Wednesday, October 16, 2024

Srimad Ramayana Aranya kanda part 2 in sanskrit

Courtesy: Shri. Pradeep Nath
*श्रीरामायणकथा, अरण्यकाण्डम्!*
(द्वितीयः सर्गः)
महर्षिः शरभङ्गः। 

भयङ्कर-बलशालि-विराधराक्षसस्य वधात् परं  रामः, सीता, लक्ष्मणः च  महर्षेः शरभङ्गस्य आश्रमम् अगच्छन्। महर्षिः शरभङ्गः अत्यन्तं वृद्धः आसीत्। तस्य शरीरं जर्जरम् आसीत्। तं दृष्ट्वा एवं प्रतीयते स्म यत् तस्य मृत्युः निकटे हि अस्ति इति। सीतालक्ष्मणाभ्यां सह रामः महर्षेः चरणस्पर्शम् अकरोत्, स्वपरिचयमपि तस्मै अददात्।

महर्षिः शरभङ्गः तस्य  सत्कारं कुर्वन् अवदत् हे राम! अस्मिन् वने कदाचिद् हि त्वादृशः अतिथिः आगच्छति। स्वशरीरस्य त्यागात् पूर्वम् अहं तव दर्शनं कर्तुम् ऐच्छम् , अतः तव हि प्रतीक्षां कुर्वन् अहम् एतावत् पर्यन्तं मम शरीरं न अत्यजम्। इदानीं तव दर्शनम् अभूत्, अतः इदानीं मम इदं नश्वरं जर्जरशरीरं त्यक्त्वा ब्रह्मलोकं गमिष्यामि। मम शरीरस्य त्यागात् परं त्वम् अस्मिन् वने निवासं कुर्वतः महामुनेः सुतीक्ष्णस्य समीपं गच्छ, सः तव कल्याणं करिष्यति।

एतावद् उक्त्वा महर्षिः विधिवत् अग्निं प्रज्वाल्य तस्मिन् अग्नौ घृतस्य आहुतिं प्रदाय मन्त्रोच्चारं कुर्वन् स्वशरीरम् अग्नये समर्प्य ब्रह्मलोकं प्रति प्रस्थानम् अकरोत्।
महामुनेः शरभङ्गस्य ब्रह्मलोकं प्रति गमनात् परम् आश्रमस्य निकटवर्तिषु कुटीरेषु  निवासं कुर्वाणाः ऋषिमुनयः तत्र आगत्य रामचन्द्रं प्रार्थयन्ते स्म-  हे राघव! भवान् क्षत्रियनरेशः इति कारणतः अस्माकं रक्षणं भवतः कर्तव्यम्। यः अस्माकं रक्षणं करोति सः अस्माकं तपस्यायाः एकचतुर्थांशस्य फलं प्राप्नुयात्। किन्तु दौर्भाग्यं यत् भवादृशधर्मात्मराजनि भवति सत्यपि राक्षसाः अनाथवद् अस्मान् पीडयन्ति, अस्माकं हननमपि कुर्वन्ति। ते राक्षसाः पम्पानदी, मन्दाकिनीनदी, चित्रकूटपर्वतः च इत्येतेषु क्षेत्रेषु भयानकम् उपद्रवं कुर्वन्ति।

तेषाम् उपद्रवकारणात् तपस्विनां कृते न केवलं तपस्या, अपितु जीवनमपि दुष्करम् अभवत्। ते समाधिस्थं तपस्विनं मृत्युमुखे पातयन्ति। अतः हे राम! वयं भवतः शरणम् आगच्छामः। भवान् एतस्मात् असह्यकष्टात् अस्मान् रक्षतु, निर्भयाः भूत्वा च तपः  आचरितुम् अस्मभ्यम् अवसरं ददातु।
*-प्रदीपः!*

Maha Narayana Upanishad - Meaning in tamil part2

2
மஹா நாராயண உபநிஷத்
தைத்திரிய நாராயணவல்லீ
யஸ்மிந்நித ³ꣳ ஸம் ச விஶைதி ஸர்வம் யஸ்மிந் தே ³வா அதி⁴ விஶ்வே நிஷேது :³ । ததே ³வ பூ⁴தம் தது ³ ப⁴வ்யமா இத ³ம் தத³க்ஷரே பரமே வ்யோமந் ॥ 2॥

பொருள்
(இவ்வுலகிலுள்ள) இது எல்லாம் எதனிடம் ஒன்றாகக் கூடி வாழவும், ஒடுங்கவும் செய்கிறதோ, எதனிடம் எல்லா தேவர்களும் தத்தம் அதிகாரங்களுடன் உறைகிறார்களோ, அதுவே சென்றனவும் இனி வருவனவும் ஆகிய அனைத்தும். இது அந்த அழிவில்லாத பரமாகாஶத்தில் (நிலைபெற்றுள்ளது).

விளக்கவுரை
இவ்வுலகிலுள்ள எல்லாம் எதனிடம் ஒன்றாகக் கூடி வாழவும், ஒடுங்கவும் செய்கிறதோ, எதனிடம் எல்லா தேவர்களும் தத்தம் அதிகாரங்களுடன் உறைகிறார்களோ, எது உயர்ந்ததற்கு எல்லாம் உயர்ந்ததோ, பெரியதோ வெளிப்படையாய்த் தோன்றாததோ அதுவே ருதம் (விவகார உண்மை). உலகில் காணும் அழகும், ஒழுங்கும் பகவானுடைய லீலா விபூதி! அந்த பிரம்மமே தன்னுடைய நாபியில் உலகையும் அண்டத்தையும் தாங்குகிறது. அதுவே தீர்க்கதரிசிகளின் பரப்ரம்மம் எனக்கூறுவது.

यस्मिन्निदꣳ सं च वि चैति सर्वं यस्मिन् देवा अधि विश्वेनिषेदुः । तदेव भूतं तदुभव्यमा इदं तदक्षरेपरमेव्योमन् ॥ २॥

yasminnidaɱ saṁ ca vi caiti sarvaṁ yasmin devā adhi
viśve niṣeduḥ . tadeva bhūtaṁ tadu bhavyamā
idaṁ tadakṣare parame vyoman ..2..

Meaning
2. That in which all this universe exists together and into which it dissolves, That in which all the gods remain enjoying their respective powers—That certainly is whatever that has been in the past and whatever indeed is to come in the future. This cause of the universe, Prajāpati, is supported by His own imperishable nature described as absolute ether.
Commentary
In the previous stanza it was stated that Prajāpati or Parameśvara dwells in creatures as Kartā (doer) and Bhoktā (enjoyer).
This stanza asserts that He is not only the Antaryāmin (God dwelling in creatures) but also the support and final cause of all. Parabrahman alone is the one cause of everything else and there is no other cause for His existence.
The word  vyoman in the text means Ākāśa or ether This Ākāśa is a constituent element of the universe. It is the cause of the other four elements—air, fire, water, and earth. Ākāśa itself is produced from Paramātman according to the Upaniṣads, and therefore it cannot be the  self-supporting final cause. Hence parama vyoman here is the Akṣara Brahman, which has no other cause or support.
Hence it is stated here that this Reality alone constitutes the worlds which have been in the past and which are to be in the future. The world which we experience at present receives its existence and self-evidence from It alone.
The various gods and powers functioning in the universe and in man have their glory by delegation from Parabrahman.

How to know rahu kalam, yamakandam without seeing calendar?

*காலண்டரை* *பார்க்காமலே ராகு* *காலம் எம கண்டம்* *அறியும் வழி*!

பொதுவாகவே, வெளியே செல்லும்போதோ, சுபகாரியம் செய்யும் போதோ ராகு காலம், யமகண்டம் பார்ப்பது பலருக்கும் வழக்கம்.

அந்த சமயத்தில் அவசர அவசரமாக காலண்டரைத் தேடி அன்றைய தினத்து ராகு காலம், எமகண்டத்தை பார்ப்பதே பரபரப்பானதாக இருக்கும்.

அப்படி இல்லாமல், ஒவ்வொரு நாளுக்கும் உரிய ராகு காலம், யமகண்டத்தை எளிதாக அறிந்துகொள்ள சுலபமான வழி உண்டு.

அதற்கு, கீழ்க்கண்ட வாக்கியத்தை முதலில் மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும்.

`திருநாள் சந்தடியில் வெயிலில் புறப் பட்டு விளையாடச் செல்வது ஞாயமா?'

இந்த வாக்கியம், ராகுகாலத்தினை அறிவதற்கானது. வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளில் முதல் எழுத்துகளை, கிழமைகளின் முதல் எழுத்தாக கொள்ளுங்கள்.

முதலில் திங்கட்கிழமையில் காலையில் 7.30 மணி முதல் 9 மணி வரை ராகுகாலம் அமையும். அதுமுதல் அடுத்தடுத்துள்ள 1:30மணி நேரத்திற்கு உரிய தினம் எது என்று தெரியுமா?

திங்கள்:7.30-9.00; சனி:9.00-10.30; வெள்ளி: 10.30-12.00; புதன்:12.00-1.30; வியாழன்:1.30-3.00; செவ்வாய்: 3.00-4.30; ஞாயிறு: 4.30-6.00.

மேற்கண்டவாறு மனப்பாடம் செய்து கொண்டால் காலண்டரைப் பார்க்காமலே சட்டென்று ராகு காலம் சொல்லிவிடலாம் இல்லையா?

அடுத்தது, யமகண்டத்திற்கான
வாக்கியம்

விளையாட்டாய் புண்ணியம் செய்தாலும் திருவருளை ஞானமும் சத்தியமும் வெளிப்படுத்தும்.

யமகண்டம் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் 7.30 மணி வரை அமையும். இந்த வாக்கியத்தில் உள்ள முதல் எழுத்து வரிசைப்படி கிழமைகள் அடுத்தடுத்துவர, அடுத்தடுத்த 1.30 மணி நேரம் யமகண்டமாகும்.

