைங்கர்யம் செய்யாவிட்டால், வைஷ்ணவன் என்பதில் அர்த்தமில்லை! வைஷ்ணவன் என்றாகி விட்டால் மற்ற எதும் பார்க்க தேவையில்லை! அதன் பின் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி," பயிலுஞ் சுடரொளி , நெடுமாற்கடிமை* *என்ற இந்த திருவாய் மொழி பாசுரங்கள் கவைக்குதவாத வெறும் கடலோசை போல் பொருளற்றவயாக அல்லவா ஆகி விடும்? அந்த திருவாய் மொழிகள் வேறும் பாசுரங்களா? இல்லை! அந்த பாசுரத்தின் அர்த்தமறிந்து நடந்து கொண்டேன்! இதில் அடியேன் தவறு காணவில்லை!"* என்றார்.

இதுவே பின்னாளில் பகவத் ஶ்ரீராமானுஜர் மேல் கோட்டையில் தாழ்த்தப்பட்ட மக்களை," *திருக்குலத்தோர்*" என்று அழைக்கச் செய்தார். பின்னாளில் தனது சிஷ்யர்களான *உறங்காவல்லியும் பொன்னாச்சியும்* பரமபதித்த போது கூரத்தாழ்வானின் திருக்குமாரனைக் ( பராசரபட்டர்) கொண்டு ஈமக்கிரியைகளைச் செய்வித்தார்.

இதனிடையே,
*சித்திரை மாதம் விருப்பண்ண உடையார் திருநாள் உற்சவம்*( தற்போது விருப்பன் திருநாள் உற்சவம் எனச் சொல்லப்படுகிறது) ஆரம்பமாகியது. *சித்திரை தேரில் நம் பெருமாள் சித்திரை வீதிகளில் பவனி வந்தார். பெரிய நம்பியின் பெண் (அம்மாளு)தேர் வருவதைப் பார்த்து விட்டு ஆவேசத்துடன்," நம்பெருமாளே! அடியேனது திருதகப்பனார் என்ன தவறு செய்தார்? ஏன் இப்படி ஊரார் ஒதுக்கிட தேவரீர் கண்டு கொள்ளாமல் இருப்பதன் மர்மம் என்ன? உமது லீலை தான் என்ன? நாங்கள் வாடுவதைக் கண்டு கொள்ளாமல் திருத்தேரில் பவனி வருவது முறையோ? இது அழகோ? இது தர்மம் தானோ? பெரிய நம்பிகளின் பெண் சொல்லி சொல்லிப் புலம்பினாள்.*

 *திருத்தேர் கீழச் சித்திரை வீதி ஒரு பகுதியைக் கடந்து விட்டது. பெரிய நம்பி இல்லம் அருகே நின்றது. நின்றது நின்றது தான்.கூட்டம்* *கூட்டமாய்*
*பலரும் வடம் பிடித்து தேர் இழுக்க தேர் நகரவில்லை. நம் பெருமாளுக்கு அர்ச்சனைச் செய்யும்* *பட்டருக்குள் நம்பெருமாள் ஆவேசித்து கூறலானார்:பெரிய நம்பி நமக்கு நல்லான்! அவனை விட வைஷ்ணவன் யாருமில்லை!" என்றார்.*

*ஊர் ஒதுக்கிய பெரிய நம்பியை ஊர் மக்கள் மரியாதை செய்தார்கள்.* *பெரிய நம்பி திருத்தேர் வடம் பிடிக்க, திருத்தேரும் நகர்ந்தது. ஊர்மக்கள் மனமும் மாறியது.* *இப்போதும் பெரிய நம்பி வம்சத்தினர் திருத்தேரின் வடம் முதலில் பிடிப்பார்கள். அது இன்று வரை நடைபெறுகிறது.
 (26. 4. 2025:சனிக்கிழமை இன்று சித்திரைத் திருத்தேர் நடை பெற்றுகிறது.)

*குறிப்பு*
 அந்த வம்சத்தில் வந்தவர் தான் உயர்திரு BSR அவர்கள்.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலம் மற்றும் சரித்திர பூகோள ஆசிரியராய் பணி புரிந்தவர். இப்போது திருத்தேரின் நிலை அவர் வீட்டின் அருகே தான் உள்ளது.அவர் பரமபதம் எய்தி விட்டார். அவருக்கு இரு மகன்களும் ஒரு மகள் இப்போது இருக்கிறார்கள். அவர்கள் உற்சவத்தில் இன்னும் பங்கு கொள்கிறார்கள்.

