Tuesday, May 6, 2025

Atma shreya speople - Sri gurukrupa vilasam

*Source:ஸ்ரீ குருகிருபா விலாஸம்*
 
*தொகுத்தவர்*
 
*ஸ்ரீ ஞானானந்த பாரதீ ஸ்வாமிகள் (முன்னாள் ஸ்ரீ ஆர். கிருஷ்ணஸ்வாமி அய்யர், திருநெல்வேலி)*
 
*7. ஆத்ம நிஷ்டை*
 
ஸ்ரீமத ஆசார்யாரவர்களுக்குஸ்வபாவமாகவும் பால்லம் முதல் பழக்கத்தினாலும் ஆடம்பரத்திலாவது வீண் பேச்சிலாவது எப்பொழுதும் ருசி கிடையாது. அனாவசியமாய் ஒரு கார்யமுமில்லாமல் வெறும் குதூஹலத்துடன் வருபவர்களிடம் ஸல்லாபம் செய்வதை விரும்புவதில்லை. ஆனால் ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுதலையடைய வேண்டுமென்ற தீவிரமான எண்ணத்துடன் அதற்குத் தகுந்த ஸாதனம் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற சிரத்தையுடன் தம்மை அண்டுபவர்களுக்கு எப்பொழுதும் கருணையுடன் இடம் கொடுத்து அவர்களுக்கு வேண்டிய உபதேசாதிகளைச் செய்து வழிகாட்டியாயிருந்து அவர்களை கிருதார்த்தர்களாகச் செய்ய எப்பொழுதும் ஸித்தமாயிருந்தார்கள். அப்படியிருந்தும் அத்யாத்ம சிரேயஸ்ஸை கருதி அவர்களிடம் நெருங்குபவர்கள் அநேகமாய் இல்லை என்றே சொல்ல வேண்டும். தங்களுக்கு ஏதேனும் வியாதி முதலான தொந்தரவுகள் இருந்தால் சிருங்கேரி போவார்கள். இல்லையானால் வேடிக்கையாய் அங்குள்ள விசித்திர அழகுகளைப் பார்க்கப் போவார்கள். அந்தக் காக்ஷிகளின் மத்தியில் ஆசார்யாரையும் சேர்த்துப் பார்ப்பார்கள். அப்பேர்ப்பட்டவர்களிடம் பேசிக் கொண்டிருப்பது வீண் ஆயுஸ்க்ஷயம் என்றே ஆசார்யாரின் எண்ணம். 
 
ஒரு நாள் கொஞ்சம் சிரமப்பட்டு ஆசார்யாரவர்களை தனித்து தரிசனம் செய்ய அனுமதி பெற்று பேசிக் கொண்டிருக்கையில், "சிருங்கேரிக்கு வரும் அநேக சிஷ்யர்களுக்கு தங்களை நேரில் தரிசித்து உபதேசமோ ஆசீர்வாதமோ தைர்யமோ பெற்றுப் போக இடமில்லாமல் போவதில் அவர்கள் வருத்தமடைகிறார்கள். அவர்களுக்கு கொஞ்சம் இடம் கொடுத்து அனுக்ரஹித்தால் நல்லது" என்று நான் சொல்லும்படி ஏற்பட்டது. ஸ்ரீமத் ஆசார்யார் "அது ஸரியல்ல. என்னுடன் பேச வருகிறவர்களுக்கு எவ்விஷயங்களில் ருசியோ அவைகளில் எனக்கு ருசி இல்லை. என்ன '' அது எனக்கு ருசியிருக்கும் விஷயத்தில் அவர்களுக்கு ருசி இல்லை. அவர்களுக்கு பேட்டி கொடுப்பதில் யாருக்கு பிரயோஜனம்?'' என்றார்கள். அதற்கு வாஸ்தவமாயிருக்கலாம். இருந்தாலும் சிலர்களாவது தங்களுடைய ஸத்கதிக்கு தங்கள் ஸஹாயத்தைத் தேடி வருவார்கள்" என்றேன், நான் "என் ஸஹாயத்தையா தேடி வருகிறார்கள்? இருக்கலாம். ஆனால் அவர்களுடைய வியாதிகளையும் மனக்கவலையையும் நிவர்த்தி செய்து கொடுக்கவல்லவா என்னிடம் வருகிறார்கள். என்னை வைத்தியராகவும் மாந்திரிகராகவும் அல்லவா நினைத்து என் ஸஹாயத்தைத் தேடுகிறார்கள் ? இதற்காகவா ஸ்ரீமத் பகவத்பாதாள் இந்தப் பீடத்தை ஏற்படுத்தினார்கள்?" என்று ஸ்ரீமத் ஆசார்யார் கேட்க, நான் "அத்யாதம சிரேயஸ்ஸை உத்தேசித்தும் சிலர்கள் வருவதுண்டு. அவர்களுக்கும் தங்களை தரிசிக்க அவகாசமில்லாமல் போய் விடுகிறது" என்றேன்.அதற்கும் அவர்கள் "அப்படி வாஸ்தவமாக தீவிரமாக அத்யாத்ம விஷயமாக என் ஸஹாயத்தை அபேக்ஷிக்கிறதாயிருந்தால் நான் இடம் கொடுக்கவில்லை யென்றிருந்தாலும் முண்டிக்கொண்டு என்னிடம் வந்து விடுவார்கள்'' என்று சொல்லிவிட்டுப் புன்சிரிப்புடன் 'நீ இப்பொழுது செய்திருக்கிற மாதிரி" என்று சேர்த்தார்கள். இதற்குமேல் நான் சொல்வது உசிதமில்லையென்று நிறுத்திக் கொண்டேன். அவர்களுடைய மனோபாவத்திற்கும் ஸாமான்ய ஜனங்களின் மனோபாவத்திற்கும் வித்யாஸம் வெகு ஜாஸ்தியாயிருப்பதால் அவர்களுடைய நிலையைக் கலைக்க யத்தனிப்பதே அபசாரமாகும்.
 
*Source:ஸ்ரீ குருகிருபா விலாஸம்*
 
*Continuation from yesterday's posting*
 
ஒரு ஸமயம் அவர்கள் தனித்து ஏகாந்தமாய் உட்கார்ந்திருந்த ஸமயம் நான் அவர்களிடம் போகும்படி ஸம்பவித்தது. என்னை உட்காரும்படி ஸம்ஞை காட்டிவிட்டு மௌனமாகவே சுமார் இருபது நிமிஷம்வரை இருந்துவிட்டார்கள். அந்த ஸமயம் நான் அடைந்த மனஸ் சாந்தியையும் ஆனந்தத்தையும் வர்ணிக்க முடியாது. பிறகு அவர்கள் முகத்தில் லேசாக புன்சிரிப்பு உலாவுவதுபோல் தோன்றினதினால் நிமிர்ந்து பார்த்தேன். அவர்கள் ''சொல்லட்டுமா?" என்று கேட்டார்கள். "யுக்தம்போல் செய்கிறது' என்றேன். பிறகு அவர்கள்,
 
'நான் ஆனந்தமாய் இருந்துவரும்போது ஒரு மனோவிருத்தி ஏற்பட்டு அதைக் கலைத்தது. நீ ஸமீபத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பதால் என்னை பேச வேண்டுமென்று எதிர்பார்க்கிறாயோ என்று தோன்றிற்று. நீ எதிர்ப்பார்ப்பதை நிறைவேற்றுவதானால் பேசவேண்டுமென்ற தீர்மானத்திற்கு வந்தேன். ஆனால் பேசுகிறது என்ற வினைச்சொல் ஒரு விஷயத்தை அபேக்ஷிக்குமே என்ற ஞாபகம் வந்தது. பேசவேண்டுமானால் விஷயத்தையல்லவா முதலில் தீர்மானித்துக் ஆகையால் கொள்ள வேண்டும் என்று தோன்றிற்று. ஜகத்திலுள்ள விஷயங்கள் எல்லாம் இரண்டு பிரிவுகளுக்குள் அடங்கிவிடும் என்பது ஞாபகத்திற்கு வந்தது. ஒன்றுஸத், மற்றொன்று அஸத். ஸத் என்பது பிரஹ்மம், அஸத் என்பது நாமரூப பிரபஞ்சம். இவ்விரண்டிற்குள் ஒன்றைப்பற்றித்தான் பேசவேண்டும். ஆனால் ஸத்தான பிரஹ்மம் என்பது வாக்குக்கும் மனதுக்கும் எட்டக்கூடியதில்லையென்று வேதாந்தம் ஸந்தேஹத்திற்கு இடமன்னியில் சொல்வதால் பிரஹ்மத்தைப் பற்றிப் பேசுவது ஸாத்தியமில்லை. மற்றொன்றாகிய அஸத்தான பிரபஞ்சத்தைப் பற்றித்தான் பேசவேண்டும். ஆனால் பிரபஞ்ச விஷயமாகவும் வேதாந்தம் சொல்லும்போது அது அநிர்வசநீயம், அதாவது எப்படியென்று வாக்கினால் எடுத்துச் சொல்லக்கூடியதில்லை என்பதையும் வற்புறுத்தியிருப்பதால் அதுவும் பேச்சுக்கு விஷயமாகாதல்லவா. பேச்சுக்கு விஷயமாகக் கூடியதாக மூன்றாவது பதார்த்தமோ இல்லை. ஆகையால் பேச்சுக்கு யாதொன்றும். விஷயமே இல்லை என்று ஏற்பட்டது. விஷயமில்லாததால் பேச்சுக்கு இடமில்லை என்ற முடிவுக்கு வந்தவுடன் இந்த முடிவுக்கு வர இவ்வளவு மனோவிருத்திகளுக்கு இடம் கொடுத்திருப்பது அனாவசியமில்லையா என்று தோன்றிற்று. ஒரு வண்டிக்காரன் சுங்கான் (வரி) கொடுக்காமலிருக்கக் கருதி ராத்திரி பூராவும் வண்டியை மூலை முடுக்குகள் வழியாய் ஓட்டிக் கொண்டுபோய் பொழுது விடிகிற சமயத்தில் சுங்கான் கட்டிடத்தின் வாசலில் வந்து சேர்ந்தான் என்று சொல்வார்கள். இது ஞாபகத்திற்கு வர கொஞ்சம் சிரிப்பு வந்திருக்கும். நீ நிமிர்ந்து பார்த்தாய்" என்று சொல்லிவிட்டு மறுபடியும் மௌன நிலையில் இருந்துவிட்டார்கள். கிரந்தங்களின் மூலமாய் அறியக்கூடியவைகளைவிட ஜாஸ்தியான விஷயங்கள் இவ்வார்த்தையில் அடங்கி இருக்கவில்லையா? இதைக் கேட்டவுடன் எனக்கே தன்னைத் தெரியாமல் ஸ்ரீமத் ஆசார்யார் பேசினால் நல்லதென்றுஎண்ணியிருப்பேனோ என்று ஸந்தேகம் ஏற்பட்டது. ஆத்ம நிஷ்டையில் ஆனந்தமாயிருந்த அவர்களை நான் போய் உட்கார்ந்தபடியால் அல்லவா பஹிர்முகமாகச் செய்தேன். அது அபசாரம் இல்லையா? என்று தோன்றி உடனே நமஸ்கரித்து விடைபெற்றுச் சென்றேன்.
 
*To be continued..*

Monday, May 5, 2025

Special gunas - HH Bharati teertha Mahaswamigal

*ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்*

சில சந்தர்ப்பங்களில் சில விசேஷ குணங்கள் மனிதனுக்கு இன்றியமையாதவை ஆகின்றன. உதாரணமாக கஷ்டதசையில் தைரியம், செல்வத்துக்கு நடுவில் எளிமை, யுத்த களத்தில் வீரம், வித்தையைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம், பொது மக்களுக்கு முன் பிரசங்கம் செய்தல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 

பொதுவாக மனித வாழ்க்கையில் நல்ல காலமும், கெட்ட காலமும் மாறி மாறி வருகின்றன. மனிதன் கஷ்டங்களை எதிர்கொள்ளும்பொழுது அவன் தன் நல்ல காலம் முடிந்து விட்டதாக ஒருபொழுதும் நினைக்கக்கூடாது. இரவுக்குப் பின் பகல் வருவது மாதிரி கெட்ட காலத்துக்குப்பின் நல்ல காலம் நிச்சயமாக வரும். இந்த தீவிர நம்பிக்கை இருந்தால்தான் மனிதன் வாழ்க்கையில் எந்தவிதமான கஷ்ட நிலைமையையும் எதிர்கொள்ள முடியும். 

ராமாயணத்தில் ஸ்ரீராமரும் மஹாபாரதத்தில் தர்மபுத்ரரும் வனவாசம் புரிய வேண்டி இருந்தது. ஆனால் அவர்கள் தைரியத்தை இழக்காமல் வனவாசம் செய்து கடைசியில் சுகத்தை பெற்றார்கள். அதே மாதிரி ஒரு மனிதன் நிறைய பணத்தை சம்பாதித்தாலும் அவன் பகவத் கிருபையால் தான் பணம் கிடைத்தது என்று எண்ண வேண்டும். மேலும் எளிமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அவன் கர்வமடைந்து தப்பான காரியங்களை செய்ய தொடங்கினால் கடைசியில் அவன் கஷ்டப்பட வேண்டி வரும். 

ராவணனும் துரியோதனனும் ஐஸ்வர்யத்தை பெற்றார்கள். ஆனால் அகங்காரத்தினால் பாவ காரியங்களைச் செய்தார்கள். இது அவர்களை கடைசியில் அழியவைத்தது நமக்கு தெரியும். யுத்த களத்தில் இறங்கும் வீரனுக்கு அவனுடைய வீரம் தலைதூக்கி நிற்கும் குணமாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு சண்டையினால் ஏற்படப்போகும் கஷ்டத்தை எண்ணி அவன் சண்டை போட தயங்கக்கூடாது. எந்த சந்தர்ப்பத்திலும் அவன் நிமிர்ந்து நின்று அச்சமின்றி தைரியமாக யுத்தம் புரிய வேண்டும்

மேலும் மனிதன் சந்துஷ்டி அடையக் கூடாத ஒரு துறை இருக்கிறது.    அதுதான் புலமை பெறுதல் என்பது. கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் மனிதனுக்கு மேலும் கற்றுக் கொள்வதில் ஆர்வம் வேண்டும். சந்தர்ப்பம் ஏற்படும் போதெல்லாம் சத்சங்களுக்குச் சென்று அறிவைப் பெருக்கிக் கொள்வது நிச்சயம் நன்மை பயக்கும். 

அதே மாதிரி பொதுக்கூட்டங்களில் பேசும் பொழுது கேட்பவர்களின் மனதை மகிழ்விக்கும் படி பேச முடிய வேண்டும். 

தொடர்ந்து பயிற்சி செய்தால் இவை மனிதனின் வாழ்க்கையை நிஜமாக மாற்றிவிடும் குணங்களில் சிலவாகும்.

