Saturday, April 13, 2024

crane and fox - Sanskrit nyaya

||ॐ||
"नीतिकथाओं  पर  आधारित  न्यायवचन"(४६)
-------------------------------------------------------
"शृगालेन  शरावे  भोजितो  बकः तं  तुंगपात्रे  भोजयति"।
"सियार  ने  बगुले  को  थाली  मे  भोजन  दिया  और  बगुले  ने  उसे पात्र में "।
------------------------------------------------------------------------------------
(१)
सियार  ने  एक  दिन  बगुले  को  खीर  खाने  अपने  घर  बुलाया।  खीर  विस्तृत  थाली  में  दी  थी  अतः  अपनी  लंबी  नोंकदार  चोंच  से  बगुला  उसका  आस्वाद  नही  ले  पाया ।  वह  भूखा  ही  वापस  घर  आया ।  दूसरे  दिन  उसने  सियार  को  आमरस  खाने  निमंत्रित  किया।  वह  रस  ऊंची  सुराई  में  भरकर  दिया  गया  जिसे  सियार  अपनी  जीभ  से  ठीक  चाट  नही  पाया ।  उसे  भी  भूखा  वापस  लौटना  पड़ा ।
--------------------------------------------------------------------------------
(२)
सीख---
"जैसे  को  तैसा"।
-----------------------------------------------------
卐卐ॐॐ卐卐
-------------------------------
डाॅ. वर्षा  प्रकाश  टोणगांवकर  
पुणे /  महाराष्ट्र    
--------------------------------------

Thiruvanmiyur marundeesvarar temple

சென்னையில் திருவான்மியூரில் வீற்றிருக்கும்...... *நோய் தீர்க்கும் மருந்தீஸ்வரர்* பற்றி தெரிந்து கொள்வோம்.....

1. மார்க்கண்டேய முனிவரின் உபதேசப்படி வால்மீகி இத்தல ஈசனை வணங்கி வீடுபேறு பெற்றார். அதனால் இத்தலம் திருவான்மியூர் ஆனது.

2. இன்றும் ஆலயத்திற்கு அருகே சாலையோரத்தில் வால்மீகி முனிவரின் சந்நதியைக் காணலாம். இத்தல ஈசனை பால்வண்ணநாதர், மருந்தீஸ்வரர், அமுதீஸ்வரர் என துதிக்கிறார்கள்.

3. பாற்கடல் அமுதத்தால் இத்தல ஈசனை செய்து வழிபட்டதால் அமுதீஸ்வரர் ஆனார். சிவபூஜையில் அலட்சியமாக இருந்த காமதேனு, வசிஷ்டரால் சபிக்கப்பட்டு காட்டுப்பசுவாக மாற, இத்தல ஈசனை வணங்கி பாவ விமோசனம் பெற்றதால் இவர் பால்வண்ணநாதரானார்.

4. வால்மீகி முனிவர் இத்தலம் வந்த போது, அவரைக் கண்டு அஞ்சி ஓடிய காமதேனுவின் கால்குளம்பு ஈசனின் தலையிலும் மார்பிலும் பட்டதாம். அந்த காலடித் தடம் இன்றும் மூலவரின் மீது காணலாம்.

5. இத்தலத்தில் அகத்தியருக்கு நோய் தீர்க்கும் மூலிகைகளைப் பற்றி ஈசன் உபதேசம் செய்ததால் மருந்தீசர் ஆனார்.

6. மருந்தீஸ்வரருக்குப் பாலபிஷேகம் செய்து, விபூதி பிரசாதம் உண்டால் தீராத நோய் தீரும்.

7. அன்னையின் அழகுப் பெயர் திரிபுர சுந்தரி.

8. தொண்டை நாட்டிலுள்ள பாடல்பெற்ற 32 திருத்தலங்களில் திருவான்மியூர் 25வது திருத்தலம். திருநாவுக்கரசர் திருஞான சம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடப் பெற்றது.

9. அப்பய்ய தீட்சிதர் மருந்தீஸ்வரரை தரிசிக்க வந்த போது பெருமழை பொழிந்தது. தீட்சிதரால் சுவாமியின் முதுகுப்புறத்தைதான் தரிசிக்க முடிந்தது. ஈசனிடம் திருமுக தரிசனம் வேண்டி முறையிட, ஈசன் மேற்குப் பக்கம் திரும்பி காட்சி தந்தார்.

10. ஈசன் மேற்கே திரும்பியதால் அம்பாள், சுவாமிக்கு பின்புறமாக தெற்கு நோக்கியும், முருகனும், விநாயகரும் கிழக்கு நோக்கியும் காட்சி தருகிறார்கள்.

11. தலவிருட்சம் – வன்னிமரம்; தீர்த்தம் – பாபநாசினி குளம். உபமன்யு முனிவரிடம் சிவதீட்சை பெற்ற கிருஷ்ணர் இந்த தீர்த்தத்தில் நீராடியிருக்கிறார்.

12. இந்த வன்னிமரத்தடியில், அகத்தியருக்கு ஈசன் தனது திருமண கோலத்தைக் காட்டியருளினார். மார்க்கண்டேயருக்கும் ஈசன் இங்கே காட்சியருளினார். அரனின் அருளால் இத்தலத்தில் ஜென்மநாசினி, காமநாசினி, பாபநாசினி, ஞானதாயினி, மோட்சதாயினி என ஐந்து தீர்த்தங்கள் உருவாயின.

13. பிரம்மா இங்கு நகரம் அமைத்து ஈசனுக்கு விழா கொண்டாடியதால் பிரம்மனின் பெயரால் இங்கு பிரம்ம தீர்த்தமும் உள்ளது.

14. சுமார் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தலமான இதற்கு சோழ, பல்லவ மன்னர்கள் திருப்பணி செய்துள்ளார்கள்.

15. கோயில் வளாகத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்றையும் குறிக்கும் மூன்று விநாயகர்கள் அருள்கிறார்கள். இவர்களை வணங்க நம் முன்னோர்களின் ஆன்மா நற்கதி அடையும்.

16. உள்பிராகாரத்தில் கஜலட்சுமி, வீரபாகு, அருணகிரிநாதர் உடனிருக்க வள்ளி – தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி அருள்கிறார். 108 லிங்கங்கள் வரிசையாக அருள்பாலிப்பது விசேஷம்.

17.அன்னை சந்நதி முன்னே உள்ள கல் மண்டபத்தில் நடனமாடும் தியாகராஜர் ஓய்வு எடுப்பாராம்.

18. அன்னையின் மண்டப விதானத்தில் அஷ்ட லட்சுமி சக்கரம் உள்ளது. இங்கு நின்று வேண்டிக்கொள்ள, செல்வம் பெருகும்.

19 ஆலய தூணில் சரபேஸ்வரர் அருள்கிறார். இவரை வணங்க எதிரிகளால் ஏற்படும் தொல்லை நீங்கும். இன்னொரு தூணில் முருகன் மீசையுடன் காட்சியளிப்பது வித்தியாசமானது.

20. சென்னை, திருவான்மியூர் பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ளது இக்கோயில்.

தெரிந்து கொள்வோம்......

🙏🙏🙏🙏🙏

Guhagita with English commentary

Courtesy: Sri. P. R. Kannan

The book GUHAGITA in Samskrit, setting out the Upadesa of Sri Subrahmanya on Brahmavidya, together with my commentary in English, has been published in the Kamakoti website. There are also supplements on Kumara Upanishad and a Stotra.

All Sanskrit magazines archive

Now read all the Sanskrit magazines of their open-source latest editions. Collection by @ramdootah

Sraaddham - do's

*ஸ்ரார்த்த விதிமுறைகள் தொடர்ச்சி*

*#சில_குறிப்புகள்*

1.சிராத்தம் நடக்கும் போதும், சமையல் செய்யும் போதும், யாரும் (சாப்பிட வரும் பிராம்ஹணாள் உட்பட) அதிகப் பேச்சுக்களோ, வம்பு, அரசியல் போன்ற விவாதங்களில் ஈடுபடுவதோ கூடாது.

2.சங்கீதம், பக்தி கேசட்டுகளைக் கூட ஓட விடக்கூடாது. இவற்றையெல்லாம் கேட்டால் பித்ருக்கள் திரும்பி போய்விடுவார்களாம்.

3 .வீட்டில் சமையல் செய்து சிராத்தம் செய்ய வேண்டும். கர்த்தாவின் தர்மபத்தினி தளிகை செய்வது உத்தமம்.

4.ஸ்ரார்த்த முதல் நாள் எந்த பட்க்ஷண்மும் தயார் செய்து வைத்து, ஸ்ரார்த்ததில் உபயோகிக்கக் கூடாது.

5.சிலர் சமாராதனை சாப்பாடாக, தேங்காய் முதலியவைகளை சேர்த்து செய்வார்கள். இதுவும் சரிதான். ஏனெனில் சாப்பிடுபவர்கள் திருப்தியாக சாப்பிட இதில் வாய்ப்பு அதிகம்.

திருப்தியாக ப்ராம்ஹணர்க்ள சாப்பிட வேண்டுமென்பது மிக முக்கியம் அல்லவா? எங்காத்து வழக்கம் என்று முரண் பிடிக்காமல் தளிகை ருசியாக சமாராதனை ரூபத்தில் தயாரித்தால் தவறில்லை.

6.அதற்காக ஸ்ரார்த்ததில் விலக்கப்படவேண்டிய காய்கறிகளையும், பொருட்களையும் விலக்காமல் இருக்கக் கூடாது.

7.மொத்தத்தில் தளிகை நன்கு சாப்பிடும்படியாக இருக்க வேண்டும். அவரவர்கள் இல்லத்து பெரியோர்களின் ஒப்புதலோடு சமாராதனை சாப்பாடு ஏற்புபுடையதே என்பது அடியேனுடைய கருத்து.

8.தயாரிக்கும் மற்றும் பரிமாறும் ஸ்த்ரீகள் மிகவும் மடியாகவும், மடிசார் புடவையுடன் தான் இருக்க வேண்டும்.

9.தூய்மையிலாத பந்துக்கள் ஸ்ராத்த இடத்தில் இருக்கக் கூடாது.

10.தளிகை செய்து எல்லாம் ஆறி அலர்ந்து போயிருக்கக் கூடாது. சுடச்சுட ருசியாக சாப்பிடும்படி பரிமாறுவது அவசியம்.

11.தான் சந்தோஷமிக்கவனாக, ஸ்ரார்த்த ப்ராஹ்மணாளை சந்தோஷப்படுத்தியவாறே மெதுமெதுவாக அவர்கள் சாப்பிடுமாறு பரிமாறுவது முக்கியம்.

12.பதார்த்தங்களை அவர்கள் சமீபம் கொண்டு சென்று இந்த அத்ருஸம் ருசியாக செய்யப்பட்டுள்ளது;

இந்த வடை சூடாக உள்ளது; இன்னுமொன்று போட்டுக்கோங்கோ என்று பவ்யமாகக் கேட்டு திருப்தியாக சாப்பிடும்படி அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். (அதற்காக அவர்கள் வேண்டாம் என்ற சைகை காட்டியபோதும், அவர்கள் மீது திணிக்கக் கூடாது. அவர்களை ச்ரமப்படுத்தக் கூடாது).

13.தளிகையில் கோதுமை, உளுந்து, பயறு, எண்ணையில் செய்யப்பட்ட பதார்த்தங்கள், இவைகளை கட்டாயம் ஏதாவது ஒரு வடிவத்தில் சேர்க்க வேண்டும்.

14.கர்த்தா, சகோதரர்கள், பெண், புத்திர பௌத்திரர்கள், தௌஹித்திரர்கள், ஸபிண்ட ஞாதிகள், பித்ரு சேஷம் சாப்பிடலாம்.

15.ஒருவன் தனது மாமனார், மாமா இவர்களுடைய பித்ரு சேஷம் சாப்பிடலாம்.

16.ஸந்தியாவந்தனம் தொடர்ந்து செய்யாதவர்கள் ஸ்ரார்த்த நாள் அன்றாவது த்ரிகால ஸந்தியாவந்தனம் செய்துதான் ஆக வேண்டும்.

17.தளிகை ருசியாக உள்ளதா என்று கர்த்தா சாப்பிடும் ப்ராஹ்மணர்களிடம் வாய் தவறியும் கேட்கக் கூடாது.

18.கருப்பு எள் சாதத்தில் மிகவும் அவசியமான ஒன்று. ராக்ஷஸர்களை விரட்டி பித்ருக்களுக்கு திருப்தி தரக் கூடியது (எள்ளை ஆள்காட்டி விரலாலும் கட்டை விரலாலும் சேர்த்து எடுக்கக் கூடாது)

19.பழத்தைத் தவிர மற்றதை வெறும் கையால் பரிமாறக் கூடாது.

20.உப்பை தனியாக பரிமாறக் கூடாது.

21.ஸ்ராத்ததன்று காலையில் சிராத்தம் முடியும் வரயில் கர்த்தாவும் அவரது துணைவியாரும் எதுவும் சாப்பிடக் கூடாது.

22.அன்று மத்தியானம் போஜனமானபின் இரவில் சாப்பிடும் பழக்கம் தவறு.

23.மிக அவசியமெனில், திரவமாக சிறிது உணவு உட்கொள்ளலாம். உடல் நலம் குன்றியவர்களுக்கும் இது பொருந்தும்.

24.மாத்யாஹ்னிகம் செய்த பிறகு, ஸ்ரார்த்த கர்மா ஆரம்பிக்கலாம்.
க்ருஸரம் கொடுப்பதாக இருந்தால், சிராத்தாங்க ஸ்நானத்தை (2-வது ஸ்நானம்) பிறகு தான் செய்ய வேண்டும்.

25.ஸ்ரார்த்தம் அன்று காலை நனைத்து உலர்த்திய மடி வஸ்த்ரத்தைதான் உடுத்த வேண்டும். ஸ்ரார்த்ததில் மடி மிக முக்கியம்.

26.அபிச்ரவணம் சொல்பவர் கிடைக்காவிட்டால், தானே இதிகாச புராணங்கள் பாசுரமோ, ஸ்லோகங்களையோ, சூக்தாதிகளையோ, ப்ராம்ஹணாள் சாப்பிடும்போது சொல்லலாம்.

27.ஸ்ரார்த்த நாளன்று கோபமும், அவசரமும் கூடாது. மணி ஓசை, கோலம் முதலியவை கூடாது.

28.சிராத்தம் ஆரம்பித்து, அவர்கள் சாப்பிட்டு எழுந்திருக்கும் வரையில் கர்த்தா, அந்த ப்ராம்ஹணர்களுடன் பேசுவதையோ, பார்ப்பதையோ தவிர்க்கவும்.

29.இரும்புப் பாத்திரத்தை ஸ்ரார்த்ததில் உபயோகிக்கக் கூடாது.

30.மடிசார் புடவை, கட்டிக்கொண்டு ஸ்ரார்த்தம்  பண்ணுவது மிக உசத்தியானது. மகிமை வாய்ந்தது. அதை நாம் எப்போதும் அணிந்திருக்க வேண்டும். குறைந்தது ஸ்ரார்த்த கர்மா அன்றாவது கட்டிக் கொள்வது அவசியம். அவ்வாறே பஞ்சகச்சமும்.

31.தினசரி செய்யும் ஆத்து பூஜையை சிராத்தம் முடிந்த பிறகு செய்ய வேண்டும்.

*#ஸ்ரார்த்தத்தை_நம்_விருப்பத்திற்குத்_தள்ளிப்_போடக்_கூடாது*.

ஒரு வேளை தீட்டு, ஞாபக மறதி போன்ற காரணங்களினால் உரிய தேதியில் செய்ய முடியாமல் போய்விட்டால், அன்று உபவாசமிருந்து மறுநாள் சிராத்தம் செய்யலாம்.