*பகவத்ஶ்ரீ ராமானுஜரிடம் பெரிய நம்பி சொன்ன வாக்கியம் தான் வெறும் கடலோசை யாகி விடும் அல்லவா? 
*வாழ்க பகவத்ஶ்ரீ ராமானுஜர்! வாழ்க அவரது ஆச்சாரியார் பெரிய நம்பி!*
*பெரிய நம்பி பல்லாண்டு பல்லாண்டு வாழ்க!*

Detachment - HH Sri chandarshekhara bharati Mahaswamigal

*Source:ஸ்ரீ குருகிருபா விலாஸம்*
 
Section 2
 
*ஞானப் பிரஸூனங்கள்*
 
*1.பற்றின்மை*
 
ஸ்ரீ மஹாஸந்நிதானம் மடத்து லௌகிக விஷயங்கள் எவற்றிலும், எவ்வளவு பாதக மன்னியில் இருந்தாலும், அக்கறை எடுத்துக் கொள்வது கிடையாது. மடத்து அதிகாரி ஒருவர், மடத்தைச் சேர்ந்த பல கோவில்களில் நடக்க வேண்டிய பூஜைக்குப் போதுமான புஷ்பங்கள் வேணடுமென்று தான் அமைத்துள்ள பூந்தோட்டத்திலாவது ஆசார்யாரின் கவனத்தை இழுக்கலாம் என்று எண்ணி, ஒரு நாள் மாலையில் அவர்களிடம் சென்று, 'அருகாமையில் சில நாட்களுக்கு முன் ஒரு நந்தவனம் அமைத்தேன். இப்பொழுது நன்றாக வளர்ந்திருக்கிறது. அதை தாங்கள் நேரில் வந்து பார்வையிட வேண்டுமென்று எனக்குப் பேரவா!' என்றார். உடனே ஸ்ரீமத் ஆசார்யாள் அதற்கு இசைந்து, அவருடன் சென்று, பூப்பாத்திகளையும் செடிகளையும் பார்த்துவிட்டுத் திரும்பினார்கள். ஆனால் ஒரு வார்த்தைகூட சொல்லாமலிருந்ததால் கொஞ்சம் மனது நொந்த அவ்வதிகாரி "தோட்டம் நோத்தியாய் இருக்கிறதா, இல்லையாஎன்பதைப் பற்றி தங்கள் அபிப்பிராயத்தை தெரிந்து கொள்வதற்காகவே தங்களை இங்கே வரும்படி சிரமப்படுத்தினேன்" என்றார். உடனே ஆசார்யாள், "ஏன். வெகு நேர்த்தியாக இருக்கிறதே" என்றார்கள். இதைக்கேட்ட அதிகாரி விடாமல் ''நான் கேட்ட பிறகு இவ்விதம் சொல்லும் அபிப்ராயம் எனக்கு ஸமாதானமாயில்லை. இன்னும் எந்த எந்த விதமாக இத்தோட்டத்தை அபிவிருத்தி செய்யலாம். எப்படி இன்னும் சோபிக்கச் செய்யலாம். என்று உத்தரவாக வேண்டும்" என்றார். அதற்கு ஆசார்யாள் "இன்னும் என்ன என்ன செடிகளை வைத்துப் பயிரிடலாம் என்று நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். அவ்வதிகாரி உடனே 'இன்ன இன்ன செடிகள் பயிரிடலாம் என்ற யோசனை இருக்கிறது" என்று பதில் சொன்னார். ஆசார்யாளும் "நல்லது, அப்படியே செய்யலாமே" என்று சொன்னார்கள். இந்த பதில் வந்தபிறகுதான் அவ்வதிகாரி "இது செய்யலாம், அது செய்யலாம், என்று நான்தானே சொல்லியிருக்கிறேன். ஆசார்யாளாக ஒருவித யோசனையும் சொல்லவில்லையே" என்பதை உணர்ந்தார். ஆசார்யாளை இத்தகைய வியவஹாரங்களில் அக்கறை யெடுக்கச் செய்ய முயல்வது பிரயோஜனமில்லையென்றும் அறிந்துகொண்டார்.
 