வியாழன்: 6.00-7.30; புதன்: 7.30-9.00; செவ்வாய்: 9.00-10.30; திங்கள்: 10.30-12.00; ஞாயிறு: 12.00-1.30; சனி: 1.30- 3.00; வெள்ளி: 3.00-4.30.

என்ன... இனிமேல் ராகுகாலம், யமகண்டம் பார்ப்பது சுலபம்தானே!

Tuesday, October 15, 2024

Srimad Ramayana Aranya kanda part 1 in sanskrit

Courtesy: Shri.Pradeep Nath, Assam

*श्रीरामायणकथा, अरण्यकाण्डम्!*
(प्रथमः सर्गः)
दण्डकारण्ये विराधस्य वधः।
(द्वितीयः खण्डः)
 
विराधस्य वचनानि श्रुत्वा कुपितः रामः तत्क्षणं हि तं तीक्ष्णबाणैः भिनत्ति स्म। रामस्य बाणः विराधस्य शरीरं यदा अच्छिनत् तदा तस्य शरीरात् रक्तं पृथिव्यां पतति स्म।  
एवं प्रकारेण यदा सः व्रणितः अभवत् तदा सः त्रिशूलेन रामलक्ष्मणयोः उपरि आक्रमणम् अकरोत्। रामलक्ष्मणौ अपि तदा तस्य उपरि अग्निबाणानां वर्षणम् अकुरुताम्। किन्तु विराधे मनागपि तस्य प्रभावः न अपतत्, केवलं तस्य त्रिशूलं हि छिन्नम् अभवत्। 

पुनः रामलक्ष्मणौ यदा शस्त्रैः आक्रमणम् अकुरुतां तदा सः राक्षसः सीतां त्यक्त्वा तस्य बाहुभ्यां रामलक्ष्मणौ गृहीत्वा आकाशमार्गेण अगच्छत्। 
रामः तदा लक्ष्मणम् अब्रवीत् भ्रातः! एषः राक्षसः आवां यत्र नयति, आवां तत्र विरोधं विना गच्छावः। आवयोः कृते इदम् उचितं भवेत्। 
विराधः रामलक्ष्मणौ नयति इति दृष्ट्वा सीता विलापं कुर्वती अवदत् हे राक्षसराज! अहं प्रार्थये यद् एतौ द्वावपि भ्रातरौ मुञ्चतु। 
सीतायाः आर्तनादं श्रुत्वा क्रुद्धौ रामलक्ष्मणौ  विराधस्य हस्तद्वयं सम्यग् गृहीत्वा अत्रुटताम्। सः च मूर्छितः भूत्वा भूमौ अपतत्। लक्ष्मणः तदा तं भूम्याः उत्थाप्य पुनः पुनः भूमौ पातयति स्म। राक्षसः विराधः तदा व्रणितः सन् चित्कारं करोति स्म।

तदा हि रामः अवदत् लक्ष्मण! वरदानस्य कारणात् अयं दुष्टः न म्रियेत। अतः एतदेव उचितं भवेत् यद् आवां भूमौ गर्तं खनित्वा तं तस्मिन् गर्ते पातयेव।
लक्ष्मणः गर्तं खनितुम् आरभत, रामः च विराधस्य ग्रीवायां पादं स्थापयित्वा अतिष्ठत्। 
तदा हि विराधः अवदत् प्रभो! वास्तवेन अहं तुम्बुरू नामकः गन्धर्वः अस्मि। कुबेरः मह्यं शापम् अददात् यद् अहं राक्षसः भवेयम् इति। शापकारणात् अहं राक्षसः अभवम्। अद्य भवतः कृपया तस्मात् शापात् मम मुक्तिः भवति।

रामलक्ष्मणौ तं तस्मिन् गर्ते पातयित्वा तस्योपरि प्रस्तरखण्डान् अपातयताम्। समग्रे वने तदा तस्य आर्तनादः गुञ्जति स्म।
*-प्रदीपः!*

Going to barber house for shaving ...? - Chanakya neeti

*नापितस्य गृहे क्षौरं पाषाणे गन्धलेपनम्।*
*आत्मरूपं जले पश्यन् शक्रस्यापि श्रियं हरेत्। ॥*
चाणक्य नीति अध्याय-१७(१२)
  *अर्थात्*-नाई के घर पर जाकर बाल बनाना, पत्थर पर चन्दन आदि सुगन्धित द्रव्य लगाना और अपने रूप, प्रतिबिम्ब को जल में देखना ये कार्य इन्द्र की शोभा को भी नष्ट कर देते हैं।

Maha Narayana Upanishad - Meaning in tamil part1

மஹா நாராயண உபநிஷத்
தைத்திரிய நாராயணவல்லீ
🧧🙏🧧🙏🧧🙏🧧🙏🧧🙏🧧🙏
தைத்திரீய ஆரண்யகத்தின் கடைசியில் அமைந்துள்ளது மஹா நாராயண உபநிஷதம்.  தொடக்கத்தில் பரமாத்மாவை பற்றியும், பின்னர் பரமாத்மாவை அடையும் வழியான ஸந்நியாஸமும் கூறப்பட்டுள்ளன.

மேலும் யஜ்ஞங்களில் கூறப்படும் மந்திரங்கள் பலவும், உபாசனை மந்திரங்களும் உள்ளதால் இதற்கு 'யாஞ்ஜிகீ உபநிஷதம்' என்று பெயர். பல இடங்களில் இருந்து தொகுக்கப்பட்டதாகத்தான் இது காணப்படுகிறது.  தொடர்ச்சியாக விஷயம் கூறப்படவில்லை.  ஆனால் ஆரம்பத்தில் உள்ள பரமாத்ம பிரகரணமும், முடிவில் உள்ள ஜ்ஞான சாதனமாகிய ஸந்யாஸ பிரகரணமும் இதை உபநிஷதங்களுடன் ஒன்று படுத்துகிறது.

உபநிஷதங்கள் வேதங்களின் ஶிரஸ் - தலையாயது என்று கூறப்படுகிறது. வேதங்களே எல்லா தர்மங்களின் மூலமாகும்.  உபநிஷதங்கள் அளவற்ற பலத்தை அனைவருக்கும் அளிக்கும் சுரங்கங்களாக இருக்கின்றன.  உலகம் முழுவதிற்கும்  பலம் அளிக்கக் கூடிய சக்தி அவற்றில் இருக்கின்றன.

* ஹரி: ஓம்*

ஶாந்தி பாட:

ௐ ஸ॒ஹ நா॑வவது । ஸ॒ஹ நௌ॑ பு⁴நக்து । ஸ॒ஹ வீ॒ர்யம்॑ கரவாவஹை ।
தே॒ஜ॒ஸ்விநா॒வதீ॑⁴தமஸ்து॒ மா வி॑த்³விஷா॒வஹை᳚ ।
ௐ ஶாந்தி॒: ஶாந்தி॒: ஶாந்தி॑: ॥

பொருள்:
ஆச்சாரியர், சீடர் ஆகிய நம் இருவரையும் பகவான் காப்பாராக !  அறிவின் ஆற்றலை நாம் இருவரும் அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாராக ! நாம் இருவரும் ஈடுபாடு மிக்க ஆற்றலுடன் உழைப்போமாக ! கற்றது நமக்குப் பயனுள்ளதாக விளங்கட்டும் ! எதற்காகவும் நாம் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக !

ௐம் ஶாந்தி॒: ஶாந்தி॒: ஶாந்தி॑:

ॐ स॒ह ना॑ववतु । स॒ह नौ॑ भुनक्तु । स॒ह वी॒र्यं॑ करवावहै । ते॒ज॒स्विना॒वधी॑त मस्तु॒ मा वि॑द्विषा॒वहै᳚ । ॐ शान्तिः॒ शान्तिः॒ शान्तिः॑ ॥

sa ha nav avatu saha nau bhunaktu saha viryam karavavahai tejasvi nav adhitam astu; ma vidvisavahai; aum, santih, santih, santih.

Meaning:

May He protect us both; may He nourish us both together; may we both become energetic by working together; may our study illumine (our minds); may there be no hatred between us. Aum, peace, peace, peace.

Seven

*ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு....*
________________________________
*ரிஷிகள் ஏழு...*

அகத்தியர், 
காசியபர், 
அத்திரி, 
பரத்வாஜர், 
வியாசர், 
கவுதமர், 
வசிஷ்டர்.
________________________________
*கன்னியர்கள் ஏழு...*

பிராம்மி, 
மகேஸ்வரி, 
கௌமாரி, 
வைஷ்ணவி, 
வராகி, 
இந்திராணி, 
சாமுண்டி 
________________________________
*சஞ்சீவிகள் ஏழு...*

அனுமன், 
விபீஷணர், 
மகாபலி சக்கரவர்த்தி,
 மார்க்கண்டேயர்,
 வியாசர், 
பரசுராமர்,
 அசுவத்தாமர்.
________________________________
*முக்கிய தலங்கள் ஏழு....*

வாரணாசி,
அயோத்தி,
காஞ்சிபுரம்,
மதுரா,
துவாரகை,
உஜ்ஜைன்,
ஹரித்வார்.
________________________________
*நதிகள் ஏழு...*

கங்கை, 
யமுனை, 
கோதாவரி, 
சரஸ்வதி, 
நர்மதா, 
சிந்து, 
காவிரி.
________________________________
*வானவில் நிறங்கள் ஏழு...*

ஊதா, 
கருநீலம், 
நீலம், 
பச்சை, 
மஞ்சள், 
ஆரஞ்சு, 
சிவப்பு.  
________________________________
*நாட்கள் ஏழு...*

திங்கள், 
செவ்வாய், 
புதன், 
வியாழன், 
வெள்ளி, 
சனி, 
ஞாயிறு 
________________________________
*கிரகங்கள் ஏழு...*

சூரியன், 
சந்திரன், 
செவ்வாய், 
புதன், 
குரு, 
சுக்கிரன், 
சனி.
________________________________
*மலைகள் ஏழு...*

