Wednesday, November 12, 2025

Maaya - story from yoga vasishta

நிழல் தான் நிஜமா? - நங்கநல்லூர் J K SIVAN 
இப்போ நான் ஒரு கதை சொல்றேன். நான் இட்டு க்கட்டி, சொந்தமாக யோசித்து சொல்ற கதை இல்லை.ஏழாயிரம் வருஷ பழங்கதை. ராமருக்கு அவர் குரு வசிஷ்டர் சொன்ன கதை. வசிஷ்டர் ராமருக்கு சொன்ன விஷயம் எல்லாம் ''யோக வாசிஷ்டம்'' அதில் வரும் சம்பவங்கள் நமக்கு பழசாக , புரியாத விஷயமாக இருக்கலாம். ஆகவே யாரும் அதிகம் இதெல்லாம் படிப்பதில்லை, பேசுவதில்லை.  
கதி ஒரு நல்ல சாது பிராமணன். கோசல ராஜ்யத்தில் வாழ்ந்தவன். வாழ்க்கை வெறுத்து போய் குடும்பத்தை விட்டு காட்டுக்கு போய்விட்டான். அங்கே ஒரு காட்டாறு. அதில் கழுத்தளவு நீரில் நின்று எட்டு மாதம் தவம் செய்தான். அந்த காலத்தில் கடும் தவம் செய்தால் கடவுள் நேரே வந்து வரம் தருவார் என்ற நம்பிக்கை.வீண் போனதில்லை. ஆகவே மஹா விஷ்ணு நேரில் வந்தார். 
''அப்பா, கதி, எதற்கு இப்படி கஷ்டப்பட்டு என்னை வேண்டிக்கொண்டு தவம் செய்கிறாய்?''கதி தண்ணீரிலிருந்து வெளியே வந்து மஹாவிஷ்ணு காலில் விழுந்தான்.
''பரமாத்மா, மஹாவிஷ்ணு, நீங்கள் இந்த லோகத்தை, மாயையை, படைத்து, , எல்லோரும் அதில் சிக்கி தவித்து ஜனன மரண துன்பம் அடைய செய்துவி ட்டீர்கள். எனக்கு ப்ரம்மத்தோடு ஐக்கியமாகி மோக்ஷம் பெற அருளவேண்டும். அதற்கு தடங்கலாக இருக்கும் மாயையை நான் அறிந்து, புரிந்து கொள்ள வும் அதை வெல்லவும் அருளவேண்டும்'' 
'பக்தா, நீ விரும்பியபடியே, மாயையை அறிந்து, உணர்ந்து அதன் பிடியிலிருந்து தப்பும் அனுபவம் சீக்கிரமே உண்டாகும்''வரமளித்து விட்டு மஹா விஷ்ணு மறைந்து விட்டார். 
''ஆஹா நான் கேட்டதை மஹா விஷ்ணு அருளிவிட் டார்' என்ற பேரானந்தத்தோடு கதி ஆற்றில் மறுநாள் காலை வழக்கம் போல் நீராடபோனான். மனதில் மஹா விஷ்ணு சொன்ன வார்த்தைகளே திரும்ப திரும்ப ஒலித்ததால் அவன் மனது நித்ய கர்மாநுஷ்டா னத்தில் ஈடுபடவில்லை. தலையைக் கவிழ்த்து தண்ணீரில் முங்கினான் .
மனதில் சினிமா காட்சி ஓடியது. .....அவன் வீட்டில் அவன் ஏதோ வியாதி வந்து செத்து கிடக்கிறான். அவன் மனைவி கதறுகிறாள். சொந்தம் பந்தம் எல்லாம் வந்து வருந்துகிறது. கூட்டமாக நிற்கிறது . அவன் அம்மா அவன் உடல் மேல் புரண்டு புரண்டு அழுகிறாள். வாத்தியார்கள் வந்தாயிற்று சுடுகாட்டில் கட்டைகள் அடுக்கி அவனை வைத்து எரித்து சாம்ப லையும் கரைத்து அவனை எல்லோரும் மறந்து கூட போயாச்சு. (இது அத்தனையும் கதி, தலையை தண்ணீருக்குள் முக்கி எடுப்பதற்குள் தோன்றிய காட்சிகள். இன்னும் தொடர்கிறது) கதி இப்போது அடுத்த பிறவி எடுக்கிறான். யாரோ ஒரு அழுக்கு காட்டுவாசி பெண் கருவில் உருவாகிறான். அந்த காலத்தில் வழக்கத்தில் இருந்த தாழ்ந்த வகுப்பு'' பெண் ஒருத்தி கருவில் பிறந்து வளர்ந்து அதே வகுப்பு பெண்ணை மணந்து குழந்தைகள் பெற்று சந்தோஷ மாக குடும்பம் நடத்துகிறான். சில காலம் அவனைத் தவிர எல்லோரும் மரணம் அடைந்தார்கள். அவன் சோகமாக தனிமனிதனாகி, மனம் கலங்கி வாடி எங் கெல் லாமோ அலைகிறான். கீரா என்கிற ராஜ்ஜியம் வருகிறான். அவன் அங்கே வந்த சமயம் கீரா ராஜ்ய மன்னன் மரணமடைந்து விட்டான். வாரிசு இல்லை என்பதால் மந்திரி பிரதானிகள் அடுத்த ராஜாவை தேர்ந்தெடுக்க ஏற்பாடு நடக்கிறது. கதி தாழ்ந்த குலத்தவனாகதெருவில் நடக்கிறான். எதிரே தும்பிக் கையில் மாலையோடு வந்த பட்டத்து யானை கதியின் கழுத்தில் மாலையிட்டு ராஜாவாகிறான். மந்திரி பிரதானிகள் அவனை அலங்கரித்து மரியா தை யோடு சிம்மாசனத்தில் அமர்த்தி அவன் நேர்மை யோடு ஆளாகிறான். எட்டு வருஷம் ஓடியது. 
ஒரு நாள் அரண்மனையிலிருந்து தெருவை பார்க்கி றான். அவன் சாதிக்காரர்கள் ஏற்கனவே தெரிந்தவர் க ள், நாய் மாமிசம் உண்பவர்கள் தெருவில் கூட்டமாக செல்கிறார்கள். அவன் அவர்களை நோக்கி ஓடுகி றான். ராஜ உடை, நகை கிரீடம் எல்லாம் எறிந்து விட்டு தனது கூட்டத்தாரோடு சேர்கிறான். அவர்களும் அவனை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். அவனை அணைத்து முடித்தமிடுகிறார்கள். அவனுக் கும் அவர்களைக் கண்டதில் பரம சந்தோஷம். 
இதெல்லாம் அரண்மனை உப்பரிகையிலி ருந்து பார்த்த ராஜகுல பெண்மணிகள் அதிர்ச்சி அடைந்து '' ஒரு நீசனா , தாழ்ந்தவனா, நமக்கு ராஜா? அதற்குப் பிறகு எவரும் ராஜா அருகில் போகவில்லை . இப்படி ஒரு தவறு யானையால் நிகழ்ந்ததற்கு நாமெல் லோரும் பரிகாரமாக தீக்குளிப்போம் என்று மந்திரி பிரதானிகள் ராஜ வம்சத்து ராணிகள் தீக்குளித்து விட்டார்கள். ராஜா அழுது கொண்டு தானும் நெருப்பில் விழுந்து சாம்பலானான்.
++++
''அட, அட , அட, என்ன விசித்திரம் கதி ஆற்றில் தண்ணீருக்குள்ளிருந்து தலையை வெளியே எடுத்து மலங்க மலங்க சுற்று முற்றும் பார்த்தான். தன் உடம்பையே வெறித்துப் பார்த்தான். இது வா எரிந்த து? நானா சண்டாளன்? நானா ராஜா?சில நாழிகை களில் எது மாயை, நிஜம்போல் நம்மை வாட்டுகிறது என்று புரிந்து போயிற்று கதி என்ற அந்த துறவிக்கு. மஹா விஷ்ணு மாயையின் சக்தியை புரிய வைத்து விட்டார். மாயை எவ்வளவு வலிமை கொண்டது?.'
' +++
கதி காட்டில் சிலநாட்கள் மீண்டும் தவம் புரிந் தான். ஒருநாள் அவன் குடிசைக்கு ஒரு துறவி வந்தார். அவரை உபசரித்து, தேன் , கிழங்குகள், பழங்கள் கொடுத்தான். அப்போது சாயம் சந்தியா காலம். பொன்னிற சூரியன் எல்லாவற்றையும் தங்க நிறமாக்கி இருந்தான். சந்தியா வந்தனம் பண்ணி விட்டு இருவரும் அவன் ஆஸ்ரமத்துக்கு திரும்பினார் கள். ஆத்ம விசாரம், வேதாந்த விஷயங்கள் எல்லாம் பேசினார்கள். கதி அந்த துறவியிடம் அப்போது கேட்டான்;
''சுவாமி உங்கள் தேகம் ஏன் இப்படி எலும்பும் தோலுமாக வற்றி, வாடி இளைத்து காண்கி றது?'
'''அதை ஏன் கேட்கிறீர்கள். கீரா என்கிற தேசத்துக்கு போனேன். அந்த ஊரில் ஒரு நல்ல ராஜா பட்டத்து யானையால் தேர்ந்தெடுக் கப்பட்டு நேர்மையாக எட்டு வருஷம் ஆண்டானாம். ஒருநாள் தாழ் குலத்த வன் காட்டு வாசி என்று ஊர்மக்களுக்கு, தெரிந்து அனைவரும் பாபம் தீர அக்னி பிரவேசம் பண்ணிவிட் டார்களாம். அந்த ராஜாவும் தீயில் இறங்கி சாம்பலா னா னாம். அந்த ஊரில் சென்ற பாபத்துக்காக நான் பிரயாகை சென்று த்ரிவேணியில் ஸ்னானம் பண்ணி விட்டு அதுவரை எதுவும் ஆகாரம் சாப்பிடவில்லை.''
'கதி ஆச்சரியப்பட்டான். ஆஹா இந்த துறவி என் கதையை அல்லவா சொல்கிறார்?. அப்படியென்றால் நடந்தது எல்லாம் நிஜம் தானா? மனதின் கற்பனை யில் லையா? மாயை நிஜமா? அப்படித்தான் எல்லோரு ம் நம்புகிறோமா?.
 கதி தானும் கீரா ராஜ்ஜியம் சென்றான் விசாரித் தான். தான் பிறந்த இடம், தாழ் குலத்தோர், யானை வந்து மாலை அணிவித்து. ராஜாவானது, நீச உறவுக ளை சந்தித்தது, அக்னி பிரவேசம் .... எல்லாமே அந்த ஊர் மக்கள் சொல்வது நிஜம் என அறிந்தான். இருந்தாலும் தான் நீச குலத்தவன் இல்லையே, துறவியாக இருப்பதும் மஹா விஷ்ணு அளித்த வரத்தால் அவனுக்கு மாயை தான் அதெல்லாம் என புலப்பட்டது. 
 கதி மீண்டும் தவத்தில் ஈடுபட்டான். மறுபடியும் மஹா விஷ்ணு தரிசனம் கிட்டியது. அவரிடம் கேட்டான்.
''பரமாத்மா, உங்கள் அருளால் மாயை புரிந்து கொண் டேன். எப்படி அது நிஜமாகவே உருவமெடுக்கிறது. நம்பாமல் இருக்க முடியவில்லையே. எப்படி ஏன்?''
''அன்பா, கதி, சொல்கிறேன் கேள். இந்த பிரபஞ்சம், உலகம், அதில் காணும், நிகழும், சர்வமும் உண்மை யல்ல, இருப்பவை அல்ல, இல்லாதவை. மனத்தால் உருவாகுபவை. மனது செயலழிந்தவனுக்கு உலகம் பிரபஞ்சம், மக்கள் எதுவும் எவரும் கிடையாது. மனம் செயல் படாதவனை, எதிலும் நிலைக்காதவனை பித்தன், பைத்யம் என்கிறோம். அலையும் மனதில் தான் உலகம் பிரபஞ்சம் திகழ்கிறது. நிகழ்கிறது. அதுவே உன்னை மரணமடைய வைத்தது, நீசனாக் கியது, ராஜா வாக் கியது, தீக்குளிக்க வைத்தது, மீண்டும் நீ கதி எனும் துறவி என்றும் புரியவைத்தது. 
உன் மனதில் என்னைப் பதிய வைத்துக் கொண்டால் மற்ற காட்சிகள் மறையும். உன்னிடமிருந்து நீ அனுபவித்த மாயக் காட்சிகள் உன்னை சந்திக்க வந்த துறவிக்கும் ஒட்டிக்கொண்டு அவரும் அதை நிஜமென நம்பினார். காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை இது. உன்னால் துறவி மட்டும் அல்ல உன் அனுபவத்தை பங்கேற்ற எல்லோருமே அந்த அனுபவம் அடைந்தவர்களாக காணப்பட்டார்கள். கனவு ஒன்று நிஜமாக காணப்பட்டது. 
உண்மையில், நிஜமாக, எல்லாமே நான், என்னில் அனைத்தும், அனைத்துமே நான் என உனக்கு புரிந்தால் மற்ற காட்சிகளுக்கு மனதில் இடம் ஏது? நீ யார் என்பதை புரிந்து கொள்ளாமல் மற்றவைகள் எல்லாம் நீ என்றும் மற்றவை என்றும் பிரித்து பார்த்து அவஸ்தை பட்டாய்.''
மோகம் என்னும் மாய சக்ரத்தின் அச்சாணி தான் மனம். மனம் வெறுமையானால் அதில் எதுவும் உருவாகாது. அது தான் மனோநாசம் DESTRUCTION OF MIND. புரிந்து கொண்டாயா? எழுந்திரு மீண்டும் பத்து வருஷம் மலைக்குகையில் அமர்ந்து தவம் செய்து மனதை அடக்கு. ஆத்ம ஞானம் பிறக்கும். ''
மஹா விஷ்ணு மறைந்தார். 
கதி மீண்டும் தவம் செய்ய புறப்பட்டான். பத்து வருஷம் ஆனது. ப்ரம்ம ஞானியாக மௌனி யாக வெளி வந்தான்.பேரானந்தத்தில் திளைத்தான். அவன் மனத்தில் பௌர்ணமி போல் ஞான ஒளி. ஜீவன் முக்தன். 
யோக வாசிஷ்டத்தில் ஒரு கதை இது. எப்படி இருக்கிறது. இன்னும் சொல்லட்டுமா?