*To be continued*

Sunday, May 11, 2025

Brahmibhavam - Sri Gurukrupa vilasam

*Source:ஸ்ரீ குருகிருபா விலாஸம்*
 
*தொகுத்தவர்*
 
*ஸ்ரீ ஞானானந்த பாரதீ ஸ்வாமிகள் (முன்னாள் ஸ்ரீ ஆர். கிருஷ்ணஸ்வாமி அய்யர், திருநெல்வேலி)*
9.ப்ரஹ்மீபாவம்
 
மேலே கண்டிருக்கும் ஸம்பவங்கள் ஸ்ரீமத் ஆசார்யாரின் மஹிமையின் லேச லேசத்தை ஒருவாறு உதாஹரணமாகக் காட்டலாமே தவிர அவருடைய திவ்ய மஹிமையை எடுத்துக்காட்ட போதுமானவை அல்லவென்பதை நன்கு உணர்வேன். இதேமாதிரி இன்னும் பல ஸம்பவங்களை எடுத்துச் சொல்லலாம். அவருடன் நெருங்கிப் பழக பாக்கியம் கிடைத்த பக்தர்கள் இன்னும் விசித்திரமான ஸம்பவங்களைப் பற்றிச் சொல்லக்கூடும். இவைகளிலிருந்து ஸ்ரீமத் ஆசார்யார் ஸாமான்ய மனுஷ்யராயிருந்து படிப்படியாய் ஆத்ம நிலையை ஸாதித்த மஹான் என்று நினைப்பதற்கில்லை. மாயையில் அகப்பட்டு கஷ்டப்பட்டு தவிக்கும் ஜனங்களை உத்தாரணம் செய்வதற்காகவே கருணையுடன் அவதரித்த பகவதம்சம் என்றே சொல்ல வேண்டும். ஆனால் அவர் உத்தாரணம் செய்யும் விதம் வெறும் உபதேசத்தினால் அல்ல, தாமே அனுஷ்டித்தும் காட்டினார். சிரத்தையுடன் தம்மிடம் வந்து அபேக்ஷிக்கிறவர்களுக்கு அவர்களின் யோக்கியதையை அனுஸரித்து ஸதுபதேசமோ மந்திர உபதேசமோ செய்து அனுக்ரஹித்தார் என்பது வாஸ்தவம். ஆனால் அவருடைய சர்யையை கவனிக்கும்போது அவரிடம் ஸ்வாதீனமாய் யாரும் நெருங்க அச்சப்படுவார்கள். 

