Showing posts with label tamil treasures. Show all posts
Showing posts with label tamil treasures. Show all posts

Monday, July 16, 2018

Villi and Arunagiri

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி


54 ... திதத்தத்தத் தி

   (இடுகாட்டி லென்னை எரியூட்டு முன்னு
      னிருதாட்கள் தம்மை ...... யுணர்வேனோ

... 'குடிவாழ்க்கை' திருப்புகழ் -  538 ).

......... பாடல் .........

      திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
      திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
      திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
      திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே ...... 54

......... சொற்பிரிவு .........

திதத்தத் தத்தித்த திதி தாதை தாத துத்தி தத்தி

(தா) தித தத்து அத்தி ததி தித்தித்ததே து துதித்து இதத்து

(ஆ) தி தத்தத்து அத்தி தத்தை தாத திதே துதை தாது அதத்து

(உ) தி தத்து அத்து அத்தி தித்தி தீ தீ திதி துதி தீ தொத்ததே.

......... பதவுரை .........

திதத்த ததித்த ... திதத்த ததித்த என்னும் தாள வரிசைகளை,

திதி ... தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற,

தாதை ... உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும்,

தாத ... மறை கிழவோனாகிய பிரம்மனும்,

துத்தி ... புள்ளிகள் உடைய படம் விளங்கும்,

தத்தி ... பாம்பாகிய ஆதிசேஷனின்,

தா ... முதுகாகிய இடத்தையும்,

தித ... இருந்த இடத்திலேயே நிலைபெற்று, (ஆனால்)

தத்து ... அலை வீசுகின்ற,

அத்தி ... சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசஸ்தலமாகக் கொண்டு),

ததி ... அயர்பாடியில் தயிர்,

தித்தித்ததே ... மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று சொல்லிக்கோண்டு,

து ... அதை மிகவும் வாரி உண்ட (திருமாலும்),

துதித்து ... போற்றி வணங்குகின்ற,

இதத்து ... பேரின்ப சொரூபியாகிய,

ஆதி ... மூலப்பொருளே,

தத்தத்து ... தந்தங்களை உடைய,

அத்தி ... யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட,

தத்தை ... கிளி போன்ற தேவயானையின்,

தாத ... தாசனே,

திதே துதை ... பல தீமைகள் நிறைந்ததும்,

தாது ... ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும்,

அதத்து உதி ... மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும்,

தத்து அத்து ... பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய)

அத்தி தித்தி ... எலும்பை மூடி இருக்கும் தோல் பை (இந்த உடம்பு),

தீ ... அக்னியினால்,

தீ ... தகிக்கப்படும்,

திதி ... அந்த அந்திம நாளில்,

துதி தீ ... உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த என்னுடைய புத்தி,

தொத்ததே ... உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும்.

......... பொழிப்புரை .........

நடராஜ மூர்த்தியாகிய சிவபெருமானும் பிரம்மனும் இடைச்சேரியில் தயிர் உண்டு பாற்கடலையும் ஆதிசேஷனையும் பாயாலாகக் கொண்டு யோக நித்திரை செய்யும் திருமாலும் வணங்குகின்ற ஆனந்த முதலே, தேவயானையின் தாசனே, ஜனன மரணத்திற்கு இடமாய் சப்த தாதுக்கள் நிறைந்த பொல்லாத இந்த உடம்பை தீயினால் தகிக்கப்படும் பொழுது உன்னை துதித்து வந்த என் சித்தத்தை உன்னுடைய திருவடிக்கு நீ ஆட்படுத்த வேண்டும்.

(இந்த பாட்டிற்கு உரை கூற முடியாமல் வில்லிபுத்தூரார் அருணகிரியாரிடம் தோல்வியுற்றார்).

Tuesday, July 10, 2018

Sanskrit joke

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

जगति द्वे अत्यन्तं दुर्घटकर्मणी--

१) स्वस्य विचाराणाम् अपरस्य मस्तिष्के अवतारणम्।
२) अपरस्य युतककोषात् तस्य धनस्य स्वकोषम् आनयनम्।

प्रथमे कर्मणि यः प्रज्ञावान् सः *शिक्षकः* इति उच्यते।
द्वितीये यः कुशलः तस्याभिधानं *वणिक्* इति।

उभयत्रापि यस्य कुशलता सः जनः *पत्नी* इति नाम्ना प्रसिद्धः।

☺😂😂😂

Friday, July 6, 2018

Sanskrit joke

अन्तिमेच्छा!!!