Tuesday, November 11, 2025

Whom to follow in this world? - HH Sri Bharati Teertha Mahaswamigal

*ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்*  

உலகத்திலே மனிதனாக பிறப்பது மிகவும் துர்லபம்.. அப்பேற்பட்ட துர்லபமான பிறவி நமக்குக் கிடைத்துள்ளது..  இதில் ஆஸ்திகம் இல்லை  தர்மாசரணங்கள் இல்லை என்று சொன்னால் அப்போது இந்த மனிதப் பிறவிக்கு அர்த்தமேயில்லை..  ஆனால், பவித்ரமான இந்த பாரதத்திலே இந்த மாதிரியான பவித்ரமான ஜென்மத்தை எடுத்துள்ளோமென்று சொன்னால் நாம் இதை ஸார்த்தகமாக்கிக்கொள்ள வேண்டும்.. மனிதனுடைய ஸ்வபாவம் என்னவென்றால் தான் யாருடைய சகவாஸத்திலே இருப்பானோ,  அவர்களுடைய ஸ்வபாவமே இவனுக்கும் வரும்..  தான் துஷ்டர்களுடைய சகவாஸத்திலே இருந்தால் அந்த துஷ்டர்களுடைய ஸ்வபாவமே இவனுக்கும் வரும்.. அதானலே,  "நான் எப்பொழுதும் ஸத்புருஷர்களோடுதான் இருக்க வேண்டும் என்கிற ஒரு பாவனையை வைத்துக்கொள்ள வேண்டும்.. இப்படி இருந்தால் நீ செளக்கியமாக இருக்கலாம்"  என்று பகவத்பாதாள் நமக்கு உபதேசித்தார்..  இப்பேற்பட்ட தர்ம மார்க்கத்திலே நாம் இருந்தால்தான் இந்த பவித்ரமான பாரதத்தில் ஜென்மம் அடைந்ததற்கு, இந்த ஸநாதன தர்ம பரம்பரையில் பிறந்ததற்கு அர்த்தம் வரும்.. இல்லாவிட்டால், நான் அப்போது சொன்ன மாதிரி பிராணிகளுக்கு சமானம் ஆகிவிடும்..  அப்படி ஆகக் கூடாது..  இந்த ஜென்மம் ஸார்த்தகமாக வேண்டும்.. இந்த தர்மத்தை ஆசாரணம் பண்ணுகிற விஷயத்திலே யார் மஹான்களோ அவர்களைத்தான் நாம் எப்பொழுதும் ஆதர்சமாக வைத்துக்கொள்ள வேண்டும்..

Monday, November 10, 2025

Contentment - HH Bharathi Teertha Mahaswamigal

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

சந்தோஷமான வாழ்க்கைக்கு திருப்தி அத்யாவசியமானது. எவ்வளவு ஐஸ்வர்யம் அல்லது க்ஷேமங்கள் வந்தாலும் திருப்தியற்ற மனிதனுக்கு சந்தோஷம் கிடைக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. 

இன்ப வஸ்துக்களை விரும்புபவன் அவைகளைப் பெறுவதற்கு கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்: அது ஒன்றும் இன்பமயம் அல்ல. பிறகு அவைகளை தக்கவைத்துக்கொள்ள கடுமையாக போராட வேண்டும் : அதுவும் இன்பம் தரக்கூடிய காரியம் இல்லை. ஏதேனும் ஒரு காரணத்தினால் கஷ்டப்பட்டு சேகரித்த உடைமைகள் நம்மிடமிருந்து பிடுங்கப்பட்டால், இருந்த கொஞ்ச நஞ்ச இன்பமும் போய், முடிவில் வேதனைதான் மிஞ்சும். 

ஆகவே உடைமைகளுக்கு ஆசைப்படுவது நல்லதில்லை. பழங்காலத்தில் வனத்தில் இருந்த ரிஷிகளுக்கென்று சொந்தம் ஏதும் கிடையாது. ஆனால் அவர்கள் சந்தோஷமாக இல்லையா என்ன? திருப்தி என்ற ஒன்றினால் தான் அவர்கள் அவ்வாறு இருந்தார்கள். 

புராணங்கள் பரம சிவபெருமானை ஒரு காளையின் மீது அமர்ந்து இருப்பவராகவும் புலித்தோலை உடுத்தி இருப்பவராகவும் மற்றும் உடலில் விபூதி பூசி இருப்பவராகவும் வர்ணிக்கின்றன. நாம் இந்த்ரியஸுகங்களிலிருந்து மனதை மறக்க வேண்டும் என்பது இதன் தாத்பரியம். நாம் எவ்வளவு செழிப்பாக வாழ்ந்தாலும் எளிய வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு இன்பம் கிடைக்கும். 

தனம் தானாகவே வந்தால் அதை நல்ல அல்லது தார்மீக காரியங்களுக்காக உபயோகப்படுத்தி வாழ்க்கையை சமநிலையில் நடத்தி வரவேண்டும். "இவ்வுலகில் யார் பணக்காரன், யார் ஏழை" என்ற கேள்விக்கு பதில் உண்டு. ஆசைகளற்றவனும் திருப்தி நிரம்பிய மனதுள்ளவனும் தான் பணக்காரன். இந்த குணம் இல்லாத மற்ற எல்லோரும் உண்மையில் ஏழைகள். 

ஆதலால் திருப்தி என்ற லக்ஷியத்தை உயர தாங்கி, இன்பத்துடன் செழிப்பாக வாழ்வது மிக்க நல்லது.

Saturday, November 8, 2025

Cleaning kamandalu - sanskrit story

||ॐ||
।।गुरूणाम् कथा।। { बोधकथा}
''भासमानः कमण्डलुः'' (१५)
श्रीरामकृष्णः परमहंसः प्रतिदिनं स्वस्य कमण्डलुं बहना संसक्तेन भस्मना मृत्तिकया च घर्षयित्वा प्रकाशमानं करोति स्म |
प्रतिदिनं कृतेन परिश्रमेण कमण्डलुः प्रकाशमानः दृश्यते स्म | रामकृष्णस्य शिष्यः प्रतिदिनं एतादृशं श्रमं, कमण्डलो घर्षणं च दृष्ट्वा विचित्रम् अनुभवति।
संशयस्य निवारणं कर्तुं तेन रामकृष्णः पृष्टः —भवतः कमण्डलुः भासमानः एव दृश्यते, कमण्डलौ वयं चित्रं अपि द्रष्टुम् शक्यते तर्हि किमर्थं प्रतिदिनं कमण्डलुं भस्मना, मृत्तिकया घर्षयति ? किं प्रतिदिनं एतादृशः श्रमः आवश्यकः ?
गुरुः श्रीरामकृष्णपरमहंसः मन्दं मन्दं हसित्वा अवदत् – पुत्र! कमण्डलोः भासमानता केवलं एकस्मिन् दिने परिश्रमं कृत्वा न प्राप्ता | कमण्डलोः उपरि यत् किट्टम् [मलं] अस्ति, तस्य अपाकरणाय प्रतिदिनं श्रमः आवश्यकः | एवमेव जीवने असमीचीनं तत्त्वम् अपि अस्ति , असमीचीनं संस्कारं अपाकर्तुं अस्माभिः प्रतिदिनं संकल्पपूर्णः परिश्रमः कर्तुम् आवश्यकः।
 मलस्य अपामार्जनम् आवश्यकम् खलु | कमण्डलु स्यात् अथवा व्यक्तेः जीवनम् । असमीचीनान् मलान् अपाकर्तुं प्रतिदिनं कठोरः परिश्रमः अत्यावश्यकः | यथा अयं कमण्डलुः प्रकाशते तथैव व्यक्तेः जीवनम् अपि कान्तिमत् भविष्यति |
प्रस्तुता कथा अस्मान् किं बोधयति ?
[१] प्रत्येकं जनेन स्वस्य असमीचीनं मलं अपाकर्तुं सदैव प्रयासः करणीयः|
[२] तुच्छं कार्यमपि मनोयोगेन यदि क्रियते तर्हि तत्रापि वैशिट्यपूर्णां भासमानताम् उत्पाद्य आकर्षणं निर्मितुं शक्यते |
सामान्यं कर्म अपि असामान्यत्वं प्राप्यते यदा एकाग्रतया मनोयोगेन च किञ्चित् कार्यं क्रियते |
'' अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया |
चक्षुरुन्मीलितं येन 
तस्मै श्रीगुरुवे नमः |''
  ॐॐॐॐॐ
डॉ. वर्षा प्रकाश टोणगांवकर
पुणे / महाराष्ट्रम्
----------------------
       🍫🍫🍫🍫🍫🍫

Thursday, October 23, 2025

Advice from a teacher

தனது மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை:

"ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க வசதியான படகு ஒன்று மாத்திரமே இருக்கிறது.
மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார். கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக....
இந்த இடத்தில் என்ன சொல்லியிருப்பார்???" என்று மாணவர்களை நோக்கி ஆசிரியை கேட்டார். 

எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும் போது ஒரு மாணவன் மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.....
"ஏம்பா நீ சைலண்டா இருக்க......"

'நம்ம கொழந்தைய பத்திரமா பாத்துக்கங்கன்னு சொல்லிருப்பாங்க டீச்சர்'

"எப்பிடிப்பா கரெக்டா சொல்ற, ஒனக்கு முன்னாடியே இந்த கதை தெரியுமா?"

'இல்ல டீச்சர், எங்கம்மாவும் சாவுறதுக்கு முன்னாடி அப்பாக்கிட்ட இதையேதான் சொன்னாங்க...'

பலத்த மௌனத்திற்கு பிறகு ஆசிரியை கதையை தொடர்ந்தார்.

தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த மனிதன் வளர்த்து வந்தார். அவரின் மரணத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண் தனது தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது. தாய்க்கு உயிர் கொல்லி நோய் இருந்திருப்பது அப்போதுதான் அவளுக்கு தெரிய வந்தது. கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார்.

' உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும்... நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். நான் என்ன செய்ய, நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியிருந்தது'.

கதையை இதோடு முடித்து விட்டு அந்த ஆசிரியை கூறினார்:

'வாழ்க்கைல நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாத்துக்கும் காரணம் இருக்கும் ஆனா சில நேரங்கள்ல உங்களால் புரிஞ்சிக்க இயலாம போகலாம்.

அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா
புரிஞ்சிக்காமலோ யார் மேலயும் முடிவுக்கு வந்துடக்கூடாது.'

*'நம்ம ரெஸ்டாரண்ட் போனா, ஒருத்தன் காசு கொடுக்க முன்வந்தா அவன் பணக்காரன் என்று அர்த்தமில்ல, பணத்த விட நம்ம நட்ப அதிகமா மதிக்கிறான்' னு அர்த்தம்.

*'முதல்ல மன்னிப்பு கேக்கிறாங்கன்னா அவங்க தப்பு பண்ணிருக்காங்கன்னு அர்த்தமில்ல, ஈகோவ(Ego) விட உறவ மதிக்கிறாங்க' னு அர்த்தம்.

'நம்ம கண்டுக்காம விட்டாலும் இருந்திருந்து நமக்கு கால் பண்றாங்கன்னா அவங்க வேல வெட்டி இல்லாம இருக்காங்கன்னு அர்த்தமில்ல, நம்ம அவங்களோட மனசில இருக்கம்னு அர்த்தம்'.

பின்னொரு காலத்தில நம்ம பிள்ளைங்க நம்மகிட்ட கேட்கும்,,,,,
'"யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கல்லாம்???"'

ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம் ' அவங்க கூடத்தான் சில நல்ல தருணங்கள நாங்க கழிச்சிருக்கோம்' 

படித்து பகிர்ந்து

Wednesday, October 22, 2025

Old age home - story

என்னை மிகவும் பாதித்த பதிவு !

படிக்கும்போதே உயிர் பிரிவதைப் போன்றவோர் உணர்வு.

அப்பா, நேத்து கேட்டேனே, 
எக்ஸாம் பீஸ் எடுத்துக்கவா...?

கேட்டுக் கொண்டே அப்பா நேற்று போட்டிருந்த சட்டைப் பாக்கெட்டில் கை விடுகிறான்.

டேய், அப்பா வந்து எடுத்து தருவாங்க, பாக்கெட்டில் கை விடறது என்ன பழக்கம்...? 
டஅம்மாவின் அதட்டலுக்கு...

என் அப்பா பாக்கெட்டில் நான் கை விடறேன், உனக்கு ஏம்மா வயிறு எரியுது...?

அம்மாவிற்கு பதில் சொல்லிக் கொண்டே, எடுத்ததை தன் பாக்கெட்டில் நுழைத்தவாறு, தேங்க்ஸ்பா, பாய்... சொன்னவாறு ஓடிப் போனான், மூன்றாமாண்டு பொறியியலில் இயந்திரவியல் படிக்கும் ராஜா.

எல்லாம் நீங்க கொடுக்கற செல்லம். எதுக்கும் ஒரு அளவு இருக்குதுங்க, பொறிந்தாள் அப்பளம் பொறித்தபடி.

சிரித்தபடியே தலைதுவட்டிக் கொண்டு வெளியே வந்த குமாரசாமி, 

நேத்து ஒரு ஃப்ரெண்ட் கேண்டீன்ல செலவு பண்ணியிருப்பான், இவன் ஒருநாள் செலவு பண்ண ஆசைபடுவான், இதுக்கெல்லாம் உங்கிட்ட கணக்கு சொல்லமுடியுமா?

அதுவுமில்லாம நீ பயப்படற மாதிரிலாம் தப்பா நீ வளர்க்கலய மகா...! காலையிலய கோபப்படாதடா, டாக்டர் சொன்னாரில்லையா... என்றபடி மனைவியின் கன்னத்தில் செல்லமாய் தட்டியபடி... ரூமிற்குள் நுழைந்து புறப்பட தயாரானார் அலுவலகத்திற்கு.

யாரு டாக்டரு, உங்க ஃப்ரெண்ட் தானே...

நீங்க சொல்லிக் கொடுக்கறத, அப்படியே வந்து ஒப்பிப்பாரு, எனக்குத்தெரியாதா?
ஒங்க ரெண்டு பேர பத்தியும்...

சொல்லிக் கொண்டே காபியுடன் வெளிவந்த மகாவை...

என்னம்மா, காலையிலயே என்னை போட்டுட்ட மிக்ஸியில... சொல்லியபடி உள்ளே நுழைந்தார் பக்கத்து வீட்டு டாக்டரும் குமாரசாமியின் பால்ய நண்பருமான ரத்னவேல்.

மகா, நாக்கை கடித்துக்கொண்டு அசடு வழிந்தபடி, இந்தாங்கண்ணா, உங்களுக்குத்தான் காபி, என்றாள்.

நம்பாதடா, நம்பாதடா, இவ்ளோ நேரம் அவ்ளோ திட்டு திட்டினாள் உன்னை, சிரித்தபடி வெளியே வந்த குமாரசாமியிடம், 

என் தங்கை என்னை திட்டினா, திட்டட்டும், என்னைத் தானே திட்டறா, உனக்கென்ன என்றார் ரத்னவேல் சிரித்துக்கொண்டே.

ஒன்னு அசடு வழியுது...
ஒன்னு வெட்கமே இல்லாம பேசுது...

ஆளை விடுங்க சாமி, என்றபடி தன்னிடம் தந்த காபியை வாங்கி குடிக்கத் தொடங்கினார். 

திடீரென அரண்டு எழுந்தார் குமாரசாமி.

#கனவு.

திரும்பி செல்போனை எடுத்து நேரம் பார்த்தார்.

5:20.

பத்து நிமிடம் கழித்து எழுந்து கொள்ளலாம் என நினைத்தபடி, ஈரமான கண்களை துடைத்தபடி திரும்பி படுக்கிறார். 

தன் மருமகள் மகனிடம் பேசுகிறாள்...

என்னங்க, நான் சொல்றது கேட்பீங்களா, கேட்க மாட்டீங்களா...? 

என்ன ஷீலா, நீ சொல்லி நான் எதை கேட்கல...?
காலையிலயே கோபப்படற‌. 

பின்ன என்னங்க, நானும் மூனு மாசமா சொல்றேன், செய்யறீங்களா...?

எதை சொல்ற...?

ஹூம்... அது மட்டும் மறந்துடுமே...

உங்கப்பாவை எங்கயாவது தூரமான ஊருல முதியோர் இல்லத்தில சேருங்கனு சொல்லிக்கிட்டு இருக்கேனே... அதைத்தான்.