Asking a devotee in midnight- Sri gurukrupa vilasam

*Continuation from yesterday's posting..*
 
*Source:ஸ்ரீ குருகிருபா விலாஸம்*
 
ஆசார்யாரவர்கள்ஸாதாரணமாக துங்கா நதிக்குத் தென்புறமுள்ள நரஸிம்ஹவனம் ஆசிரமத்திலேயே வாஸம் செய்வது வழக்கம். வடகரையில் பழைய மடத்துக் கட்டிடங்களும், ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயமும், சிருங்கேரி ஊரும் இருந்து வருகின்றன. ஊர் மத்தியில் அக்கிரஹாரத்தில் ஸ்ரீமடம் அதிகாரிகள் வாஸம் செய்வார்கள். அதற்கும் ஆசார்யார் இருப்பிடத்திற்கும் சுமார் அரை மைல் இருக்கும். மத்தியில் நதியுமுண்டு. ஸ்ரீமத் ஆசார்யாரவர்கள் அந்தர்முகமாக இருந்த ஸமயம் ஒரு நாள் நடுராத்திரியில் தன்னிடமிருந்த வேலைக்காரனைக் கூப்பிட்டு "அக்கரையில் அக்ரஹாரத்தில் இன்னார் கீழே விழுந்து விட்டார், உடனே போய்ப் பார்த்துவா" என்று சொன்னார்கள். அர்த்தராத்திரியில் இவ்விதம் ஆக்ஞை கொடுத்ததினால் வேலைக்காரன் கொஞ்சம் தயங்கி நகர்ந்து நின்றுகொண்டான். சில க்ஷணங்கள் கழித்து அறையிலிருந்த படியே ஆசார்யாரவர்கள் "போனாயா?" என்று கேட்டார்கள். இனிமேல் அவர்களுடைய அதிருப்தியேற் படுமென்று பயந்த வேலைக்காரன் அவர்கள் குறிப்பிட்ட அதிகாரியின் வீடு வந்து சேர்ந்தான். வீட்டு வாசற்கதவு உள்தாழ்ப்பாளிடப்பட்டிருந்தது. எல்லாம் நிச்சப்தமாக இருக்கக் கண்டான். ஆனால் திரும்பிப்போனால் அவ்வதிகாரியைப் பார்த்தாயாவென்று கேட்டால் என்ன பதில் சொல்லுகிறதென்று பயந்து கதவைத் தட்டினான். அவ்வதிகாரியே கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்து பார்க்க ஆசார்யாரின் வேலைக்காரன் நிற்பதைக் கண்டார். நிசிவேளையில் வந்ததால் ஆசார்யாருக்கு ஏதேனும் அஸௌகர்யமோவென்று கவலையுற்று வினவினார். அவன் நடந்ததைச் சொன்னான். அதன்பேரில் அவ்வதிகாரி "வாஸ்தவம். சில நிமிஷங்களுக்கு முன் ஜலமோசனத்திற்காக வாசல் பக்கம் வந்து கைகால் அலம்பிவிட்டுத் திரும்பும்போது கல் படியில் வழுக்கிக் கீழே விழுந்துவிட்டேன். இரண்டு நிமிஷம் பிரக்ஞையில்லாமலிருந்து மறுபடியும் தன் நினைவு வந்தவுடன் தெருவிலாவது வீட்டிலாவது யாருக்கும் தெரியவிடமின்றி ஓசைப்படாமல் வீட்டிற்குள் வந்து படுத்துக்கொண்டு விட்டேன். இதை ஆசார்யார் எப்படி அறிந்தார்களோ தெரியவில்லை. எப்படியும் அவர்கள் என் விஷயத்தில் வைத்திருக்கும் கருணைக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன். நான் ஸ்வஸ்தமாக இருப்பதாக அவர்களிடம் சொல்லிவிடு" என்று சொன்னார். இந்த ஸம்பவத்தைப் பற்றி அவ்வதிகாரி பின்னால் சொல்லும்போது " இந்தக் கடைசி வாக்கியம் நான் சொன்னவுடன் என் அசட்டுத்தனத்தை நானே உணர்ந்து கொண்டேன். நான் விழுந்ததை அறிந்த ஆசார்யாரவர்களுக்கு நான் எழுந்திருந்து ஸ்வஸ்தமாயிருக்கிறேனென்பது நான் சொல்லியா தெரிய வேண்டும்? " என்றார். 
 
*To be continued..*

Sunday, May 4, 2025

good life

*நீதி மஞ்ஜரீ*

*நல் வாழ்க்கை*

ஒருவர் ஸுகமாயிருந்து வருவதை நாம் பார்க்கும் போது நாமும் அவர்போல இருந்தால் நல்லது என்ற ஆசை உண்டாகிறது. அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லையென்றால் அவரிடம் அஸூயை ஏற்படுகிறது. அஸூயை முற்றினதேயானால் தனக்கு ஸுகம் கிடைக்காமல் போனாலும் அவருடைய ஸுகத்தைக் கெடுக்க வேண்டுமென்ற மாதஸணியம் உண்டாகிறது. அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள அவரிடம் போட்டி போடத் தோன்றுகிறது. ஆசை நிறைவேறிவிட்டால் தானும் அந்த ஸுகத்தை ஸம்பாதித்து விட்டோம் என்ற மதம் ஏற்படுகிறது. செய்யும் பிரயத்தினம் நன்கு பலித்து அவரை விட அதிகமான ஸுகம் கிடைத்துவிட்டால் அவரிடம் அவமதிப்பு ஏற்படுகிறது. இவ்விதமாகப் பல விதத்தில் மனதின் சாத்தியைக் கெடுக்கக்கூடிய விருத்திகள் ஏற்படும். இவைகளுக்கெல்லாம் மூல் காரணம் தனக்கில்லாத ஸுகம் வேறொருவரிடம் இருக்கிறதே என்ற எண்ணம்தான். இதை நிவிருத்தி செய்வதற்கு ஒரே வழி தான் உண்டு. எவ்வித ஆசையுமற்று இங்கே சொல்ல வரவில்லை. ஆத்ம நிஷ்டையிலிருப்பதை இங்கே ஸாமான்ய தசையிலிருப்பவர்களுக்கே வழி சொல்லப்படுகிறது. அதாவது, யாரிடம் ஸுகமிருப்பதாகக் காண்கிறோமோ அவரை வேற்று மனுஷியராகப் பார்க்காமல் நம்மைச் சேர்ந்தவர் என்றே பாவித்துவிட்டால் மேலே கண்ட கெட்ட விருத்திகள் யாதொன்றும் ஏற்படாது. இந்த பாவனையைத்தான் மைத்ரீ, மித்ரத்தன்மை, ஸ்நேஹம் என்று சொல்லுகிறது.
நாம் மிகவும் ஆசையுடன் ஏதோ ஒரு பழத்தை சாப்பிட்டு ஸுகமடைய வேண்டுமென்று நினைத்து சிரமப்பட்டு ஸம்பாதித்து வீட்டுக்குக் கொண்டு வந்து வைத்திருப்போம். ஏதோ அவஸர காரியமாக உள்பக்கம் போய்விட்டுத் திரும்பி வந்து பார்க்கையில் அப்பழத்தைக் காணவில்லை என்றால் நமக்கு துக்கம் கவலை எல்லாம் ஏற்படுவது ஸஹஜம். யார் எடுத்துக்கொண்டு போனாறென்று தெரியாதபோதே அந்தத் தெரியாதவரிடம் கோபமும் வரும். அப்படியிருக்க முன்பின் ஸம்பந்தமில்லாதவர் ஒருவர் வந்து "நான்தான் எடுத்து சாப்பிட்டுவிட்டேன்" என்று சொன்னால் கோபம் வரும் என்பதில் ஸந்தேஹமில்லை. அப்படிக்கன்னியில் நம் குழந்தையே வந்து "அப்பா, நான் தான் எடுத்து சாப்பிட்டேன்" என்று சொன்னால் அந்தக் கோபம் வருகிறதில்லை. 'சரி போ, நீ தானே சாப்பிட்டாய்' என்று ஸமாதானம் செய்து கொள்ள முடிகிறது. வேற்று மனுஷியர் சாப்பிட்டாலும், நம் குழந்தை சாப்பிட்டாலும், நமக்கு இல்லையென்று போய்விட்ட அம்சம் பொதுவாக அப்படியே இருக்கிறது. ஆனாலும், மனஸுக்கு ஸமாதானமாகாத நிலை, ஸமாதானமாகும் நிலை என்ற வித்யாஸமிருக்கிறது. இதற்குக் காரணம் அந்த மனுஷியர் வேறு, குழந்தை நம்மைச் சேர்ந்தது என்ற எண்ணம்தான். அந்த மனுஷியரிடத்திலும் தன்னைச் சேர்ந்தவர் என்ற எண்ணம் இருந்துவிட்டால் கோபம் வராது.

Thyagaraja divyanama kriti - Hari yenu vaani in thodi

https://youtu.be/fzye1TqKOFw

One of the least popular Thyagaraja divyanama kriti - Hari yenu vaani in thodi - Was preparing these kids for a competition & practice session went like this

Blessing a adevotee - Sri gurukrupa vilasam

*Continuation from yesterday's posting*
 
*Source:ஸ்ரீ குருகிருபா விலாஸம்*
 
ஓர் ஊரில் இரண்டு ஸஹோதரர்கள் இருந்தார்கள். பெயர் பிரகிருதமில்லாததினால் ராமன் லக்ஷ்மணன் என்று வைத்துக் கொள்வோம். தம்பியாகிய லக்ஷ்மணன் மிகவும் ஜ்வரத்தினால் பீடிக்கப்பட்டிருந்த ஸமயத்தில், அவனுக்கு சீக்கிரம் குணமாக ஸ்ரீமத் ஆசார்யாரவர்களுடைய அநுக்ரஹத்தை வேண்டிக்கொண்டு தமையனாரான ராமன் ஸ்ரீமடத்திற்குத் தந்தி கொடுத்தார். அந்தத் தந்தியை வாங்கின அதிகாரி "இதுமாதிரி விஷயங்களில் ஸ்ரீமத் ஆசார்யாரவர்கள் அக்கறை எடுத்துக் கொள்ளவா போகிறார்கள்? அவர்தான் உலகத்தை மறந்திருக்கிறாரே!" என்று தனக்குள் சொல்லிக் கொண்டார். கொஞ்சநேரம் கழித்து அவர் ஸ்ரீமத் ஆசார்யாரை தரிசனம் செய்யப் போகும் ஸமயத்தில் ஸந்தர்ப்பம் கிடைத்தால் சொல்லலாமென்று நினைத்து இத்தந்தியையும் எடுத்துக்கொண்டு போனார். அவ்விடம் போய்ச் சேர்ந்ததும் ஆசார்யாரவர்கள், 
 
"கையில் என்ன?" என்று கேட்டார்கள்.
 
"தன் தமையன் ராமன் ஜ்வரத்தினால் சிரமப்படுவதாக லக்ஷ்மணன் தந்தி கொடுத்திருக்கிறான்'' என்று அதிகாரி சொன்னார். உடனே ஆசார்யாரவர்கள்.
 
"தம்பி லக்ஷ்மணனுக்கு உடம்பு சரியில்லையென்று ராமன் தந்தி கொடுத்திருக்கிறான் என்று சொல்லுங்கள்' என்றார்கள். உடனே அதிகாரி தந்தியை எடுத்துப் பார்க்க ஆசார்யார் சொன்னதே சரியாகவிருக்கக் கண்டு,
 
''மன்னிக்க வேண்டும். நான்தான் தவறுதலாய்ச் சொல்லியிருக்கிறேன். சரியானபடி ஞாபகம் வைத்துக் கொள்ளாமல் மறந்துவிட்டேன்" என்றார். ஆசார்யார் புன்சிரிப்புடன்.
 
'' உலகத்தை நான் மறக்கலாம். நீங்கள் மறக்கலாமா?" என்று கேட்டார்கள். அவ்வதிகாரி காலையில் தன் மனதிற்குள் சொல்லிக்கொண்ட வார்த்தைகளையே ஆசார்யார் பிரயோகம் பண்ணினதைக் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தார்.
 
*To be continued..*

Saturday, May 3, 2025

Necessity of a Guru

திருவண்ணாமலை மலைப்பாதையின் மேல் குருவும் சிஷ்யனும் நடந்து கொண்டிருந்தார்கள். 

அங்கே இருக்கும் விருப்பாச்சி குகையில் தியானம் செய்ய இருவரும் நடக்க துவங்கி அரை மணி நேரம் கடந்துவிட்டது.

குரு மெளனமாக பின்னால் வர சிஷ்யன் வேகமாக நடந்து கொண்டிருந்தான். 

சிறிது நேரத்தில் குருவின் காட்சியில் மறைந்து வெகு தொலைவுக்கு சென்றுவிட்டான் 

குரு மெல்ல நடந்து கொண்டிருந்தார் 
சில நிமிடங்கள் கரைந்தன...

தூரத்தில் சோர்வுடன் சிஷ்யன் அமர்ந்திருந்தான்.
குரு கையில் ஒர் பச்சிலையுடன் நடந்து வந்தார். 

சிஷ்யனிடம் கொடுத்து முகர்ந்து பார்க்க சொன்னார் அவர் அந்த பச்சிலையை முகர்ந்ததும் 

அதில் எலுமிச்சை மணம் அடித்தது

சிஷ்யனின் மனதுக்கும் உடலுக்கும் 
ஒரு உற்சாகம் கிடைத்தது.

குருவே இது என்ன இலை...???"

"இதன் பெயர் எலும்மிச்சை புல்

சாதாரண புல் போல தெரிந்தாலும் எலுமிச்சை மணம் கொண்டது."

குருவே உங்களிடம் ஒரு கேள்வி

தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது."

புன்னகைத்தவாறே..."ம்.." என்றார் குரு 

ஒருவனுக்கு ஆன்மீக உயர்வு அடைய 
குரு அவசியம் தானா..???" 

விழிப்புணர்வு ஒருவனுக்கு கிடைக்கும் வரை அவனுக்கு குரு அவசியம்"

விழிப்புணர்வு என்றால்...???"

நான் கொடுத்த எலுமிச்சை புல் முகர்ந்தாய் அல்லவா..??? 

அதற்கு முன் இங்கே இருக்கும் எலுமிச்சை புல் பற்றி உனக்கு தெரியுமா...???"

தெரியாது"

நான் வரும் வரை இங்கே அமர்ந்திருந்தாயே.. 

பார் உன் கால்களுக்கு அருகிலேயே அந்த புல் புதர் போல வளர்ந்திருக்கிறது. 

உன் கால்களுக்கு கீழே அந்த பொருள் இருப்பது தெரியாமல்,

இன்னொருவர் உனக்கு தரும் வரை நீ அமர்ந்திருக்கிறாய்

விழிப்புணர்வு கொண்டவனாக இருந்தால் உனக்கே தெரிந்திருக்கும்."

அப்படியானால் விழிப்புணர்வு வரும் வரை குரு தேவை அல்லவா..???"

விழிப்புணர்வு வரும் வரை குரு தேவை. 

விழிப்புணர்வு வந்த பின் குரு எல்லா இடத்திலும் இருப்பதை நீ உணர்வாய்"

அப்படியானால் அனைவருக்கும் குரு தேவையா...???"

ஆம். 

அதனால் தான் ஆண்டாண்டு காலமாக இம்மலையில் எலும்மிச்சை புல் வளருகிறது

உன்னையும் என்னையும் போல பலர் இங்கே வந்து இதே கேள்வியையும் பதிலையும் விவரிக்கிறார்கள்.....

ஸ்ரீ ரமணா 🙏

God is there- Sri Gurukrupa vilasam

*Continuation from yesterday's posting..*
 
*Source:ஸ்ரீ குருகிருபா விலாஸம்*
 
"ஈசுவரன் ஒருவன் உண்டென்பதை மறவாதீர்கள். இதைப்பற்றி எங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமா? எங்களுக்கு இதுகூடத் தெரியாதா? என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் வாஸ்தவத்தில் ஈசுவரன் ஒருவர் இருக்கிறாரென்பதை நீங்கள் உணர்ந்திருக்கும் விஷயத்தில் ஊர் ஊராக நியாய ஸ்தலங்கள் எதற்கு? ஒவ்வொரு லௌகிக நடவடிக்கைகளுக்கும் இவ்வளவு காகிதச் செலவு எதற்கு? பத்திரங்கள் பதிவு செய்வதற்கு இத்தனை அதிகாரிகள் எதற்கு? பத்திரங்களில் சாக்ஷிகளின் கையெழுத்து எதற்கு? இவ்விதமாக ஒவ்வொரு கார்யத்தையும் கவனிக்கும்போது ஈசுவரன் ஒருவர் இருக்கிறாரென்பதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்கிறீர்களென்று நினைக்க இடமேயில்லை. ஈசுவரன் ஒருவர் ஸர்வ ஸாக்ஷியாக இருக்கிறாரென்பதை சுத்தமாக மறந்தேயிருக்கிறீர்கள். ஈசுவரன் ஒருவர் இல்லையென்று தீர்மானித்துக்கொண்டே நடந்து வருகிறீர்களென்றே சொல்லலாம். ஆகையால் இவ்விஷயம் உங்களுக்கு சிறியதாகத் தோன்றினாலும் அவசியம் எடுத்துச் சொல்லவேண்டிய விஷயமே."
 