 
ஸ்ரீமத் ஆசார்யார் அவதரித்து அறுபதாவது வயது வந்தவுடன் இதை விசேஷமாக கொண்டாட வேண்டுமென்று சில பக்தர்கள் உத்தேசித்ததற்கு அவர் இடம் கொடுக்கவில்லை. கொண்டாட்டம் வெறும் லௌகிக ரீதியில் இல்லாமல் அதிருத்ர யாகம் ஸஹஸ்ர சண்டீ ஹோமம் முதலானது நடத்த உத்தேசிப்பதாகத் தெரிந்ததும், லோக க்ஷேமார்த்தம் அவைகளை நடத்தலாமென்றும் தம்முடைய ஷஷ்டி அப்த பூர்த்திக்கு ஸம்பந்தமில்லாமல் நடத்த வேண்டு மென்றும் அவர் உத்தரவு செய்ததை அனுஸரித்து 60 வது வயது பூர்த்தியாய் சில மாஸங்களுக்குப் பின் 1953 ஏப்ரலில் இவைகள் அதிவிமரிசையாக நடத்தப்பட்டன. மைஸூர் ஸம்ஸ்தானத்தை திப்புஸுல்தான் ஆண்ட காலத்தில் அவருடைய வேண்டுகோளின்படி ஸ்ரீமடத்தில் இந்த ஸஹஸ்ரசண்டீ ஹோமம் நடந்தது. இப்பால் 150 வருஷங்களுக்கு மேலாக நடந்ததில்லை. இவ்வபூர்வமான யாகங்களை தரிசிக்க பரதகண்டத்திலுள்ள எல்லா பாகங்களிலிருந்தும் ஏராளமான ஜனங்கள் வந்திருந்தார்கள். ஸ்ரீமத் ஆசார்யார் ஸாமான்யமாய் வெளியில் வந்து தரிசனம் கொடுப்பதில்லையென்ற பிரஸித்தி இருந்து வந்த காரணத்தினாலேயே இந்த ஸமயத்திலாவது தரிசனம் கிடைக்குமென்று ஜனங்கள் மிக ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீமத் ஆசார்யார் யாக விஷயமாய் செய்திருக்கும் ஏற்பாடு விவரங்களை விசாரித்து விட்டு பரிபூர்ணமாக அனுக்ரஹம் செய்ததுடன் பகவான் இவ்வாராதனத்தை அங்கீகரிப்பார் என்றும் அதற்கு அறிகுறியாக ஹோமகுண்டத்தில் முக்கிய ஆஹுதி செய்யும் காலம் மழை பெய்யும் என்றும் சொன்னார்கள். ஆனால் அங்கு கூடியிருக்கும் லக்ஷக்கணக்கான ஜனங்களை தாம் பார்க்கவாவது அவர்களுக்குத் தாம் தரிசனம் கொடுக்கவாவது ஸம்மதிக்கவில்லை. அவருடைய திவ்ய மூர்த்தியைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலுடன் அக்கூட்டத்திலுள்ள யாவரும் அம்மூர்த்தியை தீவிரமாக தியானித்திருப்பார்களென்பதில் ஸந்தேஹமில்லை. அவர் வெளியில் வந்து தரிசனம் கொடுத்திருந்தால் உடனே மறத்திருக்கக்கூடும். இந்த அபரிமிதமான தியானத்தினால் அவர் மூர்த்தியை மறக்கமுடியாமல் மனதில் ஊன்றி வைத்த பாக்கியம் ஏற்பட்டிராது. 
 
 
மஹா பூஜை ஆராதனை எல்லாம் கிரமப்படி நடந்த பிற்பாடு, ஏற்கெனவே 1931 முதல் சின்னப் பட்டம் வஹித்து ஸ்ரீமத் ஆசார்யாரிடமே கூடவேயிருந்து பாத்திரமாயிருந்துவந்த விசேஷ அனுக்ரஹ ஸ்ரீமத் அபிநவவித்யாதீர்த்த ஸ்வாமிகளவர்கள் இவ்வியாகயான ஸிம்ஹாஸனத்தில் பீடாபிஷிக்தர்களாக பீடாரோஹணம் செய்தார்கள். 
 
ஸ்ரீகத் ஆசார்யார் சரீரபந்தம் விட்டு தேச கால ரூபாதீதமான பிரஹ்மத்தோடு கலந்து விட்டபடியால் இனி அவர்களுடைய அனுக்ரஹத்தை யாரும் எங்கேயும் எப்பொழுதும் நாடலாம். அவர்கள் மனுஷ்ய சரீரத்துடன் நம் மத்தியில் அறுபது வருஷங்களுக்கு மேலாக இருந்தும் நாம் கிருதார்த்தர்களாகாமல் இன்னும் அவித்யையில் உழலுகிறவர்களாக இருந்தால் அதற்கு அவர்கள் என்ன செய்ய முடியும்? நாமல்லவா அவர்களுடைய திவ்ய ஸந்நிதியைத் தேடிப்போய், அனுக்ரஹம் பெற்று, அவர்களுடைய ஞான வைபவத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்? இப்பொழுதாவது நம் கைக்கு கிட்டினால் போலிருந்த இப்பெரும் விலையற்ற நிதியை அடிக்கடி ஞாபகத்தில் வைத்து அனுஸந்தானம் செய்தாலும் மிக சிரேயஸ்னோயாகும். 
 