இந்த மாசம் ஏற்பாடு பண்றேன் ஷீலா, கொஞ்சம் பொறுத்துக்கோடா.... என்கிறான்.

குமாரசாமியின் கண்களின் பக்கவாட்டில் நீர் வழிந்து, காதுகளை தொடுகிறது. 

துடைத்துக் கொண்டே நினைத்துக் கொள்கிறார்.

ஏங்க, எனக்கு ஒங்கள நெனச்சாதாங்க கவலையா இருக்கு...?

இவுங்ககிட்ட உங்களால தாக்கு பிடிக்க முடியுமானு தெரியலையே...?

உங்கள அனாதையா விட்டுட்டு போறேனே... 

ஏங்க, சீக்கிரம் வந்துடுங்க... நான் உங்களுக்கா காத்துகிட்டு இருப்பேன், சரியா...!

எல்லாரையும் உள்ளங்கையில வைச்சித் தாங்கனீங்க, ஆனால் ...

மேற்கோண்டு பேச முடியாமல் தேம்பும் மனைவியின் கண்ணைத் துடைத்தபடி, 

உனக்கு ஒன்னும் இல்லையாம்டா...
இப்போதான் ரத்னம் சொல்லிட்டுப் போறான்...

நீ இன்னும் ஒரு வாரத்துல எழுந்து அவனுக்கு காபி போட்டு கொடுப்பியாம், சொன்னான்.

அழுகையை அடக்கிய படி ஆறுதல் சொல்ல, 

எல்லாத்தையும் நானும் கேட்டுட்டேங்க...!

எனக்கு நான் போவதை பத்திலாம் கவலையே இல்லங்க... உங்கள நெனச்சாதான். 

தன் மடியில் மனைவி தன்னை விட்டுப் போனதை நினைத்துப் பார்த்தபடி படுத்திருக்கிறார்.

ஏங்க, மணி 7:20 ஆகுது, உங்கப்பாவை எழுப்புங்க, நியூஸ் போயிடுச்சினா, உலகமே இரண்ட மாதிரி ஆயிடுவாரு உங்கப்பா.

என்னவோ இவர கேட்டுதான் உலகமே இயங்கற மாதிரி...

சொல்லிக்கொண்டே மனைவி தந்த காபியை வாங்கிக் கொண்டு போய்... அப்பா, காஃபி... என்றவாறே அவர் அருகிலிருந்த டீப்பாயின் மீது வைத்து விட்டு உள்ளே போய்விட்டான்.

அய்ந்து நிமிடம் கழித்து வெளியே வந்தவன், காபி எடுக்காததை கண்டு, 

அப்பா, அப்பா...
இரண்டு தடவை கூப்பிட...

பதில் வரவில்லை.

ஒரே குரலுக்கு பதில் தரும் அப்பாவிற்கு என்ன ஆயிற்று...?

உடம்பு சரியில்லையோ...?

மெல்ல குனிந்து அப்பாவின் கையை தொட்டு உலுக்குகிறான் அப்பா, அப்பா...!?!?!

சற்றே அதிர்ச்சியோடு தற்போது கன்னத்தை இருபுறமும் பிடித்து...
தலையை ஆட்டுகிறான், அப்பா, அப்பா...!

இவன் கத்தும் சத்தம் கேட்டு ரத்னவேல் உள்ளே வருகிறார், 
என்ன ராஜா...?

தெரியல அங்கிள், நாலஞ்சு தடவை கூப்பிட்டும் எந்திரிக்கவே மாட்டேங்கிறாரு...?

ரத்னவேல் மெல்ல உட்கார்ந்து...

கையைத் தூக்கி பல்ஸ் பார்க்கிறார்.

கையை கீழே வைத்தபடி...

தன் நண்பனை மெல்ல குனிந்து முகத்தைப் பார்க்கிறார்.

மேலும் குனிந்து குமார், குமார் என குரல் கொடுத்தபடி...

இரண்டு கன்னத்திலும் முத்தமிட்டு விட்டு எழுகிறார்.

என்ன அங்கிள்...?

திரும்பி கண்ணாடியை கழட்டுகிறார். 

#கண்ணீர்_அதற்குள்_கழுத்தை_தொடுகிறது.

அவன் தோளை தட்டியபடி, அவன் மகாகிட்ட போயிட்டாம்பா... 
சொல்லிக் கொண்டே வெளியேறுகிறார்.

மாலை 4 மணி.

இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்த ரத்னவேலுவை நோக்கி, 

பால்ய நண்பர்கள் ஆறேழு பேர் வருகின்றனர்.

டேய், நீ ஒரு டாக்டரு, இவ்ளோ நாளா அவனை செக் பண்ணாமயாட இருந்த...? எரிச்சலோடு சேகர் கேட்கிறார்.

நிமிர்ந்து ஒரு பார்வை. அவ்வளவுதான்.

ஒட்டிப்பிறந்த ரெட்டையனுங்க மாதிரியே சுத்தித் திரிஞ்சிங்களேடா...
அவனுக்கு ஹார்ட்ல பிராப்ளம் இருக்கிறது உனக்குத் தெரியாமலா இருந்தது...? பாலாவின் கேள்வி.

அவன்கிட்ட கூட காசை எதிர்பார்த்தியோ...? சம்பத்.

எதற்கும் பதிலில்லை.

சிவா அவரைப் பிடித்து திருப்புகிறார்.
என்னடா, நாங்க கேட்டுகிட்டே இருக்கோம், அவனை அனுப்பற வேலையிலயே இருக்க...? 

அவர் கண்கள் முழுக்க கண்ணீர்...!

சிவாவின் தோளை பாலா தொட்டார்.
சிவா அமைதியாயிருடா. 

அவன், அவங்கம்மா செத்ததுக்கே கலங்காதவன். 
எப்படி அழறான், பாரு.
அவனை பேச வை.
எனக்கு பயமாயிருக்கு... பாலா தவிப்போடு சொல்ல,

பேசுடா, என்ன நடந்ததுன்னு சொல்லுடா... உலுக்குகிறார் சிவா.

அவன் செத்து மூனு வருஷமாச்சு.

நாமதான் லேட்டா கண்டுக்குறோம்... என்கிறார் ரத்னவேல்.

எல்லோரும் அதிர்ச்சியாகி பார்க்க...

ஆமாம்டா... அவன் செத்து மூனு வருஷமாச்சு.

மூன்று
ஆண்டுகளுக்கு முன்னால்... 
மகா போனபோதே அவனும் போயிட்டான்.
நாமதான் கவனிக்கல...!

அதுக்கப்புறம், "சாப்பிட்டியா?"
என்று கேட்க கூட யாரும் இல்லாத 
நேரத்திலேயே அவன் செத்துட்டான்; ஆனால் நாமதான் கவனிக்கல...!?!

"பொண்டாட்டி போனதுமே போய்த் தொலைய வேண்டியதுதானே" 
என்று தம் காதுபடவே - மருமகள் பேசியபோதே அவன் போயிட்டான்; அப்போதும் நாமதான் கவனிக்கல...!

'தாய்க்குப் பின் தாரம்... 
தாரத்துக்குப் பின் வீட்டின் ஓரம்...!'
என்று அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு 
வாழும்நிலை வந்தபோதே 
அவன் போயிட்டான்; நாமதான் யாருமே கவனிக்கல...!

"காசு இங்கே மரத்திலேயா காய்க்குது" என்று மகன் அமில வார்த்தையை 
வீசியபோதே அவன் போயிட்டான்;
நாமதான் கவனிக்கல...!

நேத்து விடிகாலம் வாக்கிங் போகறதுக்காக, 
அவனை எழுப்ப கதவை தட்டப் போனேன்...
அப்போ...

"என்னங்க... ரொம்ப தூரத்திலே இருக்குற முதியோர் இல்லத்திலே விட்டுவிட்டுத் தலைமுழுகிட்டு வந்திடுங்க...!" என்று மருமகளின் சுடுசொற்கள் 

என் காதில் விழுந்தது போல் அவனும் கேட்டிருப்பானு நெனைக்கிறேன்.

அதான் போயிட்டான், தூரமா...!
என்று கதறிய ரத்னவேலை...

பாலா தழுவிக்கொண்டே தட்டிக் கொடுத்தார்.

நேத்து பழைய ரிமோட்ட கையில வச்சிகிட்டு உட்கார்ந்திருந்தான், சேனலை மாத்துடா, என்னடா இந்தி பாட்டு கேட்கிற...? என்றபோது... 

அதோ இருக்கு பாரு ரிமோட்டு, மாத்திக்கோ என்றான்.
நீ வச்சிருக்கயே அது என்னடா? என்றபோது...

இது போயிட்டிச்சி, ஆனா மகா யூஸ் பண்ணது என்றான்.

#பார்க்கும்_எல்லாவற்றிலும்_அவன்_மகாவோடு_வாழ்ந்தான்.

ஒருவேளை மகன் நம்மை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டால்....? என்று நினைக்கும்போதே செத்துட்டிருப்பான்...!

அவனுக்கு ஒரு பிராப்ளமும் இல்லடா...! என்று கதறும் ரத்னத்தை ஆற்றுப்படுத்த வழியின்றி....

எல்லோரும் அழுகின்றனர்...!🙏

தோழர்களே...!

நீங்கள் செல்லும் வழியிலும்
இப்படி யாராவது
இறந்து கொண்டிருப்பார்கள்... 

ஓரிரு மணித் துளிகளாவது 
நின்று பேசிவிட்டுச் செல்லுங்கள்...! 

இல்லையேல்...

உங்கள் அருகிலேயே - 
உங்கள் வீட்டிலேயே இறந்து கொண்டிருப்பார்கள்... 
புரிந்து கொள்ள முயலுங்கள்...!

வாழ்க்கை என்பது... 
வாழ்வது மட்டுமல்ல...! 
வாழ வைப்பதும்தான்...!

சுடுசொற்களால், புறக்கணிப்பால்... 
பலர் 
உயிருடனேயே இறந்து விடுகின்றனர். 
புதைக்கத்தான்... 
சில ஆண்டுகள் ஆகின்றன...!🙏

இந்தக் கதையை படிக்கும் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள்...!

நிச்சயம் இது உங்களுக்கான கதை அல்ல.
நம்புகிறேன்...!

உங்களுக்கானதாக மாறிவிடக் கூடாது என்று வேண்டுகிறேன்.

Saturday, October 18, 2025

Thula snaan

துலா ஸ்னானம் -  


துவங்கும் ஐப்பசி மாதத்தில் 
ஸூர்யன் துலா ராசியில் சஞ்சரிப்பதால் 
ஐப்பசி துலா மாதம் எனப்படுகிறது.

இதில் விசேஷம் என்னவென்றால் 
வடக்கே உள்ள பெரிய ஜீவநதிகளான  
கங்கை யமுனை கோதாவரீ முதலிய 
அனைத்து புண்ய நீர்களும் தெற்கே  
காவேரிக்கு வந்து ஐக்யமாகிறது.  
சும்மா வரவில்லை. கங்கா யமுனா 
கோதாவரி எல்லாம் அவர்களது  
பாபங்களை போக்கிக்கொள்ள 
காவேரியில் ஸ்னானம் பண்ண 
வருகிறார்கள். 

ஆகவே ஐப்பசி 30 நாளும் காவேரியில்
 முறைப்படி ஸ்னானம் செய்து நமது  
பாபங்களை போக்கிக்கொள்ள வழி 
இருக்கிறது.  

பாபம் போவது இருக்கட்டும். 
முதலில் மன நிம்மதி பெறலாம்.  
மாயவரம், திருச்சி ஸ்ரீரங்கம் போன்ற 
காவேரி நதி தீரத்தில் வசிப்பவர்களுக்கு 
யோகம். நாம் முடிந்தால் போய் வரலாம்.  
ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்திலிருந்து 
தங்க குடத்தில் ஜலம் எடுத்து 
ரங்கநாதருக்கு துலா ஸ்னான 
அபிஷேகம் நடக்கிறது. 

மாயவரத்தில் காவிரிக்கரையில் 
துலா கட்டம் இருக்கிறது. சுற்று
வட்டார எல்லாக் கோயில்களிலும்  
உள்ள உத்ஸவ மூர்த்திகள் தீர்த்த
வாரிக்காகக் காவிரிக்கு வருவார்கள்.  
ஆகவே பக்தர்கள் கூட்டத்துக்கு 
கேட்கவே வேண்டாம். திருச்சியில் 
அம்மா மண்டபத்திலும் எண்ணற்ற 
பக்தர்கள் குழுமுவார்கள்.  

ஐப்பசி முழுதும் காவேரி ஸ்னானம்
 கங்கா ஸ்நானத்தை விட அதிக 
புண்யம் வாய்ந்ததாகிறது. 
கங்கையும் காவேரியோடு இணைந்து
விடுகிறாளே.

காவேரி துலா ஸ்னானம் பண்ணும்
போது சொல்கிற ஒரு மந்திரம்; 

नमस्ते तटितां मुख्ये निगमागम सम्स्तुते 
पापकायं पारिशुध्यं आयुरारोग्य मेव च । 
सौभाग्यमपि सन्तानं ज्ञानं देहि मरुदूधे ।।

நமஸ்தே தடிதாம் முக்2யே 
   நிக3 மாக3ம ஸம்ஸ்துதே
பாபகாயம் பாரிசு'த்4யம் 
    ஆயுராரோக்2ய மேவ ச
ஸௌபா4க்2யமபி ஸந்தானம் 
   க்ஞானம் தே3ஹி மருத்3 வ்ருதே4

நதிகளில் புண்யம் மிகுந்த 
காவேரியம்மா, வேத மந்த்ரங்கள்
 போற்றும் காவேரி மாதா,  
பாபங்கள் நிறைந்த என்னுடை 
தேகத்தையம், உன்னை பருகும்
போது என்னுள்ளே இருக்கும்  
பாபங்களையும் போக்கி 
பரிசுத்தமாக்கி அருள்வாய்.

मरुद्र्धे महादेवि महाभागे मनोहरे ।
श्री कावेरि नमस्तुभ्यं मम पापं व्यपोहय

மருத்3 வ்ருதே4! மஹாதே3வி ! 
மஹாபா4கே3! மநோஹரே! 
ஸ்ரீகாவேரி! நமஸ்துப்4யம் 
மமபாபம் வ்யபோஹய

சௌபாக்கியவாதி ஸ்ரீ காவேரி 
மாதா, உன்னை ஸ்னானம் செய்து 
நமஸ்கரிக்கிறேன். என் சகல 
பாபங்களையும் போக்கி அருள்வாய். 

" நமஸ்தே தவிதாம் முக்யே 
நிகமாகம ஸம்ஸ்துதே   
பாபகாயம் பாரிஸூத்யம் 
ஆயுராரோக்ய மேவ ச
ஸெளபாக்யமநி ஸந்தானம்
 க்ஞானம் தேஹி மருத்வ்ருதே"

எங்களுக்கு பாபத்தை போக்குவதோடு,  
பரிசுத்தம் பெற, ஆயுள், ஆரோக்கியம் 
பெற, சகல சௌபாக்யங்களோடு வாழ,  
சந்தான அபிவிருத்தி பெற, ஞானம் 
பெற அருள்வாய் தாயே. '' 

குளிக்கும்போதே எல்லாவற்றுக்கும் 
தலை முழுகிவிட்டு நல்லதையே  
பிடித்துக் கொள்ள அருமையான 
மந்திரம்அல்லவா ?  

