Saturday, May 24, 2025

Soundarya lahari - Lakshmidhara bhashyam

ஸ்ரீ வித்யா ஸமய மத வைபவம் :

ஸ்ரீஸௌந்தர்யலஹரிக்கு ஸ்ரீலக்ஷ்மீதரர் இயற்றிய "லக்ஷ்மீதரா" பாஷ்யம்

41வது ச்லோகத்திற்கான லக்ஷ்மீதரரின் பாஷ்யத்தில் சிறிது ஸ்ரீவித்யா ஸமயாச்சார மதமே பரம ஸத்யம் என்பதும், அதனுடைய வைபவமும்,

1) அத꞉ ஸமயபூஜகா꞉ ஸமயின꞉ . தேஷாம்ʼ ஷட்சக்ரபூஜா ந நியதா, அபி து ஸஹஸ்ரகமல ஏவ பூஜா. ஸஹஸ்ரகமலபூஜா நாம ஸஹஸ்ரகமலஸ்ய பை³ந்த³வஸ்தா²னத்வேன தன்மத்⁴யக³தசந்த்³ரமண்ட³லஸ்ய சதுரஶ்ராத்மனா, தன்மத்⁴யபி³ந்தோ³꞉ பஞ்சவிம்ʼஶதிதத்த்வாதீதஷட்³விம்ʼஶாத்மகஶிவஶக்திமேலனரூபஸாதா³க்²யாத்மனா ச அனுஸந்தா⁴னம். 

"ஸ்ரீவித்யா ஸமய மத ரீதியில் ப்ரஹ்மோபாஸனையில் விளங்குவோர், ஸமயர் எனப்படுவர். அவர்கள் ஷடாதாரங்களைக் காட்டிலும், முக்யமாக ஸஹஸ்ராரத்திலேயே ஸ்ரீபராசக்தியை வழிபடுவர். ஸஹஸ்ராரமே மஹாபிந்து. சந்த்ர மண்டலமே சதுரச்ரம். பிந்து ஸ்தானத்தில் இருபத்தைந்து தத்வங்களுக்கு அப்பாலுள்ள இருபத்தாறாவது தத்வமான அகண்ட ஸச்சிதாநந்தமான சிவசக்தி ஐக்யத்தை ஸாதாக்யா எனும் ஷோடஸி கலையாக த்யானிப்பர்

2) அத ஏவ ஸமயிமதே பா³யாராத⁴னம்ʼ தூ³ரத ஏவ நிரஸ்தம். ஷோட³ஶோபசாரரூபபூஜாங்க³கலாபஶ்ச தூ³ரத ஏவ..
ததா²ஹி - ஆதா⁴ராதி³ஷட்சக்ராணாம்ʼ த்ரிகோணாதி³ஷட்சக்ரத்வேன தாதா³த்ம்யம், பி³ந்து³ஸ்தா²னஸ்ய ஸஹஸ்ரகமலத்வேன தாதா³த்ம்யம்ʼ, பி³ந்து³ஶிவயோஸ்தாதா³த்ம்யம். ஏவம்ʼ தே³வீஶிவயோஸ்தாதா³த்ம்யமிதி தாதா³த்ம்யத்ரயம். சக்ரமந்த்ரயோ꞉ ஐக்யம்ʼ பூர்வமேவோக்தமிதி, தேன ஸஹ சதுர்தா⁴ ஐக்யம்ʼ ஸமயினாம்ʼ ஸமயாராத⁴னமிதி மஹத்ரஹஸ்யம்..
அத்ர கிஞ்சித் உச்யதே.

"ஸமயம் எனும் மஹாமதத்தில் பாஹ்யாராதனம் முக்யமில்லை. ஷோடஷோபசாரம் முதலானவையும் முக்யமில்லை. ஆறு ஆதாரங்களும், த்ரிகோணம் முதலிய ஆறு சக்ரங்களுடன் தாதாத்ம்யம் ஆகிறது. ஸாக்ஷாத் பிந்துவே ஸஹஸ்ரார சக்ரம். பிந்துவே சிவனுடன் தாதாத்ம்யமாகிறது. தேவிக்கும் சிவனுக்கும் தாதாத்ம்யம். ஸ்ரீசக்ரத்திற்கும் ஸ்ரீவித்யைக்கும் தாதாத்ம்யம். இந்த ஐக்யாநுஸந்தானமே பூஜை.