"இப்பொழுது அநுபவிக்கும் ஸுக துக்கங்கள் முன் செய்த கர்மவசத்தினால்தான் ஏற்படுகின்றன என்கிற நம் ஸித்தாந்தத்தை ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்கிறீர்களா? கர்ம பலனான துக்கமானது உங்களுடைய பிரயத்தினத்தையாவது கர்ம விருப்பத்தையாவது கொஞ்சமேனும் எதிர்பாராமல் தானாகவே ஏற்படவில்லையா? அப்படியிருக்க, அதேமாதிரி பலனாயிருக்கிற ஸுகமும் உங்களுடைய பிரயத்தினத்தையும் விருப்பத்தையும் எதிர்பாராமல் வந்துதானே தீரும்? ஸுகத்திற்காக ஏன் வீணாக ஆசையை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள்? அதற்காக ஏன் வீணாகப் பிரயத்தினம் செய்கிறீர்கள்? பூர்வ கர்மாவினால் நீங்கள் ஸுகம் ஸம்பாதித்திருக்கும் விஷயத்தில் அது தானாகவே வந்துதானே தீரும்? அவ்விதம் ஸம்பாதிக்காமலிருக்கும் விஷயத்தில் நீங்கள் என்ன ஆசைப்பட்டாலும் பிரயத்தினப்பட்டாலும்கூட உங்களுக்கு அந்த கிடைக்குமா? அப்படியிருக்க வீணாக ஏன் உங்கள் காலத்தையும் ஸுகம் பலத்தையும் செலவழிக்கிறீர்கள் ? புண்யத்தை ஸம்பாதிப்பதில் செலவழியுங்கள்; ஸுகம் தானாகவே வரும். விஷய ஸுகம் சாசுவதமில்லை. துக்கத்திலும் கொண்டுபோய் விடும். ஆகையால் சாசுவதமானஆத்ம ஸுகத்தையே அடைய பிரயத்தினம் செய்யுங்கள். இப்பொழுது இருக்கிற ஸ்திதியில் நீங்கள் இன்னொரு ஜன்மம் எடுக்கும்படி ஏற்பட்டால், இப்பொழுது ஸத்கதிக்கு ஸாதகமாக உங்களுக்குக் கிடைத்திருக்கிற ஸௌகர்யங்கள் அப்பொழுது கிடைக்குமென்பது என்ன நிச்சயம்? வீணாக காலத்தைக் கழிக்காதீர்கள். நல்ல விஷயத்தில் உபயோகப் படுத்துங்கள். அர்த்தபரராகவிருந்து ஸந்தோஷத்தையும் திருப்தியையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள். கூடிய மட்டும் மனதை சுத்தமாகவும் பற்றற்றதாகவும் வைத்துக்கொள்ள அப்யாஸம் செய்யுங்கள். மனது பரிசுத்தமாவதற்கு ஈசுவராராதன ரூபமாய் நித்ய கர்மாக்களைச் சிரத்தையுடன் செய்துவாருங்கள்" என்றிவ்வாறு சிரத்தையையும் கர்மாநுஷ்டானத்தையுமே வற்புறுத்துவார்கள்.
 
*To be continued..*

lesson on good manners - Joke

A lesson in manners......
During one of her daily classes, a teacher trying to teach good manners asked her students the following question:
'Michael, if you were on a date having dinner with a nice young lady, How would you tell her that you have to go to the bathroom?'
Michael said, 'Just a minute I have to go pee.'
The teacher responded by saying, 'That would be rude and impolite.
What about you, Sherman, how would you say it?'
Sherman said, 'I am sorry, but I really need to go to the bathroom. I'll be right back.'
'That's better, but it's still not very nice to say the word bathroom at the dinner table.
And you, little Johnny, can you use your brain for once and show us your good manners?'
'I would say, 'Darling, may I please be excused for a moment? I have to shake hands with a very dear friend of mine, whom I hope to introduce you to after dinner.'
The teacher fainted.

Friday, May 2, 2025

Sri Satya cahandrasekarendra Saraswati stuti - sanskrit with meanings

श्रीजयरामकृता
*॥ श्रीमत्सत्यचन्द्रशेखरेन्द्र- सरस्वती-स्तुतिः॥*

*सत्यचन्द्रशेखरेन्द्रमानतोऽस्मि सन्ततं* 
*प्रत्नकामकोटिपीठनूत्ननायकं शुभम्।*
*चन्द्रशेखरेन्द्रशिष्यशिष्यपावितं परम्* 
*सर्वलोकपालनाय पीठसंस्थितं यतिम्॥* १
I bow in reverence always to His Holiness Sri Satya-Chandrashekharendra Saraswati, the auspicious new leader of the ancient Kanchi Kamakoti Pīṭha; a noble ascetic enthroned for the protection of all the worlds, sanctified by the disciple (His Holiness Sri Vijayendra Saraswati) of the disciple (His Holiness Sri Jayendra Saraswati)) of His Holiness Sri Chandrashekharendra Saraswati.

*द्राविडेषु वेदधर्मसन्ततौ धृतव्रतम्*
*सर्ववेदधारणेन गीयमानवैभवम्* 
*द्राविडाख्यपूर्वकालनिर्मलाभिधानकम्* 
*कालकालचन्द्रमौलिपूजने समाहितम्॥२*
(I salute) him who has taken a firm vow to uphold Vedic Dharma in the Dravida region, whose glory is celebrated for his mastery over all the Vedas. In his Purvashrama, he bore the pure name 'Dravida,' and he is deeply absorbed in the worship of Lord Chandramauli, the Lord of even Yama.

*सत्यचेतनस्य चित्तमन्दिरे निरन्तरम्* 
*एकतानवृत्तिवारिधारयाभिषेचकम्* 
*तुच्छलोकभोगमत्यजद्य आत्मवान् युवा* 
*तं नमामि सत्यचन्द्रशेखरेन्द्रमीश्वरम्॥ ३*
I bow to His Holiness Sri Satya-Chandrashekharendra Saraswati, the noble one, whose mind is ever engaged in performing the abhiṣeka of True Consciousness (Satya-Chetana) within the inner temple of the heart, using the steady stream of one-pointed contemplation—a self-controlled young ascetic who has renounced trivial worldly pleasures.

*आदिशङ्कराद्वितीयमूलपीठभूषणम्*
*भारतस्य हिन्दुसंस्कृतेश्च नित्यपोषणम्*
*शास्त्रयोनितत्त्वमेव चर्चितुं समुत्सुकम्* 
*शास्त्रकोविदैः समं समस्तलोकशङ्करम्॥४॥*
He is the ornament of the original, unparalleled seat established by Ādi Śaṅkara, His Holiness Sri Satya-Chandrashekharendra, the eternal nourisher of India's Hindu culture, eager to engage in profound discussions on Brahman, the source of the śāstras (śāstra-yoni), alongside scholars well-versed in scriptural knowledge—a true benefactor of the world.

*भक्तिभावनाभरा वयं नमाम देशिक* 
*श्रद्धया दिवानिशं दिवाकरायुताभ भोः*  
*सत्यचन्द्रशेखरेन्द्र! पाहि पामरान् हि नः* 
*त्वत्पदाब्जमाश्रितान् कृपाकटाक्षवीक्षणैः॥५*
Filled with devotion, we bow to you, O revered teacher (deshika), with unwavering faith, day and night, O one radiant like countless suns. O Satya-Chandrashekharendra! Protect us, the humble and unworthy, who have taken refuge at your lotus feet—cast upon us your compassionate glances

*जयरामकृतं स्तोत्रं मनःशुद्धिप्रदायकम्।*
*विश्वावसुशुभे वर्षे पीठारोहमहोत्सवे॥*
This hymn composed by Jayarama brings purity to the mind. It was offered in the auspicious year of Viśvāvasu, during the grand festival of the Pīṭhārohaṇa (ascension to the spiritual seat (by His holiness Sri Satya-Chandrashekharendra Saraswati)

Sri gurukrupa vilasam - charcha on dharma

*Continuation from yesterday's posting..*
 
*Source:ஸ்ரீ குருகிருபா விலாஸம்*
 
தர்ம விஷயமாகவும் வீண் சர்ச்சை செய்வதில் ஸ்ரீமத் ஆசார்யாரவர்களுக்கு திருப்தி கிடையாது. ஏதாவது ஒரு விஷயத்தில் அது எப்படி இது எப்படி என்று பொதுவாகக் கேட்டால் அவர்கள் பதில் சொல்வது கிடையாது. அப்படியல்லாமல் ஒரு குறிப்பிட்ட ஸந்தர்ப்பத்தில், தான் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று ஒரு சிஷ்யன் கேட்டால், தம்முடைய உபதேசப்படி அவன் நடப்பானென்று அவர்களுக்குத் தோன்றினால் மாத்திரம் அவனுக்குத் தக்கபடி உபதேசம் செய்வார்கள். ஆனால் அவ்வுபதேசம் அவனுக்கு மாத்திரம்தான். இன்னொரு சிஷ்யன் அதே ஸந்தர்ப்பங்களோ அதே யோக்கியதையோ தனக்கு இருப்பதாக நினைத்துக்கொண்டு அதேமாதிரி தானும் நடக்கலாமாவென்று கேட்டுவிட்டால், அநேகமாய் கூடாது என்றே பதில் வரும். இவனுக்குத் தக்கபடி வேறு உபதேசம் கிடைக்கும். சிஷ்யர்கள் தங்கள் தங்களுக்குக் கிடைத்த உபதேசங்களை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு சரிபார்த்துக் கொள்வது சரியில்லையென்றும் சொல்வார்கள். ஆகையால் ஒவ்வொருவனுக்கும் அவன் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்ற உபதேசமே பிரயோஜனமுள்ளதென்றும் எல்லோருக்கும் பொதுவாக உபயோகப்படக் கூடிய உபதேசம்
ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு கொள்வது சரியில்லையென்றும் சொல்வார்கள். ஆகையால் ஒவ்வொருவனுக்கும் அவன் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்ற உபதேசமே பிரயோஜனமுள்ளதென்றும் எல்லோருக்கும் பொதுவாக உபயோகப்படக் கூடிய உபதேசம் யாதொன்றும் கிடையாதென்றும் அவர்களின் அபிப்பிராயம். இதே காரணத்தினால் மத விஷயமாக பொதுஜனங்களை உத்தேசித்து உபந்யாஸம் செய்வது என்பதில் அவர்களுக்கு ஒருநாளும் திருப்தி கிடையாது. அதிலிருந்து சொல்லுகிறவருக்காவது கேட்கிறவர்களுக்காவது எவ்வித பிரயோஜனமும் கிடையாது என்பதே அவர்களின் தீர்மானம். 
 
*To be continued.*

Paksha, maasa indication in the word shankara

Courtesy: Dr.Bala Chiravoori

🌺आदिशङ्कराचार्यः🌺

श्रुतिस्मृतिपुराणानामालयं करुणालयम्।
नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम्।।

पुरा बौद्धमतप्रचारः अत्यधिक आसीत्। जनाः कर्माचारविमुखा आसन्। केवलं शून्यवादमेव अनुसरन्ति स्म। तस्मिन् समये शङ्कर एव शङ्कररूपेण अवततार।धर्मरक्षणार्थं आत्मानं सृजामीति भगवता उक्तं खलु। तदर्थमेव शङ्करावतारः प्रकटितः।

शङ्करावतारः वेदेऽपि प्रतिपादितः। यजुर्वेदे रुद्रानुवाके "नमस्सोमायच...... इत्यारभ्य तस्मिन् मध्ये नमःकपर्दिने च व्युप्तकेशाय च ..... इति " स्तूयते। तत्र कपर्दिन् इत्युक्ते जटाजूटधरः इति अर्थो वर्तते। किन्तु झटिति व्युप्तकेशाय नमः इत्यपि प्रस्तूयते । व्युप्तकेशः इत्युक्ते मुण्डितकेशःइत्यर्थः। मुण्डितकेशः केवलं शंकराचार्याः एव ।अनेन प्रकारेण वेदे शङ्कराचार्यावतारः प्रतिपाद्यते।

शङ्करभगत्पादानां पितरौ आर्याम्बा शिवगुरुरास्ताम्। तौ ईश्वरं उपास्य शङ्करं सुतमिव लब्धवन्तौ। शङ्करभगवत्पादः वैशाखशुद्धपञ्चम्यां अजायत। प्राचीनसम्प्रदाये संख्याः अक्षरसंकेतरूपेण प्रोच्यन्ते। "कादि नव , टादि नव, रु पञ्च, याद्यष्टौ" एवं प्रकारेण सूचनाविधानमस्ति। अनेन प्रकारेण आचार्याणां जन्मदिवसमनुसृत्य "शङ्कर" इति नामकरणं क्रियते । वैशाखशुद्धपञचमी आचार्याणां जन्मदिवसः खलु। अर्थात् पञ्चमी तिथिः, प्रथमपक्षः, द्वितीयो मासः। ताः संख्याः' शंकर' इति पदसंकेताः भवन्ति। 'याद्यष्टौ 'इति सूत्रमनुसृत्य' श' इत्युक्ते पञ्च।(य, र, ल , व, श...)'कादि नव' इति सूत्रमनुसृत्य 'क' अक्षरस्य संकेतो भवति प्रथमा इति। पुनः 'याद्यष्टौ' इति सूत्रप्रकारेण 'र' इत्युक्ते द्वितीयो भवति। द्वितीयो मासः, प्रथमपक्षः, पञ्चमीतिथिः इति भवति(र क शं)। "अङ्कानां वामतो गतिः" इत्यनुसारेण "शङ्करः" इति नामकरणं अकुर्वन्। पक्षमाससंख्यासूचनाविधानेन 'शङ्कर' इति नामधेयः संभवति। आचार्याणां तेषां पितृभ्यां अनेनप्रकारेणैव नामकरणं कृतम।।

(कञ्चिपरमाचार्यवर्याणां जगद्गुरुबोधाः इति पुस्तके संगृह्य अनूदितं मया।)🙌🙏

बाला...🙏✍️🌹

Festival liked by Periyavaa the most

*ஆதி சங்கரர் ஜெயந்தி ஸ்பெஷல் ! 02. 05. 2025 !* *ⓀⓃ*

காஞ்சி மகா பெரியவா ஒருமுறை பூஜையெல்லாம் முடித்தும், பக்தர்களுக்கு தரிசனம் அளித்தும் சற்று ஓய்வில் இருந்த நேரம். மடத்தில் அவருக்கு நெருங்கிய அன்பர்கள் சிலர் மட்டுமே மகா பெரியவருடன் அப்போது இருந்தனர். ஒருவர் பெரியவாளிடம் கேட்டார்...

"தங்களுக்கு சிறிய வயதில் பிடித்த பண்டிகை எது? தீபாவளியா, தைப்பொங்கல் விசேஷமா, கார்த்திகை தீபமா, கோகுலாஷ்டமியா, ஆருத்ரா தரிசனமா எது என்று சொல்லுங்கள்'' என்றார்.

மகா பெரியவா, இது எதையும் குறிப்பிடாமல் "எனக்குப் பிடித்த பண்டிகை *"ஆதி சங்கர ஜெயந்தி''* என்றார். சூழ்ந்திருந்த பக்தர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. "சங்கர ஜெயந்தியில் அப்படி என்ன விசேஷமான பண்டங்கள்! விருந்து?'' என வியந்தனர். 

மகா பெரியவாளே புதிரை அவிழ்த்தால் தான் புரியும். அவர் சொன்னார், "ஆதி சங்கரர் மட்டும் அவதாரம் செய்யாவிட்டால் நாம் கொண்டாடும் இந்து மதப் பண்டிகைகள் தான் ஏது? ஆகவே, நம் சநாதன தர்மத்திற்கு புத்துயிர் அளித்த 'சங்கரர் ஜெயந்தி' எனக்குப் பிடித்த பண்டிகை'' என்றார்.

ஆதிசங்கரர் சாதாரண மனிதனுக்கு நான்கு விஷயங்களைச் சொன்னார் .

1. முதலில் சொன்னது: பகவானுடைய நாமத்தை ஜபி.
பகவத் கீதையைப் படி,
 
2. பகவானுடைய விஷயத்தையே மனதில் சிந்தனை செய், வேறு எந்த விஷயத்தையும் சிந்திக்காதே. 

3. மூன்றாவது விஷயம்: நீ சகவாசம் செய்வதாயிருந்தால் நல்ல மனிதர்கள் சகவாசத்தில் இரு.

யார் நல்ல மனிதர்கள், பார்த்தால் எல்லோரும் நல்ல மனிதர்களாகத் தான் தோன்றுகிறது. பின்பு அவர்களுடன் கொஞ்ச நாட்கள். சகவாசம் பண்ணியதற்குப் பின்பு தான் அவர்களுடைய நிறம், குணம் தெரிந்து விடுகிறது. முதலில் தெரியவே இல்லை என்று சொல்லலாம். நல்லவர்கள் என்றால் எப்படி இருப்பார்கள் என்று கேட்டால், 
அதாவது முக்யமாக இன்னொருவனுக்கு உபகாரம் செய்யவேண்டும் என்கிற பாவம் உள்ளவர்கள் நல்லவர்கள்.

ராமாயணத்தில் பகவான் ஸ்ரீராமசந்திரருடைய மனைவி சீதா தேவியை ராவணன் என்கிற ராஷஸன் அபகரித்துக் கொண்டு போனான். அந்த சமயத்தில் ஸ்ரீராமசந்த்ரருக்கு உபகாரம் செய்தது ஹனுமார். சீதை எங்கு இருக்கிறாள் என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்த சமயத்தில் அவ்வளவு பெரிய ஸமுத்ரத்தைத் தாண்டி சீதை எங்கு இருக்கிறாள் என்று கண்டு பிடித்து அவளோடு பேசி ராவணனுக்கு புத்திமதி சொல்லி சீதையிடமிருந்து ஒரு அடையாளத்தையும் கொண்டுவந்து 
ராமருக்கு கொடுத்து மஹோபகாரம் செய்தவர் ஹனுமார்.

அந்த ஹனுமாருக்கு ராமர் ஒரு வார்த்தை சொன்னார்.
(மய்யேவ ஜீர்ணதாம் யாதுர் யத் வையோபக்ருதம்வரே
நப்ரத்யுப காரார்த்தி: விபத்தி நபிகாங்க்ஷதி)
என்று ராமர் சொன்னார்.