துலா என்றால் தராசு, இப்போதுள்ள 
 டிஜிட்டல் எடை வருவதற்கு முன்  
பழங்காலத் தில், கடைகளில்  
ரெண்டு பக்கம் தட்டுகள் கொண்ட 
தராசு மேலே தராசுக்கோல் நடுவில் 
முள்ளோடு ரெண்டுபக்கம் சரி 
சமமாக காட்டும். ஒரு தட்டில் எடைக்கல் , 
மற்றொரு தட்டில் நமக்கு தேவையான 
பொருள். கண்ணெதிரில் சரியான 
எடையில் கிடைக்கும். 

துலாம் மாசம்,இரவு பகல் ரெண்டுமே 
சரி சமமாக தலா 12 மணி நேரம் 
கிடைக்கும். 

கங்கை யமுனை கோதாவரி தவிர 
ஈரேழு பதினான்கு லோகங்களிலும்
 உள்ள ஆறு கோடி தீர்த்தங்களும் 
ஐப்பசி மாதத்தில் காவிரியில் வந்து
 கலப்பதாக ஐதீகம்.

ஐப்பசி மாத 30 நாட்களும் காவேரி 
ஸ்னானம் பண்ண கொடுத்து 
வைத்தவர்கள் அஸ்வமேத யாகம் 
பண்ணிய பலன் பெற்றவர்கள்.  
நம்மால் வணங்கத்தக்கவர்கள் 
என்று தோன்றுகிறது.  

ஐப்பசியின் அனைத்து நாட்களிலும் 
காவிரியில் நீராடினால் அஸ்வமேத 
யாகம் செய்த பலன் கிடைக்கும்.  
விடிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் 
ஸ்னானம் பண்ணினாள் மஹா 
விஷ்ணுவின் அருள் பெறலாம்.

 ஐப்பசி மாதத்தில் காவிரி கரையில் 
முன்னோர்களுக்கு செய்யப்படும்  
தர்ப்பணம், சிராத்தம், பிண்ட 
தானம், ஆகியவை கல்ப கோடி 
வர்ஷபர்யந்தம் பித்ருக்களை 
திருப்திபடுத்தக் கூடியதாகும்.

ஐப்பசி துலா ஸ்னானம் நாம் 
மட்டும் பண்ணவில்லை. சிவன், 
பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்
மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி 
தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும், 
சித்தர்களும் காவிரியில் சூரிய 
உதயத்துக்கு முன்பே ஸ்நானம் 
பண்ணுகிறார்கள். 

 சரஸ்வதி, லட்சுமி, கெளரி, 
இந்திராணி என்று பல தேவியரும்   
இங்கே நம்மோடு காவேரி 
ஸ்னானம் பண்ணுகிறார்கள். 

கூட்டம் ரொம்ப ஜாஸ்தி.

ஐப்பசி 1ம் தேதி திருப்பராய்த்
துறையிலும், ஐப்பசியின் கடைசி
 நாளில் மயிலாடுதுறையிலும் 
காவிரியில் நீராடுவது மிகவும் 
விசேஷமான பலனை தரக் 
கூடியதாகும். நம்மைப்போல் 
முப்பது நாளும் ஸ்னானம் பண்ண 
முடியாதவர்கள் ஒரு மூன்று நாலாவது
 காவேரி ஸ்னானம் பண்ணலாம். 
இன்னொரு வழியும் உண்டு. 
ஐப்பசி கடைசி நாள் அன்றாவது  
துலா ஸ்னானம் பண்ணலாம். 
கடைமுகம், என்று அதற்கு பெயர்.

அதுவும் முடியாத பொது ஒரு நாள்  
அதிகப்படி எக்ஸ்டென்ஷன் கூட  
இருக்கிறது. கார்த்திகை முதல் நாள். 
அதற்கு முடவன் முழுக்கு என்று பெயர்.  

அதற்கு பின்னால் ஒரு கதை ;

எல்லோரும் காவேரி ஸ்னானம் 
பண்ண போகிறார்களே நாமும் 
பண்ணவேண்டாமா என்று வயதான 
முடவருக்கு ஆசை. அவர் இருந்த 
கிராமம் மாயவரத்துக்கு ரொம்ப 
தூரம். கால் ஊனமுற்ற அவர் எந்த 
வண்டியில் வந்து சேர்வார். மெதுவாக 
நொண்டி நொண்டி நடந்தே வந்தார்.  
அவர் வரும் நத்தை வேகத்தில்  
ஐப்பசி மாதமே முடிந்து போய்விட்டது. 
 ஒருவழியாகி காவேரி கரைக்கு 
வந்தபோது கார்த்திகை முதல் தேதி.  

''அம்மா காவேரி, கடை முழுக்காவது 
கிடைக்கும் என்று ஆசைப்பட்டேன். 
மஹா பாவி எனக்கு, முடியாமல் 
போய்விட்டதே'' என்று அழுதார் 

''அப்பனே அழாதே நானே வெகு 
தூரத்தில் இருந்து தான் இங்கே 
வந்து காவேரி அக்காவோடு 
இணைந்தேன். நான் போகிற 
வேளையில் நீ வந்திருக்கிறாய். 
உன் மனோதிடத்தை நான் மெச்சுகிறேன். 
முடியாமல் நொண்டி நொண்டி  
நடந்து ஐப்பசி முடிவதற்குள் வர 
முயற்சித்தாய். ஒரு நாள் அதிகமாகி 
விட்டதே என்று கவலைப்படாதே. 
உனக்காக நான் ஒருநாள் இன்று 
இங்கே இருந்து நீ ஸ்னானம் 
பண்ணிய பிறகு நாளைக்குள் 
போகிறேன்.

அந்த முடவர் புண்யத்தால் நாமும்  
கார்த்திகை 1ம் தேதியாவது 
காவேரியில் முடவன் முழுக்கு 
போட்டு புண்யம் சம்பாதிக்கலாம்.

"காவேரி நமஸ்தேஸ்து, 
மகா பாவநாசினி, 
புண்யம் தத் துலா ஸ்நானே,
 ப்ரதேஹி பரமேஸ்வரி.

கங்கை ச யமுனே சைவ 
கோதாவரி சரஸ்வதி, 
நர்மதே சிந்துஹ் காவேரி 
ஜலேஸ்மின் ஸந்நிதிம் குரு"

நீரில் மூழ்குவதாக எண்ணி தலையில் 
ஒரு மக் MUG தண்ணீர் விட்டு 
நனைத்துக் கொள்வோம். அம்புட்டு
தான் நம்மால் முடிந்தது.

-------------------

Thula month snaana & glory of Kaveri


*ஐப்பசி மாத பிறப்பினை* *முன்னிட்டு ஐப்பசி மாத* *காவிரி துலா ஸ்நானம்* *ஸ்பெஷல் பதிவு* !

*எண்ணத்தை ஈடேற்றித்* *தரும் ஐப்பசி மாத* *காவிரி துலா* *ஸ்நானம்*

ஐப்பசி மாதம் முழுவதும் துலாமாதம் எனப்படும். 

இந்தக் காலங்களில் சூரியோதயத்தில் செய்யும் புனித ஸ்நானம் துலா ஸ்நானம் என்று போற்றப்படுகிறது. 

திருச்சி, தஞ்சை திருவாரூர் முதலான மாவட்டங்களில் ஐப்பசி மாதம் சூரியோதயத்தில் செய்யும் புனித ஸ்நானத்தை *துலா காவிரி ஸ்நானம்*என்றே அழைப்பார்கள்.

இந்தப் பூவுலகில், அறுபத்தாறு கோடி தீர்த்தங்கள் உள்ளன எனச் சொல்கிறது புராணம். 

துலாமாதமான ஐப்பசியில் உலகிலுள்ள அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும் காவிரியில் சங்கமமாகின்றன என்பது ஐதீகம்.

அவை மட்டுமா?

பதினான்கு லோகங்களிலுள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும் காவிரி நதியில் சங்கமமாவதால், ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது மகத்தான பலன்களை வழங்கும் என்கிறார்கள். 

பொதுவாகவே நதி நீராடுதல் என்பது விசேஷம். 

அதிலும் காவிரியில் நீராடுவது இன்னும் விசேஷம். 

அதைவிட மகா புண்ணியம்... ஐப்பசியில் காவிரியில் நீராடுதல்!

துலா மாதத்தில் காவிரியில் நீராடினால், நம்முடைய எல்லாவிதமான
விருப்பங்களும் நிறைவேறும். 

இறுதிக்காலத்தில் எமவாதனையின்றி 
முக்தியும் அடையலாம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ஐப்பசி மாதத்தில் இரவு 
நேரமும் பகல் நேரமும் 
சமமாக இருப்பதால், இதற்கு 'துலா(தராசு) மாதம் என்று பெயர்.

'ஐப்பசி முதல் தேதி அன்று காவிரியில் நீராடுவது புண்ணியம்' என்கின்றன ஞான நூல்கள். 

துலா மாதத்தில் இதர நதிகளும் புண்ய தீர்த்தங்களும் காவேரியில் சேர்ந்து விளங்குகின்றன. 

ஆதலால் அப்போது ஸ்நானம் செய்பவர்கள் பஞ்ச மகா பாதகங்களிலிருந்தும் விடுபடுகின்றனர். 

அதில் ஸ்நாநம் செய்தவர்கள் அச்வமேத யாகம் செய்த பலனையும் அடைகின்றனர்.

துலா மாதத்தில் காவேரிக் கரையில் எவனோருவன் பித்ருக்களை உத்தேசித்து ச்ராத்தம், பிண்டதானம், தர்ப்பணம் இவற்றைச் செய்கிறானோ அப்படிச் செய்யப்பெற்ற அவை கல்ப கோடி வர்ஷபர்யந்தம் பித்ருக்களை த்ருப்தி செய்விக்க வல்லவையாகின்றன. 

பிரம்மா முதலான ஸகல தேவர்களும், ஸரஸ்வதி, கெளரி, லக்ஷ்மி, இந்த்ராணி முதலியவர்களும் அப்ஸர ஸ்த்ரீகளும் துலா மாதத்தில் காவிரியில் ஸ்நானம் செய்ய விரும்பி வருகின்றனர். 

காவேரிக் கரைகளில் 
பிறந்து வளர்ந்த பசு பக்ஷி முதலானவையும் அதன் காற்றினால் பரிசுத்தங்களாக ஆகி, மோக்ஷத்தை அடைகின்றன என்றால் 
பக்தி ச்ரத்தையுடன் ஸ்நானம் செய்தவர்கள் அடையும் பலனைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

மேலும் மஹான்களின் பெருமை, துளஸியின் மஹிமை, கங்கையின் ப்ரபாவம், துளஸியைக் கொண்டு செய்யப்படும் அர்ச்சனையின் வைபவம், ஸாளக்ராமத்தின் ஆராதன மஹிமை, காவேரியின் பெருமை இவற்றை உபதேசிக்கக் கேட்பவர்கள் மஹாபாக்கியசாலிகள். 

ஐந்மாந்தரங்களில் புண்யம் செய்தவர்களே காவேரியைக் காணும் பாக்கியத்தையும் அதில் ஸ்நாநம் செய்ய யோக்யதையையும் பெற்றவர்களாக ஆகின்றனர். 

ஸாமான்யமானவர்களுக்கு இது கிட்டாது. 

நதிகளில் மஹாவிஷ்ணுவின் திருவடியிலிருந்து உண்டான கங்கை எப்படி உயர்ந்ததோ, புஷ்பங்களில் துளஸி எவ்வாறு மேற்பட்டதோ, வ்ரதங்களுக்குள் ஏகாதசி வ்ரதம் எப்படி உயர்ந்ததாக உள்ளதோ, க்ருஹஸ்தர்கள் செய்ய வேண்டிய கர்மாக்களுள் 
பஞ்ச மஹாயஜ்ஞங்கள் எவ்வாறு உயர்ந்தவையோ, சுத்திகளுக்குள் மனசுத்தி எப்படி உயர்ந்ததோ, தேவதைகளுள் ஸ்ரீமந்நாராயணன் 
எவ்வாறு உயர்ந்தவராக விளங்குகிறாரோ,
அக்ஷரங்களுக்குள் ஓங்காரம் எவ்வாறு உயர்ந்ததோ, வேதங்களுள் ஸாமவேதம் எப்படி உயர்ந்ததாகக் கருதப் பெறுகிறதோ, பதினோரு ருத்ரர்களுக்குள் சங்கரம் எப்படி உயர்ந்தவராக உள்ளாரோ, ப்ராஹ்மண ஸ்த்ரீகளுள் அருந்ததி எவ்வாறு மேம்பட்டவளோ, ஸ்த்ரீகளுக்குள்மஹாலக்ஷ்மி எப்படி உயர்ந்தவளோ, தானங்களுக்குள் அன்னதானம் எப்படி உயர்ந்ததோ அதேபோல் நதிகளுக்குள் உயர்ந்தது காவேரி நதி என்று புராணங்கள் கூறுகின்றன.

ஐப்பசி முதல் நாளன்று திருப்பராய்த்துறையிலும் ஐப்பசி கடைசி நாள் மயிலாடுதுறையிலும் நீராடுவது விசேஷமாகக் கருதப்படுகிறது.

துலா மாதமாகிய ஐப்பசியில் பிரம்ம முகூர்த்தத்தில் காவிரி நதியில் நீராடினால், மகாவிஷ்ணுவின் அருள் கிட்டும்.

துலா மாதத்தில் சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை நேரத்திற்குமுன் காவிரியில் மும்மூர்த்திகளும், முப்பது முக்கோடி தேவர்களும், 
68 ஆயிரம் ரிஷிகளும், முனிவர்களும் சித்தர்களும் நீராடுவதாக சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

துலா மாதத்தில் காவிரியில் நீராடுவது புனிதமானது என்று சாஸ்திரம் சொல்லும் அதே வேளையில் இயலாத நிலையில் 'கடைமுகம்' என்று சொல்லப்படும் ஐப்பசி 
30ந் தேதி நீராடி பலன் பெறலாம். 

அன்றும் நீராட முடியாதவர்கள், 'முடவன் முழுக்கு' என்று சொல்லப்படும் கார்த்திகை முதல் தேதி நீராடினாலும்
புனிதம் பெறலாம் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

'ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது காசியில் ஓடும் கங்கை நதியில் நீராடுவதற்கு சமம்' என்று புராணங்கள் கூறுகின்றன. 

ஏனெனில் ஐப்பசி மாதமானது துலா மாதத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான பாரதத்தில் ஓடும் நதி தேவதைகள் அனைத்தும் காவிரியில் நீராடி, தங்களிடம் மானிடர்கள் கரைத்துச் சென்ற பாபக்கறைகளைப் போக்கிக் கொள்கின்றது என்று காவிரி மகாத்மியம் என்னும் நூல் கூறுகிறது.

மக்கள் தங்களுடைய பாவங்களை போக்க கங்கையில் நீராடி நீராடி கங்கைக்கே பாவம் அதிகமாக சேர்ந்து தோஷம் ஏற்பட தன் பாவங்கள் தீர என்ன செய்ய வேண்டும்? என்று விஷ்ணு பகவானிடம் கேட்டாள் கங்கை. 

அதற்கு ஸ்ரீமகாவிஷ்ணு, "நீ காவேரி நதியில் நீராடு. உன் பாவம் நீங்கும்" என்றார்.

