Monday, May 12, 2025

Detachment - HH Sri chandarshekhara bharati Mahaswamigal

*Source:ஸ்ரீ குருகிருபா விலாஸம்*
 
Section 2
 
*ஞானப் பிரஸூனங்கள்*
 
*1.பற்றின்மை*
 
ஸ்ரீ மஹாஸந்நிதானம் மடத்து லௌகிக விஷயங்கள் எவற்றிலும், எவ்வளவு பாதக மன்னியில் இருந்தாலும், அக்கறை எடுத்துக் கொள்வது கிடையாது. மடத்து அதிகாரி ஒருவர், மடத்தைச் சேர்ந்த பல கோவில்களில் நடக்க வேண்டிய பூஜைக்குப் போதுமான புஷ்பங்கள் வேணடுமென்று தான் அமைத்துள்ள பூந்தோட்டத்திலாவது ஆசார்யாரின் கவனத்தை இழுக்கலாம் என்று எண்ணி, ஒரு நாள் மாலையில் அவர்களிடம் சென்று, 'அருகாமையில் சில நாட்களுக்கு முன் ஒரு நந்தவனம் அமைத்தேன். இப்பொழுது நன்றாக வளர்ந்திருக்கிறது. அதை தாங்கள் நேரில் வந்து பார்வையிட வேண்டுமென்று எனக்குப் பேரவா!' என்றார். உடனே ஸ்ரீமத் ஆசார்யாள் அதற்கு இசைந்து, அவருடன் சென்று, பூப்பாத்திகளையும் செடிகளையும் பார்த்துவிட்டுத் திரும்பினார்கள். ஆனால் ஒரு வார்த்தைகூட சொல்லாமலிருந்ததால் கொஞ்சம் மனது நொந்த அவ்வதிகாரி "தோட்டம் நோத்தியாய் இருக்கிறதா, இல்லையாஎன்பதைப் பற்றி தங்கள் அபிப்பிராயத்தை தெரிந்து கொள்வதற்காகவே தங்களை இங்கே வரும்படி சிரமப்படுத்தினேன்" என்றார். உடனே ஆசார்யாள், "ஏன். வெகு நேர்த்தியாக இருக்கிறதே" என்றார்கள். இதைக்கேட்ட அதிகாரி விடாமல் ''நான் கேட்ட பிறகு இவ்விதம் சொல்லும் அபிப்ராயம் எனக்கு ஸமாதானமாயில்லை. இன்னும் எந்த எந்த விதமாக இத்தோட்டத்தை அபிவிருத்தி செய்யலாம். எப்படி இன்னும் சோபிக்கச் செய்யலாம். என்று உத்தரவாக வேண்டும்" என்றார். அதற்கு ஆசார்யாள் "இன்னும் என்ன என்ன செடிகளை வைத்துப் பயிரிடலாம் என்று நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். அவ்வதிகாரி உடனே 'இன்ன இன்ன செடிகள் பயிரிடலாம் என்ற யோசனை இருக்கிறது" என்று பதில் சொன்னார். ஆசார்யாளும் "நல்லது, அப்படியே செய்யலாமே" என்று சொன்னார்கள். இந்த பதில் வந்தபிறகுதான் அவ்வதிகாரி "இது செய்யலாம், அது செய்யலாம், என்று நான்தானே சொல்லியிருக்கிறேன். ஆசார்யாளாக ஒருவித யோசனையும் சொல்லவில்லையே" என்பதை உணர்ந்தார். ஆசார்யாளை இத்தகைய வியவஹாரங்களில் அக்கறை யெடுக்கச் செய்ய முயல்வது பிரயோஜனமில்லையென்றும் அறிந்துகொண்டார்.
 
*To be continued*

No comments:

Post a Comment