கர்த்தா ஸ்ரார்த்தத்தையே மறந்துவிட்டு இருந்தால்,

அவருக்கு ஞாபகம் வந்தவுடன் அடுத்து வரக்கூடிய க்ருஷ்ண பக்ஷ அஷ்டமி, ஏகாதசி, அம்மாவாசை, இதில் ஏதாவது ஒரு திதியில் செய்ய வேண்டும்.

ப்ராஜாபத்ய க்ருச்ரம் செய்து ஆரம்பிக்கவேண்டும்.

ஒருவேளை சிராத்தம் செய்பவருக்கு உடல் நலம் குன்றியோ, அல்லது தள்ளாமையோ வந்தால்,

பிறரை விட்டு (மகனாக இருந்தாலும் தோஷமில்லை) ஹோமம் செய்து ஸ்ரார்த்தத்தை நடத்தலாம்.

கயா ஸ்ரார்த்தமும், ப்ரத்யாப்திக ஸ்ரார்த்தமும் சமீப காலமாக ஒரு கருத்து ஆங்காங்கு நிலவி வருகிறது.

கயாவில் ஒரு தடவை சிராத்தம் செய்து விட்டால் வருஷா வருஷம் இனி சிராத்தம் செய்யத் தேவையில்லை என்பதே அது.

*#இது_சுத்த_அபத்தம்*.

*#சாஸ்த்திர_விரோதமானது*.

ஒரு சிறு உதாரணத்தின் மூலமாக இதை புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.

ஒரு நாள் பிரமாதமான மிக ருசியான உயர்ந்த விலையில் பலவகைகளுடன் மிகவும் காஸ்ட்லியான விருந்து (பெரிய நக்ஷத்ரஓட்டலாகவும் அது இருக்கலாம்) சாப்பிட்டு விட்டால், மறுநாள் நாம் சாப்பிடாமல் இருந்து விடுகிறோமா?

கயா சிராத்தம் மிக உன்னதமானது. ஜன்மாவில் ஒரு தடவையாவது கயா சிராத்தம் செய்ய வேண்டும்.

ஆனால் அதற்கும் வருஷாவருஷம் செய்யும் ப்ரத்யாப்திக ஸ்ரார்த்ததிற்கும் சம்பந்தம் கிடையாது. இது வேறு. அது வேறு.

*#ஔபாஸன_அக்னி*

ஔபாஸனம் நமக்கு நித்ய கர்மாவாகும்.

ஆனால் இக்காலத்தில் நாம் செய்வதில்லை.

ஸ்ரார்த்தத்தன்று ஔபாஸனம் செய்கின்றோம். ஹிரண்யமாக சிராத்தம் செய்யும்போதும் அல்லது பெரியவரோடு மற்ற தம்பிகள் சேர்ந்து ஒரே ஸ்ரார்த்தமாக செய்யும்போது, ஔபாஸனம் நம்மை விட்டு அறவே விலகிவிட வாய்ப்புள்ளது

கிருஹஸ்தனுக்கு அடையாளமான ஔபாஸனம் விலகி விடாமல பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா?

ஸ்ரார்தம் பார்வணமாகத்தான் (ஹோமத்துடன்) செய்ய வேண்டும்

(பிரம்மச்சாரி கர்த்தாவாக இருந்தால் ஔபாஸனத்திற்கு பதிலாக ஸமிதாதானம் சொல்லப்பட்டுள்ளது).

*#நம்பிக்கை*

அவரவர்கள் அவரவர் சூத்திரப்படி சிராத்தம் செய்வதுதான் முறை.

ஒரு வேளை குறிப்பிட்ட சூத்திரம் பண்ணிவைக்க ஆசாரியன் கிடைக்காத பட்சத்தில் எந்த சூத்திர வாத்தியார் கிடைப்பாரோ அந்த சூத்திரபடியாவது சிராத்தம் செய்யலாம்.

*#கர்மாவை_விடக்கூடாது*.

அதே மாதிரி வாத்யார்களை குறை சொல்லவும் தேவையில்லை. அவரவர்கள் கர்மா அவரவர்களுடையது.

நமது ச்ரத்தையும், பார்வையும் தான் முக்கியம். அதைக் கவனத்தில் வைத்துக் கொள்ள வெண்டும்.

*#சம்பாவனை*

ஸ்ரார்த்ததில் இப்பொழுதெல்லாம் இன்னொரு விஷயமும் பிரச்சனையாகி வருகின்றதை நாம் சில இடங்களில் பார்க்கின்றோம்.

அது சம்பாவனை விஷயத்தில். எங்கள் அப்பா அப்போதெல்லாம் இவ்வளவுதான் கொடுப்பார் என்ற ஆர்க்யுமெண்ட். சிறிது யோசித்தாலும் நமக்கே புறியும், இது எவ்வளவு அபத்தமென்று.

சிலர் குறிப்பிடுகின்ற அந்த காலத்தின் ஒரு ரூபாய் என்பது இன்று கிட்டத்தட்ட 100 ரூபாய்க்கு சமமல்லவா?

அதனால் இப்படியெல்லாம் வாதிடாமல் தன்னால் முடிந்ததை திருப்தியாக சம்பாவனை அளிப்பது உசிதம்

வாதயாரை தேவதாஸ்வரூபமாக நினைப்பதுதான் நமது பாரம்பரியம்.

*#சாப்பிடும்_ப்ராம்ஹணாள்*

எக்காரணம் கொண்டும் வரிக்கப்பட்ட பிராம்ஹணாளை அவமானப்படுத்தும் எண்ணமே நமக்கு வரக்கூடாது.

நாம் எல்லோருமே ப்ராம்மணார்த்தம் சாப்பிட வேண்டிய குலத்தில் பிறந்தவர்கள்தானே!

நம் முன்னோர்களும் ஒரு காலத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள்தானே!

ஆனால் இன்று நம்மில் எத்தனை பேர் இன்னொரு வீட்டில் போய் ப்ராம்மணார்த்தம் சாப்பிடத் தயார்? நம்மால் முடியாதல்லவா?

அப்படிஇருக்கும்போதுமற்றவர்களைகுறைகூறுவதில் நமக்கு என்ன யோக்யதை இருக்கு?

ப்ராம்மணார்த்தம் சாப்பிடுபவர்களும் ஒரு வகையில் பொது சேவை செய்பவர்கள்தான்.

அவர்கள் இல்லாவிடில் கர்மா எப்படி நடக்கும். நாம் யோசிக்க வேண்டிய விஷயம்.

*#வைதீகம்*

வைதீகத்தில் நம்பிக்கை வளர வேண்டும் அதற்க்கு பண்ணிவைக்கும் வாத்யார்மீது நம்பிக்கையும், மரியாதையும் வைப்பதுதான் ஒரே வழி.

வைதீக தர்மத்தை அனுஷ்டிப்பது நமது கடமையாக் இருப்பதால் மிக முக்கியமான மந்திரங்களையாவது நாம் ஒவ்வொருவரும் அத்யாயனம் செய்ய வேண்டும்.

கேசட்டுகளை நம்பக் கூடாது. ஏனெனில் அது நம்மைத் திருத்தாது. மேலும் கேசட்டுக்களைக் கேட்கும்போது, நம்மை அறியாமலே நமக்கு ஒரு திருப்தி மாயை ஏற்பட்டு விடுகின்றது. நாம் வாயை திறந்து சொன்னால்தான் பலன் கிடைக்கும்.

ஒரு நாளும் ஸந்தியாவந்தனம் செய்யாமல் இருக்க வேண்டாம்.

குறிப்பாக ஸந்தியாவந்தனத்தில் வரும் ப்ராணாயாமம், சூரிய த்யானம், தர்ப்பணம், காயத்ரி ஜபம் போன்றவைகளை கவனமாக செய்யப் பழகுவது நல்லது.

கூடியமானவரை ஆசார நியமங்களை நாம் கடைபிடித்தால், நமக்கு ச்ரேயஸ் உண்டாகும் என்பதில் சந்தேகமில்லை.

*#பித்ரு_தோஷம்_இல்லாமல்_இருக்க_நாம்_அனைவரும்**#_அவர்களுக்கு_ஸ்ரார்த்தம்_பண்ணுவது_மிகவும்_அவசியம்_பண்ணுங்கள்*

முற்றும்

Madurai Meenakshi temple

*மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெரியும் இவற்றை எல்லாம் தெரியுமா?*

மீனாட்சி அம்மனின் மற்றொரு பெயர் அங்கயற்கண்ணி, 

மீனாட்சி அம்மனின் அப்பா, அம்மா மலயத்துவசன், காஞ்சனமாலை, 

மீனாட்சி அம்மனின் சிலை மரகதக்கல்லினால் ஆனது. 

மீனாட்சி அம்மன் வலது கையில் கிளி வைத்திருப்பார், 

மீனாட்சி அம்மன் கோயில் குளத்தின் பெயர் பொற்றாமரைக் குளம்,

மீனாட்சி அம்மன் கோயில் விமானத்தின் பெயர் இந்திர விமானம். 

பஞ்ச சபைகளில் மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள சபையின் பெயர் வெள்ளியம்பல சபை.

 மீனாட்சி அம்மன் கோயிலில் கால் மாறி நடனமாடியவர் நடராஜர். 

மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள மிகப்பெரிய விநாயகர் பெயர் முக்குறுணி விநாயகர். 

மதுரையில் சிவபெருமானுக்குத் தொண்டு செய்த நாயன்மார் மூர்த்தி நாயனார்,

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என கூறியவர் நக்கீரர். 

மீனாட்சி அம்மன் கோயிலிலுள்ள கோபுரங்கள் எத்தனை ? 
14 கோபுரங்கள். மீனாட்சி அம்மன் கோயிலின் மிக உயரமானது தெற்கு கோபுரம்.

 மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள புகழ்பெற்ற மண்டபம் எது?
 ஆயிரங்கால் மண்டபம் நவகிரக ஸ்தலங்களில் மீனாட்சி அம்மன் கோயில் புதன் ஸ்தலமாகும்.

மீனாட்சி குங்குமத்தில் காந்தம்: 

மதுரை மீனாட்சி குங்குமம் காந்தசக்தி மிக்கது என்கிறார் இங்கிலாந்து அறிஞர் சார்லஸ் டபிள்யூ லெட்பீட்டர். 

இவர் ஒருமுறை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை தந்தார். அங்கே அவருக்கு குங்கும பிரசாதம் கொடுத்தார்கள்.

 அடுத்து, சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு சென்ற போது விபூதி தரப்பட்டது. இதை ஏன் இந்திய மக்கள் நெற்றியில் இட்டுக் கொள்கிறார்கள் என்பதை அறிய அவருக்கு ஆவல். உடனே, அதை பரிசோதனை செய்தார். அவற்றிலிருந்து காந்தசக்தி வெளிப்பட்டதை உணர்ந்தார். இது என் வாழ்வில் நான் கண்ட அதிசயம் எனதான் எழுதிய தி இன்னர் லைப் என்ற புத்தகத்தில் எழுதினார். இதை விட அதிசயம் ஒன்று உண்டு என்றும் அவர் சொல்கிறார். 

சில ஆண்டுகள் கழித்தபிறகு, அந்த குங்குமம், விபூதியை பரிசோதனை செய்தார். அப்போதும், முன்பு கண்ட அதே அளவு காந்தசக்தி சற்றும் குறையாமல் வெளிப்படுவது கண்டு அசந்து போனார்.

 இப்படி ஓர் அதிசயத்தை நான் எந்த நாட்டிலும் கண்டதில்லை என்று அவர் எழுதி வைத்திருக்கிறார். 

நாம், மீனாட்சி குங்குமத்தை கோயில் தூண்களில் கொட்டி வைத்து பாழாக்கிக் கொண்டிருக்கிறோம். 

இனிமேலாவது, அன்னையின் குங்குமத்தை அளவோடு வாங்கி, பூஜையறையில் பத்திரமாக வைப்போம். 

*அன்னையின் அருட்கடாட்சம் என்று நிலைத்திருக்கச் செய்வோம்.*

Wednesday, April 10, 2024

Excerpts from purusha vadam - Balakumaran novel

"எழுத்துச் சித்தர், ஞானி, மஹான்  பாலகுமாரன்" அவர்களால் எழுதி வெளிடப்பட்ட    "புருஷவதம்" என்ற அற்புதமான நாவலில் உள்ள கீழ்க்கண்ட இந்த கருத்துக்கள் என் சிந்தை கவர்ந்தவை. ( பக்கம் 215 - 217) 

கங்கைக் கரை மிக நுண்ணிய அதிரலைகள் கொண்டது. சூட்சும ரூபத்தில் அங்கே வசிப்பவர்கள் அதிகம். அந்த நதியின் மீது ப்ரேமை வந்தது.

அதை விட்டு ஒருநாள் கூட பிரியாமல், எத்தனை காசு கொடுத்தாலும் கங்கை இல்லாத இடத்துக்குப் போகாமல் கங்கையின் குளுமையில் நடந்து கொண்டே தன் உடம்பையும், மனதையும் ஆற்றிக் கொண்டவர்கள், இறந்து போன பிறகும் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

இந்த உலகம் உடல் ரூபம் கொண்டவர்களது மட்டுமல்ல. உடலில்லாது சூட்சும சரீரம் உடையவர்களும் இங்கே உண்டு. 

அவர்கள் பிரபஞ்சத்தின் வேறு பகுதிக்குப் போகாமல், வாழ்ந்தபோது உண்டான வாசனை விடமுடியாது, எண்ணங்களை அகற்றமுடியாது, மனம் என்பதை விடமுடியாது, ஆசைகளோடு வாழ்ந்திருப்பார்கள். 

ஆசைகளை அனுபவிக்க உடல் வேண்டும், அவர்களிடம் உடல் இல்லை. அவர்களுக்கு கங்கையில் குளிக்க ஆசை. ஆனால் குளிக்க முடியாது. கங்கை நீரைக் குடிக்க ஆசை. ஆனால் குடிக்க முடியாது.

ஒரு நாளைக்கு மூன்று நான்கு முறை குளித்தும், குடித்தும் பழக்கப்பட்டவர்கள். கங்கா மாதா கீ ஜெய்... என்று கூவி நூறு வயது வாழ்ந்தவர்கள். மேலேயும் போகமுடியாமல், கீழேயும் வரமுடியாமல் தத்தளிப்பார்கள்.

கங்கைக்குப் புதிதாகக் குளிக்க வருபவர்களை அவர்கள் ஆவலோடு பார்த்து ஆசீர்வதிப்பார்கள். தர்ப்பணம் செய் என்று மனதுக்குள் தூண்டுவார்கள். தர்ப்பணம் செய்பவர்களுக்கு அருகே உட்கார்ந்து கொள்வார்கள். யாருக்குத் தர்ப்பணம் என்பதை நொடியில் கண்டுபிடித்து விடுவார்கள்.

"விஷ்ணுவே இவன் பெற்றோரின் பொருட்டு இவன் செய்யும் தர்ப்பணத்தை துளசிதளத்தோடு ஏற்றுக் கொண்டு இவன் பெற்றோர்களுக்கு விடுதலை கொடு."

அவர்களும் பிரார்த்திப்பார்கள். ரிஷிகளுக்கும், முனிகளுக்கும், சாதுக்களுக்கும் முழங்கை வழியே தர்ப்பணம் செய்யப்படும்போது அந்தத் தர்ப்பண ஜலத்தை ஆவலாக ஏந்தி அந்த நீரில் ததும்பி இருக்கும் அன்புச் சக்தியைப் பருகுவார்கள்.