3)ஸமயினாஞ்சதுர்விதை⁴க்யானுஸந்தா⁴னமேவ ப⁴க³வத்யா꞉ ஸமாராத⁴னமித்யேதத் ஸர்வஸம்மதம். கேசித்து ஷோடா⁴ ஐக்யமாஹு꞉ யதா² - நாத³பி³ந்து³கலாதீதம்ʼ பா⁴க³வதம்ʼ தத்த்வமிதி ஸர்வாக³மரஹஸ்யம். நாத³꞉- பராபஶ்யந்தீ-மத்⁴யமா- வைக²ரீரூபேண சதுர்வித⁴ இதி ப்ராகே³வோக்தம் . பரா த்ரிகோணாத்மிகா, பஶ்யந்தீ அஷ்டகோணசக்ரரூபிணீ, மத்⁴யமா த்³வித³ஶாரரூபிணீ, வைக²ரீசதுர்த³ஶாரரூபிணீ. ஶிவசக்ராணாம்ʼ அத்ரைவ அந்தர்பா⁴வ꞉

"இந்த சதுர்வித ஐக்யாநுஸந்தானமே ஸமயிகளுக்கு முக்யமாகும். இதைத் தவிற ஆறுவித ஐக்யமும் ஸமயிகளுக்கு முக்யம் (ஆறுவித ஐக்யத்தைப் பற்றி ஸுபகோதயத்தில் 12 வது ச்லோகத்தில் உள்ளது. பின்னர் விரிவாய்க் காணலாம். நாத பிந்து கலைகளின் ஐக்யபாவமே இது)

ஆனால் பகவதியின் ஸ்வரூபம் நாத பிந்து கலைகளுக்கு அப்பாற்பட்டது. ஆயினும் நாத பிந்து கலைகளுடனும் அம்பாள் ஐக்யபாவமாக விளங்குகிறாள்

நாதத்தின்‌ ஐக்யம் இங்கே விளக்கப்படுகிறது

நாதம் நான்கு வகைப்படும். பரா, பச்யந்தி, மத்யமா, வைகரீ

பரா -- த்ரிகோணத்தில் ஐக்யம்

பச்யந்தி -- அஷ்டகோணத்தில் ஸமன்வயம்

மத்யமா -- இரண்டு தசாரங்களில் தாதாத்ம்யம்

வைகரீ -- சதுர்தசாரத்தில் தாதாத்ம்யம்

இவையெல்லாம் சக்தி சக்ரங்களாயிற்றே. சிவசக்ரங்களுடன் எவ்வாறு நாதம் ஸம்மேளனம் ஆகிறது என்றால் நவசக்ரங்களிலும், மேற்குறிப்பிட்ட ஐந்து சக்தி சக்ரங்கள், மற்ற நான்கு சிவசக்ரங்களுடனும் அபின்னமாகி விளங்குவதால், நவகோணத்மகாமான மஹாஸ்ரீசக்ரம் நாதத்துடன் ஸமன்வயமாகிறது.

4) ஷட்சக்ராணி மூலாதா⁴ரஸ்வாதி⁴ஷ்டா²னமணிபூரானாஹதவிஶுத்³த⁴யாஜ்ஞாத்மகானி பி³ந்து³ஶப்³த³வாச்யானி பூர்வமேவ உக்தானி. கலா꞉ பஞ்சாஶத், ஷஷ்ட்யுத்தரத்ரிஶதஸங்க்²யாகா வா . ஏவம்ʼ நாத³பி³ந்து³கலாதீதா ப⁴க³வதீதி.
ஸஹஸ்ரகமலம்ʼ பி³ந்த்³வதீதம்ʼ பை³ந்த³வஸ்தா²னாத்மகம்ʼ ஸுதா⁴ஸிந்த்⁴வபரபர்யாயம்ʼ ஸரகா⁴ஶப்³த³வாச்யம். நாதா³தீததத்த்வம்ʼ து த்ரிபுரஸுந்த³ர்யாதி³ஶப்³தா³பி⁴தே⁴யம் 'த³ர்ஶாத்³ருʼஷ்டா த³ர்ஶதா' இத்யாத்³யபரபர்யாய - 'கஏஈல ஹீம்' இத்யாதி³மந்த்ரவர்ணநாமக - பஞ்சாஶத்³வர்ணாத்மக - ஷஷ்ட்யுத்தரத்ரிஶதஸங்க்²யாபரிக³ணிதமஹாகாலாத்மக - பஞ்சத³ஶகலாதீதா ஸாதா³க்²யா ஶ்ரீவித்³யாபரபர்யாயா சித்கலாஶப்³த³வாச்யா ப்³ரஹ்மவித்³யாபரபர்யாயா ப⁴க³வதீதி நாத³பி³ந்து³கலாதீதம்பா⁴க³வதம்ʼ தத்த்வமிதி தத்த்வவித்³ரஹஸ்யம். 