அன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்யக்ஷேத்ரே விநச்யதி |
புண்ய க்ஷேத்ரே கிருதம் பாபம் வாரனாச்யாம் விநச்யதி |
வாரனாச்யாம் க்ருதம் பாபம் கும்பகோனே விநச்யதி |
கும்பகோனே க்ருதம் பாபம் காவேரி ஸ்நானே விநச்யதி |

என்று காவேரி ஸ்நானத்தின் மகிமையை வேதம் போற்றுகிறது.

அதன்படியே ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசையன்று கங்காதேவி காவேரியில் நீராடி மக்கள் தன்னிடம் கரைத்த பாவங்களைப் போக்கிக் கொள்கிறாள் என்று 
புராண இதிகாசங்களில் போற்றப்படுகின்றது

துலா மாதத்தில் காவிரியில் ஒருமுறை நீராடுபவன் ஸ்ரீமன் நாராயணனாக மாறுகிறான். 

மற்ற விரதங்களில் ஏதாவது சிறு தவறு ஏற்பட்டாலும் அதற்கு பிராயச்சித்தம் செய்ய வேண்டும். 

ஆனால், காவிரி துலா ஸ்நானத்திற்கு அப்படி எதுவுமில்லை.

'மக்களுக்கு புத்தியும் முக்தியும் அளிக்கும் துலா மாதத்தில் காவிரியில் நீராடுபவர்கள் தன்னையும், தங்கள் குடும்பத்தினரையும், முன்னோர்களின் பாபங்களையும் போக்கிக் கொள்வதுடன் வளமான வாழ்வு காண்கிறார்கள்' என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

'துலா காவிரி நீராடல் அழகு, ஆயுள், ஆரோக்கியம், செல்வம், கல்வி, மாங்கல்ய பாக்கியம், குழந்தைப்பேறு, வலிமை ஆகியவற்றை தரும். 

எனவே, காவிரியை நினைத்தாலும், சிறப்பைக் கேட்டாலும், பாபங்கள் விலகும்' என்றார் பிரம்மா, நதி தேவதைகளிடம்.

ஐப்பசி மாதத்தில் 
காவிரியில் நீராடி 
நீர்க்கடன் செலுத்துவோரின் முன்னோர்கள் சொர்க்கத்தை அடைகிறார்கள். 

காவிரி தேவியை வணங்கி துதிப்பவர்கள் சொர்க்க லோகம் செல்லும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள். 

தன்னில் நீராடுபவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வளமான வாழ்வு தருபவள் என்கிறது காவிரி புராணம்.நதி தேவதைகளும்,

தேவர்களும், மானிடர்களும் துலா மாதத்தில் காவிரியில் நீராடி தங்களிடம் உள்ள பாபங்களைப் போக்கிக்கொண்டதும், 
அந்தக் கறைகள் அனைத்தையும் காவேரி போக்கிக்கொள்ள திருமங்கலக்குடி திருத்தலத்திலும், 
மாயூரத்தில் (மயிலாடுதுறை) உத்தர வாகினியாக (தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்வது) இருந்து காவிரி போக்கிக்கொள்கிறாள் என்பது ஐதீகம்.

ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் அருள்புரியும் ரங்கநாதருக்கு ஐப்பசியில் தங்கக்குடங்களில் ஸ்ரீரங்கத்தின் தென்பகுதியில் உள்ள அம்மா மண்டபம் காவிரி நதிக்கரைப் படித்துறையிலிருந்து புனிதத் தீர்த்தத்தை சேகரித்து யானை மீது எடுத்து வந்து அபிஷேகம் செய்வர். 

மற்ற மாதங்களில் ஸ்ரீரங்கத்தின் வடக்கில் உள்ள கொள்ளிடத்தில் இருந்து வெள்ளிக் குடங்களில் தீர்த்தம் கொண்டுவந்து அபிஷேகம் செய்வார்கள்.

துலா காவேரி மஹாத்மியம்:

ஆதியில் உமாதேவிக்கு ஸ்ரீ பரமேச்வரன் சொன்ன காவேரி மகாத்மியத்தை, தேவ வன்மன் என்ற அரசனுக்கு,சுமத்திரங்கி என்ற ரிஷி சொல்லத் தொடங்குகிறார். 

ஒரு சமயம் பார்வதி-பரமேச்வரர்கள் 
ஒரு நந்தவனத்தில் தங்கியிருந்தபோது அங்கு பறவைகள் வடிவில் வந்த நதி தேவதைகள், துலா மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய்துவிட்டு அவ்விருவரையும் தரிசிக்க வந்தன. 

அவர்கள் வேண்டிய வரங்கள் எல்லாவற்றையும் தந்த ஈச்வரன், மேலும் கூறலானார்:

"கங்கைக்கு நிகரான காவிரியில் நீராடினாலும், தரிசித்தாலும், அதனை பக்தியுடன் தொட்டாலும் அதன் கரையில் தானம், தர்ப்பணம் செய்தாலும் எல்லா பாவங்களும் விலகி, புண்ணியம் கிட்டும். 

இதன் கரைகளில் காசிக்கு சமமான ஸ்தலங்களும் இருக்கின்றன. 

நினைத்ததைத் தரும் சிந்தாமணியான காவேரியின் பெருமையை இன்னும் சொல்கிறேன் கேள்" என்றார். 

அஸ்வமேத யாகம் செய்யத் தொடங்கிய அரிச்சந்திர மகாராஜாவை, முனிவர்கள், பிராயச்சித்தமாக துலா மாதத்தில் காவிரியில் நீராடிவிட்டு வரச்சொன்னார்கள்.

நாதசந்மா என்பவன், பரம பதிவ்ரதையான அனவித்யை என்பவளுடன் காவேரி ஸ்நானம் செய்வதற்காகவும் இருவரும் மோக்ஷ சாம்ராஜ்யத்தைப் பெற வேண்டியும், கௌரி மாயூர க்ஷேத்திரத்தை நோக்கி வந்தான். 

முனிவர்கள், தங்கள் பத்தினிகளுடனும், புத்திரர்களுடனும் தங்கி, ஹோமாக்னி செய்து, பலவித தானங்களை செய்துவரும் அந்த மோக்ஷ புரியில் நாமும் தங்கி நற்கதி பெறுவோம் என்றான் நாதசன்மன். 

அப்படியானால். காவேரி, 
மற்ற எல்லா தீர்த்தங்களை 
விட எவ்வாறு உயர்ந்தது 
என்று, அனவித்யை கேட்க, 
நாத சந்மனும் கூறத்தொடங்கினான்.

காவிரி உருவான கதை:

காவேரன் என்ற அரசன், தனக்குப் புத்திர பாக்கியம் இல்லாததால் பிரம்மாவைக் குறித்துத் தவம் செய்தான். 

பிரம்மாவானவர், "உனக்குப் புத்திர பாக்கியம் இல்லாவிட்டாலும், ஒரு குழந்தையை அளிக்கிறேன்" என்று கூறி, தன மனத்தால் 
ஒரு பெண் குழந்தையை உண்டாக்கி அவனிடம் அளித்தார். 

காவேரி என்ற பெயரில் அவனிடம் வளர்ந்த அப்பெண், தகுந்த கணவனை வேண்டித் தவம் செய்யலானாள். 

பின்னர்,அகஸ்த்திய முனிவரைக் கண்ட காவேரியானவள், இவரே 
தனது மணாளர் ஆவார் என்று நினைத்து, லோபாமுத்ரா என்ற பெயருடன் அவரை திருமணம் செய்துகொண்டவுடன், அவள் விரும்பியபடியே, நதி ரூபமாகி, பிற நதிகளுக்கும் மனிதர்களுக்கும் ஏற்பட்ட பாவங்களை நீக்கவும், மோக்ஷத்தை அளிக்கவும் 
மறு அம்சமாகத் திகழுமாறு, அகஸ்திய மஹரிஷி அருளினார்.

துலாக் காவேரியின் நீர்த்திவலைகள் ஒவ்வொன்றும் புண்ணிய தீர்த்தமாகும். அதிலுள்ள மணல்கள் எல்லாம் தேவதைகள். 

அதனால்தான் உலகிலுள்ள புனித நதிகள் அனைத்தும் துலா மாதத்தில் காவேரியில் நீராடி, மக்கள் தங்களிடம் கரைத்த பாவக் கறைகளைக் கழுவி புனிதமடைகின்றன.

துலா மாதத்தில் காவேரியில் நீராடுபவர்கள், தங்கள் குடும்பத்தினரையும் 
சேர்த்து, மூன்று கோடி உறவினர்களையும் கடைத்தேற்றுகிறார்கள்.

துலா மாதத்தில் காவேரியில் நீராடி, முன்னோர்களுக்கு பிதுர்பூஜை செய்து அன்னதானம், ஆடை தானம் அளித்தால் பித்ருக்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள்.

அழகு, ஆயுள், ஆரோக்கியம், சொல்வளம், கல்வி, வாழ்வில் சுகம் என எல்லாம் கிட்டு மென்று துலாக் காவேரி மகாத்மியம் கூறுகிறது.

ஆதி, இடை, கடை என்னும் மூன்று அரங்கங்களையும் தன்னகத்தே கொண்டு, சதாசர்வ காலமும் இறைவன் நாராயணனின் திருவடியைத் தழுவி வணங்கும் காவேரியின் பேறும் பெருமையும் தன்னிகரற்றது.

தட்சிணகங்கை என்று போற்றப்படும் காவேரிக்கு பொன்னி, விதிசம்பூதை, கல்யாணி, சாமதாயினி, கலியாண தீர்த்தரூபி, உலோபமுத்ரா, சுவாசாஸ்யாமா, கும்பசம்பவ வல்லவை, விண்டுமாயை, கோனிமாதா, தக்கணபதசாவணி என பல பெயர்கள் உள்ளன.

காவேரியில் துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதரை வழிபட்டதன் பலனாக சந்தனு மகாராஜா பீஷ்மரை புத்திரனாக அடைந்தார்;

அர்ச்சுனன், துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதப் பெருமாளை துதித்து சுபத்ராவை மணம் புரிந்தான் என்று புராணம் கூறுகிறது.

முரன் முதலான அசுரர்களை அழித்ததால் மகாவிஷ்ணுவிற்கு
பற்றிய "வீரஹத்தி' தோஷம் போக்க, காவேரியில் ஐப்பசி மாதம் நாக சதுர்த்தியன்று 
துலா ஸ்நானம் செய்து, தோஷம் நீங்கப்பெற்றார் 
என்று துலாக் காவேரி மகாத்மியம் கூறுகிறது

ஐப்பசி முதல் தேதி திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பராய்த்துறையிலும், இரண்டாவது நீராடலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையிலும்,
கடைசி தேதியன்று மயிலாடுதுறை நந்திக் கட்டத்திலும் முழுக்குப் போட வேண்டும் என்பது ஐதீகம்.

தலைக்காவேரி, ராமபுரம், ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, திருவானைக்காவல், சப்தஸ்தானம், திருவையாறு, புஷ்பாரண்யம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, மயிலாடுதுறை, கும்பகோணம், திருவிடைமருதூர் முதலிய காவேரி நீர்த்துறைகள் துலா மாதத்தில் நீராட சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.

துலாக் காவேரி ஸ்நானம் செய்பவர்கள், காவேரி நதிக்குப் பூஜை செய்து வழிபடுவதுடன், அருகில் அரசமரம் இருந்தால் அதற்கு நீர் வார்த்து, அதை வலம்வந்து வணங்குவது புண்ணிய பலன் தரும்.

காவேரிக் கரையில் கோமாதா பூஜை செய்தால் மேன்மேலும் புனிதம் கிட்டும்.

துலா காவேரி ஸ்நானம் செய்யும்முன் தகுந்த புரோஹிதர்களை கொண்டு ஸ்நான ஸங்கல்பம் செய்துக்கொள்வது சிறந்தது. 

முடியாதவர்கள் கீழ்கண்ட ஸ்லோகத்தை கூறி துலா ஸ்நானம் செய்வது உசிதம்.

*கங்கேச யமுனே* *சைவ*
*கோதாவரி சரஸ்வதீ*
*நர்மதே சிந்து காவேரீ*
*ஜலேஸ்மின் சன்னிதிம் குரு*"

Thursday, October 16, 2025

Pants - joke

✈️
The plane going from Vadodara to Dubai had just taken off when suddenly the pilot shouted loudly from the cockpit…

"Oh my God!"

A terrible silence prevailed in the plane.

The passengers were scared and started looking at each other after remembering a recent incident.

Everyone's face turned pale.

😳😱

After a while the pilot apologized to everyone –

🙏

"Passengers, please forgive me. Actually, hot coffee fell on my pants. By mistake the mic was left on and you all heard my scream. If you don't believe me, you can come and see my pants…"

Then an uncle said –

"Come here and see our pants!" 😆🤣

Tuesday, October 14, 2025

9 pearls from Mahabharata

Understand the Essence of the Mahabharata, Which Contains Five Lakh Verses, in Just Nine Lines:

Whether you are a Hindu or from any other religion,
Whether you are a woman or a man,
Whether you are poor or rich,
Whether you are in your country or abroad,in short,
If you are a human being, read & understand the valuable "9 Pearls" from the Mahabharata below:

1. If you do not control your children's unreasonable demands & desires in time, you will end up helpless in life... *"Kauravas"*
2. No matter how strong you are, if you support unrighteousness, your strength, weapons, skills, & blessings will all become useless... *"Karna"*
3. Do not make your children so ambitious that they misuse their knowledge & cause total destruction... *"Ashwatthama"*
4. Never give such promises that you have to surrender to the unrighteous... *"Bhishma Pitamah"*
5. The misuse of wealth, power, authority, & the support of wrongdoers ultimately leads to total destruction... *"Duryodhana"*
6. Never hand over the reins of power to a blind person, meaning someone who is blind by selfishness, wealth, pride, knowledge, attachment, or lust, as it will lead to destruction... *"Dhritarashtra"*
7. If wisdom accompanies knowledge, you will surely be victorious... *"Arjuna"*
8. Deceit will not lead you to success in all matters at all times... *"Shakuni"*
9. If you uphold ethics, righteousness, & duty successfully, no power in the world can harm you... *"Yudhishthira"*

       *Jai Shree Ram*

Simplest way to attain liberation

Monday, October 13, 2025

Eight & seven at srirangam

எட்டும்.. ஏழும்..

அரங்கத்தில்
எட்டெழுத்து மந்திரத்தானின்
ஏழான அதிசயங்கள்..

♦️♦️

ஏழு உலகங்களை 
உள்ளடக்கியதன் பொருளாய்
ஏழு பிரகாரங்கள்
நம் அரங்கனுக்கு..

♦️♦️

பெரிய கோவில்..
பெரிய பெருமாள்..
பெரிய பிராட்டியார்..
பெரிய கருடன்..
பெரிய அவசரம்..
பெரிய திருமதில்..
பெரிய கோபுரம்..
இப்படி ஏழு பெரியவை
நம் அரங்கனின் சிறப்பு..

♦️♦️

ஸ்ரீதேவி..
பூதேவி..
துலுக்க நாச்சியார்..
சேரகுலவல்லி நாச்சியார்..
கமலவல்லி நாச்சியார்..
கோதை நாச்சியார்.. 
ரெங்கநாச்சியார்.. என
ஏழு தேவியர்கள்..
நம் அரங்கனுக்கு உண்டு!