இங்கு பாரப்பா, நீ எனக்கு செய்த உபகாரத்தை நீ மறந்துவிடு. இப்படிக் கேட்டால் எல்லோருக்கும் ஆச்சர்யமாகும். என்ன ஓய்! இவ்வளவு பெரிய உபகார்யத்தை என்னிடம் வாங்கிக் கொண்டு அதை நான் மறந்துவிடவேண்டும் என்று சொல்கிறாரே. ஆனால் ராமர் ஒரு காரணத்தைச் சொன்னார். "நீ திரும்ப ஒரு உபகாரம் என்னிடமிருந்து எதிர் பார்க்காதே." "ஏன் திரும்ப உன்னிடமிருந்து ஒரு உபகாரம் எதிர் பார்க்கக் கூடாதா? இது என்ன அந்யாயம்? என்ன ஸ்வார்த்தம்," என்று கேட்கலாம். காரணம் சொல்கிறார் அவர். ஒரு மனுஷ்யனுக்கு இன்னொரு மனுஷனுடைய உபகாரம் எப்பொழுது தேவைப்படும்? நாம் ஏதாவது ஒரு கஷ்டத்தில் இருந்தால் தான் இன்னொருவனுடைய உதவி தேவைப்படும். கஷ்டத்தில் இல்லை என்று சொன்னால் இன்னொருத்தனுடைய உதவி தேவை இல்லை. நான் இன்று கஷ்டத்தில் இருக்கிறேன் எனக்கு நீ உதவி பண்ணினாய் சரியாகி விட்டது. திரும்ப நாளை என்னிடம் இருந்து ஒரு உதவியை எதிர்பார்க்கிறாய் என்று சொன்னால் உனக்கும் ஒரு கஷ்டம் வந்தால் தானே நான் உனக்கு உதவி செய்ய வேண்டும். உனக்கு ஒரு கஷ்டம் வரட்டும் என்பதையும் எதிர்பார்க்கிறாய் என்று அரத்தம். இதை எதற்காகப்பா எதிர் பார்க்கிறாய்? நீ சௌக்யமாக சரியாக நன்றாக இருக்க வேண்டியவன். எனக்கு ஒரு கஷ்டம் வரட்டும். அப்போது எனக்கு அவர் உதவி செய்யட்டும் என்று எதற்கு விரும்புகிறாய்?"
(நர ப்ரத்யுபகாரார்த்தி விபதி நபிகாங்க்ஷதி)

அதனால் நீ ப்ரதியுபகாரத்தை எதிர்பார்க்காதே என்று ராமர் ஹனுமாரிடம் சொன்னாராம். ரொம்பவும் தத்வார்த்தம் இருக்கிற ஸ்லோகம். ஸத்புருஷன் யார் என்கிற கேள்வியைக் கேட்டுக் கொண்டோம் எவன் இன்னொருவருடைய கஷ்டத்தைப் பார்த்து அவருக்கு உபகாரம் செய்வானோ மற்றும் அவனிடமிருந்து திரும்ப உபகாரத்தை அபேக்ஷிக்க மாட்டானோ அவன் ஸத்புருஷன். அதேபோல் எவன் பகவான் விஷயத்தில் அவ்யாஜமான (காரணமில்லாத) பக்தியை வைத்துக் கொண்டு இருக்கிறானோ அவன் ஸத்புருஷன்.
"அவ்யாஜமான" என்று ஒரு ஸம்ஸ்க்கு தபத்தைப் போட்டோம். அது அநேகம் பேருக்கு புரியாமல் இருக்கலாம். அதாவது பகவானை பூஜை செய்வது, பகவானைப் பற்றி சிந்திக்கிறது என்பது இன்னொருவன் பாரக்கவேண்டும் என்பதற்காக எவன் செய்கிறானோ அது பக்தி இல்லை. இது என் கடமையை செய்கிறேன் என்கிற த்ருப்தி, இதற்காகத் நான் ஈஸ்வரனை உபாஸிக்கிறேனே தவிர இன்னொருவனுக்காக அல்ல.

அநேகம் பேர், தான் ஒரு சின்ன தர்மம் செய்தாலும் அதற்கு எவ்வளவு விளம்பரம் கிடைக்கும் என்பதை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பார்கள். ஒரு கோவில் கட்டுகிறோம் கொஞ்சம் கொடுங்கள் என்று சொன்னால் ஒரு ரூபாய் 500 கொடுத்து அதற்கு ஒரு பெரிய விளம்பரத்தை எதிர்பார்ப்பார்கள். அது நியாயமில்லை. நாம் செய்வது ஈஸ்வரனுக்குத் தெரியும் அது போதும். என்னை இவர்கள் யாரும் துதிக்க வேண்டியது இல்லை. அதேபோல் நாம் செய்யக்கூடிய ஈஸ்வர பக்தி நாம் செய்யக்கூடிய ஆராதனை என்னுடைய கர்த்தவ்யத்தை செய்கிறேன் என்கிற த்ருஷ்டியிலேதான் இன்னொருவனுடைய ப்ரஸம்ஸைக்காக அல்ல. இன்னொருவன் பார்க்கவேண்டும் என்பதற்காக அல்ல என்று யார் இருப்பார்களோ அவருடைய பக்தி அவ்யாஜமான பக்தி என்று சொல்லப்படும். அப்பேர்ப்பட்ட அவ்யாஜமான பக்தி பகவத் விஷயத்திலே இருக்கிற அவன் ஸத்புருஷன். அதனால் பரோபகாரமும் பகவத் பக்தியும் ஆகிய இரண்டும் எவனிடம் சரியான ரீதியில் இருக்கிறதோ அவன் ஸத்புருஷன் என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.
அப்பேர்ப்பட்டவருடைய சகவாசத்தில் நீ இருக்க வேண்டும். அப்போது உனக்கும் அதே ஸத்குணங்கள் வரும்.

மனிதனுடைய ஸ்திதி தான் யாருடைய சகவாசத்தில் இருப்போமோ அவனுடைய ஸ்வபாவம் தான் வரும். ஒருவன் தினமும் சாயங்காலமானால் கோவிலுக்குப் போவான். நாம் அவருடைய சகவாசம் செய்தோமானால் நமக்கும் அதே அப்யாஸம் வரும். அதுவே இன்னொருவனுக்கு சாயங்காலம் என்றால் சினிமாவுக்குப் போகும் 
அப்யாஸம் (வழக்கம்). அவனுடைய சகவாஸம் நமக்கு வந்தால் தினமும் சினிமாவுக்குப் போவோம். மனுஷ்யனுக்கு தான் யாருடைய சகவாசத்தில் இருப்பார்களோ அவர்களுடைய குணமானாலும், அப்யாஸமானாலும் அவை நமக்கும் வந்து விடும். அதனால் நீ ஸத்புருஷர்களோடு சகவாசம் செய். உன்னுடைய ஜீவிதம் நல்லதாகும். இது மூன்றாவதாகச் சொல்லி இருக்கிறார்.

*நான்காவதாக சொன்னார்,*

முடிந்த அளவு இன்னொருவனுக்கு தானம் செய். முடிந்த அளவு, நாம் யாரையும் நிர்பந்தம் செய்யவில்லை. நீ இப்படி செய்ய வேண்டும், அப்படி செய்யவேண்டும் என்று, நமக்கு எவ்வளவு சக்தி இருக்கிறதோ அந்த அளவுக்கு நாம் இன்னொருவருக்கு உதவி செய்ய வேண்டும். உபகாரம் செய்ய வேண்டும். இதை நாம் என்றைக்கும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நான்கு விஷயங்கள் பகவானுடைய நாமத்தை உச்சரிக்க வேண்டும். பகவானைப் பற்றி பூஜிக்க வேண்டும். ஸத்புருஷர்களுடைய சகவாஸத்தை செய்ய வேண்டும். பிறருக்கு உதவி செய்ய வேண்டும், இந்த நாலு விஷயங்களை நம் ஜீவிதத்தில் நாம் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு வந்தால் அது தான் ரொம்ப உத்தமம் ஆகும். வாழ்க்கை ஸார்த்தகமாவதற்கு இதுதான் வழி. பகவத் பாதர் சொன்ன வார்தை யாரோ சிலரை மனதில் வைத்துக் கொண்டு சொன்னார் என்று நினைக்கவே கூடாது எல்லோருக்காக சொன்னது தான்.

நமக்கு எல்லோருக்கும் மஹோபதேசங்களை அனுக்கரஹித்து ஸநாதன தர்மத்தைக் காப்பாற்றி இந்த உலகத்தை காப்பாற்றியவர் மகா புருஷர் *ஆதிசங்கர பகவத்பாதர்*. அப்பேர்ப்பட்ட பகவத் பாத சங்கரருடைய விஷயத்தில் நாம் எல்லோரும் என்றைக்கும் பக்திமான்களாக இருக்க வேண்டும். அவருக்கு சகல மனிதஜாதியும் கடமைப் பட்டு உள்ளது. அவர்களுக்கு நாம் என்றைக்கும் சிஷ்யர்களாக இருக்க வேண்டும். ஆகையால்தான் சங்கர ஜயந்தி உத்ஸவத்தை சமஸ்த பாரதத்திலும் மிக வைபவமாக கொண்டாடுகிறோம்

அந்த ஆதிசங்கரருடைய கடாக்ஷத்துடன் எல்லோரும் அவர் காட்டிய நல்ல மார்க்கத்தில் சென்று ஸ்ரேயஸை அடையட்டும் என்று ப்ரார்த்திக்கிறேன் !

ஜெய ஜெய சங்கர 
ஹர ஹர சங்கர !

Thursday, May 1, 2025

Prasnottara malika

ஆதி சங்கரரின் வினா விடை -  #நங்கநல்லூர்_J_K_SIVAN 
ப்ரஸ்னோத்ர  ரத்ன  மாலிகா.

२२.  किं दानं? अनाकाङ्क्षं, किं मित्रं? यो निवारयति पापात्।कोऽलंकारः शीलं, किं वाचां मण्डनं? सत्यं॥
22.  kim daanam? Anaakaangksham, kim mitram? Yo nivaarayati paapaat Ko'lamkaarah? Sheelam, kim vaachaam mandanam? Satyam

55. எது தானம்?
ஒருவர் கேட்காமலேயே  அவருக்கு தேவைப்படும் வஸ்துவை தருவது. 

56. எவன் உண்மையான நண்பன்?
''டேய்  இப்படி செய்யாதே''  என்று நாம் தவறு செய்யாமல், பாபம் செய்யாமல் தடுப்பவன்..

57. எது ஒருவனுக்கு ஆபரணம்?
நன்னடத்தை.

58 எது ஒருவன் வாக்கை, சொல்லை அலங்கரிப்பது?
சத்யம். உண்மை. 

२३. विद्युद्विलसितचपलं किं? दुर्जनसंगतिर्युवतयश्च।  कुलशीलनिष्प्रकंपा: के कलिकालेऽपि? सज्जना एव॥
23.   vidyudwilasitachapalam kim? Durjanasangatir yuvatayashcha Kulasheelanishprakampaah ke kalikaale'pi? Sajjanaa eva
   
59. எது மின்னல் போல் தோன்றி மறைவது? 
தீயவர்கள்  நட்பு. 

60. எவன் இந்த கலிகாலத்திலும்  கூட  நல்வழியிலிருந்து பிறழாதவன். கட்டுப்பாடுடையவன்.?
நன்னெறியை, சன்மார்க்கத்தை விடாமல் கடைப்பிடித்து நடக்கும் நல்லோர். 

२४.   चिन्तामणिरिव दुर्लभमिह किं? कथयामि तच्चतुर्भद्रं।  किं तद्वदन्ति भूयो विधूततमसो विशेषेण?
२५. दानं प्रियवाक्यसहितं ज्ञानमगर्वं क्षमान्वितं शौर्यं।   वित्तं त्यागसमेतं दुर्लभमेतच्चतुर्भद्रं॥

24.   Chintaamaniriva durlabhamiha  kim?  Kathayaami tachchaturbhadram Kim tadwadanti bhooyo  vidhootatamaso visheshena
25.   daanam priyavaaksahitam  jnaanamagarvam  kshamaanvitam shauryam Vittam tyaagasametam durlabhametat chaturbhadram
 
 61. தம்பி உனக்கு தெரியுமா?  சொல்.   எது  சிந்தாமணி போல் இரும்பையும் தங்கமாக்குவது?
''  சாதுர் பத்ரம்  என்ற  நாலு சமாச்சாரங்கள்'

''எது அந்த நாலு சமாச்சாரம் என்று பெரியோர் சொல்கிறார்கள். எனக்கும் கொஞ்சம் விளக்கமாக சொல்லேன்?''

1. தர்மமோ தானமோ செய்யும்போது அன்போடு இதமாக, மனதை குளிர்விக்கும் சொற்களோடு அதை தருவது
2. அகம்பாவம்,   கர்வம்,  இல்லாத  கல்வி அறிவு. ஞானம். 
3.மன்னிக்கும்  தன்மை கொண்ட கம்பீரம். வீரம். 
4. செல்வம் இருந்தாலும் அதை தாராளமாக பிறருக்கு அளிக்கும் கொடை  உள்ளம்.   
இந்த நாலும் தான்  அற்புதமான செல்வங்கள்.

२६. किं शोच्यम्? कार्पण्यं, सति विभवे किं प्रशस्तं? औदार्यं ।  कःपूज्यॊ विद्वद्भिः? स्वभावतः सर्वदा विनीतो यः
 26.  kim shochyam? Kaarpanyam, sati vibhave kim prashastam? Audaaryam  Kah poojyo vidwadbhih? Swabhaavatah sarvadaa vineeto yah
  
62. எதற்கு வருந்தவேண்டும்?
கருமித்தனம் இருக்கிறதே என்று. கருமி தானும் அனுபவிப்பதில்லை, பிறரையும் அனுபவிக்க விடுவ தில்லை. அவன் செல்வத்தால் இவ்வுலகிலும்  எவ்வுலகிலும் அவனுக்கு பயனில்லை. 

63.சகல சௌபாக்யங்கள்  இருந்த போதும் எது புகழப்படுகிறது?
தர்ம , தயாள குணம். கருணை உள்ளம்.

64.  எவரை கற்றோர்கள், அறிஞர்கள் போற்றுவார்கள்?
எவன்  இயற்கையாகவே  எளிமை, கருணை இரக்க  ஸ்வபாவம் கொண்டவனோ அவனை.

Wife - Sanskrit

*७४३. ।। भार्या ।।*

*भार्या हि परमो ह्यर्थः* 
          *पुरुषस्येह पठ्यते ।*
*असहायस्य लोकेऽस्मिँ-*
          *-ल्लोकयात्रासहायिनी ॥* 
भार्या ही पुरुषाची इहलोकांतील परमश्रेष्ठ संपत्ति होय असे म्हटले गेले आहे . या लोकात असहाय असलेल्या पुरुषाला संसाराच्या प्रवासात साहाय्य करणारी तीच एकमेव आहे .

भार्या यह पुरुष की इस इहलोक की परमश्रेष्ठ संपत्ति हैं ऐसा माना गया हैं । इस लोक में असहाय पुरुष को अपनी सांसारिक यात्रा में सहायता कलनेवाली वही एकमेव हैं ।

It is said that the wife is the richest treasure of her husband . In this world the wife is the only companion of her helpless husband in all the worldly affairs .

Ekasaptati kamakotisha svaagata stuti

एकसप्ततितम-श्रीकामकोटीश-स्वागत-स्तुतिः.

எழுபத்தோராவது ஶ்ரீ காமகோடீஶரின் ஸ்வாகத ஸ்துதி

Stuti to welcome the seventy-first Shri Kamakotisha

वेदरूपे वसुन्यस्मद्-
विश्वासं परिरक्षितुम्।
विश्वावसौ समुद्भूतं
कामकोटीशमाश्रये॥१॥

வேதமெனும் வஸு அதாவது செல்வத்தில் நமது விஶ்வாஸத்தை ரக்ஷிக்க விஶ்வாவஸு வருடத்தில் வந்த காமகோடீஶரை ஆஶ்ரயிக்கிறேன்.

I devote myself to the Kamakotisha who came in the Vishvavasu year to protect our vishvasa in the vasu or wealth that is the Veda.

अक्षयं फलमादेष्टुम्
अक्षयातिथिसम्भवम्।
क्षयिष्णुवस्तुविमुखं
कामकोटीशमाश्रये॥२॥

க்ஷயமாகும் வஸ்துக்களில் விருப்பமற்று, அக்ஷயமான பலனை அடையும் வழி போதிக்க அக்ஷயா திதியில் வந்த காமகோடீஶரை ஆஶ்ரயிக்கிறேன்.

I devote myself to the Kamakotisha disinterested in impermanent objects, who came on Akshaya Tithi to teach the way of attaining the akshaya goal. 