மன ஒருமையோடு செய்யப்படும் தர்ப்பணத்தில் அன்புச் சக்தி பொங்கி ததும்பியிருக்கும். அந்த அன்புச் சக்தி அந்த சூட்சும சக்திகளின் மனதை ஒருமைப்படுத்தும். அந்த மன ஒருமை அவர்களை அமைதிப்படுத்தும் அல்லது விடுதலை வாங்கித்தரும்.

உடல் காணாது போவது அதாவது ஒரு விடுதலை என்பது போல மனம் காணாமல் போவதும் ஒரு விடுதலை. அதுவும் ஒருவகை மரணம்.

உடல் இல்லை. ஆனால் உடலால் வாழ்ந்த மனம் இன்னும் இயங்குகிறது. உடம்பு இருப்பது போலவே நினைத்துக் கொண்டு மயங்குகிறது என்பது ஒரு வேதனையான விஷயம். ஒரு தத்தளிப்பு.

சூட்சும வாழ்க்கை, அதாவது பித்ருலோகம் ஒன்றும் நிறைவானது அல்ல. பிரபஞ்சம் பற்றிய அறிவு பித்ருலோகத்தாருக்கு அதிகம் தெரியும்.

உலகமெங்கும் வேகமாய் அலைய முடியும். இன்னொரு சூட்சும சக்தியோடு தொடர்பு இன்னும் வேகமாய் ஏற்படுத்திக் கொள்ள முடியும். சும்மாவும் இருக்க முடியும்.

ஆனால் நிறைய சூட்சும சக்திகள் சும்மா இருப்பதில்லை. பிரபஞ்ச அறிவு ஏற்பட்டு விட்டதால் மனிதர்களை நோக்கிக் கதறுகிறார்கள். 'செய்.. இதைச் செய்... இதைச் செய்ய வேண்டாம்' என்று ஆவேசத்தோடு கதறுகிறார்கள்.

சில மனிதர்களுக்கு உள்ளுணர்வாய் இது புரிகிறது. சிலருக்கு இது புரிவதில்லை. தான் என்கிற கர்வம் மனிதனுக்குச் சொல்லப்படும் காரணங்களின் முதன்மையானது, சூட்சும ரூபங்களைப் புரிந்து கொள்ளுதல் நல்லது என்பதற்காகத்தான்.

கர்வம் உள்ளவருக்கு சூட்சுமமும் தெரியாது, ஸ்தூலமும் தெரியாது. அவர்களுக்கு எதிரே உள்ள மனிதர்கள் பேசுவதும் தெரியாது. தலைக்கு மேலே உள்ள பித்ருக்கள் பேசுவதும் கேட்காது.

(இந்தப் பதிவினை வாசித்த பிறகு ஏற்படும் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் முழுவதும் உரித்தானவர் இதை எழுத்தாக்கி படைப்பித்த ஆசிரியர் எழுத்துச் சித்தர் ஞானி, மஹான் பாலகுமாரன் அவர்களே.) 

நன்றி.
குருவே துணை.

ஹர ஹர கங்கே. ஒம் நமோ நாராயணாய...

Thanks : Vadavalli Ravichandran மற்றும் Swami Hyrudhayanandha

laksha bhojanam- Periyavaa

சங்கராம்ருதம் - 833

 ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்

 ஸ்ரீ பெரியவாளிடம் அபார பக்தி கொண்டிருந்தாள் அந்த ஏழைப் பாட்டி. கையிலிருந்த சொற்ப பணத்தைக் கொண்டு மிகவும் சிக்கனமாக வாழ்க்கை நடத்தி வந்தாள். மடி ஆசாரம் இவைகளை மிகவும் சிரத்தையோடு கடைபிடிப்பவள்.
தினமும் ஈஸ்வரரான பெரியவா குடிகொள்ளும் இடத்தை சுத்தம் செய்து கோலம் போடுவதும், தீபம் ஏற்றுவதும் தனக்குக் கிட்டிய பெரும்பாக்யமாக கருதி செய்துக் கொண்டிருந்தாள் அந்த மூதாட்டி.

இரண்டு புடவைக்குமேல் அந்த பாட்டியிடம் பொருள் ஒன்றுமில்லை.

ஒரு முறை ஸ்ரீ பெரியவாளை தரிசிக்க வந்த பக்தர் ஒருவர் அரிசிக் குறுணையும், வெல்லத்தையும் மகானுக்கு சமர்பித்துவிட்டு சென்றுவிட்டார். அவற்றை பயனுள்ளதாக விநியோகம் செய்ய வேண்டுமல்லவா! பாட்டிக்கு ஸ்ரீ பெரியவாளின் உத்தரவு கிட்டியது.

"இந்த குறுணையை எடுத்துண்டு போய் காஞ்சிபுரத்திலே உனக்கு கண்ணிலே படற எல்லா எறும்புப் புத்துக்களிலும் கொஞ்சம் கொஞ்சமா போட்டுட்டு வா. அரை ஆழாக்கு வீதமா போடு" என்று மாமுனிவரின் திருவாக்கு.

பாட்டியின் பக்தி சிரத்தை எல்லோரும் அறிந்ததே. காஞ்சிபுரம் முழுவதும் அலைந்து பல எறும்பு புற்றுகளை கண்டு பிடித்து அரிசிக் குறுணையும் வெல்லத்தையும் போட்டுவிட்டு வந்தாள். இதை மிக எளிதாக எழுத முடிகிறதென்றாலும், எறும்பு புற்று என்பது வீட்டில் எப்போதேனும் திடுதிப்பென்று தோன்றி மறையுமேயன்றி நாம் தேடி போனால் லகுவில் தென்படுமென்று சொல்லிவிட முடியாது.

ஸ்ரீ பெரியவாளின் அருளால் பாட்டி இந்த காரியத்தை முடித்து விட்டு வந்தபோது ஒரு பெரிய மாலைப் போல இருந்த திரிநூலையும், ஒரு டின் நிறைய எண்ணையையும் ஸ்ரீ பெரியவா பாட்டியிடம் காட்டி,"திரிநூலை நறுக்கி ஒவ்வொரு கோயிலுக்கா போய், எத்தனை விளக்குக்கு போட முடியுமோ, அத்தனை விளக்குக்கும் போடு. ஒவ்வொரு நாளும் ரெண்டு, மூணு கோயிலுக்குபோய் விளக்கேற்றினாலும் போதும்".

இப்படி ஒரு கட்டளை மறுபடியும் போட்டார்கள். பாட்டிக்கோ இதில் பரம சந்தோஷம். மிக சிரத்தையுடன் நாள்தோறும் சில கோயில்களென்று சென்று பரமேஸ்வரரின் கட்டளைப்படி சில நாட்களில் இந்த திருப்பணியை நிறைவேற்றினாள். இந்த செய்தியையும் ஸ்ரீ பெரியவாளிடம் சொன்னதில் பாட்டிக்கு பெருமகிழ்ச்சி.

நடமாடும் தெய்வமான ஸ்ரீ பெரியவாளின் ஒவ்வொரு திரு செயலுக்கும் ஏதோ ஒரு அர்த்தம் இருந்துள்ளதை அனைவரும் அறிந்திருக்க, பாட்டிக்கு பெரியவா இட்ட இந்த கட்டளைக்கு காரணம் இல்லாமல் போகுமா என்ன!

ஒரு நாள் ஒரு பெரிய பணக்கார மனுஷர் மடத்திற்கு படு ஆடம்பரமாக வந்தார். அவர் வந்த தோரணையும் அமர்களமான அவருடைய அகங்காரத்தை வெளிப்படையாக காட்டுவதாக இருந்தது.

தற்பெருமை மேலோங்கி தொனிக்க "நான் சகஸ்ர போஜனம் செஞ்சிட்டு வந்திருக்கேன். அதோடு லட்சதீபமும் போட்டுருக்கேன்" என்றார்.

ஸ்ரீ பெரியவாளுக்கு இவருடைய அகம்பாவம் தெரியாமல் போகவில்லை போலும். தர்ம கார்யங்கள் செய்துவிட்டு அவைகளை வெளியே பேசி கொள்வதே இரண்டாம் பட்சம் என்பதோடு அதை பெருமையாக சொல்லிக் கொள்வதில் புண்ணிய பலன்கள் வீணாகிவிடுகிறதல்லவா.

இதையே பவ்ய பாவத்தோடு, தாழ்மையோடு ஸ்ரீ பெரியவா திருசெவியில் விழவேண்டுமே என்ற ஆதங்கத்தோடு தெரிவிக்கப்பட்டிருந்தால் அதை அந்த பரம கருணாதயாளன் ஏற்று சிலாகிக்கும் காருண்யமே அலாதியாக இருக்கும்.

அகம்பாவமே மொத்த உருவமாக நின்ற அந்த தனவந்தரிடம் ஸ்ரீ பெரியவா ஏதோ பேச்சை மாற்றி பேசுவது போல ஆரம்பித்தார்.

"இங்கேயும் ஒரு பாட்டியிருக்கா. அந்த அம்மாளும் லட்சபோஜனம் செய்திருக்காள். பல லட்சதீபம் போட்டிருக்கா" என்றார் ஸ்ரீ பெரியவா அந்த பெரிய மனிதரிடம்.

வந்தவருக்கோ ஒரு மாதிரியாகிவிட்டது. தான் பெருமையாக சொல்வதை காதில் போட்டுக் கொள்ளாமல் ஸ்ரீ பெரியவா இன்னொரு பாட்டி இதே போல் செய்திருப்பதோ சொல்கிறாரே…அந்த பாட்டி தன்னைவிட ரொம்ப பணக்காரியோ என்றெல்லாம் எண்ணத் தொடங்கினார். கூடவே அப்படிப்பட்ட பாட்டி யார் என்பதை அறியும் ஆவலும் மனதில் தோன்றியது.

எதிரே நிற்கும் பக்தரின் மனதை படித்துவிட்ட பெருமான் அந்த பாட்டியை அழைத்து வருமாறு கூறினார்.

"இவள்தான் அந்த உத்தமமான காரியத்தை செய்தவள்" என்று ஏழை பாட்டியை ஸ்ரீ பெரியவா காட்டியபோது தனவந்தர் அயர்ந்து போனார். அழுக்கான கிழிசல் புடவையோடு நின்று கொண்டிருந்த பாட்டியை அந்த பெரிய மனிதர் ஆச்சரியமும் சந்தேகமுமாக நோக்கிக் கொண்டிருக்க, ஸ்ரீ பெரியவா சொல்லத் தொடங்கினார்.

"ஸர்வ ஜீவனிடத்திலும் பகவான் வியாபித்திருக்கார். பிரம்மாவில் ஆரம்பித்து பிபீலிகம் (எறும்பு) வரை பகவான் வாசம் செஞ்சுண்டிருக்கார். மனுஷ்யாளிடத்தும் இருக்கார்.

நீ ஆயிரம் பேருக்கு அன்னம் போட்டிருக்கிறாய், ஆனால் இந்த பாட்டியோ பல லட்சம் ஜீவன்களுக்கு ஆகாரம் போட்டிருக்காள்.

ஏதோ ஒரே ஒரு கோயிலுக்கு லட்சதீபம் போட நீ திரவியம் கொடுத்திருப்பே, லட்சம் தீபத்துக்கும் நீயே எண்ணெய் விட்டு திரி போட்டு தீபம் ஏற்ற உன்னால முடிஞ்சிருக்காது. இந்த பாட்டி பல கோயில்களுக்கு போய் பக்தி சிரத்தையாய் அகல் வாங்கி, எண்ணெய் ஊற்றி, திரி போட்டு தன் கையாலேயே தீபம் ஏற்றியிருக்காள்".

ஸ்ரீ பெரியவா இப்படி சொல்லி முடித்த போது பிரமுகர் தன தவறை உணர்ந்து விட்டவராய் தலை குனிந்து நின்றார். உலகெலாம் காத்து ரட்சிக்கும் கிருபாகரராய் ஸ்ரீ பெரியவா அருள, அந்த நடமாடும் தெய்வத்திடம் நாம் அகந்தை உணர்வோடு தற்பெருமையாக பேசிவிட்டது எத்தனை குற்றமென அவருக்கு உறுத்தியது.

தெளிந்து விட்டவராய் எல்லோரையும் மறைத்துக் கொண்டு நின்றவர் சற்றே விலகி மற்ற பக்தர்களுக்கு வழிவிட்டு நின்றார்.

ஆனாலும் தாயினும் சிறந்த பரிவுடன் ஸ்ரீ பெரியவா உடனே தன்னை உணர்ந்து கொண்ட பக்தரை உடனே அரவணைக்கும் விதமாக, இதமாக உட்கார வைத்து சிறிது நேரம் பேசி பிரசாதங்களையும் கொடுத்தனுப்பினார்.

அடக்கம் கற்றுக் கொண்ட ஆனந்தத்தோடு அந்த பிரமுகருக்கு எந்த கைங்கர்யத்திலும் தனக்கு ஏற்ற தகுதியில் செய்வதோடு சிரத்தை எத்தனை முக்கியமென்பதை பாடமும் புரிந்தது.

அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபிணம் 
ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
Thanks: Madambakkam Shankar FB

Sanskrit class

🕉️ *வியாஸ வித்யா மந்திரம்* 
🌹 நமஸ்காரம். 
🌹 பாரதத்தின் பழம்பெரும் பொக்கிஷமான ஸம்ஸ்க்ருத மொழியை எழுத, படிக்க,  பேசக் கற்றுக்கொள்ள ஓர் அரிய வாய்ப்பு.

🌹 வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக கற்றுக் கொள்ளலாம்.

🌹 முதல்நிலைத் தேர்வு ஆத்யா - 1 க்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

🌹 கீழ்காணும் அனைத்து விவரங்களையும் கவனமாகப் படித்து *GOOGLE FORM* மூலமாக  விண்ணப்பப் படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்யவும்.

🌹 பன்னிரெண்டு வயது நிரம்பி இருந்தால் போதுமானது.  அதற்கு மேல் வயது வரம்பு தடை கிடையாது.

🌹 முன்பே ஸம்ஸ்க்ருதம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

🌹 ஒன்பது மாத காலத்திற்கு ஒரு முறை தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும்.

🌹 தமிழ் வழியில் கற்றுக் கொள்ளலாம்.

🌹 பாடப்புத்தகம் மற்றும் அஞ்சல் தொடர்பு உட்பட இதர செலவுகளுக்கான கட்டணம் ₹500/- மட்டுமே.  
 *(👆மேற்படி தொகையை அனுப்புவதற்கான வங்கி கணக்கு விவரங்கள் GOOGLE FORM உள்ளேயே  தரப்பட்டுள்ளன.)* 

🌹 பயிற்சிக்  கட்டணம் கிடையாது. 

🌹 கீழ்க்கண்டபடி தங்களுக்கான வகுப்பு நேரத்தை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

🌹 வார நாட்கள் எனில் வாரத்தில் மூன்று நாட்களிலும் வாரக் கடைசி நாட்கள் எனில் இரு தினங்கள் மட்டும்  வகுப்புகள் நடத்தப்படும்.

 *Batch Timings* 
👉 Tuesday, Wednesday & Thursday Timings
10.00A.M. - 11. 00A.M.        
11.00A.M. - 12.00 NOON
12.00 NOON - 01.00P.M.
01.00P.M. – 02.00P.M.
02.00P.M. – 03.00P.M.
04.00P.M. - 05.00P.M.
04.30P.M. - 05.30 P.M.
06.00P.M. - 07.00P.M.
07.00 PM. - 08.00 P.M.


👉 Saturday & Sunday Timings 
11.30 A.M - 01.00 P.M
04.00 P.M - 05.30 P.M
👆 தாங்கள் தேர்ந்தெடுக்கும் நேரத்திற்கு உட்பட்ட  நேரத்தில் வகுப்பு நடைபெறும்.

