Sunday, May 11, 2025

Ramagiri Vaaleeswarar temple

 ராமகிரி வாலீஸ்வரர் - நங்கநல்லூர் J K. SIVAN 

சென்னையிலிருந்து பெங்களூருக்கு சல்லென்று காரில் சில மணி நேரங்களில் போகிறோமே. வழியில் வேலூர், கிருஷ்ணகிரி என்று பெயர்கள் வரும். கிருஷ்ணகிரி என்கிற பெயர் எல்லோரும் அறிந்தது. ஆனால் ஆந்திராவுக்கு சென்னை ஊத்துக்கோட்டை வழியாக போகும்போது ராமகிரி என்று ஒரு அற்புத ஊர் வருமே அது எத்தனை பேருக்கு தெரியும்?

சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு ஊத்துக்கோட்டை வழியாக சென்றிருக்கிறேன். வழியில் நாகலாபுரம், பிச்சாட்டூர் என்கிற ஊர்கள். நாகலாபுரம் ஒரு பிரசித்தி பெற்ற க்ஷேத்ரம். புராணத்தில் இதற்கு திருக்காரிக் கரை என்று பெயர். இங்கே உள்ள பைரவர் ஸ்வேத பைரவர், கல்யாண பைரவர், சந்தான பைரவர் என்ற பெயர்களில் வணங்கப்படுகிறார்.

அருகே இன்னொரு ஆலயம் ராமகிரி வாலீஸ்வரர் கோவில். ஆந்திரப் பிரதேசம், சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து 95 கி.மீ.. அமைதியான ராமகிரி ஆலயம் 9ஆம் நூற்றாண்டில் பல்லவர்கள் கட்டியது. ஒரு சிவன் கோவில் "திவ்ய தேசம்" என்றோ "வைப்பு ஸ்தலம்" என்றோ கூட சொல்லலாம்.

 ராமகிரியில் சிவனுக்கு பெயர் வாலீஸ்வரர். அம்பாள் மரகதாம்பிகை. விசேஷ தெய்வம் காலபைரவர் (சந்தா ன ப்ராப்தி பைரவர்). கோஷ்டங்களில் காளிகாம் பாள், முருகன், விநாயகர் அருள்பாலிக் கிறார்கள்.  

அருகே ஒரு அற்புதமான குளம். அதில் ஒரு கல் நந்தி முகம். அதன் வாயிலிருந்து இரவு பகலாக பல வருஷங் களாக ராமகிரி மலையிலிருந்து அருமையான சுனைநீர் ஊற்றிலிருந்து பெருகி வருகிறது. அந்த ஊர் காரர்கள் அத்தனைபேரும் கல்கண்டாக இனிக்கும் இந்த நந்தி வாய் மூலிகை நீரை பருகி சந்தோஷம டைகிறார்கள். குளத்தில் இறங்கி ரெண்டு கை நிறைய நந்தியின் வாயில் இருந்து நீர் வாங்கி குடித்தேன். என்ன ருசி அப்பப்பா!ரொம்ப ரொம்ப விசேஷமான ஒரு காட்சி இங்கே; நந்தி தீர்த்தம்: நந்தியின் வாயிலிருந்து நீர் தொடர்ந்து பாயும் ஒரு தீர்த்தம் ஆஹா அந்த தீர்த்தத்தின் ருசிக்கு ஈடே கிடையாது. வயிறு நிரம்ப கையில் வாங்கி குடித்திருக்கிறேன்.

ராமகிரி வாலீஸ்வரர் ஆலயம் பஞ்ச ப்ரம்ம ஸ்தலங் களில் ஒன்று சிவனுக்கு ஈசான முகம். கர்ப்ப
கிரஹத்தை சுற்றி கோஷ்டங்களில் மேற்கில் இருவரும், வடக்கில் இருவருமாக நாலு பைரவர்கள். இது ஒரு அற்புத பைரவ ஸ்தலம். நடுவில் சாமுண்டி.

 ராவணனை வதம் செய்தபிறகு ராமர், ப்ரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட, ஹனுமனை காசியிலிருந்து சிவலிங்கம் கொண்டு வரச் அனுப்புகிறார். ஆஞ்சநேயர் காசிக்குச் சென்றார். காசி நகரத்தின் காவலராக இருப்பவர் காலபைரவர். அவரது அனுமதியின்றி தனது ஸ்ரீ ராம பிரானின் உத்தரவை நிறைவேற்றிட ஸ்ரீஆஞ்ச நேயர் அவசரப்படுகிறார். காசி நகரைச் சுற்றி பறந்து வரும்போது, சரியான சிவலிங்கத்தை அதன் நேர் மேலே கருடன் வட்டமிட்டுக்காட்டுகிறது; அந்த சிவலிங்கத் தின் அருகில் வந்ததும், பல்லியின் குரல் போன்ற சுபசகுனத் தின் மூலமாக அடையாளம் கண்டு கொண்டார்.