त्रयीं त्रिवर्गनिलयां
त्रिलोक्यर्थं समर्चितुम्।
तृतीयातिथिसंन्यस्तं
कामकोटीशमाश्रये॥३॥

த்ரயீ எனும் வேத ஸ்வரூபிணியானவளும் த்ரிவர்கம் எனும் புருஷார்த்தங்களின் ஆஶ்ரயமானவளுமான அன்னையைப் பூஜிக்க த்ருதீயா திதியில் வந்த காமகோடீஶரை ஆஶ்ரயிக்கிறேன்.

I devote myself to the Kamakotisha who came on Tritiya Tithi to worship the Devi who is of the form of Trayi or Veda and is the basis of the Trivarga or Purushartha-s.

बुद्धिं सद्विषये बन्धुं
जनानाम् आत्मबान्धवम्।
बुधवासरसंन्यस्तं
कामकोटीशमाश्रये॥४॥

மக்களின் புத்தியை நல்ல விஷயங்களில் கட்டிப்போட புதன் கிழமையில் துறவேற்ற மக்களின் ஆத்ம பந்துவான காமகோடீஶரை ஆஶ்ரயிக்கிறேன்.

I devote myself to the Kamakotisha who took sannyasa on Budhavasara to tie the buddhi of ppl to auspicious matters&who is the atma bandhava of ppl.

भवरोगहणं भक्त-श्रेयःसोपानरोहणम्।
रोहिण्यामाश्रमारूढंकामकोटीशमाश्रये॥५॥ 

ஸம்ஸார ரோகத்தைப் போக்குபவரும், பக்தர்களை ஶ்ரேயஸ்ஸின் படிக்கட்டில் ஆரோஹணம் செய்துவைப்பவரும், ரோஹிணி நக்ஷத்ரத்தில் ஆஶ்ரமம் ஏற்ற காமகோடீஶரை ஆஶ்ரயிக்கிறேன்.

I devote myself to the Kamakotisha who took up ashrama on Rohini to destroy the roga of samsara, and who enables bhakta-s to do 
aarohana on the steps of shreyas.

वेदानलप्राणनेत्र(२५३४)-
जयन्त्युत्सवसम्भवम्।
आद्यस्य शङ्करार्यस्य
पीठस्थितमुपाश्रये॥६॥

ஆதி ஶங்கராசார்யரின் 2534வது ஜயந்தி உத்ஸவத்தில் வந்து அவர்தம் பீடத்தில் இருப்பவரை நெருங்கி ஆஶ்ரயிக்கிறேன்.

I closely devote myself to He who came during the 2534th Jayanti Utsava of Adi Shankaracharya to His Peetam.

कीर्तिं विस्तारयिष्यन्तं
युगानाम् एकसप्ततिम्।
एकसप्ततमाचार्यं
कामकोटीशमाश्रये॥७॥

71 சதுர்யுகம் (ஒரு மந்வந்தர காலம்) பீடத்தின் புகழை விஸ்தாரப்படுத்தவிருப்பவரான 71வது ஆசார்யரான காமகோடீஶரை ஆஶ்ரயிக்கிறேன்.

I devote myself to the Kamakotisha who is the 71st Acharya and will spread the fame of the Peetam for 71 Chaturyuga-s (a manvantara kala).

सत्यनारायणक्षेत्रात्
सत्यव्रतसमागतम्।
आश्रये कामकोटीशं
सत्यश्रीचन्द्रशेखरम्॥८॥

ஸத்யநாராயண க்ஷேத்ரமாகிய அன்னவரத்திலிருந்து ஸத்யவ்ரத க்ஷேத்ரமாகிய காஞ்சீபுரத்திற்கு வந்த ஶ்ரீ ஸத்ய சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதீ காமகோடீஶரை ஆஶ்ரயிக்கிறேன்.

I devote myself to the Kamakotisha Shri Satya Chandrashekharendra Sarasvati who came from Satyanarayana kshetra Annavaram to Satyavrata kshetra Kanchipuram.

सप्ततेरध्येधमानां
कामकोटिपरम्पराम्।
सेवमाना अच्छलेन
शान्तिं प्राप्यास्म शाश्वतीम्॥९॥

70க்கு மேல் வளரும் காமகோடி பரம்பரையை உண்மையுடன் ஸேவித்துக்கொண்டு ஶாஶ்வத ஶாந்தியை அடைவோமாக!

Let us truthfully serve the Kamakoti Parampara growing above 70 and attain attain shashvata shanti.

॥ इति श्री-काञ्ची-कामकोटि-पीठाधीश्वर-कृपा-पात्रेण श्री-सदाशिव-ब्रह्मेन्द्र-सन्निधि-वास्तव्येन भक्तेन विरचिता एकसप्ततितम-श्री-कामकोटीश-स्वागत-स्तुतिः ॥

Shri Ramana S is the author of this garland of verses woven on the occasion of the ascension of 71st Acharya

Acharyas of the Kanchi Kamakoti Mutt from its inception to the present day

Here's a list of the Acharyas of the Kanchi Kamakoti Mutt from its inception to the present day, along with their tenure years:

Adi Shankaracharya (509–477 BCE) – Founder

Sureshwaracharya (477–407 BCE)

Nityabodhaghana (407–374 BCE)

Jnanaghana (374–354 BCE)

Anandaghanendra (354–321 BCE)

Abhinava Kaivalya (321–299 BCE)

Prakasha (299–267 BCE)

Ananda Bodhendra (267–240 BCE)

Siddhisa (240–208 BCE)

Sujnana Bodhendra (208–174 BCE)

Guhya Bodhendra (174–152 BCE)

Chitsukhendra (152–120 BCE)

Bhagavannama Bodhendra (120–90 BCE)

Anandajnana (90–60 BCE)

Shivarama Bodhendra (60–35 BCE)

Chidvilasa Bodhendra (35–5 BCE)

Nijananda Bodhendra (5 BCE–25 CE)

Vishnudeva Bodhendra (25–55 CE)

Tattvajnana Bodhendra (55–85 CE)

Bodheswara Bodhendra (85–115 CE)

Rama Bodhendra (115–145 CE)

Rama Chandra Bodhendra (145–175 CE)

Shankara Bodhendra (175–205 CE)

Vishnu Bodhendra (205–235 CE)

Tattvaranya Bodhendra (235–265 CE)

Shivananda Bodhendra (265–295 CE)

Shankara Vijayendra Saraswathi (295–325 CE)

Jnanendra Saraswathi I (325–355 CE)

Mahadevendra Saraswathi I (355–385 CE)

Purnananda Saraswathi I (385–415 CE)

Shivananda Saraswathi I (415–445 CE)

Mahananda Saraswathi (445–475 CE)

Satyabodhendra Saraswathi (475–505 CE)

Mahadevendra Saraswathi II (505–535 CE)

Chandrasekarendra Saraswathi I (535–565 CE)

Tattvabodhendra Saraswathi (565–595 CE)

Bodhendra Saraswathi I (595–625 CE)

Vishvananda Saraswathi (625–655 CE)

Madhavendra Saraswathi (655–685 CE)

Sri Sacchidananda Saraswathi (685–715 CE)

Paramasivendra Saraswathi I (715–745 CE)

Satchidananda Saraswathi II (745–775 CE)

Jnanendra Saraswathi II (775–805 CE)

Sivananda Saraswathi II (805–835 CE)

Chandrasekarendra Saraswathi II (835–865 CE)

Sureshwara Saraswathi (865–895 CE)

Paramasivendra Saraswathi II (895–925 CE)

Mahadevendra Saraswathi III (925–955 CE)

Purnananda Saraswathi II (955–985 CE)

Shivananda Saraswathi III (985–1015 CE)

Shankara Vijayendra Saraswathi II (1015–1045 CE)

Chandrachudhendra Saraswathi (1045–1075 CE)

Bodhendra Saraswathi II (1075–1105 CE)

Chandrasekarendra Saraswathi III (1105–1135 CE)

Jnanendra Saraswathi III (1135–1165 CE)

Mahadevendra Saraswathi IV (1165–1195 CE)

Paramasivendra Saraswathi III (1195–1225 CE)

Bodhendra Saraswathi III (1225–1255 CE)

Chandrasekarendra Saraswathi IV (1255–1285 CE)

Purnananda Saraswathi III (1285–1315 CE)

Mahadevendra Saraswathi V (1315–1345 CE)

Bodhendra Saraswathi IV (1345–1375 CE)

Chandrasekarendra Saraswathi V (1375–1405 CE)

Mahadevendra Saraswathi VI (1405–1435 CE)

Paramasivendra Saraswathi IV (1435–1465 CE)

Bodhendra Saraswathi V (1465–1495 CE)

Chandrasekarendra Saraswathi VI (1495–1525 CE)

Mahadevendra Saraswathi VII (1525–1553 CE)

Bodhendra Saraswathi VI (1553–1586 CE)

Sri Paramasivendra Saraswathi V (1586–1638 CE)

Bodhendra Saraswathi VII (1638–1692 CE)

Sri Purnananda Saraswathi IV (1692–1701 CE)

Mahadevendra Saraswathi VIII (1701–1746 CE)

Chandrasekarendra Saraswathi VII (1746–1783 CE)

Sri Mahadevendra Saraswathi IX (1783–1814 CE)

Sri Chandrasekarendra Saraswathi VIII (1814–1851 CE)

Sri Mahadevendra Saraswathi X (1851–1891 CE)

Sri Chandrasekarendra Saraswathi IX (1891–1907 CE)

Sri Mahadevendra Saraswathi XI (1907–1907 CE)

Sri Chandrasekarendra Saraswathi X (Mahaperiyava) (1907–1994 CE)

Sri Jayendra Saraswathi (1994–2018 CE)

Sri Vijayendra Saraswathi (2018–Present)

 Sri Sathya Chandrasekarendra Saraswathi (2025- Present)

Wednesday, April 30, 2025

I love you from wife- SMS - joke

ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக
"I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார்.
🦚
ஒரு பெண்... இன்று என்று கூறினாள்
அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினார்.ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள்.
🦚
நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார்.
🦚
ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள்.
🦚
மெசேஜ்க்கு வந்த பதில்கள்
நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ??

நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா??

நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா??

நபர் 4 : என்ன பிரச்சனை உனக்கு??

நபர் 5 : நீ கனவு கண்டுட்டு இருக்கியா இல்லை நான் கனவு காண்கிறேனா??
🦚
நபர் 6 : இன்னைக்கு போன கல்யாணத்துல உன் பிரண்டு போட்ட நகை டிசைன் எதாவது உனக்கு ரொம்ப பிடிச்சு, வாங்க பிளான் போட்டுருக்கியா ??
🦚
நபர் 7 : நான் ஏற்கனவே ஆபிசில் பல டென்சன்ல இருக்கேன், இதுல நீ வேற..

நபர் 8 : என் காரை எடுத்துட்டு போய் மறுபடியும் எங்கயாவது முட்ட வச்சுட்டியா??
🦚
நபர் 9 : இந்த சீரியல்கள் பார்க்கதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் உன்கிட்ட??
🦚
நபர் 10 : குழந்தைகளை பள்ளிக் கூடத்திலிருந்து கூட்டிட்டு வரணுமா???
🦚
கடைசியாக பரிசு பெற்ற பெண்ணுக்கு வந்த பதில் மெசேஜ்..
🦚
நபர் 11 : யார் இது? என் பொண்டாட்டி மொபைல்ல இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பறது?


😂😂😁😁🌹🌹

Akshaya thruteeyai

அட்சய திரிதியை...
புண்ணிய தினம்..
(30.04.25 புதன்கிழமை)

1. பரசுராமர் அவதரித்த திருநாள்

2. கங்கை நதி இவ்வுலகிற்கு வந்த திருநாள்

3. பக்தன் சுதாமர் துவாரகாவில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இல்லத்திற்கு சென்ற நாள்.

4. பாண்டவர்கள் சூரியதேவனிடம் இருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள்,

5. வியாச தேவரால் மஹாபாரதம் இன்று தான் எழுதப்பட்டது.

6. திரேதாயுகம் தொடங்கிய நாள்.

7. "கனகதாரா ஸ்தோத்ரம்" ஆதிசங்கராச்சாரியாரால் இன்று இயற்றப்பட்டது.

8. குபேரருக்கு இன்று செல்வத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது, 

9. அன்னபூரணிதேவி தோன்றிய நாளாகக் கருதப்படுகிறது.

10. இந்நன்னாளில் ரதயாத்திரைக்கான ரதம் செய்யும் பணி தொடங்கும்.

11. கீர்ஷோர் கோபிநாத் (ரெமுன, ஒரிஸா), மதன மோகன், கோவிந்தா மற்றும் கோபிநாத் விக்ரகங்களுக்கு சந்தன் யாத்திரை தொடங்கும் நாள்.

12. பார்லி தோன்றிய நாள் (யாகத்திற்கு உபயோகப்படுத்தும் பொருள்)

13. பத்திரிநாத்திலுள்ள கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோயில் குளிர் காலங்களில் நடையடைத்து அட்சய திரிதியை சுபதினத்தில் மீண்டும் பக்தர்கள் தரிசிப்பதற்காக கோவில் நடை திறக்கபடும்.

ஹரே கிருஷ்ண ஹரே 
கிருஷ்ண கிருஷ்ண 
கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம 
ராம ராம ஹரே ஹரே...

Learning and teaching - sanskrit poem

Courtesy : Sri. Ananta Kalyana krishnan

पठितारः पाठयितारोपि स्युः। पाठनरहितपठनं मरुसैकते सिक्तम् जलमिव।
 ये पठितारः पाठयितारोपि ते भवेयुर्वन्द्यपण्डिताः।
ये न पाठयितारः ते भवेयुर्वन्ध्यपण्डिताः।

Gayatri avahana mantra meaning

==================
Gayatri Mahatmya ~ as described in Taittiriya Shakha (part 3)
==================
In the previous posts, we saw that Brihad-Yogi Yajnavalkya Smriti describes the Dhyana of Gayatri Devi during Sandhyavandanam and instructs that her Avahana be done with the Ojosi mantra, which was once perceived by the Devas longing for Gayatri Devi's vision. After the Avahana, one must perform Gayatri Japa and then do the Visarjana of Devi.

आवाह्य यजुषानेन ओजोऽसीति विधानतः ।
एतद्यजुः पुरा दृष्टं देवैर्दर्शनकाङ्क्षिभिः ॥

तत्रावाह्य जपित्वा तु नमस्कृत्य विसर्जयेत् ॥

~ Brihad-Yogi Yajnavalkya Smriti, 4.29

We have already noted that the incident of the Devas invoking Gayatri with the Ojosi mantra can be traced to an Akhyanika in the Taittiriya Samhita. In this post, along with the Ojosi mantra, we shall examine another Avahana mantra and a Visarjana mantra from the Taittiriya Aranyaka. To our great fortune, Sayanacharya has provided interesting insights in his Taittiriya Aranyaka commentary. The relevant mantras from the Aranyaka along with excerpts from his Bhashya have been attached in the comments. Below is a brief summary of the same.

Avahana Mantra

आया॑तु॒ वर॑दा दे॒वी॒ अ॒क्षरं॑ ब्रह्म॒ सम्मि॑तम् । गा॒य॒त्रीं᳚ छन्द॑सां मा॒तेदं ब्र॑ह्म जु॒षस्व॑ नः ।
ओजो॑ऽसि॒ सहो॑ऽसि॒ बल॑मसि॒ भ्राजो॑ऽसि दे॒वानां॒ धाम॒नामा॑ऽसि॒ विश्व॑मसि वि॒श्वायु॒स्सर्व॑मसि स॒र्वायुरभिभूरों गायत्रीमावा॑हया॒मि॒ ॥

~ Taittiriya Aranyaka, 10.26

Commenting on the first line, Sayanacharya states that Devi Gayatri is the Adhishthatri of Chandas and has the Chandas as her Upadhi. She is called Varada as she bestows the desired boons. She is invoked during Sandhyavandanam to bless us with the knowledge of the immutable, Vedanta-Pratipadya Brahman.

She is Chandasam Mata, the mother of Gayatri, Trishtubh, and other meters. Since Chandas also means Veda, she is the mother of all Vedas.

Following this, Sayanacharya comments on the Ojosi mantra. He explains that Gayatri Devi is Ojas, the eighth Dhatu, responsible for vitality. She is Saha, the power to overcome adversaries. She is Bala, the inherent strength in the body. She is Bhraja, the divine radiance. The glories of Agni and other deities are merely her names, meaning that she is the very basis of their power. Moreover, she is the entire Jagat and the Ayuh of all beings. She is Abhibhuh, the one who destroys all sins.

The commentary on the next line is particularly remarkable. After the Ojosi mantra, Gayatri Devi is invoked as ॐ गायत्रीमावाहयामि. Sayanacharya could have simply overlooked the Pranava or stated that it is a conventional prefix to a mantra. Instead, due to his devotion to the form of Gayatri Devi, he makes a significant remark on the Pranava, saying:

"ॐ प्रणवप्रतिपाद्य परमात्माऽसि। तादृशीं गायत्रीं मदीये मनस्यावाहयामि।"

"You are the Pranava-Pratipadya Paramatman. I invoke such Gayatri Devi in my mind."