🌹 மேற்கூறிய விவரங்களை முழுவதுமாக படித்தபிறகு  GOOGLE FORM-ல் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்குத்  தகுந்தபடி  தங்களைப் பற்றிய முழுமையான விவரங்களைப் பதிவு செய்து அங்கேயே தரப்பட்டுள்ள விவரப்படி  தேர்வுக்கான தொகை Rs.500/- செலுத்தியதும் தங்களுடைய  மெயிலுக்கு பதிவுக்கான சான்று  வந்து சேரும்.

Google form link.

🌹 Google form பூர்த்தி செய்த  பிறகு 8985569956 என்கிற வாட்ஸ் அப் எண்ணிற்கு பணம் அனுப்பியதற்கான தேதி மற்றும் விவரத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

🌹 நிறைவாக கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுமத்தில் தங்களை இணைத்துக் கொள்ளவும்.  வகுப்பு பற்றிய பொதுவான தகவல்கள் அதில் தெரிவிக்கப்படும்.

🌹 உடன் இணைவோம்.  நண்பர்களையும் சகமாணவர்கள் ஆக்கிக்கொள்வோம்.

🌹 மேலும் விவரங்களுக்கு : 
Sri. Ravi   -  6385261753
Sri. Ramji - 9443628831
Sri. Venkatachalam - 9486473425

🌹 இணைந்து கற்போம் 
🌹 இறைவனின் மொழியை.

Dog going with yudhishtira story

மகாபாரதப் போர் முடிந்த பல ஆண்டுகள் ஆகிவிட்டன. காந்தாரி கொடுத்த சாபத்தின் விளைவாக யாதவர்களுக்குள் சண்டை நடந்து யாதவ குலம் முற்றிலும் அழிந்துபோனது. கிருஷ்ணரால் அதைத் தடுக்க முடியவில்லை. தனது அவதாரம் முடிவுக்கு வர வேண்டிய காலம் வந்துவிட்டதை அவர் உணர்ந்தார். அடர்ந்த புதர்கள் நிறைந்த ஒரு மரத்தடியில் கால்களை நீட்டி ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது ஒரு வேடன் எய்த அம்பு அவர் பாதத்தில் நுழைந்து உயிரைக் குடித்தது.

யாதவர்களும் கிருஷ்ணனும் இறந்த செய்தி ஹஸ்தினாபுரத்தை எட்டியது. தங்களுக்கும் முடிவு காலம் வந்துவிட்டதை தருமன் உணர்ந்தான். உலக வாழ்வைத் துறந்து செல்லலாம் என்று நினைத்தான். அவரது தம்பிகளும் திரௌபதியும் இதை ஒப்புக்கொண்டார்கள். எல்லா உறவினர்களையும் இழந்த அவர்களுக்கு இனியும் உயிர் வாழப் பிடிக்கவில்லை. அதுவும் தங்களுக்கு ஆருயிர் நண்பனாக இருந்த கிருஷ்ணனின் மறைவு அவர்களை மிகவும் பாதித்துவிட்டது.

அர்ச்சுனனின் மகன் அபிமன்யுவின் மகன் பரீட்சித்துக்குப் பட்டம் சூட்டிவிட்டுப் பாண்டவர்கள் பாஞ்சாலியுடன் நாட்டை விட்டுக் கிளம்பினார்கள். வடக்கில் இமயமலைக்கு அப்பால் இருக்கும் மேரு மலையை நோக்கிச் சென்றார்கள். உலக இன்பங்களையும் ஆசைகளையும் பந்த பாசங்களையும் அறவே துறந்து மேருமலையைக் கடப்பவர்கள் மனித உடலுடன் சொர்க்கத்துக்குச் செல்ல முடியும் எனச் சான்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அத்தகைய பயணத்துக்குத் தேவையான மனநிலையுடன் பாண்டவர்கள் துறவறம் பூண்டார்கள். மரவுரி தரித்துக்கொண்டு புறப்பட்டார்கள். அரச பதவியையும் அரண்மனைச் சுகங்களையும் துறந்து வாழ்க்கையின் மீதான ஆசையை விடுத்து, மோட்சம் நாடிச் சென்றார்கள்.

லட்சக்கணக்கான வீரர்களின் இறுதி யாத்திரையைத் தீர்மானித்த அந்த வீரர்கள் தங்களது இறுதி யாத்திரையைத் தாங்களே முடிவுசெய்தபடி கிளம்பினார்கள். அவர்களுடன் தருமபுத்திரன் வளர்த்துவந்த நாயும் உடன் சென்றது.

பின்தொடர்ந்த நாய்....

மேரு மலைக்கு யாத்திரை செல்பவர்கள் திரும்பிப் பார்க்கக் கூடாது என்பது நியதி. தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், திரௌபதி ஆகியோர் ஒருவர் பின் ஒருவராகச் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து நாயும் சென்றது.

பாண்டவர்கள் பல நாட்கள் பயணம்செய்து இமயமலையை அடைந்தார்கள். அதைக் கடந்து சென்று மேரு மலையைத் தரிசித்தனர். மேரு மலையில் பயணம் சென்றபோது திரௌபதி சோர்ந்து விழுந்து இறந்து விட்டாள்.

அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பீமன், "திரௌபதி ஏன் வீழ்ந்துவிட்டாள்?" எனத் தன் அண்ணனிடம் கேட்டான். தருமன் திரும்பிப் பார்க்காமல் பதில் சொன்னான்: "ஐவரிடமும் சமமான அன்பு வைக்க வேண்டியவள், அர்ச்சுனனிடம் கூடுதல் அன்பைக் காட்டினாள். அதனால்தான் அவளால் இந்தப் பயணத்தில் தாக்குப்பிடிக்க முடியவில்லை."

சிறிது நேரத்தில் சகாதேவன் மயங்கி வீழ்ந்தான் "சகாதேவன் ஏன் விழுந்தான்? என்று கேட்டான் பீமன். "தன்னிடம் உள்ள சாஸ்திர அறிவு வேறு யாரிடமும் இல்லை என்ற கர்வம்தான் காரணம்" என்றபடியே தருமன் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டிருந்தான்.

அர்ச்சுனன் வீழ்ந்தான்....

சிறிது நேரத்தில் நகுலன் சாய்ந்தான். பீமன் மீண்டும் காரணம் கேட்டான். தன்னை மிஞ்சிய அழகன் யாருமில்லை என்ற கர்வம்தான் காரணம் என்றான் தருமன். இப்போதும் திரும்பிப் பார்க்கவில்லை.

அடுத்து அர்ச்சுனன் விழுந்தான். "தனது வில்லாண்மை குறித்த கர்வம்தான் அவனை இந்தப் பயணத்தில் வீழ்த்தியது" என்றவாறு தருமன் போய்க்கொண்டிருந்தான்.

தனக்கும் தலை சுற்றுவதை பீமன் உணர்ந்தான். தள்ளாடி விழும் சமயத்தில் "என்னால் ஏன் தொடர்ந்து வர முடியவில்லை?" என்று கேட்டான். "உன்னைவிட பலமுள்ளவர்கள் யாருமில்லை என்னும் கர்வம்" என்று தருமன் சொல்லி முடிப்பதற்குள் பீமன் தன் கடைசி மூச்சை விட்டான்.

ஆசாபாசங்களையும் உலகியல் உணர்ச்சிகளையும் அறவே துறந்த தருமன் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டே இருந்தான். நாய் மட்டும் அவனைத் தொடர்ந்தது.

மேரு மலையின் உச்சியை அடைந்தான். அப்போது அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லத் தேவேந்திரனே விமானத்துடன் வந்தான். தருமன் விமானத்தில் ஏற முற்பட்டபோது அவனுடன் வந்த நாயும் ஏற முயன்றது. "நாய்க்குச் சொர்க்கத்தில் இடமில்லை" என்று கூறித் தடுத்தான் இந்திரன்.

விமானத்தினுள் வைத்த காலைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டான் தருமன். "என்னை நம்பி இத்தனை தூரம் வந்த நாயை விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி வர முடியும்? நான் இங்கேயே இருந்துவிடுகிறேன்" என்றான். 

அப்போது நாய் மறைந்தது. அங்கே தரும தேவன் நின்றார். "சொர்க்கமே கிடைக்கிறது என்றாலும் உன்னை நம்பி வந்த நாயைக்கூடக் கைவிடாத உன் குணத்தைப் பாராட்டுகிறேன். எத்தகைய சூழ்நிலையிலும் தரும நெறியிலிருந்து நீ பிறழவில்லை. இது நான் உனக்கு வைத்த சோதனை. முன்பு யட்சன் வடிவில் வந்து உன்னைச் சோதித்தேன். இப்போது நாய் வடிவில் வந்து சோதித்தேன். இந்தச் சோதனைகளில் நீ தேறிவிட்டாய். மகிழ்ச்சியோடு சொர்க்கத்துக்குச் செல்" என்று கூறி தரும தேவன் மறைந்தார்.

பதிவிட்டவர் : ஜெயந்தி கைலாசம்

varaguna pandiyan Siva kaingaryam - spiritual story

வரகுண பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் ஒருவர் இருந்தார்

இரவு நேரங்களில் தவளைகள் கத்தும் ஒலி கூட சிவ நாமம் ஆன ஹர ஹர என்பது போல் இருக்கும்

உடனே அவர் ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாய என ஜபிப்பார். 

அந்த அளவுக்கு சிவபக்தி கொண்டிருப்பவர்.

ஒரு முறை நகர்வலம் சென்று கொண்டிருந்தார் வரகுண பாண்டிய மன்னர்.

ஒரு வீட்டு வாசலில் காய வைத்திருந்த எள்ளை திருடித் தின்று கொண்டிருந்தான் ஒருவன்.

அவனை கையும் களவுமாக பிடித்தனர் அந்த வீட்டு உரிமையாளர்கள்.

நகர்வலம் வந்து கொண்டிருந்த மன்னரும் அதைப் பார்த்தார்.

அவனருகில் சென்று ஏன்டா எள்ளை திருடி தின்னுகிறாய் ?

 பசியால் தின்னுகிறாயா? எனக் கேட்டார்.

மன்னா ! நான் ஒரு சிவபக்தன். 

பசுவாகப் பிறந்திருந்தால் அபிஷேகத்திற்கு பால் கொடுத்து இருப்பேன்.

 பூச்சியாக பிறந்திருந்தால் அவரது திருமேனியில் தழுவி ஓடியிருப்பேன். 

ஆனால் பாழும் மனிதனாக பிறந்ததால் என்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை.

இந்த எள்ளை திருடித் தின்றதால் அதன் உரிமையாளர் என்னை செக்கு மாடாக பிறப்பாய் என்று சபித்தார்.

அடுத்த பிறவியில் அப்படி நான் பிறந்தால். நான் அரைக்கும் எண்ணெய் சிவனின் கருவறையில் விளக்கேற்ற உதவுமே!

அதனால்தான் இந்தப் பாவத்தை செய்தேன் என்றான்.

அவ்வளவு தான்

 வரகுண பாண்டிய மன்னன் அவன் மீது பாய்ந்தார். 

அவனது வாயோரம் ஒட்டியிருந்த எள்ளை எடுத்து தன் வாயில் இட்டுக் கொண்டார்.

இதை பார்த்த அந்தத் எள்ளுத் திருடன் திகைத்தான். 

மன்னா ! ஏன் இப்படி செய்தீர்கள்? .

என் எச்சில் பட்ட எள்ளைத் தின்னலாமா? எனக் கேட்டான்.

அடேய் ! நீ மட்டும் சிவனுக்கு தனியாக செக்கிழுக்க முடியுமா ?

 ஜோடி மாடு வேண்டாமா ? 

அந்த மாடாய் நான் பிறக்கவேண்டும் என்று நான் அப்படி செய்தேன் என்றார் வரகுண பாண்டிய மன்னர்.

திருச்சிற்றம்பலம்!!

ஓம் நமசிவாய 🙏🙏🙏

Bharata dasami

ராம நவமி தெரியும் !!!!
பரத தசமி தெரியுமோ ?!?

ராமன் பிறந்தது நவமியில் !
அவன் தம்பி பரதன் பிறந்தது தசமியில் !

கௌசல்யா ராமனைத் தந்தது நவமியில் !
கைகேயி பரதனைத் தந்தது தசமியில் !

புனர்பூசம் ராமனின் நட்சத்திரம் !
பூசம் பரதனின் நட்சத்திரம் !

பரத தசமி தெரிந்தது ?!?
லக்ஷ்மண தசமி தெரியுமோ ?!?

லக்ஷ்மணனும் , அவன் தம்பி சத்துருக்கனனும் பிறந்ததும் தசமியில்தான் !!!

சுமித்திரை பகவானுக்காக லக்ஷ்மணனைப் பெற்றதும்,
பாகவதனுக்காக சத்துருக்கனனைப் பெற்றதும் தசமியிலே !

ஆயில்யம் அடைந்தது லக்ஷ்மணனையும், சத்துருக்கனனையும் தந்தது.

புனர்பூசம் ராமனின் நட்சத்திரம் !
பூசம் பரதனின் நட்சத்திரம் !

நவமியில் வந்தவன் ஒருவன் !
அவனே ஆதிமூலன் !

தசமியில் முதலில் வந்தவன் ஒருவன் !
அவனே பரதன் !

இருவரில் முதலில் வந்தவன் ஒருவன் !
அவனே லக்ஷ்மணன் !

நால்வரில் கடையனாய்
வந்தவன் ஒருவன் !
அவனே சத்துருக்கனன் !

ராமன் உலகைக் காக்க வந்தான் !
லக்ஷ்மணன் அவனைக் காக்க வந்தான் !

பரதன் நாட்டைக் காக்க வந்தான் !
சத்துருக்கனன் அவனைக் காக்க வந்தான் !

ராமன் தர்மம் சொன்னபடி நடந்தான் !
லக்ஷ்மணன் ராமன் சொன்னபடி நடந்தான் !

பரதன் ராம பாதுகையோடு நடந்தான் !
சத்துருக்கனன் பரதனுக்கு பாதுகையாய் நடந்தான் !

ராமன் சீதையோடு நடந்தான் !
லக்ஷ்மணன் ராமனோடு நடந்தான் !

பரதன் ராமனுக்காய் நடந்தான் !
சத்துருக்கனன் பரதனுக்காய் நடந்தான் !

ராமன் தந்தை சொல் காத்தான் !
லக்ஷ்மண் தாய் சொல் காத்தான் !

பரதன் ராமன் சொல் காத்தான் !
சத்துருக்கனன் பரதன் சொல் காத்தான் !

ராமனோ தர்மம் !
லக்ஷ்மணனோ கைங்கரியம் !
பரதனோ நியாயம் !
சத்துருக்கனனோ சத்தியம் !

புனர்பூசமும், பூசமும், ஆயில்யமும் மூன்றும் தந்ததோ நால்வகை மோக்ஷம் !

நவமியும், தசமியும் தந்ததோ நால்வகை பிரயோஜனம் !

நேற்று ராம நவமி கொண்டாடினாய் !!!
நீ சுகப்பட்டாய் !
இன்று கொண்டாடினால் ராமனே சுகப்படுவான் !

பழி வந்தால் பரதனாயிரு !
சேவை செய்ய லக்ஷ்மணனாயிரு !
சிரத்தையில் சத்துருக்கனனாயிரு !

மொத்தத்தில் ராமனுக்கு பிடித்தமாதிரி இரு !

ராம ராம ராம ராம 🙏🙏🙏🙏

Glory of vedas - Sanskrit poem

Gudalur Brahmasri R. Ramachandra Sastri

'वेदो नित्यं अधीयताम्'

Veda Stuti

निश्वासरूपा: परमेश्वरस्य
प्रमाणमूर्द्धन्यतमाश्च धर्मे ।
निरन्तरं रक्षत नः कुलानि वेदा
वयं वः शरणं प्रपन्नाः ।। १ ।।
 

1.      O Vedas, You are the very life-breath of Parameswara and the highest authority for Dharma. We have taken refuge in you; please protect our lineages.