♦️♦️

விருப்பன் திருநாள்..
வசந்த உத்சவம்..
விஜயதசமி..
வேடுபரி..
பூபதி திருநாள்..
பாரிவேட்டை.. 
ஆதி பிரம்மோத்சவம்.. என
வருடத்திற்கு ஏழுமுறைகள்
தங்கக் குதிரை வாகனத்தில்
நம்பெருமாளின் புறப்பாடு!

♦️♦️

சித்திரை.. வைகாசி..
ஆடி.. புரட்டாசி.. தை..
மாசி.. பங்குனி என
வருடத்திற்கு ஏழு முறைகள்
கோயிலை விட்டு வெளிவருவார்
நம் நம்பெருமாள்..

♦️♦️

சித்திரை.. வைகாசி..
ஆவணி.. ஐப்பசி.. தை..
மாசி.. பங்குனி என
வருடத்திற்கு ஏழுமுறைகள்
ஏழாம் திருநாளன்று
நெல்லளவு கண்டருளுவார்
நம் நம்பெருமாள்..

♦️♦️

நவராத்திரி உற்சவத்தில்
ஏழாம் திருநாளன்று
ஸ்ரீரெங்க நாச்சியாரின்
திருவடி சேவை..

♦️♦️

தமிழ் மாதத்தின்
ஏழாவது மாதமான
ஐப்பசி மாதத்தில்
முப்பது நாட்களும்
தங்கக் குடத்தில் புனித நீர்
யானை மீது வைத்து
நம் அரங்கனுக்குக்
கொண்டு வரப்படும்..

♦️♦️

இராமபிரானால்
பூஜிக்கப்பட்டவன்
நம் அரங்கன்..
இராம அவதாரம்
பெருமானின்
ஏழாவது அவதாரம்..

♦️♦️

இராப்பத்து உற்சவத்தின்
ஏழாம் திருநாளன்று
நம்பெருமாளின்
திருகைத்தலச் சேவை..

♦️♦️

கோடை உத்சவம்..
வசந்த உத்சவம்..
ஜேஷ்டாபிஷேகம்..
திருப்பாவாடை..
நவராத்திரி..
ஊஞ்சல் உத்சவம்..
அத்யயநோத்சவம்..
பங்குனி உத்திரம்.. என
அரஙகனின் நாயகிக்கு
சிறப்பான ஏழு உற்சவங்கள்..

♦️♦️

பன்னிரெண்டு ஆழ்வார்களும்
ஏழு சன்னதிகளில்..

♦️♦️

இராப்பத்து
ஏழாம் திருநாளில்
நம்மாழ்வார்
பராங்குச நாயகியாக சேவை..

♦️♦️

பெரிய பெருமாள்
திருமுக மண்டலம்
உள்ள இடமான தென் திசையில்
ஏழு கோபுரங்கள் உள்ளன..

நாழிகேட்டான் கோபுரம்..
ஆர்யபட்டாள் கோபுரம்..
கார்த்திகை கோபுரம்..
ரெங்கா ரெங்கா கோபுரம்..
தெற்கு கட்டை கோபுரம்..
தெற்கு கட்டை கோபுரம்-2..
இராஜகோபுரம்..

♦️♦️

ஏழு சேவைகள்
வருடத்திற்கு
ஒரு முறை மட்டுமே..

பூச்சாண்டி சேவை..
கற்பூர படியேற்ற சேவை..
மோகினி அலங்காரம்..
ரத்னங்கி சேவை..
வெள்ளி கருடன், குதிரை வாகனம்
உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும்
ராமநவமி சேர்த்தி சேவை
தாயார் திருவடி சேவை..
ஜாலி சாலி அலங்காரம்..

♦️♦️

ஏழு பிரகாரங்கள்..
ஏழு திருமதில்கள்..

♦️♦️

ஏழு ஆச்சார்யர்களுக்கு
தனி சன்னதி
அரங்கத்தில் உண்டு!!
இராமானுஜர்..
பிள்ளை லோகாச்சாரியார்..
திருக்கச்சி நம்பி..
கூரத்தாழ்வான்..
வேதாந்த தேசிகர்..
நாதமுனி..
பெரியவாச்சான் பிள்ளை..

♦️♦️

ஏழு முறை
சின்னப் பெருமாளுக்கு
தீர்த்தவாரி இங்கு உண்டு..

♦️♦️

மற்ற கோவில்களில்
காண முடியாதவை!
தச மூர்த்தி..
நெய் கிணறு..
மூன்று தாயார்கள்..
இருபத்தொன்று கோபுரங்கள்..
நெற்களஞ்சியம்..
தன்வந்தரி..
நான்கு திசைகளிலும்
இராமனுக்குச் சன்னதிகள்..

♦️♦️

இத்தனைப் பெருமைகள்
நம் அரங்கனுக்கு..
நம் திருவரங்கத்திற்கு..

♦️♦️

Woman & gold - HH. Bharati teertha Mahaswamigal

*ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்*
                           உலகத்திலே மனிதனுக்கு இரண்டு விஷயங்களில் "மோஹம்" உண்டாகிறது.  அவை "பெண்" மற்றும் "பொன்" என்பவையே.  இந்த இரண்டிலும் மோஹமடைந்தவன் தவறுகளைச் செய்ய ஆரம்பிக்கின்றான்.  எவனுக்கு இந்த இரண்டிலும் மோஹம் இல்லையோ அவனே  "மஹாத்மா"  எனப்படுகிறான். 
இராவணன் சீதையைத் தவறான பார்வையில் பார்த்தான்;  அழிந்து விட்டான்.  இதனால் என்ன தெரிகிறது என்றால், உலகத்தில் எந்தப் பெண்ணையும் தவறான நோக்கத்தில் பார்க்கக் கூடாது என்பதுதான்.  நம்முடைய பாரதப் பண்பாட்டிலேகூட,  "உலகிலுள்ள அனைத்துப் பெண்களும் தாயாருக்குச் சமானம் என்றுதான் கருதப்பட வேண்டும்"  என்பதைத்தானே கூறியிருக்கிறார்கள்!  ஒருவன் எப்படிப்பட்ட தீயவனாயினும் சரி,  தன் தாயாரின் விஷயத்தில் எவ்விதக் கெட்ட எண்ணத்தோடும் இருக்க மாட்டான்.  எல்லாப் பெண்களையும் தாயாராக பாவித்தால் மனதிலே எவ்வித விகாரமும் ஏற்படாது.  தேவீமாஹாத்மியத்திலே தேவதைகள் அந்த பரதேவதையைத் துதிக்கும்போது "ஸகல ஸ்த்ரீகளும் உன் ஸ்வரூபமே"  என்று கூறுகிறார்கள்.  இதைப் பின்பற்றும் வண்ணமாகத்தான் நம்முடைய முன்னோர்களும் நமக்கு வழிமுறைகளை உபதேசித்திருக்கிறார்கள்.  இதற்கு மாறாக நாம் நடந்தோமானால் அது மிகப் பெரும் தவறாகிவிடும். 
பிறருடைய சொத்தை நாம் சிறிதும் விரும்பக் கூடாது.  தெருவில் எவ்வளவோ கல்லும் மண்ணும் நிறைந்து கிடக்கின்றபோதிலும் எவருடைய மனதேனும் அவற்றை நாடுகின்றதா?  இதே பாவனையைத்தான் நாம் பிறருடைய சொத்து விஷயத்திலும் வைத்துக் கொள்ள வேண்டும்.  இந்த பாவனை எவனுக்கு இல்லையோ,  எவன் பிறர் சொத்தை அபகரிக்க நினைக்கிறானோ அவனுக்கு துரியோதனனுடைய கதையே ஓர் எச்சரிக்கை!  துரியோதனன் தனது சிற்றப்பாவின் பிள்ளைகளுக்கு முறைப்படிச் சேர வேண்டிய சொத்துக்களைக் கொடுக்காமல் தானே அனைத்தையும் ஆண்டு அனுபவிக்கப் பேராசைப்பட்டான்;  விளைவை அனுபவித்தான். பணக்காரனாக இருந்தால்தான் சந்தோஷம் என்பதில்லை.  எப்படிப்பட்ட நிலையிலும் சுகமாக இருக்கலாம்.  இந்த தத்துவத்தை மறந்தோமானால் அதர்மங்களும் அநியாயங்களும் அதிகரிக்கும்.  மாறாக, "பொன்" னில் இருக்கும் மோஹத்தை நாம் நீக்கி விட்டோமானால் திருப்தியும் சந்தோஷமுமான ஜீவிதம் நமக்கு உண்டாகும்.

Senior citizens memory

*EDGAR'S PARTY* (kind attention Senior Citizens)
================
Edgar, a 96-year-old man, says to his son: 
- Baby... (the child is 62).
- Yes, Dad! Tell me.
- I want to have a get-together with my friends and I'd like you to help me organize it.
- Sure, Dad. Don't worry, I'll help.
- Help me with what?
- The party, Dad!!!
- Ohhh yes!!! I'd already forgotten!

That afternoon, the son calls his father into the kitchen and shows him a sheet of paper stuck to the refrigerator, instructing him.

1st - Serve coffee.
2nd - Serve sandwiches.
3rd - Serve soft drinks and beverages.
4th - Serve the cake.

- Excellent. Now I won't have any more problems.

- Thank you, my son!

That afternoon, the friends arrived. None of them were under 80.

Edgar, a good host, shows them the dining room and goes to the kitchen.

And reads:

1st - Serve coffee.
And he brings coffee to his friends.

After a while of talking, Edgar, nervous, goes to the kitchen and reads again:

1st - Serve coffee.
And he pours more coffee for them...

It went on like this, four times.

Finally, the friends leave.

One of them whispers to the other as they leave the building:
"Tito, did you notice? What a terrible host Edgar is... He didn't even give us coffee!!!"

Tito replies:
"Edgar? What are you talking about?"

That night, Edgar's son returns to his father's house and is surprised to see that the sandwiches, drinks, and cake are untouched. He asks his father:

"Dad. What happened?"

* Edgar replies:
"My son, you won't believe it!" The sons of bitches didn't come...

Moral of the story:
- *LET'S MEET NOW, WHILE WE STILL REMEMBER AND RECOGNIZE EACH OTHER...*

SEND THIS TO YOUR FRIENDS BEFORE YOU FORGET WHO THEY ARE!!!😁

*HAPPY ACCUMULATED YOUTH DAY*

A friend just sent it to me, but I don't remember who. However pls share it with Senior & Would-be Senior citizens!!
🤭🤣🤣🤣

Thursday, September 25, 2025

Computer related words in sanskrit

*संगणक-विषयक-शब्दावली*

(०१) ID. - परिचयपत्रम्
(०२) Data – टंकितांश:
(०३) Edit – सम्पादनम्
(०४) Keyboard – कुञ्चिपटलम्

(०५) Timeline – समयरेखा 
(०६) Login – प्रवेश:
(०७) Share - वितरणम्, प्रसारणम्
(०८) Laptop – अंकसंगणकम्

(०९) Search - अन्वेषणम्
(१०) Default - पूर्वनिविष्ठम्
(११) Input – निवेश:
(१२) Output - फलितम् 

(१३) Block – अवरोध:
(१४) Display – प्रदर्शनम् / विन्यास:
(१५) Wallpaper - भित्तिचित्रम्
(१६) Theme – विषयवस्तु:

(१७) User – उपभोक्ता
(१८) Smart phone - कुशलदूरवाणी
(१९) Tag - चिह्नम्
(२०) Setup – प्रतिष्ठितम्

(२१) Install - प्रस्थापना / प्रतिस्थापनम्
(२२) Privacy - गोपनीयता 
(२३) Manual – हस्तक्रिया 
(२४) Accessibility - अभिगम्यता
(२५) Error – त्रुटि:  
(२६) Pass word – गूढशब्द:
(२७) Code no. - कूटसंख्या
(२८) Pen drive - स्मृतिशलाका

Sunday, September 21, 2025

Onion, dried ginger, asafoetida - tamil cheyyul

"வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன! இங்கார் சுமந்திருப்பார் 
இச்சரக்கை மங்காத சீரகத்தை தந்தீரேல் 
தேடேன் பெருங்காயம் ஏரகத்து செட்டியாரே" 

எவ்வளவு சரக்குடன் ஒரு அருமையான பாடல் பலசரக்கை வைத்து வாழ்க்கை தத்துவத்தை சொல்லிவிட்டார்

வெங்காயம் ---- (வெண்+காயம்) வெண்மையான உடல்

சுக்கானால் ----- சுக்காக சுருங்கி போனால்
(இஞ்சி காய்ந்தால் சுக்கு)

வெந்தயம் ------ வெம்மையான நெருப்பிலே வேகக்கூடிய உடலால்

ஆவதென்ன - ஆவது ஒன்றுமில்லை

இங்கார் - - - - - - (இங்கு + ஆர்) இப்பூலகில் யார் 

சுமந்திருப்பார் இச்சரக்கை --- அவ்வுடலை வைத்துக்கொண்டிருப்பார்

மங்காத ---- குறைவில்லாத

சீரகம் --- வைகுந்தம்
(சீரகம் - சீர்+அகம் (ஸ்ரீ அகம்) - - - அனைவருக்கும் தாயான மஹாலஷ்மி தாயாரது சீர்மிகு பெரு வீடு) 

தந்தீரேல் ---- நீ கொடுத்துவிட்டால்

ஏரகத்து - - - (ஏர் +அகம்)
உயர்ந்த உலகமான வைகுந்தத்தில் தரிசனம் தரும்

செட்டியாரே! -- அனைத்து (சரக்குகளுக்கும்) செல்வங்களுக்கும் உரியவரான பெருமாளே! 

தேடேன் பெருங்காயம்--- இன்னொரு உடலை நான் தேடமாட்டேன்.
🟨. 🟨 🔥. 🟥
ஓம் நமோ நாாயணாய நமஹா!!!

Saturday, September 20, 2025

End of Sri Rama avatar

*அறியாதது..... அறிந்து கொள்வோம்*🙏🙏🙏🙏

ஸ்ரீ ராமரால் காலதேவன் கேட்டுக் கொண்டதன் படி அவ்வளவு சுலபமாக பூவுலகை விட்டு செல்ல முடியவில்லை. ராஜ்யத்தை தன் பிள்ளைகளுக்கும் மற்ற சகோதரர்களின் வாரிசுகளுக்கும் பிரித்து கொடுத்தாகிவிட்டது. பரதனும் சத்ருக்கன னும் ராமருடன் புறப்பட தயாரானார்கள்.

ஆனாலும் ஸ்ரீ ராமரால் அவர் விருப்பப்படி தன் வாழ்வை துறக்க முடியவில்லை.

சாட்சாத் அந்த அனுமன் தான் முக்கிய காரணம். அனுமன் இரவும் பகலும் ராமருடைய அருகாமையிலேயே இருந்து அவர் பணிகளை செய்கிறான்; அவரை விட்டு ஒருபோதும் செல்ல மாட்டான்.

பகவான் ஸ்ரீ ராமர் இறுதியாக அனுமனுக் கு நிரந்தர பிரிவின் அவசியத்தை விளக்க எண்ணினார்.

ஒரு நாள் ராமர் அனுமன் பேசிக் கொண்டு இருந்தார். அனுமன் அறியாதவாறு தன் விரலில் சூட்டியிருந்த மோதிரத்தை ஒரு பள்ளத்தில் விழ செய்தார் ராமர். அந்த மோதிரம் பள்ளத்தின் உள்ளே ஓடியது.