From this, we understand that Gayatri Devi invoked during Sandhyavandanam is not merely the Adhishthatri of Chandas but is verily the Parabrahman itself, denoted by Om.

Visarjana Mantra

उ॒त्तमे॑ शिख॑रे जा॒ते॒ भू॒म्यां प॑र्वत॒मूर्ध॑नि ।
ब्रा॒ह्मणे᳚भ्योऽभ्य॑नुज्ञा॒ता॒ ग॒च्छ दे॑वि य॒थासु॑खम् ॥

~ Taittiriya Aranyaka, 10.30

Sayanacharya's commentary explains: "The mountain named Meru, which stands on the earth, has its highest peak, and upon that peak resides Goddess Gayatri. Therefore, O Devi, having granted permission to the Brahmanas and to your devotees, who are fully satisfied by your grace, may you, without diminishing your bliss, return to your own abode at ease."

Thus, in the Taittiriya Aranyaka, we find dedicated Avahana and Visarjana mantras for Gayatri Devi in the context of Sandhyavandan, confirming that she is the Upasya deity of Sandhyavandan. From the words of Sayanacharya, we understand that she is not merely the Adhishthatri of Chandas but is verily the Pranava-Pratipadya Paramatman.

Having examined the scriptural references presented in this discussion, it becomes evident that the Dhyana shloka from the Brihad-Yogi Yajnavalkya Smriti is firmly rooted in Taittiriya Samhita and Taittiriya Aranyaka. This establishes that the worship of Gayatri in the form of supreme goddess is not a later innovation but a practice mandated by the Shruti itself.

It is heartening to see that this ancient tradition of worshipping Bhagavati Gayatri, firmly grounded in Shruti, endorsed by authentic Smritis and Puranas, and diligently preserved by the Smartas, continues to be followed even today.

May Bhagavati Gayatri, the Parabrahman itself, bless us and inspire our intellects to always walk the path of Dharma.

Kanchi kamakoti svasti vachanam


Tuesday, April 29, 2025

How to get out of karma? - Buddha story

Courtesy: Dr. Sri. P. Narayanan

एकदा सिद्धार्थं प्रति तच्छिष्यः कश्चन पप्रच्छ- "विविधैः कर्मभिः संसारपाशैरिव दृढं बद्धानां केन कर्मणा यागेन वा तन्मोचनं जायेत? कमपि ललितमुपायं निर्दिशतु" इति। सिद्धार्थः "तस्योत्तरं श्वो वक्ष्यामि" इत्यवोचत्। अनन्तरे दिने सिद्धार्थः किमपि सूत्रं हस्ते गृह्णानस्तस्मिन् सूत्रे बहुविधान् ग्रन्थीन् रचयंस्तच्छिष्यस्य परत आगत्य पृष्टवान्- "अस्मिन् सूत्रे बहुविधा ग्रन्थय उपर्युपरि संलग्नाः सन्ति। केनापि ग्रन्थ्यन्तरेण इदं सूत्रम् ऋजु करोतु। अन्यथा कोपि नूतनः सरल उपायोस्मिन् क्रियेत, येन ग्रन्थय इमे विग्रथिताः सम्पद्येरन्" इति। शिष्योवोचत् - न ग्रन्थिना सरलेनोपायान्तरेण वा विग्रथनं शक्येत, किन्तु कथमिमे ग्रथिता इत्येकैकं ग्रन्थिं परिशील्य क्रमेण तेषां विश्लेषणं कर्तुं यतेय" इति। सिद्धार्थ उवाच - "इदमेव समाधानं तवापि प्रश्नस्य" इति॥
एवमेव यत्र यत्र दोषः सूच्यते दृश्यते वा तत्र तत्र कस्तत्र दोष इति स्वबुद्ध्या परिशील्य, तज्ज्ञान् वा सम्पृच्छ्य तं तं दोषं परिहरतु। बहूनि शिबिराणि भवत्या चालितानि स्युः। किन्तु न केवलं सङ्ख्या, गुणोपि गणनीयः। सरलस्य सुसंस्कृतस्य पाठनमेव संस्कृतभारत्यापि संगण्यते। सुसंस्कृतशिक्षणोपायाश्च तया संस्थया बहुधा उपस्थाप्यन्त इति बोधितोस्मि। अ.क.कृ.महोदयेनोक्तानुपायानपि परिशीलयतु। भवतु भद्रम्। जयतु सुसंस्कृतम्।
(इतोपि बहु वक्तव्यमस्ति। किन्तु समयाभावादुपरमामि।)

Things to avoid in marriage

Banurekha Sreenivasan- Tanjore Brahmins அவர்களது பதிவு.
விவாகத்தில் தவிர்க்க வேண்டியவை-(1966இல் பரமாச்சார்யாள் உத்தரவு)

1. மாப்பிள்ளை அழைப்பு: முன் காலத்தில் மாப்பிள்ளை வெளியூரிலிருந்து வரும்போது ஊரின் எல்லையில் சென்று மேளத்தாளத்துடன் குதூகலமாக அழைத்துவருவது வழக்கம் தற்போது முதல் நாள் அன்றே மாப்பிள்ளை சத்திரத்திற்கு வந்துவிடுகிறார். தங்கி டிபன் முதலியன சாப்பிட்டு இளைப்பாறுகிறார். பிறகு இரவு (ஏற்கனவே வந்துவிட்ட வரை) வெளியில் அனுப்பி, ஓரிடத்திலிருந்து அழைப்பது அர்த்தமற்றது. இது சத்தியத்திற்குப் புறம்பானது. தவிர்க்கப்பட வேண்டும்.

2. காசியாத்திரை: முன் காலத்தில் பிரம்மச்சாரிகள் காசிக்குப் படிக்கச் செல்வார்கள். வழியில் பெண் வீட்டார். தங்கள் பெண்ணை ஏற்றுக்கொண்டு கிரஹஸ்தாஸ்ரமம் நடத்தச் சொல்வார்கள். சரி என்று பையனும் சம்மதித்துத் திரும்புகிறான். இதுதான் தற்போது நடக்கிறது. ஆனால் முதல் நாளே நிச்சயதார்த்தம் செய்து லக்னப் பத்திரிகை படித்து ஏற்பாடாகிறது. பிறகு காசிக்குப் போவது முரண்பாடான ஏற்பாடு தவிர்க்க வேண்டும் (நம்பிக்கை மோசடி என்றுகூடச் சொல்லலாம்)

3. ஊஞ்சல்: சாஸ்திரப்படி கல்யாணம் ஆனபிறகு தம்பதிகளாய்ச் சேர்ந்த பிறகுதான் அவர்களை ஊஞ்சலில் வைத்துக்கொண்டாட வேண்டும். பகவான் கல்யாண உற்சவங்களில் விவாஹம் ஆன பிறகுதான் திவ்ய தம்பதிகளை ஊஞ்சலில் வைத்து பூஜிக்கிறோம். கல்யாணத்திற்கு முன்னால் தம்பதிகளைச் சேர்த்துவைப்பது நல்லது இல்லை. ஏதாவது ஏற்பட்டு விவாஹம் தடைபட்டால் அவர்கள் வாழ்வு பாதிக்கப்படும்.

4. பாணிக்ரஹணம்: சுபமுகூர்த்தம் வைத்து நல்ல லக்னத்தில் மாப்பிள்ளை பெண்ணின் கரத்தை க்ரஹிக்க வேண்டும். இப்பொழுது முதலிலேயே (ஊஞ்சல் பிறகு) கையைப் பிடித்து அழைத்து மணமேடைக்கு வருகிறார்கள். கைப் பிடிக்கும் வேளை ராகு காலம் எமகண்டமாய் இருக்கலாம். சுப லக்னத்தில்தான் கைப் பிடிக்க வேண்டும்.

5. கைகுலுக்குதல்: மாப்பிள்ளை பெண் இருவரும் விரதம் செய்து, கையில் ரக்ஷா பந்தனம் செய்துகொள்கிறார்கள். கைகள் புனிதமாகி இருவரும் விவாதச் சடங்குகள். ஹோமம், சப்தபதி முதலியன செய்யத் தகுதி அடைகின்றன. இந்தப் புனிதத்வத்தைக் கெடுத்து எல்லாரும் வந்து பெண், மாப்பிள்ளை இருவரும் சடங்குகள் முடியும் முன் கைகுலுக்குகிறார்கள். கைகள் சுத்தம் இழக்கின்றன. ஆகையால் விவாஹச் சடங்கு, சப்தபதி முடியும் முன் யாரும் தம்பதிகளைக் கை குலுக்கக் கூடாது. இதைப் பத்திரிகைகளில் (NB) என்று போட்டுக் குறிப்பிட்டுவிட்டால். விவாஹத்திற்கு வருபவர்கள் தக்கபடி நடந்துகொள்வார்கள்.

6. பட்டுப்புடவை: விவாஹம் செய்யும்போது பாவம் சேரக் கூடாது. ஆயிரக்கணக்கான பூச்சிகளைக் கொன்று பட்டு இழை எடுக்கிறார்கள். ஆகையால் பாவம் சேர்ந்த இந்த பட்டுப் புடவையைக் கட்டிக்கொண்டால் விவாஹம் பாவத்திற்கு உட்படுகிறது. தம்பதிகள் க்ஷேமத்திற்கு உதந்ததல்ல இதற்காகத்தான் பரமாச்சார்யாள் இதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். அஹிம்ஸா பட்டு உடுக்கலாம்.

7. விவாஹப் பணம் (Dowry): மாப்பிள்ளை வீட்டார் எதிர் ஜாமின் வகையறா வாங்குவது சாஸ்திர விரோதம். மேலும் விரதங்களை தங்கள் வீட்டில் செய்துகொண்டுதான் கல்யாணத்திற்கு வர வேண்டும். அவர்கள் பொறுப்பு. இப்படிச் செய்தால் சத்திரத்திற்கு காலையில் வந்தால் போதும். நேரே விவாஹம் மந்தர பூர்வமான சடங்குகளைப் பிரதானமாகச் செய்யலாம். நிறைய வேத வித்துகளுக்கு தக்ஷிணைக் கொடுத்து அக்னி சாக்ஷியான விவாகத்தைச் சிறப்பாக நடத்தலாம். சிலவும் குறையும். நகை ஆடம்பரம் தவிர்த்து ஒருவேளை ஆகாரத்துடன் முடித்து மிச்சமாகும் பணத்தை ஒரு ஏழைக் குடும்ப கல்யாணத்திற்கு உதவலாம் அல்லது சேமிக்கலாம்.

8. வரவேற்பு: முதல் நாள் வரவேற்பு கொடுப்பது தவறு. தம்பதிகளாகச் சேரும் முன் இருவரையும் ஒன்றாய் உட்காரவைப்பது தவறு. நமது கலாசாரத்திற்கு முரண்பட்டது. கோவில்களில் கல்யாணம் செய்தால் வரவேற்பு ஏதாவது சத்திரத்தில் காலியாயிருக்கும் தினத்தில் (கிழமை பார்க்க வேண்டாம்) செய்யலாம். சிலவு குறையும்.

9. திருமங்கல்ய தாரணம்: விவாகம் என்பது திருமங்கல்ய தாரணம் மட்டும் அல்ல. வேத பூர்வமான மந்த்ரம் திருமங்கல்ய தாரணத்திற்கு இல்லை. ஸ்லோகம்தான். மந்த்ர பூர்வமான விவாகம்தான் முக்கியம் உதாரணமாக 9-10:30 முகூர்த்தம் என்றால் 10:30க்குள் திருமங்கல்ய தாரணம் செய்துவிடுகிறார்கள். எல்லாரும் எழுந்து போய்விடுகிறார்கள். உண்மையான விவாகச் சடங்குகள் பிறகுதான் நடக்கின்றன. சாட்சிக்கு யாரும் இருப்பதில்லை. மேலும் முகூர்த்த காலத்திற்குப் பின் ராகுகாலம், எம கண்டம் இருக்கலாம். ஆகையால் எல்லாம் சப்தபதி உள்பட முகூர்த்த காலத்திற்குள் முடித்துவிட வேண்டும். சுபகாலத்தில் தான் சடங்குகள் செய்ய வேண்டும். அப்போதுதான் தம்பதிகளுக்கு க்ஷேமம் உண்டாகும்.

10. கூரைப்புடவை: மாயவரத்திற்கு அருகில் கொறை நாடு என்ற ஊரில்தான் முகூர்த்தப் புடவை செய்வது வழக்கம். கொறை நாடு புடவை என்பதைக் கூரப்புடவை என்கிறோம். நூலில் சிவப்புக் கட்டம் போட்டு அழகாக நெய்வார்கள். உண்மையான கூரப்புடவை என்றால் நூல் புடவை என்று அர்த்தம். நாம் தற்போது பணவசதியால் பெருமைக்கு ஆசைப்பட்டுப் பட்டு ஜரிகையை, ஆயிரக்கணக்கில் செலவு செய்து பாவத்தைத் தேடிக்கொள்கிறோம்.
NB: 1966இல் பரமாச்சார்யாள் உத்தரவு: ?
 என் நிபந்தனைகளுக்கு
உட்படாமல் செய்யப்படும் விவாஹப்
பத்திரிகைகளில் என் பெயரைப் போடுவது
தவிர்க்கப்பட வேண்டும்.

Monday, April 28, 2025

Greatness of the Life and Teachings of Shankara Bhagavatpada

Namaste.


A four–part article based on the discourse on 'The Greatness of the Life and Teachings of Shankara Bhagavatpada' by His Holiness Sri Abhinava Vidyatirtha Mahaswamigal, the 35th Jagadguru of the Sringeri Peetham is available in the following URLs:






nama: shankarāya

What happens in Srirangam temple kitchen?

                     
(தகவல் உபயம்:- 
திரு. Srivatsan Iyengar அவர்கள்..)

 🌺 பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் கோயிலில் #அரங்கனின்_மடப்பள்ளியை எட்டிப் பார்க்கலாம் என்கிற எண்ணம் வந்தது..

🍂 இராஜ மகேந்திரன் திருச்சுற்று மதிலுக்கு வெளியே பிராகாரத்தின் கிழக்குப் பகுதியில் #தென்கிழக்கு_மூலையில் அமையப் பெற்றுள்ளது ஸ்ரீரங்கம் கோயிலின் மடப்பள்ளி.. 

வைகுண்ட நாதனான பெருமாளுக்கும், 
வையகத்து நாயகியான தாயாருக்கும், 
#ஆறுகாலபூஜைக்கும்_இங்கிருந்து_தான்_நைவேத்ய_பிரசாத_அன்னங்கள் தயாரித்து அனுப்பி வைக்கப்படுகின்றன.. 

திருக்கோயில் மடப்பள்ளிக்குள் புகைப்படம் எடுக்க அனுமதிப்பதில்லை. 

🍂அதனால் என்ன? பூஜிக்கப்பட்ட நைவேத்ய அன்னங்களைப் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் எனத் தோன்றியது.. 

⭕அரங்கனின் மடப்பள்ளி மகத்துவத்தை, பூஜிக்கப்பட்ட நைவேத்ய அன்னங்களே பறை சாற்றி விடும் அல்லவா?

🍁காலை 8.45 மணிக்கு திருவாரதனம்.. 
அப்பொழுது நைவேத்யமாக, #கோதுமைரொட்டி படைக்கப்படுகிறது.. 

⭕பெருமாளுக்கு பதினொன்று, தாயாருக்கு ஆறு.. 

ரொட்டியின் செய்நேர்த்தியை பற்றி விளக்குகிறார் கோயிலில் இருபத்தைந்து ஆண்டுகளாக மடப்பள்ளி நாச்சியார் பரிகலமாகப் பணியாற்றி வரும் திரு.ரெங்கன் அவர்கள்..

வெல்லத்தை நைசாகத் தேய்த்து இழைக்கணும்..
அந்த ஈரப்பதத்தோட கோதுமை மாவு போட்டு நன்கு பிசையணும்.. 

வெல்லமும் மாவும் இரண்டறக் கலந்ததும் உருண்டைகளாகப் பிடிச்சு கையில தட்டணும்.. 

அதனை நெய்யில் போட்டு பொரித்து எடுக்கணும்.. 

இப்பொழுது பெருமாள், தாயாருக்கான ரொட்டி ரெடி.. 

#காய்ச்சாத_பசும்பால்_இரண்டு_லிட்டர்.. 
மண் ஓட்டில் வெண்ணெய், உப்பு போட்டு #வேகவைத்த_பாசிப்பருப்பு..

🍁அடுத்து தொடர்ந்தாற்போல வந்து விடுவது பொங்கல் பூஜை.. 

🍁காலை ஒன்பது மணிக்கு, மிளகு, சீரகம் இடாமல் பாசிப்பருப்பு, பச்சரிசி மட்டும் உபயோகித்து #வெண்பொங்கல்.. 

