Monday, March 18, 2024

Jadaari in Vishnu temple



ஸ்ரீசடாரி மகிமை

பெருமாள் கோவில்களில் சடாரி சாத்துவதும் சிறப்பு. சடாரியின் மேல் இறைவனின் திருவடி பொறிக்கப்பட்டிருக்கும். இதனால் இறைவன் நம்மை ஆள்கிறான் என்ற பவ்யமும் குடிகொள்ளும். அஹங்காரமும் மட்டுப்படும். நம்மாழ்வார் பெருமாள் திருவடிகளை அடைந்தவர் அவரே குருவாக இறைவனின் பாதத்தை நம்மிடம் சேர்பித்து நம்மை உய்விக்கிறார் என்று

திருமால் ஆலயங்களுக்குச் செல்லும் ஒவ்வொருவரும் எல்லா சந்நதிகளிலும் தீர்த்தம், திருத்துழாய் என்கிற துளசி அல்லது மஞ்சள் காப்பு, குங்குமம் முதலிய பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வதுடன் ஸ்ரீசடாரியை சிரசில் தரித்துக் கொண்டால்தான் அந்தந்த சந்நதிகளில் வழிபாடு பூர்த்தியானதாகக் கருதுவார்கள். 

சடாரி எனப்படுவது என்ன?

திருவடி அடியார்களைக் காப்பது திருவடி நிலை

திருவடி நிலையே பாதுகை

பாதுகையே சடாரி

சடாரியே நம்மாழ்வார்

பாதுகை, சடாரி, ஆழ்வார் எல்லாம் ஒன்றே

சடகோபன் என்னும் பாதுகை அல்லது சடாரி மூலமேதான் ஸ்ரீய:பதியான பகவான் திருவடிகளை நம் தலையில் சமர்ப்பித்துக் கொள்வது. யஸ்ய ஸாரஸ்வது: ச்ரோதோ வகுளாமோத வாஸிதம் சடாரி தம் உபாஸ்மஹே. சடம் என்பது ஒரு வகைக் காற்று (வாயு). அதன் ஸ்பரிசத்தால் ஞானம் மங்கி அஞ்ஞானம் மூடிக்கொள்ளும். அரி என்றால் சத்ரு(பகை). சடம் என்னும் காற்றைத் தம்மேல் படாமல் தடுத்து உத்தம ஞானியாய் அவதரித்தவர் நம்மாழ்வார். ஆகவே அவருக்குச் சடாரி என்ற பெயர் வழங்கிற்று. சடகோபன், சடஜித் என்பன போன்ற இதர சொற்களும் இதே பொருளைத்தான் தரும்.

வைணவ ஆலயங்களில் எம்பெருமான் திருவடிக்கு முன்பாக இருக்கும் பாதுகைகள் கொண்ட திருவடி 'மகுடம்' சடாரி எனப்படுகிறது. அதற்கு அந்தப் பெயர் எப்படி வந்தது? ஸ்ரீமன் நிகமாந்த மகாதேசிகன் அருளிச் செய்த ஸ்ரீமத் பாதுகா ஸஹஸ்ரத்தில் இரண்டாவது பத்ததியான ஸமாக்யா பத்ததியில் இதற்கான விளக்கத்தைக் காணலாம். ஆழ்வாரும் பாதுகையும் ஒன்றேதான் என்று தெளிவாக்கப்பட்டிருக்கிறது. பெருமானுடைய பாதுகை ஆழ்வாருடைய திருநாமமான சடாரி எனும் நாமத்தை வகிக்கிறது. பாதுகையை நம் தலையில் கோயில் பட்டர்கள் வைக்கும்போது அதன் மூலமாய் பெருமாள் திருவடி சம்பந்தம் நமக்கு ஏற்பட்டு விடுகிறது.

இதை முதல் முதலில் காட்டியருளியவர் ஆளவந்தார். ஸ்ரீஸ்தோத்திர ரத்னம் ஐந்தாம் ஸ்லோகத்தில் வகுளாவிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா(மகிழம்பூவின் நறுமணம் வீசும் அந்த ஆழ்வாருடைய இணையடிகளை எனது தலையில் ஏற்று வணங்குகிறேன்) என்றதும் பெருமாள் திருவடிகளே அவர் சிரசில் சேவை சாதித்தனவாம். அந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தோன்ற அடுத்தபடியாக யந்மூர்த்நிமே பாதி (என் தலையில் பிரகாசிக்கிற) என்று அந்த பாதார
விந்தத்திற்குப் பாசுரம் பாடுகிறார். அந்தக் கருத்தையே தமிழில், 'சந்தமிகு தமிழ் மறையோன் தூப்புல் வள்ளல் தனித்திருமால் தாளில் தலைவைத்தோம் சடகோபனருளாலே' என்று தனித்தமிழில் நமக்கு அருள்கிறார்.

இந்த வகையில், நமக்குப் பெருமாள் திருவடியை ஸ்பரிசம் அருளியவர்கள் இருவர். ஒருவர் ஆழ்வார், மற்றது பாதுகை. ஆகவே இருவருக்கும் சடாரி என்ற திருநாமம் இருப்பதில் வியப்பில்லை. ஆழ்வாருடைய அமுதத் திருவாய் ஈரத்தமிழைப் பயின்று எம்பெருமானை அடிபணிவோர்க்குப் பரமனருள் சித்திக்கும். அதற்குப் பாக்கியமில்லாதவர்களுக்கு, பாதுகை அப்பேற்றை அளிக்கிறது. சுவாமி தேசிகனின் பெருமைக்கு உவமை கூறும் திவ்ய ஸுக்தி அவர் வடமொழியில் அருளிச் செய்துள்ள 'பாதுகா ஸஹஸ்ரம்' என்னும் ஸ்தோத்திர மாகும். அதை அருளுவதற்கான காரணம் என்ன? பகவானுடைய திருவடி மகிமையை பக்தர்களாகிய நாம் அறிந்து உய்யும்படி தாய் போன்ற கருணையுடன் ஆயிரம் பாடல்கள் பாடினார் சடகோபன்.  

அந்த இன்தமிழ் ஆயிரத்துக்கு பிரதி சம்பாவனையாக ஆழ்வாருக்கு வட மொழியில் ஆயிரம் சமர்ப்பித்தார் நம் தேசிகன். எவ்வாறு பகவானுடைய திருவடிகளின் பெருமையை அவனுடைய பாதுகையான சடகோபனால் மட்டுமே கூறமுடியுமோ, அங்கனமே அந்த சடகோபனின் பெருமையை அவனுடைய பாதுகைகளான சீடன் மதுரகவியால் தானே கூறமுடியும்? இந்த வகையில் இவர் அருளிச் செய்த 'கண்ணிநுண் சிறுத்தாம்பின்...' ஒரு பகுதியைப் பார்க்கலாம். 'பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்' சடகோபனின் பெருமையை மிக எளிமையாக ஆனால், விளக்கமாக விவரிக்கும் இரு அடிகள் இவை. பகவானுக்கும் சடகோபனுக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம் இதுதான். செயல் திருந்தியவரையே பகவான் ஆட்கொள்வான்.

ஆனால், சடகோபனோ திருந்தத்தக்க பாங்கற்றவர்களையும் தாமே எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தண்டித்துத் திருத்தி பகவானின் திருவடிகளை அடையச் செய்வான். இந்தப் பெருமைக்கு மதுரகவியாழ்வாரே பிரதான உதாரணம். அதாவது, நம்மாழ்வாரும் இதர ஆழ்வார்களும் ஆயிரக்கணக்கிலே எம்பெருமானின் பெருமையைப் பாடியதாலேயே ஆழ்வார்கள் எனும் பெருமையைப் பெற்றார்கள். ஆனால், மதுரகவியாழ்வாரோ எம்பெருமானைப் பற்றி ஒரு பாசுரம் கூடப் பாடாமல், குருவான நம்மாழ்வார் மீது பத்து பாசுரங்கள் பாடியே ஆழ்வார்கள் வரிசையில் இடம் பெற்றுவிட்டார்.

சடாரி, பகவானுடையது மட்டுமின்றி, பிராட்டியினுடைய பாதுகைகளையும் குறிப்பதாகும். ஆனால், நம்மாழ்வாருக்குப் பின்னால் வந்த ஆழ்வார்
ஆச்சார்யர்களுடைய பாதுகைகளும் சடாரி என்றே குறிப்பிடப்படுகின்றன. ஆனால், இது தவறு. நம்மாழ்வார் மற்றும் பிற ஆழ்வாராச்சார்யார்களுக்கு அபசாரம் தோற்றுவிப்பது என்றும் ஒரு வாதம் உண்டு. அப்படியானால் அவர்களுடைய பாதுகைகளை என்ன சொல்லி அழைப்பது? அந்தந்த ஆச்சார்யார்களுடைய பாதுகைகளை அவர்களின் பிரதான சிஷ்யர்களின் திருநாமத்தைக் கொண்டே அழைக்க வேண்டுமென்று பெரியோர்கள் கூறுவர். இதை அடிப்படையாகக் கொண்டு

ஆழ்வார்கள்-ஆச்சார்யார்கள் பாதுகைகளின் திருநாமங்களுக்குச் சில 
உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

கருடபகவான் சடகோபன்
ஆஞ்சநேயர் ராமதாசர் அல்லது
கம்பநாட்டாழ்வான்
சேனை முதலியார் சடகோபன்
ஆண்டாள் சடகோபன்
நம்மாழ்வார் மதுரகவிகள்
 மதுரகவிகள்                  
பொய்கையாழ்வார்         
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
திருமழிசைப்பிரான்
பெரியாழ்வார்
குலசேகரர்
தொண்டரடிப்பொடிகள் ராமானுஜன்
திருப்பாணாழ்வார்
நாதமுனிகள்
உய்யக்கொண்டார்
மணக்கால் நம்பி
ஆளவந்தார்
பெரியநம்பி
திருக்கோட்டியூர்நம்பி
பெரிய திருமலை நம்பி
திருக்கச்சி நம்பி
திருவரங்க பெருமாள் அரையர்
பாஷ்யகாரர் முதலியாண்டான்
வேதாந்த தேசிகன் நயினாராசார்யார்
எம்பார் பட்டர்
பட்டர் நஞ்ஜீயர்
நம்பிள்ளை    வடக்கு திருவீதிப்பிள்ளை
வடக்கு திருவீதிப்பிள்ளை   -  லோகாச்சாரியார்
லோகாச்சாரியார்             -   மணவாளமாமுனிகள்

மணவாளமாமுனிகள் -  பொன்னடியாம்
செங்கமலம்.

பகவானுடைய திருப்பாதுகைகளுக்கு உரித்தான பெருமைகளெல்லாம் ஆழ்வார் ஆச்சாரியார்களுடைய திருப்பாதுகைகளுக்கும் உண்டு என்பதில் ஐயமேதுமில்லை. எனவே, கோயில்களுக்குச் செல்லும்போது அனைத்துச் சந்நதிகளிலும் சடாரி பெற்றுக்கொண்டு நம்மை புனிதப்படுத்திக் கொள்வது நமக்கு நல்ல கதியை அளிக்கும்.

வானமாமலையில் தெய்வநாயகனை நம்மாழ்வார் சரணாகதி செய்ததால் பெருமானின் சடாரியிலேயே நம்மாழ்வாரின் திருவுருவம் பொறித்துள்ளதைக் காணலாம். அதனால் இங்கு நம்மாழ்வாருக்கு தனிச் சந்நதி கிடையாது.

திருக்கடிகை என்ற சோளிங்கர், பழையசீவரம் லட்சுமி நரசிம்மர் ஆலயங்களில் சடாரி ஒரு நாகம் போன்ற அமைப்பில் இருக்கும். ஆதிசேஷனே சடாரியாக விளங்குவதாக பெரியோர்கள் கருத்து.

ஸ்ரீபெரும்புதூரில் பகவத் ராமானுஜரின் முதன்மைச் சீடரான முதலியாண்டான் சடாரியாக அமைந்துள்ளதால் இத்திருக்கோயிலில் முதலியாண்டாருக்குச் சந்நதி இல்லை.

திருப்பதியில் பகவத் ராமானுஜரின் திருவுருவத்தை அவருடைய சீடர் அனந்தாழ்வார் பிரதிஷ்டை செய்ததால் அங்கு பகவத் ராமானுஜரின் சடாரிக்கு அனந்தாழ்வான் என்றே பெயர்.

சென்னை-நங்கநல்லூரில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் வேணுகோபாலசுவாமி திருக்கோயிலிலும் நாகவடிவில் சடாரி அமைந்துள்ளது.

ஆழ்வார்களின் சடாரி, பகவத் ராமானுஜர் என்று மேலே குறிப்பிட்டுள்ளபடி அவதாரத் தலங்களில் ஆழ்வார்களின் திருவுருவங்களிலேயே பகவத் ராமானுஜரின் திருவுருவமும் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

manakkal nambi & Ramanujar

நான்காவது ராமரும், நான்காவது லக்ஷ்மணரும்--ஸ்ரீ மணக்கால் நம்பி திருநட்சத்திரப் பதிவு
🙏🌺🍀🌸☘️🙏🏿
இன்று 24/02/2024,மாசி மகம்-- மகத்தான, மாசில்லாத, மணக்கால் நம்பி ஸ்வாமி திருநட்சத்திரம்.

ஸ்வாமியின் தனியன்: 
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
"அயத்நதோ யாமுநம் ஆத்ம தாஸம் அலர்க்க பத்ரார்ப்பண நிஷ்க்ரயேண |
ய: க்ரீதவான் ஆஸ்தித யௌவராஜ்யம் நமாமிதம் ராமமேய ஸத்வம் ||"

"பட்டத்து இளவரசாகிய யாமுனாசார் யரைத் தூதுவளை தந்து,மிக எளிதாகத்   திருத்திப் பணிகொண்ட ஸ்ரீராம மிச்ரர் எனும் அளவிலா ஸாத்விகோத்தமரை வணங்குகிறேன்."

இவருக்கும் ஸ்ரீ ராமாநுஜருக்கும் உள்ள ஒற்றுமை ஆய்ந்து பார்ப்போம்.

1.நான்காவது ராமரும், நான்காவது லக்ஷ்மணரும்
         🙏👌👏👍🏻☝️💐🙏🏿
ஶ்ரீரங்கத்துக்கு அருகில் உள்ள அன்பில் என்னும் ஊரின் கிராமப்பகுதியான
மணக்கால் என்னுமிடத்தில்(லால்குடி
யிலிருந்து 1 கி.மீ) அவதரித்தார்
 'ராம மிஸ்ரர்.' நாம் நாளும் ஸ்தோத்திரம் செய்யும் குருபரம்பரை ஸ்லோகத்தில் உள்ள ராம மிஸ்ரர் இவரே.இவர் "தாசரதி" என்றும் அழைக்கப்பட்டார்.
இவரை நம் சம்பிரதாயத்தில் நான்காவது
 ராமராக பரசுராமர்,சீதாராமர்,பலராமரு
க்குப் பின் கொண்டாடுகிறார்கள்.

ஸ்ரீதேசிகன் ஸ்வாமி "யதிராஜ சப்ததி"
7 ஆவது ஸ்லோகத்தில்,

"அனுஜ்ஜித ஷமாயோகம்--
(பரசுராமர் பொறாமையால், ராமபிரானி
டமே சண்டையிட்டார்.கோபத்தால் சத்திரிய குலத்தையே அழித்தார்.ஆனால் மணக்கால் நம்பிகளிடம் இந்தக்
குணங்கள் துளியும் இல்லை)

அபுண்ய ஜனபாடகம்--
(ராமர் புண்ய ஜனங்கள் என்று அழைக்கப்
பட்ட ராட்சசர்களை அழித்தார்.நம்பி யாரையும் அழிக்கவில்லை.புண்யஜனங்
களுக்கு உபதேசித்தார்/உதவினார்).

அஷ்புருஷ்த மத ராகம்,(பலராமர் லெளகீகச் செயல்களில் அதிக ஈடுபாடு/ருசி வைத்தார்; நம்பி எதன் மேலும் பற்று/அக்கறை இல்லாமல் பகவத்/பாகவத/ஆசார்ய கைங்கர்யமே பிரதானமாக இருந்தார்)

தும் ராமம் துரியம் உபாஸ்மகே"--
(குறை/குற்றம் ஒன்றில்லாத நான்காவது ராமரான ராமமிஸ்ரரை உபாசிப்போம்)

என்று மணக்கால் நம்பியைக் கொண்டாடுகிறார்.

அந்த வகையில்ஆதிசேஷனின் அவதாரங்களான இளைய பெருமாள்
(லட்சுமணர்),பலராமர், லட்சுமணரின் அம்சமான ஆழ்வார் திருநகரி உறங்காப் புளிய மரம் ஆகியோருக்குப்பின் 
நான்காவது லட்சுமணர் நம் லட்சுமண முனி ராமானுஜர் ஆவார்.

அவர் ராமர்;இவர் ராம அநுஜர்(இளைய சகோதரர்) !
அவர் குலசேகரப் பெருமாள்; இவர் இளைய பெருமாள்--இளையாழ்வார் !!

2.மண்ணில் மார்புற, விழுந்த மஹநீயர்கள்:
🙏🌺🍀🌸☝️🙏🏿
மணக்கால் நம்பியின் ஆசார்யர்
ஶ்ரீ உய்யக்கொண்டாரின் தேவியர், இளமையிலேயே பரம பதம் அடைந்து விட்டதால்,அவருடைய குடும்ப காரியங்
களையும்,இரு திருக்குமாரத்திகளையும் கவனித்துக் கொண்டார் உத்தம சீடர் நம்பி.ஒரு நாள் காலையில்,
பெண்குழந்தைகள் இருவரையும் ஆற்றில் நீராடவைத்துக் கூட்டி வரும்போது வழியில் ஓரிடத்தில் சேறும்,சகதியுமாக இருந்தது.அவர்கள் அந்த இடத்தைத் தாண்ட முடியவில்லை.
நம்பிகள் அந்த சேற்றின் மீது குப்புறப் படுத்தார்.படியாய்க் கிடந்து,
குழந்தைகளை அவர்  முதுகின் மீது ஏறிச் செல்ல வைத்து, அந்த இடத்தைக் கடக்கச் செய்தார் ! அதனாலேயே அவர் மணல்(க்) கால் நம்பி ஆனார். என்றும்,அவர் இருந்த கிராமமும் மணக்கால் என்றழைக்கப்
பட்டது என்றும் ஒரு கூற்று உண்டு.!!

ஒரு சமயம்,ஶ்ரீரங்கத்தில் ராமாநுஜருக்கு  உணவில் விஷம் கலந்து விட்டனர்.(உஞ்ச விருத்தியின் போது).அந்த  சூழ்நிலையில் அவர்  பல நாட்கள் உண்ணாவிரதம் இருக்க நேரிட்டது.
இதைச் செவியுற்ற ஆசார்யர் திருக்கோஷ்டியூர் நம்பி,அருந்தவச்
சீடரைப் பார்க்க விரைந்து வந்தார்.தம் ஆசார்யர் வருகிறார் என்றறிந்து,(திருமேனி மிகத் தளர்ந்த நிலையிலும்)
அவரை எதிர்கொண்டு அழைக்க ராமாநுஜர் திருக்காவேரிக்குச் சென்றார். ஆசார்யரைக்கண்டவுடன்,அந்த மத்யான வெயிலில்,காவிரியின் சுடுமணலில் விழுந்து தண்டம் சமர்ப்பித்தார்.யாராவது தண்டம் சமர்ப்பித்தால்,ஆசி கூறி உடனே எழச்சொல்லி விடுவார்கள் பெரியவர்கள்.
ஆனால் ஆசார்யர் ஒன்றும் சொல்லாமல் சுற்றுமுற்றும் பார்த்தார்.சிறிதுநேரம்,
உடையவர் சுடுமணலில் கிடந்தார்.அங்கு சுற்றி நின்றிருந்தவர்களும் ஒன்றும் சொல்ல முடியாமல் தவித்தனர்.
அப்போது கிடாம்பி ஆச்சான் என்பவர் ஓடி வந்து நம்பியைப்பார்த்து''இது,என்ன ஆசார்ய, சிஷ்ய நிஷ்டை''என்று கூறிவிட்டு,ராமாநுஜரை அள்ளி எடுத்துக் கொண்டார்.உடனே நம்பிகள் ''உம் போன்ற ஒருவர் வர மாட்டாரா,
என்று தான் காத்திருந்தேன்,"
என்று அவரைத் தழுவிக் கொண்டு,
"இனிமேல் நீரே உடையவரை நன்றாகப் பார்த்துக்கொள்ளும்.அவருக்குத் தளிகைசெய்வது, திருமேனியைக் 
கவனிப்பது போன்றவற்றைக் குறைவின்றி நடத்தி வாரும்"என்று
நியமித்தார்.

3)தூது விடுத்து,வைணவம் வளர்த்த, தூய்மனத்துப் பெரியோர் !!
🙏🌺🍀🌸☘️🙏🏿
நம் சம்பிரதாயத்தில் தூதுக்கு ஒரு தனிவலிமை உண்டு.
ஶ்ரீராமாயணத்தில் ஆஞ்சநேயர் தூது,மஹாபாரதத்தில் பகவான் கிருஷ்ணரின் தூது என்று.அந்த வகையில் இந்த நான்காவது ராமர்,சோழ நாட்டின் ஒரு பகுதிக்கு மன்னராக விளங்கிய ஆளவந்தாருக்கு "தூதுவளைக் கீரையையே" தூது அனுப்பினார்.மன்னரை ஒரு சாமான்யர் எளிதில் சந்திக்க முடியாததால், அவருக்குப் பிடித்தமான தூதுவளைக் கீரையை அரண்மனைக்குத் தினமும் கொடுத்துவந்தார் ராம மிஸ்ரர்.
திடீரென்று ஒருநாள் நிறுத்திவிட்டார்.
இதனால் ஆளவந்தாருக்கு ஆர்வத்தைத் தூண்டி,இவரை அழைத்து வரச்செய்து சந்திக்கும், சூழ்நிலையை உண்டாக்கி விட்டார்.அந்த முதல் சந்திப்பையும்,
அதனால் ஏற்பட்ட மற்ற சந்திப்புகளை யும், பயன்படுத்தி அரசருக்கு,
ஶ்ரீவைஷ்ணவத்தைப் பற்றி எடுத்துரைத்து, ஶ்ரீரங்கத்துக்கு அழைத்து வந்து,பெரிய பெருமாள் முன்னர் நிறுத்தி விட்டார்.அன்று வந்தவர் அங்கேயே இருந்து விட்டார்.அரசர் ஆளவந்தார், "பரமாசார்யர்" ஆளவந்தாராகி விட்டார்.