சிருங்கேரியிலுள்ள நதியின் அழகையும், ஸித்தி மலைவனங்களுடைய ராமணீயகத்தையும் ஸ்ரீ சிருங்கேரி மடத்தின் லௌகிக ஸம்பத்தையும் கண்டு களிக்க வெகு பேர்கள் நன்கு சிருங்கேரிக்கு வருகிறார்கள். அங்குள்ள இயற்கையின் சோபையையும் ஸ்ரீமடத்தின் உபசாரத்தையும் அனுபவிக்கிறார்கள். ஆனால் இவைகளெல்லாவற்றையும்விட ஸ்ரீமத் ஆசார்யாரின் திவ்ய மூர்த்தியே மேலானதென்பதை மறந்து விடுகிறார்கள். ஆசார்யாரிடம் ஸமீபத்தில் போகிறவர்கள்கூட அவர்களுடைய உண்மையான மஹிமையைத் தெரிந்து கொள்வதில்லை. அவர்களிடம் ஆடம்பரமின்மை, அபாரமான வைதுஷ்யம், த்ருடமான சிரத்தை, ஸர்வபூததயை முதலான குணங்கள் இருப்பதாகக் காண்கிறார்கள்; ஆசார்யாருடைய மஹிமையைப் பற்றி வாயாற மனதினாலும் வாக்கினாலும் ஸ்தோத்திரம் செய்கிறார்கள். இந்த ஸ்தோத்திரங்கள் அவர்களுக்கு எதற்கு? அவர்களுடைய ஸம்பர்க்கத்தினால் எவ்வளவு மட்டும் நாம் பிரயோஜனம் அடைந்தோம், என்பதையல்லவா பார்க்க வேண்டும்? நம் மனஸ் பரிசுத்தமாகி வருகிறதா என்று பார்க்க வேண்டும். இம்மஹான் நமக்கு ஆசார்யாரென்பதில் நாம் கர்வம் கொள்ளலாம். ஆனால் அவருடைய சிஷ்யர் என்று சொல்லிக்கொள்ளக்கூடிய யோக்கியதையை நாம் ஸம்பாதித்துக் கொள்ளாமலிருக்கும் வரை இந்த கர்வம் நியாயமாகுமா? சில நவீனர்கள் நன்றாக சில்பவேலை செய்யப்பட்டிருக்கும் விக்நேசுவர மூர்த்திகளை, மேஜையின் மேல் வைத்திருக்கும் காகிதம் காற்றில் பறக்காமலிருப்பதற்காக மேலே வைக்கிறார்கள்! அதுபோலல்லவா ஆகிவிடும், நாம் ஆசார்யாரை ஸ்துதி செய்துவிட்டு ஆத்மலாபத்திற்காக அவர்களை நாடாத விஷயத்தில்? அவ்விதம் நாடுவதற்கும் அவருடைய பரிபூர்ண அனுக்ரஹம் வேண்டும். ஞான நிதியாயும் கருணாநிதியாயுமிருந்துவந்த ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மஹாஸ்வாமிகளின் அனுக்ரஹம் நமக்கு கிடைக்க வேண்டுமென்ற பேரவாவையும் சிரத்தையையும் அளிக்க வேண்டுமென்று பகவானைப் பிரார்த்திப்போம். இம்மஹான் ஊக்கமுள்ள பக்தருக்கு இன்னமும் அனுக்ரஹம் செய்ய ஸித்தமாயிருக்கிறார்.

Ramagiri Vaaleeswarar temple

 ராமகிரி வாலீஸ்வரர் - நங்கநல்லூர் J K. SIVAN 

சென்னையிலிருந்து பெங்களூருக்கு சல்லென்று காரில் சில மணி நேரங்களில் போகிறோமே. வழியில் வேலூர், கிருஷ்ணகிரி என்று பெயர்கள் வரும். கிருஷ்ணகிரி என்கிற பெயர் எல்லோரும் அறிந்தது. ஆனால் ஆந்திராவுக்கு சென்னை ஊத்துக்கோட்டை வழியாக போகும்போது ராமகிரி என்று ஒரு அற்புத ஊர் வருமே அது எத்தனை பேருக்கு தெரியும்?

சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு ஊத்துக்கோட்டை வழியாக சென்றிருக்கிறேன். வழியில் நாகலாபுரம், பிச்சாட்டூர் என்கிற ஊர்கள். நாகலாபுரம் ஒரு பிரசித்தி பெற்ற க்ஷேத்ரம். புராணத்தில் இதற்கு திருக்காரிக் கரை என்று பெயர். இங்கே உள்ள பைரவர் ஸ்வேத பைரவர், கல்யாண பைரவர், சந்தான பைரவர் என்ற பெயர்களில் வணங்கப்படுகிறார்.