🍁இதற்குத் தொட்டுக் கொள்ள, கத்தரிக்காய் அல்லது வாழைக்காய் அல்லது வெள்ளைப் பூசணி வெட்டிப் போட்டு தினமும் ஒரு வகை %#காய்கறியமுது. 

#பச்சரிசிஉளுந்துமாவு_தோசை.. 

🌿பெருமாளின் வைத்தியரான தன்வந்திரி தயாரித்து அளிப்பதான ஜீரண மருந்து... இது சுக்கு, வெல்லம், சீரகம், ஏலக்காய்ப் போட்டு இடிச்சு அரைத்த மருந்தாகும்..

மதியம் 12.30 முதல் 1.30 வரை உச்சி கால பூஜை.. இதற்குப் பெரிய அவசரம் என்று பெயர். 

#பெரியஅவசரம்:- 

அதிரசம் பதினொன்று. 

பதினெட்டு படி தளிகை (வெறும் சாதம்), 

பாசிப்பருப்பு #கறியமுது. 

தக்காளி சேர்க்காமல் புளி, மிளகு, சீரகம், இட்ட ரசம்.. இதற்கு #சாத்தமுது என்று பெயர்.. 

அரிசி, பாசிப்பருப்பு, பால், வெல்லம் இட்ட பாயசம். இதற்கு #கண்ணமுது என்று பெயர்.

மாலை ஆறிலிருந்து ஏழு... 

#க்ஷீராண்ணம்_பூஜை. 

உளுந்து வடை பெரியது பதினொன்று. 

பெரிய அப்பம் ஆறு. 

பெரிய தேன் குழல் எனப்படும் அரிசி முறுக்கு ஆறு. 

பால், பச்சரிசி, வெல்லம் இட்ட பால் பொங்கல் இது அரை இனிப்பாக இருக்கும். 

இவற்றில் தாயாருக்கு மட்டும் கூடுதலாக வெல்லம் இட்ட பச்சரிசிப் புட்டு.. 

இரவு ஒன்பது முப்பது மணிக்கு செலவு சம்பா. எட்டுப்படி வடிசல் சாதம், பாசிப் பருப்பு என்று முடித்தார் ரெங்கன்.

காலை முதல் இரவு அரவணை வரைக்குமாக பெருமாளுக்கும் தாயாருக்கும் வைத்து பண்ணப்படும் நைவேத்ய அன்னங்கள் யாவுமே, உடனே #ஸ்ரீபண்டாரம் வந்து சேர்ந்து விடும்.. 

🍁பக்தர்களுக்கும் பெருமாள் நைவேத்ய பிரசாதம் போலவே பல அன்னங்களும் பணியாரங்களும் மிகவும் செய்நேர்த்தியுடன் ஆத்மார்த்தமாகத் தயாரிக்கப்பட்டு திருக்கோயில் பிரசாத ஸ்டால்களில் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது!.." என்கிறார் பணியாளர்களில் ஒருவரான மாதவன்.

இரவு பத்து மணிக்குப் பெருமாளுக்கு #அரவணை_பூஜை. 

ஆறுகால பூஜை வேளை நைவேத்யங்களிலேயே இரவு அரவணை தான் மிகவும் ஹைலைட்.. 

🌿அதனைப் பெற்றுக் கொள்ள இரவு பதினோரு மணியளவில் கூட, கோயிலின் ஸ்ரீ பண்டாரம் மண்டபத்தில் பக்தர்களின் பெருங்கூட்டம் சேர்ந்து விடும்.. 

இரண்டரை படி பச்சரிசி, ஏராளமான நெய், ஏலக்காய், வெல்லம் இட்டு #அரவணைப்_பொங்கல். 

குங்குமப்பூ, ஏலக்காய் வெல்லம் இட்டு #சுண்டக்_காய்ச்சிய_பசும்பால். (காலையில் காய்ச்சாத பால். இரவு காய்ச்சிய பால்) 

🌿இதில் தாயாருக்கு மட்டும் ஸ்பெஷலாக அரவணைப் பொங்கலுடன், மிளகுக் குழம்பு (#உப்புச்சாறு_என்பார்கள்) நெய் விட்டு வேகவைத்த முளைக்கீரை அமுது செய்யப்படும்..

இரவு ஒன்பதரை மணிக்கு மேலாகத் தாயாருடைய அரவணை ப்ரஸாதம், பக்தர்களுக்காக
ஸ்ரீ பண்டாரம் வந்து சேரும்.. 

அடுத்து இரவு பத்தரை மணிக்கு மேலாக அரங்கனின் #அரவணைப்ரஸாதம் பக்தர்களுக்காக ஸ்ரீ பண்டாரம் வந்து சேரும்.. 

பிறகென்ன?..
போட்டி போட்டு பக்தர்கள் பெற்றுச் செல்வார்கள்.
அதன் ருசியே தனி. 
பூலோக வைகுண்டத்தின் இனிய அமுது தான் #அரங்கனின்_அரவணை.

திருக்கோயில் மடப்பள்ளியில் மண்பாண்டங்கள் தான் சமையல் பாத்திரங்கள். 
மர விறகுகள் தான் அடுப்பில் எரிபொருளாகப் பயன்படுத்தப் படுகின்றன..  

எத்தனையோ நவீனங்கள் வந்து விட்டாலும், மடப்பள்ளிக்குள் புராதன நடைமுறைகளே கடைபிடிக்கப்பட்டு வருகின்றன..

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு காலை ஒன்பது முதல் இரவு ஒன்பது மணி வரை தினசரி #அன்னதானம் செய்யப்படுகிறது..

சராசரியாக ஒரு நாளைக்கு மூவாயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது.. 
அதற்கான 
மடப்பள்ளியோ அதி சுத்தமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது..🙏🌹

🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂

Why Guru? - HH Bharati teertha mahaswamigal

*ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்*

இந்த குரு சிஷ்யன் என்கிற சம்பிரதாயம் அனாதி காலமாக வந்திருக்கிறது. முதல் குரு பகவான் ஸ்ரீ 
தக்ஷிணாமூர்த்தி. அவர் நாராயணனுக்கு உபதேசம் செய்தார். அவர் பிரஹ்மாவிற்கு செய்தார். அவர் வசிஷ்டருக்கு செய்தார். அவர் சக்திக்கு செய்தார். அவர் பராசரருக்கு செய்தார். அவர் வேத வியாஸருக்கு.. என்றபடி ஒரு குரு சிஷ்ய பரம்பரை (இருந்து வந்தது) . இந்த பரம்பரையில் இருக்கின்ற விசேஷம் என்னவென்றால் சிஷ்யனுக்கு குருவின் விஷயத்திலே அசாதாரணமான பக்தியும், குருவிற்கு சிஷ்யன் விஷயத்திலே அசாதாரணமான அன்பும் இருக்கும். ஆதிசங்கர பகவத்பாதர் ஸாக்ஷாத் பரமசிவ அவதாரம் என்று எல்லோருக்கும் தெரியும். அவரும் கூட கோவிந்த பகவத்பாதர் சன்னிதியை அடைந்து அவரிடம் பயின்று வேதாந்த தத்வ ஞானத்தை அடைந்தார் என்கிறது சங்கர திக்விஜயம். சிலருக்கு ஒரு கேள்வி! "ஆதிசங்கரர் பகவான் பரமேஸ்வரரின் அவதாரம் என்கிறீர்களே, அவருக்கும் குருவிடம் போகவேண்டி இருந்ததா? அவர் தெரியாமல் போனாரா; தெரிந்தே போனாரா? அல்லது அவர் கோவிந்த பகவத்பாதரை பரீக்ஷிக்க போனாரா? அவர் கோவிந்த பகவத்பாதரை பரீக்ஷிப்பதற்காக போகவில்லை. ரொம்ப விநயத்துடன்தான் போனார். அப்போது, தெரியாமல் போனாரா, தெரிந்தே போனாரா என்று கேட்டால், "தெரியுமோ தெரியாதோ, குருவிடம் இருந்து வந்ததால்தான் அதற்கு ஒரு மதிப்பு! ராமர் வசிஷ்டரின் சன்னிதியில் தத்துவத்தை கிரஹித்துக் கொண்டார் என்று ராமாயணம் சொல்கிறது. ராமர் சாக்ஷாத் பரமாத்மாவின் அவதாரம் அல்லவா? அவருக்கு வஸிஷ்டர்  சொல்ல வேண்டி இருந்ததா? கிருஷ்ண பரமாத்மா ஸந்தீபனி  மஹரிஷியிடமிருந்து வித்தைகளை கிரஹித்துக் கொண்டார் என்று பாகவதம் சொல்கிறது. கிருஷ்ண பரமாத்மாவும் ஸந்தீபனி  மஹரிஷியிடம் பாடம் கற்றுக் கொள்வதற்காக செல்ல வேண்டுமா என்று கேட்டால் அது ஒரு சம்பிரதாயம். குருவினால் உபதேசிக்கப்பட்ட ஞானம்தான் பிரயோஜனத்திற்கு வரும், ஸபலமாகும் என்று உபநிஷத் கூறுகிறது. குரு உபதேசம் இல்லாது வந்திருக்கக்கூடிய ஞானம் ஸபலமாகாது. "அங்கு என்ன வித்தியாசம்? குரு சொன்னால் என்ன? சொல்லாவிட்டால் என்ன?" என்று கேட்டால் வித்தியாசம் வெளியில் பார்ப்பதற்கு ஒன்றும் இருக்காது. உள்ளார்ந்த ஒரு வித்தியாசம் இருக்கும்.

Sunday, April 27, 2025

Science and religion

சிறுவயதில் கடவுள் மறுப்பு கேள்விகளை நான் என் அப்பாவிடம் கேட்டிருக்கிறேன். - - #சுஜாதா

எப்படி ட்விஸ்ட் செய்து மடக்கிக் கேட்டாலும் அவர் கூறும் பதில், "வயசானா உனக்கே #புரியும். 

புரியும்போது ...
கேள்விகள் அப்படியே இருக்கும், ஆனால் உனக்குப் பதில் கிடைத்திருக்கும்.!" 

இந்தப் பதில் இன்னும் குழப்பும்.  

அப்பா....
 பதில் கூற முடியாமல் ஏதோ சால்ஜாப்பு செய்கிறார் என்று தோன்றும். 

"நீ ஏதோ டபாய்க்கிற.!" என்பேன்.

"நீ #சயன்ஸ் படிக்கிற, 
அதனால் இதை எல்லாம் கேட்கிற. 
நானும் பிஸிக்ஸ் ஸ்டூடண்ட் தான்", என்பார். 

அப்பாவுடன் கோயிலுக்குச் செல்லும்போது நல்ல படிப்பு வர வேண்டும், 
மார்க் நிறைய வர வேண்டும் என்று எல்லாம் வேண்டிக்கொள்ளச் சொல்லமாட்டார், 

அவர் வேண்டிக்கொள்ளச் சொல்லுவது,  "நிறைய #அறிவு கொடு என்று வேண்டிக்கோ", என்பார்.  

இவை எல்லாம் ....
எனக்குப் புரிந்ததே கிடையாது. 

சின்ன வயதில் 
அவர் சொன்னது ...

சில வருடங்கள் முன் ....
புளி டப்பாவைத் திறக்கும்போது புரிந்தது. 

புளி டப்பாவைத் திறந்தபோது,  
அதிலிருந்து சின்னப் பூச்சி ஒன்று பறந்தது.
 
 ஏர்-டைட் ...டப்பர் வேர் புளி டப்பா. மூடியிருக்கிறது.!  

அதற்குள்....
 பூச்சி எப்படி வந்தது என்று யோசித்து தலையைச் சொறிந்தேன்.  

நான் சொறிந்துகொள்வதைப் பார்த்துத் தலையில் என்ன பேனா.?" என்றார்கள்.

 தலையில் பேன் எப்படி உற்பத்தி ஆகியது என்று ...
மேலும் ....
பலமாகச் சொறிந்துகொண்டேன்.  

ஷாம்பு போட்டுக் குளித்தால் அரிப்பு சரியாகிவிடும் என்று கூறினார்கள். 

 குளித்துவிட்டு பெருமாள் சேவிக்கும்போது சாளரத்தைப் பார்த்தேன். 

 எப்படி?யொரு பூச்சி சோறு தண்ணீர் காற்று எதுவும் இல்லாமல் உள்ளே தோன்றியிருக்க முடியும்.? என்று யோசித்தேன். 

மீண்டும் குழப்பம்.  

கல்லிலிருந்து பூச்சி எப்படி வந்தது என்பதே தெரியாமல் இருக்க, ....

தூணிலிருந்து நரசிம்மன் எப்படித் தோன்றினார் என்று எனக்கு எப்படிப் புரியும்.?

 பூச்சிக்குத் தாய் யார் என்று தெரியாமல் முழிக்கும் எனக்கு ...

நரசிம்மருக்கு ...யார் ?
தாய் என்று புரிந்துகொள்ள முடியுமா.? 

இந்தக் கேள்விகளுக்கு 
ஆழ்வார் பாசுரங்களையும் 
ஸ்வாமி தேசிகனையும் நாடினேன்.  

ஸ்வாமி தேசிகன். ..
 நரசிம்மர் தூணிலிருந்து வந்தார், 

அதனால்
அவருடைய தாய் ....
அந்தத் தூண் தான் என்கிறார்.  

தேசிகன் கூறிய பிறகு
 அதை மறுத்துப் பேச முடியுமா.? 

(a+b) ² =a²+2 ab+b² என்பதை எப்படிக் கண்ணை மூடிக்கொண்டு நம்புகிறோமோ ?

அதே போல் 
ஆழ்வார்கள் 
ஆசாரியர்கள் எது செய்தாலும் ....

அதில் 
தப்பிருக்காது என்று முதலில் நம்ப வேண்டும். 

ஆசாரியன் கூறிய பிறகு
 அதை அப்படியே ஏற்றுக்கொள்வது தான் ஞானம். 

வள்ளுவர்

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
என்கிறார். 

 இதற்குப் பொருள், "எந்தப் பொருளை யார் சொன்னாலும்,
 அதன் உண்மைத் தன்மையை அறிவது தான் அறிவு". 

அதாவது 
பகுத்து அறிவதுதான் பகுத்தறிவு. 

ஸ்ரீ வைஷ்ணவத்தில் பகுத்து அறிவதற்கு அறிவு கலங்க வேண்டும்.  

எனக்கு அறிவு இல்லை என்று தெரிந்துகொள்வதே அறிவு என்கிறார் நம்மாழ்வார்.  

கொஞ்சம் அறிவியல் படித்தவர்கள் கடவுள்பற்றிப் பேசுகிறேன் என்று ...

அவர்களின் 
பி.எச்.டியை வைத்துக்கொண்டு ...

கடவுளை ஒரு வரையறைக்குள் அடக்க முயற்சி செய்வதை நாம் பார்த்திருக்கிறோம்.

நம் சிறிய அறிவை வைத்துக்கொண்டு அவனை அளக்கவோ புரிந்துகொள்ளவோ முடியாது.  

நம் அறிவு என்பது
 எவ்வளவு சின்னது என்று ....

ஒரு கணிதவியலாளர் சொன்ன சோதனை மூலமே சொல்லுகிறேன்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரெஞ்சு கணிதவியலாளரான Jules henri poincaré,

 "சிந்தனைப் பரிசோதனை" என்று ஒரு விஷயத்தைச் சொல்லியுள்ளார்.  

இந்தச் சோதனையை யாராலும் செய்து பார்க்க முடியாது. 

அதனால் ....?
நினைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள் :

இன்று தூங்கி ...நாளை எழுந்துகொள்ளும்போது ....

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும்...

உங்கள் அப்பா,  அம்மா,  
நாய்குட்டி, 

வீடு,  கோயில்,  செடி, 
 தட்டு, அரிசி,  

பேனா,  பென்சில், சட்டை,  
அணுக்கள்,  நீங்கள் படுத்துத் தூங்கும் கட்டில், 

ஏன்,?
 நீங்கள் என....

உங்களைச் சுற்றியுள்ள அனைத்துமே பெரிதாகிவிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

மறுநாள் காலை 
நீங்கள் எழுந்த பிறகு ...

எல்லாம் பெரிசாகிவிட்டது என்று 
உங்களால் கண்டுபிடிக்க முடியுமா என்றால்...?

முடியாது  என்கிறார் Jules henri. 
அவ்வளவு தான் நம் அறிவு.

சாதாரணமாக இதையே #அளக்க முடியாதபோது ....

பெருமாளை ...
இப்படித்தான் என்று பேசுவது எல்லாம் டூமச்.

ஆலமரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்,
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்,
கோல மாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்லது ஓரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே.

-  திருப்பாணாழ்வார்

எழு உலகையும் உண்டு 
ஒரு குழந்தை வடிவில் ஆலிலையில் படுத்துக்கொண்ட பெருமாள் என்று சொல்லும்போது ....