ராமாநுஜர் தம் உத்தமசீடர் முக்குறும்பு அறுத்த கூரத்தாழ்வானை 
பெரியகோயில் நம்பியிடம், தூது அனுப்பி அவரிடம் இருந்த கோயில் பொறுப்பையும்,சாவியையும் வாங்கினார்.சாவி மட்டுமா கிடைத்தது? அரசர் ஆளவந்தார் ஆசார்யராக மலர்ந்ததைப்போல்,பெரிய கோயில் ஜீயர்,"திருவரங்கத்து அமுதனார்" ஆக மலர்ந்தார்..நாம் நாளும் சேவித்து இன்புறுவதற்கு "இராமானுச நூற்றந்தாதி" என்னும் பிரபன்ன காயத்ரியைப் பாடிக் கொடுத்தார்.

4.பகவத் கீதைக்கு பாஷ்யம் சொன்ன, ஞானாசார்யர்கள்:
🙏👌👏☝️👍🏻🙏🏿
தூதுவளை கொடுத்து அரண்மனைக்குள் சென்ற மணக்கால் நம்பி 
ஆளவந்தாருக்கு பகவத் கீதையின் 18 அத்யாயங்களையும் ஒவ்வொரு முறையும் வரிசையாக விளக்கி உரைத்து அவரைத் திருத்திப்பணி கொண்டார். 
நம் போன்றோரைத் திருத்திப் பணி
கொள்ள நவரத்தினங்களை வழங்கிய எம்பெருமானார் அருமையான
"கீதா பாஷ்யம்" அருளிச் செய்தார்.

5.பெண் குழந்தைகளைப் பேணிக்காத்த பேராளர்கள்
🌺🌸🌺🌸🌺🌸
இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பெண் குழந்தைகளைப் பேண வேண்டும்(Beti Bachao) என்பதை அரசாங்கம் அடிக்கடி,
அறிவுறுதத வேண்டிய நிலையில் உள்ளோம்.ஆனால் ஆயிரம் ஆண்டுக
ளுக்கு முன்னரே பெண்குழந்தைகளை மணக்கால் நம்பி எப்படிப் போற்றினார் என்று (குறிப்பு 2)பார்த்தோம்.

உடையவரின் ஆசார்யர் பெரியநம்பி ஸ்வாமியின் திருக்குமாரத்தி,
அத்துழாய்க்குப் புகுந்த வீட்டார் பல பிரச்சினைகளைஏற்படுத்தினர்.அந்தக் காலத்து வழக்கப்படி,பெண் வீட்டுச் சீர்வரிசையுடன் "சீதனவெள்ளாட்டி" என்று ஒருவரை,வேலக்காரர்(காரி) ஆகவும் அனுப்ப வேண்டும்.பெரிய நம்பிகளுக்கு அவ்வாறு அனுப்பும் அளவு வசதியில்லை.ஆனால் புகுந்த வீட்டார் அத்துழாயிடம் அடிக்கடி சொல்லிக் காட்டினர்.எனவே அவர் தம் தந்தை
யாரிடம் முறையிட்டார்.அவர் 'என்னிடம் சொல்லி என்ன பயன்?உன் அண்ணன் ராமாநுஜரிடம்சொல்'என்றார்.ராமநுஜர் உடனே அதற்கு ஏற்பாடு செய்தார். அதுவும் எத்துனையோ பேர் இருக்க,
தமக்கு மிக வேண்டியவரும்,
துறவியாகி அனைத்து ஆசைகளயும் விட்டாலும் முதலியாண்டானை விட முடியாது என்று சொல்லும் அளவுக்கு,
உயர்ந்த ஆசார்யர் முதலியாண்டானை அனுப்பி வைத்தார்.

மேலும் உடையவர் காலத்தில் பல பெண்களுக்கு--கூரத்துஆண்டாள்,
பொன்னாச்சியார்,அம்மங்கி அம்மாள்,
திரிபுராதேவியார்,கொங்கில்பிராட்டியார்-சம்பிரதாய விஷ்யங்களில் முக்கியத்துவம் கொடுத்தார்.

6.குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழிக்குத் தனியன் பாடிய சான்றோர் :
    📢📢📢📢📢📢📢📢📢📢
ஸ்ரீராமரைப் பாடிய குலசேகர ஆழ்வாரின் "பெருமாள் திருமொழி"க்கு இரண்டு தனியன்கள் பாடப்பட்டுள்ளன.ஒன்றை நான்காவது ராமர் பாடினார்.
மற்றொன்றை நான்காவது லக்ஷ்மணர்-- உடையவர் பாடினார்.

(i)"ஆரம் கெடப்பரன் அன்பர்கொள்ளார்
என்று அவர்களுக்கே,
வாரம் கொடுகுடப் பாம்பின்கை
இட்டவன் மாற்றலரை,
வீரம் கெடுத்து செங்கோற் கொல்லி
காவலன் வில்லவர்கோன்
சேரன் குலசேகரன் முடிவேந்தர் சிகாமணியே! "--மணக்கால் நம்பி

"அரசரின் நவரத்ன மாலை ஒன்று கேட்டுப் போக, அதனை ஸ்ரீவைஷ்ணவர்கள் திருடியதாக மந்திரிகள் பழிசுமத்த, 'ஸ்ரீவைஷ்ணவ பாகவதர்கள் என்றும் களவு செய்ய மாட்டார்கள்" என்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் மேல் நம்பிக்கை கொண்டு, நல்ல பாம்பு இருக்கும் குடத்தில் கைவிட்டு பாகவதர்
களின் பெருமையை உணர்த்தினார், மன்னர்களுக்கு,மன்னராக விளங்கிய,
சேரநாட்டின் மன்னர் குலசேகராழ்வார்!"

(ii)இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே !
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ் 
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள் 
குலசேகரன் என்றே கூறு !!--ராமாநுஜர்.

7.லக்ஷ்மணரை ஆராதித்த ராமர் !
      🌹🌻🌼🌺☘🍀🌱🌹
நம்மாழ்வார் நாதமுனிகளுக்குக் கொடுத்த பவிஷ்யதாசார்யர் ராமாநுஜர் விக்ரகம்,உய்யக்கொண்டார் வழியாக மணக்கால் நம்பியை அடைந்தது.
மணக்கால் நம்பி அந்த விக்ரகத்துக்கு
திருவாராதனை செய்து கொண்டிருந்து,
தம் அந்திமக் காலத்தில் ஆளவந்தாரிடம் ஒப்படைத்தார்.அந்த விக்ரகத்தை வைத்தே ஆளவந்தார் காஞ்சியில் ராமாநுஜரை அடையாளம் கண்டு,
"ஆம் முதல்வன்" என்று கொண்டாடினார்.

8.மணக்கால் நம்பிகள் வாழி பாசுரம்:
       💐🌼🌻🌷🌺🌹🌺🌹💐
"நேசமுய்யக் கொண்டவர் தாள் சென்னி வைப்போன் வாழியே !
தென்னரங்கர் சீரருளைச் சேர்ந்திருப்போன் வாழியே !
தாசரதி திருநாமம் தழைக்க வந்தோன் வாழியே !
தமிழ்நாதமுனி உகப்பைத் தாபித்தான் வாழியே !
நேசமுடன் ஆரியனை நியமித்தான் வாழியே !
நீணிலத்தில் பதின்மர்கலை நிறுத்தினான் வாழியே !
மாசி மகந்தனில் விளங்க வந்துதித்தான் வாழியே !
மால் மணக்கால் நம்பி பதம் வையகத்தில் வாழியவே!!!"

(அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜதாசன்).

Purandara dasar story

கி.பி. 1480-ல் அவர் ஒன்பது கோடிகளுக்கு அதிபதி...!?
சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அவர் ஒன்பது கோடி சொத்துள்ள மிகப் பெரிய பணக்காரரின் மகன். 

கடைசியில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது கி.பி. 1560-ல் அவர் ஒரு ஓட்டாண்டி. கணக்குப் போட்டுப் பார்த்தால் இன்று பல லட்சம் கோடிகளுக்கு அதிபதியாக அவர் குலம் வாழ்ந்திருக்கும். 

ஆனால் இன்று பணமில்லை. மங்காத புகழ் இருக்கிறது. இதெல்லாம் இறைவன் திரு விளையாடல்...! 

ஆனால் அத்தனை பணமும் போனபின்புதான் அவருக்கு ஞானம் பிறந்தது. 

கையில் ஒரு காசுகூட இல்லாத நிலையில்தான் அவர் மகாலட்சுமியை அழைத்தார்.  அற்புதமான ஸ்ரீராகத்தில் அழைத்தார். சிலர் அப்பாடலை மத்யமாவதி ராகத்திலும் பாடுவர்!

அந்தப் பாடலைப் பாடும்போதே கண்களில் நீர் பெருகும்; மனம் மகிழ்ச்சியில் பொங்கிடும்; நெஞ்சில் ஆனந்தம் தாண்டவமாடும்; மெய் சிலிர்க்கும். 

"பாக்யாத லக்ஷ்மி பாரம்மா- நம்மம்ம நீ சௌ
பாக்யாத லக்ஷ்மி பாரம்மா....'

மகாலட்சுமியை அவர் அழைக்கும் அழகே அழகு. 

"சலங்கை கட்டிய கால்களினால் மெதுவாக அடியெடுத்து வைத்து, அந்த இனிமையான சலங்கை ஒலியால், உன்னை தஞ்சமடைந்து பூஜை செய்யும் பக்தர்களுக்கு தயிரிலிருந்து வரும் நறுமணமான வெண்ணெயைப்போல் வருவாய் தாயே' என்று கெஞ்சுகிறார் அந்த மகான். 

அவருடைய இயற்பெயர் ஸ்ரீனிவாச நாயக். 

அவர் வசித்த ஊரின் நாட்டாண்மையாகத் திகழ்ந்தார் அவர். மக்கள் அவரை செல்வத்தின் பொருட்டு நவகோடி நாராயணசெட்டி என்றும் அழைத்தார்கள்.

அவ்வளவு பெரிய தனவந்தரான அவர் ஒரு கருமி. எச்சில் கையால்கூட காக்கையை விரட்ட மாட்டார் என்பது அவருடைய விஷயத்தில் நிஜம். 

ஸ்ரீனிவாச நாயக்கிற்கு பதினெட்டு வயதாகும்போது திருமணம் நடந்தது. மனைவியின் பெயர் சரஸ்வதி. 

அவள் இவருக்கு நேர் எதிரானவள். தான- தர்மம் என்றால் கொள்ளைப் பிரியம். கடவுள் பக்தி மிகுந்தவள்.

அவர் வாழ்ந்த ஊரில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பாண்டுரங்கனாகக் காட்சியளித்தான்.

 பெரிய கோவில். மக்கள் "பாண்டுரங்கா... பாண்டுரங்கா' என்று பக்திப் பரவசத்தில் நாள்தோறும், வீதி தோறும் பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டே போவார்கள். 

ஆனால் ஸ்ரீனிவாச நாயக் கண்டு கொள்ளவே மாட்டார். 

பார்த்தான் பாண்டுரங்கன். ஒரு முதிய ஏழை அந்தணன் உருவில், ஏழு வயதுச் சிறுவனோடு, ஸ்ரீனிவாச நாயக்கின் கடைமுன் வந்து நின்றான் இறைவன். 

""ஐயா... தர்மப் பிரபுவே...''

ஸ்ரீனிவாச நாயக் அந்தப் பிராமணனை திரும்பிக்கூட பார்க்கவில்லை. விடுவானா இறைவன்?

""ஐயா... தர்மப் பிரபுவே... சுவாமி...''

""டேய்! யாருடா நீ?'' அதட்டினார் ஸ்ரீனிவாசன். 

""ஐயா... நான் ஓர் ஏழைப் பிராமணன். இவன் என்னுடைய ஒரே மகன். ஏழு வயதாகிறது. உபநயனம் செய்ய வேண்டும். நீங்கள் உதவி செய்தால் இவனுக்கு பூணூல் போடலாம்.... பிரபு... ஏதாவது கொஞ்சம் பணம் கொடுங்கள்.... சாமி...'' 

""போ... போ... வேறு எங்காவது போய் பிச்சை எடு. என்னிடம் பணமே இல்லை...'' விரட்டினார் ஸ்ரீனிவாச நாயக். எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் நாயக்கின் மனம் இளகவில்லை. ஆனால் பகவான் அவரை விடுவதாயில்லை.

தினந்தோறும் வந்து, நமக்கு படியளப் பவனே அவரிடம் பிச்சை கேட்டான். நாயக்கும் அலுக்காமல் விரட்டினார். 

ஒருநாள், ""உங்களிடம் யாசகம் வாங்காமல் போகமாட்டேன் பிரபு...'' என்று சொல்லி, இறைவன் நாயக்கின் கடை வாசலிலேயே உட்கார்ந்து விட்டான்.

"இது ஏதடா வம்பாப் போச்சே...' என்று அலுத்துக்கொண்ட ஸ்ரீனிவாச நாயக், கல்லாப் பெட்டியிலிருந்து ஒரு செல்லாக் காசை எடுத்து அந்தணன் மேல் தூக்கி எறிந்தார். ""இந்தா, இதை எடுத்துப் போ. இனிமேல் கடைப்பக்கம் வராதே...'' 

அந்தக் காசைப் பார்த்துவிட்டு, ""பிரபு... இது தேய்ந்து போயிருக்கிறதே... எதற்கும் பிரயோஜனமில்லை. வேறு நல்ல காசு கொடுங்களேன்...'' என்றான் இறைவன். 

ஸ்ரீனிவாச நாயக் யோசித்தார்.

""நல்ல காசா? ஏதாவது பொருள் கொண்டு வந்து என் கடையில் அடமானம் வை... நல்ல காசு தருகிறேன்'' என்றார்.

அந்தணன் அந்தச் சிறுவனை அழைத்துக் கொண்டு நேராக ஸ்ரீனிவாச நாயக்கின் வீட்டிற்குச் சென்றான். 

அங்கே- வெள்ளிக் கிழமையாதலால் துளசி பூஜையை முடித்துவிட்டு ஸ்ரீனிவாச நாயக்கின் மனைவி சரஸ்வதி ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தாள்.

""பவதி... பிக்ஷாம் தேஹி...''

ஓடோடிச் சென்று வாசலில் பார்த்தாள். பார்த்ததும் காலில் விழுந்து கும்பிட்டாள்.

""என்ன வேண்டும் சுவாமி?''

""அம்மா... நான் ஓர் ஏழை. வயதாகி விட்டது. இவன் என் பையன். இவனுக்கு பூணூல் போட வேண்டும். கையில் பணமில்லை. 

ஒரு கஞ்சனைக் கேட்டேன். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் சல்லிக்காசுகூட தரமாட்டேன் என்று என்னை அடிக்காத குறையாகத் துரத்திவிட்டான். அம்மா... 

உன்னைப் பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்கிறாய். ஏதாவது உபகாரம் பண்ணம்மா...''

"பணம் நம்மிடம் கிடையாது. அப்படியே இருந்து, தர்மம் செய்தேன் என்று தெரிந்தால் புருஷன் அடித்தே கொன்றுவிடுவான். இவருக்கு நாம் எப்படி உதவுவது?' என்று யோசித்த சரஸ்வதி முடிவில் தன்னுடைய பரிதாபமான நிலையை விளக்கினாள்.

""அட... நீ என்னம்மா... புருஷன் உனக்குக் கொடுத்ததை தர்மம் செய்தால்தானே ஆபத்து? திருமணத்தின் போது உன் பெற்றோர் போட்ட நகைகள் உன்னுடையதுதானே? 

அதைக் கொடுத்தால் அவர் என்ன செய்ய முடியும்?'' என்று அவளை உசுப்பேற்றினான் பிராமணன்.

"அட... உண்மைதானே? நம் வீட்டில் ஏராளமான நகைகளைப் போட்டார்களே எனக்கு? அவை அத்தனையும் என்னுடையவை தானே... அதில் ஒன்றை தர்மம் செய்தால் என்ன?'

சட்டென்று தன்னுடைய வைர மூக்குத்தியைக் கழட்டி அந்த பிராமணனிடம் கொடுத்து விட்டாள் சரஸ்வதி. 

அவளை மனதார வாழ்த்தி விட்டு, அந்தச் சிறுவனுடன் நேரே ஸ்ரீனிவாச நாயக்கின் அடகுக் கடைக்கே வந்தான் அந்த பிராமணன்.

ஸ்ரீனிவாச நாயக்கிற்கோ, மறுபடியும் தொந்தரவு ஆரம்பித்து விட்டதோ என்று தோன்றியது.

""இந்தாரும். இந்த மூக்குத்தியை எடுத்துக் கொண்டு ஏதாவது பணம் கொடும்'' என்று மிரட்டினான் பிராமணன்.

கையில் மூக்குத்தியை வாங்கி பரீட்சித்துப் பார்த்து, "இதை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே..' என்று யோசித்தார் நாயக்.

சிறிது நேரம் கழித்து, ""ஓய் பிராமணரே... இந்த மூக்குத்தி இங்கேயே இருக்கட்டும். இப்போது என்னிடம் காசு இல்லை. நாளை வந்து பணம் வாங்கிக்கொள்...'' என்றார்.

அதை ஒப்புக்கொண்ட அந்தணன் போய்விட்டான்.

உடனே ஸ்ரீனிவாச நாயக் தன் கடையைப் பூட்டிவிட்டு நேரே வீட்டிற்குப் போனார்.

மனைவியைப் பார்த்தபோது அவள் முகத்தில் மூக்குத்தியைக் காணவில்லை.

""சரஸ்வதி... மூக்குத்தி எங்கே? இன்று வெள்ளிக்கிழமை. முகம் மூளியாய் இருக்கலாமா? போய் மூக்குத்தி போட்டுக் கொண்டுவா...''

சரஸ்வதி வெலவெலத்துப் போனாள். "ஐயய்யோ... இப்போது என்ன செய்வது? அந்தப் பிராமணனுக்கு தானம் கொடுத்தேன் என்றால் கொன்று விடுவாரே?' 

கடைசியில் சரஸ்வதி ஒரு முடிவுக்கு வந்தாள். "இந்தத் துஷ்டனிடம் மூர்க்கத்தனமாக அடிபடுவதைவிட சாவதே மேல்...' என்ற முடிவோடு, ஒரு பாத்திரத்தில் விஷத்தைக் கலந்து கையில் வைத்துக்கொண்டு துளசி மாடத்தை வலம் வந்தாள். 

""தாயே துளசி... நான் உன்னிடம் வந்து விடுகிறேனம்மா'' என்று சொல்லி விஷத்தைக் குடிக்க முற்படுகையில்-

விஷப் பாத்திரத்தில் ஏதோ விழும் ஓசை கேட்டது. சரஸ்வதி உள்ளே கைவிட்டுப் பார்த்த போது அவளின் மூக்குத்தி இருந்தது. அவளை ஆனந்தமும், வியப்பும் அணைத்துக் கொண்டது. "என்னைக் காப்பாற்றிவிட்டாய் தாயே' என்று கண்களில் நீர் பெருக விழுந்து கும்பிட்டாள்... பிறகு, கணவனிடம் ஓடோடிச் சென்று, ""இந்தாருங்கள் மூக்குத்தி...'' என்று கொடுத்தாள். 

ஸ்ரீனிவாச நாயக்கிற்கு ஒன்றும் புரியவில்லை. மூக்குத்தியை எடுத்துக்கொண்டு பித்துப் பிடித்தவர் போல மீண்டும் தனது அடகுக் கடைக்குச் சென்றார். கல்லாப் பெட்டியைத் திறந்து, உள்ளே பத்திரமாக வைத்திருந்த மூக்குத்தியைத் தேடினார். 

அங்கே அது இல்லை. கடை முழுவதும் தேடினார். மூக்குத்தி கிடைக்கவில்லை. நாளை அந்த பிராமணன் வந்து, "எனக்கு பணம் வேண்டாம்... என்னுடைய நகையைக் கொடுங் கள்...' என்று கேட்டால் என்ன செய்வது? 

மனைவியினுடைய மூக்குத்தியையா அவனுக்குக் கொடுப்பது? பிரமை பிடித்தது அவனுக்கு. கூடவே பயமும் வந்தது.

மறுநாள் காலை! 

கடை திறந்த சில வினாடிகளிலேயே அந்தக் கிழவன் சிறுவனோடு வந்து விட்டான்.

""ஐயா... பிரபுவே.. நான் கொடுத்த நகைக்கு பணம் தருவதாகச் சொன்னீர்களே. இன்றும் பணம் இல்லாவிட்டால் பரவாயில்லை. என்னுடைய நகையைக் கொடுங்கள். வேறு கடையில் அடமானம் வைத்துக் கொள்கிறேன்...'' என்றான்.

ஸ்ரீனிவாச நாயக்கின் நிலை பரிதாபமானது. செருக்குடன் வாழ்ந்தவர் கிழவனிடம் கெஞ்சி னார்.

 ""ஐயா... மன்னித்து விடுங்கள். வெளியிலிருந்து கொஞ்சம் பணம் வரவேண்டியிருக்கிறது. வந்தவுடன் தருகிறேன். முடிந்தால் மாலை வாருங்களேன். கண்டிப்பாக பணம் தருகிறேன்.''

""சரி... சரி... சாயங்காலமும் என்னை ஏமாற்றி விடாதே. நான் வருவேன்...''

கிழவன் போனபின்பு, தன் கடையில் பணிபுரியும் ஒரு வேலையாளை அனுப்பி, அந்தக் கிழவன் எங்கே போகிறான் என்று கண்காணிக்கச் சொன்னார். 

அந்தக் கிழவனைப் பின்தொடர்ந்து சென்ற வேலையாள் சிறிது நேரம் கழித்து பதை பதைப்புடன் கடைக்கு ஓடி வந்தான்.

""என்னடா... ஏன் இப்படி பயந்தாங்கொள்ளி மாதிரி ஓடி வருகிறாய்? கிழவன் உன்னை அடையாளம் தெரிந்துகொண்டு மிரட்டினானா?''

""சுவாமி... என்னை மன்னித்துவிடுங்கள்... கிழவர் இரண்டு மூன்று தெருக்கள் தாண்டி, பாண்டுரங்கன் கோவிலுக்குச் சென்றார்.... 

நேரே கர்ப்பக் கிரகத்துக்குள் புகுந்தார்... பின்னர் மறைந்து விட்டார்...''

ஸ்ரீனிவாச நாயக் திடுக்கிட்டார். என்ன இது? கடைக்கு வந்த முதியவர் யார்? என்ன அதிசயம் இது.! 

கடையைப் பூட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் நடந்த சம்பவத்தைச் சொன்னார். அவளும் மூக்குத்தியை அந்தக் கிழவருக்கு தானம் தந்ததையும், அவர் வாழ்த்தி விட்டுப் போனதையும் சொன்னாள்.

ஸ்ரீனிவாச நாயக்கிற்கு புரிந்துவிட்டது. கடவுளே தன்னை பரீட்சித்து விட்டதை உணர்ந்தார்...! 

அப்போது ஓர் அசரீரி பூஜை அறையிலிருந்து கேட்டது. 