தனது அனுமதியின்றி காசியிலிருந்து சுயம்புலிங்கத் தை எடுத்துச் சென்ற அனுமனை தடுத்து கால பைரவர் தடுத்து போரிட்டார். தேவாதி தேவர்கள் அனைவரும் காசிக்காலபைரவரிடம் முறையிட்டு வேண்டியதால் அனுமனை சுயம்புலிங்கத்தைக் கொண்டு செல்ல அரை மனதோடு அனுமதித்தார். ஆனாலும் காலபைர வருக்கு திருப்தியில்லை; அனுமன் பறந்து செல்லும் வழியில் உள்ள திருக்காரிக்கரையில், (ராமகிரியில்) அனுமன் வரும் நேரத்தில் சூரியனை முழு சக்தியுடன் நன்கு பிரகாசிக்க ஆணையிட்டார். கங்காதேவியை அனுமன் கண்ணில் படாமல் ஒளிந்திருக்கக் கட்டளை யிட்டார். வாயுவை பலமான காற்றை வீச உத்தர விட்டார். (பஞ்சபூதங்களும், நவக்கிரகங்களும் கால பைரவரின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்பதற்கு இந்த சம்பவமே நேரடி ஆதாரம்)

பஞ்சபூதங்களில் மூவரின் (நெருப்பு, நீர், காற்று) தாக்கத்தை தாள முடியாமல் அனுமன் தாகமிகுதியால் துடித்தார்; அப்பொழுது ஸ்ரீகால பைரவர் மாடுமேய்க்கும் சிறுவன் ரூபத்தில் இருந்தார். குடிக்க நீர் தேடிய அனும னுக்கு, காளிங்கமடு என்னும் நீருள்ள தடாகத் தைக் காட்டினார். அனுமன்,தான் நீரருந்தி வரும் வரை யிலும் தன் கையில் உள்ள சுயம்புலிங்கத்தை சிறுவ னாகி ய கால பைரவரிடம் கொடுத்தார்.

சிறுவன் உருவெடுத்த காலபைரவர் அந்த சுயம்புலிங் கத்தை திருக்காரிக்கரையில் பிரதிஷ்டை செய்துவிட்டு மறைந்துவிட்டார். அகந்தை கொண்ட அனுமன்,தன் வாலினால் அந்த சிவலிங்கத்தை கட்டியிழுக்க முயன்று தோற்றார்.  

ஸ்ரீரங்கத்தில் விபீஷணன் ரங்கநாதரை பிள்ளையாரின் தந்திரத்தால் தரையிலிருந்து மீண்டும் எடுத்துச் செல்லமுடியாதது மாதிரி தான் ராமகிரி வந்த ஹநுமானுக்கு தரையில் வைத்த லிங்கத்தை தனது பலமான வாலினால் சுற்றி இழுத்துச் செல்லமுடிய வில்லை. ராமகிரியில் சிவனுக்கு அதனால் ''வாலீஸ்வரர் என்று பெயர்.ராமகிரி வாலீஸ்வரர் கருவறையுள் சிவலிங்கத்தை வணங்குகிற சிலாரூபம் உள்ளது. 

பின்னர், மீண்டும் அனுமன் காசிக்குச் சென்று. கால பைரவரை வணங்கி, அவரது முறையான அனுமதியைப் பெற்றுவிட்டு, அங்கிருந்து வேறொரு சுயம்புலிங்கத்தை ராமேஸ்வரத்துக்குக் கொண்டு வந்தார். அதற்குள் குறிப்பிட்ட நேரம் (நல்ல முகூர்த்தம்) கடந்து விட்டதால், சீதாதேவி மணலில் உருவாக்கிய லிங்கத்தை ராமேஸ் வரத்தில் ராமர் பூஜை செய்தார்.

எட்டாம் நூற்றாண்டு பல்லவ கால ராமகிரி என்ற சிறிய மலை மேல் ஒரு சிவன் கோவில். நுழைந்ததும் நந்திக்கு எதிரே ஹனுமான். மலைமேல் வழக்கம்போல் குன்று தோராடும் குமரன் குடி கொண்டிருக்கிறான். இதன் அருகே தான் கைலாஸ கோனே நீர் வீழ்ச்சி. எப்போதோ அதில் நீர் வீழ்ந்து பல யுகங்களுக்கு முன் ஒரு தடவை குளித்திருக்கிறேன்.