ऋग्वेदरूपेण विनिर्गता ये

प्रत्यङ्मुखाद्वै परमेश्वरस्य ।
यज्ञेषु हौत्रे विनियोक्ष्यमाणाः वेदा
वयं वः शरणं प्रपन्नाः ।। २ ।।


2.    O Vedas, You emerged from the western face of Parameswara, called 'Sadyojata' in the form of Rigveda, which is chanted in Yajnas by 'Hota' in his 'Houtram' stotras. We have taken refuge in you.

 

आध्वर्यवे कर्मणि शोभमाना: ह्यागत्य

सौम्याद्वदनात् शिवस्य ।
सर्वस्य लोकस्य शिवंकरा ये वेदा
वयं वः शरणं प्रपन्नाः ॥ ३ ॥

 

3.    O Vedas, You emerged from the northern face of Parameswara, called  'Vamadeva' in the form of Yajurveda, which shines in Yajnas, as practised by 'Adhvaryu' in his 'Aadhvarya' karma, and which fetch good to the whole world. We have taken refuge in you.

 

औद्गातृके कर्मणि गीयमाना:

शम्भोस्सदामोदकराश्च यूयम् ।
शिवस्य पूर्वाद्वदनात्प्रवृत्ताः
वेदा वयं वः शरणं प्रपन्नाः ।। ४ ।।

 

4.    O Vedas, You emerged from the eastern face of Parameswara, called 'Tatpurusha' in the form of Samaveda, which always makes Him happy and which is sung musically in Yajnas by 'Udgata' in 'Oudgatrukam' karma. We have taken refuge in you.

 

आथर्ववेदा: परमेश्वरस्य
ह्यघोरवक्त्रात्तु समागता ये ।
ब्राह्मे तथा पुष्टिकरे सुयुक्ता:
       वेदा वयं व शरणं प्रपन्नाः ।। ५ ।।

 

5.     O Vedas, You emerged from the southern face of Parameswara, called 'Aghora' in the form of Atharvaveda, which is chanted in Yajnas by 'Brahma' in 'Braahmam' karma and other special salutary karmas. We have taken refuge in you.

 

वेदोक्त कर्माणि शुभानि कृत्वा

वेदोक्तसर्वाणि फलानि लब्ध्वा ।

वेदान्तविज्ञान सुनिश्चितार्था:
सर्वे भवामो भवतां प्रसादात् ।। ६ ।।
 

6.    O Vedas, may we perform all auspicious karmas stipulated in Vedas, enjoy all fruits thereof as mentioned therein and attain, by your grace, the Supreme Goal assured through the Supreme Knowledge of Vedanta.

॥ वेदैकशरणावयम् ॥

Translated: P. R. Kannan

Tuesday, April 9, 2024

Management & Shastras - HH Bharati teertha Maha Swamigal

*ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்*

*சாஸ்திரங்களும் நிர்வகிப்பும்*

ஒரு ஸம்ஸ்தையை நிர்வகிப்பவன் மிக சமர்த்தனாக இருக்கவேண்டும். சாமர்த்தியம் என்று சொன்னால் ஸம்ஸ்தையை முன்னுக்கு கொண்டு போகக் கூடிய சக்தி என்று பொருள். அதற்கு விசேஷமான உத்ஸாகமும் தைரியமும் வேண்டும். தன்னுடைய காரியத்தில் எத்தகைய வெற்றி கிடைத்தாலும் அதற்காக அகங்காரம் படக்கூடாது. 

அவன் மிகவும் தயாசாலியாக இருக்க வேண்டும். அவனுடைய ஸம்ஸ்தையில் வேலை செய்யும் ஆட்கள் அவன் விஷயத்தில் ரொம்பவும் ப்ரீதியுடன் இருக்க வேண்டும். 

அஜமஹாராஜா தன் ராஜ்ஜியத்தை பரிபாலனம் செய்யும் ரீதியாக வர்ணிப்பதாக மகாகவி காளிதாசர் ரகுவம்சத்தில் கூறியுள்ளார் 

அதாவது, அந்த ராஜ்யத்தில் பிரஜைகள் எல்லோரும் தான் ஒருவன் தான் ராஜாவின் பிரியத்துக்குரியவன் என்று நினைக்கும்படி அந்த ராஜாவின் சிறப்பு இருந்தது என்று பொருள். 

ஒரு நிர்வாகிக்கு இந்த குணம் இருந்தால், அந்த ஸம்ஸ்தை மிக நல்ல ரீதியில் நடக்கும். மேலும் நிர்வாகி தான் செய்ய வேண்டிய கடமையை ஒழுங்காக செய்தாலும் அதனால் வரும் பலன் ஈஸ்வரனுடைய சங்கல்பத்தை அனுசரித்தே ஏற்படும் என்று தீர்மானமான எண்ணம் நிர்வாகிக்கு இருக்கவேண்டும். 

மிக அழகாக பகவத்கீதை இந்த ஸ்லோகத்தில் சுருக்கமாகச் சொல்கிறது 

பற்றுகளிலிலிருந்து விடுபட்டவனும், "நான்" என்ற வார்த்தையையே அகற்றிவிட்டவனும், தொடர்வதற்கு உறுதியும் உற்சாகப்படுத்த சக்தியும் கொண்டவனும் வெற்றி தோல்வியால் சலனப்படாதவனுமான யஜமானனே ஸாத்விகன் என்று அழைக்கப்படுகிறான் 
 


நாம் புண்ணிய காரியங்களை மட்டும் செய்ய வேண்டும், பாபங்களை தவிர்க்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. இருந்தாலும் மனிதனுக்கு புண்ணிய காரியங்களை செய்வதை விட அதிகமாக பாவம் பண்ணுவது வழக்கம். தாங்கிக் கொள்ள மிக கஷ்டமான துயரங்களை பாபகாரியங்கள் கொண்டு வரும் என்று உறுதியான எண்ணம் மனதில் உதயம் ஆனவுடன் மனிதன் பாவங்களிடம் இருந்து விலகி விடுவான். 

இப்படிப்பட்ட எண்ணம் இருக்க வேண்டும் என்றால் ஒருவனுக்கு சாஸ்திரங்களில் நம்பிக்கை வேண்டும். இதுதான் சிரத்தை. தினசரி வாழ்க்கையில் கூட நாம் மற்றவருடைய அபிப்ராயத்தை ஒத்துக் கொள்ள வேண்டுமானால் அவருடைய வார்த்தைகளில் நம்பிக்கை வேண்டும். அதே மாதிரி சாஸ்திரங்களில் நம்பிக்கை இருந்தால்தான் நாம் பாவங்களை விட்டு விலக முடியும். 

நாம் நேரில் பார்த்திராத எதையும் நம்ப மாட்டோம் என்று பிடிவாதம் பிடிப்பது தவறு. உண்மையில் மற்றவர்களுடைய வார்த்தைகளில் நம்பிக்கை வைத்துக் கொண்டு நாம் பல காரியங்கள் செய்கிறோம் சாஸ்திரங்களின் கட்டளைகள் நம் நன்மைக்கே, ஒருபொழுதும் நம்மை ஏமாற்றுவதற்கு அல்ல. முக்காலத்தையும் பார்க்கக்கூடிய மகரிஷிகள் எது சரி எது தப்பு என்று நமக்கு உறுதியுடன் கூறுகிறார்கள். அவர்களுடைய வார்த்தைகளைப் பற்றி நாம் எவ்விதமான சந்தேகமும் கொள்ளக்கூடாது. 

இவ்வுலகத்தில் பாவ காரியங்களின் விளைவாக பெருந்துயரத்துள்ளாகும்பல மனிதர்களை நாம் பார்க்கிறோம். சாஸ்திரங்களில்  நம்பிக்கை வைக்காமல் நாம் பாவங்கள் செய்வோமானால் பெரும் கஷ்டங்களை வரவழைத்துக் கொள்கிறோம். 

ஆதலால் சாஸ்திரங்களின் சொற்களில் நம்பிக்கையை ஊன்றி வைத்து தன் வாழ்க்கையை நடத்துவது மனிதனுடைய முதன்மையான கடமை. 🌷🥀🌹🙏

Monday, April 8, 2024

Glory of Dharma - Sanskrit poem

Courtesy: Sri.P.R.Kannan

Gudalur Brahmasri R. Ramachandra Sastri

'वेदो नित्यं अधीयताम्'

On Adi Shankaracharya

अद्वैतामृतवर्षिणः सुखकरान् भाष्यादि सद्ग्रन्थकान्

  आम्नायार्थ सुबोधकान् सुविदुषां निर्मायसद्युक्तिकान् ||

स्तोत्राणीष्ट सुदेवता प्रियकराण्यज्ञानिनां निर्ममे
सामूर्तिः सुविराजते प्रतिदिशं शिष्योपशिष्यान्विता ॥


Adi Shankaracharya authored many texts of profound logic, including Bhashyas, explaining the purport of Vedas, showering the nectar of Advaita and thus delighting the great scholars. He also wrote Stotras in praise of many popular Devatas for the benefit of the ordinary people. Accompanied by the lineage of disciples, he shines brilliantly in every direction.

 

|| श्रीगुरुभ्यो नमः ॥
|| नमामि वेदमातरम् ।। श्री वेदव्यासाय नमः ॥

On Vriksha Samrakshanam

धर्मो वृक्षः तस्यमूलंहि वेदा:

        वृष्टि: शाखा: पुष्पकाण्यत्र सस्यम् ।

       धान्यादिस्यात् तत् फलं लोकजुष्टं

           छिन्ने मूले नैव वृक्षः नपक्वम् ।। १ ।।

 

1.      Dharma is tree; Vedas are its roots; rains are its branches; the crops are the flowers; the foodgrains etc. are the fruit, liked by the world. If the roots of this tree, viz. Vedas are not protected, neither the tree of Dharma nor the fruit can be saved.

 

वेदो वृक्षः तस्यमूलंहि विप्रा:

शाखा: शाखा: कर्मज्ञानं सुपक्वम् ।

तस्मात् मूलं यत्नतो रक्षितव्यं
छिन्ने मूले नैव वृक्षः न पक्वम् ।। २ ।।

 

2.    Veda is tree; its roots are the brahmanas, learned in Vedas; its branches are the Veda Shakhas (Rig, Yajur, Sama, Atharva); the fruits are Karma and Jnana. Hence the root must be protected with great effort; if the root is allowed to die, neither the tree nor the fruit can be saved.

 

विप्रो वृक्षः तस्य मूलंहि सन्ध्या
वृत्तं शाखा: पर्णकान्यत्र कर्म ।

धर्म: पक्वं लोक सौख्य प्रदीयः

        छिन्ने मूले नैव वृक्षः न पक्वम् ।। ३ ।।

 

3.    The brahmana, learned in Vedas, is the tree; its root is Sandhyopasana; its branches are good conduct; the leaves are good deeds; the fruit is Dharma, which bestows comfort on the world. If the root is allowed to die, neither the tree nor the fruit can be saved.

 

Note: The glory of Sandhyopasana, which holds Mahamantras in the form of prayer and which are the essence of Karma, Bhakti and Jnana Margas; salutary actions; chanting of Bhagavan's names; meditation on Atma Svarupa, which includes prayer, submission and the crux of Mahavakyas; Pranayama, the prime part of Yoga Marga; to crown it all, the most powerful Shri Gayatri Mahamantra is brought out here. Nitya Sandhyopasana bestows spiritual progress easily on the practitioner. There is no better means than this for advancement.

 

लोकक्षेमं वृक्षमाहु: महान्त:

धर्मोमूलं तस्य वृक्षस्य सत्यम् ।

तस्मात् रक्ष्य: धर्म एवात्र यत्नात्
        लोकक्षेमं कांक्षमाणै: नरेन्द्रैः ।। ४ ।।

 

4.    Great people call the public good as a tree, whose root is Dharma and Truth. Hence Dharma alone is to be protected with effort by kings (government), who desire public welfare.

 

यस्मात् वृक्षैः दीयते लोकसौख्यं

सोढ्वा दुःखं छेदनाद्यैर्हि जातम् ।

तस्मात् वृक्षाः सर्वधारक्षणीया:
तन्मूलानां यत्नतो रक्षणेन ।। ५ ।।

 

5.     Trees provide wellbeing to the whole world, bearing the misery of being cut etc. Hence the roots of trees should be protected at all costs; that alone will enable trees to grow well and offer public good.

Protection of Dharma is therefore of utmost importance.

धर्मार्थकाम मोक्षाख्यं

पुरुषार्थ चतुष्टयम् ।

पञ्चभिश्च उत्तमश्श्लोकैः
ऋषिभिः समुदीरितम् ॥ ६ ॥

 

6.    The means of attaining the four Purusharthas (goals of human life), viz. Dharma, Artha (wealth), Kama (desire) and Moksha (Liberation) set out by Maharishis is explained in the above five verses.


May we put in our efforts to protect the trees and work for public welfare.
॥ वेदैकशरणावयम् ॥

Translated: P. R. Kannan

Saturday, April 6, 2024

How Mr.Bean overcome his shortcomings? - Positive story

Mr. Bean (Rowan Atkinson)

The story of the man who never gave up on his dreams. Rowan Atkinson was born in a middle-class family and suffered terribly as a child because of his stuttering. He was also teased and bullied at school because of his looks. His bullies thought he looked like an alien. He was soon marked a strange kid and that made him very shy, withdrawn kid who didn't have many friends. He decided to dive into science.

One of his teachers said, there was nothing outstanding about him. "I did not expect him to be a brilliant scientist, but he has proved everyone wrong".

Admitted to Oxford University during his days, he started falling in love with acting but couldn't perform due to his speaking disorder.

He got his masters degree in electrical engineering before appearing in any movie or TV show. After getting his degree, he decided to pursue his dream and become an actor so he enrolled in a comedy group but again, his stammering got in the way.

A lot of TV shows rejected him, and he felt devastated but despite the many rejections. He never stopped believing in himself.

He had a great passion for making people laugh and knew that he was very good at it. He started focusing more and more on his original comedy sketches and soon realized that he could speak fluently whenever he played some character. He found a way to overcome his stuttering and his also used there is an inspiration for his acting.

While studying for his masters Rowan Atkinson co-created the strange, surreal, and now speaking character known as Mr. Bean.

He had success with other shows, Mr. Bean made him globally famous and despite all the obstacles he faced because of his looks and his speaking disorder, he proved that even without a heroic body or a Hollywood face, you can become one of the most loved and respected actors in the world.

The motivational success story of Rowan Atkinson. It is so inspiring because it teaches us that to be successful in life, the most important things are passion, hard work, and  dedication. Never give up.

Moral of the story:

No one is born perfect. Don't be afraid. People can accomplish amazing things every day in spite of their weaknesses and failures.