இமயம்/கயிலை, 
மந்த்ரம், 
விந்தியம், 
நிடதம், 
ஹேமகூடம், 
நீலம், 
கந்தமாதனம்.
________________________________
*கடல்கள் ஏழு..*

உவர் நீர், 
தேன்/மது, 
நன்னீர், 
பால், 
தயிர், 
நெய், 
கரும்புச் சாறு.
________________________________
*மழையின் வகைகள் ஏழு...*

சம்வர்த்தம் - மணி (ரத்தினக் கற்கள்)
ஆவர்த்தம் - நீர் மழை
புஷ்கலாவர்த்தம் - பொன் (தங்க) மழை
சங்காரித்தம் - பூ மழை (பூ மாரி)
துரோணம் - மண் மழை
காளமுகி - கல் மழை
நீலவருணம் – தீ மழை (எரிமலை, சுனாமி)
________________________________
*பெண்களின் பருவங்கள் ஏழு...*

பேதை,
பெதும்பை,
மங்கை,
மடந்தை,
அரிவை,
தெரிவை,
பேரிளம் பெண்.
________________________________
*ஆண்களின் பருவங்கள் ஏழு......*

பாலன்,
மீளி,
மறவோன்,
திறவோன்,
விடலை
காளை,
முதுமகன்.
________________________________
*ஜென்மங்கள் ஏழு...*

தேவர்,
மனிதர்,
விலங்கு,
பறவை,
ஊர்வன,
நீர்வாழ்வன,
தாவரம்.
________________________________
*தலைமுறைகள் ஏழு....*

நாம் - 
முதல் தலைமுறை 

தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை 

பாட்டன் + பாட்டி -மூன்றாம் தலைமுறை 

பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை 

ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை 

சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை 

பரன் + பரை - ஏழாம் தலைமுறை.
________________________________
*கடை வள்ளல்கள் ஏழு...*

பேகன், 
பாரி, 
காரி, 
ஆய்,
அதிகன், 
நள்ளி, 
ஓரி.
________________________________
*சக்கரங்கள் ஏழு...*

மூலாதாரம், 
ஸ்வாதிஷ்டானம்,  
மணிபூரகம்,  
அனாஹதம், 
விஷுத்தி, 
ஆக்னா, 
சகஸ்ராரம். 
________________________________
*கொடிய பாவங்கள் ஏழு....*

உழைப்பு இல்லாத செல்வம்,
மனசாட்சி இலாத மகிழ்ச்சி,
மனிதம் இல்லாத விஞ்ஞானம்,
பண்பு இல்லாத படிப்பறிவு,
கொள்கை இல்லாத அரசியல்,
நேர்மை இல்லாத வணிகம்,
சுயநலம் இல்லாத ஆன்மிகம்.
________________________________
*கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு...*

ஆணவம், 
சினம், 
பொறாமை, 
காமம்,
பெருந்துனி, 
சோம்பல்,
பேராசை.
________________________________
*திருமணத்தின் போது அக்னியை சுற்றும்  அடிகள் ஏழு ...*  

முதல் அடி.. பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.

இரண்டாம் அடி.. ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

மூன்றாம் அடி.. நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.

நான்காவது அடி... சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.

ஐந்தாவது அடி....
லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்.

ஆறாவது அடி... 
நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்.

ஏழாவது அடி... தர்மங்கள் நிலைக்க வேண்டும்.
சனாதன தர்மத்துடன்.

🙏🙏🙏

Ask anything , you get an answer in Thirukkural

This is really brilliant - give it a try. Ask any question you have around how to manage your life, advice, suggestions - answers from Thirukkural along with the relevant Thirukural shows up. Then click on the individual Thirukural for explanation. Excellent use of AI. Ask me anything with Thirukural- 

Monday, October 14, 2024

Uttara kosha mangai temple

பச்சை மேனி பரமன் – நங்கநல்லூர் J K SIVAN
உத்ரகோச மங்கை

அவர் ஒரு தனிப்பிறவி. எவரோடும் இணை கூற முடியாத ஞானி. மணி வாசகனென்று மஹேஸ்வரனாலேயே பெயர் பெற்றவர். அவரைப் படிக்க உட்காரும் முன் ஒரு பெரிய டவல் பக்கத்தில் இருக்கவேண்டும். கண்ணீரை துடைத்து துடைத்து டவல் நீர் சொட்டும். அதனால் தான் அதற்கு திருவாசகத்துக்கு உருகாதார் வேறு ஒரு வாசகத்துக்கும் உருகார் என்று சொல்கிறார்கள். மணிவாசகர் தமது வாழ்வை யே சிவனுக்கு அர்ப்பணித்த மஹா பக்திமான்.

மணிவாசகரைப் பற்றி எழுத நினைத்தால் முதலில் என் மனக்கண் முன் தோன்றுவது அவர் தரிசித்த மரகத நடராஜர் உள்ள உத்ர கோசமங்கை க்ஷேத்ரம் தான். பாண்டி நாட்டில் ராமநாதபுரம் அருகே இருக்கும் புனித க்ஷேத்ரம் உத்ரகோச மங்கை. மணி வாசகர் நடந்தே சென்றிருக்கிறார். மதுரையிலிருந்து 85 கி.மீ . ராமநாதபுரத்திலிருந்து 18 கி.மீ. ராமநாதபுரம்-ராமேஸ்வரம் சாலையில் உள்ளது.அந்த க்ஷேத்ரத்தை தரிசிக்கும் பாக்யம் எனக்கு சில வருஷங்களுக்கு முன்பு கிட்டியது. ஆருத்ரா அன்று ஒருநாள் அந்த க்ஷேத்ரத்தில் மரகத மேனியனாக மகேஸ்வரன் காட்சி தருவான். மற்ற நாட்களில் சந்தனப் போர்வை.

ஆயிரமாயிரம் ஆண்டுகள் வயதான இந்த ஆலயத்தில் சிவனுக்கு 7 நிலை ராஜகோபுரம். அம்பாளுக்கு ஐந்து நிலை கோபுரம். சிவன் பெயர் மங்களநாதர், மங்களேசுவரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர். அம்பாளுக்கு மங்களேஸ்வரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி ஆகிய பெயர்கள்.

பாண்டிய ராஜாக்கள், அச்சுதப்ப நாயக்கர் (1529–1542), மற்றும் சில ராமநாதபுரம் ராஜாக்கள் நிர்மாணித்த ஆலயம். இங்கே சேது மாதவ தீர்த்தம் லக்ஷ்மண தீர்த்தம் என இரு புஷ்கர ணிகள் பிரசித்தம். எல்லாவற்றையும் விட புகழ் சேர்ப்பது இங்குள்ள அற்புத மரகத நடராஜர் சிலை தான்.

ரொம்ப புராதனமான இந்த உத்ர கோசமங்கை மங்கள நாதர் கோயில் உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவாலயம். முதன் முதலில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடிய ஸ்தலம். 20 ஏக்கர் பரப்பு. இந்த க்ஷேத்திரத்தின் வேறு பெயர்கள்: சிவபுரம், தக்ஷிண கைலாயம்', சதுர்வேதி மங்கலம், இலந்திகைப் பள்ளி, பத்ரிகா ஷேத்ரம்,பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சதரம், ஆதி சிதம்பரம் . நவகிரஹங்
கள் தோன்றுவதற்கு முன்பே சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு க்ரஹங்கள் என்பது ஒரு விசேஷம். மங்களாம்பிகைக்கு சிவன் ஆனந்த தாண்டவத்தை ஆடிக் காட்டிய க்ஷேத்ரம்.

"உத்ரம்" = உபதேசம். "கோசம்"= இரகசியம் அதாவது பிரணவ மந்திர ரஹஸ்யத்தை மங்கையாகிய மங்களாம்பிகைக்கு உபதேசித்ததால் "உத்ர கோச மங்கை".

ஸ்தாணுவாகி நின்ற சிவனின் அடி முடி தேடி விஷ்ணுவும் பிரம்மாவும் அலைந்த போது ஈசனின் முடியில் இருந்து விழுந்து பல நூற்றாண்டு காலமாக தாழம்பூ ஒன்று கீழே வந்து கொண்டிருந்தது. வழியில் அந்த தாழம்பூவைக் கண்ட பிரம்மன், "என்னோடு சிவனிடம் வந்து நான் அவன் முடியை நான் கண்டேன் என்று நீ சாக்ஷி சொல்" என்றதும் சரி என்று தாழம்பூவும் அப்படியே பொய் சொல்லி சாபம் பெற்றது. அதனால் சிவ பூஜையில் இடம் பெறுவதில்லை. சாபம் நீங்க தாழம்பூ உத்தர கோச மங்கையில் வெகுகாலம் தவம் செய்து, சாபம் நீங்கியது. உத்தர கோச மங்கையில் சிவனுக்கு தாழம்பூ சாத்துகிற வழக்கம் உள்ளது.

ராவணன் மனைவி மண்டோதரி உலகத்திலேயே சிறந்த சிவ பக்தனையே எனக்கு கணவனாக அருளவேண்டும் என உத்ரகோச மங்கையில் மங்கள நாதரை வேண்டி தவமிருந்தாள். அவள் பக்தியை மெச்சி சிவன் மண்டோதரி முன்பு ஒரு குழந்தை உருவில் தோன்ற, அப்பொழுது அங்கு வந்த ராவணன், ஆசையாக குழந்தை உருவில் இருந்த சிவபெருமானைத் தொட முயன்றான். சிவபெருமான் அக்னி பிழம்பாக மாறி விட, அங்கிருந்த அனைத்து பொருட்களும் எரிய தொடங்கின. சிவன் தேவர்களுக்கு அளித்த வேத நூல்களும் எரிய, அவற்றைக் காக்க முயன்ற தேவர்கள் முயன்றும் தோல்வி யடைந்து தீயில் மாண்டனர். பின்னர் மாணிக்க வாசகர் மூலம் வேத நூல்கள் மீண்டது . அக்னியில் விழுந்த தேவர்களும் மீண்டனர். சிவபக்தன் ராவணனும் மண்டோதரியை இங்கே தான் மணந்தான் என்று சுபமான முடிவு.சிவனருளால் மாணிக்கவாசகர் இங்கே லிங்க வடிவத்தில் உள்ளார்.