जीवनस्य अन्तिमदिनानि यापयन् पोपः विजयमाल्यं, नीरवमोदिं च वैटिकनदेशे चिकित्सालयम् आहूतवान्।


तत्र प्राप्तौ उभौ तौ पोपस्य प्रकोष्ठं नीतौ। अर्चकः प्रकोष्ठे प्रविश्यमाणौ तौ अङ्गुलिनिर्देेेेशेन पोपस्य उभयतः उपवेष्टुम् प्रार्थितवान्।


पोपः उभयोः हस्तौ स्पृष्टवान्। महत्याः सन्तुष्टेः भावः आसीत् तस्य मनसि। प्रसन्नचित्तसा , कृतकृत्यमनसा स्मयमानः सः स्थिरदृष्ट्या छदं निरीक्षितवान्। कानिचन क्षणानि यावत् सर्वे निभृताः आसन्।


पोपस्य अन्तिमक्षणे तेन तयोः सान्निध्यं निवेदितम् अनेन उभयोः अपि बहुः श्लाघितः, भावुकः च अभासत। पोपेन तयोः विषये कापि रुचिः नैव प्रकटितपूर्वा न कोऽपि आदरभावः प्रकाशितपूर्वः, तद्यपि तौ कथं चितौ इति तयोः विस्मयाय।


अन्ते च विजयमाल्येन पोपः पृष्टः एव, "पोपपितः , भवता आवाम् उभौ एव किमर्थम् आमन्त्रितौ?"



पोपः सर्वधैर्यम् आधाय शान्तचित्तसा अभणत्, "क्रिस्तस्य उभयतः अपि मृत्युसमये द्वौ चोरौ आस्ताम्। अहमपि तद्वदेव मरणम् कामये।"

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

Thursday, July 5, 2018

Sanskrit joke

कियती क्षीणा जातास्ति अस्य राष्ट्रस्य विधिव्यवस्था  (law and order)। ह्यः मया कारयने Race3 चित्रपटस्य चिटिकाः स्थापिताः आसन्। एकः चोरः आगतः , कारकाचकाः भञ्जितवान् , अनुक्षणं सः
.
.
.
.
.
.
.
तस्यैव चित्रपटस्य द्वे अधिके चिटिके स्थापितवान्।😂😂😂.

Wednesday, December 21, 2011

திருக்குறள்: நீங்கள் விரும்பும் குறளை தேடிக்கொடுக்கும் தளம்

Courtesy: Sri.Mayavaram Guru
http://www.muthu.org/ என்ற இணைய தளத்தில் தேடி கண்டெடுத்தது ....பயனுள்ள link -குரு 
http://kural.muthu.org/kural.php 

திருக்குறள்: நீங்கள் விரும்பும் குறளை தேடிக்கொடுக்கும் தளம்


திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனைஇயற்றியவர் திருவள்ளுவர் ஆவார். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின்கீழ் தொகுக்கப்பட்டுள் ள‍து. திருக்குறள் சங்க இலக்கிய வகை ப்பாட்டில் பதினெண்கீழ்க் கணக்கு என ப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அக வாழ்விலும் சுமுக மாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசை வுடனும் நலமுடனும் வாழவும் தே வையான அடிப்படைப்பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொரு ள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவு களாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்கு கிறது.

திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப் பட வில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பய னாய், தமிழ்நாட்டில் ஆண்டுக ளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது.

இதன் தனிச்சிறப்பு

ஒன்றே முகால் அடி அல்ல‍து ஏழே வார்த்தைகள் கொண்டு, பொருள் விளக்கும் ஒப்ப‍ற்ற‍ காவியமா கும். திருக்குறளால் தமிழுக்கு கிடைத்த‍ பெருமைகளை வார்த்தை களால் வரையறுக்க‍ முடியா தது.

அத்தகைய சிறப்பு மிக்க‍ திருக்குறளில் உள்ள‍ எத்தனை குறள்கள் நம்மில் எத் த‍னைப் பேருக்கு நினைவிருக்கும் என்று கேட்டால் நம்மில் ப‌லருககு திருக்குறள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களு க்காகவே இந்த தளம் உள்ள‍து. ஆம் திரு க்குறளில் உள்ள‍ முதல் அல்ல‍து கடைசி வார்த்தையை ஆங்கிலத்தில் டைப் செய் தால் பக்க‍த்தில் உள்ள‍ பெட்டியில் தானா கவே தமிழில் மாறும் பின் அதறகு அரு கில் உள்ள‍ தேடுக என்ற பொத்தானை அழுத்தினால் தாங்கள் தேடும் திருக்குறள் தோன்றும்,

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த தளத்தி னை பயன்படுத்தி, திருக் குறள் அறிவோம், குறள் வழி நடப்போம். நண்பர்களே!