அருகே இன்னொரு ஆலயம் ராமகிரி வாலீஸ்வரர் கோவில். ஆந்திரப் பிரதேசம், சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து 95 கி.மீ.. அமைதியான ராமகிரி ஆலயம் 9ஆம் நூற்றாண்டில் பல்லவர்கள் கட்டியது. ஒரு சிவன் கோவில் "திவ்ய தேசம்" என்றோ "வைப்பு ஸ்தலம்" என்றோ கூட சொல்லலாம்.

 ராமகிரியில் சிவனுக்கு பெயர் வாலீஸ்வரர். அம்பாள் மரகதாம்பிகை. விசேஷ தெய்வம் காலபைரவர் (சந்தா ன ப்ராப்தி பைரவர்). கோஷ்டங்களில் காளிகாம் பாள், முருகன், விநாயகர் அருள்பாலிக் கிறார்கள்.  

அருகே ஒரு அற்புதமான குளம். அதில் ஒரு கல் நந்தி முகம். அதன் வாயிலிருந்து இரவு பகலாக பல வருஷங் களாக ராமகிரி மலையிலிருந்து அருமையான சுனைநீர் ஊற்றிலிருந்து பெருகி வருகிறது. அந்த ஊர் காரர்கள் அத்தனைபேரும் கல்கண்டாக இனிக்கும் இந்த நந்தி வாய் மூலிகை நீரை பருகி சந்தோஷம டைகிறார்கள். குளத்தில் இறங்கி ரெண்டு கை நிறைய நந்தியின் வாயில் இருந்து நீர் வாங்கி குடித்தேன். என்ன ருசி அப்பப்பா!ரொம்ப ரொம்ப விசேஷமான ஒரு காட்சி இங்கே; நந்தி தீர்த்தம்: நந்தியின் வாயிலிருந்து நீர் தொடர்ந்து பாயும் ஒரு தீர்த்தம் ஆஹா அந்த தீர்த்தத்தின் ருசிக்கு ஈடே கிடையாது. வயிறு நிரம்ப கையில் வாங்கி குடித்திருக்கிறேன்.

ராமகிரி வாலீஸ்வரர் ஆலயம் பஞ்ச ப்ரம்ம ஸ்தலங் களில் ஒன்று சிவனுக்கு ஈசான முகம். கர்ப்ப
கிரஹத்தை சுற்றி கோஷ்டங்களில் மேற்கில் இருவரும், வடக்கில் இருவருமாக நாலு பைரவர்கள். இது ஒரு அற்புத பைரவ ஸ்தலம். நடுவில் சாமுண்டி.

 ராவணனை வதம் செய்தபிறகு ராமர், ப்ரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட, ஹனுமனை காசியிலிருந்து சிவலிங்கம் கொண்டு வரச் அனுப்புகிறார். ஆஞ்சநேயர் காசிக்குச் சென்றார். காசி நகரத்தின் காவலராக இருப்பவர் காலபைரவர். அவரது அனுமதியின்றி தனது ஸ்ரீ ராம பிரானின் உத்தரவை நிறைவேற்றிட ஸ்ரீஆஞ்ச நேயர் அவசரப்படுகிறார். காசி நகரைச் சுற்றி பறந்து வரும்போது, சரியான சிவலிங்கத்தை அதன் நேர் மேலே கருடன் வட்டமிட்டுக்காட்டுகிறது; அந்த சிவலிங்கத் தின் அருகில் வந்ததும், பல்லியின் குரல் போன்ற சுபசகுனத் தின் மூலமாக அடையாளம் கண்டு கொண்டார்.