"இத்தனை செல்வங்களை வைத்துக்கொண்டு தான தருமம் செய்யாமல் வாழ்கிறாயே? உனக்கு எப்படி நற்கதி கிடைக்கும்?

 போ... உன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் தானம் செய்துவிட்டு புண்ணியம் தேடிக் கொள். 

இனி உன் பெயர் ஸ்ரீனிவாச நாயக் இல்லை. இந்த ஊரின் பெயரான புரந்தரகட என்கிற பெயரால் இனி உன் பெயர் புரந்தரதாசன்.

 பகவானைப் பாடு. நீ நாரதருடைய அம்சம். ஸ்ரீ கிருஷ்ண தேவராயருடைய குல குருவான ஸ்ரீ வியாசராயரை தஞ்சமடைவாயாக. அவர் உனக்கு குரு உபதேசம் செய்வார்....' 

 புரந்தரதாசர்  ஸ்ரீனிவாச நாயக் தன்னுடைய அனைத்து சொத்துகளையும் ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்தார். 

ஒரு நொடியில் ஒன்பது கோடி ரூபாய் போயிற்று. ஓட்டாண்டியானார். 

தன் மனைவி, மக்களோடு இறைவன் நாமங்களைப் பாடியவாறே ஹம்பி சென்று ஸ்ரீ வியாசராயரை சரணடைந்தார். 

அவர் ஸ்ரீநிவாச நாயக்கின் பிறப் பின் ரகசியத்தைச் சொல்லி அவருக்கு குரு உபதேசம் செய்தார். 

கால்நடையாகவே பாரத தேசத்தை மூன்று முறை வலம் வந்தார் புரந்தரதாசர்.

சுமார் நான்கு லட்சம் பாடல்களை இறைவன்மீது பாடினார்.

நம்முடைய திருவையாறு சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு, சிறுவயதில் அவருடைய அன்னை புரந்தரதாசரின் பதங்களையே சொல்லி க்கொடுத்தார். 

ஸ்வர வரிசை என்று சொல்லப்படுகிற "ஸ, ரி, க, ம, ப, த, நீ..' என்கிற ஆரோகண அவரோகணங்களை சங்கீத உலகிற் குத் தந்த பிதாமகர் புரந்தரதாசரே. 

அவருடைய பதங்கள் இன்றும் நம் நாட்டுக் கச்சேரிகளில் பாடப்படுகின்றன. 

அப்படிப்பட்ட மகான் புரந்தர தாசர் கி.பி. 1584-ல் இறைவனோடு இரண்டறக் கலந்தார்.......

Rama darshan to Tulasidasar

*துளசிதாசரின் ஸ்ரீ ராம தரிசனம்*

ஒரு சமயம் துளசிதாசர் காசியில், கங்கையில் நீராடி விட்டு விஸ்வநாதரை தரிசித்தார். விஸ்வநாதர் கருணை காட்டுவார் என்று காத்திருந்தார். ஓயாமல் ராமநாம ஜபம் செய்தார். இரவில் அசுவமேத கட்டத்தின் படிக் கட்டில் உட்கார்ந்து ராமாயணம் கதாகாலட்சேபம் சொல்வார்

ஒவ்வொரு நாளும் அவர் படகில் ஏறி அக்கரைக்கு சென்று கங்கையில் நீர் எடுத்துக் கொண்டு வெகுதூரம் சென்று ஒரு காட்டில் காலைக் கடன்களை கழிப்பார். பின் உடம்பை சுத்தம் செய்து கொண்டு மீதியுள்ள தண்ணீரை ஒரு ஆலமரத்தில் கொட்டி விடுவார்.

அந்த ஆலமரத்தில் துர்மரணம் அடைந்த ஆவி ஒன்று வசித்து வந்தது. அது அந்த நீரை குடித்ததும் தாகம் அடங்கி ஒருவாறு அமைதி கிடைத்தது. இதன் பயனாக விவேகம் வந்தது. இவர் ஒரு பெரிய மகான் என்று தெரிந்து கொண்டது.

அந்த ஆவி ஒரு நாள் துளசிதாசர் திரும்பிப் போகும் வழியில் மறைத்து நின்றது. துளசிதாசரின் நடை தடைப்பட்டது. உரக்க ராமா, ராமா என்று சத்தமிட்டு கூவினார்.

அப்போது அந்த ஆவி கூறியது, பெரியவரே, பயப்பட வேண்டாம். நான் ஒரு பாவியின் ஆவி. நீங்கள் வார்த்த நீரைக் குடித்து புனிதமானேன். உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்புகிறேன். சொல்லுங்கள் என கேட்டது

துளசிதாசருக்கு மனதில் ஒரே எண்ணம் தானே. ராம தரிசனம் தான் அது. அதற்கு இந்த ஆவியா உதவப் போகிறது என்றெல்லாம் யோசிக்காமல் கேட்டு விட்டார், எனக்கு ராம தரிசனம் கிடைக்க வேண்டும் என்று.

*ராமாயணம் கேட்க வரும் ஆஞ்சநேயர்*

அதற்கு ஆவி பதில் கூறியது. 'இது உங்களுக்கு வெகு சுலபமாயிற்றே' என்றது. எப்படி? என கேட்டார் துளசிதாசர். உங்களிடம் தான் ராமாயணம் கேட்க தினமும் அனுமன் வருகிறாரே என்றது. எனக்கு தெரியாதே என்றார் தாசர்.

ஆம். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நேரே உட்கார்ந்திருக்கும் ஜனங்களுக்கு அப்பால் ஒருவர் உட்கார்ந்திருப்பார். நீங்கள் வருவதற்கு முன்பே வந்து விடுவார். பிரசங்கம் முடிந்து ஜனங்கள் திரும்பும்போது ஒவ்வொரு வரையும் விழுந்து வணங்கி விட்டு கடைசியில் தான் போவார்.

அவர் எப்படி இருப்பார்? என்று துளசிதாசர் கேட்டார். உடம்பெல்லாம் வெண் குஷ்டம். அசிங்கமாக இருப்பார். யாரும் தன்னை தொந்தரவு செய்யக் கூடாது, ஒதுக்க வேண்டும் என்பதற்காகவே அப்படி வருவார். அவர் கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

*ராமன் எப்போ வருவாரோ?*

அன்று இரவு சொற்பொழிவின் ஆரம்பத்திலேயே தாசர் கவனித்து விட்டார். தன் கண்ணெதிரே ஆனால் சற்று தள்ளி தலையில் முக்காடிட்டுக் கொண்டிருப்பவரை பார்த்து விட்டார். அன்று பிரசங்கத்தில் சபரியின் கதை. சபரி, ராமன் எப்போது வருவாரோ? என்று வழிமேல் விழி  வைத்து காத்திருக்கிறார். வழியிலே போவோர் வருவோரை எல்லாம் வினவுகிறாள். புலம்புகிறாள். ஏமாற்றி விடாதே ராமா!

*சபரி புலம்பல்*

ராமா! என்னை ஏமாற்றி விடாதே. எனக்கு நீ தான் கதி. எனக்கு வேறு எதிலும் நாட்டமில்லை. எங்கே சுற்றுகிறாயோ? உனக்கு யாராவது வழிகாட்ட மாட்டார்களா? நீ இங்கு வரமாட்டாயா?

உன்னைத் தேடி நான் அலைய வேண்டும். ஆனால் என்னைத் தேடி நீ வர வேண்டும் என நினைக்கிறேனே? என்ன அபச்சாரம். நான் உன்னை தேடி வர முடியாதே! யாராவது அழைத்து வர மாட்டார்களா? ராமனை நான் தரிசனம் செய்வேனா? எனக்கு அந்த பாக்கியம் உண்டா? என்று சபரியின் கதையை கூறி விட்டு மயக்கம் அடைந்து விட்டார் தாசர். சபை முழுவதும் கண்ணீர் விட்டு கதறியது. எங்கும் ராம நாம கோஷம்.

*காலை பிடித்துக் கொண்ட தாசர்*

பின் வெகு நேரம் ஆயிற்று. துளசி தாசருக்கு மயக்கம் தெளியவில்லை. சிலர் நெருங்கி வந்து மயக்கம் தெளிய உதவி செய்தனர். அத்துடன் சபை கலைந்து விட்டது. பின் வெகுநேரம் கழித்து கண் திறந்து பார்த்தார் துளசி தாசர்.

எதிரே குஷ்டரோகி வடிவில் அனுமர் நின்று கொண்டிருந்தார். பிரபோ! அஞ்சன புத்ரா! என்று கதறி அழுது அவருடைய கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அனுமன் கால்களை விடுவித்துக் கொண்டார். பின் தாசரை தோளில் சுமந்து கொண்டு விடுவிடுவென்று நடந்தார். பொழுது விடிந்து விட்டது. தாசரை கீழே கிடத்தினார் அனுமன். துளசி தாசரும் 'கண் விழித்து நான் எங்கிருக்கிறேன்' என்று வினவினார்.

*சித்ர கூடத்தில் ராம ஜபம்*

இதுதான் சித்ர கூடம் இந்த இடத்திற்கு ராமகிரி என்று பெயர். ராமன் முதன் முதலில் வனவாசம் செய்த இடம். அங்கே பாரும் மந்தாகினி. இங்கே உட்கார்ந்து ராமஜபம் செய்யும். ராம தரிசனம் கிட்டும் என்று கூறினார் அனுமன். அதற்கு துளசி தாசர் நீங்கள் கூட இருக்க வேண்டும் என்றார். நீர் ராம நாமம் சொன்னால் உமது கூடவே நான் இருப்பேன். எனக்கு என்ன வேறு வேலை என்று கூறினார் அனுமன். பின் மறைந்து விட்டார். தாசரும் ராமஜபம் செய்தார்.

*எப்படி இருப்பார் ராமர்?*

ராமன் வருவாரா? எப்படி வருவார்? லட்சுமணன் கண்டிப்பாக வருவாரா? எப்படி இருப்பார்? தலையில் ஜடா முடியுடன் வருவாரா? அல்லது வைரக் கிரீடம் அணிந்து வருவாரா? மரவுரி தரித்து வருவாரா? பட்டு பீதாம்பரம் அணிந்து வருவாரா? ரதத்தில் வருவாரா? நடந்து வருவாரா? என்றவாரு இடுப்பில் இருந்த துணியை வரிந்து கட்டிக் கொண்டார். கண் கொட்டாமல் இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டிருந்தார்.

மலைப்பாதை. ஒற்றையடிப் பாதை. இருபுறமும் புதர். அப்பால் ஒரு பாறாங்கல். அதன்மேல் நின்று கொண்டு ராம ராம என்று நர்த்தனமாடினார். மலை உச்சியிலிருந்து வேகமாக இரண்டு குதிரைகள் ஓடி வந்தன. அவற்றின் மீது இரண்டு ராஜாக்கள். தாசர் எத்தனையோ ராஜாக்களை பார்த்திருக்கிறார். தலையில் தலைப்பாகை. அதைச் சுற்றி முத்துச் சரங்கள். கொண்டை மீது வெண் புறா இறகுகள். வேகமாக குதிரை மீது வந்தவர்கள் தாசரைப் பார்த்து சிரித்துக் கொண்டே போய் விட்டனர்.

*ராமனுக்கு ஈடாவாரா?*

ஆமாம். பெரிய வீரர்கள் இவர்கள்! என் ராம, லட்சுமணனுக்கு ஈடாவார்களா? தலையில் ரத்ன கிரீடமும், மார்பில் தங்க கவசமும், தங்க ஹாரமும் கையில் வில்லும் இடுப்பில் அம்புராத் தூளியும் கையில் ஒரு அம்பைச் சுற்றிக் கொண்டே என்ன அழகாக இருப்பார்கள் என்று ராமனை தியானித்தவாறே ராம நாமம் சொன்னார்.

சிறிது நேரம் கழித்து அனுமன் வந்தார். தாசரைப் பார்த்து 'ராம லட்சுமணர்களை பார்த்தீர்களா? என்று கேட்டார். இல்லையே என்றார் தாசர். என்ன இது உமது பக்கமாகத்தானே குதிரையில் சவாரி செய்து கொண்டு வந்தார்கள் என்றார்.
அவர்கள் ராம, லட்சுமணர்களா? ஏமாந்து போனேனே என்று அலறினார் துளசி தாசர். அதற்கு அனுமன் 'ராமன் உமது இஷ்டப்படி தான் வர வேண்டுமா? அவர் இஷ்டப்படி வர கூடாதா? என்று கேட்டார். உடனே தாசர், சுவாமி மன்னிக்க வேண்டும். ஒன்றும் அறியாத பேதை நான். ஏதோ கற்பனை செய்து கொண்டு வந்தவர்களை அலட்சியம் செய்து விட்டேன். வாயு குமாரா? இன்னும் ஒருமுறை தயவு செய்யும். அவர்கள் எந்த வடிவில் வந்தாலும் பார்த்து விடுகிறேன்.

எல்லாம் சரி. நீர் போய் மந்தா கினியில் இறங்கி நீராடி ஜபம் செய்யும். ராமாயண பாராயணம் செய்யும் ராமன் வருவாரா? பார்க்கலாம் என்றார். துளசிதாசரும் மந்தாகினிக்கு ஓடினார். நீராடினார். ஜபம் செய்தார். வால்மீகியின் ராமாயணத்தை ஒப்புவித்தார்.

*நதியில் நீராடுதல்*

இதனிடையே இரண்டு நாட்கள் ஆகி விட்டது. ராமாயணத்தில் பரதன் சித்ர கூடத்திற்கு வரும் முன்னால் ராம லட்சுமணர்கள் சித்ர கூடத்தில் வசித்துக் கொண்டு காலையில் மந்தாகினியில் நீராடுகிறார்கள் என்கிற கட்டத்தை படித்துக் கொண்டிருந்தார்.

எதிரே மந்தாகினியில் குளித்து விட்டு இரண்டு இளைஞர்கள் கரை ஏறி தாசரிடம் வந்தனர். ஒருவன் நல்ல கருப்பு நிறம். மற்றவன் தங்க நிறம். முகத்தில் பத்து பதினைந்து நாள் வளர்ந்த தாடி. சுவாமி கோபி சந்தனம் உள்ளதா? என்று அவர்கள் கேட்டனர். இருக்கிறது. தருகிறேன் என்றார் அவர்.

சந்தனம் கேட்ட ராம, லட்சுமணன்

சுவாமி, எங்களிடம் கண்ணாடி இல்லை. நீங்களே எங்கள் நெற்றியில் இட்டு விடுங்கள். (வடதேசத்தில் கங்கை முதலிய நதி தீர்த்தக் கரையில் பண்டாக்கள் (சாதுக்கள்) உட்கார்ந்து கொண்டு நதியில் நீராடி வருபவர் களுக்கு நெற்றியில் திலகம் இட்டு தட்சிணை  வாங்கிக் கொள்ளும் பழக்கம் இன்றும் உள்ளது). அதற்கென்ன! நாமம் போட்டு விடுகிறேனே என்றார் தாசர். இடது கையில் நீர் விட்டுக் கொண்டே கோபி சந்தனத்தை குழைக்கிறார். அந்த கருப்புப் பையன் எதிரே உட்கார்ந்து முகத்தை நீட்டுகிறான். இவர் அவன் மோவாயைப் பிடித்துக் கொண்டு முகத்தைப் பார்க்கிறார். அவனது கண்கள் குருகுருவென்று இவரைப் பார்க்கின்றன. பார்த்தவுடன் மெய் மறந்து விட்டார்.

அந்தப் பையன் இவருடைய கையில் இருந்த கோபி சந்தனத்தை தன் கட்டை விரலில் எடுத்து தன் நெற்றியில் தீட்டிக் கொண்டு அவருடைய நெற்றியிலும் தீட்டினான். தன்னுடன் வந்த வனுக்கும் தீட்டினான். அவர்கள் உட்கார்ந் திருந்திருந்த படித் துறைக்கு அருகே ஒரு மாமரம். அதன் மீது ஒரு கிளி. அது கூவியது.

'சித்ர கூடகே காடபரே பகி ஸந்தந கீ பீர
துளசிதாஸகே சந்தந கிஸே திலக தேத ரகுபீர"

(பொருள்: சித்ரகூடத்துக் கரையில் சாதுக்கள் கூட்டம். துளசிதாசர் சந்தனம் குழைக்கிறார். ராமன் திலகமிடுகிறார்.)

இதைக் கேட்டு துளசிதாசர் திடுக்கிட்டு சுயநினைவுக்கு வந்தார். சாது அவர்களே! என் நெற்றியில் நாமம் சரியாக இருக்கிறதா? என்று கேட்டான் அந்த கருப்பு இளைஞன். ராமா உனக்கு இதை விட பொருத்தமான நாமம் ஏது என்று கதறிக் கொண்டே அந்த இரண்டு இளைஞர்களையும் கட்டி அணைத்துக் கொண்டார் துளசி தாசர்.🙏🙏🌹

Saturday, March 16, 2024

Panchapatram how to use it

🕉️

*பஞ்சபாத்திரம் - உத்தரணி*. *உபயோக முறைகள், மற்றும் ஆசமனம்*

#தர்மசாஸ்திரம்

நமோ நமஹ !

பஞ்சபாத்திரம் நம் வீடுகளில்,  நித்யகர்மானுஷ்டானங்களுக்கும், பூஜைகளுக்கும் உபயோகப்படுத்தும் பொருளாக இருக்கின்றது. 
இங்கு உங்களுக்கு தெரிந்த அதன்  உபயோகமுறையை சொல்ல போவது இல்லை. சில தெரியாத விஷயங்களை, தெளிவு படுத்த போகிறோம். 
*தர்ம சாஸ்திரம் (ஸ்மிருதி)*, நமது வேத ரிஷிகளால் இயற்றப்பட்டு, தெளிவான வழிமுறைகளோடு மட்டுமல்லாமல், அதில் உபயோகப்படுத்த வேண்டிய பாத்திரங்கள் மற்றும் வரைமுறைகளையும் எடுத்துரைத்துள்ளார்கள். இங்கே குறிப்பிட பட்டுள்ளளவைகளில்,  பஞ்சபாத்திரம்/உத்தரணியை எப்படி பயன்படுத்தக் கூடாது என்பதும் அடங்கும். 

1. பஞ்சபாத்திரம், உத்தரணியை அவரவர் தனித்தனியே உபயோகப்படுத்த வேண்டும். தந்தையுடையதை மகனோ, அல்லது மகனின் பஞ்சபாத்திரம், உத்தரணியை, தந்தையும் உபயோகப்படுத்தக்கூடாது. 

2. நீங்கள் ஆசமனம் செய்ய உபயோகப்படுத்தும், பஞ்சபாத்திரம், உத்தரணியை, மற்ற நித்யகர்மாக்களான, பூஜைகள், ஹோமங்களின் போது பகவானுக்கு அளிக்கும் பாத்யம், அர்க்யம், ஆசமனீயம், ஸ்னானம், ஆகியவற்றில் உபயோகப்படுத்தக்கூடாது. 

3. தேவதா பூஜை, ஹோமங்களின் போது செய்யும் உபசாரத்திற்கென தனியாக, பஞ்சபாத்திரம், உத்தரணியை வைத்திருக்க வேண்டும். 

4. ஸ்ரார்தம் செய்யும் போதும், உங்களின் பஞ்சபாத்திரம், உத்தரணியிலிருந்து, பிராம்மணாளுக்கு தீர்த்தம் போடுவதோ, உபசாரம் செய்வதோ கூடாது. அவர்களுக்கென, தனி பஞ்சபாத்திரம், உத்தரணியை கொடுக்க வேண்டும். 

5. சந்தியாவனத்தில், காயத்ரி தேவிக்கு கொடுக்கும் அர்க்யபிராதனத்தில், உங்கள் பஞ்சபாத்திரம், உத்தரணியிலிருந்தும், ஒரு கையாலும், கொடுக்க கூடாது. நீங்கள் ஆசமனம் செய்த, மிச்ச ஜலத்தை அர்க்யம் கொடுப்பது, மிக பெரிய பாபம் ஆகும். உங்கள் மகனுடையதோ அல்லது மற்றவரின் பஞ்சபாத்திரம், உத்தரணியையோ உங்கள் அனுஷ்டானத்திற்கு உபயோகப்படுத்தக் கூடாது எனும்போது, எப்படி காயத்ரி தேவீக்கு கொடுக்கலாம், அதுவும் ஒரு உத்தரணி மட்டும் ?

6. சாஸ்திரங்கள் தெளிவாக விளக்குகின்றன, சந்தியாவந்தனத்தில் நாம் எவ்வாறு காயத்ரி தேவிக்கு அர்க்யம் தர வேண்டும் என்பதை.
அது சொல்வது என்னவெனில்? 

கரப்யாம் தோயம், ஆத்யா, அஞ்சலினா தோயம், ஆத்யா

*கரப்யாம் (இரண்டு கைகளினாலும்), தோயம்(ஜலம்), ஆத்யா(எடுத்து), அஞ்சலினா(இரண்டு கைகளும் சேர்த்து, உள்ளங்கையில் ஜலம் எடுத்து).  இதை எப்படி செய்வது, என்ற சந்தேகம் எழும்?*

7. *நீங்கள் ஒரு சொம்பு/சின்ன கலசம் நிறைய ஜலம் எடுத்து, அதன் கழுத்து பகுதியை  இடது கைகளின் கட்டை விரல், ஆள்காட்டி, விரல்களால் பிடித்து, மற்ற விரல்களின் உதவியோடு தூக்கி, சற்றே சாய்த்து வலது கையையும் அஞ்சலி செய்வது போல் கோர்த்து, உள்ளங்கைகள் வழியாக காயத்ரி மந்திரம் ஜபித்து, அர்க்யம் விடவும்.* 
நாம் இரு கைகளினாலும், நிறைய ஜலத்தை காயத்ரி தேவிக்கு அர்க்யமாக விடுவது, மிகவும் உத்தமமானது. அதை விடுத்து, இன்று பலர் செய்வது போல், ஒரு உத்தரிணி ஜலம் நாம் ஆசமனம் செய்த பஞ்சபாத்திரத்திலிருந்து,
கொடுப்பது முறையன்று. 

8. அதேபோல, சந்தியாவந்தனத்தில் நவக்ரஹ தேவதா தர்ப்பணத்திலும், நமது பஞ்சபாத்திரத்திலிருந்து, ஒரு உத்தரணி ஜலம் விடுவது கூடாது. எண் 7ல் கூறியுள்ளபடி, இதிலும் செய்ய வேண்டும். குறைந்தது 1 முதல் 1 1/2 லிட்டர் ஜலம் சொம்பில் வைத்துக் கொண்டு, சந்தியவந்தன அர்க்யமும், நவக்ரஹ தேவதா தர்ப்பணமும் செய்ய வேண்டும். இந்த ஜலம் விடுவதற்கு தக்கவாறு, பெரிய தாம்பாளம் வைத்துக் கொள்ள வேண்டும். 