இந்த ஆலயத்தில் இரட்டை பைரவர், சுப்ரமணியர் ஸ்படிக லிங்கம் ஆகியவைகளும் விசேஷம். இங்குள்ள மரகத நடராஜா ஐந்தரை ஆடி 5 1/2 அடி உயரம். உலகத்திலேயே பெரிய மரகதக் கல் சிலை. மார்கழி மாதம் திருவாதிரை ஆருத்ரா தரிசனம் விசேஷம். அன்று மட்டுமே பூஜை அபிஷேகம். மரகத நடராஜனை தரிசிக்கலாம். மற்ற நாட்களில் விக்ரஹம் முழுவதும் சந்தனக் காப்பு மட்டுமே. ஆதி நடராஜா என்று பெயர். சிரித்த முகம்.

ஒரு விஷயம் ரொம்ப கெட்டிக் காரத்தனமாக மரகத நடராஜா சந்தனக் காப்பு மூலம் வெள்ளைக்கார, கொள்ளைக் காரர்களிடமிருந்து தப்பி இருக்கிறார். மரகதக் கல் என்று தெரிந்திருந்தால் நாம் நடராஜரை இழந்திருப்போம். இது தான் சாமர்த்திய சந்தன டிமிக்கி. சந்தன மரத்தையே திருடி விற்பவர்கள் மரகதச் சிலையை விட்டு வைப்பார்களா? இப்போது ஹிந்து சமய அறங்காவல் துறை அதிகாரிகள் வசம் 'ஜாக்கிரதையாக' ! இருக்கிறார். பக்தர்கள் அடிக்கடி கவனித்துக் கொள்ளவேண்டும். மாணிக்க
வாசகர் உத்தரகோச மங்கையில் 9 பாடல்கள் பாடி இருக்கிறார்.

'தாதாடும் பூஞ்சோலைத் த்த்தாய் நமைஆளும்மாதாடு பாகத்தன் வாழ் பதி என் – கோதாட்டி
பத்தர் எலம் பார்மேல் சிவபுரம்போற் கொண்டாடும்உத்திர கோச மங்கை ஊர்.. . .' என்கிறார்.

நமது பழைய கோவில்களில் மட்டுமே யாளி உருவம் பார்க்கலாம். விசித்ர பெரிய உருவம். இங்கே இரண்டு யாளிகள் வாயில் உருளையாக கல் உருண்டை உருளுவதை அற்புதமாக சிற்பி செதுக்கி இருப்பதை காணலாம். கையை விட்டு உருளைக் கல்லை தொடலாம், சுழலும். உருளும். வெளியே எடுக்க முடியாது. பெரிய தெப்பகுளம். வற்றாத உப்பு கரிக்கும் தண்ணீர். அதில் நிறைய கடல் மீன்கள் வகை. திருவிளை யாடலில் சிவன் மீனவனாக வலைவீசி சுறா மீன் பிடித்த ஸ்தலம் உத்ர கோசமங்கை. ஒரு காலத்தில் கடல் இந்த ஆலய வாசல் வரை இருந்து பின்னர் பின் வாங்கிவிட்டது.

உத்ர கோசமங்கைக் கோவிலிலும் சுரங்கம் உண்டாம். சிதம்பரம், ராமேஸ்வரம், சௌதி அராபியாவில் இருக்கும் மெக்காவில் மெக்கேஸ்வரன் கோவில் வரை செல்கிறதாம். இப்போது முஸ்லிம்கள் தொழும் மெக்கா ஒரு காலத்தில் சிவாலயமாக இருந்ததாக நிறைய படங்கள் விஷயங்கள் கேட்டும் பார்த்தும் படித்துமிருக்கிறேன். சிவனை யார் எப்படி தொழுதால் என்ன? தாஜ்மஹால் தேஜோமய ஈஸ்வரன் கோவில் என்கிற மாதிரி சென்ஸிட்டிவ் பழங்கதை. மனித முயற்சி இல்லாமல் தானாகவே உள்ள சுயம்பு சுரங்கப் பாதை போல் இருக்கிறது. ரிஷிகள் முனிவர்கள் மஹான்கள் மட்டுமே உபயோகித்த பாதை.
இங்கே முருகனுக்கு யானை வாகனம். இந்திரன் கொடுத்த ஐராவதம் என்று ஆதி சிதம்பர மஹாத்மியம் சொல்கிறது. .

இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் உள்ள க்ஷேத்ரம் உத்தரகோசமங்கை. மாணிக்கவாசகர் சிவனுக்கு அன்னாபிஷேகம் இங்கே செய்வதாக ஐதீகம். மணிவாசகர் லிங்கம் , மரகதலிங்கம் அபிஷேகம் செய்யும் இடம், உமாமஹேஸ்வர் சந்நிதி மூன்றும் ஒரே நேர் கோட்டில் இங்கே இருப்பதை கவனிக்கவேண்டும்.

அதெல்லாம் சரி, எப்படி மரகத லிங்க நடராஜா உருவானார் என்று தெரியவேண்டாமா?

ராமேஸ்வரம் போகும்போது வழியில் மண்டபம் என்ற ஊர். அங்கே மரைக்காயர்கள் என்ற வகுப்பை சேர்ந்தவர்கள், மீனவர்கள். ஒரு மரைக்காயர் தினமும் மங்களேஸ்வரனை வணங்கி மீன் பிடிக்க கடலில் போவார். ஒரு சமயம் அவர் படகு சூறாவளியில் சிக்கி ஒரு பாசி படிந்த பச்சை பாறை மேல் மோதியது. மோதிய பாறை மூன்று துண்டாக, ரெண்டு சின்னப்பாறை, ஒரு பெரிய பாறையாக படகில் விழுந்தது. மழையும் பேய் காற்றும் நின்றது. மங்களேஸ்வரனை வேண்டிக் கொண்டிருந்த மரைக்காயர் மெதுவாக படகைச் செலுத்திக் கொண்டு வழி தெரியாமல் தடுமாறி, ஒருவழியாக ஒருநாள் மண்டபம் வந்து சேர்ந்தார். அந்த 3 பாறைகளையும் வீட்டுக்கு வாசலில் படியாக போட்டுவிட்டார். சூரிய வெளிச்சத்தில் பாசி நீங்கி ஒருநாள் காலை பாறை பளபளவென்று மின்னியது. அந்த பாறையை ராஜாவிடம் கொடுத்து வறுமையைப் போக்கிக்கொள்ளலாம் என்று ஒரு சின்ன பாறையோடு ராஜாவின் அரண்மனைக்கு போனார். அரண்மனையில் நவரத்தினங்கள் பரிசோதிக்கும் ஒரு நிபுணர் இந்த பச்சைக் கல்லை சோதித்துப் பார்த்து "ராஜா, இது உலகிலேயே எங்கும் கிடைக்காத அபூர்வமான, விலைமதிப்பற்ற மரகதக்கல் " என்கிறார். ராஜா பொற்காசுகள் கொடுத்து மரைக்காயரை அனுப்பினான். வண்டி அனுப்பி மரைக்காயர் வீட்டு வாசலில்கிடந்த பெரிய பச்சைக் கல்லை எடுத்து வந்து அதில் தான் வணங்கும் நடராஜர் விக்ரஹம் சிலை வடிக்க ஆசைப்பட்டான். இதற்கான சரியான சிற்பி லங்கை ராஜா கயவாகுவிடம் இருப்பதை அறிந்து ரத்ன சபாபதி என்ற சிவபக்த சிற்பியை வரவழைத்தான். அவர் மரகதக்கல்லை பார்த்துவிட்டு மயங்கி விழுந்தார். "ராஜா என்னால் நடராஜர் சிலை இதில் செதுக்கமுடியாது" என்று சென்றுவிட்டார். கண்ணீருடன் ராஜா மங்களேஸ்வரரை வேண்டி கதறினான்.

"ராஜா, நீ கவலைப்படாதே, நான் மரகத நடராஜா செய்து விடுகிறேன்" என்று ஒரு குரல் கேட்டது. சித்தர் ஷண்முக வடிவேலர் அங்கே நின்றுகொண்டிருந்தார். எங்கிருந்து வந்தார், எப்படி வந்தார்? அந்த சித்தர் தான் நாம் காணும் 5 1/2 அடி உயர மரகத நடராஜனை சிலையாக்கியவர். ஒண்ணரை அடி உயர பீடத்தில் ராஜ கோலத்தில் நடராஜா. பால் அபிஷேகம் செய்யும்போது நடராஜாவின் கைகளில் நரம்பு ஓடுவது தெரிகிறது.

முதலில் நடராஜா. அப்புறம் கோவில் தயாராகியது. பல லக்ஷம் கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத நடராஜா என்றும் பெர்மனண்டாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டியது நமது கடமை.

Kakikeyi's boon - Kamba ramayana

ராமாயணம் --:அயோத்யா காண்டம்
02/05 கைகேயியின் இரண்டு வரங்களும்
தசரதன் புலம்பலும் (01)

** அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும் *
துரக்க, நல்லருள் துறந்தனள்  தூமொழி மடமான் *
இரக்கம் இன்மை அன்றோ இன்று இவ்வுலகங்கள் இராமன் *
பரக்கும் தொல் புகழ் அமுதினைப் பருகுகின்றதுவே ** (மந்தரை)

மான் போன்று பிறரை எளிதில் கவரும் தன்மையளான கைகேயி தூய மனத்தோடு மன்னரோடும் ராமனோடும் பேசிப் பழகி வந்தவள். கூனியின் வஞ்சகச் சொற்களால் மனம் மாறி னாள்.  ராமனை தன் மகனாகவே நினைத்தவளுக்கு அவனிட மிருந்த கருணையும் இரக்கமும் மாறியது.‌ அரக்கர்கள் செய்த பாவமும், நல்லோர்கள் செய்த புண்ணியமும் கைகேயியின் மனத்தைக கலக்கி இரக்கமற்றவளாக ஆக்கியதாம். அது மட்டுமன்றி உலகினர் அனைவரும் ராமனின் அழியாப் புகழாம் அமிழ்தனைப் பருகிப் பருகி மகிழச் செய்கிறதாம்.