தனது அனுமதியின்றி காசியிலிருந்து சுயம்புலிங்கத் தை எடுத்துச் சென்ற அனுமனை தடுத்து கால பைரவர் தடுத்து போரிட்டார். தேவாதி தேவர்கள் அனைவரும் காசிக்காலபைரவரிடம் முறையிட்டு வேண்டியதால் அனுமனை சுயம்புலிங்கத்தைக் கொண்டு செல்ல அரை மனதோடு அனுமதித்தார். ஆனாலும் காலபைர வருக்கு திருப்தியில்லை; அனுமன் பறந்து செல்லும் வழியில் உள்ள திருக்காரிக்கரையில், (ராமகிரியில்) அனுமன் வரும் நேரத்தில் சூரியனை முழு சக்தியுடன் நன்கு பிரகாசிக்க ஆணையிட்டார். கங்காதேவியை அனுமன் கண்ணில் படாமல் ஒளிந்திருக்கக் கட்டளை யிட்டார். வாயுவை பலமான காற்றை வீச உத்தர விட்டார். (பஞ்சபூதங்களும், நவக்கிரகங்களும் கால பைரவரின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்பதற்கு இந்த சம்பவமே நேரடி ஆதாரம்)

பஞ்சபூதங்களில் மூவரின் (நெருப்பு, நீர், காற்று) தாக்கத்தை தாள முடியாமல் அனுமன் தாகமிகுதியால் துடித்தார்; அப்பொழுது ஸ்ரீகால பைரவர் மாடுமேய்க்கும் சிறுவன் ரூபத்தில் இருந்தார். குடிக்க நீர் தேடிய அனும னுக்கு, காளிங்கமடு என்னும் நீருள்ள தடாகத் தைக் காட்டினார். அனுமன்,தான் நீரருந்தி வரும் வரை யிலும் தன் கையில் உள்ள சுயம்புலிங்கத்தை சிறுவ னாகி ய கால பைரவரிடம் கொடுத்தார்.

சிறுவன் உருவெடுத்த காலபைரவர் அந்த சுயம்புலிங் கத்தை திருக்காரிக்கரையில் பிரதிஷ்டை செய்துவிட்டு மறைந்துவிட்டார். அகந்தை கொண்ட அனுமன்,தன் வாலினால் அந்த சிவலிங்கத்தை கட்டியிழுக்க முயன்று தோற்றார்.  

ஸ்ரீரங்கத்தில் விபீஷணன் ரங்கநாதரை பிள்ளையாரின் தந்திரத்தால் தரையிலிருந்து மீண்டும் எடுத்துச் செல்லமுடியாதது மாதிரி தான் ராமகிரி வந்த ஹநுமானுக்கு தரையில் வைத்த லிங்கத்தை தனது பலமான வாலினால் சுற்றி இழுத்துச் செல்லமுடிய வில்லை. ராமகிரியில் சிவனுக்கு அதனால் ''வாலீஸ்வரர் என்று பெயர்.ராமகிரி வாலீஸ்வரர் கருவறையுள் சிவலிங்கத்தை வணங்குகிற சிலாரூபம் உள்ளது. 

பின்னர், மீண்டும் அனுமன் காசிக்குச் சென்று. கால பைரவரை வணங்கி, அவரது முறையான அனுமதியைப் பெற்றுவிட்டு, அங்கிருந்து வேறொரு சுயம்புலிங்கத்தை ராமேஸ்வரத்துக்குக் கொண்டு வந்தார். அதற்குள் குறிப்பிட்ட நேரம் (நல்ல முகூர்த்தம்) கடந்து விட்டதால், சீதாதேவி மணலில் உருவாக்கிய லிங்கத்தை ராமேஸ் வரத்தில் ராமர் பூஜை செய்தார்.

எட்டாம் நூற்றாண்டு பல்லவ கால ராமகிரி என்ற சிறிய மலை மேல் ஒரு சிவன் கோவில். நுழைந்ததும் நந்திக்கு எதிரே ஹனுமான். மலைமேல் வழக்கம்போல் குன்று தோராடும் குமரன் குடி கொண்டிருக்கிறான். இதன் அருகே தான் கைலாஸ கோனே நீர் வீழ்ச்சி. எப்போதோ அதில் நீர் வீழ்ந்து பல யுகங்களுக்கு முன் ஒரு தடவை குளித்திருக்கிறேன்.

ராமகிரி ஆலயத்தை பெரியபாளையத்திலிருந்து புத்தூர் சாலைவழியே நாகலாபுரம் அருகில் சென்று அடையலாம். ராமகிரி அடிவாரக் கோயிலில் கால பைரவர் சக்தி வாய்ந்தவராக அருள் பாலிக்கிறார். 