ராமகிரி ஆலயத்தை பெரியபாளையத்திலிருந்து புத்தூர் சாலைவழியே நாகலாபுரம் அருகில் சென்று அடையலாம். ராமகிரி அடிவாரக் கோயிலில் கால பைரவர் சக்தி வாய்ந்தவராக அருள் பாலிக்கிறார். 

பஞ்ச முக சிவன் இந்த பகுதியில் இருக்கிறார். ஒரு சிவன் தான் ராமகிரி வாலீஸ்வரர். ராமகிரிக்கு இன்னொரு பெயர் திரு ஏரிக்கரை - ஈசானன் முகம்.  

ரெண்டாவது சிவன் பள்ளிகொண்டீஸ்வரர் சுருட்டப்பள்ளியில். தத்புருஷ முகம்
.
மூன்றாவது முகம் சம்பங்கி ராமேஸ்வரர் வாமதேவ புரம் எனும் ஆரணி (பெரிய பாளயத்துக்கருகே உள்ளது.) வாமதேவ முகம். அற்புதமான கோவில். நான் தரிசித்திருக்கிறேன்.

நான்காவது முகம் வரமூர்த்தி. அறியத்துறை . ஸத்யோஜாத முகம். தென் கோகர்ணம் என்று இந்த ஊருக்கு பெயர்.

ஐந்தாவது முக சிவன் சிந்தாமணீஸ்வரம் எனும் ஊரில் இருப்பவர். மீஞ்சூர் அருகே காட்டூர் என்கிற இடத்தில் இருப்பவர். அங்கே ப்ரம்மாரண்ய நதி கடலோடு சங்கமமாகிறது. இங்கே சிவனின் முகம் அகோரமூர்த்தி. அதற்கும் சென்றிருக்கிறேன்.

ராமகிரியில் அம்பாள் பெயர் மரகதாம்பிகை. தெற்கு நோக்கியவள். அழகான வல்லப கணபதி இங்கே தும்பிக்கையை சுருட்டி வைத்திருக்கும் அழகே தனி. .

காலபைரவர் சந்நிதி ரொம்ப முக்கியமானது. அவரது வாகனமான வாலை சுருட்டிக்கொண்டு நிற்கும் நாய் தத்ரூபமாக உள்ளது. அவரை சுற்றி நாலு பக்கமும் குட்டி குட்டியாக நாய் உருவங்கள். கிழக்கு நோக்கிய சிவன். நந்திக்கும் சிவனுக்கும் இடையே வாலால் கட்டி தூக்கிச் செல்ல முயன்று தோற்ற ஹனுமான்.

குளத்தின் அருகே இப்போதோ இதை நீங்கள் படித்த பிறகோ இடிந்து நொறுங்கும் நிலையில் ஒரு சிதிலமான சிவன் கோவில். உள்ளே ஒரே இருட்டு. மொபைல் டார்ச் வழியாக பார்த்தபோது அழகிய பெரிய சிவ லிங்கம். விவரம் தெரியவில்லை. ஹநுமானைத்தான் கேட்கவேண்டும். ஹனுமானால் கிளப்ப முடியாத சிவலிங்கம்.
ராமகிரி வாலீஸ்வரர்- ஈசான ஸ்வரூபம்ராமகிரியில் அம்பாள் பெயர் மரகதாம்பிகை. தெற்கு நோக்கியவள். அழகான வல்லப கணபதி இங்கே தும்பிக்கையை சுருட்டி வைத்திருக்கும் அழகே தனி. .

காலபைரவர் சந்நிதி ரொம்ப முக்கியமானது. அவரது வாகனமான வாலை சுருட்டிக்கொண்டு நிற்கும் நாய் தத்ரூபமாக உள்ளது. அவரை சுற்றி நாலு பக்கமும் குட்டி குட்டியாக நாய் உருவங்கள். கிழக்கு நோக்கிய சிவன். நந்திக்கும் சிவனுக்கும் இடையே வாலால் கட்டி தூக்கிச் செல்ல முயன்று தோற்ற ஹனுமான்.

குளத்தின் அருகே இப்போதோ இதை நீங்கள் படித்த பிறகோ இடிந்து நொறுங்கும் நிலையில் ஒரு சிதிலமான சிவன் கோவில். உள்ளே ஒரே இருட்டு. மொபைல் டார்ச் வழியாக பார்த்தபோது அழகிய பெரிய சிவ லிங்கம். விவரம் தெரியவில்லை. ஹநுமானைத்தான் கேட்கவேண்டும். ஹனுமானால் கிளப்ப முடியாத சிவலிங்கம். இதெல்லாம் பார்க்காமல் விடக்கூடாது.

No comments:

Post a Comment