** எனை உவந்தனை,  இனிய என் மகனுக்கும்,  அனையான்*
புனையும் நீள்முடி பெறும்படி புகலுதி என்றான் *
மாழை ஒண் கணி உரைசெயக் கேட்ட மந்தரை என் *
தோழி வல்லள்,  என் துணை வல்லள் என்று அடி தொழுதாள் *
தாழும் என் இனிஃ? என் உரை தலை நிற்பின், உலகம் *
ஏழும் ஏழும் உன் ஒரு பெருமகற்கு ஆக்குவேன் என்றாள் ** 

கைகேயி "கூனி! உனக்கு என்னிடமும், என் மகனாகிய பரதனிடமும் அளவற்ற அன்பு.  என் மகன் பரதன் சிமாஹா சனத்தில் அமர்ந்து ராஜ்யத்தை ஆட்சி செய்வதற்கு தக்க உபாயம் என்ன என்பதை  புகலுவாய்.  கூனி மகிழ்வுற்று ராணியின் கால்களில் விழுந்து வணங்கி கூறுவாள் --
கைகேயி!  இனி உனக்கு தாழ்ச்சியே கிடையாது.  என் சொற்படி டி நடந்தால் ஏழு உலகங்களையும் பரதன் ஆள்வதற்கு உரிய வாய்ப்பினைப் பெறுவான்."
கூனி  ---" முன்பு தேவர்களுக்கும் அஸுரர்களு க்கும் பெரும்போர் நிகழ்ந்தது.‌‌. இந்திரனுக்கு உதவ தசரதர் பல அரசர்களுடன் உன்னையும் அழைத்துக் கொண்டு வைஜயந்தம் என்னும் நகருக்குச் சென்றார்.‌‌ சம்பரன் என்று ப்ரசித்தி பெற்ற திமித்வஜன் இந்திரனோடு பெரும் போர் செய்து வந்தான். நீ ரதத்தைச்செலுத்த, தசரதர் அஸுரர்களோடு கடுமையாக பெரும் போர் நிகழ்த்தினார்.‌ அஸுர்களால் தசரதருக்கு பலத்த அடி ஏற்பட்டது.‌‌ அப்பொழுது நீ ரதத்தை வேறிடத்திற்குச் செலுத்தி 
தசரதரை மேலும் அடிபட்டால் காப்பாற்றினாய்.‌ மகிந்த அரசர்
உனக்கு இரண்டு வரங்களை அளித்தார்.  அவ்வரங்களை நீ
வேண்டும் போது பெற்றுக் கொள்வதாக சொல்ல அவரும்
ஸம்மதித்தார்.  இவ்வரங்களை இப்பொழுது மன்னரிடம் கேள். ஒன்று பரதனுக்கு முடிசூட்ட வேண்டும்.‌‌ மற்றொன்று பதி னான்கு ஆண்டுகள் ராமன் நாட்டைத் துறந்து கானகம் செல்ல
 வேண்டும். ‌பதிநான்கு ஆண்டுகளுக்கள் நாட்டு மக்களுக்கு ராமனிடம் இருந்த ஆழ்ந்த அன்புமாறி பரதனின் ஆட்சி உறுதி பெற்று விடும்."  என்றாள்.  

கூனி கைகேயியிடம் யோசனை கூறுவாள் -- நீ அரசனோடு கோபித்துக் கொண்டால், ஒரு தனி அறையில் படுத்துக் கொண்டு, பிடிவாதம் பிடிப்பாயே, அந்த அறையில் அலங்கரித்துக் கொள்ளாது, அழுக்காடை அணிந்து வெறும் தரையில் படுத்துக் கொள்.  நீ எது சொன்னாலும் உடனே செய்யக் காத்திருப்பார்.‌‌ நான் சொன்ன இரண்டு வரங்களைக்
கேள். பரதன் நாட்டுக்கு நிலையான அரசனாகி விடுவான்.
முதலில் நாளை பட்டாபிஷேகத்தை நிறுத்தும்படி செய்.‌"

கைகேயி அரண்மனை ரஹஸ்யத்தை எப்படியோ அறிந்து நமக்கு முன்பே சொல்லி விட்டாளே என ஆச்சரியப்பட்டாள்.
புகழ்ந்தாள்.  கைகேயி தன் வசப்பட்டதை அறிந்து ஸந்தோஷத் தோடு கூனி " கல்யாணி! வெள்ளம் வந்து போன பிறகு ஆற்று க்கு வரும் அணை கட்டுவது இல்லை எனவே விரைந்து அலங்கோலமான வேஷத்துடன் மன்னவனை எதிர்பார்த்திரு"
 என்றாள்.

** உரைத்த கூனியை உவந்தனள் உயிருறத் தழுவி *
நிறைத்த மாமணியாரமும் நிதியமும் நீட்டி *
இரைத்த வேலை சூழ் உலகம் என் ஒரு மகற்கு ஈந்தாய் *
தரைக்கு நாயகன் தாய் இனி நீ எனத் தனியா **

** நன்று சொல்லினை தம்பியை நளிர் முடி சூட்டல் *
துன்று கானத்தில் இராமனைத் துரத்தல் இவ்விரண்டும் *
இன்று எய்தாவெனில் அரசன் முன் என்னுயிர் துறந்து *
பொன்றி நீங்குதல் புரிவெல் யான் போதி நீ என்றாள் ** (மந்தரை)

கைகேயி கூனியை இறுகத் தழுவினாள்.  விலை உயர்ந்த மணிகளும் ரத்தினங்களும் இழைத்த ஆரத்தைச் சூட்டினாள்.
"எனது ஒரே மகனாக பரதனுக்கு கடல் சூழ்ந்த உலகத்தை அளித்தாய் . அவனுக்குப்  பெற்றெடுத்த தாய் நீயே.‌‌ நீ சொன்னபடியே பரதனுக்கு ராஜ கிரீடத்தைச் சூட்டும் படியும்,  ராமனே காட்டிற்குப் பொருத்தும் படியும் வரத்தின் மூலம் கேட்பேன். அவர்  இணங்காது, இவ்விரண்டும் கைகூடாவிடில் அவர் முன்னிலையில் என் உயிரை விட்டு இறந்து ஒழிந்து போவேன். நீ போ "என்று கூறி கோப அறைக்குச் சென்றாள்.

விலைமதிக்க வொண்ணாத முத்துமாலைகளை கழற்றி எறிந்தாள்.  திருமங்கல்யம் போன்ற மங்களாபரணங்களையும் கூட அறுத்தெரிந்தாள் விரிப்பு இல்லாத வெறும் தரையில் படுத்துப் புரண்டாள். "பூ உதிர்ந்ததோர் கொம்பு எனப் புவிமிசைப் புரண்டாள்".  என்றார் கம்பன். வாலமீகியோ இருளில் விண்மீன்கள் மேகங்களால் மறைய பொலிவிழந்த வானம் போன்று கோபத்தினால் இயற்கையான அழகு அழியத் தரையில் கிடந்தாள் என்றார்.

**நவ்வி வீழ்ந்து என நாடகம் துயின்று என்ன *
கவ்வை கூர்தர சானகியாம், கடிகமழ் கமலத்து *
அவ்வை நீங்குமென்று அயோத்தி வந்தடைந்த அம்மடந்தை *
தவ்வையாம், எனக் கிடந்தனள் கைகயன் தனையை ** (சூழ்நிலை)

கோபக்ரஹத்தில் முகத்தில் கோபத்தைத் தேக்கி அழுத கண்ணும் சிந்திய மூக்குமான கைகேயி மூதேவி போன்று இருந்தாளாம்.‌ மணங்கமழும் தாமரை மலரில் வசிக்கும் மஹாலக்ஷ்மியிகிய சீதை ராமனுடன் காட்டுக்கு போகப் போகிறாள் என்பதை அறிந்த மூதேவி அயோத்தி வந்து கைகேயி அறையில் அவளோடு ஒன்றிக் கிடக்கிறாளோ என்னும் படி இருந்தாளாம். ஆனால் கோபக்ரஹமோ அவள் கழற்றி எறிந்த நல்லாபரணங்களால் இரவில்  நட்சத்திரங் களால் ஒளிமிளிரும் வானம் போன்று இருந்ததாம்.

** அடைந்து, அவண் நோக்கி,  அரந்தை என்கொலா வந்து *
தொடர்ந்து? எனத் துயர் கொண்டு சோரும் நெஞ்சன் *
மடந்தையை மானை எடுக்கும் ஆனையே போல் *
தடம் கைகள் கொண்டு தழீஇ எடுக்கலுற்றான் **
** நின்று தொடர்ந்த நெடுங்கை தம்மை நீக்கி *
மின் துவள்கின்றது போல மண்ணில் விழுந்தாள் *
ஒன்றும் இயம்பலள் நீடு உயிர்க்கலுற்றாள் *
மன்றல் அருந் தொடை மன்னன் ஆவி அன்னாள் ** (சூழ்நிலை)

ராமனுக்கு முடி சூட்டுவது என்று உறுதியான விஷயத்தை கைகேயியிற்கு தெரிவிப்பதற்காக மிகுந்த ஆர்வத்துடன்
கைகேயியின் அரண்மனையில் அந்தப்புரத்தில் நுழைந்தார்.
அங்கு அவள் இல்லை. காவலன் கூற கோபக்ரஹத்திற்குச் சென்றார்.‌‌. அங்கு கைகேயி அலங்கோலமாய் வெறும் தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டு பெரும் துன்பத்திற்கு ஆளானார்.
அருகில் அமர்ந்து அடிபட்ட பெண் யானையை ஆண் யானைத் துதிக்கையால் தடவுவது போல ஆசையோடு இரு கைகளாலும் அணைத்துக்கொண்டு தூக்கினார்.  அவளோ அரசனின் கை களை நீக்கி மின்னல் கொடிபோல் துவண்டு கீழே விழுந்தாள்.