உலகை உண்ட பிறகு 
அந்த இலையில் எப்படிப் படுத்துக்கொள்வான் என்று கேள்வி எழும்.

கோவர்த்தன மலையைத் திருப்பிக் குடையாய் பிடித்தபோது அதில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் கீழே சிந்தவில்லையாம். 

அதே போல 
மரங்கள் எல்லாம் எப்போதும் போலச் சாதாரணமாக இருந்ததாம்.

( உடனே புவியீர்ப்பு தத்துவம் உங்களுக்கு ஞாபகம் வந்தால் ....
நீங்க இன்னும் கடவுளைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.! )

எப்படி என்று ...இதை எல்லாம் ....யோசிக்கவே முடியாது.  
முயற்சியும் செய்யாதீர்கள்.! 

இது தான் 
அகடிதகடனா சாமர்த்தியம். 
(லிஃப்கோ தமிழ் அகராதியில் - "perfectly accomplishing even the impossible" என்று கொடுத்திருக்கிறார்கள். ). 

நம் இரைப்பையில்
 'ஹைட்ரோ குளோரிக் அமிலம்' இருக்கிறது என்றால் நம்புவீர்களா.? 

அதை
 ஒரு பாட்டிலில் பிடித்து அடித்தால் ரவுடிகள் வீசும் ஆசிட் தோற்றுவிடும். 

அந்த அமிலம் கையில் பட்டால் நம் கை ஓட்டையாகும்.! 

ஹார்பிக் என்ற நம் கழிப்பறையைச் சுத்தம் செய்யும் வஸ்துவில் 10% இந்த அமிலம்தான் இருக்கிறது. 

 நம் வயிறு, 
ஆசிட் வைத்திருக்கும் ரவுடி.!  

இவ்வளவு மோசான ஆசிட் உள்ளே இருக்க நம் வயிறு ஏன் இன்னும் பஞ்சராகவில்லை.?  

பேன் தலையில் இருந்தால் ...
அந்த 'இச்சிங்' உணர்வை நாம் எப்படி உணர்கிறோம்.

 இச்சிங்கோ, டச்சிங்கோ
 நாம் அதை உணர்வது எப்படி.?
 உணர்த்துவது யார்.? என்று கேட்கும் கேள்விகளுக்கு  ....

விடை ஆழ்வார் பாசுரங்களில் எங்கோ புதைந்து இருக்கிறது. 

நாம் பெருமாளிடம் வேண்டிக்கொள்கிறோம். பதவி உயர்வு, பணம், வீடு வாசல் வேண்டும். 

 தேர்வில் மதிப்பெண், கல்யாணம், வெளிநாட்டு வீசா, சில சமயம் காகிதத்தில் எழுதி ஆஞ்சநேயர் கழுத்தில் கூட மாட்டிவிடுகிறோம்.

 'உண்டியே உடையே உகந்து ஓடும்' என்று ஆழ்வார் சொல்லுவது போல ஓடிக்கொண்டு இருக்கிறோம்.  

ஆனால் ....
என்றாவது ?

எனக்கு 'அறிவு இல்லை, 
அது வேண்டும்', என்று பெருமாளிடம் கேட்டிருக்கிறோமா.? கேட்டதில்லை, 

காரணம்
 நம்மை நாமே அறிவுஜீவி என்று நினைத்துக்கொள்கிறோம்.

#யாதுமாகி நிற்பவன் அவனே...

அவனின்றி ஓர் அணுவும் அசையாது

Panigrahanam - when..?

🕉️

*KOLAHALAM IN KALYANAM / VIVAHAM – HOLDING THE BRIDE'S HAND (PANIGRAHANAM)*

Namaskaram

In an attempt to bring back the proper ancient ritual of authentic Vivaham as recommended in Sutras by Rishis, in these series of eye-opening articles on our FB page 'Dharma Shastram', we try to point out the differences between the past and the present way of conducting marriage topic-wise. 

Today we speak about holding the bride's hand by the groom, which is an important step in marriage. But *when* to do that, is something we need to learn from this article

*What do we observe now?*
 The bride and groom are holding each other's hands for photoshoot before wedding, reception happens before marriage, rather many days before the wedding, the bride and groom go around together etc. Also, now it has become a fashion to escort the bride in Panigrahana style right from Oonjal ceremony into the marriage hall. These are all strictly prohibited in Shastras. 

*The FIRST TIME the groom holds the hand of the bride, with all his fingers enveloping the bride's right hand 5 fingers, IS AT THE TIME OF PANIGRAHANA ONLY, which happens after Mangalya dhaarana. Thus, holding the bride's hand with mantra is regarded highly important by Rishis, as it signifies the following:*

The groom chants the mantras which mean:

*I hold your hands forever for good progeny and to lead a long, healthy life with you till our old age together*

In our Dharma, every auspicious act has to be performed with mantras. Imagine that our Rishis have written mantras right from getting out of the bed in the morning, upto lying down on bed in night

So this is an very important part of the marriage which signifies that, *by holding hands in this specific way, my heart and your heart become one forever for achieving happiness in life and progeny*. Also here, Apastamba Rishi gives a rule of holding hands of the bride in his Sutra. If you hold only the thumb of the bride, only male child will be born. If you hold 4 fingers of the bride without the thumb, then female child will be born. *If you hold all the fingers of the bride together, Apastamba Rishi says that you will beget male as well as female children which is ideal*. That's why the groom holds all fingers of the bride. This is also the time when, after the Panigrahana, the bridegroom takes the bride towards the homa kundam where the *Pradaana Udvaha homam* is about to happen and gives his right side place for her to sit. 

*Veda Ghosham is thus trying to bring back each and every aspect of the 5-day marriage*, as recommended in Shastras. We also in the due course want to prepare a team of ritual experts to conduct this 5-day marriage, for those who are really interested in getting married as per Shastras.


_Sri Umamaheshwarabhyam namaha !_

🕉️

Saturday, April 26, 2025

Vaishavaparibhasha

" *வைஷ்ணவ* *பரிபாஷை* "

 *பெருமாள்* - ஸ்ரீமந் நாராயணன், விஷ்ணு
 
 *பிராட்டி* - ஸ்ரீதேவி, லக்ஷ்மி, மற்றும் பூதேவி, நீளாதேவி 
 
 *தாயார்* -ஸ்ரீதேவி, லக்ஷ்மி, மற்றும் பூதேவி, நீளாதேவி
 
 *நம்பெருமாள்* - ஸ்ரீரங்க கோவில் உற்சவர்
 
 *பெரியபெருமாள்* -ஸ்ரீரங்க கோவில் மூலவர்
 
 *பெரியபிராட்டி* - ஸ்ரீரங்கநாயகி (ஸ்ரீதேவி) 
 
 *தேவபெருமாள்* -காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் 
 
 *உற்சவர்* - கோவிலிலிருந்து வெளியே எழுந்து அருளும் மூர்த்தி 
 
 *மூலவர்* - கோவிலேயே நிரந்தரமாக எழுந்து அருளும் மூர்த்தி 
 
 *செல்வர்* - உற்சவரின் பிரதிநிதி (உற்சவரைப் போலவே வழிபடும் மூர்த்தி) 
 
 *யாகபேரர்* - பவித்ரோற்சவம் முதலிய உற்சவங்களில் யாகசாலையில் எழுந்து அருளும் உற்சவ மூர்த்தி. 
 
 *கோயிலொழுகு* - கோவிலின் வரலாறு 
 
கிடந்த திருக்கோலம் - சயநினித்து எழுந்தருளும் சேவை. 
 
 *வீற்றிருந்த* *திருக்கோலம்* - அமர்ந்து எழுந்தருளும் சேவை. 
 
 *நின்றதிருக்கோலம்* -நின்றோ, நடந்தோ எழுந்தருளும் சேவை.        
 
 *ஆழ்வார்* - பொதுவாக 12 ஆழ்வார்களைக் குறிக்கும்
 
 *பெரியஉடையார்* -ஜடாயு 
 
 *இளையபெருமாள்* - இலக்குவன்/லக்ஷ்மணன் 
 
 *எம்பெருமானார்* - இராமாநுஜாசார்யன் 
 
 *இளையாழ்வார்* - இராமாநுஜாசார்யன் 
 
 *யதிராசர்* - இர்ராமாநுஜாசார்யன் (சன்யாசிகளின் தலைவன்) 
 
 *யதீந்திரர்* - இர்ராமாநுஜாசார்யன் (சன்யாசிகளின் தலைவன்) 
 
 *ஸ்வாமி* - முதலாளி
 
 *ஆழ்வான்* - கூரத்தாழ்வான் 
 
 *ஆண்டான்* - முதலியாண்டான் 
 
 *லோகாச்சார்யர்* - நம்பிள்ளையின் மற்றொரு பெயர் 
 
 *பட்டர்* - பராச‌ர பட்டர் 
 
 *நாயனார்* - அழகிய மணவாள பெருமாள் நாயனார் (பிள்ளை லோகாச்சார்யரின் தம்பி) 
 
 *வேதாந்தாசாரியார்* - வேதாந்த தேசிகன் 
 
 *ஜீயர்* - ஸன்யாசி
 
 *பெரியஜீயர்* , யதீந்திர ப்ரவணர் - மணவாள மாமுனிகள் 
 
வரத த்வய ப்ரஸாதம் - பிள்ளை *லோகாச்சார்யார்* - 2 வரதனுக்கான வெகுமதி - காஞ்சி வரதன், நம்பூர் வரதாச்சாரியார் 
 
 *சடாரி* (ஸ்ரீ சடகோபம்) - எம்பெருமானாரின் பாத கமலங்கள் 
 
 *ஸ்ரீராமானுஜம்* - ஆழ்வார்திருநகரியிலுள்ள நம்மாழ்வாரின் பாத கமலங்கள் 
 
 *மதுரகவிகள்* - நம்மாழ்வாரின் பாத கமலங்கள் 
 
 *முதலியாண்டான்* - இராமாநுஜரின் பாத கமலங்கள் 
 
 *அந்ந்தாழ்வான்* - திருமலையில் இராமானுஜரின் பாத கமலங்கள் 
 
 *பொன்னடியாம்* *செங்கமலம்* - மணவாள மாமுனியின் பாத கமலங்கள் 
 
 *அரையர்* - எம்பெருமானின் முன் பிரபந்த்த்தை இசையுடனும் பாவத்துடனும் அனுசந்திப்பவர் 
 
 *தேவரீர்* - பிறரை குறிக்கும் முறை 
 
 *அடியேன்* - தன்னை கூறிக்கொள்ளும் முறை 
 
 *அடியோங்கள்* - தன்னை கூறிக்கொள்ளும் முறை 
 
 *தாஸன்* - அடிமை, அடியேன் 
 
 *ஆசார்யர்* - குரு, ஆசான் 
 
 *பூர்வாசார்யர்* - ஆசாரியரின் முன்னோடிகள் 
 
 *பரமாசார்யர்* - ஆசாரியரின் ஆசார்யர்
 
 *திவ்யப்ரபந்தம்* -அருளிச்செயல் ஆழ்வார்களின் பாசுரங்கள் 
 
 *உபயவேதாந்தம்* - ஸமஸ்கிருத வேதம் (வேதம், உபநிஷது, புராணம், இதிஹாஸம்) மற்றும் திராவிட வேதம் (திவ்யப்ப்ரபந்தம்) 
 
 *ஸ்ரீசூக்தி* - ஆழ்வார் ஆசார்யரின் பாசுரங்கள் 
 
 *க்ரந்தம்* - புத்தகம் 
 
 *வ்யக்யானம்* - விளக்கம் 
 
 *காலக்ஷேபம்* - க்ரந்தம் மற்றும் வியாக்யான்ங்களின் வரி விளக்கங்கள்/சொற்பொழிவு 
 
 *உபன்யாசம்* - சொற்பொழிவு 
 
 *உபயவிபூதி* - நித்ய மற்றும் லீலா விபூதிகள் 
 
 *நித்யவிபூதி* - ஸ்ரீவைகுண்டம் - எம்பெருமானின் ஆன்மீக பாகம் - லௌகீக பாகத்தின் 3 மடங்கு 
 
 *லீலாவிபூதி* - எம்பெருமானின் சொத்தின் லௌகீக பாகம் - ஆயிரமாயிரம் லோகங்களைக் கொண்ட 14 லோகங்கள் 
 
 *விரஜா* - நித்ய விபூதி மற்றும் லீலா விபூதியை பிரிக்கும் நதி 
 
 *விஷயந்தரம்* - எம்பெரும்மானை தவிர உள்ள மற்ற விஷயங்கள் 
 
 *சேஷி* - தலைவன் 
 
 *சேஷன்* - தொண்டன் 
 
 *சேஷத்வம்* - தலைவனுக்கு தொண்டனாய் பணி செய்யும் அறிவு 
 
 *பார‌த‌ந்த்ரிய‌ம்* - தொண்டனாய் இருந்து தலைவனின் ஆசைகளை நிறைவேற்றுதல் 
 
 *அன்யசேஷத்வம்* - எம்பெருமான் மற்றும் பாகவதர்களை தவிர மற்றுள்ளவர்களின் தொண்டனாக விளங்குதல் 
 
 *தேவதாந்த்ரம்* - ப்ரம்மா, சிவன், இந்திரன் மற்றும் இதர தேவதைகள் 
 
 *பஞ்சஸம்ஸ்காரம்* - ஒருவரை ஸ்ரீவைஷ்ணவராக நியமிக்கும் பொழுது செய்யும் 5 சடங்குகள் 
 
 *பரஅன்னநியமம்* - தன் வீட்டில் சமைத்த பிரஸாத்த்தை மட்டும் உட்கொள்ளுதல் (கோயில் மற்றும் மடங்கள் விதிவிலக்கு)- குறிப்பு: *ஸ்ரீவைஷ்ணவர்* புஜிக்கும் உணவு மற்றும் எம்பெருமானுக்கு படைக்கும் உணவுகளில் கட்டுப்பாடு உள்ளன 
 
 *பொன்னடிசாற்றுதல்* - ஸ்ரீவைஷ்ணவரை இல்லத்திற்கு அழைத்தல் 
 
நோவு சாற்றிக்கொள்ளுதல் - ஸ்ரீ *வைஷ்ணவர்* உடல் நலமின்மை 
 
 *கண்வளருதல்* - உற‌க்க நிலை 
 
 *கண்டருளப்* *பண்ணுதல்* , அமுது செய்தல் - சாப்பிடுதல், நெய்வேத்யம் (எம்பெருமான் மற்றும் ஸ்ரீவைஷ்ணவருக்கு உணவு பரிமாறுதல்) 
 
 *எழுந்தருளபண்ணுதல்* - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யர்களை ஒரிடத்திலிருந்து மற்றொரு இட்த்திருக்கு எடுத்துச் செல்லுதல் 
 
 *புறப்பாடுகண்டருளல்* - திரு உலா 
 
 *குடிசை* - தன் இல்லத்தை குறிக்கும் சொல் 
 
 *திருமாளிகை* - மற்றொரு ஸ்ரீவைஷ்ணவரின் இல்லத்தை குறிக்கும் சொல் 
 
 *நீராட்டம்* - குளித்தல் 
 
 *போனகம்* - உணவு 
 
 *ப்ரஸாதம்* , சேஷம் - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர் உணவு உண்ட மிச்சம்   
 
 *காலக்ஷேபம்* பண்ணுகிரார் - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர் ப‌ற்றிய‌ விஷ‌ய‌ங‌க‌ள் கேட்கிறார் 
 
 *காலக்ஷேபம்* சாதிக்கிரார் - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர் ப‌ற்றிய‌ விஷ‌ய‌ங‌க‌ள் சொல்லுகிறார் 
 
 *சாதித்து* *அருள்* (சாத்துமறை ) - பாசுரம் மற்றும் வேதம் ஓத ஆரம்பித்தல் 
 
 *நாயந்தே* - அடியேன் 
 
 *திருநாடு* *அலங்கரித்தார்* - உடலை விடுத்து வைகுண்டம் எய்தல் 
 
 *திருவடிசம்பந்தம்* - ஆசார்யனின் சம்பந்தம் 
 
 *அலகிடுதல்* - பெருக்குதல் (சுத்தம் செய்தல்)     
 
 *ப்ரஸாதம்* - அன்னம் 
 
 *குழம்பமுது* (நழிகரமது) - குழம்பு/சாம்பார் 
 
 *சாற்றமுது* - ரசம் 
 
 *கரியமுது* - காய்கரி/பொரியல் 
 
 *திருக்கண்ணமுது* - பாயசம் 
 
 *தயிரமுது* (தோத்தியோனம், தாச்சி மம்மு) -தயிர் சாதம் 
 
 *புளியோதரை* - புளி சாதம் 
 
 *அக்காரஅடிசில்* - சர்க்கரையால் செய்த சாதம்...🙏🙏🙏🙏🙏