9. மார்ஜனம் செய்ய ப்ரோஷிக்கும் போது, *ஆபோஹிஷ்டா மயோபுவ*, மற்றும், 
 *ததிக்ராவண்ணோ* விற்கும் உத்தரணி தீர்த்தம் பஞ்சபாத்திரத்திலிருந்து எடுத்து செய்வது கூடாது. இதற்கென தனி கிண்ணமோ, அல்லது சிறு தட்டோ பயன்படுத்த வேண்டும் சந்தியாவந்தனத்தில் மார்ஜன ப்ரோக்ஷணத்திற்கு..

10. அதேபோல, உங்கள் ஆசமன பாத்திரத்தின் ஜலத்தை, மற்றவர்கள் மீது ப்ரோக்ஷணம் செய்யக் கூடாது. 

11. அதேபோல, பிரம்ம யஞ்ய தேவ-ரிஷி-பித்ரு, தர்ப்பணிங்களிலும் ஒரு உத்தரணி ஜலம் பஞ்சபாத்திரத்திலிருந்து எடுத்து விடக்கூடாது. நிறைய ஜலம் சொம்பில் எடுத்துக் கொள்ளவும்.     (இரண்டு சொம்பும் உபயோகப்படுத்தலாம்). நிறைய தர்ப்பணங்கள், இரு கைகளையும் இணைத்து அஞ்சலி முறையில் விடுவதால், 3முதல் 4 லிட்டர் வரை ஜலம் தேவைப்படும். 

12. நம் முன்னோர்களுக்கு அமாவாஸ்யை தர்ப்பணம் செய்யும் போதும், நம் பஞ்சபாத்திரலிருந்து ஜலம் எடுத்து விடக்கூடாது. எண் 7ல் கூறியுள்ளது போல் தர்ப்பணங்கள், இரு கைகளையும் இணைத்து அஞ்சலி முறையில் விடுவதால், நிறைய ஜலம் சொம்பில்  தேவைப்படும். ஜலம் விழும்போது, நம் வலது ஆள்காட்டி விரல், மற்றும் கட்டை விரல் வழியாக விட வேண்டும். ஒரு கையால் விடுவது கூடாது. நம் முன்னோர்களை த்ருப்தி படுத்தும் தர்ப்பணம் செய்வதற்கென தனியாக பாத்திரங்கள் வைத்துக் கொள்ள வேண்டும். 

13. தேவ கார்யங்களுக்கு உபயோகப்படுத்தும் பாத்திரங்கள், பித்ரு கார்யங்களுக்கும் மாற்றி
உபயோகிக்க கூடாது. இரண்டிற்கும் தனித்தனியாக வைத்திருந்து உபயோகப்படுத்த வேண்டும். உங்கள் ஆசமனத்திற்கு உபயோகப்படுத்தும் பாத்திரம் ஒன்றாக இருக்கலாம். ஆனால், தேவ காரிய செட், பித்ரு காரிய செட் என தனியே பிரித்து வைத்து உபயோகிக்க வேண்டும். 

14. ஆகையால், உங்கள் பஞ்சபாத்திரம், உத்தரணி, நீங்கள் செய்யும் ஆசமனத்திற்கு மட்டும் தான். மற்ற விஷயங்களுக்கு உபயோகிக்க கூடாது. மற்ற கர்மாக்களான, அர்க்ய ப்ரதானம்/தர்ப்பணம்/ப்ரோக்ஷனம்/மார்ஜனம் போனாறவற்றிற்கு, தனிப் பாத்தரங்கள் உபயோகம் செய்ய வேண்டும். 

இன்றைய காலத்தில், நிறைய பேர் ஒரு பஞ்சபாத்திரம்,
 உத்தரணியிலேயே சந்தியாவனம் முழுவதையும் செய்கின்றனர். இது முற்றிலும் தவறான முறையாகும். தேவதைகளும், பித்ருக்களும் ஜலத்தை அம்ருதம் (தெய்வீக அம்ருதம்) என அறிவுறுத்தி, நமக்கு அதிகளவில் கிடைக்குமாறு செய்தது, நாமும் அதிக அளவில் திருப்பி தர வேண்டும் என்ற காரணத்திற்காகவே! ஆனால், நாம் ஒரு உத்தரணி கொடுக்கின்றோம். 
பலரும் இன்றைய காலகட்டத்தில், உபாகர்மா(ஆவணி அவிட்டம்) கூட, 
ஒரு பஞ்சபாத்திரம், உத்தரணி, தட்டுடனே செய்கிறார்கள். இவையனைத்துமே, நம் வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டதை, ஒட்டாதவாறு நடைமுறை படுத்தப்பட்டு உள்ளது. சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததே, இதற்கு காரணமாகும். 

நாங்கள், வேத கோஷம் மூலமாக
ரிஷிகள் வாக்கியப்படி உள்ள நித்ய கர்மானுஷ்டானங்களை, பயிற்றுவிக்கிறோம். செய்ய வேண்டியனவும், மற்றும் தவிர்க்க வேண்டும் என்று சூத்திரங்களில் தரப்பட்ட விஷயங்களை விளக்கமாகவும், தத்வார்த்தமாகவும் எடுத்து சொல்கின்றோம். 

நாங்கள் பல்வேறு விதமான முகாம்கள், பல ஊர்களிலும், ஆன்லைன் மூலமாகவும், சாஸ்திர விதிப்பபடி உள்ள  நித்ய கர்மானுஷ்டானங்களான, சந்தியாவந்தனம், பிரம்மயக்ஞம், 
புண்ட்ர தாரண விதி(விபூதி/நாமம்), ஸ்னான விதானம், விரத அனுஷ்டானம், பண்டிகை கொண்டாடும் வழிமுறைகள், தேவதா பூஜா விதானங்கள், போன்ற சில முக்கியமானவற்றயும், இதேபோல் மேலும் பலவிதமான  பயிற்சிகளையும், கற்று தருகிறோம்.

எங்களோடு இணைவதற்கு, கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.


🕉️

patteeswaram temple & sambandar

இன்று *ஈசன் அளித்த அற்புத தரிசனம்*

*தேனுபுரீசுவரர் திருக்கோயில், திருப்பட்டீசுவரம், தஞ்சாவூர் மாவட்டம்.*

சுவாமிமலைக்கு அருகில்  உள்ளது இந்த தலம்.

திருஞானசம்பந்தர்
தேவாரப்பதிகம் பெற்றது.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 23வது தலம்.

பட்டிக்கன்று மணலினால் ஓர் சுயம்பு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இவ்வூருக்கு பட்டீச்சரம் என்றும் பெருமானுக்குப் பட்டீச்சரர் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. 

ஞானசம்பந்தருக்கு, ஈசன்  முத்துப்பந்தல் அளித்து,அந்த முத்துப்பந்தல் நிழலில் வரும் அழகைக்காண நந்தியை விலகி இருக்கும்படி உத்தவிட்ட தலம்.

விசுவாமித்திர முனிவருக்கு காயத்திரி மந்திரம் சித்தி பெற்று பிரம்மரிஷி பட்டம் பெற்றதும் இத்தலத்தில் தான். 

மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் இது.

இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. 

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 86 வது தேவாரத்தலம் ஆகும். 

இங்குள்ள துர்க்கை அம்மனை வழிபட்டால் ராகு கேது செவ்வாய் தோசங்கள் நீங்கும்.

அன்னை
ஸ்ரீஞானாம்பிகை, ஸ்ரீபல்வளைநாயகி ...அன்பே உருவானவள்...கேட்ட வரம் தரும் அம்பாள்

*திருஞான சம்பந்தர் முத்துப்பந்தல் பெற்றது*

திருஞானசம்பந்தர் சிவாலயங்கள் தோறும் சென்று வழிபட்டு வரும் நேரத்தில் திருச்சத்திமுற்றத்தில் வழிபட்ட பின் இத்தலத்துக்கு வந்தார்.அப்போது வெயில் காலமாதலால் சூரியனின் கதிர்கள் சுட்டெரித்தன.

வெயிலின் கொடிய வெப்பத்தை தணிக்க இத்தலத்து பட்டீசர் பூதகணங்கள் மூலமாய் அழகிய முத்துப்பந்தலை அனுப்பி வைத்தார். ஞானசம்பந்தர் இறைவன் அருளை வியந்து பணிந்து போற்றி முத்துப்பந்தலின் நிழலில் வந்தார். ஞானசம்பந்தர் நடந்து வந்த அழகிய காட்சியை காணவும், திருஞானசம்பந்தர் தன்னை தரிசிக்கவும் பெருமான் நந்தி தேவரை விலகி இருக்க கட்டளையிட்டார். நந்தியும் விலகியது.

ஞானசம்பந்தர் பரவசத்தில் இறைவனை வணங்கி ஆனந்தப்பெருவெள்ளத்தில் பாடல் மறை எனத்தொடங்கும் பாமாலையை பாடி தலத்தில் தங்கினார். இந்த நிகழ்ச்சியை நினைவுகூறும் வகையில் ஆண்டு தோறும் ஆனிமாதம் சிறப்பாக நடைபெறுகிறது.

காமதேனுப்பசுவின் புத்திரி பட்டி பூசித்ததால் பட்டீச்சரம் என்று பெயர் ஏற்பட்டது.

*ராமருக்கு சாயகத்தி தோஷம் நீங்கப்பெற்ற தலம்.

*பராசக்தியே தவம் செய்து வழிபட்ட தலம்.

Sunday, March 10, 2024

PANCHAPATRAM- UDDHARNI AND ITS USES & ACHAMANA

PANCHAPATRAM- UDDHARNI AND ITS USES & ACHAMANA

#dharmashastram

Namo Namah !

Panchapatram is widely used in most of our households for various Nitya karmas, poojas etc. But we are not here to tell you what you know, rather we are here to tell you what you may not know. Dharma Shastras (Smritis) written by our Vedic Rishis give a complete direction for our anushtanas on not only the steps but also about the vessels used for the same and their uses. So here is what you should not do with Panchapatram and Uddharni.

1. Panchapatram for each family member should be separate. Father cannot use son's Panchapatram and vice versa.

2. You cannot use your panchapatram that you use for achamana and other Nityakarma, for offering Padhya, Arghya, Achamaneeya, Snana etc to Bhagavan during pooja or homam.

3. Panchapatram for Devatas in Pooja should be different and you should not use your  panchapatram to offer various upacharams to Bhagavan in Pooja.

4. Your panchapatram cannot be used to offer theertha and other upachaarams to brahmanas during Shraddha. You should buy and give them a separate panchapatram for their use.

5. You cannot do Arghya pradhana during Sandhyavandana to Gayatri Devi with your Panchapatra water and Uddharni using a single hand. This is a very big paapam as you are offering your achamana balance jalam to Gayatri Devi as Arghya. When your son himself cannot use your achamana patram for his achamana or jalam for his anushtanas, how can you offer Arghya that too just 1 uddharni to Gayatri Devi in Sandhyavandanam?

6. Shastra is clear when it comes to guiding us for giving Arghya to Gayatri Devi in Sandhyavanadana. It says

Karabhyam Toyam aadaya Anjalina toyam aadaya

Karabhyam (with both hands) Toyam (water) aadaya (take) in Anjali posture (Anjali means join both hands together and take water) so both hands when joined together, water should be taken, filling both the palms. You may ask how to do this?

7. You need to take a chombu /small kalasham filled with water and catch the neck of this chombu between your left hand index finger/forefinger and left thumb and lift it, tilt it a bit while holding both hands together in Anjali posture so that water flows out, filling both palms. Then chant Gayatri and do Arghya pradanam. Both hands fully filled with water - this is what we need to offer to Gayatri devi in each arghya  and not 1ml water with Uddharni, which most people do today with the achamana water

8. Similarly for Navagraha Devata Tarpana in Sandhyavanadana, you should not use your Achamana panchapatra and you should not do tarpana with Uddharni pouring 1ml water.  Same method as said in step 7 should be followed here. Minimum 1 to 1.5 litres of water should be offered in Sandhyavandana Arghya pradana and Navagraha Devata Tarpana. For this you need to keep a big tambalam which can hold this flowing water.

9. The self-maarjana "Apohista Mayo Bhuvah" and Dadhikravinno" should not be done from Uddharani water from Panchapatra. You should keep some water in a separate small cup for performing this Marjana during Sandhyavandana.

10. Similarly your Achamana Patra jalam/water in which you have done Achamana cannot be used for prokashanam on others.

11. Similarly in Brahmayagna Deva-Rishi-Pitru Tarpana, you cannot offer water with 1 uddharni each from your Panchapatram. You need to keep adequate water in your chombu (you may even need 2 chombus) as there are multiple tarpanas and they all have to be done with both hands joined together in Anjali posture. 3-4 litres of water may be required in Brahmayagna Deva-Rishi-Pitru Tarpana.

12. You cannot do Amavaasya Tarpana offering to your forefathers from your panchapatram in which you have done achamana. Also, Amavasya tarpanam should be with both hands joined together as Anjali to take water as explained in step 7. And the water should flow out from the index finger and thumb of the right hand. One-handed Tarpana is not allowed. You need to keep a separate chombu/ vessel for offering tarpana in Amavasya to your forefathers.

13. Vessels used for Deva karyam should not be used I for Pitru karyam and vice versa. You need to keep a separate set of paatrams (kinnam, chombu, plate) etc for Pitru karyam and must be used only for pitru karyams. Your personal achamana panchapatram can be same, but all other vessels should be different.

14. Thus your panchapatram and uddharni are for only your use and only for Achamanam. You cannot do anything else with it. For all karmas requiring Arghya pradana / tarpana / prokshana/ marjana etc separate vessels need to be used.

Most people today do Sandhyavandana with just one panchapatram uddharni and one small plate, which is incorrect. Devatas and Pitrus have regarded water as Amrutham (divine nectar) and have given this in abundance to us so that we give them back in abundance. But unfortunately we use just one-one Uddharni to do all these. Many people also perform Upakarma (Avani Avittam) in the same way with just a plate and panchapatram, uddharni. All these are miles aways from Shastras and have come into common practice due to lack of guidance.

At Veda Ghosham we actively train people on Nityakarma as prescribed by our ancient Rishis in Sutras, with minute details of do's and don'ts in our daily Nitya karma-anushtanas with indepth meaning and tattva.

We run camps in various cities and also online classes on Nityakarmas like Sandhyavandanam, Brahmayagnam, Pundra Dharana Vidhi (Vibhuti/Namam), Snana Vidhanam,  Vrata Anushtanam, Festivals celebration as per Shastras, Devata Poojai to name a few and many more like this.

Feel free to look us up at www.vedaghosham.com 

Thursday, March 7, 2024

Thiruvanaiikkaval temple


https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88_3/023-033

23. ஆனைக்கா அகிலாண்டேசுவரி

ராமனுக்கும் சீதைக்கும் மிதிலையில் திருமணம் நடக்கிறது. அவர்களது மணக்கோலத்தைப் பாடுகிறான் கவிச்சக்கரவர்த்தி கம்பன்.

மன்றலின் வந்து மணித் தவிசு ஏறி
வென்றி நெடுந்தகை வீரனும் ஆர்வத்து
இன்துணை அன்னமும் எய்தி இருந்தார்
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தே

என்பது பாட்டு. இந்தப் பாட்டைப் படிக்கும் போதெல்லாம் என் உள்ளத்தில் ஒரு சந்தேகம் எழுவது உண்டு. எப்படி ராமன் சீதை இருவரும் போகமும் யோகமும் ஒன்றிய நிலையில் இருந்தார்கள்? எப்படி இருக்க முடியும் என்றெல்லாம் எண்ணுவேன் நான். இந்தச் சந்தேகம் என் உள்ளத்தில் மட்டுமே எழவில்லை. அன்னை பார்வதிக்குமே எழுந்திருக்கிறது. ஆகவே யோகம் போகம் அவற்றின் உண்மைகளைப்பற்றி ஒரு சந்தேகத்தையே கிளப்பி, அதற்கு விடையை இறைவனிடமே கேட்டிருக்கிறாள். அவரும் உடனே அதற்கு விடை சொல்லவில்லை. 'நீ பூலோகம் சென்று அங்குள்ள ஞானத்தலத்தை அடைந்து தவஞ்செய். அங்கு நான் வந்து உனக்கு உபதேசம் செய்து உன் சந்தேகத்தை நிவர்த்தி செய்து வைக்கிறேன்' என்று உத்தரவு போட்டிருக்கிறார். இறைவன் கட்டளைப்படியே ஞானபூமியை நாடிவருகிறாள் அன்னை. காவிரிக்கரையிலே முனிவர்களெல்லாம் இருந்து தவம் செய்யும் ஒரு சோலையைக் கண்டு அங்கு தவம் செய்ய முனைகிறாள். இன்பத்தைத் தருகின்ற முத்தியின் தன்மையைத் தெரிந்து கொள்ள வந்தவள் ஆதலின் இனிய சுவை உடைய நீரையே திரட்டி லிங்கத் திருவுரு அமைத்துக் கொள்கிறாள்.

அந்த அப்புலிங்கத்துக்கே அபிஷேகம் முதலியன செய்து ஆராதனை பண்ணுகிறாள். இவள் தன் தவத்துக்கு இரங்கி அண்ணல் இந்தக் காவிற்கு வந்து சந்தேகத்துக்கு விளக்கம் கூறுகிறார். அவர் கூறும் விளக்கம் இதுதான். 'உலகங்கள் எல்லாம் என் அருள் வழியே நடப்பன. நடனத்தைப் பிறருக்குக் கற்பிக்க விரும்பும் நடன ஆசிரியன் முதலில் தானே நடனம் ஆடிக்காட்டுதல் போல, உலக மக்களுக்கு யோக நிலையையும் போக நிலையையும் பயிற்றுவிக்க நானே நடத்திக் காட்ட வேண்டியிருக்கிறது. உலகில் உள்ள ஆன்மாக்களெல்லாம் போகத்தை நுகர உன்னை மணந்து தழுவிப் போசியாகவும், அதே சமயத்தில்யோகசித்தி பெற்றுயோகியாகவும் மாறுகிறேன்' என்கிறார். ஆம்! யோக நிலையில் இருக்கும் இறைவன் போகியாகவும் காட்சி தரும் ரகசியம் இதுதான் என்று அன்னை அறிகிறாள். இந்த விளக்கத்தை அன்னை அகிலாண்டேசுவரி பெற்ற இடம் தான் திரு ஆனைக்கா. அந்த ஆனைக்காவுக்கே செல்கிறோம் நாம் இன்று.

ஆனைக்கா காவேரிக்கரையில், காவேரிக்கும் கொள்ளிடத்துக்கும் இடையில் உள்ள தீவில் உள்ள தலம். திருச்சி ஜங்ஷனிலிருந்து வடக்கே நாலுமைல் தொலைவில் இருக்கிறது. ஸ்ரீரங்கம் ஸ்டேஷனில் இறங்கி, கிழக்கே நாலு பர்லாங்கு நடந்தால் கோயிலுக்கு வந்துசேரலாம். ஆனைக்காவை, திருவானைக்காவல் என்றும் திருவானைக் கோயில் என்றும் மக்களும் நெடுஞ்சாலைப் பொறியாளர்களும் அழைப்பார்கள், ஆனைக்கா என்றால் யானை வதிந்த காடு என்றுதான் பொருள். அதனாலேயே அத்தலத்தை கஜாரண்யம் என்றும் புராணங்கள் கூறும். இத்தலத்துக்கு ஏன் ஆனைக்கா என்று பெயர் வந்தது என்று தெரியத் தலவரலாற்றைக் கொஞ்சம் படிக்கவேணும்.

கைலையிலுள்ள இரண்டு கணநாதர்கள் ஏதோ சாபம் பெற்ற காரணத்தால் யானையாகவும் சிலந்தியாகவும் வந்து பிறக்கிறார்கள் இந்த ஞானபூமியிலே. இருவரும் அன்னை அகிலாண்டேசுவரி ஸ்தாபித்த அப்புலிங்கத்தை வழிபடுகிறார்கள். லிங்கமோ ஒரு நல்ல நாவல் மரத்தடியில் காவிரிக்கரையில் இருக்கிறது. ஆற்றுத் தண்ணீரைத் தன் துதிக்கையாலே மொண்டு கொண்டு வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்கிறது யானை. மரத்தின் தழைகள் இறைவன் மேல் விழாதவாறு நூல் பந்தல் இடுகிறது சிலந்தி. சிலந்திக்கு யானைமீது கோபம். ஆதலால் சிலந்தி யானையின் துதிக்கையுள் நுழைந்து கபாலம் வரை ஏறி யானையைக் கடிக்கிறது. யானை வேதனை தாங்கமாட்டாமல் தன் துதிக்கையை ஓங்கி அடிக்கிறது. அதனால் சிலந்தியும் மடிகிறது. யானையும் துடிதுடித்து விழுந்து இறக்கிறது.

ஆனால் இவர்கள் இருவரது பக்தியையும் மெச்சி, இவர்களுக்கு முத்தி அளிக்கிறான் இறைவன். முத்தி பெற்ற யானையின் ஞாபகார்த்தமாகவே இத்தலம் ஆனைக்கா ஆகிறது. சிலந்தி மறுபிறப்பில் கோச்செங்கட் சோழனாகப் பிறக்கிறது. அந்தப் பிறவியிலும் யானை மீது கொண்டிருந்த பகையை மறக்காமல், யானை ஏற இயலாத மாடக் கோயில்களாகவே எழுபது கட்டுகிறான் சோழமன்னன், எழுபது கோயில்களில் படி ஏற இயலாத யானையும் ஒரு கோயிலைத் தன்னுடையதாக -ஆனைக்காவாகவே - ஆக்கிக் கொள்கிறது. இத்தனையும் கூறுகிறார் நாவுக்கரர்.

சிலந்தியும் ஆனைக்காவில்
திருநிழல் பந்தல் செய்து
உலந்து அவண் இறந்தபோதே
கோச் செங்கணானுமாக
கலந்தநீர் காவிரிசூழ்
சோணாட்டு சோழர் தங்கள்
குலந்தனில் பிறப்பித்திட்டார்
குறுக்கை வீரட்டனாரே

என்று திருக்குறுக்கை என்னும் தலத்தில் பாடுகிறார்.

இனி, கோயிலுள் செல்ல முனையலாம். நல்ல தென்னஞ்சோலைக்கு நடுவே கோயில் அமைந்திருக்கிறது. கோயிலுக்குக் கீழ்ப்புறத்திலே உள்ள ஊர்களின் பெயரே, திரு வளர்ச்சோலை, உத்தமர்சேரி என்று. இந்தப் பெயர்களைச் சொல்லும்போதே நா இனிக்கும். இந்தக் கோயிலுக்கு ஐந்து பிரகாரங்கள். மேற்கேயிருந்து கிழக்கு நோக்கி வரும்போது முதல் இரண்டு பிராகாரங்களிலும் உள்ள கோபுர வாயிலைக் கடந்துதான் வரவேண்டும். அந்தப் பிரகாரங்களில் மக்கள் குடியிருக்கும் வீடுகள் நிறைந்திருக்கும். மூன்றாம் பிரகாரத்திலிருந்து தான் கோயில் மண்டபங்கள் ஆரம்பமாகின்றன, என்றாலும், நான்காம் பிரகாரத்து மதில்தான் பெரிய மதில். இந்த மதிலையே திருநீற்று மதில் என்று கூறுகிறார்கள்.