திருக்குறள் (இந்த வார்த்தையை கிளிக் செய்க•)

 

Thursday, December 1, 2011

Palindrome in Tamil



அதிசய அற்புத பாடல்கள்

அதிசய அற்புத பாடல்கள்
கவிக்கோ(ர்)காளமேகம் எனும் சென்ற பதிவில் தமிழில் சிறப்பு வடிவம் பெற்ற வெண்பாக்களைக் கண்டோம்.
மேலும் சில சிறப்பு வடிவம் பெற்ற பாடல்களை இப்பதிவில் காண்போம்.
ஆங்கிலத்தில் palindrome என்றும், தமிழில் இருவழி ஒக்கும் சொல் என்றும் குறிப்பிடக் கூடியவைகளைக் காண்போம்.
MALAYALAM - இது ஆங்கிலத்தில் இடது புறத்திலிருந்து வலப்புறமாக படித்தாலும், வலது புறத்திலிருந்து இடது புறமாக படித்தாலும் ஒரே மாதிரியாக, அதே சொல்லாக அமையக்கூடியது. palindrome என்பது இவ்வகை.தமிழில் - விகடகவி - இடதிலிருந்து வலமாக, வலமிருந்து இடமாக படித்தாலும் ஒரே சொல் அமையக் கூடியது.
ஆங்கிலத்தில் பாலிண்டிரோம்கள் அதிகம்.
I PREFER PI
MADAM I'M ADAM
NEVER ODD OR EVEN என்பவை சில பிரபலமான பாலிண்டிரோம்கள்.
இவை போல ஆயிரக்கணக்கான எழுத்துக்களைக் கொண்ட பாலிண்டிரோம்கள் ஆங்கிலத்தில் உள்ளன.

தமிழில் பாலிண்டிரோம்கள் மிகக் குறைவே. ஒற்றெழுத்துக்கள் எனக் கூடிய புள்ளி வைத்த எழுத்துக்கள் தமிழில் பாலிண்டிரோம்கள் எழுதச் சற்றே தடையாக உள்ளன.

ஆயினும், பல பாலிண்டிரோம்கள் எழுதப்பட்டுள்ளன.

குறைவான எழுத்துக்கள் கொண்டவை :
தாத்தா
பாப்பா
தேரு வருதே
மோரு போருமோ
"பூவாளை நாறு நீ பூமேக லோகமே பூ நீறு நாளை வா பூ"- தண்டியலங்காரக் குறள் வெண்பா .
தமிழ் நால்வரில் ஒருவரும், தமிழின் மீது ஆழ்ந்த பற்று கொண்டவரும், தெய்வங்களுக்குத் தனித் தமிழில் பெயர் அமைத்தவரும், தம் பாடல்களால் சைவ சமயத்தைப் பெரிதும் வளர்த்தவரும், உமை அம்பிகையால் ஞானப் பால் குடித்தவரும், திராவிட சிசு என்று போற்றப்படக் கூடியவரும் ஆகிய திருஞானசம்பந்தர் தமிழின் மிக நீளமான பாலிண்டிரோமை அக்காலத்திலேயே அழகுற அமைத்திருக்கின்றார்.

சைவத்தின் வேதம் என்று போற்றக் கூடிய பன்னிரு திருமுறைகளின் முதல் மூன்று திருமுறைகளாக திருஞானசம்பந்தரின் பாடல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.திருஞானசம்பந்தர் பாடல்களில் மாலை மாற்றுப் பதிகம் என்பது முழுக்க முழுக்க தமிழ் பாலிண்டிரோம்தான்.

திருஞான சம்பந்தர் இயற்றிய மாலை மாற்று (PALINDROME) பதிகம்
திருச்சிற்றம்பலம்
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா 1
-------------> <-------------------
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயாயாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா 2
தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமாமாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா 3
நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமேமேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ 4
யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீவீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா 5
மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயேயேனாலாகா லேலாகா ழீதேமேகா பொலேமே 6
நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானேநேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ 7
நேணவரா விழயாசைழியே வேகதளேரிய ளாயுழிகாகாழியுளாய ரிளேதகவே யேழிசையாழவி ராவணனே 8
காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூபூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா 9
வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதேதேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே 10
நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா காழியுளானின யேனினயே தாழிசயா தமிழாகரனே 11
திருச்சிற்றம்பலம்

(மேற்கண்ட பாடல்களில் ஒற்றெழுத்து எனும் புள்ளி வைத்த எழுத்துக்கள் வரவில்லை என்பதை இங்கே குறிப்பிடவேண்டும்.