Thursday, April 4, 2024

Rama and Krishna comparison

*ஶ்ரீராமாவதாரத்திற்கும் ஶ்ரீகிருஷ்ணாவதாரத்திற்கும்  உள்ள வித்தியாசங்கள்* 🌹

*உபன்யாஸத்தில் கேட்டது* : 

*1.ஶ்ரீராமர் சூரிய வம்ஸம்.*

*ஶ்ரீகிருஷ்ணர் சந்திர வம்ஸம்.*

*2.ஶ்ரீராமர் நடுப்பகலில் அவதாரம்.*

*ஶ்ரீகிருஷ்ணர் நடுஇரவில் அவதாரம்.*

*3.ஶ்ரீராமர் நவமி திதி.*

*ஶ்ரீகிருஷ்ணர் அஷ்டமி திதி.*

*4.ஶ்ரீராமர் சுக்ல பக்ஷம்.*

*ஶ்ரீகிருஷ்ணர் கிருஷ்ண பக்ஷம்.*

*5.ஶ்ரீராமர் உத்தராயணம்.*

*ஶ்ரீகிருஷ்ணர் தக்ஷிணாயணம்.*

*6.ஶ்ரீராமர் குணாவதாரம்.*
*அதாவது, குணங்கள் முக்கியம்.*

*ஶ்ரீகிருஷ்ணர் லீலாவதாரம்.*

*7.ஶ்ரீராமாவதாரத்தில்  ஆரம்பத்தில் ஸ்த்ரீ வதம்---தாடகா.*

*ஶ்ரீகிருஷ்ணாவதாரத்தில் ஆரம்பத்தில் ஸ்த்ரீ வதம்---பூதனா.*

*8.ஶ்ரீராமாவதாரத்தில் ஆயுதம் எடுத்து ராவணன் வதம்.*

*ஶ்ரீகிருஷ்ணாவதாரத்தில் ஆயுதம் எடுக்காமல் கௌரவர்கள் வதம்.*

*9.ஶ்ரீராமர் ஆரம்பத்தில் 24 வயது வரை ஆனந்தம் ;*
*பிறகு துக்கம்.*

*ஶ்ரீகிருஷ்ணர், ஆரம்பத்தில் கஷ்டம் ;*
*பிறகு ஆனந்தம்.*

*10.ஶ்ரீராமருக்கு ஒரே மனைவி சீதா.*

*ஶ்ரீகிருஷ்ணருக்கு 16,108 மனைவிகள்.*

*11.ஶ்ரீராமாவதாரம் அனுஷ்டானம்.*

*ஶ்ரீகிருஷ்ணாவதாரம் உபதேசம்.*

*12.ஶ்ரீராமாவதாரம் சோகரஸம்/துக்கம்.*

*ஶ்ரீகிருஷ்ணாவதாரம் ஆனந்தம்.*

*13.ஶ்ரீராமர், 11,000 வருஷங்கள் வாழ்ந்தார்.*

*ஶ்ரீகிருஷ்ணர் 125 வருஷங்கள் வாழ்ந்தார்.*

*14.ஶ்ரீராமர், தர்மத்திற்கு கட்டுப்பட்டு செய்தார்.*

*ஶ்ரீகிருஷ்ணர், தான் செய்வதே தர்மம் என்றார்.*

*15.Spiritual evolution.*
*ஶ்ரீராமர், சாஸ்த்ரோக்தமாக தர்மத்தை அனுஷ்டித்து வாழ்ந்தார்.*

*ஶ்ரீகிருஷ்ணர் செய்தது Spiritual revolution.*

*16.ஶ்ரீராமர்  அரசன் & வனவாஸம்.*

*ஶ்ரீகிருஷ்ணர்  வனவாஸம் இல்லை.*

*17.ஶ்ரீராமர் All transparent.*

*ஶ்ரீகிருஷ்ணர் All ரகசியம்.*

*18.ஶ்ரீராமர்  "மரியாதா புருஷோத்தமன்".*

*ஶ்ரீகிருஷ்ணர் "பூரண புருஷோத்தமன்".*
*அதாவது, பூரணமாக பகவான் சக்தி.*

*19.ஶ்ரீராமர்  அம்ஸாவதாரம்.*

*ஶ்ரீகிருஷ்ணர்  அம்ஸாவதாரம் & பூர்ணாவதாரம் both.*

*20.ஶ்ரீராமர்  "பூர்ணத்வம்".*

*ஶ்ரீகிருஷ்ணர்  "ஷோடஸ கலா".*
*அதாவது,16 கலைகள்.*

*21.ஶ்ரீராமருடன் சம்பந்தப்பட்ட மோக்ஷபுரி---*
*அயோத்யா.*

*ஶ்ரீகிருஷ்ணருடன் சம்பந்தப்பட்ட மோக்ஷபுரி---*
*மதுரா,*
*துவாரகா,*
*உஜ்ஜெயின்.*

*ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண  ஹரே ஹரே* 
🙏
*ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* 🌹

Tuesday, April 2, 2024

Rudrahrudaya upanishad

*रुद्रहृदयोपनिषदि 'द्वा सुपर्णा' मन्त्रार्थप्रतिपादनम्* 

*Dvaa suparnaa in the Rudra hridaya upanishad*


The popular Mundaka mantra is available in the above Upanishad, teaching the Advaitic identity:



द्वौ सुपर्णौ शरीरेऽस्मिञ्जीवेशाख्यौ सह स्थितौ ।

तयोर्जीवः फलं भुङ्क्ते कर्मणो न महेश्वरः ॥ ४१॥

केवलं साक्षिरूपेण विना भोगं महेश्वरः ।         

प्रकाशते स्वयं भेदः कल्पितो मायया तयोः ॥ ४२॥

There are two birds residing together in this body called Jiva and Isvara; of them Jiva eats the fruits of action and Mahesvara does not. He remains there shining Himself, as a mere witness without tasting the fruit of it.

घटाकाशमठाकाशौ यथाकाशप्रभेदतः ।

कल्पितौ, परमौ जीवशिवरूपेण कल्पितौ ॥ ४३॥

The difference between them is attributed by Maya. Like the difference …. the space of the pot and room, is the difference attributed between Siva and Jiva.

तत्त्वतश्च शिवः साक्षाच्चिज्जीवश्च स्वतः सदा ।

चिच्चिदाकारतो भिन्ना न भिन्ना चित्त्वहानितः ॥ ४४॥

In reality Siva is chit (consciousness itself) and Jiva also is always chit. The chit does not differ in its nature. If it does so, it will lose the state of its own nature.

चितश्चिन्न चिदाकाराद्भिद्यते जडरूपतः ।

भिद्यते चेज्जडो भेदश्चिदेका सर्वदा खलु ॥ ४५॥

The chit will not differ in itself as it does not belong to the nature of inert matter (Jada). If it does so, then the difference will be of jada. The chit always is one. (In other words this implies that difference can be there only in jaDa, inert and not in Chit, Consciousness)


तर्कतश्च प्रमाणाच्च चिदेकत्वव्यवस्थितेः ।

चिदेकत्वपरिज्ञाने न शोचति न मुह्यति ॥ ४६॥

 Thus the oneness of the chit is established by reasoning and by authorities (Pramanas). By realizing the oneness of the chit, one does not underdo misery nor bewilderment.


अद्वैतं परमानन्दं शिवं याति तु कैवलम् ॥ ४७॥

He 'attains'' Siva-hood, Who is without duality and who is the Supreme bliss itself.


अधिष्ठानं समस्तस्य जगतः सत्यचिद्घनम् ।

अहमस्मीति निश्चित्य वीतशोको भवेन्मुनिः ॥ ४८॥

By realizing Him, who is the support of all the worlds, Who is the sat and chit itself, 'I am He', the sage becomes freed from Samsara.


Read Upanishad Brahma Yogin's commentary on this entire Upanishad here:  https://cloudup.com/cQOnSmANOjO

~ रुद्रहृदयोपनिषत्

Bhagavatam Nochur Swamigal

Target is important than the method - Advaita

In a football match how long ball is possessed is not relevant, the aim is to hit the goal. 
Sometimes team has the ball 70% and lost the match. 
A student may study 25 years and miss the goal. A person may not even know a particular prakriya and may still achieve "mokṣā".

In  Vedānta, prakriya is called a method of teaching /tool used for communication. In  Vedānta there are several prakriyas. 
Some are directly used by upaniṣad, like  adhyaropa apavada, dṛk dṛśya viveka, pañcakosa viveka, avasthatraya prakriya etc.
Certain others only clues are there, acharyas have extracted several prakriyas, derived from vedas, like avaccheda vāda, pratibimba vāda, ābhāsa vāda, anirvachanīya  khyāti, revised anirvachanīya khyāti, arthādhyāsa, jñānadhyāsa etc . they are derived prakriyas.

Through all these prakriyas, vedanta wants to communicate the prime teaching or siddhanta. 
Methodology is prakriya. Siddhanta is sadhyam  or end. 
Ultimately, we all should come to the sadhyam. End is siddhanta. 
That alone liberates, prakriya does not liberate. It can cause scholarly or intellectual samsara. 
Use prakriya for minimum time and land on siddhanta. Brahma satyam  jaganmithya ….. aham bramaiva na paraha.

No acharya insists that you should use only Dsv (Dvivida satta vada), Tsv (Trivida satta vada), pratibimba  vāda, ābhāsa vāda. Whichever vāda you are comfortable you use. 

Either use lift, staircase or escalator to come to first floor. Coming is important.

-- From Vicara sagara talks of
Swami Paramarthananda

Monday, April 1, 2024

Sivapuranam and it's glories

சிவபுராணம் என்றால் என்ன? அதை தினமும் படிப்பதால் வரும் பயன்கள் என்ன?

சிவபுராணத்தின் பெருமைகள் :

1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.

2. வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய ' திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார்.

3. மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.

3. எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து விட்டு மறைந்து விட்டார்.

4. மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர்.

5. ஓலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில் " மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான்" எழுதியது என கையொப்பம் இடப் பட்டிருந்தது.

6. மீண்டும் திகைத்து போய் பெருமான் கருணையை வியந்த அந்தணர்கள் மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்தவற்றை கூறி அவரை அழைத்து வந்தார்கள்.

7. ஓலைச்சுவடிகளில் உள்ள ஓவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து, கடைசியில் பெருமானது ஒப்பத்தையும் கண்டு பிரமித்தவராய் " ஆம் அடியேன் சொல்ல எழுதப் பட்டது தான்" என்று சொல்லி வந்தது பெருமான்தான் என நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார்.

8. தீட்சதர்கள், மாணிக்கவாசகரிடம் ஓலைச்சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினர்.

9. மாணிக்கவாசகர் , மந்தகாசப் புன்னகையுடன் நடனக் கோலத்தில் இருக்கும் நடராசப் பெருமானைக் காட்டி " இப் பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள் " என்றார்.

10. அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து விட்டார்.

11. ஆக , ஆனி - மகம் மாணிக்கவாசகரின் குருபூசை நாள் ஆகும்.

12 சிறப்பு - 1 நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தில் திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் தொடங்குவது.

13. சிறப்பு - 2 சிவபுராணத்தின் முதல் 6 வரிகள் வாழ்க என முடியும்.

14. சிறப்பு - 3 அதை அடுத்த 5 வரிகள் வெல்க என முடியும்.

15. சிறப்பு -4 அடுத்த 8 வரிகள் *போற்றி* என முடியும்.

16. இவ்வாறு 6-5-8 என அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களை குறிக்கிறது.

17. சிவபுராணத்தின் 32 வது வரியில் மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் என பாடி இருப்பார்.
இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிக்கும்.

18. திருவாசகத்தின் 18 வது வரியான அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.

19. ரமண மகிஷி , திருவண்ணாமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.

20. காஞ்சி மகா பெரியவரிடம் குழந்தை இல்லாத ஒரு தம்பதி சென்று தங்கள் குறையை கூறினர்.

பெரியவர் திருவாசகப் புத்தகத்தை கொடுத்து ஒரு குறிப்பிட்ட பதிகத்தை தினம் படிக்க சொன்னார்.
அவர்களுக்கு வரிசையாக 6 குழந்தைகள் பிறந்தன.

21. இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்க வேண்டும்.

"புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி, பல் விருகமாகி, பறவையாய் , பாம்பாகி , கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்" என சுவை நிறைந்த திருவாசகத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்
ஓம் நமச்சிவாய..🙏🏼

திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்...!
மூலமும் உரையும்...

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!

கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!

ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!

ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க! (சிவபுராணம்)

**********

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!

("நமச்சிவாய" என்னும் ஐந்து எழுத்து வாழ்க! நாத தத்துவத்தில் விளங்கும் உன் திருவடி வாழ்க!)

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!

(கண் இமைக்கும் பொழுதின் அளவு கூட, என் நெஞ்சைவிட்டு நீங்காதவனாகி உன் தாள் வாழ்க)

கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!

(திருப்பெருந்துறையில் எழுந்தருளி என்னை (மாணிக்கவாசகர்) ஆட்கொண்ட நாதனாகிய உன் மாணிக்க மணிகளின் மலர் அடி வாழ்க!)

ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!

ஆகமமாகிய ஞான நூலின் பொருளாக இருந்து, என்னை அணுகி (அண்ணிப்பான்) அருள் புரிபவனாகிய உன் திருவடி வாழ்க!)

ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!

(ஏகன்  = நீயே ஒருவனாகவும், நீயே பல உருவங்களாகவும் இருந்து எல்லாப் பொருள்களிலும் தங்கும் இறைவனான உன் திருவடி வாழ்க!)

3 qualities of a spiritul aspirant -HH Vidhusekhara bharati Mahaswamigal

#ஜகத்குரு #ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதி மஹாஸ்வாமிகள்
ஒரு ஆன்மீக ஆர்வலருக்கு மூன்று முக்கிய குணங்கள் பற்றி கூறுகிறார் :-
முதலாவது அஸ்திக்யம் :- வேதக் கோட்பாடுகளில் உறுதியான நம்பிக்கை. கடோபநிஷத் கூறுகிறது என்னவெனில், அஸ்திக்யம் இல்லாத ஒருவர், உலகில் பொருள் சார்ந்த சொத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். மற்ற உலகங்கள் இருப்பதை நம்பமாட்டார். ஆன்மீக நலனுக்கான வழிமுறையான சாம்பராய: - சாம்பராயத்தை அறியாமல் இருப்பார். மேலும் சம்சார சுழற்சியில் தொடர்ந்து இருந்து கொண்டே இருப்பார்.

ந ஸாம்பராய: ப்ரதிபாதி பாலம் ப்ரமாத்யந்தம் வித்தமோஹேந மூடம்
அயம் லோகோ நாஸ்தி பர இதி மாநீ புந: புநர்வஷமாபத்யதே மே॥
ஆன்மீகப் பாதையில் செல்லும் எவருக்கும் இன்றியமையாத இரண்டாவது குணம் வைராக்யம் அல்லது விரக்தி. ஒருமுறை ஒருவர் கேட்டார் "நான் எனக்கும் என் குடும்பத்திற்கும் மோட்சத்தைத் தேடுகிறேன்." இந்த அறிக்கையே வைராக்கியம் இல்லாததைக் குறிக்கிறது.

 மோக்ஷ மார்க் கத்தில் குறியாய் இருப்பவர்களுக்கு  வைராக்கியம் மிகவும் அவசியம். வைராக்யம் மற்றும் சாதனா சதுஷ்டயத்தின் மற்ற மூன்று அங்கங்கள்:-  (விவேகா, ஷமாதி,ஷட்கா முமுக்ஷுத்வம்) விடுதலைக்கான தீவிர ஏக்கம்.

மூன்றாவது குணம் என்னவென்றால், ஆத்ம ஞானத்தில்,
அதை அடைவதில்,  கவனம் செலுத்துவதை இழக்காமல், நமது கடமைகளுக்கு மத்தியில் நமது முயற்சிகளில் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும்.எனவே நாம் நமக்கு கிடைத்த இந்த மனிதப் பிறவியை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.

ஸ்ரீ #ஆதி சங்கராச்சாரிய பகவத்பாதர் கூறுகிறார், ஸ்ருதி மாதா ஞானம் விஷயங்களில் நமக்கு சொல்கிறது என்னவெனில், ஒரு தாய் தனது குழந்தையின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு
சொல்லும் அறிவுரை போன்றது ஆகும்.