விசாரித்தால் இம்மதில் கட்ட மன்னன் முனைந்த போது, சித்தர் ஒருவர் தோன்றி வேலை செய்தவர்களுக்கெல்லாம் திருநீற்றையே கூலியாகக் கொடுத்திருக்கிறார். அத்திரு நீறே பின்னர் ஒவ்வொருவர் கையிலும் பொன்னாக மாறியிருக்கிறது. இப்போதும் கோயிலில் நமக்குக் கொடுக்கும் திருநீறெல்லாம் பொன்னாக மாறுகிறது என்று மட்டும் ஆகிவிட்டால் கோயிலுக்கு வருவார் தொகையே பெருகிவிடாதா?).

ஏகபாத திரிமூர்த்தி

இந்த மதிலை எல்லாம் கடந்து வந்தால் வட பக்கம் ஆயிரக்கால் மண்டபத்தைக் காண்போம். அதற்கு எதிரே ஒரு பெரிய மண்டபத்தை அடுத்துத் திரி மூர்த்திகள் கோயில். அங்கு சென்று படி ஏறினால் ஓர் அதிசயம் காத்து நிற்கும், ஆம்! பிரும்மா, விஷ்ணு, சிவன் எல்லோருமே லிங்கத் திருவுருவிலே தனித் தனி கோயிலில் இருப்பார்கள். இந்த மூவரும் சேர்ந்த திரு உருவம் ஒன்றும் அங்குள்ள தூணில் இருக்கும். அதனையே ஏகபாத திரிமூர்த்தி என்று கூறுவார்கள். இத்திரிமூர்த்திகளையும் வணங்கியபின் துவஜஸ்தம்ப மண்டபத்துக்கு வருவோம். அந்த மண்டபம் பிரும் மாண்டமான மண்டபம். அம்மண்டபத்தை நான்கு பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன. ஒவ்வொரு தூணுக்கும் மேல் எட்டுச் சிங்கங்கள் மண்டபத்தையே தாங்கி நிற்கும். மேலும் இத்தூண்களில் எல்லாம் தலவரலாறுகளைத் தெரிவிக்கிற சிற்ப வடிவங்கள் உண்டு. இவற்றையெல்லாம் கண்டு அதிசயித்த பின்னரே அடுத்த சோமாஸ்கந்த மண்டபத்துக்குச் சென்று அந்தப் பிரகாரத்தைச் சுற்ற வேணும். அப்படிச் சுற்றி வரும்போது கீழ்ப்புறம் கருவறை மேல் கட்டப்பட்ட விமானத்தை ஒட்டி வெண்நாவல் மரம் ஒன்று விரிந்து பரந்திருக்கும். இதனை இரும்பு அழி போட்டுப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.

இங்கு சம்பு முனிவர் இருந்து தவம் செய்திருக்கிறார். இந்த மரத்தின் அடியிலேயே இறைவன் வதிவது காரணமாக இத்தலத்துக்கே சம்புகேசுவரம் என்ற பெயரும் நிலைத்திருக்கிறது. இதனையும் கடந்து மேற்கு நோக்கி வந்தே கருவறை வாயில் செல்லவேணும். இறைவன் மேற்கே பார்க்க லிங்க வடிவில் மிகத் தாழ்ந்த இடத்தில் இருக்கிறார். அவர் சந்நிதிக்குமுன் ஒன்பது துவாரங்கள் கொண்ட ஒரு கல் பலகணி உண்டு. அதன் வழியாகத் தரிசித்த பின்னரே தென்பக்கம் உள்ள வாயில் வழியாக அந்தராளம் செல்லவேணும். அங்குநான்கைந்து பேர்கள் நிற்பதே மிக்க சிரமம். ஆதலால் முன் சென்றவர் எல்லாம் வெளிவரும் வரையில் காந்திருந்தே பின் சென்று வணங்குதல் கூடும். இங்கோ எப்போதும் நீர் பொங்கிக் கொண்டேயிருக்கும். அர்ச்சகரும் தண்ணீரை எடுத்து வெளியே கொட்டிக் கொண்டே யிருப்பார். அன்னை பிடித்தமைத்த அப்புலிங்கம் அல்லவா, அங்கு நீர் பொங்கி வழிவதில் வியப்பு என்ன? இப்படி அப்பு வடிவிலும், லிங்க வடிவிலும் உள்ள இறைவனை வணங்கி வெளியே வரும் போது,

தென்னானைக் காவானை தேனைப்
பாலை, செழுநீர்த்திரளைச்
சென்று ஆடினேனே

என்று நாவுக்கரசரோடு சேர்ந்து நாம் பாடிக்கொண்டே வரலாம்.

இனி நாம் கிழக்கு நோக்கி நிற்கும் அகிலாண்டேசுவரி சந்நிதியை நோக்கி விரையலாம். இத்தலத்திலேயே இறைவனாம் அப்பு லிங்கத்தைவிட அருள் பாலிக்கும் பெருமை உடையவள் அகிலாண்டநாயகிதான். அவள் 'அகிலாண்டகோடி ஈன்ற அன்னையே என்றாலும் பின்னரும் கன்னி என மறை பேசும் ஆனந்த ரூப மயில்.' ஆதலால் மற்றப் பிரகாரங்களை எல்லாம் கடந்து அவள் சந்நிதிக்கே வந்து சேரலாம். அவளை எதிர்நோக்கி இருப்பவர் சங்கராச்சாரிய சுவாமிகள் ஸ்தாபித்த விநாயகர். அன்னையின் வடிவம் நல்ல கம்பீரமான வடிவம், கருணை பொழிகின்ற திருமுகம். வணங்கும் அன்பருக்கெல்லாம் அட்டமா சித்திகளை அருளுகின்றவள். இவ்வன்னையைத் தாயுமானவர் வணங்கியிருக்கிறார், பாடியிருக்கிறார்.

அட்டசித்தி நல் அன்பருக்கு அருள
விருது கட்டிய பொன் அன்னமே!
அண்டகோடி புகழ்காவை வாழும்
அகிலாண்டநாயகி என் அம்மையே

என்பது அவரது பாட்டு. இந்த அம்மையே இறைவனைப் பிரதிஷ்டை செய்து பூஜித்ததாக வரலாறு. அதனால் இன்றும் உச்சிக்காலப் பூஜையின்போது இந்த அம்மன் கோயில் அர்ச்சகர் பெண் வேடந்தரித்து இறைவனைப் பூஜிக்கிறாராம்! ஆம், திருவாரூரில் அர்ச்சகர் தேவேந்திரனைப்போல ராஜகம்பீர உடை அணிந்து தியாகராஜரைப் பூஜிப்பது போல. இந்த அப்புலிங்கம் என்னும் அமுதலிங்கரும், அன்னை அகிலாண்டநாயகியும் தங்கள் சொத்தைப் பராமரித்துக் கொள்வதிலே மிக்க அக்கறை உடையவர்கள் என்றும் தெரிகிறது. அதற்கு ஒரு சிறு கதையும் இருக்கிறது. அக்காலத்தே உறையூரிலிருந்து அரசாண்ட சோழ மன்னன் ஒருவன், இந்த அன்னையையும் அத்தனையும் வழிபட வந்திருக்கிறான் தன் மனைவியுடன். மனைவியின் கழுத்தில் கிடந்த முத்தாரத்தை இறைவனுக்கு அணிந்தால் அழகாயிருக்குமே என்று எண்ணியிருக்கிறான்.

இந்த எண்ணத்தோடேயே வருகிற வழியில் காவிரியில் நீராடி இருக்கிறார்கள் அரசனும் அரசியும், குளித்து எழுந்தால் அரசி கழுத்தில் இருந்த முத்தாரத்தைக் காணோம். கழுத்திலிருந்து நழுவி ஆற்றில் விழுந்திருக்கிறது. தேடிப்பார்க்கிறான் அரசன்; கிடைக்கவில்லை. பின்னர் சோர்வுடனேயே கோயிலுக்கு வந்திருக்கிறார்கள் இவர்கள். சந்நிதியில் வந்து சேர்ந்தபோது அங்கு இறைவனுக்குத் திருமஞ்சனம் ஆட்டுகிற நேரமாக இருந்திருக்கிறது. காவிரியிலிருந்து குடத்தில் நீர் கொண்டுவந்து திருமுழுக்கு நடக்கிறது. என்ன அதிசயம்! அந்தக் குடத்துக்குள்ளிருந்து முத்தாரம் இறைவன் முடிமேவேயே விழுகிறது. மன்னனும் அரசியும் இறைவனது அளப்பரிய கருணையை வியக்கிறார்கள்.

வழக்கமாக எல்லாச் சிவன் கோயில்களிலும் நடக்கும் திருவிழாக்கள் இக்கோயிலில் உண்டு. இத்துடன் பங்குனி மாதம் சித்திரை நாளில் பஞ்சப்பிரகார உற்சவம் என்று ஒன்று சிறப்பாக நடைபெறும். அன்று ஒரு வேடிக்கை; இறைவன் பெண் வேடத்தோடும் இறைவி ஆண் வேடத்தோடும் திருவீதி உலா வருவர். ஏன் இந்த வேடம் இவர்கள் அணிகிறார்கள் என்பதற்கு ஒரு புராண வரலாறு உண்டு, பிரமன் தான் படைத்த பெண்ணொருத்தியின் அழகிலே மயங்கி நிறை அழிகின்றான். அதனால் படைத்தல் தொழிலே செய்ய முடியாமல் திணறுகிறான். தன் தவறை உணர்ந்து அதற்கு மன்னிப்புப் பெறத் தவம் செய்கிறான். தவத்துக்கு இரங்கிய இறைவன் இறைவியோடு பிரமன் முன்பு எழுந்தருள்கிற போதுதான் இப்படி வேடம் தரித்து வந்திருக்கிறார்கள். ஆம். இறைவனுக்கு ஒரு சந்தேகம், இந்தப் பிரமன் இறைவியின் அழகைக் கண்டு மோகித்தால் என்ன செய்வது என்று. இந்த வேடத்தில் இவர்களைக் கண்ட பிரமன் வெட்கித் தலைகுனிகிறான். பின்னர் அவன் விரும்பிய வண்ணமே அருள் பெறுகிறான். இந்தச் சம்பவத்தை நினைவூட்டவே இந்தப் பஞ்சப் பிரகார உற்சவம், அதில் இந்த வேடம்!

இத்தலத்துக்கு சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் வந்திருக்கிறார்கள். சம்பந்தர் இத்தலத்தில் இருந்து கொண்டே கயிலாயம், மயேந்திரம், ஆரூர் முதலிய தலங்களையும் நினைத்திருக்கிறார்; பாடியிருக்கிறார்.

மண்ணது உண்ட அரிமலரோன் காணா வெண்ணாவல் விரும்பு மயேந்திராரும்
கண்ணது ஓங்கிய கயிலையாரும்
அண்ணல் ஆரூரர் ஆதி ஆனைக்காவே

என்பது அவரது தேவாரம். செழு நீர்த்திரளாம் அப்பு லிங்கரை அப்பர் பாடியதைத்தான் முன்பே கேட்டிருக்கிறோமே. சுந்தரரும்,

அறையும் பூம்புனல் ஆனைக்
காவுடை ஆதியை, நாளும்
இறைவன் என்று அடி சேர்வார்
எம்மை ஆளுடையாரே.

என்று பாடிப் பரவியிருக்கிறார். இப்பாடல்களை யெல்லாம் பாடிக்கொண்டே கோயிலை வலம் வரலாம்; வெளியேறியும் வரலாம்.

இக்கோயிலில் நூற்று ஐம்பத்து நான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவைகளை ஆராய்ந்து இந்தக் கோயிலைக் கட்டியவர்கள், நித்திய நைமித்தியங்களுக்கும், நந்தா விளக்குகளுக்கும் நிபந்தங்கள் ஏற்படுத்தியவர்களையும் பற்றித் தெரிந்து கொள்ளலாம். பிற்காலத்து சோழர், பாண்டியர், ஹொய்சலர், விஜயநகர மதுரை நாயக்க மன்னர்களைப் பற்றி எல்லாம் பலப்பல கல்வெட்டுக்கள், ஹொய்சல மன்னர்களைப் பற்றிய கல்வெட்டுகள் அதிகம். கடந்த 1960-ம் வருஷம் சிறப்பாகக் குடமுழுக்கு விழா நடந்திருக்கிறது. காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சார்ய சுவாமிகளே இருந்து நடத்தி வைத்திருக்கிறார்கள்.

Kandaralanharam arunagirinathar songs both Vinayaka and muruga in single stanza

கந்தரலங்காரம் பகுதி 3
சம்பிரதாயப்படி, ஒரு நூலைத் தொடங்க வேண்டுமானால் அந்த நூலின் ஆரம்பத்தில் விநாயகரைத் துதிப்பது வழக்கம். சிவாலயத்துக்குப் போகும்போது முதலில் விநாயகரை வணங்குவது மரபு.

மரபு என்றால் என்ன 
ஒருவர் ஒரு காரியத்தைச் செய்வதற்குப் பல வழிகளிலே முயன்று கடைசியில் எந்த வழியாக வெற்றி பெற்றாரோ அந்த வழியைப் பின்னால் வருகின்றவர்களுக்கும் சொல்வதைச் சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள். 

அதனை மரபு, சம்பிரதாயம் என்று சொல்வார்கள். அந்தச் 
திருவண்ணாமலை ஆலயத்தின் கோபுரம் கிழக்கு நோக்கி இருக்கிறது. அந்தக் கோபுரத்தின் வழியே உள் வாசலுக்குச் சென்றால் அந்த வாசலின் ஒரு பக்கம் விநாயகப் பெருமான் வீற்றிருக்கிறார். மற்றொரு பக்கம் குமாரக் கடவுள் எழுந்தருளியிருக்கிறார்.

அருணகிரி நாதப் பெருமான் திருவண்ணாமலைக்குச் செல்கிறார். 
 கோபுர வாசலுக்கு வலப்பக்கம் விநாயகர் இருக்கிறார். இடப்பக்கம் முருகப் பெருமான் இருக்கிறார்.

 விநாயகருக்கு அவர் தனியாகத் துதி சொல்லவில்லை. விநாயகரை நினைக்கிறார். 'ஒரு பாட்டிலே விநாயகரையும் சொல்ல வேண்டும்; முருகனையும் சொல்ல வேண்டும் என்று எண்ணுகிறார். 

அதை எப்படிச் சொல்வது நம்  மாப்பிள்ளையைச் சொல்லும்போது தம் பெண்ணைச் சொல்லி அவரைக் குறிப்பிடுவார்கள்; "நம் மகாலட்சுமி புருஷன்" என்று குறிப்பிப்பார்கள். இதைப் போலவே அருணகிரிநாதர் பாடுகிறார்.

 "நான் திருவண்ணாமலைக்குப் போனேன். கோபுர வாசலுக்குப் போனேன். உள் வாசலில் உள்ள களிற்றுக்கு இளைய களிற்றைத் தரிசித்தேன்" என்று பாடுகிறார்.

   அடலரு ணைத்திருக் கோபுரத் தேஅந்த வாயிலுக்கு
   வடவரு கிற்சென்று கண்டு கொண்டேன்...

முருகனைக் கண்டுகொண்டேன் என்று சொல்ல வந்தவர். களிறாகிய விநாயகருக்குத் தம்பியாகிய களிற்றைக் கண்டேன் என்கிறார். அண்ணாவாகிய களிறு எத்தகையது?

வருவார் தலையில்

   தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
   கடதட கும்பக் களிறு.
"அதோ விநாயகர் வீற்றிருக்கிறார். அவரைப் பார். அந்தக் களிற்றுக்கு இளைய களிறாகிய முருகனை நான் கண்டு கொண்டேன்" என்று அவர் குறிப்பிடுகிறார்.

இந்த பாடலில் ஐந்து பகுதிகள் இருக்கின்றன. திருவண்ணாமலை, திருவண்ணாமலையிலுள்ள கோபுரம், அதிலேயுள்ள உள்வாயில், அந்த வாயிலுக்குத் தெற்கே இருக்கிற விநாயகர், வடக்குப் பக்கத்தில் இருக்கிற குமாரசுவாமி ஆகிய ஐந்து பொருள்களையும் இந்தப் பாடலில் காணலாம்.
தொடர்ந்து பார்க்கலாமா
பஞ்சபூத நாயகா ஆறுமுகா அருள் புரிவாய்.

Adisesha and 4 temples on Sivaratri

ஆதிசே‌ஷன் வழிபட்ட சிவராத்திரி தலங்கள்

நாகங்களின் தலைவனான ஆதிசே‌ஷன் தனது ஆயிரம் தலைகளால் பூமியை தாங்கிக்கொண்டு இருப்பவர். எப்போதும் அவர் பூமியை தாங்கிக்கொண்டு இருந்ததால் தன் பலம் அனைத்தையும் இழந்து தவித்தார். இதனால் உடல்சோர்வு ஏற்பட்டு அதனை நீக்கி வலிமை பெறக் கருதி சிவபெருமானிடம் சென்று முறையிட்டார். அதைக்கேட்ட சிவபெருமான்,  ஆதிசே‌ஷனை சோழநாட்டில் காவிரிநதி ஓடும் சிவாலயங்களுக்கு சென்று வழிபடும் படி கூறினார். அதன்படி ஆதிசே‌ஷன்  பல தலங்களையும் தரிசித்து இறுதியாக கும்பகோணம் வந்தார். 

ஒரு சிவராத்திரியில் முதல் ஜாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமியையும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரம் பாம்புரநாதரையும், நான்காம் ஜாமத்தில் நாகூர் நாகநாதரையும் தரிசித்தார். அப்போது சிவபெருமான் சிவலிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு  மேலும்,  பூமி முழுவதையும் தாங்கும்படியான வலிமையையும்,வேறு பல நலன்களையும் வழங்கினார். 

இதனால் சிவராத்திரி நன்னாளில் இந்த நான்கு தலங்களுக்கும் சென்று சிவபெருமானை வழிபாடு செய்தால் உடலில் உள்ள எல்லா வியாதிகளும் நீங்கும் என்றும் , சர்ப்பதோ‌ஷம் நீங்கி வாழ்வில் வளம் பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோவில் நாக தோ‌ஷ பரிகார தலமாகும். சுவாமி பெயர் நாகேஸ்வரர். அம்பாள் நாமம் பெரியநாயகி அம்மன், சூரியன் வழிபட்டதால் பாஸ்கரஷேத்திரம் என்றும், பிரளயகாலத்தில் கும்பத்தில் இருந்து வில்வம் விழுந்த இடத்தில் பெருமான் தோன்றியதால் வில்வ வனம் என்றும்  வழங்கப்படுகின்றன.

திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாதசுவாமி கோவில் கும்பகோணத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இது நவக்கிரகங்களில் ராகு தலமாகும். ராகு பகவான் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க சிவராத்திரியன்று முதல் காலத்தில் பூஜித்த தலம். கோவில் வெளிப்பிரகாரத்தில் தென் மேற்கு மூலையில் ராகு பகவான் தன் இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார். இறைவன் பெயர் நாகேஸ்வரர். இறைவியின் நாமம் பிறையணியம்மன்.

