Thursday, May 15, 2025

Government grants for Vedic studies in olden times

வேதப் படிப்பும் அரசு ஆதரவும்

சோழர்காலத்தில் வேதப் படிப்பு படித்தவர்கள் தனியான சிறப்புக்குரியவராக மதிக்கப்பட்டனர். வேதம் கற்பிக்கும் கல்விச் சாலைகளுக்கு நில தானங்கள் பல அரசர்களால் கொடுக்கப்பட்டன.

சோழ மண்டலத்தில் ஐம்பத்தேழு ஊர்களை முதலாம் இராசேந்திரன் 'திரிபுவன மாதேவிச் சதுர்வேதி மங்கலம்' என்ற பெயருடன் ஒரு தொகுதியாக்கி, வேதங்களிலும் சாத்திரங்களிலும் வல்ல பிராமணர் பலருக்கும் பிரம்மதேயமாக வழங்கினான் என்ற செய்தி வேதங்கள் மீதும் சாத்திரங்கள் மீதும் சோழர்கள் கொண் டிருந்த ஈடுபாட்டைக் காட்டுகிறது. இதுபோல், வீர ராசேந்திர சோழனின் கன்னியாகுமரிக் கல்வெட்டு அவ்வரசன் சோழநாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, சுங்க நாடு, குலூத நாடு என்ப வற்றில் மூன்று வேதங்களிலும் வல்ல நாற்பதினாயிரம் பிராமணர் களுக்குப் பிரம்மதேயங்கள் வழங்கி அந்நாடுகளில் நிலைபெற்று வாழுமாறு செய்தான் என்ற செய்தியைக் கூறுகிறது. 

பல ஆயிரக்கணக்கான வேதம் வல்ல வடமொழிப் பிராமணர் கள் சோழப் பெருவேந்தர்களால் தமிழகத்தில் குடியமர்த்தப் பட்டார்கள் என்பதற்கு ஏராளமான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. சோழர் காலத்தில் பிராமணர்களுக்கு தானமாகக் கொடுக்கப் பட்ட பிரம்மதேயங்கள், சதுர்வேதி மங்களங்கள் பல்கிப் பெருகின. பிரம்மதேயமாக மட்டுமில்லாமல் பிற காரணங்களுக் காகவும் பிராமணர்களுக்கு நிலங்கள் தானமாகக் கொடுக்கப் பட்டன. அவை வருமாறு:

வேதம் வல்ல பிராமணர்களுக்கு - பட்ட விருத்தி.

மகாபாரதக் கதையைப் படித்துரைப்பவர்க்கு - பாரத விருத்தி.

அர்ச்சனை செய்பவர்களுக்கு - அர்ச்சனா போகம்.

வேதம் படிக்கும் அபூர்விகள் போன்றோருக்கு உணவளிக்கும் அறச்சாலைகளுக்கு - சாலா போகம்.

இதுமட்டுமல்லாமல் பாஷ்ய விருத்தி, சைவாச்சாரியக் காணி என பல பெயர்களில் இறையிலி நிலங்கள் பிராமணர்களுக்கு வழங்கப்பட்டன.

சோழர் காலத்தில் வேதக் கல்வி வளர்ப்பதற்காக வடமொழிக் கல்வி நிலையங்களும், கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன. இக்கால கட்டத்தில் செயல்பட்ட வேதக் கல்வி நிலையங்களும் அங்கு படிக்கப்பட்ட நூல்கள் குறித்த விவரங்களும் வருமாறு

முதலாம் இராஜராஜன் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 997) பாபநாசம் வட்டம் புள்ளமங்கலம் ஊரில் அமைந்துள்ள பிரம்மபுருஸ் வரர் கோயில் கல்வெட்டானது வேதம் படித்தவர்களுக்குத் தானம் கொடுக்கப்பட்டதைப் பதிவு செய்கின்றது. 'கிழார்க் கூட்டறத்துப் பிரம்மதேயம் புள்ள மங்கலத்து மகாசபையார் அவ்வூர் ஆரீதன் மன்றன் சுவரன் வீட்டின் கூடிப் பேசினர்' அக்கூட்டத்தில் இவ்வூரில் நின்றோதும் சட்டர்களாகிய சாம வேதிகளுக்கும் இருக்கு வேதிகளுக்கும் சட்டபோகமாக நிலமளிக்க முடிவு எடுக்கப் பட்டது இதற்காக, மகாசபையார் ஒரு வேலி நிலத்துக்கு 80 காசும் தோட்டத்துக்கு 10 காசும் ஆக மொத்தம் 90 காசுகளை அளித்து தாளம் கொடுக்க வேண்டிய நிலத்தினை அதன் உரிமையாளர் களிடம் இருந்து வாங்கி வேதிகளுக்கு சட்டபோகமாக அளித்தனர். இக்கூட்டம் பற்றி தட்டொளிக் கொட்டி, காளம் ஊதி ஊர் மக்கள் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது என்பதையே கல்வெட்டு விளக்க மாகப் பதிவு செய்கின்றது."