உடனே இராமன் அனுமனை நோக்கி. அனுமனே! அந்த மோதிரம் பள்ளத்தில் விழுந்து விட்டது. அந்த மோதிரத்தை எடுத்து வா என்று கூறினார்.

அனுமன் தன் உடலை மிகச்சிறிய பூச்சி வடிவாக்கிக் கொண்டு மோதிரம் விழுந்த பள்ளத்தில் நுழைந்தார்.

ஆனாலும் மோதிரமோ நழுவிக்கொண்டு பாதாளம் நோக்கி சென்று கொண்டிருந் தது. அனுமனும் விடாமல் மோதிரத்தை பின்தொடர்ந்தார்.

இறுதியில் அந்த மோதிரம் பாதாள லோக த்தின் வாயிலை அடைந்தது. பாதாள லோ கத்தில் கதவு திறந்துகொள்ள மோதிரம் உள்ளே நழுவி விட்டது. பாதாள லோகத்தி ல் கதவும் மூடிக்கொண்டது.

மோதிரத்தை பின்தொடர்ந்த அனுமன் பாதாள லோகத்தில் வாசலில் நின்றான். அப்போது அங்கே பாதாள லோகத்தின் காவலரான காலதேவன் அனுமன் முன் வந்து என்ன தேடுகிறாய்? எனக் கேட்டான்.

அனுமனும் பகவான் ஸ்ரீராமரின் மோதிரம் உள்ளே சென்று விட்டது அதை எடுத்துச் செல்ல வந்தேன் என்றான்.

அப்படியா என்று புன்னகைத்தவாறு கேட்ட காலதேவன் பாதாள அறையின் கதவை திறந்து விட்டான். உள்ளே சென்று உன் மோதிரத்தை எடுத்துச்செல் என்று அனும னிடம் கூறினான்.

அனுமனும் பாதாள அறைக்குள் நுழைந் தான் ஆனால் அவன் தேடி வந்த மோதிர த்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆம் அந்த அறையில் ஆயிரக்கணக்கான மோதிரங்கள் குவிந்து இருந்தன. அனை த்து மோதிரமும் ஒன்று போல் இருக்க அனுமன் குழம்பினான்.

காலதேவன் கூறினான். அனுமனே இவை அனைத்தும் காலச் சுழற்சியின் அடையாளங்கள். யுகங்கள் மீண்டும் மீண்டும் பிறக்கும்.

அப்போது பிரம்மா விஷ்ணு லக்ஷ்மி முதலான தெய்வங்கள் மீண்டும் மீண்டும் வரிசையாக அவதாரம் எடுப்பார்கள்.

 அவர்கள் தாங்கள் எடுத்த பிறவியின் செயலை நிறைவேற்றுவார்கள் பின் மறைவார்கள். அவர்களை நாம் தடுக்க வோ அவர்களுடன் செல்லவோ முடியாது.

அனுமனே, ராமர் தன் மூல உரு எடுக்கும் நேரம் வந்துவிட்டது. அதை அணிந்து கொள்ள வேண்டும் என்று ராமர் தன் மோ திரத்தை தவற விட்டார். காலசுழற்சியின் விளக்கத்தை அறிந்து நீ உன் இருப்பிடம் செல்வாயாக என்று காலதேவன் அறிவுறுத்தினான்.

பிறப்பு இறப்பின் மகத்துவம் அறிந்த அனுமனும் மனம் தெளிந்த நிலையில் மீண்டும் ராமரை அடைந்தான்.

இப்போது பகவான் ஸ்ரீ ராமர் அனுமனிடம் விடை பெற எண்ணினார். ஆனாலும் தன் மூத்த மகன் போல் விளங்கிய அனுமனை எளிதில் உதற முடியவில்லை.

ஸ்ரீராமன் அனுமனை அழைத்தார். அனும னை உனக்கு ஒரு உரிமை தருகிறேன். உனக்கு விருப்பமானால் நான் இப்பூமியி லிருந்து செல்லும்போது நீ என்னுடன் வரலாம் என்று கண்ணீர் மல்க கூறி அனுமனை கட்டித் தழுவிக் கொண்டார்.

அனுமன் உடல் சிலிர்த்தான். உள்ளம் நெகிழ்ந்தான், சற்று ஒரு கணம் யோசித்தான்.

பிரபு தாங்கள் என்னை உங்களுடன் அழைத்துச் செல்ல அனுமதி கொடுத்த மைக்கு நன்றி. ஆனால் ஒரு விளக்கம் மட்டும் கூறுங்கள்.

ஸ்ரீவைகுண்டத்தில் நீங்கள் ராமனாக - என் பிரபுவாக இருப்பீர்களா ? இல்லை அவதார புருஷன் விஷ்ணுவாக இருப்பீர் களா ? என அனுமன் கேட்டான்.

ஒரு நிமிடம் திகைத்தார் ராமர்.

என்ன சந்தேகம் என் மகனே! வைகுண்ட த்தில் நாம் பகவான் விஷ்ணுவாகவும், சீதை லட்சுமி தேவியாகவும், லட்சுமணன் ஆதிசேஷனாகவும், பரதன் சத்ருக்கனன், சங்கு சக்கரம் ஆகவும் அவதாரத்தில் இருப்போம் என்றார் பகவான் ராமர்.

 அனுமனோ தயக்கமின்றி பிரபு....

எனக்கு ஸ்ரீராமன் போதும் உங்களை ராமனாகவும் அன்னையை சீதாபிராட்டியா கவும் , மற்றவர்களை இப்புவியில் எடுத்த அவதாரங்களாவே வணங்க விரும்புகிறேன்.

நான் பூமியில் இருந்து உங்கள் நாமத்தை சொல்லிக் கொண்டே இருப்பேன் உங்கள் நாமத்தை பிறர் சொல்வதை கேட்டபடியே இருப்பேன். எனக்கு அந்த புண்ணிய நிலையை என்றென்றும் நீங்கள் அருளி னால் போதும் என்றான் அனுமன்.🙏🙏🙏🙏

Thursday, September 18, 2025

Holy feet of Periyavaa

குருவாரம் குருவைப்பற்றியது

ஸ்ரீ மஹா பெரியவா திருவடி சரணம் !

ஒருமுறை ஶ்ரீ மஹா பெரியவாளின் 
தகப்பனார் ஶ்ரீ சுப்ரமணிய சாஸ்திரிகள் சுவாமிநாதனின் சிநேகிதன் கிருஷ்ண ஸ்வாமியின் அப்பா வெங்கட்ராமனைத் தேடிப் போனார். 

அவர் ஒரு சிறந்த ஜோதிடர்.மேலும் சுப்ரமண்ய ஐயருக்கு நெருங்கிய நண்பர்."வெங்கட்ராமா! சுவாமிநாதன் ஜாதகத்தைக் கொஞ்சம் பாரு. இவனுக்கு ஜாதகம் எப்படி இருக்கு?" என்று காட்டினார்.

அதைப் பார்த்ததும் ஜோசியருக்குப் பேச்சே வரவில்லை. சுவாமி நாதன் சாட்சாத் ஈஸ்வரன் என்று தெரிந்தது. ஆனால், ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கும் நண்பனுக்கு ஏதாவது சொல்ல வேண்டும்.

அதனால், "சுப்ரமண்யா! நீ உன் பிள்ளையைப் பற்றிக் கவலையே படாதே. நம்மைப் போன்றவர்கள் வீட்டில் பிறக்கும் குழந்தையாகத் தெரியவில்லை. 

இவன் ஜாதகத்தில் பெரிய ராஜாக்களுக்கு உண்டான யோகமெல்லாம் இருக்கு. சக்ரவர்த்தியாக உலகமே கொண்டாட வாழப் போகிறான்!" என்று பேசினார்.

வெறும் ராஜாவாகவா மாறினார்! உலகை உய்விக்க வந்த யதிராஜராக அல்லவா ஒளி வீசினார்! 

அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், ரேகைகளையும் பார்க்க
ஆவல்கொண்டஜோசியர்,

அங்கிருந்த சுவாமிநாதனிடம் ,"போய் கால் அலம்பிண்டு வா" என்று கட்டளையிட்டார் அலம்பிக் கொண்டு வந்தவனை,

நாற்காலி ஒன்றில் அமர்த்தி அழுக்கு ஒட்டிக் கொண்டிருந்த காலில் தண்ணீர் விட்டுத் தன் கையாலேயே அலம்பினார்.... துடைத்தார்.
 சற்று தூக்கிப் பார்த்தார்.

அப்படியே கெட்டியாய் பிடித்துக் கொண்டு அழுதார். காலை விடவேயில்லை.

"விடுங்கோ மாமா!" என்ற சிறுவனின் குரலோ, "என்ன இது! 

குழந்தை காலை பிடிச்சுண்டு...விடு" என்ற சுப்ரமணிய சாஸ்திரியின் குரலோ ஜோசியர் காதில் விழவேயில்லை.

"அது என்ன விடக்கூடிய காலா!

பின்னாலே இதனடியில் விழ மக்கள் க்யூவிலே நிற்கப்போகிறார்களே!" என்று நினைத்தார் போலும்.

காலில் உள்ள சங்கு சக்கர ரேகைகள், மகர ரேகை, தனுர் ரேகை, பத்ம ரேகை எத்தனை உண்டோ, அத்தனையும் ஒரு அவதார புருஷன் அவர் என்று கட்டியம் கூறிக் கொண்டு பளிச்சென்று அவர் கண்ணுக்குப் புலப்பட்டன.

முதன் முதலில் பெரியவாளுக்குப் பாத பூஜை பண்ணும் பாக்கியம் 

இந்த வெங்கட்ராமய்யருக்குத்தான் கிடைத்தது.நல்ல கைராசிதான்!

விஷ்ணுவுக்கும் கிடைக்காத பாதத்தை இவர் பார்த்துவிட்டார் என்றால், இவர் பாக்கியமே பாக்கியம்.

நண்பரின் பதிவு 
மே.மாம்பலம் சாந்தனம் அவர்களின் பதிவு.
ஸ்ரீ மஹா பெரியவா திருவடி சரணம் !

Wednesday, September 17, 2025

Mahalakshmi temple with six fingers in foot

ஆனந்த வாழ்வருளும் ஆறுவிரல் பாத தரிசனம்

செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள அரசர்கோயில் எனும் இடத்தில் ஆலயம் கொண்டுள்ள சுந்தர மகாலட்சுமியின் வலது பாதத்தில் ஆறு விரல்கள் இருப்பது தனி அதிசயமாகக் கொண்டாடப்படுகிறது.

ஒருமுறை ஜனக மகாராஜாவும் பெருமாளும் இத்தலத்தில் சேர்ந்திருக்க நேரிட்டதால் இத்தலம் அரசர்கோயில் என்றானதாம். நான்முகனுக்கு ஒரு முறை சாபம் ஏற்பட்டது. கலங்கிய நான்முகன் சாபவிமோசனத்தை நாடி முனிவர்களிடம் ஆலோசனை கேட்டபோது ''மண்ணாளும் வேந்தனும், விண்ணாளும் விஷ்ணுவும் சேர்ந்து எந்த இடத்தில் காட்சி தருகிறார்களோ அங்குதான் உனக்கு சாப விமோசனம். உடனே பூலோகத்திற்குச் செல்வாயாக!'' என்றனர் முனிவர்கள்.

அதன்படி மண்ணுலகம் வந்தார் நான்முகன். தாம் இவ்வூரில் எழுந்தருள வேண்டும், நான்முகனுக்கு சாப விமோசனம் அருள வேண்டும் என்று நாரணன் ஏற்கெனவே தீர்மானித்திருந்தார். அதனாலேயே இந்த  
அரசர் கோயிலில் எழுந்தருளினார். அதேசமயம் புனித யாத்திரையாக பூவுலகம் முழுதும் சென்று கொண்டிருந்த ஜனக மகாராஜாவும் இத்தலத்தின் வழியாக வந்து கொண்டிருந்தார்.

நாராணன் எழுந்தருளிய விஷயத்தைக் கேள்விப்பட்டு அவர் பெருமாளைத் தரிசிக்க சென்றார். இந்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவவிட விரும்பாத நான்முகன் கையில் கமண்டலத்துடன் இப்பகுதிக்கு வந்து தன் தவத்தைத் தொடங்கி மாதவனின் ஆசியைப் பெற்றார். ஜனக மன்னனையும், பெருமாளையும் ஒரு சேர தரிசித்து சாபவிமோசனம் பெற்றார். அந்த மகிழ்ச்சியில் அங்கேயே சிறிது காலம் தங்கி பெருமாளை ஆராதித்தார். தினமும் வந்து பெருமாளை தரிசிப்பதை ஜனக மகாராஜாவும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒருநாள் ஜனகர் வராததால் பெருமாள், ஜனகர் தங்கியிருந்த இடத்திற்கே புறப்பட்டு வந்தார். அந்த வேளையில் ஜனகர் அங்கு இல்லை. தானே ஜனகர் அமரும் சிம்மாசனத்தில் அமர்ந்து ஜனகர் தனக்குச் செய்வது போன்றே பூஜைகளை செய்துகொண்டார். பிறகு, 'ஜனகர் செய்ய வேண்டிய பூஜைகள் இன்று நடந்து விட்டன' என காவலாளிகளிடம் சொல்லி பெருமாள் புறப்பட்டார்.

ஒரு ராஜாங்க விஷயமாக வெளியே சென்றிருந்த ஜனகர் திரும்பி வந்து தன் சிம்மாசனத்திற்கு அருகே பெருமாளுக்கு தான் செய்தது போன்றே பூஜைகள் நடைபெற்றிருந்ததைப் பார்த்து காவலாளிகளிடம் வினவ, நடந்ததை அறிந்து சிலிர்த்தார். தன் நித்யகர்மாவிலிருந்து தான் தவறிவிட்டதற்குப் பிராயச்சித்தமாக பெருமாளுக்கு ஆலயம் எழுப்ப விண்ணப்பித்தார். ஆனால் பெருமாளோ தேவலோக விஸ்வகர்மாவினால் மட்டுமே இங்கு ஆலயம் எழுப்ப முடியும் என்று கூற அதன்படி எழுப்பப்பட்ட ஆலயம் இது.

நித்யகர்மா செய்ய ஜனகர் வராததால், பெருமாளே அவர் இருப்பிடம் நோக்கிச் சென்ற விவகாரத்தில் மகாலட்சுமி மனம் வருந்தினாள். பரந்தாமனை நோக்கி பக்தன் வரலாம்; பக்தனை நோக்கி பரந்தாமன் செல்லலாமா? அவன் அவ்வளவு பெரிய பக்தனா? கோபம் கொண்டாள் பிராட்டி. பரமாத்மா, ''இங்கு எழும் ஆலயத்தில் உனக்கே முதல் மரியாதை, கேட்ட வரங்களை கேட்டவாறே அருளும் மகத்தான சக்தியையும் உனக்கு அருள்கிறேன். இத்தலத்தில் உன்னை தரிசித்து உன் அருள் பெற்றவர்கள் சகல சௌபாக்கியங்களுடன் வாழ்வார்கள்'' என்று சொல்லி மகாலட்சுமியின் கோபம் தீர்த்து, அவளை மகிழ்வித்தார்.