Saturday, March 30, 2024

Poonthanam

மோதிர அதிசயம் – நங்கநல்லூர் J K SIVAN
உங்களுக்கு தான் தெரியுமே. நம் ஊரில் எண்ணற்ற சிதம்பரம், பழனி, மதுரை என்று ஊர்கள் பெயர் கொண்ட எத்தனையோ மனிதர்கள் இருப்பது போல் மலையாள தேசத்தில் வீட்டுப் பெயர் கொண்ட நிறைய பேர் இருக்கிறார்கள். மலப்புரம் அருகே கீழாத்தூர் என்கிற ஊரில் இப்படி பூந்தானம் என்ற வீட்டு பெயர் கொண்ட ஒருவர் இருந்தார். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் யாருக்கும் தெரியவில்லை. பரம கிருஷ்ண பக்தர். பக்கம் பக்கமாக நிறைய கிருஷ்ணன்மீது இனிமையாக மலையாளத்தில் ஸ்லோகங்கள் எழுதிக் குவித்தவர். பாவம் ஒரு குறை அவருக்கு வெகுநாளாக. மடியில் வைத்துக் கொஞ்ச ஒரு பிள்ளை இல்லையே?.கிருஷ்ணனிடம் முறையிட்டால் வீண் போகுமா? ஒரு பிள்ளை பிறந்தான். அவனுக்கு தக்க பிராயத்தில் அன்ன பிராசனம் ஏற்பாடு தடபுடலாக நடந்தது. சில நேரங்களில் நமது வாழ்க்கையில் கொஞ்சம் கூட எதிர் பாராத சில நிகழ்வுகள் ஏற்பட்டு நாம் நிலை குலைந்து போகிறோமல்லவா? இத்தகைய ஒரு இக்கட்டான சூழ்நிலை பூந்தானத்தையும் விடவில்லை.
சொந்தம், சுற்றம், அக்கம் பக்கம் எல்லாரையும் கூப்பிட்டு அனைவரும் அனைவருமே வந்தாயிற்று. ஜே ஜே என்று ஜனங்கள் எல்லாரும் கூடியிருக்க அன்ன பிராசனம் நடக்க வேண்டிய நேரத்துக்கு ஒரு மணி முன்பாக அந்த குழந்தை இறந்து விட்டது. எவ்வளவு பெரிய பேரிடி. எப்படி பட்ட சோகம்??
"என்னப்பனே கிருஷ்ணா என்னடா இது? கதறினார் பூந்தானம் கிருஷ்ணனிடம்.
குருவாயூரப்பன் என்ன செய்தான்?
"பூந்தானம் உனக்கு கவலையே வேண்டாம். நானே உங்கள் பிள்ளை இனிமேல், எங்கே உங்கள் மடி, காட்டு வந்து உட்காருகிறேன்
குட்டி கிருஷ்ணன் பூந்தானம் மடியில் வந்து அமர்ந்து கொண்டான். "படுத்து கொள்ளட்டுமா" என்றான். தன்னை மறந்து ஆனந்த பரவசத்தில் பூந்தானத்தின் உள்ளத்திலிருந்து தெள்ளிய எளிய மலையாள கவிதை பிறந்தது.
"நம் உள்ளத்தில் என்றும் வந்து நடமாட கிருஷ்ணன் இருக்கும் போது தனியாக நமக்கு என்று ஒரு பிள்ளை எதற்கு?"என்று பூந்தானம் மனம் அமைதிகொண்டதும் கடல் மடையென்ன கவிதை பிறந்து அனைவரும் அந்த பக்த ரசத்தில் மூழ்க இது ஒருவருக்கு பிடிக்க வில்லை. அவர் தான் நாராயணீயம் எழுதிய பிரபல மேல்பத்தூர் நாராயண பட்டத்ரி தான் அவர். குருவாயுரப்பன் மீது நாராயணீயம் எழுதியவர்.
"இவனெல்லாம் ஒரு கவிஞனா சம்ஸ்க்ரிதம் தெரியாதவன், இலக்கணம் தெரியாதவன்" என்று பூந்தானத்தை இகழ்ந்தார். குருவாயூரில் குடி கொண்டுள்ள கிருஷ்ணனுக்கு இது பிடிக்குமா? சும்மா இருப்பானா? என்ன செய்தான் தெரியுமா?
அடுத்த தடவை பட்டாத்ரி குருவாயூரில் தரிசனம் செய்ய வந்தபோது
"பட்டத்ரி, நான் சொல்கிறேனே என்று வருத்தப் படாதே. எனக்கென்னமோ உன் ஸம்ஸ்க்ரித இலக்கணம் தோய்ந்த ஸ்லோகங்களை காட்டிலும் பூந்தானத்தின் மலையாள பாஷையில் உள்ள பக்தி பூர்வ ஸ்லோகங்கள் ரொம்ப பிடிக்கிறதே நான் என்ன செய்யட்டும்" என்றான் கிருஷ்ணன். அதற்கப்பறம் பட்டத்ரி ஓடிச் சென்று பூந்தானத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் என்பது சாதாரண விஷயம்.
பூந்தானத்துக்கு ஸ்ரீமத் பாகவத பாராயணம் பரம சந்தோஷமான விஷயம். அவரிடமிருந்து பாகவத புஸ்தகத்தை பிரிக்கவே முடியாது. முடிந்த போதெல்லாம் தனது 90 வயசிலும், நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்து குருவாயூர் போய் தரிசனம் செய்வார். அக்காலத்தில் நடந்து போகும்போது இருட்டு, காட்டுப்பாதையில் தான் நடக்கவேண்டும். இப்போது போல் பாதைகளோ தெரு விளக்கோ, சௌகர்யங்களோ கிடையாது. கள்வர்,கொள்ளைக்காரர்கள் பயம் எல்லோருக்கும் உண்டு. பகலில் நடப்பதற்கே பயந்து கொண்டு தான் நடப்பார்கள்.
ஒருநாள் பூந்தானம் குருவாயூருக்கு நடக்கும்போது வழியில் சில கள்வர்கள் பூந்தானத்தை வழிமறித்தார்கள். தன்னிட
மிருந்த ஒரு மோதிரம், சொல்ப பணத்தை கொடுத்துவிட்டார். அவர் தோளில் ஒரு சிறிய பை தொங்குவதைப் பார்த்த கள்வர்கள் அதை பிடுங்கிக் கொண்டார்கள். கதறினார் பூந்தானம். அது அவரை ஒரு வினாடி நேரமும் பிரியாத ஸ்ரீமத் பாகவத புத்தகம். அது தான் அவர் சொத்து. அதை கள்வர்களிடம் பறிகொடுக்க அவர் விரும்பவில்லை.
"ஐயா, அந்த பையில் இருப்பது என்னுடைய பாராயண புத்தகம், ஸ்ரீமத் பாகவதம். வேறு ஒன்றுமில்லை. தயவு செய்து என்னிடம் கொடுங்கள்"
"அந்த புத்தகத்தில் ஏதோ ரகசியமாக ஒளித்து வைத்திருக்கிறான், அதனால் தான் அதைக்கொடுக்க மறுக்கிறான்" என்று கள்வர்கள் அதைத் திரும்ப தரவில்லை.
வேறு வழியின்றி " ஹரே கிருஷ்ணா, என் செல்வமே, ஆபத் பாந்தவா, நீ தான் எனக்கு உதவவேண்டும். உன்னைப்பற்றிய அந்த புத்தகம் எனக்கு எப்போதும் வேண்டுமே. தெய்வமே அதை மீட்டுக்கொடு " என்று கதறினார்.
அமைதியான அந்த காட்டுப் பகுதியில் எங்கோ குதிரையின் குளம்பு ஒலி கேட்டது. அடுத்த சில நிமிஷங்களில் ஒரு குதிரை வீரன் ஆயுதங்களோடு அங்கே தோன்றினான். கள்வர்கள் அவனை எதிர்கொள்ள முயற்சிப்பதற்குள் அத்தனைபேரையும் தாக்கி காயப்படுத்தினான் அந்த வீரன். அவனிடமிருந்து தப்பினால் போதும் என்று பூந்தானத்திடம் திருடிய அனைத்து பொருள்கள் அந்த புத்தகப்பை எல்லாவற்றையும் அவரிடமே போட்டுவிட்டு இருளில் கள்வர்கள் ஓடிவிட்டார்கள்.
ஆச்சர்யத்தோடு அந்த வீரனை வணங்கிய பூந்தானம் "ஐயா, தெய்வம் போல் வந்து எனக்கு உதவிய நீ யாரப்பா?"என்று கேட்டார்.
"நான் இந்த ஊர் ராஜாவின் ஒரு மந்திரி. இந்த பகுதி வழியாக வந்தபோது உங்கள் குரல் கேட்டு ஏதோ ஆபத்து என்று இங்கே வந்தேன். நான் போய் வருகிறேன்" என்று சொன்னான் அந்த குதிரை வீரன்.
"ஐயா , தயவு செய்து என் நன்றி காணிக்கையாக நான் கொடுக்கும் இந்த ஒரு சிறு வஸ்துவை நீங்கள் ஏற்று அங்கீகரிக் கவேண்டும்" என்று ஒரு சிறு மோதிரத்தை (கள்வர்கள் கவர்ந்து திருப்பி கொடுத்ததை) அந்த வீரனிடம் கொடுத்தார் பூந்தானம்.
"சரி அப்படியே ஆகட்டும்" என்று அந்த குதிரை வீரன் சிரித்துக்கொண்டே ஏற்று அந்த மோதிரத்தை தனது விரலில் அணிந்து கொண்டான்.
"குருவாயூர் நீங்கள் போகும்வரை உங்களுக்கு ஒரு ஆபத்தும் வராமல் நான் பாதுகாப்பேன். நீங்கள் பயமில்லாமல் செல்லலாம்" என்று சொல்லிவிட்டு குதிரை மேல் சென்றுவிட்டான் அந்த வீரன்.
குருவாயூரில் பிரதம அர்ச்சகர் கனவில் அன்றிரவு குருவாயூரப்பன் தோன்றி "நாளை கோவிலில் என் ஒரு விரலில் ஒரு மோதிரம் இருப்பதைக் காண்பீர்கள். அதை நாளை கோவிலுக்கு வரும் பூந்தானம் என்பவரிடம் கொடுத்துவிடவும் "என்று கட்டளையிட்டான்.
ஆச்சர்யத்தில் திளைத்து, திகைத்து, விழித்துக்கொண்ட அர்ச்சகர் அப்புறம் தூங்கவில்லை. எப்போது பொழுது விடியும் என காத்திருந்து சந்நிதிக்கு வழக்கமான நேரத்தில் ஓடினார். சந்நிதியை திறந்து முதலில் குருவாயூரப்பன் கை விரல்களை கவனித்தார். "அட, குருவாயூரப்பன் கனவில் சொன்னபடியே அவன் ஒரு மோதிரத்தை விரலில் அணிந்திருப் பதைக் கண்டு அதிசயித்தார். ஜாக்கிரதையாக அதை கழற்றி வைத்துக்கொண்டு பூந்தானம் வருவதற்கு ர காத்திருந்தார்.
"ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா" என்று கண்களில் ஆனந்த கண்ணீருடன் பூந்தானம் தரிசனம் செய்தபோது அர்ச்சகர் அவரிடம் வந்து,
"ஸ்வாமி , இந்தாருங்கள் குருவாயூரப்பன் இதை உங்களிடம் தரச் சொன்னான்"
மோதிரத்தை கொடுத்து, நடந்ததைச் சொன்னபோது, "அட இது என் மோதிரமாயிற்றே, , நான் ஒரு குதிரை வீர மந்திரிக்கு அல்லவோ நேற்று கொடுத்தேன். அது எப்படி இங்கே வந்தது? என்று யோசித்தார். பரம கிருஷ்ண பக்தரான பூந்தானத் துக்கு குதிரை வீரனாக வந்து கூப்பிட்ட குரலுக்கு உதவியவன் குருவாயூரப்பனே என்று புரிந்தது. ஆனந்தத்தில் பேச முடியவில்லை. கண்ணீர் பெருகியது.
ஸ்ரீமத் பாகவதத்தில் 11.19.9ல் ஒரு ஸ்லோகம் :
तापत्रयेणाभिहतस्य घोरे सन्तप्यमानस्य भवाध्वनीश । पश्यामि नान्यच्छरणं तवाङ्‍‍घ्रि-द्वन्द्वातपत्रादमृताभिवर्षात् ॥ ९ ॥
tāpa-trayeṇābhihatasya ghore santapyamānasya bhavādhvanīśa paśyāmi nānyac charaṇaṁ tavāṅghri-dvandvātapatrād amṛtābhivarṣāt
தாப-த்ரயேணாபிஹதஸ்ய கோரே சாந்தாப்யமானஸ்ய பவத்வநீஷ பஷ்யாமி நாந்யச் சரணாம் தவங்ரி-
த்வந்த்வதபத்ராத் அம்ருதாபிவர்ஷாத்"
"ஹே கிருஷ்ணா, ஜென்ம மரண உபாதைகளில் அவதிப்பட்டு உழல்கிறேன். சகல துன்பங்களையும் சந்திக்கிறேன். நிர்க்கதியாக நிற்கும் எனக்கு உன் தாமரைப் பாதங்கள் எப்படி ஆனந்தமானவை தெரியுமா? அம்ருத மழையில் நனையும்போது உன் தாமரைப் பாதங்கள் தான் எனக்கு அம்ருதம் சொட்டும் குடை மாதிரி."🎉8

4 vedas - sivavakkiyar

சிவவாக்கியர்  -  நங்கநல்லூர்  J K  SIVAN

பொன்னில்  வடித்த எழுத்து

சிவ வாக்கியர் ஒரு தனி ரக ஞானி. அவரது பாடல்கள்  ஒரு  தெளிந்த, ஆழமான,  நீரோடை போல சலசல என்று  ஒரே சீராக ஓடுபவை.  ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் கருத்து, தத்துவம் எல்லாம் ரொம்ப  எளிய தமிழில்  நாலே வரியில் தருவார்.
ஒரே வரி  ரெண்டு தடவை  திரும்பவும் வந்தாலும் அர்த்தம்  பிரமாதம். ஒரு சில சாம்பிள் பாடல்கள் படித்தாலே  அவர் திறமை புரியுமே.  ஒரு பானை சோற்றுக்கு  ஒரு சோறு  பதம் இல்லையா?

''ஸார்,  நான் நாலு வேதமும் படிச்சவன் என்று மார் தட்டிக் கொள்வோர்களில் ஒருவர்  எனக்குத்தெரிந்த  கிழக்கு தெரு மூணாம் நெம்பர்  வீட்டில் வாசலில் திண்ணையில் எப்போதும்   சீட்டாடிக்கொண்டு  நாலு பேரோடு  வம்படிக்கும் சுப்ரமணிய  சர்மா.  பிறர் தன்னை  அதிகம் படித்தவன்  விஷயம் தெரிந்தவன் என்று சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுபவர்.  சொல்ல வைப்பவர்.  தனக்கு எல்லாம் தெரியும் என்கிற மமதை  அவரிடம் ஏராளம் இருந்ததில் என்ன ஆச்சர்யம்.
வேதத்தின் உட்பொருளான பிரம்மத்தை, பரம்பொருளை,  அறிந்தவர் எத்தனை பேர்?  
ஞானத்தை தரும் பரமனின் திருவடிகளை அதில் உணர்ந்து வணங்குபவர் எத்தனை பேர்?
வேதம் என்ற எழுத்தும் அதை மனதில் நெட்டுரு போட்ட தும் மட்டுமே அறிந்த முட்டாள்களே, உங்கள் செயல் எது போல தெரியுமா?   பால் தெரிகிறது, அதை பார்க்கும்  போதெல்லாம் அதனுள் தான்  தயிர்  வெண்ணெய் நெய்  எல்லாம் மறைந்திருக்கிறது என்ற எண்ணம், உண்மை மனதில் தோன்றாதவர்களைப்  போல.