பஞ்ச முக சிவன் இந்த பகுதியில் இருக்கிறார். ஒரு சிவன் தான் ராமகிரி வாலீஸ்வரர். ராமகிரிக்கு இன்னொரு பெயர் திரு ஏரிக்கரை - ஈசானன் முகம்.  

ரெண்டாவது சிவன் பள்ளிகொண்டீஸ்வரர் சுருட்டப்பள்ளியில். தத்புருஷ முகம்
.
மூன்றாவது முகம் சம்பங்கி ராமேஸ்வரர் வாமதேவ புரம் எனும் ஆரணி (பெரிய பாளயத்துக்கருகே உள்ளது.) வாமதேவ முகம். அற்புதமான கோவில். நான் தரிசித்திருக்கிறேன்.

நான்காவது முகம் வரமூர்த்தி. அறியத்துறை . ஸத்யோஜாத முகம். தென் கோகர்ணம் என்று இந்த ஊருக்கு பெயர்.

ஐந்தாவது முக சிவன் சிந்தாமணீஸ்வரம் எனும் ஊரில் இருப்பவர். மீஞ்சூர் அருகே காட்டூர் என்கிற இடத்தில் இருப்பவர். அங்கே ப்ரம்மாரண்ய நதி கடலோடு சங்கமமாகிறது. இங்கே சிவனின் முகம் அகோரமூர்த்தி. அதற்கும் சென்றிருக்கிறேன்.

ராமகிரியில் அம்பாள் பெயர் மரகதாம்பிகை. தெற்கு நோக்கியவள். அழகான வல்லப கணபதி இங்கே தும்பிக்கையை சுருட்டி வைத்திருக்கும் அழகே தனி. .

காலபைரவர் சந்நிதி ரொம்ப முக்கியமானது. அவரது வாகனமான வாலை சுருட்டிக்கொண்டு நிற்கும் நாய் தத்ரூபமாக உள்ளது. அவரை சுற்றி நாலு பக்கமும் குட்டி குட்டியாக நாய் உருவங்கள். கிழக்கு நோக்கிய சிவன். நந்திக்கும் சிவனுக்கும் இடையே வாலால் கட்டி தூக்கிச் செல்ல முயன்று தோற்ற ஹனுமான்.

குளத்தின் அருகே இப்போதோ இதை நீங்கள் படித்த பிறகோ இடிந்து நொறுங்கும் நிலையில் ஒரு சிதிலமான சிவன் கோவில். உள்ளே ஒரே இருட்டு. மொபைல் டார்ச் வழியாக பார்த்தபோது அழகிய பெரிய சிவ லிங்கம். விவரம் தெரியவில்லை. ஹநுமானைத்தான் கேட்கவேண்டும். ஹனுமானால் கிளப்ப முடியாத சிவலிங்கம்.
ராமகிரி வாலீஸ்வரர்- ஈசான ஸ்வரூபம்ராமகிரியில் அம்பாள் பெயர் மரகதாம்பிகை. தெற்கு நோக்கியவள். அழகான வல்லப கணபதி இங்கே தும்பிக்கையை சுருட்டி வைத்திருக்கும் அழகே தனி. .

காலபைரவர் சந்நிதி ரொம்ப முக்கியமானது. அவரது வாகனமான வாலை சுருட்டிக்கொண்டு நிற்கும் நாய் தத்ரூபமாக உள்ளது. அவரை சுற்றி நாலு பக்கமும் குட்டி குட்டியாக நாய் உருவங்கள். கிழக்கு நோக்கிய சிவன். நந்திக்கும் சிவனுக்கும் இடையே வாலால் கட்டி தூக்கிச் செல்ல முயன்று தோற்ற ஹனுமான்.

குளத்தின் அருகே இப்போதோ இதை நீங்கள் படித்த பிறகோ இடிந்து நொறுங்கும் நிலையில் ஒரு சிதிலமான சிவன் கோவில். உள்ளே ஒரே இருட்டு. மொபைல் டார்ச் வழியாக பார்த்தபோது அழகிய பெரிய சிவ லிங்கம். விவரம் தெரியவில்லை. ஹநுமானைத்தான் கேட்கவேண்டும். ஹனுமானால் கிளப்ப முடியாத சிவலிங்கம். இதெல்லாம் பார்க்காமல் விடக்கூடாது.