அதனால் மகிழ்ந்த மகாலட்சுமி அவருக்கு உணவிட்டு, உபசரித்து, தாமரையில் வசிக்கும் தன் சார்பாக எப்போதும் பெருமாள் தம்முடைய கரத்தில் ஒரு தாமரை மொக்கை வைத்துக்கொண்டு அருள்பாலிக்குமாறு கேட்டுக் கொண்டாள். அதன்படியே பெருமாளும் தன் கரத்தில் தாமரை மொக்கை ஏந்தி கமலவரதராஜப் பெருமானாக கோயில் கொண்டார்.  
  
ஆலய முகப்பை தாண்டி உள்ளே நுழைந்தால் பலிபீடம். அடுத்து கருடாழ்வார் மண்டபம். அதற்கு நேரே பெருமாள். வலது புறம் தாயார் தனிக் கோயில் கொண்டருள்கிறாள். இத்தல சம்பிரதாயப்படி முதலில் தாயாரையே தரிசிக்க வேண்டும். கிழக்குப் பார்த்த சந்நதியில் அருளே வடிவாய் அழகே உருவாய் வீற்றிருக்கிறாள் பிராட்டி. பெயருக்கு ஏற்றாற்போல் சுந்தரியாக மனதைக் கொள்ளை கொள்கிறாள்.

மேலிரு கரங்கள் தாமரை மலர்களை ஏந்தியிருக்க, கீழிரு கரங்கள் அபய&வரத முத்திரைகள் காட்ட பத்மாசனத்தில் பரப்ரம்ம ஸ்வரூபிணியாக அமர்ந்திருக்கிறாள். கற்பூர ஆரத்தியின் போது தாயாரின் வலது பாதத்தை தரிசிக்க வைக்கிறார் பட்டர். இடது கரத்துக்குக் கீழே பத்மாசனமாக மடித்து வைத்த நிலையில் இருக்கிறது வலது பாதம். அதில் சுண்டு விரலை அடுத்து அழகான ஆறாவது விரல். அழகு ததும்பும் அன்னையின் திருவடிகளை மனம் குவிந்து தரிசிக்கலாம். இந்த ஆறுவிரல்கள் உள்ள பாதத்தை தரிசிப்பவர்களு க்கு அதிர்ஷ்டத்தை அள்ளி அள்ளித் தருகிறாள் மகாலட்சுமி என்பது ஐதீகம்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விசேஷ திருமஞ்சனம் மகாலட்சுமிக்கு செய்யப்படுகிறது. அச்சமயம் தேவியை வணங்குவோர்க்கு கல்வி, வியாபாரம், திருமணம் சிறக்கிறது என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.

குறிப்பாக வரலட்சுமி விரதத்தன்று இக்கோயில் விழாக்கோலம் கொள்கிறது. அவள் மண்டபத்தின் முன் ஒரு இசை மண்டபம் உள்ளது. அங்குள்ள ஒவ்வொரு தூணும், நம் விரலால் சுண்ட, ஒவ்வொரு ஸ்வரத்தை எழுப்புகிறது. நான்கு வேதங்களைக் குறிக்கும் விதமாக இங்குள்ள ஒரு சிறு துளையில் குச்சி ஒன்றை உள்ளே செருகினால், அது மறு பக்கம் வெளி வரும் போது நான்கு பாகங்களாகப் பிளந்து வருகிறது.

இந்த மண்டபத்திற்கு வெளியே வலதுபுறம் அட்சய கணபதி, வைணவ சம்பிரதாயப்படி தும்பிக்கை ஆழ்வாராக அருட்கோலம் காட்டுகிறார். அனுமன் ஒரு முறை விநாயகரிடம் இந்த அரசர்கோயில் நிவேதனங்களை தானே செய்ய அட்சய பாத்திரம் கேட்டாராம். அனுமனின் விருப்பத்தை மகாலட்சுமி அறிந்து விநாயகர் மூலம் அனுமனுக்கு அதை அளித்தாளாம். எனவே இந்த விநாயகர் அட்சய கணபதி என்று அழைக்கப்படுகிறார். இந்த ஆலய பிரசாதங்கள் அனுமனின் மேற்பார்வையில் தயாரிக்கப்படுவதாக ஐதீகம்.

சுந்தரமகாலட்சுமியின் சந்நதிக்கு வெளியில் இடப்புறம் தலையில் பலாப்பழம் ஏந்திய பலாப்பழ சித்தர் ஒருவரின் சிற்பம் உள்ளது. இந்த சுந்தரமகாலட்சுமி தேவிக்கு பலாப்பழம் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் அந்த சித்தர் தினமும் அதனை அன்னைக்குப் படைப்பாராம். இன்றும் அபிஷேக சமயங்களில் அன்னையைப் பலாச் சுளைகளால் அபிஷேகம் செய்து பின் பக்தர்களுக்கு பிரசாதமாக தருகிறார்கள்.

தாயாரின் கருவறை கோஷ்டங்களில் யோகநரசிம்ம மூர்த்தி, குபேரன், காளிங்கநர்த்தன கண்ணன், பரமபதநாதர், திரிவிக்ரமர் ஆகிய பெருமாளின் அம்சங்களே தேவிக்கு காவலாக வீற்றருள்புரிகின்றனர். இந்த மூர்த்திகள், திருப்பணி செய்ய பூமியை தோண்டிய போது கிடைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து பெருமாள் தரிசனம். அவர் சந்நதியில் விஷ்வக்சேனர், மணவாள மாமுனிகள், தேசிகர் ஆகியோரும் உறைகின்றனர். பெருமாள் தேவி-பூதேவியோடு கமல வரதராஜராக நின்ற திருக்கோலத்தில் தரிசனமளிக்கிறார். மூலவர் சாளக்ராமத்தால் ஆனவர்.

செங்கல்பட்டு - மதுராந்தகம் பாதையில் படாளம் கூட்டு ரோட்டிலிருந்து இடது பக்கம் செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ளது அரசர்கோயில் சுந்தர மஹாலட்சுமி கோயில். படாளம் கூட்டு ரோடில் இருந்து ஷேர் ஆட்டோ மூலமும் கோயிலுக்குச் செல்லலாம்.

நன்றி வாட்ஸ் அப் கோவிந்தசாமி நாயுடு

Monday, September 15, 2025

19th day after mahabharata war

படித்ததில் பிடித்தது!

பாரதப் போர் முடிந்த 19-ஆம் நாள்!
அந்தக் கால வழக்கப்படி, போரில் வென்ற மஹாரதர்களுக்கும், மன்னர்களுக்கும் மாலை- மரியாதை செய்யும் விழா ஒன்று நடக்கும்.

போரில் பங்கேற்ற தேர்கள் வரிசையாக நிறுத்தப்படும். 

தேரோட்டிகள் கீழே இறங்கி, மண்டியிட்டு நிற்பார்கள்.

மன்னன் அல்லது மஹாரதர்கள் கீழே இறங்கியதும், தேர்ப்பாகன் மன்னனை வணங்கி, மாலையிட்டு, வெற்றி கோஷம் முழங்குவான். 

அதன்பிறகு, போரில் வெற்றி தேடித்தந்த தேர்ப்பாகனுக்கு மன்னன் அல்லது மஹாரதர்கள் பொன்னும் பொருளும் சன்மானமும் தந்து கௌரவிப்பார்கள்.

குருக்ஷேத்திரப் போர் வெற்றிகரமாக முடிந்தபின், வெற்றி கண்ட பாண்டவ சகோதரர்களுக்காக இந்த விழா ஏற்பாடாகி இருந்தது.

தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐவரது ரதங்களும் வரிசையாக நின்றன.

மரியாதை விழாச் சடங்குகள் ஆரம்பமாயின.

தர்மனுடைய தேரின் முறை முடிந்தபின், பீமனது சாரதி அவனை வணங்கி வாழ்த்தினான்.

பரிசாக விலை உயர்ந்த ரத்தினமாலையை பாகனுக்கு அணிவித்து கௌரவித்தான் பீமன். 

மேலும், பூமியும் பொன்னும் பொருளும் வழங்கினான்.

வெற்றி கோஷங்கள் வானைப் பிளந்தன.

அடுத்தது, அர்ஜுனன் ரதம். சாரதியோ பகவான் ஸ்ரீகிருஷ்ணன்.

'யாருக்கும் கிட்டாத மாபெரும் பேறு தனக்குக் கிடைக்கப்போகிறது. 

பகவான் கிருஷ்ணனே தன்னை வணங்கிப் பாராட்டப் போகிறான்' என்று எண்ணி, ஒரு கணம் தன்னை மறந்த நிலையில் இறுமாப்போடு, அந்த அற்புத தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான் அர்ஜுனன்.

 ஆனால், கண்ணன் தேரைவிட்டு இறங்கவில்லை.

அர்ஜுனன் திகைத்தான்.

'பெருமையோ சிறுமையோ பாராது, கடமையை நிறைவேற்ற வேண்டும்' என்று கீதையில் தனக்கு உபதேசித்த கண்ணன், தேர்ப் பாகனுக்குரிய கடமையைச் செய்ய ஏன் தயங்க வேண்டும் என்று நினைத்தான் அர்ஜுனன்.

அப்போது பகவான் கிருஷ்ணன், அர்ஜுனனின் அறியாமையை எண்ணி நகைத்தார்.

"அர்ஜுனா! இந்தத் தேர் மட்டும் இந்தச் சடங்குக்கு விதிவிலக்கு. 

முதலில் நீ இறங்கு!'' என்று கட்டளையிட்டார்.

கண்ணனின் வார்த்தையை மீறி அறியாத அர்ஜுனன், அக்கணமே தேரில் இருந்து கீழே இறங்கினான்.

அதேநேரம், 'தன் சகோதரர்களுக்குக் கிடைத்த கௌரவம் தனக்குக் கிடைக்கவில்லையே' என ஒரு கணம் ஏங்கினான்.

"கர்மயோகம்' என்ற பகுதியாகக் கடமையைப் பற்றி அத்தனை தத்துவங்களைச் சொன்ன கண்ணன், ஒரு தேர்ப்பாகனாக பணியாற்றுவதற்குரிய கடமையைச் செய்ய ஏன் தயங்குகிறான்?

இதனால் மஹாரதனான எனக்கு ஏற்படும் அவமானத்தை ஏன் அவன் எண்ணிப் பார்க்கவில்லை?

நான் கண்ணனை என்னுடைய தேர்ப்பாகனாக ஏற்றுக்கொண்டதால்தானே, எல்லோர் முன்னிலையிலும் எனக்கு இந்தச் சிறுமை ஏற்பட்டுள்ளது?' என்று எண்ணி, மனம் குமுறினான் அர்ஜுனன்.

அர்ஜுனனின் மனோநிலையைத் தன் ஞானத்தால் அறிந்தார் ஸ்ரீகண்ணன்.

அடுத்த விநாடியே தேரிலிருந்து கீழே இறங்கினார்.

அதே விநாடியில், தேர்க் கொடியில் இருந்த ஆஞ்சநேயரும் விலகி மறைந்தார்.

கண்ணன் தேரைவிட்டு இறங்கிய மறுவிநாடியே அர்ஜுனனின் தேர் குபீரென்று தீப்பிடித்து, அக்னி ஜுவாலையுடன் எரிய ஆரம்பித்தது.

எல்லோரும் திகிலோடும் ஆச்சரியத்தோடும் பார்த்தனர்.

யாருக்கும் எதுவும் புரியவில்லை.

''அர்ஜுனா! இந்த பாரத யுத்தத்தில் உன் எதிரிகள் அனைவரின் தாக்குதல்களும் உன் ரதத்தின் மீதுதான் குறிவைத்து நிகழ்த்தப்பட்டன.

அவர்கள் போரில் எய்த அஸ்திரங்கள், ஏவிவிட்ட தீய மந்திரங்கள், அனுப்பிய தீய சக்திகள் அத்தனையையும் தடுத்து நிறுத்தி, யுத்தம் முடியும்வரை இந்தத் தேருக்கு உயிர் கொடுத்துக் காப்பாற்றிக் கொண்டிருந்தேன்.

நான் சாரதியாக அமர்ந்துகொண்டிருந்ததால்தான், இந்தத் தீய சக்திகள் இதுவரை செயலற்றிருந்தன.

படைக்கப்பட்ட பொருள்கள் அனைத்துக்கும் ஆரம்பமும் முடிவும் உண்டு.

இந்தத் தேரின் முடிவு ஏற்படும் தருணம் வந்ததை உணர்ந்தேன்.

நான் முதலில் இறங்கினால் இந்தத் தீய சக்திகள் செயல்படத் தொடங்கிவிடும்.

அந்த விநாடியே தேர் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகும் என்பதையும் அறிந்தேன்.

இப்போது புரிகிறதா, நான் முதலில் இறங்கியிருந்தால், நீ இந்தத் தீயில் சிக்கியிருப்பாய்.

இப்போதும் உன்னைக் காப்பாற்றவே இந்தத் தேரை விதிவிலக்காக்கி, உன்னை முதலில் இறங்கச் சொன்னேன்!

தேர்ப் பாகனாகப் பணிபுரிந்த நான் உன்னை வணங்கி, வாழ்த்தி, நீ தரும் சன்மானத்தைப் பெறத் தயங்குவதாக நீ நினைத்தாய்.

என் எல்லாச் செயல்களுக்கும் ஒரு காரணம்- காரியம் உண்டு என்பதைப் பல சந்தர்ப்பங்களில் நீ அறிய வாய்ப்பளித்து இருக்கிறேன். 

இருந்தாலும், 

உன்னுடைய சுயகௌரவத்தால் உன் சிந்தனை சற்று நேரம் கலங்கி இருந்தது.

அது தவறு.

இதோ... 
உன்னை வணங்க நான் சித்தமாயிருக்கிறேன்'' என்று, 
நீண்ட விளக்கம் தந்தார் ஸ்ரீகண்ணன்.

அவர் கூறிய கடைசி வார்த்தைகள் அர்ஜுனன் காதில் விழவில்லை. காரணம்

அவர் கால்களில் அர்ஜுனன் வேரற்ற மரம் போல விழுந்துகிடந்தான்.

வாழ்க்கை எனும் ரதத்தினில், 
கடவுளை சரணடைந்தால், 
இறுதி வரை துன்பத்தையும் தடைகளையும் களைந்து, பிறவிப்பிணியினை கடந்தேற, 
சாரதி போல் நம்மை நடத்தி செல்வார். 

எனவே அவனை கேள்வியேயில்லாமல் சரணடைவோம்.
 *மனதை கவர்ந்த பதிவு*

👉சாதத்துடன் *பக்தி* இணையும்போது அது *பிரசாதமாகிவிடும்.!*

👉பட்டினியுடன் *பக்தி* சேரும்போது அது *விரதமாகிவிடும்.!*

👉தண்ணீருடன் *பக்தி* சேரும்போது அது *தீர்த்தமாகிவிடும்.!*

👉பயணத்துடன் *பக்தி* சேரும்போது அது *யாத்திரையாகிவிடும்.!*

👉இசையுடன் *பக்தி* சேரும்போது அது *கீர்த்தனையாகிவிடும்.!*

*👉பக்தியில்* வீடு திளைக்கும்போது, அது *கோயிலாகிவிடும்.!*

👉செயல்களுடன் *பக்தி* சேரும்போது, அது *சேவையாகிவிடும்.!*

👉வேலையுடன் *பக்தி* சேரும்போது, அது *கர்மவினையாகிவிடும்.!*

👉பிரம்மச்சரியத்தோடு *பக்தி* சேரும் போது அது *துறவறம்* ஆகின்றது.!

*👉இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*

*🙇ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்.!*

*🙏மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான்..!!* ********ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்********