திருப்பாம்புரம் பாம்புரநாதர் கோவில் திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அருகில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து பஸ்சில் செல்பவர்கள் திருநள்ளாறு செல்லும் சாலையில் திருநாகேஸ்வரம், திருநீலக்குடி வழியாக 1 மணி நேரம் பயணித்தால் திருப்பாம்புரத்தை அடையலாம். நாகூர் நாகநாதர் கோவில் நாகப்பட்டினத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் காரைக்கால் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. சுவாமி பெயர் நாகநாதர். அம்பாள் நாமம் நாகவல்லி.

chanakya niti

சாணக்ய நீதி -- நங்கநல்லூர் J K SIVAN
வடக்கே எத்தனையோ சாம்ராஜ்யங்கள் தோன்றி அழிந்து விட்டன. சரித்திர பக்கங்கள் நிறைய இதைப் பற்றி சொல்கிறது. 2500 வருஷங்கள் முன்பு கிரேக்க நாட்டரசன் அலெக்ஸாண்டர் படையோடு இந்தியாவில் நுழைந்து எதிர்த்த அத்தனை குட்டி குட்டி ராஜாக்களை வென்று தனது உடைமையாக்கிக் கொண்டான். அப்போது நந்தர்கள் என்ற வம்சம் ஒரு ராஜ்யத்தை ஆண்டுவந்தது. அதில் நந்தராஜாவின் அடிமை வேலைக்காரிக்கு பிறந்த சந்திரகுப்தனை ராஜா வாரிசாக கொள்ளவில்லை. சந்திரகுப்தன் சிறந்த வீரன். இயற்கையாகவே புத்திசாலி. தேகபலம் மிக்கவன். இவனே இந்த நந்த ராஜ்யத்துக்கு சரியான அரசனாக ஆள்வதற்கு தக்கவன் என்று நந்த ராஜ்யத்திலிருந்த ஒரு அறிவாளி, சாணக்கியன் புரிந்து கொண்டு அவனை எப்படியும் ராஜாவாக்கிவிட பயிற்சி கொடுத்தான். கடைசி நந்தராஜா இறந்தபின் சந்திரகுப்தனை ராஜாவாக்கினான். மற்ற குறுநில மன்னர்களை இணைத்து சந்திரகுப்தன் தலைமையில் ஒரு பெரிய படை தயார் செய்தான். அந்த நேரத்தில் தான் அலெக்சாண்டரின் படை நந்த ராஜ்யத்தில் நுழைந்தது. சந்திரகுப்தன் தயார் நிலையில் தனது பெரும்படையோடு அலெக்சாண்டரின் படைத்தளபதி செலுக்கஸ் நிகேட்டார் என்பவனை போரில் வென்றான். சந்திரகுப்தனின் புகழ் எங்கும் பரவியது. மற்ற எல்லா ராஜாக்களும் அவன் கீழ் இணைந்தனர். குப்த சாம்ராஜ்யம் பறந்து விரிந்ததற்கு காரணம் சாணக்யனின் புத்தி கூர்மை. அவன் தான் சந்திரகுப்தனின் பிரதம மந்திரி. சாணக்யரின் அறிவுத்திறனை அவன் எழுதிய நீதி சாஸ்திர நூல்களில் அறிந்து வியக்கிறோம். இன்றும் அவை பிரபலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தியா முழுதும் வென்ற சந்திரகுப்தனின் ராஜ்யம் வடமேற்கே அரபு நாடுகள் வரை, தெற்கே மைசூர் வரை விரிந்தது. சகல வேதமும் அறிந்தவன் சாணக்கியன். அவனது நீதி சாஸ்திரத்திலிருந்து சிலவற்றை உங்களுக்கு அளிக்கிறேன்.
நான் உலக சரித்ரம் ஆர்வமாக படித்திருக்கி றேன். இருந்தாலும் சரித்ரம் இங்கே எழுதப் போவதில்லை. அநேகர் விரும்ப மாட் டார்கள். ரெண்டாயிரம் வருஷம் முன்பு வாழ்ந்த ஒரு அறிவாளி கௌடில்யன் எனும் சாணக்கியன். அவனைப் போல் இன்னொருவனை இன்னும் பாரத தேசம் காணவில்லை. தலை சிறந்த தத்துவ வாதியா, பொருளாதார நிபுணனா, நீதிபதியா, சாஸ்திரங்கள் கற்ற வேத ப்ராமணனா, ராஜகுருவா.... யார் ?? கிங் மேக்கர் KING MAKER என்கிறோமே கௌடில்யன் உண்மையில் EMPEROR MAKER விஷ்ணு குப்தன், கௌடில்யன் என்ற அவனது இயற் பெயர்கள் மறைந்து சாணக்கியன் என்று உலகமுழுதும் அறியப்படுபவன். எது எப்படி இருந்தாலும் சாணக்யன் சொன்னதாக சில வார்த்தைகள் நமக்கு கிடைத்து அதைப் படிக்கும்போது அவன் எவ்வளவு தீர்க்க சிந்தனையாளன் என்பது புலப்படுகிறது. அவனது சாணக்ய நீதியைப் படிக்கும்போது தான் அவனது தொலை நோக்கு, பக்தி, சமூக சிந்தனை, பேரன்பு, தியாகம், நேர்மை, நிர்வாக ஆற்றல், ராஜரீகம் எல்லாம் புரிபடுகிறது.
प्रणम्य शिरसा विष्णुं त्रैलोक्याधिपतिं प्रभुम् । नानाशास्त्रोद्धृतं वक्ष्ये राजनीतिसमुच्चयम् ॥ 1-1
ப்ரணம்ய ஶிரஸா விஷ்ணும் த்ரைலோக்யாதி⁴பதிம் ப்ரபு⁴ம் । நாநாஶாஸ்த்ரோத்³த்⁴ரு'தம் வக்ஷ்யே ராஜநீதிஸமுச்சயம் ॥
சாணக்கியன் எனும் கௌடில்யன் சொல்கிறான்:
நான் யார்? ஒரு பொம்மை, இயந்திரம், என்னைச் செலுத்துபவன் அந்த சாக்ஷாத் மஹா விஷ்ணு, மூவுலகுக்கும் அதிபதி, லோக காரணன், அவனை வணங்கி நமஸ்கரித்து என் மனதில் தோன்றியதை ஓலைச்சுவடியில் வடிக்கிறேன். ராஜரீக கொள்கைகள் கோட்பாடுகள், நீதி நெறி பற்றி சொல்கிறேன்.
अधीत्येदं यथाशास्त्रं नरो जानाति सत्तमः । धर्मोपदेशविख्यातं कार्याकार्यं शुभाशुभम् ॥1-2
அதீ⁴த்யேத³ம் யதா²ஶாஸ்த்ரம் நரோ ஜாநாதி ஸத்தம: । த⁴ர்மோபதே³ஶவிக்²யாதம் கார்யாகார்யம் ஶுபா⁴ஶுப⁴ம் ॥ 01-02
எவன் இதை நன்றாக அறிந்துகொண்டு, சாஸ்திரம் சொல்வதை புரிந்துகொண்டு, தனது கடமையை சாஸ்திரம் சொல்லும் வகையில், வழியில் கடைபிடிக்கிறானோ, எதை பின்பற்றவேண்டும், எது கூடாது என்று பகுத்தறிகிறவனோ, அவனே சிறந்த மனிதருள் மாணிக்கம்.
तदहं सम्प्रवक्ष्यामि लोकानां हितकाम्यया ।येन विज्ञातमात्रेण सर्वज्ञात्वं प्रपद्यते ॥ 1-3
தத³ஹம் ஸம்ப்ரவக்ஷ்யாமி லோகாநாம் ஹிதகாம்யயா । யேந விஜ்ஞாதமாத்ரேண ஸர்வஜ்ஞாத்வம் ப்ரபத்³யதே ॥ 01-03
சமூகநலத்தினை கருத்தில் கொண்டு, நான் இதைச் சொல்கிறேன், அதை நான் நினைக்கிறபடியே புரிந்துகொண்டு கடைபிடித்தால் எல்லாம் இனிதாகவே, நல்லதாகவே நடக்கும்.  
मूर्खशिष्योपदेशेन दुष्टस्त्रीभरणेन च ।दुःखितैः सम्प्रयोगेण पण्डितोऽप्यवसीदति ॥ 1-4
மூர்க²ஶிஷ்யோபதே³ஶேந து³ஷ்டஸ்த்ரீப⁴ரணேந ச ।து:³கி²தை: ஸம்ப்ரயோகே³ண பண்டி³தோऽப்யவஸீத³தி ॥ 01-04
எவ்வளவு தான் கற்றுணர்ந்த அனுபவ ஞானி என்றாலும் ஒரு முட்டாள் சிஷ்யனுக்கு கற்பிக்கும்போது, ஒரு தவறான பெண்ணோடு வசிக்கும்போது, துன்பப்படும் வியாதியஸ்தர்கள் இடையே இருக்கும்போதும், அவன் மிகுந்த துக்கம் அடைகிறான்.

Monday, March 4, 2024

lalita sahasranamavali in tamil

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி
   ( 1000 நாமாவளி )
ஓம், ஐம்,  ஹ்ரீம், ஸ்ரீம்
ஓம் ஸ்ரீமாத்ரே நம:
ஓம் ஸ்ரீமஹாராஜ்ஞ்யை நம:
ஓம் ஸிம்ஹாஸநேஶ்வர்யை நம:
ஓம் சிதக்நிகுண்டஸம்பூதாயை நம:
ஓம் தேவகார்ய ஸமுத்யதாயை நம:
ஓம் உத்யத்பாநு ஸஹஸ்ராபாயை நம:
ஓம் சதுர்பாஹு ஸமந்விதாயை நம:
ஓம் ராகஸ்வரூப பாஶாட்யாயை நம:
ஓம் க்ரோதாகாராங் குஶோஜ்ஜ்வலாயை நம:
ஓம் மநோரூபேக்ஷு கோதண்டாயை நம:
ஓம் பஞ்சதந்மாத்ர ஸாயகாயை நம:
ஓம் நிஜாருணப்ரபாபூர மஜ்ஜத்ப்ரஹ்மாண்ட மண்டலாயை நம:
ஓம் சம்பகாஶோகபுந்நாக ஸௌகந்திக லஸத்கசாயை நம:
ஓம் குருவிந்தமணிஶ்ரேணீ கநத்கோடீர மண்டிதாயை நம:
ஓம் அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல ஶோபிதாயை நம:
ஓம் முகசந்த்ர களங்காப ம்ருகநாபி விஶேஷகாயை நம:
ஓம் வதநஸ்மர மாங்கல்யக்ருஹதோரண சில்லிகாயை நம:
ஓம் வக்த்ரலக்ஷ்மீ பரீவாஹ சலந்மீநாப லோசநாயை நம:
ஓம் நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதாயை நம:
ஓம் தாராகாந்தி திரஶ்காரி நாஸாபரண பாஸுராயை நம:
ஓம் கதம்பமஞ்ஜரீ க்லுப்தகர்ணபூர மநோஹராயை நம:
ஓம் தாடங்கயுகளீபூத தபநோடுப மண்டலாயை நம:
ஓம் பத்மராக ஶிலாதர்ஶ பரிபாவி கபோலபுவே நம:
ஓம் நவவித்ரும பிம்பஸ்ரீ ந்யக்காரிதஶ நச்சதாயை நம:
ஓம் ஶுத்தவித்யாங்குராகார த்விஜபங்க்தி த்வயோஜ்வலாயை நம: 25
 

ஓம் கர்பூரவீடிகாமோத ஸமாகர்ஷத் திகந்தராயை நம:
ஓம் நிஜஸல்லாப மாதுர்ய விநிர்ப்பத்ஸித கச்சப்யை நம:
ஓம் மந்தஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத்காமேஶ மாநஸாயை நம:
ஓம் அநாகலித ஸாத்ருஶ்ய சிபுகஸ்ரீ விராஜிதாயை நம:
ஓம் காமேஶபத்த மாங்கல்ய ஸூத்ரஶோபித கந்தராயை நம:
ஓம் கநகாங்கத கேயூர கமநீய புஜாந்விதாயை நம:
ஓம் ரத்நக்ரைவேயசிந்தாக லோலமுக்தா பலாந்விதாயை நம:
ஓம் காமேஶ்வரப்ரேம ரத்நமணி ப்ரதிபணஸ்தந்யை நம:
ஓம் நாப்யாலவால ரோமாளிலதாபல குசத்வய்யை நம:
ஓம் லக்ஷ்யரோம லதாதாரதா ஸமுந்நேய மத்யமாயை நம:
ஓம் ஸ்தநபார தளந்மத்ய பட்டபந்த வளித்ரயாயை நம:
ஓம் அருணாருணகௌஸும்ப வஸ்த்ரபாஸ்வத் கடீதட்யை நம:
ஓம் ரத்நகிங்கிணிகாரம்ய ரஶதாநாம பூஷிதாயை நம:
ஓம் காமேஶஜ்ஞாத லௌபாக்யமார்தவோரு த்வ்யாந்விதாயை நம:
ஓம் மாணிக்ய முகுடாகார ஜாநுத்வய விராஜிதாயை நம:
ஓம் இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மரதூணாப ஜங்கிகாயை நம:
ஓம் கூடகுல்பாயை நம:
ஓம் கூர்மப்ருஷ்ட ஜயிஷ்ணு ப்ரபதாந்விதாயை நம:
ஓம் நகதீதிதி ஸஞ்சந்ந நமஜ்ஜந தமோகுணாயை நம:
ஓம் பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹாயை நம:
ஓம் ஶிஞ்ஜாந மணிமஞ்ஜீர மண்டிதஸ்ரீ பதாம்புஜாயை நம:
ஓம் மராளீமந்தகமநாயை நம:
ஓம் மஹாலாவண்ய ஶேவதயே நம:
ஓம் ஸர்வாருணாயை நம:
ஓம் அநவத்யாங்க்யை நம: 50
 

ஓம் ஸர்வாபரணபூஷிதாயை நம:
ஓம் ஶிவகாமேஶ்வராங்கஸ்தாயை நம:
ஓம் ஶிவாயை நம:
ஓம் ஸ்வாதீந வல்லபாயை நம:
ஓம் ஸுமேருமத்ய ஶ்ருங்கஸ்தாயை நம:
ஓம் ஸ்ரீமந் நகர நாயிகாயை நம:
ஓம் சிந்தாமணி க்ருஹாந்தஸ்தாயை நம:
ஓம் பஞ்சப்ரஹ்மாஸநஸ்திதாயை நம:
ஓம் மஹாபத்மாடவீ ஸம்ஸ்தாயை நம:
ஓம் கதம்பவந வாஸிந்யை நம:
ஓம் ஸுதாஸாகர மத்யஸ்தாயை நம:
ஓம் காமாக்ஷ்யை நம:
ஓம் காமதாந்யை நம:
ஓம் தேவர்ஷிகண ஸங்காத ஸ்தூயமாநாத்ம வைபவாயை நம:
ஓம் பண்டாஸுர வதோத்யுக்த ஶக்திஸேநா ஸமந்விதாயை நம:
ஓம் ஸம்பத்கரீ ஸமாரூட ஸிந்தூரவ்ரஜ ஸேவிதாயை நம:
ஓம் அஶ்வாரூடாதிஷ்டிதாஶ்வ கோடிகோடிபிராவ்ருதாயை நம:
ஓம் சக்ரராஜ ரதாரூட ஸர்வாயுத பரிஷ்க்ருதாயை நம:
ஓம் கேயசக்ர ரதாரூட மந்த்ரிணீ பரிஸேவிதாயை நம:
ஓம் கிரிசக்ர ரதாரூட தண்டநாத பரஸ்க்ருதாயை நம:
ஓம் ஜ்வாலாமாலிநீ காக்ஷிப்த வஹ்நிப்ராகார மத்யகாயை நம:
ஓம் பண்டஸைந்ய வதோத்யுக்த ஶக்திவிக்ரம ஹர்ஷிதாயை நம:
ஓம் நித்யாபராக்மடோப நிரீக்ஷண ஸமுத்ஸுகாயை நம:
ஓம் பண்டபுத்ர வதோத்யுக்த பாலாவிக்ரம நந்திதாயை நம:
ஓம் மந்த்ரிண்யம்பா விரசித விஷங்கவத தோஷிதாயை நம: 75
 

ஓம் விஶுக்ரப்ராணஹரண வாராஹீ வீர்ய நந்திதாயை நம:
ஓம் காமேஶ்வர முகாலோக கல்பித ஸ்ரீகணேஶ்வராயை நம:
ஓம் மஹாகணேஶ நிர்ப்பிந்ந விக்நயந்த்ர ப்ரஹர்ஷிதாயை நம:
ஓம் பண்டாஸுரேந்த்ர நிர்முக்த ஶஸ்த்ரப்ரத்யஸ்த்ர வர்ஷிண்யை நம:
ஓம் கராங்குளி நகோத்பந்ந நாராயண தாஶாக்ருத்யை நம:
ஓம் மஹாபாஶுபதாஸ்த்ராக்நி நிர்தக்தாஸுர ஸைநிகாயை நம:
ஓம் காமேஶ்வராஸ்த்ர நிர்தக்த ஸபண்டாஸுர ஸூந்யகாயை நம:
ஓம் ப்ரஹ்மோபேந்த்ர மஹேந்த்ராதி தேவஸம்ஸ்துத வைபவாயை நம:
ஓம் ஹரநேத்ராக்நி ஸந்தக்த காமஸஞ்ஜீவ நௌஷத்யை நம:
ஓம் ஸ்ரீமத்வாக்பவகூடைக ஸ்வரூப முகபங்கஜாயை நம:
ஓம் கண்டாத: கடிபர்யந்த மத்யகூட ஸ்வரூபிண்யை நம:
ஓம் ஶக்திகூடைகதாபந்ந கட்யதோகபாக தாரிண்யை நம:
ஓம் மூலமந்த்ராத்மிகாயை நம:
ஓம் மூலகூடத்ரய கலேபராயை நம:
ஓம் குலாம்ருதைக ரஸிகாயை நம:
ஓம் குலஸங்கேத பாலிந்யை நம:
ஓம் குலாங்கநாயை நம:
ஓம் குலாந்தஸ்தாயை நம:
ஓம் கௌலிந்யை நம:
ஓம் குலயோகிந்யை நம:
ஓம் அகுலாயை நம:
ஓம் ஸமயாந்தஸ்தாயை நம:
ஓம் சமயாசார தத்பராயை நம:
ஓம் மூலாதாரைக நிலயாயை நம:
ஓம் ப்ரஹ்மக்ரந்தி விபேதிந்யை நம: 100
 

ஓம் மணிபூராந்தருதிதாயை நம:
ஓம் விஷ்ணுக்ரந்தி விபேதிந்யை நம:
ஓம் ஆஜ்ஞாசக்ராந் தராளஸ்தாயை நம:
ஓம் ருத்ரக்ரந்தி விபேதிந்யை நம:
ஓம் ஸஹஸ்ராராம் புஜாரூடாயை நம:
ஓம் ஸுதாஸாராபி வர்ஷிண்யை நம:
ஓம் தடில்லதா ஸமருச்யை நம:
ஓம் ஷட்சக்ரோபரி ஸம்ஸ்திதாயை நம:
ஓம் மஹாஶக்த்யை நம:
ஓம் குண்டலிந்யை நம:
ஓம் பிஸதந்து தநீயஸ்யை நம:
ஓம் பவாந்யை நம:
ஓம் பாவநாகம்யாயை நம:
ஓம் பவாரண்ய குடாரிகாயை நம:
ஓம் பத்ரப்ரியாயை நம:
ஓம் பத்ரமூர்த்யை நம:
ஓம் பக்தஸௌபாக்ய தாயிந்யை நம:
ஓம் பக்திப்ரியாயை நம:
ஓம் பக்திகம்யாயை நம:
ஓம் பக்திவஶ்யாயை நம:
ஓம் பயாபஹாயை நம:
ஓம் ஶாம்பவ்யை நம:
ஓம் ஶாரதா ராத்யாயை நம:
ஓம் ஶர்வாண்யை நம:
ஓம் ஶர்மதாயிந்யை நம: 125
 

ஓம் ஶாங்கர்யை நம:
ஓம் ஸ்ரீகர்யை நம:
ஓம் ஸாத்வ்யை நம:
ஓம் ஶரச்சந்த்ர நிபாநநாயை நம:
ஓம் ஶாதோதர்யை நம:
ஓம் ஶாந்திமத்யை நம:
ஓம் நிராதாராயை நம:
ஓம் நிரஞ்ஜநாயை நம:
ஓம் நிர்லேபாயை நம:
ஓம் நிர்மலாயை நம:
ஓம் நித்யாயை நம:
ஓம் நிராகாராயை நம:
ஓம் நிராகுலாயை நம:
ஓம் நிர்குணாயை நம:
ஓம் நிஷ்களாயை நம:
ஓம் ஶாந்தாயைநம:
ஓம் நிஷ்காமாயை நம:
ஓம் நிருபப்லவாயை நம:
ஓம் நித்யமுக்தாயை நம:
ஓம் நிர்விகாராயை நம:
ஓம் நிஷ்ப்ரபஞ்சாயை நம:
ஓம் நிராஶ்ரயாயை நம:
ஓம் நித்யஶுத்தாயை நம:
ஓம் நித்யபுத்தாயை நம:
ஓம் நிரவத்யாயை நம: 150
 

ஓம் நிரந்தராயை நம:
ஓம் நிஷ்காரணாயை நம:
ஓம் நிஷ்களங்காயை நம:
ஓம் நிருபாதயே நம:
ஓம் நிரீஶ்வராயை நம:
ஓம் நீராகாயை நம:
ஓம் ராகமதந்யை நம:
ஓம் நிர்மதாயை நம:
ஓம் மத நாஶிந்யை நம:
ஓம் நிஶ்சிந்தாயை நம:
ஓம் நிரஹங்காராயை நம:
ஓம் நிர்மோஹாயை நம:
ஓம் மோஹநாஶிந்யை நம:
ஓம் நிர்மமாயை நம:
ஓம் மமதாஹந்த்ர்யை நம:
ஓம் நிஷ்பாபாயை நம:
ஓம் பாபநாஶிந்யை நம:
ஓம் நிஷ்க்ரோதாயை நம:
ஓம் க்ரோதஶமந்யை நம:
ஓம் நிர்லோபாயை நம:
ஓம் லோபநாஶிந்யை நம:
ஓம் நிஸ்ஸம்ஶயாயை நம:
ஓம் ஸம்ஶயக்ந்யை நம:
ஓம் நிர்பவாயை நம:
ஓம் பவநாஶிந்யை நம: 175
 

ஓம் நிர்விகல்பாயை நம:
ஓம் நிராபாதாயை நம:
ஓம் நிர்பேதாயை நம:
ஓம் பேத நாஶிந்யை நம:
ஓம் நிர் நாஶாயை நம:
ஓம் ம்ருத்யுமதந்யை நம:
ஓம் நிஷ்க்ரியாயை நம:
ஓம் நிஷ்பரிக்ரஹாயை நம:
ஓம் நிஸ்துலாயை நம:
ஓம் நீலசிகுராயை நம:
ஓம் நிரபாயாயை நம:
ஓம் நிரத்யயாயை நம:
ஓம் துர்லபாயை நம:
ஓம் துர்கமாயை நம:
ஓம் துர்காயை நம:
ஓம் து:க ஹந்த்ர்யை நம:
ஓம் ஸுகப்ரதாயை நம:
ஓம் துஷ்ட்தூராயை நம:
ஓம் துராசார ஶமந்யை நம:
ஓம் தோஷவர்ஜிதாயை நம:
ஓம் ஸர்வஜ்ஞாயை நம:
ஓம் ஸாந்த்ரகருணாயை நம:
ஓம் ஸமாநாதிக வர்ஜிதாயை நம:
ஓம் ஸர்வஶக்திமய்யை நம:
ஓம் ஸர்வமங்களாயை நம: 200
 

ஓம் ஸத்கதிப்ரதாயை நம:
ஓம் ஸர்வேஶ்வர்யை நம:
ஓம் ஸர்வமய்யை நம:
ஓம் ஸர்வமந்த்ர ஸ்வரூபிண்யை நம:
ஓம் ஸர்வயந்த்ராத்மிகாயை நம:
ஓம் ஸர்வதந்த்ர ரூபாயை நம:
ஓம் மநோந்மந்யை நம:
ஓம் மஹேஶ்வர்யை நம:
ஓம் மஹாதேவ்யை நம:
ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
ஓம் ம்ருடப்ரியாயை நம:
ஓம் மஹாரூபாயை நம:
ஓம் மஹாபூஜ்யாயை நம:
ஓம் மஹாபாதக நாஶிந்யை நம:
ஓம் மஹாமாயாயை நம:
ஓம் மஹாஸத்த்வாயை நம:
ஓம் மஹாஶக்த்யை நம:
ஓம் மஹாரத்யை நம:
ஓம் மஹாபோகாயை நம:
ஓம் மஹைஶ்வர்யாயை நம:
ஓம் மஹாவீர்யாயை நம:
ஓம் மஹாபலாயை நம:
ஓம் மஹாபுத்த்யை நம:
ஓம் மஹாஸித்த்யை நம:
ஓம் மஹாயோகீஶ்வரேஶ்வர்யை நம: 225
 