தசரதர் "கைகேயி! எவருக்கும் எவ்வித தீங்கும் செய்யாத நான் இருக்கும் பொழுது நீ வெறும் தரையில் படுக்கலாமா? உனக்கு வியாதி ஏதாவது இருந்தால் சொல். நீ யாரையாவது தண்டிக்க விரும்புகிறாயா? உனக்கு யாராவது கெடுதல் பண்ணினார் களா? நீ உடலை வருத்திக் கொள்ளாதே.  உனக்காக எதையும் செய்யத் தயார். நீ விரும்பியதை உடலையும் உயிரையும் பணயம் வைத்துச் செய்கிறேன். எழுந்திரு.‌ விரும்பியதைச் சொல் . என்றார்.

** கள்ளவிழ்  கோதை கருத்து உணராத மன்னன் *
வெள்ளம் நெடும் சுடர் மின்னின் மின்ன நக்கான் *
உள்ளம் உவந்தது செய்வேன் ஒன்றும் உலோபேன் *
வள்ளல் இராமன் உன் மைந்தன் ஆணை என்றான் **(சூழ்வினை)

** நாஸ்மி விப்ரக்ருதா தேவகேனசித் நாவமானிதா |
அபிப்பிராய: துமே கச்சித் தம் இச்சாமி த்வயாக்ருதம் ||
தம் உவாச மஹாதேஜா: கைகேயிம் ஈஷத்உத்ஸ்மித: |
காமீ ஹஸ்தேன ஸங்க்ருஹ்ய மூர்தஜேஷுபிவிஸ்திதாம் ||
அவலிப்தே நஜானாஸி த்வத்த: ப்ரியதமா மம |
மனுஜ: மனுஜவ்யாக்ராத் ராமாத் அன்ய: நவித்யதே ||
யம் முஹூர்தம் அபச்யன்து நஜீவேயம் அஹம் த்ருவம் |
தேந ராமேன கைகேயி! சபேதே வசனக்ரியாம் || **

கைகேயி " நான் எவராலும் அவமதிக்கப்படவில்லை. நீர்? ஏற்கனவே ப்ரதிஜ்ஞை செய்ததை இப்போது விரும்புகிறேன்" என்றாள்.‌‌ கைகேயின் மனதை அறியாத தசரதன் "நீயோ எனக்கு பிரியமானவள். நானும் உனக்கு மிக மிகப் பிரியமானவன். மனிதர்கள் மேம்பட்டவன் ராமன்.‌அவனே எனக்கு பிரியமான வன். அவனை ஒரு கணம் பார்க்காவிட்டால் எனக்கு உயிர் தரிக்காது.‌ அத்தகு உன் மகன் ராமன் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்.‌ நான் உன் சொற்படி நடப்பேன்" என்று கூறினான்

கைகேயிக்கு சிறிது ஐயம்.‌ எந்த ராமனை காட்டுக்கு அனுப்பக் கேட்கப் போகிறோமோ அவனிடமுள்ள உள்ள தனது அன்பை உறுதிப்படுத்திக்கொண்டு அவன் மீதே ஆணையிடுகிறார். எனவே என் செய்வாரோ?  எனும் ஐயத்தினால் சாட்சிகளாக தேவதைகளை அழைத்துப் பேசுகிறாள்.‌ "அக்னி தேவனை முன்னிட்ட முப்பத்தி முக்கோடி  தேவதைகளே!  ராமன் மீது ஆணையிட்டு வரங்களைத் தருவதாகப் பேசுகிறார். பேச்சு மீண்டும் வழுவாக இருக்க நீங்கள் எல்லோரும் ஸாக்ஷிகள்" .‌‌. 

கைகேயி " ஏற்கனவே சம்பராசுர யுத்தத்தில் இருமுறை தன்னைக் காப்பாற்றியதற்காகக் கொடுத்த வரங்களை வேண்டும்போது வாங்கிக்கொள்வதாக அடகு வைத்திருந்தேன் அவற்றியே இப்போது கேட்கின்றேன். உறுதி மொழியை மீறி வரங்களைக் கொடாவிடில் அவமதிக்கப்பட்ட நான் இப்பொழுதே உயிரைத் துறப்பேன்" என்றாள்.‌‌

**அபிஷேகஸமாரம்ப: ராகவஸ்ய உபகல்பித: |
அனே ஸவை அபிஷுகேந பரத: மே அபிஷிசாயதாம் ||
நவ பஞ்ச சவர்ஷாணி தண்டகாரண்யம் ஆச்ரித: |
சீராஜின ஜடாதாரீ ராம: பவது தாபஸ: || **

கைகேயி "ராமனுடைய  பட்டாபிஷேகத்திற்காக சேமிக்கப்பட்ட ஸாமக்ரிகளைக்கொண்டே என் மகன் பரதனுக்கு பட்டாபி ஷேகம் செய்யுங்கள். ராமனோ மர உரியையும்,  மான் தோலை யும் ஆடையாகக் கொண்டு ஒன்பது ஆண்டுகள் மேலும் ஐந்து ஆண்டுகள் தவமுனிவனாக வாழட்டும்.  பரதன் இளவரசனாய் நாட்டை ஆளட்டும்.  இதுவே என் ஆசை. கொடுத்த வாக்கை காப்பாற்றி உங்கள் பண்பையும் குலப்பெருமையும் காத்த ருளும். " என்றாள்.

Sunday, October 13, 2024

Which janma's punyam is operating now? - coffee stain story - HH Gnanandagiri swamigal

பல வருஷங்களுக்கு முன்... ஒரு வெள்ளிக் கிழமை. திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள 'ஞானானந்த தபோவன'த்துக்கு ஸ்ரீஞானானந்தகிரி ஸ்வாமிகளை தரிசிக்கச் சென்றேன். எப்போதெல்லாம் மனதில் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் அந்தத் தபோவனத்தில் இருப்பேன். அப்படி ஓர் ஈர்ப்புச் சக்தி, அந்தத் தபோவன மண்ணுக்கு உண்டு.

ஸ்வாமிகளை தரிசிக்க, அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருந்த கிருஷ்ணசாமி ரெட்டியார் மற்றும் பலராமையா இருவரும் அன்றைய தினம் வந்திருந்தனர். அனைவரும் தங்குவதற்கு அறை ஒதுக்கி இருந்தனர். மதியம் எல்லோருமாகச் சமையல் கூடத்தில் அமர்ந்து உணவு அருந்தினோம். தபோவனத்தில், வேளா வேளைக்கு காபி- டிபன்- சாப்பாடு எனக் குறைவில்லாமல் கூப்பிட்டுப் போடுவார்கள். ஸ்வாமிகளது உத்தரவு அப்படி!

அன்று முழுவதும் ஸ்வாமிகளது தரிசனம் ஒருவருக்கும் கிடைக்கவில்லை. விசாரித்தோம்: 'இரண்டு நாட்களாக ஸ்வாமிகள் தொடர்ந்து 'நிஷ்டை'யில் (தவம்) இருக்கிறார், எப்போது பகிர்முகப்படுவார் (நிஷ்டை கலைதல்) என்று சொல்ல இயலாது!' என்று கூறினர்.

வழக்கமாக ஸ்வாமிகள் தனது காலை வேளை பூஜை புனஸ்காரங்களை முடித்துவிட்டு, பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் அளிப்பது வழக்கம். அடுத்த நாள் சனிக்கிழமை அன்று காலை 7:30 மணி. நிஷ்டை கலையாததால், அன்று தீர்த்தப் பிரசாதம் அளிக்க வரவில்லை. வேறொருவர் கொடுத்தார். அங்கு காத் திருந்த பக்தர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்: ''ஸ்வாமிகள் எத்தனயோ தடவ அன்ன ஆகாரம் இல்லாம மாசக் கணக்கா கூட நிஷ்டைல இருப்பார். அவரா நிஷ்ட கலஞ்சு வந்தாத்தான் உண்டு!''

''அப்டின்னா நாம ஸ்வாமிகளின் திருவுருவப் படத் துக்கு முன்னாடி நமஸ்காரம் பண்ணிப்டு உத்தரவு வாங்கிண்டு பொறப்பட வேண்டியதுதான்!'' என்று வருத்தத்துடன் சொல்லிக் கிளம்பினார்கள் சிலர்.

அங்கு நின்றிருந்த நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் என்னிடம் சொன்னார்: ''எனக்கென்னவோ மனசுலே படறது சார்... நாளைக்குக் காலைல அந்த சித்த புருஷர் நிஷ்டை கலைஞ்சு வந்து, நமக்கெல்லாம் தரிசனமும், தீர்த்தப் பிரசாதமும் கொடுப்பார், பாருங்கள். அது சரி... நீங்க என்ன நெனைக்கிறீங்க?''

நான் அவரிடம் பணிவோடு, ''நானும் அப்டித்தான் நெனைக்கிறேன்'' என்று நம்பிக்கையுடன் தெரி வித்தேன். நீதிபதிகள் இருவரும் ரொம்பவும் சந்தோ ஷப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை. பொழுது விடிந்தது. காலைக் கடன்களைப் பூர்த்தி செய்து, ஸ்நானம் முடித்து அறையை விட்டு வெளியே வரும்போது மணி சரியாக ஏழு. அங்கே நீதிபதிகள் இருவரும் பளிச்சென்று ஜிப்பா- வேஷ்டி- அங்கவஸ்திரம் அணிந்து, தபோவனத்தை வலம் வந்து கொண்டிருந்தனர். நானும் சேர்ந்து கொண்டேன்.