மேற்கண்ட பாடல்களுக்கு மிக அழகிய பொருள் உண்டு. முதல் பாடலின் பொருள் : சிற்றுயிர்களாகிய நாங்கள் கடவுள் அல்லர், சிவபெருமானாகிய நீ மட்டுமே எங்களுக்கு கடவுள்)

இதே போல பாலிண்டிரோம்கள் தமிழில் இன்னும் சில உண்டு. ஆனால் திருஞான சம்பந்தர் இயற்றியது போல அமையவில்லை.
மாதவச் சிவஞான யோகிகள் என்பவர் காஞ்சிப் புராணத்திலும், தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத அய்யரின் குருவாகிய, திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தாம் இயற்றிய, திருநாகைக்காரோணப் புராணத்தில் பாலிண்டிரோம் வகைக் கவிதைகளை இயற்றியுள்ளனர் என்று தமிழறிஞர்கள் கூறுகின்றனர்.

மிக அதிசய அற்புத பாடல்
பாலிண்டிரோம் என்பது இரு வழிகளிலும் படித்தாலும் ஒரே அர்த்தத்தை மட்டுமே கொடுக்கக் கூடியது.
மிக அற்புதமாக, ஒரு பாடலை இடமிருந்து வலமாகப் படித்தால் ஒரு அர்த்தத்தையும், அதே பாடலை வலமிருந்து இடமாகப் படித்தால் வேறொரு அர்த்தமும் கொண்ட பாடல் ஒன்று உண்டு. இது பாலிண்டிரோம் வகைதான். ஆனால் இரு வேறு அர்த்தங்கள் உண்டு.
வடமொழியில் அமைந்த அந்த அற்புதப் பாடலைக் காண்போம்.

'ராகவ யாதவீயம்' எனும் பெயர் கொண்ட அந்தக் காவியம் முதல் எழுத்தில் ஆரம்பித்து, கடைசி எழுத்து வரை நேராகப் படித்தால் ராகவன் எனும் ராம பிரானின் கதையைக் கூறும் ராமாயணமாகவும், கடைசி எழுத்தில் தொடங்கி, முதல் எழுத்து வரை, திருப்பிப் படித்தால் கண்ண பிரானின் கதையைக் கூறும் பாகவதமாகவும் பொருள் தரக் கூடிய வகையில் அற்புத, அதிசயமான காவியமாக இயற்றப்பட்டுள்ளது.

ராகவ யாதவீயம்
====> (READ LEFT TO RIGHT)
ஓம் வந்தேஹம் தேவம் தம் ஸ்ரீ தம் ரந்தாரம் காலம் பாஸா ய: I ராமோ ராமாதீராப்யாகோ லீலாமாராயோத்யே வாஸே II
<==== (THE ABOVE SAME IS IN RIGHT TO LEFT) :
ஸேவாத்யேயோ ராமாலாலீ கோப்யாராதீ மாராமோரா: I யஸ்யாபாலங்காரம் தாரம் தம் ஸ்ரீதம் வந்தேஹம் தேவம் II
ராகவ யாதவீயம் எனும் இந்த உன்னத மகா காவியம், கர்நாடக மாநிலத்தில், கி.பி.18ம் நூற்றாண்டில் வாழ்ந்த, வேங்கடாத்வரி எனும் மகாகவி இயற்றியது. மேற்கண்டது முதல் பாடல் மட்டுமே. இது போல் முப்பது பாடல்கள் எழுதியிருக்கின்றார்.

தமிழில் சில சிறப்பு வகை கவிதை அமைப்புகள் :
தமிழில் முரசு பந்தனம், வேல் பந்தனம், நாக பந்தனம், தேர் பந்தனம் போன்றவை உண்டு. உதாரணமாக, முரசு பந்தனம் என்பது, நான்கடிகள் கொண்ட ஒரு பாடலை எழுதி, அப்பாடலைப் படத்திற் காட்டடியபடி முரசு வார்களின் மேல் எழுதவேண்டும்.

அதேசமயம் நான்கு அடிகளையும் முதலடி தொட்டுக் கடையடி ஈறாய், மேலிருந்து கீழ் இழிந்தும், கீழிருந்து மேல் நோக்கியும், தத்தம் வார்கள் போக்கிய வழியிற் சென்று படித்தாலும் பாடலடிகள் கிடைக்கப்பெறும்.
பாடல்

நாதமு தீநய மேதரு முரசே !
காதமுதீநய மேதரு முரசே !
போதமு தீநய மேதரு முரசே !
நாதமு தீநய மேதரு முரசே !