மறையில் மறைந்திருக்கும் மாயவனை அறிந்து போற்றி வணங்கவேண்டும்.  தனது நெஞ்சிலே நஞ்ஜை நிறுத்திக் கொண்ட  நீல கண்டன் நமது நெஞ்சிலேயும் உள்ளானே. அந்த ஹாலஹால விஷமுண்ட  காலகாலனை அறவே மறந்துவிட்டு, ஐயோ காலன் வந்துவிடுவான்,ஆயுளைப்  பறித்துக்கொண்டு போய்விடுவான் என்று  அஞ்சி நடுங்கி ஓடுகிறீர்களே,  கால சம்ஹார மூர்த்தியை நினைத்தால்  கனவிலும் காலன்  நெருங்கமாட்டானே,  வேடிக்கையாக இருக்கிறதா?
பாரதி சொன்னானே  ''காலா என்னருகில் வா உன்னை என் காலால் உதைக்கிறேன்''  என்று அந்த  தைர்யம் வேண்டாமா நமக்கு? என்கிறார்  சிவ வாக்கியர்.                                
                                                           
''நாலுவேதம் ஓதுவீர் ஞான பாதம் அறிகிலீர்
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன் என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே''
 
இன்னும் கொஞ்சம் உயர்ந்த யோக தத்வமும்   சொல்கிறார் சிவவாக்கியர்.   ப்ரம்ம  ஞானி யார்?  பிறக்கும் போதிலிருந்து  உள்ளே விளங்குகின்ற நாடி, பிராணனை, தூங்குகின்ற பாம்பாக சொல்வார்களே, அந்த குண்டலினியை பிராணாயாமத்தால் மூலாதார  சக்கரத் திலிருந்து மெள்ள மேலே எழுப்பி உச்சந்தலை  கபாலத்தில் உள்ள சஹஸ்ராரம் வரை கொண்டு சென்று  தாமரைத்  தேன் துளிகளை, அம்ருதத்தை ருசிப்பவன். அப்படிப்பட்ட யோக சக்தி கொண்ட யோகி, வயதற்றவன், விருத்தாப்பியனாகவோ, பாலகனாகவோ,  எப்படி இருந்தாலும்  அவன்  தேகம்  எப்போதும் ஜொலிக்கும்.   
காஞ்சி  மஹா பெரியவா பரமாச்சார்யரை   பார்த்திருக்கி றீர்களா?  --,அவர் தேகத்தை போல  தங்கமாக ஜொலிக்கும்.   அப்படியென்றால்  கல்ப கோடி வருஷம்  தவயோகியாக  உள்ள  பரமேஸ்வரனை ''பொன்னார் மேனியனே'' என்று  மனக்கண்ணால் கண்டு  ஏன் பாடினார்கள் என்று புரிகிறதா.  சிவன்  சதாசிவன். சதா த்யானத்தில்  மோனத்தவத் தில் லயிப்பவன்.  ஆனந்த  தாண்டவராயன்.
இது கற்பனை அல்ல. சர்வ சத்தியம், சத்தியம் சத்தியம் -  அந்த சிவன் மேல், பார்வதி  மேல் சத்தியம் என்கிறார்  சிவவாக்கியர்.             
 ''உருத்தரித்த நாடியில் ஓடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் பாதம் அம்மை பாதம்உண்மையே.''

Wednesday, March 27, 2024

Perspective - Positive story

Nice One. All should read.
One Story, Two Perspectives

A famous book writer sat in his study. He took out his pen and began to write:

"Last year, I had surgery to remove gallstones. I was bedridden for a long time.

In the same year, I turned 60 and was retired … quitting a company that I loved so much. I had to leave the job I've been doing for 35 years.

That same year I was abandoned by my beloved mother who passed away.

Then, still in the same year, my son failed his final medical exam because of a car accident.  Repair costs from the car damage marked the peak of bad luck last year."

At the end he wrote:
"What, what a bad year!"

The writer's wife entered the room and found her husband who was sad and pensive. From behind, the wife saw the husband's writing. Slowly she backed away and left the room.

15 minutes later she came back in and put down a piece of paper with the following words:

"Last year, my husband finally managed to get rid of his gallbladder which had been making his stomach hurt for years.

That same year, I am grateful that my husband was able to retire in a healthy and happy state of mind & body. I thank God he was given the opportunity to work and earn for 35 years to support our family.

Now, my husband can spend more of his time writing, which has always been his hobby.

In the same year, my 95 year old mother-in-law, without any pain, returned to God in peace.

And still in the same year, God protected our son from harm in a terrible car accident. Our car was seriously damaged by the accident, but my son survived without any serious injuries."
                                 
In the last sentence his wife wrote:
"Last year was a year full of extraordinary blessings from God, and we spent it full of wonder and gratitude."
                                       
The writer smiled with emotion, and warm tears flowed down his cheeks. He was grateful for a different point of view for every event he had gone through the past year. A different perspective of the same events now made him joyful.

Friends, in this life we must understand that it is not happiness or joy that makes us grateful. It is gratitude that makes us happy/joyful! Let's practise seeing events from a positive point of view and keep envy away from our hearts.

"We can complain because rose bushes have thorns, or rejoice because thorn bushes have roses."
 Abraham Lincoln

Good to re-read this article even though you may have read it before.🙏

Saraswati is Brahman - Sayanacharya



=====================
Shri Sayanacharya invokes Bhagavati Saraswati
=====================

चिदानन्दकलां वाणीं वन्दे चंद्रकलाधराम् ।
नैर्मल्यतारतम्येन बिम्बितां चित्तभित्तिषु ॥

~ भगवान् सायणाचार्य, माधवीय धातुवृत्ति

[I bow down to Vani, who is Chidananda-kalam ie manifestation of Chit-ananda roopi Brahman, who bears moon on her head and whose reflection in the intellect is varied based on the gradation in the latter's purity]

Brahman is Nirguna and Nirvishesha. However, for the benefit of the aspirants, Brahman manifests in a Sa-vishesha form. Bhagavati Saraswati, says Shri Sayanacharya, is one such manifestation of Chit-ananda-swaroopa Brahman.  Though, She is essentially the Parabrahman, She is beheld variously by the devotees based on how pure their intellect is. The more we purify our buddhi, the clearer will be the reflection of Bhagavati and the closer we ll be in realizing her true nature.

In the purest of the intellect, which is engaged in constant contemplation of the Mahavakyas, She manifests as the Brahma-vidya and liberates the aspirant from the shackles of samsara. Says Shri Anandagiri Acharya :

वाक्योत्थबुद्धिवृत्त्यभिव्यक्तं ब्रह्मैव ब्रह्मविद्या ।

~ मुण्डक भाष्य टीका

[ Brahma-vidya is verily the Brahman manifesting through the intellect engaged in contemplation of Mahavakyas]

This purest manifestation of the Brahman is regarded as the Devi tattva in Advaita Sampradaya. Bhagavatpada describes this very tattva as Uma-haimavati in his Kena bhashya, Anandagiri Acharya also clarifies it in the tika and the succeeding Acharyas like Swami Shankarananda, Swami Vidyaranya, Shri Sayanacharya and others have also held the same view.

Many thanks to Shri Divyasanu Pandey ji for helping in understanding the shloka 🙏🏻

contentment - HH Bharati teertha Maha Swamigal

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

சந்தோஷமான வாழ்க்கைக்கு திருப்தி அத்யாவசியமானது. எவ்வளவு ஐஸ்வர்யம் அல்லது க்ஷேமங்கள் வந்தாலும் திருப்தியற்ற மனிதனுக்கு சந்தோஷம் கிடைக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. 

இன்ப வஸ்துக்களை விரும்புபவன் அவைகளைப் பெறுவதற்கு கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்: அது ஒன்றும் இன்பமயம் அல்ல. பிறகு அவைகளை தக்கவைத்துக்கொள்ள கடுமையாக போராட வேண்டும் : அதுவும் இன்பம் தரக்கூடிய காரியம் இல்லை. ஏதேனும் ஒரு காரணத்தினால் கஷ்டப்பட்டு சேகரித்த உடைமைகள் நம்மிடமிருந்து பிடுங்கப்பட்டால், இருந்த கொஞ்ச நஞ்ச இன்பமும் போய், முடிவில் வேதனைதான் மிஞ்சும். 

ஆகவே உடைமைகளுக்கு ஆசைப்படுவது நல்லதில்லை. பழங்காலத்தில் வனத்தில் இருந்த ரிஷிகளுக்கென்று சொந்தம் ஏதும் கிடையாது. ஆனால் அவர்கள் சந்தோஷமாக இல்லையா என்ன? திருப்தி என்ற ஒன்றினால் தான் அவர்கள் அவ்வாறு இருந்தார்கள். 

புராணங்கள் பரம சிவபெருமானை ஒரு காளையின் மீது அமர்ந்து இருப்பவராகவும் புலித்தோலை உடுத்தி இருப்பவராகவும் மற்றும் உடலில் விபூதி பூசி இருப்பவராகவும் வர்ணிக்கின்றன. நாம் இந்த்ரியஸுகங்களிலிருந்து மனதை மறக்க வேண்டும் என்பது இதன் தாத்பரியம். நாம் எவ்வளவு செழிப்பாக வாழ்ந்தாலும் எளிய வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு இன்பம் கிடைக்கும். 

தனம் தானாகவே வந்தால் அதை நல்ல அல்லது தார்மீக காரியங்களுக்காக உபயோகப்படுத்தி வாழ்க்கையை சமநிலையில் நடத்தி வரவேண்டும். "இவ்வுலகில் யார் பணக்காரன், யார் ஏழை" என்ற கேள்விக்கு பதில் உண்டு. ஆசைகளற்றவனும் திருப்தி நிரம்பிய மனதுள்ளவனும் தான் பணக்காரன். இந்த குணம் இல்லாத மற்ற எல்லோரும் உண்மையில் ஏழைகள். 

ஆதலால் திருப்தி என்ற லக்ஷியத்தை உயர தாங்கி, இன்பத்துடன் செழிப்பாக வாழ்வது மிக்க நல்லது.

Parrot in Divya prabandam

திவ்யபிரபந்தத்தில் கிளிகள் பற்றி ஸ்ரீஆண்டாள்/ ஆழ்வார்கள் அலற்றியது. 🙏
எல்லே! *இளங்கிளியே* இன்னம் உறங்குதியோ, இன்னடிசிலோடு பாலமுதூட்டி*  எடுத்த என் *கோலக்கிளியை** 
உன்னொடு தோழமை கொள்வன், *பைங்கிளி* வண்ணன் சிரீதரன் என்பதோர்*  பாசத்து  அகப் பட்டிருந்தேன்* , *கூட்டில் இருந்து கிளி* எப்போதும் கோவிந்தா! கோவிந்தா! என்று அழைக்கும்* , 

 *செவ்வாய்க்கிளி* நான்மறை பாடு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

பண்டு இவன் ஆயன் நங்காய்!  படிறன் புகுந்து*
என் மகள்தன் தொண்டை அம் செங் கனி வாய்*  நுகர்ந்தானை உகந்து
அவன்பின் கெண்டை ஒண் கண் மிளிர*  *கிளிபோல்* மிழற்றி நடந்து

முற்றிலும் *பைங் கிளியும்**  பந்தும் ஊசலும் பேசுகின்ற*    
சிற்றில் மென் பூவையும்  விட்டு அகன்ற செழுங் கோதைதன்னை

மான்போலும் மென் நோக்கின் செய்ய வாயார் மரகதம்போல் *மடக்கிளியைக்* கைமேல் கொண்டு
தேன்போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே.

பந்தோடு கழல் மருவாள் *பைங்கிளியும்* பால் ஊட்டாள் பாவை பேணாள்* 
வந்தானோ திருவரங்கன் வாரானோ?' என்று என்றே வளையும் சோரும்*

இனம்மேவு வரிவளைக்கை ஏந்தும் கோவை*  ஏய்வாய மரகதம்போல் *கிளியின்இன் சொல்** 
அனம்மேவு நடைமடவார் பயிலும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே. 

உய்வான் உனகழலே தொழுது எழுவேன்*  *கிளிமடவார்* - 
செவ்வாய் மொழி பயிலும் சிறுபுலியூர்ச் சலசயனத்து* 

சொல்லாய் *பைங்கிளியே* ,
சுடர்ஆழி வலன்உயர்த்த,*
மல்லார்தோள்  வட வேங்கடவனைவர,*
சொல்லாய் *பைங்கிளியே* 

சொல் எடுத்துத் *தன் கிளியைச்* சொல்லே என்று* துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே!     

மெல் விரல்கள் சிவப்பு எய்தத் தடவி ஆங்கே* *மென் கிளிபோல்* மிக மிழற்றும் என் பேதையே.

நுமதுவாயோ அதுஅன்றி வல்வினையேனும் *கிளியும்* எள்கும்-
ஆயோ?* அடும் தொண்டையோ, அறையோ இது அறிவு அரிதே. 

தீரா உடம்பொடு பேதுறுவேன் கண்டுஇரங்கி* 
ஏரார் *கிளிக்கிளவி* எம்அனைதான் வந்து என்னைச்*
சீரார் செழும்புழுதிக் காப்பிட்டு

தளிர் நிறத்தால் குறைவில்லாத்  தனிச் சிறையில் விளப்பு உற்ற,* 
 *கிளிமொழியாள்* காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த,* 

ஒருவண்ணம் சென்று புக்கு எனக்கு ஒன்று உரை *ஒண்கிளியே** 
செரு ஒண் பூம் பொழில் சூழ்  செக்கர் வேலைத் திருவண்வண்டூர்

மழறு தேன் மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க*  எம்- 
குழறு பூவையொடும்*  *கிளியோடும்* குழகேலே*.  

பூவை *பைங்கிளிகள்* பந்து தூதை பூம் புட்டில்கள்,* 
யாவையும் திருமால் திருநாமங்களே கூவி எழும்,

கையமர் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு* 
மெய்யமர் காதல் சொல்லி *கிளிகாள்* ! விரைந்து ஓடிவந்தே?

இடைஇல்லையான் *வளர்த்தகிளிகாள்**  பூவைகள்காள்! குயில்காள்! மயில்காள்*
உடையநம்மாமையும் சங்கும் நெஞ்சும்  ஒன்றும் ஒழியஒட்டாது கொண்டான்*அடையும் வைகுந்தமும் பாற்கடலும்   அஞ்சனவெற்பும் அவைநணிய* 
கடையறப்பாசங்கள் விட்டபின்னை அன்றி அவன்அவை காண்கொடானே.  

நன்குஎண்ணி நான்வளர்த்த  *சிறுகிளிப்பைதலே** 
இன்குரல் நீ மிழற்றேல்  என்ஆர்உயிர்க் காகுத்தன்*
நின்செய்ய வாய்ஒக்கும் வாயன் கண்ணன்கை காலினன்* 
நின்பசும்சாம நிறத்தன் கூட்டுண்டு நீங்கினான். 

ஒழிவுஇன்றித் திருமூழிக்களத்துஉறையும்*  ஒண்சுடரை 
ஒழிவுஇல்லா அணிமழலைக்  *கிளிமொழியாள்* அலற்றியசொல்* 
வழுஇல்லா வண்குருகூர்ச்  சடகோபன் வாய்ந்துஉரைத்த*  
அழிவுஇல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே.

எளிதாயினவாறுஎன்று  என்கண்கள் களிப்பக்* 
களிதாகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்*
 *கிளிதாவிய* சோலைகள்சூழ்  திருப்பேரான்* 
தெளிதாகிய சேண்விசும்பு தருவானே.

शुकवाक्म्रृतम् श्रवणसुकम्- श्रीमद् भागवतम्
 ( கிளிமொழியால் சொல்லப்பட்ட செவிக்கினிய கண்ணமுது ஸ்ரீமத் பாகவதம்). அடியேன் தாஸன். ஸர்வம் ஸ்ரீதேசிகார்ப்பணம். 🙏🙏🙏🙏