Wednesday, May 14, 2025

Detachment - HH Sri chandarshekhara bharati Mahaswamigal part2

*Continuation from yesterday's posting*
 
*Source:ஸ்ரீ குருகிருபா விலாஸம்*
 
Section 2
 
*ஞானப் பிரஸூனங்கள்*
 
*1.பற்றின்மை*
 
துங்கா நதிக்கரையில் நல்ல வெய்யிலில் கொதிக்கிற கற்படிகளில் ஸ்ரீமத் ஆசார்யார் மணிக்கணக்காக உட்கார்ந்திருந்ததை பார்த்திருக்கிறேன்; அவர்களுடைய கைங்கர்யத்திற்காக ஏற்பட்டவர்கள் மேலேயுள்ள சூர்ய வெப்பத்தையாவது கீழேயுள்ள கல்தள வரிசையின் சூட்டையாவது பொறுக்க முடியாமல் பக்கத்தில் நிழலுள்ள இடம் தேடி நகர்ந்து விடுவார்கள். ஆகையால் ஸ்ரீமத் ஆசார்யாருடைய மனஸ் மாத்திரம் உலகத்திலிருந்து பற்றற்று விலகியிருந்ததென்று சொன்னால் போதாது, அவர்களுடைய சரீரமே பஞ்ச பூதங்களினால் பீடிக்கக் கூடாத்தன்மையை அடைந்திருந்ததென்று தெரிகிறது. பகவத்கீதையில் "ஸாம்ய நிலையடைந்த மனஸ் உள்ளவர்களால் இங்கேயே பிரபஞ்சமானது ஜெயிக்கப்பட்டது" (V19) என்று பகவான் சொல்லியிருக்கும் வாக்கியத்தை ஸ்ரீமத் ஆசார்யார் நன்கு ருசுப்படுத்திக் காட்டினார்கள் என்பதில் ஸந்தேஹமில்லை.

No comments:

Post a Comment