காமப்புல்லூர் என்ற இடத்தில் வேதப் பயிற்சிப் பள்ளி ஒன்று இயங்கியது இவ்வேதப் பள்ளிக்கு பட்டவிருத்தி நிலம் அளிக்கப் பட்டது.

ஆனியூர் என்ற இடத்தில் வேதம் மற்றும் வடமொழி இலக்கியம் கற்றுத் தரும் பள்ளி ஒன்று செயல்பட்டது. இங்கு வேதம் பாணினியின் இலக்கணமாகிய அஷ்டத்தியாயி ஆகிய றைப் பயிற்றுளிக்க பட்டவிருத்தி நிலம் அளிக்கப்பட்டது. பட்ட விருத்தியாக நிலம் பெற்ற பட்டர் வேதத்தில் ஆழ்ந்த புலமைப் பெற்றிருக்க வேண்டும் என்றும், பாணினி வியாகரணம், அலக் காரம் மீமாம்சத்தில் 20 அதிகாரங்கள் சொல்லிக் கொடுக்கும் ம பெற்றவராக இருத்தல் வேண்டும் என்பன போன்ற விதிகள் உருவாக்கப்பட்

வேதப் பயிற்சிப் பள்ளிகள் நடைபெற்றது பற்றிய கல்வெட்டு செய்திகளில் அங்கு பயின்ற மாணவர்களின் எண்ணிக்கைப் பற்றியும் ஆசிரியர்களின் எண்ணிக்கை பற்றியும் நடத்தப்பட்ட பாடங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்கு அருகில் உள்ள திரிபுவனையில் சாத்திரங்கள் பயிற்றுவிக்கும் வடமொழிக் கல்லூரி செயல்பட்டது. இங்கு 270 மாணவரும் 12 ஆசிரியர்களும் இருந்தனர். பாரதம், இராமா யணம், மனுதர்ம சாத்திரம் முதலியன கற்பிக்கப்பட்டன. ஆசிரி யரும் மாணவரும் கவலையின்றி வாழ வசதிகள் செய்து தரப்பட்டன.

திருவாவடுதுறை, பெருவேலூர் ஆகிய இடங்களில் பிராமண மாணவர்கள் படிக்கும் வடமொழிப் பள்ளிகள் செயல் பட்டன.

திருவொற்றியூர்க் கோவிலில் வடமொழி இலக்கணம்

கற்பிக்க வியாகரணதான வியாக்யாந மண்டபம் ஒன்று இருந்தது. இது குறைவின்றி நடைபெற 65 வேலி நிலம் தானமாக விடப்பட்டது. பாணினி இலக்கணத்தைக் கற்பிக்கும் சிறந்த இடமாக இக்கல்லூரி விளங்கியது. இங்கு பதினான்கு நாள்களில் பதினான்கு பாராயணங்கள் கற்பிக்கப்பட்டன. மேலும் வேதமும், சித்தாந்த நெறிகளும் கற்கும் இடமாகவும் இக்கல்லூரி விளங்கியது?

வேதக் கல்வி கற்பிக்கும் அதே வேளையில் வேதம் ஒப்புவித்தல் போட்டிகளும் அறிவிக்கப்பட்டு பரிசுகளும் அளிக்கப்பட்டன. மேலும் பாரதம் ஓதுபவர்களுக்கும் கொடைகள் அளிக்கப்பட்டது பற்றியும் வேத பாடசாலையில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய பொருட்களைப் பற்றியும் சில கல்வெட்டுகள் பதிவு செய்கின்றன.

கி.பி. 1170 ஆம் ஆண்டு கல்வெட்டின் மூலம் சைமினிய சாமவேதத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை நன்முறையில் ஓதுபவருக்குத் தான் அளிக்கும் நன் கொடையினின்று வரும் வட்டியைக் கொண்டு ஒரு பரிசு வழங்க வேண்டுமென்று ஒருவர் கோயிலுக்கு கொடையளித்துள்ள செய்தியை அறிய முடிகின்றது.

தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு - சி.இளங்கோ
230/-

இந்நூலினை எப்படி வாங்குவது? 

1. எங்களது WhatsApp ல் 097860 68908 தொடர்பு கொள்ளலாம், அல்லது 
2. எங்கள் இணைய தளத்தில் Heritager .in வாங்கலாம். இணையதள பக்கம் பின்னூட்டத்தில் உள்ளது.

எங்கள் முயற்சியில் எவ்வாறு நீங்களும் பங்கெடுக்கலாம்?:

1. எங்கள் நூல் அறிமுக பதிவுகளைப் பகிர்ந்து பலரை சென்றடைய உதவுங்கள்.
2. உங்களுக்கு தேவையா நூல்களை எங்கள் மூலம் பெறுங்கள்.
3. வரலாற்றில் ஆர்வமுள்ள நண்பர்களுக்கு எங்களின் Heritager .in The Cultural Store பற்றி தெரிவியுங்கள்.

உங்களின் தொடர் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றிகள்

No comments:

Post a Comment