ஓம் மஹாதந்த்ராயை நம:
ஓம் மஹாமந்த்ராயை நம:
ஓம் மஹாயந்த்ராயை நம:
ஓம் மஹாஸநாயை நம:
ஓம் மஹாயாக க்ரமாராத்யாயை நம:
ஓம் மஹாபைரவ பூஜிதாயை நம:
ஓம் மஹேஶ்வர மஹாகல்ப மஹாதாண்டவ ஸாக்ஷிண்யை நம:
ஓம் மஹாகாமேஶ மஹிஷ்யை நம:
ஓம் மஹாத்ரிபுர ஸுந்தர்யை நம:
ஓம் சதுஷ்ஷஷ்ட்யுபசாராட்யாயை நம:
ஓம் சதுஷ்ஷஷ்டி கலாமய்யை நம:
ஓம் மஹாசதுஷ்ஷஷ்டிகோடி யோகிநீகண ஸேவிதாயை நம:
ஓம் மநுவித்யாயை நம:
ஓம் சந்த்ரவித்யாயை நம:
ஓம் சந்த்ரமண்டல மத்யகாயை நம:
ஓம் சாருரூபாயை நம:
ஓம் சாருஹாஸாயை நம:
ஓம் சாருசந்த்ர கலாதராயை நம:
ஓம் சராசர ஜகந்நாதாயை நம:
ஓம் சக்ரராஜ நிகேதநாயை நம:
ஓம் பார்வத்யை நம:
ஓம் பத்மநயநாயை நம:
ஓம் பத்மராக ஸமப்ரபாயை நம:
ஓம் பஞ்சப்ரேதா ஸநாஸீநாயை நம:
ஓம் பஞ்சப்ரஹ்ம ஸ்வரூபிண்யை நம: 250
 

ஓம் சிந்மய்யை நம:
ஓம் பரமாநந்தாயை நம:
ஓம் விஜ்ஞாநகந ரூபிண்யை நம:
ஓம் த்யாந த்யாத்ரு த்யேய ரூபாயை நம:
ஓம் தர்மாதர்ம விவர்ஜிதாயை நம:
ஓம் விஶ்வரூபாயை நம:
ஓம் ஜாகரிண்யை நம:
ஓம் ஸ்வபந்த்யை நம:
ஓம் தைஜஸாத்மிகாயை நம:
ஓம் ஸுப்தாயை நம:
ஓம் ப்ராஜ்ஞாத்மிகாயை நம:
ஓம் துர்யாயை நம:
ஓம் ஸர்வாவஸ்தா விவர்ஜிதாயை நம:
ஓம் ஸ்ருஷ்டிகர்த்ர்யை நம:
ஓம் ப்ரஹ்மரூபாயை நம:
ஓம் கோப்த்ர்யை நம:
ஓம் கோவிந்தரூபிண்யை நம:
ஓம் ஸம்ஹாரிண்யை நம:
ஓம் ருத்ர ரூபாயை நம:
ஓம் திரோதாந கர்யை நம:
ஓம் ஈஶ்வர்யை நம:
ஓம் ஸதாஶிவாயை நம:
ஓம் அநுக்ரஹதாயை நம:
ஓம் பஞ்சக்ருத்ய பராயணாயை நம:
ஓம் பாநுமண்டல மத்யஸ்தாயை நம: 275
 

ஓம் பைரவ்யை நம:
ஓம் பகமாலிந்யை நம:
ஓம் பத்மாஸநாயை நம:
ஓம் பகவத்யை நம:
ஓம் பத்மநாப ஸஹோதர்யை நம:
ஓம் உந்மேஷ நிமிஷோத்பந்ந விபந்நபுவநாவல்யை நம:
ஓம் ஸஹஸ்ரஶீர்ஷ வதநாயை நம:
ஓம் ஸஹஸ்ராக்ஷ்யை நம:
ஓம் ஸஹஸ்ரபதே நம:
ஓம் ஆப்ரஹ்மகீட ஜநந்யை நம:
ஓம் வர்ணாஶ்ரம விதாயிந்யை நம:
ஓம் நிஜாஜ்ஞாரூப நிகமாயை நம:
ஓம் புண்யாபுண்ய பலப்ரதாயை நம:
ஓம் ஶ்ருதிஸீமந்த ஸிந்தூரீக்ருத பாதாப்ஜ தூளிகாயை நம:
ஓம் ஸகலாகம ஸந்தோஹ ஶுக்தி ஸம்புட மௌக்திகாயை நம:
ஓம் புருஷார்த்த ப்ரதாயை ம:
ஓம் பூர்ணாயை நம:
ஓம் போகிந்யை நம:
ஓம் புவநேஶ்வர்யை நம:
ஓம் அம்பிகாயை நம:
ஓம் அநாதி நிதநாயை நம:
ஓம் ஹரிப்ரஹ்மேந்த்ர ஸேவிதாயை நம:   www shastrigal.net 
ஓம் நாராயண்யை நம:
ஓம் நாதரூபாயை நம:
ஓம் நாமரூப விவர்ஜிதாயை நம: 300
 ஓம் ஹ்ரீங்கார்யை நம:
ஓம் ஹ்ரீமத்யை நம:
ஓம் ஹ்ருத்யாயை நம:
ஓம் ஹேயோபாதேய வர்ஜிதாயை நம:
ஓம் ராஜராஜார்ச்சிதாயை நம:
ஓம் ராஜ்ஞ்யை நம:
ஓம் ரம்யாயை நம:
ஓம் ராஜீவ லோசநாயை நம:
ஓம் ரஞ்ஜந்யை நம:
ஓம் ரமண்யை நம:
ஓம் ரஸ்யாயை நம:
ஓம் ரணத்கிங்கிணி மேகலாயை நம:
ஓம் ரமாயை நம:
ஓம் ராகேந்து வதநாயை நம:
ஓம் ரதிரூபாயை நம:
ஓம் ரதிப்ரியாயை நம:
ஓம் ரக்ஷாகர்யை நம:
ஓம் ராக்ஷஸக்ந்யை நம:
ஓம் ராமாயை நம:
ஓம் ரமணலம்படாயை நம:
ஓம் காம்யாயை நம:
ஓம் காமகலா ரூபாயை நம:
ஓம் கதம்ப குஸுமப்ரியாயை நம:
ஓம் கல்யாண்யை நம:
ஓம் ஜகதீகந்தாயை நம: 325
 

ஓம் கருணாரஸ ஸாகராயை நம:
ஓம் கலாவத்யை நம:
ஓம் கலா லாபாயை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் காதம்பரீ ப்ரியாயை நம:
ஓம் வரதாயை நம:
ஓம் வாமநயநாயை நம:
ஓம் வாருணீமத விஹ்வலாயை நம:
ஓம் விஶ்வாதிகாயை நம:
ஓம் வேதவேத்யாயை நம:
ஓம் விந்த்யாசல நிவாஸிந்யை நம:
ஓம் விதாத்ர்யை நம:
ஓம் வேதஜநந்யை நம:
ஓம் விஷ்ணுமாயாயை நம:
ஓம் விலாஸிந்யை நம:
ஓம் க்ஷேத்ரஸ்வரூபாயை நம:
ஓம் க்ஷேத்ரேஶ்யை நம:
ஓம் க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞ பாலிந்யை நம:
ஓம் க்ஷயவ்ருத்தி விநிர்முகாயை நம:
ஓம் க்ஷேத்ரபால ஸமர்ச்சிதாயை நம:
ஓம் விஜயாயை நம:
ஓம் விமலாயை நம:
ஓம் வந்த்யாயை நம:
ஓம் வந்தாருஜந வத்ஸலாயை நம:
ஓம் வாக்வாதிந்யை நம: 350
 

ஓம் வாமகேஶ்யை நம:
ஓம் வஹ்நிமண்டல வாஸிந்யை நம:
ஓம் பக்திமத் கல்பலதிகாயை நம:
ஓம் பஶுபாஶ விமோசிந்யை நம:
ஓம் ஸம்ருதாஶேஷ பாஷண்டாயை நம:
ஓம் ஸதாசார ப்ரவர்திகாயை நம:
ஓம் தாபத்ரயாக்நி ஸந்தப்த ஸமாஹ்லாதந சந்த்ரிகாயை நம:
ஓம் தருண்யை நம:
ஓம் தாபஸாராத்யாயை நம:
ஓம் தநுமத்யாயை நம:
ஓம் தமோபஹாயை நம:
ஓம் சித்யை நம:
ஓம் தத்பதலக்ஷ்யார்த்தாயை நம:
ஓம் சிதேகரஸ ரூபிண்யை நம:
ஓம் ஸ்வாத்மாநந்த லவிபூத ப்ரஹ்மாத்யாநந்த ஸந்தத்யை நம:
ஓம் பராயை நம:
ஓம் ப்ரத்யக்சிதிரூபாயை நம:
ஓம் பஶ்யந்த்யை நம:
ஓம் பரதேவதாயை நம:
ஓம் மத்யமாயை நம:
ஓம் வைகரீரூபாயை நம:
ஓம் பக்தமாநஸ ஹம்ஸிகாயை நம:
ஓம் காமேஶ்வர ப்ராணாநாட்யை நம:
ஓம் க்ருதஜ்ஞாயை நம:
ஓம் காமபூஜிதாயை நம: 375
 

ஓம் ஶ்ருங்கார ரஸ ஸம்பூர்ணாயை நம:
ஓம் ஜயாயை நம:
ஓம் ஜாலந்த்தரஸ்திதாயை நம:
ஓம் ஓட்யாணபீட நிலயாயை நம:
ஓம் பிந்துமண்டல வாஸிந்யை நம:
ஓம் ரஹோயாக க்ரமாராத்யாயை நம:
ஓம் ரஹஸ்தர்ப்பண தர்ப்பிதாயை நம:
ஓம் ஸத்ய: ப்ரஸாதிந்யை நம:
ஓம் விஶ்வஸாக்ஷிண்யை நம:
ஓம் ஸாக்ஷிவர்ஜிதாயை நம:
ஓம் ஷடங்கதேவதாயுக்தாயை நம:
ஓம் ஷாட்குண்ய பரிபூரிதாயை நம:
ஓம் நித்யக்லிந்நாயை நம:
ஓம் நிருபமாயை நம:
ஓம் நிர்வாணஸுக தாயிந்யை நம:
ஓம் நித்யாஷோடஶிகாரூபாயை நம:
ஓம் ஸ்ரீகண்டார்த்த ஶரீரிண்யை நம:
ஓம் ப்ரபாவத்யை நம:
ஓம் ப்ரபாரூபாயை நம:
ஓம் ப்ரஸித்தாயை நம:
ஓம் பரமேஶ்வர்யை நம:
ஓம் மூலப்ரக்ருத்யை நம:
ஓம் அவ்யக்தாயை நம:
ஓம் வ்யக்தாவ்யக்த ஸ்வரூபிண்யை நம:
ஓம் வ்யாபிந்யை நம: 400
 

ஓம் விவிதாகாராயை நம:
ஓம் வித்யாவித்யா ஸ்வரூபிண்யை நம:
ஓம் மஹாகாமேஶநயந குமுதாஹ்லாதகௌமுத்யை நம:
ஓம் பக்தஹார்த தமோபேத பாநுமத்பாநு ஸந்தத்யை நம:
ஓம் ஶிவதூத்யை நம:
ஓம் ஶிவாராத்யாயை நம:
ஓம் ஶிவமூர்த்யை நம:
ஓம் ஶிவங்கர்யை நம:
ஓம் ஶிவப்ரியாயை நம:
ஓம் ஶிவபராயை நம:
ஓம் ஶிஷ்டேஷ்டாயை நம:
ஓம் ஶிஷ்டபூஜிதாயை நம:
ஓம் அப்ரமேயாயை நம:
ஓம் ஸ்வப்ரகாஶாயை நம:
ஓம் மநோவாசாம கோசராயை நம:
ஓம் சிச்சக்த்யை நம:
ஓம் சேதநாரூபாயை நம:
ஓம் ஜடஶக்த்யை நம:
ஓம் ஜடாத்மிகாயை நம:
ஓம் காயத்ர்யை நம:
ஓம் வ்யாஹ்ருத்யை நம:
ஓம் ஸந்த்யாயை நம:
ஓம் த்விஜப்ருந்த நிஷேவிதாயை நம:
ஓம் தத்த்வாஸநாயை நம:
ஓம் தஸ்மை நம: 425
 

ஓம் துப்யம் நம:
ஓம் அய்யை நம:
ஓம் பஞ்சகோஶாந்தர ஸ்திதாயை நம:
ஓம் நிஸ்ஸீம மஹிம்நே நம:
ஓம் நித்யயௌவநாயை நம:
ஓம் மதஶாலிந்யை நம:
ஓம் மதகூர்ணீத ரக்தாக்ஷ்யை நம:
ஓம் மதபாடல கண்டபுவே நம:
ஓம் சந்தநத்ரவதிக்தாங்க்யை நம:
ஓம் சாம்பேயகுஸும ப்ரியாயை நம:
ஓம் குஶலாயை நம:
ஓம் கோமலாகாராயை நம:
ஓம் குருகுல்லாயை நம:
ஓம் குலேஶ்வர்யை நம:
ஓம் குலகுண்டாலயாயை நம:
ஓம் கௌலமார்கதத்பர ஸேவிதாயை நம:
ஓம் குமாரகணநாதாம்பாயை நம:
ஓம் துஷ்ட்யை நம:
ஓம் புஷ்ட்யை நம:
ஓம் மத்யை நம:
ஓம் த்ருத்யை நம:
ஓம் ஶாந்த்யை நம:
ஓம் ஸ்வஸ்திமத்யை நம:
ஓம் காந்த்யை நம:
ஓம் நந்தின்யை நம: 450
 

ஓம் விக்ந நாஶிந்யை நம:
ஓம் தேஜோவத்யை நம:
ஓம் த்ரிநயநாயை நம:
ஓம் லோலாக்ஷீ காமரூபிண்யை நம:
ஓம் மாலிந்யை நம:
ஓம் ஹம்ஸிந்யை நம:
ஓம் மாத்ரே நம:
ஓம் மலயாசல வாஸிந்யை நம:
ஓம் ஸுமுக்யை நம:
ஓம் நளிந்யை நம:
ஓம் ஸுப்ருவே நம:
ஓம் ஶோபநாயை நம:
ஓம் ஸுரநாயிகாயை நம:
ஓம் காலகண்ட்யை நம:
ஓம் காந்திமத்யை நம:
ஓம் க்ஷோபிண்யை நம:
ஓம் ஸூக்ஷ்மரூபிண்யை நம:
ஓம் வஜ்ரேஶ்வர்யை நம:
ஓம் வாமதேவ்யை நம:
ஓம் வயோ(அ)வஸ்தா விவர்ஜிதாயை நம:
ஓம் ஸித்தேஶ்வர்யை நம:
ஓம் ஸித்தவித்யாயை நம:
ஓம் ஸித்தமாத்ரே நம:
ஓம் யஶஸ்விந்யை நம:
ஓம் விஶுத்தசக்ர நிலயாயை நம: 475
 ஓம் ஆரக்தவர்ணாயை நம:
ஓம் த்ரிலோசநாயை நம:
ஓம் கட்வாங்காதி ப்ரஹரணாயை நம:
ஓம் வதநைக ஸமந்விதாயை நம:
ஓம் பாயஸாந்ந ப்ரியாயை நம:
ஓம் த்வக்ஸ்தாயை நம:
ஓம் பஶுலோக பயங்கர்யை நம:
ஓம் அம்ருதாதி மஹாஶக்தி ஸம்வ்ருதாயை நம:
ஓம் டாகிநீஶ்வர்யை நம:
ஓம் அநாஹதாப்ஜ நிலயாயை நம:
ஓம் ஶ்யாமாபாயை நம:
ஓம் வதநத்வயாயை நம:
ஓம் தம்ஷ்ட்ரோஜ்ஜ்வலாயை நம:
ஓம் அக்ஷமாலாதிதராயை நம:
ஓம் ருதிரஸம்ஸ்திதாயை நம:
ஓம் காலராத்ர்யாதி ஶக்த்யௌக வ்ருதாயை நம:
ஓம் ஸ்நிக்தௌதந ப்ரியாயை நம:
ஓம் மஹாவீரேந்த்ர வரதாயை நம:
ஓம் ராகிண்யம்பா ஸ்வரூபிண்யை நம:
ஓம் மணிபூராப்ஜ நிலயாயை நம:
ஓம் வதநத்ரய ஸம்யுதாயை நம:
ஓம் வஜ்ராதிகாயுதோபேதாயை நம:
ஓம் டாமர்யாதிபிராவ்ருதாயை நம:
ஓம் ரக்தவர்ணாயை நம:
ஓம் மாம்ஸநிஷ்டாயை நம: 500
 

ஓம் குடாந்நப்ரீதமாநஸாயை நம:
ஓம் ஸமஸ்தபக்தஸுகதாயை நம:
ஓம் லாகிந்யம்பா ஸ்வரூபிண்யை நம:
ஓம் ஸ்வாதிஷ்டாநாம் புஜகதாயை நம:
ஓம் சதுர்வக்த்ர மநோஹராயை நம:
ஓம் ஶூலாத்யாயுத ஸம்பந்நாயை நம:
ஓம் பீதவர்ணாயை நம:
ஓம் அதிகர்விதாயை நம:
ஓம் மேதோநிஷ்டாயை நம:
ஓம் மதுப்ரீதாயை நம:
ஓம் வந்திந்யாதி ஸமந்விதாயை நம:
ஓம் தத்யந்நாஸக்த ஹ்ருதக்யை நம:
ஓம் காகிநீ ரூபதாரிண்யை நம:
ஓம் மூலாதாராம்புஜாரூடாயை நம:
ஓம் பஞ்சவக்த்ராயை நம:
ஓம் அஸ்திஸம்ஸ்திதாயை நம:
ஓம் அங்குஶாதி ப்ரஹரணாயை நம:
ஓம் வரதாதி நிஷேவிதாயை நம:
ஓம் முத்கௌதநாஸக்த சித்தாயை நம:
ஓம் ஸாகிந்யம்பா ஸ்வரூபிண்யை நம:
ஓம் ஆஜ்ஞாசக்ர நிலயாயை நம:
ஓம் ஶுக்லவர்ணாயை நம:
ஓம் ஷடாநநாயை நம:
ஓம் மஜ்ஞாஸம்ஸ்தாயை நம:
ஓம் ஹம்ஸவதீ முக்யஶக்தி ஸமந்விதாயை நம: 525
 

ஓம் ஹரித்ராந்நைக ரஸிகாயை நம:
ஓம் ஹாகிநீரூபதாரிண்யை நம:
ஓம் ஸஹஸ்ரதள பத்மஸ்தாயை நம:
ஓம் ஸர்வவர்ணோப ஶோபிதாயை நம:
ஓம் ஸர்வாயுத தராயை நம:
ஓம் ஶுக்லஸம்ஸ்திதாயை நம:
ஓம் ஸர்வதோமுக்யை நம:
ஓம் ஸர்வௌதந ப்ரீதசித்தாயை நம:
ஓம் யாகிந்யம்பா ஸ்வரூபிண்யை நம:
ஓம் ஸ்வாஹாயை நம:
ஓம் ஸ்வதாயை நம:
ஓம் அமத்யை நம:
ஓம் மேதாயை நம:
ஓம் ஶ்ருத்யை நம:
ஓம் ஸ்ம்ருத்யை நம:
ஓம் அநுத்தமாயை நம:
ஓம் புண்யகீர்த்யை நம:
ஓம் புண்யலப்யாயை நம:
ஓம் புண்யஶ்ரவண கீர்த்தநாயை நம:
ஓம் புலோமஜார்ச்சிதாயை நம:
ஓம் பந்தமோசந்யை நம:
ஓம் பர்பராலகாயை நம:
ஓம் விமர்ஶரூபிண்யை நம:
ஓம் வித்யாயை நம:
ஓம் வியதாதிஜகத்ப்ரஸவே நம: 550
 

ஓம் ஸர்வவ்யாதி ப்ரஶமந்யை நம:
ஓம் ஸர்வம்ருத்யு நிவாரிண்யை நம:
ஓம் அக்ரகண்யாயை நம:
ஓம் அசிந்த்யரூபாயை நம:
ஓம் கலிகல்மஷ நாஶிந்யை நம:
ஓம் காத்யாயந்யை நம:
ஓம் காலஹந்த்ர்யை நம:
ஓம் கமலாக்ஷ நிஷேவிதாயை நம:
ஓம் தாம்பூலபூரிதமுக்யை நம:
ஓம் தாடிமீகுஸுமப்ரபாயை நம:
ஓம் ம்ருகாக்ஷ்யை நம:
ஓம் மோஹிந்யை நம:
ஓம் முக்யாயை நம:
ஓம் ம்ருடாந்யை நம:
ஓம் மித்ர ரூபிண்யை நம:
ஓம் நித்யத்ருப்தாயை நம:
ஓம் பக்தநிதயே நம:
ஓம் நியந்த்ர்யை நம:
ஓம் நிகிலேஶ்வர்யை நம:
ஓம் மைத்ர்யாதி வாஸநா லப்யாயை நம:
ஓம் மஹாப்ரளய ஸாக்ஷிண்யை நம:
ஓம் பராஶக்த்யை நம:
ஓம் பராநிஷ்டாயை நம:
ஓம் ப்ரஜ்ஞாநகந ரூபிண்யை நம:
ஓம் மாத்வீபாநாலஸாயை நம: 575
ஓம் மத்தாயை நம:
ஓம் மாத்ருகாவர்ண ரூபிண்யை நம:
ஓம் மஹாகைலாஸ நிலயாயை நம:
ஓம் ம்ருணாள ம்ருதுதோர்லதாயை நம:
ஓம் மஹநீயாயை நம:
ஓம் தயாமூர்த்யை நம:
ஓம் மஹாஸாம்ராஜய ஶாலிந்யை நம:
ஓம் ஆத்மவித்யாயை நம:
ஓம் மஹாவித்யாயை நம:
ஓம் ஸ்ரீவித்யாயை நம:
ஓம் காமஸேவிதாயை நம:
ஓம் ஸ்ரீஷோடஶாக்ஷரீ வித்யாயை நம:
ஓம் த்ரிகூடாயை நம:
ஓம் காமகோடிகாயை நம:
ஓம் கடாக்ஷகிங்கரீபூத கமலாகோடிஸேவிதாயை நம:
ஓம் ஶிரஸ்ஸ்திதாயை நம:
ஓம் சந்த்ரநிபாயை நம:
ஓம் பாலஸ்தாயை நம:
ஓம் இந்த்ரதநு:ப்ரபாயை நம:
ஓம் ஹ்ருதயஸ்தாயை நம:
ஓம் ரவிப்ரக்யாயை நம:
ஓம் த்ரிகோணாந்தர தீபிகாயை நம:
ஓம் தாக்ஷாயண்யை நம:
ஓம் தைத்யஹந்த்ர்யை நம:
ஓம் தக்ஷயஜ்ஞ விநாஶிந்யை நம: 600
 

