Sunday, May 25, 2025

3 charama shlokas of vaishnavites

மங்களமான சரம ஸ்லோகங்கள் பற்றி ....
சரம என்றால் இறுதி  ultimate எனப் பொருள்.  அந்தணர்கள் இறந்தவர்மீது இரங்கல் ஸ்லோகம் சொல்வது வழக்கம். அவர் பெயரை வைத்து இயற்றப்படும்.  அதற்கு சரம ஸ்லோகம் என பெயர். நமக்கு அது எதற்கு. நாம் பகவான் தனது இறுதியான உறுதியான உத்தரவாதம் தந்துள்ள ஸ்லோகங்களை பார்ப்போம். அவையும் சரம ஸ்லோகங்கள் எனப்படும். (மங்களம் எனத்தான் மேலே ஆரம்பித்து உள்ளேன்) 

ஶ்ரீமந் நாராயணர் பக்த வத்ஸலர். ஸரணாகத வத்ஸலர். அவர் தனது பக்தர்களுக்கு புராணங்களில் தான் கட்டாயம் அவர்களை காப்பதாக உறுதி அளிக்கும் 3 சரம ஸ்லோகங்கள் உள்ளன. ஶ்ரீ வைஷ்ணவர்கள் அவற்றை கொண்டாடுவதில் வியப்பு என்ன!  

1. ஶ்ரீராமர் விபீஷண ஸரணாகதி கட்டத்தில் சொன்ன சரம ஸ்லோகம்

ஸக்ருதேவப் ப்ரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே
அபயம் ஸர்வ பூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம

~ என்னை ஒரேமுறை சரண் அடைந்து நான் உன்னைச் சேர்ந்தவன் காப்பாற்று என ஒரு உயிரினம் யாசித்தால்,  அவர்களுக்கு அபயம் கட்டாயம் கொடுப்பேன். இது எனது விரதம்

2. ஸர்வ தர்மான் பரித்யஞ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:

இது கண்ணன் கீதையில் தந்த வாக்குறுதி.
வேறு தர்மங்களை செய்யாமல் விட்டுவிட்டாலும் கவலை கொள்ளாதே. என்னை சரணாகதி அடைந்தாலே போதும். நான் தர்மம் கைவிட்டதால் உண்டான பாவங்களை நீக்கி ஸத்கதி தருவேன்

இந்த ஶ்ரீராமரும் கண்ணனும் அவர்களை சரண் அடைய சொல்கிறார்கள். ஆனால் நம் வராஹ ஸ்வாமி அருளிய மூன்றாவது சரம ஸ்லோகத்தை கொஞ்சம் பார்ப்போம்

3. ஸ்லோகம்
~~~~
ஸ்திதே மனஸி ஸுஸ்வஸ்த்தே ஸரீரே ஸதி யோ நர:
தாது ஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வரூபம் ச மாமஜம் !
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண ஸன்னிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் !!

~~~~|~|||

ஓ பக்தர்களே. நீங்கள் கபம் வாதம் பித்தம் என்ற மூவகை தாதுக்கள் ஸம அளவில் நிற்க,  உடம்பு நலமாக உள்ளபோது உங்கள் மனம் ஆரோக்யமாக ஸாந்தமாக உள்ளபோது பிறப்பற்ற என்னை என் விஸ்வரூபத்தை எப்போதும் நினைத்து பூஜியுங்கள்.
அவ்வளவு தான் உங்கள் வேலை. மனிதனாக பிறந்த வருக்கு இறப்பு நிச்சயம். அது நெருங்குங்கால் உங்கள் உடலானது மரக்கட்டை மற்றும் பாறைபோல அசைய இயலாது கிடக்கும்.  என்னை நினைக்கும் நினைவோ ஸக்தியோ முயற்சியோ இயலாது போகலாம். கவலை வேண்டாம். நான் உன் நிலை அறிவேன். என் பக்தனின் கோரநிலையை நான் நினைப்பேன். உத்தம கதி தந்துவிடுவேன்.

~~~  ஶ்ரீராமரும் க்ருஷ்ணரும் கூட பரமபதம் பற்றி குறிப்பிடவில்லை. ஶ்ரீ பூவராஹரே அந்த பரம புருஷார்த்தத்தை தானே முன் வந்து தருவதாக ப்ரதிஞ்ஞை செய்கிறார்.  அவர்கள் சொன்னது போல  அல்லாது தானே நம்மை நினைப்பதாக சொல்வது மேன்மைதானே !!!.

மூவரும் ஶ்ரீமஹாவிஷ்ணுவின் விபவங்கள் அவதாரங்கள் தான். எனவே ஶ்ரீமந் நாராயணரை ஸரணம் அடைவோம். பாவங்களை தொலைப்போம். நல்ல புத்தி பெறுவோம். இறுதியில் நற்கதி அடைவோமாக~~~~~~~~ வனமாலி

No comments:

Post a Comment