மணி 7:45. என்ன ஆச்சர்யம்! தபோவன மகான், நிஷ்டை கலைந்து சாட்சாத் பரமேஸ்வர னைப் போன்ற தோற்றத்துடன் சந்நிதியில் அமர்ந்து தீர்த்தப் பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தார்! நீதிபதிகள் இருவரும் பதினைந்து - இருபது பக்தர்களுக்குப் பின்னால் வரிசையில் நின்றிருந்தனர். இருவர் முகத்திலும் மகிழ்ச்சி நிலவியது. அடியேன் அவர்களுக்குப் பின்னால் நான்கு பேரைத் தாண்டி நின்றிருந்தேன். ஸ்வாமிகள் ஒவ்வொரு பக்தரிடமும் பேசி, அவர்களது குறைகளைக் கேட்டறிந்து, நிவர்த்தி மார்க்கம் கூறி, தீர்த்தப் பிரசாதம் அளித்து அனுப்பிக் கொண்டிருந்தார்.

நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் ஸ்வாமிகளுக்கு முன் போய் நின்று, நமஸ்கரித்து விட்டு தீர்த்தப் பிரசாதம் பெறுவதற்காக தன் வலது உள்ளங்கையைக் குழித்து நீட்டினார். அவ்வளவுதான்! தீர்த்தம் கொடுக்கும் வெள்ளி உத்தரணியை (சிறிய கரண்டி) சட்டென்று பின்னுக்கு இழுத்துக் கொண்டு விட்டார் ஸ்வாமிகள்! நீதிபதிக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஸ்வாமிகள், தனக்குத் தீர்த்தப் பிரசாதம் அளிக்காமல் உத்தரணியை ஏன் பின்னுக்கு இழுத்துக் கொண்டு விட்டார் என்ற மனக் குழப்பத்துடன், ''ஸ்வாமி! எனக்கு தீர்த்தப் பிரசாதம் அனுக்கிரகிக்கணும். அதுக்காகத்தான் ரண்டு நாளா காத்துண்டிருக்கோம்'' என்று பவ்யமாகக் கூறினார்.

உடனே அந்த சித்த புருஷர் சிரித்துக் கொண்டே, ''அதுக்காக மாத்திரம் ரண்டு நாளா காத்துண்டிருக் காப்ல தெரியலையே? வேற ஏதோ விஷயமும் இருக்காப்ல இருக்கே!'' என்று பொடி வைத்தார்.

தயங்கினார் நீதிபதி. ஸ்வாமிகள் விடவில்லை. சிரித்தபடியே, ''நானே சொல்றேன். ஏதோ கடுதாசுல எழுதி ஜிப்பாவோட பையில வச்சுண்டிருக்காப்ல இருக்கே!'' என்று ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்! அவர் இப்படிச் சொன்னவுடன் நீதிபதி உட்பட அனைவருக்குமே தூக்கிவாரிப் போட்டது. எல்லோரும் விக்கித்து நின்றோம்.

நீதிபதி ரெட்டியார் தயங்கியபடியே, ''அதெல்லாம் ஒண்ணுமில்லே ஸ்வாமி... எனக்கு ஆன்மிக விஷயத் துல ஏதாவது சந்தேகம் வந்ததுன்னா அத அப்படியே ஒரு பேப்பர்ல குறிச்சு வெச்சுண்டு...'' என்று முடிப்பதற்குள், ஸ்வாமிகள், ''இப்டி என்னை மாதிரி சந்யாஸிகளை தரிசனம் பண்ணப் போறச்சே, அவாகிட்ட கேட்டு நிவர்த்தி பண்ணிக்கறது வழக்கமாக்கும்... அப்டித்தானே?'' என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

நீதிபதி பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தார். ஸ்வாமிகள் அனைவரையும் சந்நிதியில் அப்படியே அமரச் சொன்னார். அனைவரும் அமர்ந்தோம். நீதிபதியைத் தன் அருட் கண்களால் உற்றுப் பார்த்தார் ஸ்வாமிகள். அந்த அருட்பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட நீதிபதி, தனது ஜிப்பா பையிலிருந்த காகிதத்தை வெளியே எடுத்தார். வாசித்தார். ''இந்த ஜென்மாவில் நாம் அனுபவிக்கிற சுக- துக்கங்களுக்கு முந்தைய ஜென்மாக்களில் நாம பண்ணிய புண்ணிய- பாவங்களே காரணம்னு சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த ஜென்மாவில் நாம் அனுபவிக்கிற ஒரு குறிப்பிட்ட சுகம் அல்லது துக்கத்துக்கு பூர்வத்தில் என்ன புண்ணியம் அல்லது பாவத்தைப் பண்ணியிருக்கோம்கிறத எப்படி தெரிஞ்சுக்கறது? இத தெரிஞ்சுக்க ஏதாவது மார்க்கம் உண்டாங்கிறது என்னோட சந்தேகம் ஸ்வாமி!''

சற்று நேரம் கண்களை மூடி மௌனத்தில் ஆழ்ந்து விட்டார் அந்த சித்த புருஷர். பிறகு நீதிபதியிடம் நிறுத்தி, நிதானமாகக் கேட்டார்: ''கிருஷ்ணஸ்வாமி ரெட்டியார்... அந்தக் கேள்வியெல்லாம் கெடக்கட்டும்... வெறும் குப்பை... குப்பை! அது போகட் டும்... இப்போ நாம கேக்கற கேள்விக்கு சரியா பதில் சொல்லிண்டே வரணும்! இன்னிக்கு விடியகாலம்பற நாம சரியா நாலரை மணிக்கு ஏந்துருந்தோமா?''

''ஆமா ஸ்வாமி. நாலரைக்கு எழுந்திருந்தோம்!''

''ஏந்துருந்து பல் தேச்சோம். அப்பறமா மேல் அங்க வஸ்திரத்த போத்திண்டு காத்தாட தபோவன பிராகாரத்த வலம் வந்தோமா?'' - ஸ்வாமிகள்.

''வாஸ்தவம்தான் ஸ்வாமி.'' - இது நீதிபதி. ''அப்டி பிரதட்சிணமா வரச்சே, 'ஒரு கப் சூடா காபி கிடைக்குமா?'னு பாக்கறதுக்காக சமையல் கூடத்துல நொழஞ்சோம்... சூடா காபி கெடச்சுது. நாமும் பலராமையாவும் சாப்டோம்...''

''வாஸ்தவம்தான் ஸ்வாமி. சாப்பிட்டோம்!''

''அப்பறமா, நாம ஜாகைக்குத் திரும்பிட்டோம்...''

''ஆமா ஸ்வாமி!''

''சரியா அஞ்சரை மணிக்கு அந்த பரிசாரகரே ஒரு 'ஜக்'குலே சூடா காபி போட்டு எடுத்துண்டு ஜாகைக்கு வந்தார்! சந்தோஷமா ரண்டாவது காபியும் சாப்டோம். சர்தானா?'' - சிரித்தவாறே கேட்டார் ஸ்வாமிகள்.

''ரொம்பவும் சரிதான் ஸ்வாமி.'' - இது நீதிபதி.

ஸ்வாமிகள், ''அப்பறமா ஸ்நானத்தை முடிச்சுட்டு ஒக்காந்து பாராயணமெல்லாம் பண்ணினோம். மணி சரியா ஆறரை! அப்போ அதே பரிசாரகர், 'புதுப் பால்ல காபி போட்டுண்டு வந்திருக்கேன். சூடாருக்கு... ஒரு அரை டம்ளராவது ரெண்டு பேரும் சாப்டுங்கோ'னு வெச்சுட்டுப் போனார்! ரண்டு பேரும் சாப்டேளா?'' என்று புருவங்களை உயர்த்திக் கேட்டார்.

''ரொம்ப வாஸ்தவம் ஸ்வாமி! இதெல்லாம் தங்களுக்கு எப்படி...'' என்று இழுத்தார் நீதிபதி.

''அது கெடக்கட்டும். நாம அந்த மூணாவது காபிய சாப்டப்பறம்தான் பார்த்தோம்... வெள்ளையா மேல போட்டுண்ருந்த அங்கவஸ்திரத்துல ரவுண்டா ஒரு காபி கறை படிஞ்சிருந்ததை. உடனே நாம வாயை விட்டு, 'எப்ப சாப்பிட்ட காபியில இந்தக் கறை பட்டிருக்கும்?' என்று யோசனையோடு சொன்னோம். உடனே பக்கத்துல ஒக்காந்திருந்த பலராமையா, 'என்னய்யா இதுக்குப் போய் கவலைப்பட்டுட்டு இருக்கீங்க. கறைபட்ட எடத்ல கொஞ்சம் சோப்பு போட்டு, அந்தக் கறைபட்ட எடத்த மாத்திரம் ஜலத்தில் கசக்கினால், கறை மறைஞ்சுடப் போறது'னு சொல்ல, நாம அதே மாதிரி செய்து காபி கறையைப் போக்கி விட்டு, அதே அங்கவஸ்திரத்தைத்தான் இப்போ மேலே போட்டுண்டு வந்துருக்கோம்... வாஸ்தவம்தானே?'' என்று கேட்டு வியப்பில் ஆழ்த்தினார் அந்த சித்தர்.

உடனே நீதிபதி, ஸ்வாமிகளை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தார். நா தழுதழுக்க, ''ஸ்வாமிகள் சொன்னது எல்லாமே சத்தியம்! இதெல்லாம் எப்படி தங்களுக்கு...'' என்று முடிக்கவில்லை.