ஓம் தராந்தோளித தீர்காக்ஷ்யை நம:
ஓம் தரஹாஸோஜ் ஜ்வலந்முக்யை நம:
ஓம் குருமூர்த்யை நம:
ஓம் குணநிதேய நம:
ஓம் கோமாத்ரே நம:
ஓம் குஹஜந்மபுவே நம:
ஓம் தேவேஶ்யை நம:
ஓம் தண்டநீதிஸ்தாயை நம:
ஓம் தஹராகாஶ ரூபிண்யை நம:
ஓம் ப்ரதிபந் முக்யராகாந்த திதிமண்டல பூஜிதாயை நம:
ஓம் கலாத்மிகாயை நம:
ஓம் கலாநாதாயை நம:
ஓம் காவ்யாலாப விநோதிந்யை நம:
ஓம் ஸசாமர ரமாவாணீ ஸவ்யதக்ஷிண ஸேவிதாயை நம:
ஓம் ஆதிஶக்த்யை நம:
ஓம் அமேயாயை நம:
ஓம் ஆத்மநே நம:
ஓம் பரமாயை நம:
ஓம் பாவநாக்ருதயே நம:
ஓம் அநேக கோடிப்ரஹ்மாண்ட ஜநந்யை நம:  www.shastrigal.net 
ஓம் திவ்யவிக்ரஹாயை நம:
ஓம் க்லீங்கார்யை நம:
ஓம் கேவலாயை நம:
ஓம் குஹ்யாயை நம:
ஓம் கைவல்யபத தாயிந்யை நம: 625
 

ஓம் த்ரிபுராயை நம:
ஓம் த்ரிஜகத்வந்த்யாயை நம:
ஓம் த்ரிமூர்த்யை நம:
ஓம் த்ரிதஶேஶ்வர்யை நம:
ஓம் த்ர்யக்ஷர்யை நம:
ஓம் திவ்யகந்தாட்யாயை நம:
ஓம் ஸிந்தூரதில காஞ்சிதாயை நம:
ஓம் உமாயை நம:
ஓம் ஶைலேந்த்ர தநயாயை நம:
ஓம் கௌர்யை நம:
ஓம் கந்தர்வ ஸேவிதாயை நம:
ஓம் விஶ்வகர்பாயை நம:
ஓம் ஸ்வர்ணகர்பாயை நம:
ஓம் வரதாயை நம:
ஓம் வாகதீஶ்வர்யை நம:
ஓம் த்யாநகம்யாயை நம:
ஓம் அபரிச்சேதாயை நம:
ஓம் ஜ்ஞாநதாயை நம:
ஓம் ஜ்ஞாநவிக்ரஹாயை நம:
ஓம் ஸர்வவேதாந்த ஸம்வேத்யாயை நம:
ஓம் ஸத்யாநந்த ஸ்வரூபிண்யை நம:
ஓம் லோபாமுத்ரார்ச்சிதாயை நம:
ஓம் லீலாக்லுப்த ப்ரஹ்மாண்ட மண்டலாயை நம:
ஓம் அத்ருஶ்யாயை நம:
ஓம் த்ருஶ்யரஹிதாயை நம: 650
 

ஓம் விஜ்ஞாத்ர்யை நம:
ஓம் வேத்யவர்ஜிதாயை நம:
ஓம் யோகிந்யை நம:
ஓம் யோகதாயை நம:
ஓம் யோக்யாயை நம:
ஓம் யோகாநந்தாயை நம:
ஓம் யுகந்தராயை நம:
ஓம் இச்சாஶக்தி ஜ்ஞாநஶக்தி க்ரியாஶக்தி ஸ்வரூபிண்யை நம:
ஓம் ஸர்வாதாராயை நம:
ஓம் ஸுப்ரதிஷ்டாயை நம:
ஓம் ஸதஸத்ரூப தாரிண்யை நம:
ஓம் அஷ்டமூர்த்யை நம:
ஓம் அஜாஜைத்ர்யை நம:
ஓம் லோகயாத்ரா விதாயிந்யை நம:
ஓம் ஏகாகிந்யை நம:
ஓம் பூமரூபாயை நம:
ஓம் நிர்த்வைதாயை நம:
ஓம் த்வைதவர்ஜிதாயை நம:
ஓம் அந்நதாயை நம:
ஓம் வஸுதாயை நம:
ஓம் வ்ருத்தாயை நம:
ஓம் ப்ரஹ்மாத்மைக்ய ஸ்வரூபிண்யை நம:  HOMAM & POOJA SERVICE 
ஓம் ப்ருஹத்யை நம:
ஓம் ப்ராஹ்மண்யை நம:
ஓம் ப்ராஹ்ம்யை நம: 675
 

ஓம் ப்ரஹ்மாநந்தாயை நம:
ஓம் பலிப்ரியாயை நம:
ஓம் பாஷாரூபாயை நம:
ஓம் ப்ருஹத்ஸேநாயை நம:
ஓம் பாவாபாவ விவர்ஜிதாயை நம:
ஓம் ஸுகாராத்யாயை நம:
ஓம் ஶுபகர்யை நம:
ஓம் ஶோபநா ஸுலபாகத்யை நம:
ஓம் ராஜராஜேஶ்வர்யை நம:
ஓம் ராஜ்யதாயிந்யை நம:
ஓம் ராஜ்ய வல்லபாயை நம:
ஓம் ராஜத்க்ருபாயை நம:
ஓம் ராஜபீடநிவேஶித நிஜாஶ்ரிதாயை நம:
ஓம் ராஜ்யலக்ஷ்ம்யை நம:
ஓம் கோஶநாதாயை நம:
ஓம் சதுரங்கபலேஶ்வர்யை நம:
ஓம் ஸாம்ராஜ்யதாயிந்யை நம:
ஓம் ஸத்யஸந்தாயை நம:
ஓம் ஸாகரமேகலாயை நம:
ஓம் தீக்ஷிதாயை நம:
ஓம் தைத்யஶமந்யை நம:
ஓம் ஸர்வலோகவஶங்கர்யை நம:
ஓம் ஸர்வார்த்த தாத்ர்யை நம:
ஓம் ஸாவித்ர்யை நம:
ஓம் ஸச்சிதாநந்த ரூபிண்யை நம: 700
 

ஓம் தேஶகாலா பரிச்சிந்நாயை நம:
ஓம் ஸர்வகாயை நம:
ஓம் ஸர்வ மோஹிந்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் ஶாஸ்த்ரமய்யை நம:
ஓம் குஹாம்பாயை நம:
ஓம் குஹ்யரூபிண்யை நம:
ஓம் ஸர்வோபாதி விநிர்முக்தாயை நம:
ஓம் ஸதாஶிவ பதிவ்ரதாயை நம:
ஓம் ஸம்ப்ரதாயேஶ்வர்யை நம:
ஓம் ஸாதுநே நம:
ஓம் யை நம:
ஓம் குருமண்டல ரூபிண்யை நம:
ஓம் குலோத்தீர்ணாயை நம:
ஓம் பகாராத்யாயை நம:
ஓம் மாயாயை நம:
ஓம் மதுமத்யை நம:
ஓம் மஹ்யை நம:
ஓம் கணாம்பாயை நம:
ஓம் குஹ்யகாராத்யாயை நம:
ஓம் கோமளாங்க்யை நம:
ஓம் குருப்ரியாயை நம:
ஓம் ஸ்வதந்த்ராயை நம:
ஓம் ஸ்வதந்த்ரேஶ்யை நம:
ஓம் தக்ஷிணாமூர்த்தி ரூபிண்யை நம: 725
 

ஓம் ஸநகாதி ஸமாராத்யாயை நம:
ஓம் ஶிவஜ்ஞாந ப்ரதாயிந்யை நம:
ஓம் சித்கலாயை நம:
ஓம் ஆநந்தகலிகாயை நம:
ஓம் ப்ரேமரூபாயை நம:
ஓம் ப்ரியங்கர்யை நம:
ஓம் நாமபாராயண ப்ரீதாயை நம:
ஓம் நந்திவித்யாயை நம:
ஓம் நடேஶ்வர்யை நம:
ஓம் மித்யாஜக கதிஷ்டாகாயை நம:
ஓம் முக்திதாயை நம:
ஓம் முக்திரூபிண்யை நம:
ஓம் லாஸ்யப்ரியாயை நம:
ஓம் லயகர்யை நம:
ஓம் லஜ்ஜாயை நம:
ஓம் ரம்பாதி வந்திதாயை நம:
ஓம் பவதாஸுதா வ்ருஷ்ட்யை நம:
ஓம் பாபாரண்ய தவாநலாயை நம:
ஓம் தௌர்பாக்யதூல வரதாயை நம:
ஓம் ஜராத்வாந்தர விப்ரபாயை நம:
ஓம் பாக்யாப்தி சந்த்ரிகாயை நம:
ஓம் பக்தசித்தகேகி கநாகநாயை நம:
ஓம் ரோகபர்வத தம்போலயே நம:
ஓம் ம்ருத்யுதாரு குடாரிகாயை நம:
ஓம் மஹேச்வர்யை நம: 750
ஓம் மஹாகாள்யை நம:
ஓம் மஹாக்ராஸாயை நம:
ஓம் மஹாஶநாயை நம:
ஓம் அபர்ணாயை நம:
ஓம் சண்டிகாயை நம:
ஓம் சண்டமுண்டாஸுர நிஷூதிந்யை நம:
ஓம் க்ஷராக்ஷராத்மிகாயை நம:
ஓம் ஸர்வலோகேஶ்யை நம:
ஓம் விஶ்வதாரிண்யை நம:
ஓம் த்ரிவர்கதாத்ர்யை நம:
ஓம் ஸுபகாயை நம:
ஓம் த்ர்யம்பகாயை நம:
ஓம் த்ரிகுணாத்மிகாயை நம:
ஓம் ஸ்வர்காபவர்கதாயை நம:
ஓம் ஶுத்தாயை நம:
ஓம் ஜபாபுஷ்ப நிபாக்ருதயே நம:
ஓம் ஓஜோவத்யை நம:
ஓம் த்யுதிதராயை நம:
ஓம் யஜ்ஞரூபாயை நம:
ஓம் ப்ரியவ்ரதாயை நம:
ஓம் துராராத்யாயை நம:
ஓம் துராதர்ஷாயை நம:
ஓம் பாடலீகுஸும ப்ரியாயை நம:
ஓம் மஹத்யை நம:
ஓம் மேருநிலயாயை நம: 775
 

ஓம் மந்தாரகுஸும ப்ரியாயை நம:
ஓம் வீராராத்யாயை நம:
ஓம் விராட் ரூபாயை நம:
ஓம் விரஜஸே நம:
ஓம் விஶ்வதோமுக்யை நம:
ஓம் பரத்யக்ரூபாயை நம:
ஓம் பராகாஶாயை நம:
ஓம் ப்ராணதாயை நம:
ஓம் ப்ராணரூபிண்யை நம:
ஓம் மார்த்தாண்ட பைரவாராத்யாயை நம:
ஓம் மந்த்ரிணீ ந்யஸ்தராஜ்யதுரே நம:
ஓம் த்ரிபுரேஶ்யை நம:
ஓம் ஜயத்ஸேநாயை நம:
ஓம் நிஸ்த்ரைகுண்யாயை நம:
ஓம் பராபராயை நம:
ஓம் ஸத்யஜ்ஞாநந்தரூபாயை நம:
ஓம் ஸாமரஸ்ய பராயணாயை நம:
ஓம் கபர்திந்யை நம:
ஓம் கலாமாலாயை நம:
ஓம் காமதுகே நம:
ஓம் காமரூபிண்யை நம:
ஓம் கலாநிதயே நம:
ஓம் காவ்யகலாயை நம:
ஓம் ரஸஜ்ஞாயை நம:
ஓம் ரஸஶேவதயே நம: 800
 

ஓம் புஷ்டாயை நம:
ஓம் புராதநாயை நம:
ஓம் பூஜ்யாயை நம:
ஓம் புஷ்கராயை நம:
ஓம் புஷ்கரேக்ஷணாயை நம:
ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே நம:
ஓம் பரஸ்மை தாம்நே நம:
ஓம் ப்ரமாணவே நம:
ஓம் பராத்பராயை நம:
ஓம் பாஶஹஸ்தாயை நம:
ஓம் பாஶஹந்த்ர்யை நம:
ஓம் பரமந்த்ர விபேதிந்யை நம:
ஓம் மூர்த்தாயை நம:
ஓம் அமூர்த்தாயை நம:
ஓம் நித்யத்ருப்தாயை நம:
ஓம் முநிமாநஸ ஹம்ஸிகாயை நம:
ஓம் ஸத்யவ்ரதாயை நம:
ஓம் ஸத்யரூபாயை நம:
ஓம் ஸர்வாந்தர்யாமிந்யை நம:
ஓம் ஸத்யை நம:
ஓம் ப்ரஹ்மாண்யை நம:
ஓம் ப்ரஹ்மணே நம:
ஓம் ஜநந்யை நம:
ஓம் பஹுரூபாயை நம:
ஓம் புதார்ச்சிதாயை நம: 825
 

ஓம் ப்ரஸவித்ர்யை நம:
ஓம் ப்ரசண்டாயை நம:
ஓம் ஆஜ்ஞாயை நம:
ஓம் ப்ரதிஷ்டாயை நம:
ஓம் ப்ரகடாக்ருதயே நம:
ஓம் ப்ராணேஶ்வர்யை நம:
ஓம் ப்ராணதாத்ர்யை நம:
ஓம் பஞ்சாஶத்பீட ரூபிண்யை நம:
ஓம் விஶ்ருங்கலாயை நம:
ஓம் விவிக்தஸ்தாயை நம:
ஓம் வீரமாத்ரே நம:
ஓம் வியத்ப்ரஸவே நம:
ஓம் முகுந்தாயை நம:
ஓம் முக்திநிலயாயை நம:
ஓம் மூலவிக்ரஹரூபிண்யை நம:
ஓம் பாவஜ்ஞாயை நம:
ஓம் பவரோகக்ந்யை நம:
ஓம் பவசக்ரப்ரவர்த்திந்யை நம:
ஓம் சந்தஸ்ஸாராயை நம:
ஓம் ஶாஸ்த்ரஸாராயை நம:
ஓம் மந்த்ரஸாராயை நம:
ஓம் தலோதர்யை நம:
ஓம் உதாரகீர்த்தயே நம:
ஓம் உத்தாமவைபவாயை நம:
ஓம் வர்ணரூபிண்யை நம: 850

ஓம் ஜந்மம்ருத்யு ஜராதப்த ஜநவிஶ்ராந்தி தாயிந்யை நம:
ஓம் ஸர்வோபநிஷ துத்குஷ்டாயை நம:
ஓம் ஸாந்த்தீத கலாத்மிகாயை நம:
ஓம் கம்பீராயை நம:
ஓம் ககநாந்தஸ்தாயை நம:
ஓம் கர்விதாயை நம:
ஓம் காநலோலுபாயை நம:
ஓம் கல்பநா ரஹிதாயை நம:
ஓம் காஷ்டாயை நம:
ஓம் அகாந்தாயை நம:
ஓம் காந்தார்த்த விக்ரஹாயை நம:
ஓம் கார்யகாரன நிர்முக்தாயை நம:
ஓம் காமகேளிதரங்கிதாயை நம:
ஓம் கநத்கநக தாடங்காயை நம:
ஓம் லீலாவிக்ரஹதாரிண்யை நம:
ஓம் அஜாயை நம:
ஓம் க்ஷயவிநிர்முக்தாயை நம:
ஓம் முக்தாயை நம:
ஓம் க்ஷிப்ரப்ரஸாதிந்யை நம:
ஓம் அந்தர்முக ஸமாராத்யாயை நம:
ஓம் பஹிர்முக ஸுதுர்லபாயை நம:
ஓம் த்ரய்யை நம:
ஓம் த்ரிவர்கநிலயாயை நம:
ஓம் த்ரிஸ்தாயை நம:
ஓம் த்ரிபுரமாலிந்யை நம: 875
 

ஓம் நிராமயாயை நம:
ஓம் நிராலம்பாயை நம:
ஓம் ஸ்வாத்மா ரமாயை நம:
ஓம் ஸுதாஸ்ருத்யை நம:
ஓம் ஸம்ஸாரபங்க நிர்மக்ந ஸமுத்தரண பண்டிதாயை நம:
ஓம் யஜ்ஞப்ரியாயை நம:
ஓம் யஜ்ஞகர்த்ர்யை நம:
ஓம் யஜமாந ஸ்வரூபிண்யை நம:
ஓம் தர்மாதாராயை நம:
ஓம் தநாத்யக்ஷாயை நம:
ஓம் தநதாந விவர்த்திந்யை நம:
ஓம் விப்ரப்ரியாயை நம:
ஓம் விப்ரரூபாயை நம:
ஓம் விஶ்வப்ரமண காரிண்யை நம:
ஓம் விஶ்வக்ராஸாயை நம:
ஓம் வித்ருமாபாயை நம:
ஓம் வைஷ்ணவ்யை நம:
ஓம் விஷ்ணுரூபிண்யை நம:
ஓம் அயோநயே நம:
ஓம் யோநிநிலயாயை நம:
ஓம் கூடஸ்தாயை நம:
ஓம் குலரூபிண்யை நம:
ஓம் வீரகோஷ்டீ ப்ரியாயை நம:
ஓம் வீராயை நம:
ஓம் நைஷ்கர்ம்யாயை நம: 900
 

ஓம் நாதரூபிண்யை நம:
ஓம் விஜ்ஞாத கலநாயை நம:
ஓம் கல்யாயை நம:
ஓம் விதக்தாயை நம:
ஓம் பைந்தவாஸநாயை நம:
ஓம் தத்வாதிகாயை நம:
ஓம் தத்வமய்யை நம:
ஓம் தத்த்வமர்த்த ஸ்வரூபிண்யை நம:
ஓம் ஸாமகாநாப்ரியாயை நம:
ஓம் ஸௌம்யாயை நம:
ஓம் ஸதாஶிவகுடும்பிந்யை நம:
ஓம் ஸவ்யாபஸவ்ய மார்கஸ்தாயை நம:
ஓம் ஸர்வாபத் விநிவாரிண்யை நம:
ஓம் ஸ்வஸ்தாயை நம:
ஓம் ஸ்வபாவ மதுராயை நம:
ஓம் தீராயை நம:
ஓம் தீரஸமர்ச்சிதாயை நம:
ஓம் சைதந்யார்க்ய ஸமாராத்யாயை நம:
ஓம் சைதந்யகுஸும ப்ரியாயை நம:
ஓம் ஸதோதிதாயை நம:
ஓம் ஸதாதுஷ்டாயை நம:
ஓம் தருணாதித்ய பாடலாயை நம:
ஓம் தக்ஷிணா தக்ஷிணாராத்தாயை நம:
ஓம் தரஸ்மேர முகாம்புஜாயை நம:
ஓம் கௌலிநீகேவலாயை நம: 925

ஓம் அநர்க்ய கைவல்ய பததாயிந்யை நம:
ஓம் ஸ்தோத்ரப்ரியாயை நம:
ஓம் ஸ்துதிமத்யை நம:
ஓம் ஶ்ருதிஸம்ஸ்துத வைபவாயை நம:
ஓம் மநஸ்விந்யை நம:
ஓம் மாநவத்யை நம:
ஓம் மஹேஶ்யை நம:
ஓம் மங்களாக்ருத்யை நம:
ஓம் விஶ்வமாத்ரே நம:
ஓம் ஜகத்தாத்ர்யை நம:
ஓம் விஶாலாக்ஷ்யை நம:
ஓம் விராகிண்யை நம:
ஓம் ப்ரகல்பாயை நம:
ஓம் பரமோதாராயை நம:
ஓம் பராமோதாயை நம:
ஓம் மநோமய்யை நம:
ஓம் வ்யாமகேஶ்யை நம:
ஓம் விமாநஸ்தாயை நம:
ஓம் வஜ்ரிண்யை நம:
ஓம் வாமகேஶ்வர்யை நம:
ஓம் பஞ்சயஜ்ஞ ப்ரியாயை நம:
ஓம் பஞ்சப்ரேதமஞ்சாதி ஶாயிந்யை நம:
ஓம் பஞ்சம்யை நம:
ஓம் பஞ்சபூதேஶ்யை நம:
ஓம் பஞ்சஸங்க்யோபசாரிண்யை நம: 950
 

ஓம் ஶாஶ்வத்யை நம:
ஓம் ஶாஶ்வதைஶ்வர்யாயை நம:
ஓம் ஶர்மதாயை நம:
ஓம் ஶம்புமோஹிந்யை நம:
ஓம் தராயை நம:
ஓம் தராஸுதாயை நம:
ஓம் தந்யாயை நம:
ஓம் தர்மிண்யை நம:
ஓம் தர்மவர்த்திந்யை நம:
ஓம் லோகாதீதாயை நம:
ஓம் குணாதீதாயை நம:
ஓம் ஸர்வாதீதாயை நம:
ஓம் ஶமாத்மிகாயை நம:
ஓம் பந்தூககுஸும ப்ரக்யாயை நம:
ஓம் பாலாயை நம:
ஓம் லீலாவிநோதிந்யை நம:
ஓம் ஸுமங்கல்யை நம:
ஓம் ஸுககர்யை நம:
ஓம் ஸுவேஷாட்யாயை நம:
ஓம் ஸுவாஸிந்யை நம:
ஓம் ஸுவாஸிந்யர்ச்சந ப்ரீதாயை நம:
ஓம் ஆஶோபநாயை நம:
ஓம் ஶுத்தமாநஸாயை நம:
ஓம் பிந்துதர்ப்பண ஸந்துஷ்டாயை நம:
ஓம் பூர்வஜாயை நம: 975
 HOMAM & POOJA SERVICE 

ஓம் த்ரிபுராம்பிகாயை நம:
ஓம் தஶமுத்ரா ஸமாராத்யாயை நம:
ஓம் த்ரிபுரா ஸ்ரீவஶங்கர்யை நம:
ஓம் ஜ்ஞாநமுத்ராயை நம:
ஓம் ஜ்ஞாநகம்யாயை நம:
ஓம் ஜ்ஞாந ஜ்ஞேய ஸ்வரூபிண்யை நம:
ஓம் யோநிமுத்ராயை நம:
ஓம் த்ரிகண்டேஶ்யை நம:
ஓம் த்ரிகுணாயை நம:
ஓம் அம்பாயை நம:
ஓம் த்ரிகோணகாயை நம:
ஓம் அநகாயை நம:
ஓம் அத்புதசாரித்ராயை நம:
ஓம் வாஞ்சிதார்த்த ப்ரதாயிந்யை நம:
ஓம் அப்யாஸாதிஶய ஜ்ஞாநதாயை நம:
ஓம் ஷடத்வாதீத ரூபிண்யை நம:
ஓம் அவ்யாஜ கருணாமூர்த்தயே நம:
ஓம் அஜ்ஞாந த்வாந்த தீபிகாயை நம:
ஓம் ஆபாலகோப விதிதாயை நம:
ஓம் ஸர்வாநுல்லங்க்ய ஶாஸநாயை நம:
ஓம் ஸ்ரீசக்ரநிலயாயை நம:
ஓம் ஸ்ரீமத் த்ரிபுரஸுந்தர்யை நம:
ஓம் ஸ்ரீஶிவாயை நம:
ஓம் ஶிவஶக்த்யைக்ய ரூபிண்யை நம:
ஓம் லலிதாம்பிகாயை நம: 1000
 

ஸ்ரீ லலிதாஸஹஸ்ர நாமாவளி ஸமாப்தா: ✨