நாக பந்தனம்
முரசு பந்தனம் போல் நாக பந்தனம் என்பதும் மிகச் சிறப்பு வாய்ந்தது. இந்தச் சித்திர கவியில் நான்கு பாம்புகள் இணைந்து பின்னிக் கொண்டு அமைந்திருக்கும். நான்கு பாம்புகளுக்கு¡¢ய நான்கு சிந்தியல் வெண்பாக்கள் கற்பிப்பு முறையில், ஒரு பாம்புக்கு ஒரு பாடல் என்றவாறு அப்பாம்புகளின் உடல் வழியில் தொடர்ந்து எழுதப்பட்டுள்ளன.
பாடல் 1.தன்னை யறிதல் தலைப்படுத்துங் கல்வியதாலெங்ங னறித லுலகியலை - முன்னுவந்துன்னை யறிக முதல்.
பாடல் 2.நீக்கு வினைநீக்கி நேர்மைவினைக் கின்னலையாதீங்குநீ நன்மனத்தால் நன்னயங்க ளுன்ன வுடன்பெறு வாயுய் தலை.
பாடல் 3. ஓங்குபனை போலுயர்ந் தென்னே பயனுன்னத்தீங்கு தனைமனத்து ளெண்ணித்தீ நீக்காதார்தீங்கினைத் தீப்படுந் தீ !
பாடல் 4.உன்னை யறிதற் குனதூழ் தரப்பெற்றபொன்னைப்பெண் மண்ணாசை போக்கலைக் காணாயேலென்னை பயக்குமோ சொல் !

வேல் பந்தனம்

மேற்கண்ட கவிதை வடிவம் முருகப்பெருமானுக்குரிய வேல் பந்தனம் எனும் வகையாகும்.
இதில் கண்ட எழுத்துக்களை கீழ்க்கண்டவாறு படிக்க வேண்டும்.
"வால வேல விகாரவா, வார காமனை நாடி வா, வாடி நாடிடுமோ சிவா, வாசி மோகன வேலவா''
இந்த வேல் பந்தன மந்திரத்தை ஜபித்தால் எதிர்ப்புகள் நீங்கி, முருகனின் அருள் விரைவில் கிட்டும்.
சிதம்பரத்தில், சிவகங்கை குளக்கரை மண்டபத்தில், முருகனின் வேல் பந்தனம் எனும் தமிழ் மந்திர எழுத்துக்கள் கொண்ட மந்திர அமைப்பு வரையப் பட்டுள்ளது. எதிரிகளின் இடத்திற்கு செல்லும்போது, காப்பு எனும் கவசம் அணிந்து செல்வது போர் முறை. அதேபோல் மந்திர காப்பு கவசமாக இந்த வேல் பந்தனம் நம்மைக் காத்து, வெற்றியளிக்கும் என்பது ஐதீகம்.

இதே போல் ரத பந்தம் என்பது மிகச் சிறப்பு வாய்ந்தது.
தேர் போல கட்டங்கள் வரைந்து அதில் எழுத்துக்களை பதித்து அழகிய பாடலாக அமைப்பது.இவற்றைப் பற்றி தனியே ஒரு பதிவில் காண்போம்.
தமிழில் உள்ள தனிச் சிறப்பான அம்சங்கள் கொண்ட பாடல்களையும், அவற்றின் சிறப்புகளையும் தனியே ஒரு பதிவில் காண்போம்.

- நி.த. நடராஜ தீக்ஷிதர்

Tuesday, November 1, 2011

Tamil treasures

Courtesy: Sri.Cris Iyer
=================
For the Tamil lovers, Unbelievable collection.. in PDF... sure you'll enjoy..

Pls store /save for you n family easy reference

http://www.infitt.org/pmadurai/pmworks.html

Tamil Treasure Trove - Unbelievable collection - ENJOY!;
Works of Auvaiyyaar
 
knr
--
If God brings you to it, He will bring you through it.
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.

  Every moment, thank God

Thursday, November 11, 2010

Learn Sanskrit through Tamil

 
Please visit this website:
This site is dedicated for Sanskrit learning through Tamil
For conversations with meanings explained neatly click this:
For sanskrit humour click this:
for sanskrit names of fruits & flowers
 
 
knr

--
If God brings you to it, He will bring you through it.
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.

  Every moment, thank God

Thursday, December 17, 2009

sriranga pancharatnam in tamil with meaning

Pl visit this link
knr
--
If God brings you to it, He will bring you through it.
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.

 Every moment, thank God