"மூலாதாரம் முதற்கொண்டு ஆஞ்ஞா பர்யந்தம் விளங்கும் ஆறாதாரங்களைத் தாண்டிய ஸஹஸ்ராரம் என்பது பிந்துவைக் கடந்த மஹா பைந்தவஸ்தானமே. அம்ருதகடல் எனவும் ஸுரகா எனப்படுவதும் இதே. நாதாதீதம் எனப்படுவது த்ரிபுரஸுந்தரி முதற்கொண்ட நித்யைகளும், க ஏ ஈ ல ஹ்ரீம் எனப்படும் மந்த்ர எழுத்துக்களுமே. இவளே மஹாவித்யை. ப்ரஹ்மவித்யை. ஐம்பது அக்ஷர வடிவான மாத்ருகாம்பா. 360 கிரண வடிவான ரச்மி மாலா தேவதைகளும் இவளே. பதினைந்து கலைகளுக்கப்பாற்பட்ட பதினாறாவது மஹாகலா. ஸாதாக்ய கலா, சித்கலா என பற்பல விதமாக உணரப்படுபவள்.

பிந்துவைக் கடந்து விளங்கும் ஸஹஸ்ராரத்தில் விளங்குவதாலும், பதினைந்து கலைகளுக்கு அப்பாற்பட்டு விளங்குவதாலும் இவள் பிந்துவிற்கும் கலைகளுக்கும் அப்பாற்பட்டவள். 

நாதத்தைக் கடந்தவள் என்பது முன்னால் கூறப்பட்டது.
 ஆக, நாதம் பிந்து கலை ஆகியவற்றைக் கடந்த ப்ரஹ்மஸ்வரூபிணி ஸாக்ஷாத் மஹாவித்யா த்ரிபுரஸுந்தரி.

4) நிஷித்வாசாரோயம் நிகம விரஹோ அநிந்த்ய சரிதே

"நிஷித்வமான ஆசாரத்தையுடையோர்களால் மூலாதார ஸ்வாதிஷ்டானாதிகளை மட்டும் லக்ஷ்யமாயுடைய பூஜையில் பகவதி த்ருப்தியடைவதில்லை"

5)அத்ர நாத³பி³ந்து³கலானாம்ʼ பரஸ்பரைக்யானுஸந்தா⁴னம்ʼஷோடா⁴ ப⁴வதீதி ஷோடா⁴ ஐக்யமாஹு꞉.. ஏவம்ʼ ப⁴க³வதீ ஷட்³விதை⁴க்யேன ஸம்பா⁴வ்ய பூஜயித்வா ஸாதா³க்²யாயாம்ʼ விலீனோ ப⁴வதி. தத³னந்தரம்ʼ ஷட்³விதை⁴க்யானுஸந்தா⁴னமஹிம்னா கு³ருகடாக்ஷஸஞ்ஜாதமஹாவேத⁴மஹிம்னா ச ப⁴க³வதீ ஜ²டி³தி மூலாதா⁴ரஸ்வாதி⁴ஷ்டா²னாத்மகசக்ரத்³வயம்ʼ பி⁴த்வா மணிபூரே ப்ரத்யக்ஷம்ʼ ப்ரதிபா⁴தி

"நாத பிந்து கலைகளுக்கு அப்பாற்பட்டு விளங்குபவள் பகவதி. ஆனால் நாத பிந்துக்களின் ஐக்யத்திலும் விளங்குகின்றாள். ஸகலத்தையும் ஐக்யப்படுத்தி ஸாதாக்ய கலையில் விலீனமடைவதே மோக்ஷம். இந்த ஐக்யானுபாஸ்தியாலும், குருகடாக்ஷத்தினால் ப்ரஹ்மமாகவே ஆகிற ஸ்திதியினாலும், பராசக்தி மூலாதாரத்திலும், ஸ்வாதிஷ்டானத்திலும் துளையிட்டுப்புகுந்து மணிபூரகத்தில் ப்ரத்யக்ஷமாகிறாள்

-- தொடரும்

ப்ரஹ்மவித்யா ஸ்வரூபிணி காமாக்ஷி பராபட்டாரிகா சரணம்

-- ஸர்வம் லலிதார்ப்பணம்

No comments:

Post a Comment