ஆன்மீகம் :
கிருஷ்ண சமர்ப்பணம் ... !!!
ஒருத்தா் கிருஷ்ண பகவானுக்கு சமா்ப்பிக்க பழம் இல்லையே என்று பேசாதிருந்தாா்.
பகவான் அவரை வெறுமே விடவில்லை.
பழமில்லாவிட்டால் போகிறது; ஒரு காயாவது கொடு எனக்கு என்றான்.
காயும் இல்லையே.
பகவான்
பாா்த்தான்.
காயில்லாவிட்டால்
போகிறது;
ஒரு பூவாவது
எடுத்து வாருமே.
பூவே இல்லை.;
ஒரு பூ கூட கிடையாது!
சாி பூ வேண்டாம்.
ஒரு இலையாவது
கொண்டு வாருமே...
துளஸி என்று
சொல்லவில்லை
பரமாத்மா.
ஏதாவது ஒரு இலை --
அதைக் கொண்டு வந்து
திருவடியில் சோ்க்கக்
கூடாதா என்றான்.
இலை கூட இல்லை
என்றாா் அவா்.
கனி,காய்,பூ,
இலை எதுவுமே
இல்லையா...
கொஞ்சம் தீா்த்தம் எடுத்து
ஓம் விஷ்ணவேநம: ' என்று சொல்லி சோ்ப்பியுமே...
பகவான் இப்படிச் சொன்ன போதும் கூட அந்த அஞ்ஞானி 'தீா்த்தம் இல்லையே'
என்றுதான் பதில் சொன்னாா்.
தீா்த்தம் கூடவா இல்லை...?
இல்லையே ...
நிஜமாகவே இல்லையா....?
இல்லையே ...
என்று வேகமாயச் சொன்னவாிடம்
கேட்டான் பகவான்:
உன் கண்கள் இரண்டிலும்
கூட நீா் இல்லையா...?
காய்,கனி,பூ என்று எதையும் சமா்ப்பிக்க முடியாத நிலையில் உள்ளேனே என்கிற வருத்தம் இருந்தால்
ஒரு சொட்டு கண்ணீா் வராதோ...?
அது கூடவா இல்லை...?
இதற்கு அா்த்தம் என்ன...?
எதையும் சமா்ப்பிக்க முடியாத போனாலும் உள்ளம் உருகி ஒரு சொட்டுக் கண்ணீா் விட்டாலே போதும் --
கூடை கூடையாகப் பழங்களைச் சமா்ப்பித்ததற்கு அது சமமாகும்.
பகவான் நம்மிடத்திலே
ரொம்ப பக்தியைத்தான் எதிா்பாா்க்கிறான் .
அப்படி அவனை நினைத்து நினைத்து உருகுவதுதான் தவம் புஷ்பம் ... !!!
ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம் "
No comments:
Post a Comment