அதற்குள் ஸ்வாமிகள், ''அது கிடக்கட்டும் ஜட்ஜ் சார்! கார்த் தால நாலரை மணிக்கு ஏந்துருந்து, ஆறரை மணிக்குள்ள நாம சாப்ட மூணு 'கப்' காபிலயே, அங்க வஸ்திரத்ல பட்ட காபிக் கறை, 'எந்த காபி சாப்டதுலே'னு நமக்குத் தெரியலே! அப்படி இருக்கறச்சே பாவ- புண்யங்கள் பண்ணிண்டே வந்தா, அந்த பலன்களை அனுபவிக்க மாறி மாறி ஜன்மா எடுத்துண்டே வரணும்! அப்படி எத்தனை ஜன்மா தெரியுமா? எண்பத்துநாலு லட்சம் ஜன்மா! இதுக்கு முன்னே எத்தனை ஜன்மா எடுத்துருக்கோம்... பின்னால எத்தனை எடுக்கப் போறோம்னும் தெரியாது. அப்டி இருக்கச்சே, 'இந்த ஜென்மாவிலே அனுபவிக்கிற ஒரு குறிப்பிட்ட சுகம் அல்லது துன்பத்துக்கு பூர்வ ஜென்மாக்களில் எந்த புண்ணியம் அல்லது பாவத்தை பண்ணியிருப்போம்கறத தெரிஞ்சுக்க பிரயத்தனப்படறதவிட, எப்டி சோப்பை போட்டவுடனே அங்கவஸ்திரத்லேர்ந்து அந்தக் காபிக் கறை போச்சோ... அதே மாதிரி சதா காலமும் 'பகவத் தியானம்' என்கிற சோப்பினாலே சரீரம்ங்கிற அங்கவஸ்திரத்தில் பட்டிருக்கிற கறைகளை எல்லாம் போக்கிண்டு, மோட்சத்துக்கு பிரயத்தனப்படணும்... என்ன புரிஞ்சுதா...'' என்று கேட்டுவிட்டு இடி இடியென்று வாய்விட்டுப் பெரிதாகச் சிரித்தார்!

அனைவரும் ஸ்வாமிகளை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தோம். நீதிபதிகளின் கண்களில் நீர் கசிந்தது. அனைவருக்கும் ஆசி வழங்கிப் பிரசாதம் கொடுத்தார் ஸ்வாமிகள். அதன் பிறகு மன நிறைவோடு ஸ்வாமிகளிடம் உத்தரவு பெற்றுக் கிளம்பினோம்!..

படித்ததில் பிடித்தது......

Overcoming ahankara - HH Bharati Teertha Mahaswamigal

*ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்*

*நிர்மமோ  நிரஹங்கார:*

மனிதனுக்கு, தான் சிறியதொரு நற்காரியம் செய்தாலும்கூட "நான் செய்தேன்" என்று அஹங்காரம் வரும்.  அந்த அஹங்காரம் நிறைய தவறுகளுக்குக் காரணமாக அமைந்துவிடும்.  "நான் தவறு செய்தால் என்னை யார் கேட்பார்கள்?  எனக்கு எல்லாம் தெரியும், எனக்கு எது இஷ்டமோ நான் அதைச் செய்வேன்"  என்கிற ஒரு மனோபாவத்தை அஹங்காரம் ஏற்படுத்துகிறது.  இத்தகைய மனோபாவம் எல்லாத் தீமைகளுக்கும் அடிப்படையாகும்.  எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்பவனைவிட நிறையத் தெரிந்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.  எனக்கு நிறைய சக்தி இருக்கிறது என்று சொல்பவனைவிடச் சக்தி வாய்ந்தவர்கள் எவ்வளவோ  பேர் இருக்கிறார்கள்.  இந்த உண்மையெல்லாம் அஹங்காரம் உள்ளவர்களுக்குத் தெரியாது.  மேலும் நாங்கள் செய்கின்ற தீய செயல்களை யாரும் பார்ப்பதில்லை என்று வேறு நினைத்துக் கொள்கிறார்கள்.  நம்முடைய செயல்களை யாரும் பார்ப்பதில்லை என்று நினைப்பது தவறு.  நாமும் நமது தவறான செயல்களை யாரும் பார்ப்பதில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். 

ஆதித்யசந்த்ராவனலோSநிலச்ச 
த்யெளர்பூமிராபோ  ஹ்ருதயம்  யமச்ச  I 
அஹச்ச  ராத்ரிச்ச  உபே  ச ஸந்த்யே 
தர்மச்ச  ஜானாதி  நரஸ்ய வ்ருத்தம்  II 

என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.  மனிதன் செய்யும் காரியங்களை பஞ்சமஹாபூதங்களான பிருத்வீ,  தேஜஸ், ஜலம், வாயு, ஆகாசம், சூரிய சந்திரர்கள், ஸந்தியா காலம், மனதினுள்ளிருக்கும் அந்தர்யாமியான பரமாத்மா – இவ்வளவு பேர் பார்த்துக் கொண்டிருக்கும்போது யாரும் பார்க்கவில்லை என்று சொல்வது முறையா?  இத்தகைய பேச்சு நமக்கு வருவதற்கு நம்மிடமுள்ள அஹங்காரம்தான் காரணம்.  அஹங்காரம்தான் தவறுகள் பல நடப்பதற்கும் காரணம்.  ஆகவே அஹங்காரம் இருக்கக் கூடாது.

108 upanishad names

108 உபநிஷதங்கள் பெயர்களும், அவற்றைக் கொண்ட வேதமும் ஒரு சிந்தனை:-

1. ஈஸ உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
2. கேந உபநிஷத் - ஸாம வேத,
3. கட உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
4. ப்ரஸ்ந உபநிஷத் - அதர்வ வேத,
5. முண்டக உபநிஷத் - அதர்வ வேத,
6. மாண்டுக்ய உபநிஷத் - அதர்வ வேத,
7. தைத்திரீய உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
8. ஐதரேய உபநிஷத் - ருக் வேத,
9. சாந்தோக்ய உபநிஷத் - ஸாம வேத,
10. ப்ருஹதாரண்யக உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
11. ப்ரஹ்ம உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
12. கைவல்ய உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
13. ஜாபால உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
14. ஸ்வேதாஸ்வதர உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
15. ஹம்ஸ உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
16. ஆருணேய உபநிஷத் - ஸாம வேத,
17. கர்ப உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
18. நாராயண உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
19. பரமஹம்ஸ உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
20. அம்ருதபிந்து உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
21. அம்ருதநாத உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
22. அதர்வஸிர உபநிஷத் - அதர்வ வேத,
23. அதர்வஸிக உபநிஷத் - அதர்வ வேத,
24. மைத்ராயணி உபநிஷத் - ஸாம வேத,
25. கௌஷீதாகி உபநிஷத் - ருக் வேத,
26. ப்ருஹஜ்ஜாபால உபநிஷத் - அதர்வ வேத,
27. ந்ருஸிம்ஹதாபநீ உபநிஷத் - அதர்வ வேத,
28. காலாக்நிருத்ர உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
29. மைத்ரேயி உபநிஷத் - ஸாம வேத,
30. ஸுபால உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
31. க்ஷுரிக உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
32. மாந்த்ரிக உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
33. ஸர்வ-ஸார உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
34. நிராலம்ப உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
35. ஸுகரஹஸ்ய உபநிஷத்- க்ருஷ்ண யஜுர்வேத,
36. வஜ்ரஸூசி உபநிஷத் - ஸாம வேத,
37. தேஜோபிந்து உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
38. நாதபிந்து உபநிஷத் - ருக் வேத,
39. த்யாநபிந்து உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
40. ப்ரஹ்மவித்யா உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
41. யோகதத்த்வ உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
42. ஆத்மபோத உபநிஷத் - ருக் வேத,
43. பரிவ்ராத் (நாரதபரிவ்ராஜக) உபநிஷத் - அதர்வ வேத,
44. த்ரி-ஷிகி உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
45. ஸீதா உபநிஷத் - அதர்வ வேத,
46. யோகசூடாமணி உபநிஷத் - ஸாம வேத,
47. நிர்வாண உபநிஷத் - ருக் வேத,
48. மண்டலப்ராஹ்மண உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
49. தக்ஷிணாமூர்தி உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
50. ஸரப உபநிஷத் - அதர்வ வேத,
51. ஸ்கந்த உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
52. மஹாநாராயண உபநிஷத் - அதர்வ வேத,
53. அத்வயதாரக உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
54. ராமரஹஸ்ய உபநிஷத் - அதர்வ வேத,
55. ராமதாபணி உபநிஷத் - அதர்வ வேத,
56. வாஸுதேவ உபநிஷத் - ஸாம வேத,
57. முத்கல உபநிஷத் - ருக் வேத,
58. ஸாண்டில்ய உபநிஷத் - அதர்வ வேத,
59. பைங்கல உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
60. பிக்ஷுக உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
61. மஹத் உபநிஷத் - ஸாம வேத,
62. ஸாரீரக உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
63. யோகஸிகா உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
64. துரீயாதீத உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
65. ஸம்ந்யாஸ - ஸாம வேத,
66. பரமஹம்ஸபரிவ்ராஜக உபநிஷத் - அதர்வ வேத,
67. அக்ஷமாலிக உபநிஷத் - ருக் வேத,
68. அவ்யக்த உபநிஷத் - ஸாம வேத,
69. ஏகாக்ஷர உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
70. அந்நபூர்ண உபநிஷத் - அதர்வ வேத,
71. ஸூர்ய உபநிஷத் - அதர்வ வேத,
72. அக்ஷி உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
73. அத்யாத்மா உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
74. குண்டிக உபநிஷத் - ஸாம வேத,
75. ஸாவித்ரி உபநிஷத் - ஸாம வேத,
76. ஆத்மா உபநிஷத் - அதர்வ வேத,
77. பாஸுபத உபநிஷத் - அதர்வ வேத,
78. பரப்ரஹ்ம உபநிஷத் - அதர்வ வேத,
79. அவதூத உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
80. த்ரிபுராதபநி உபநிஷத் - அதர்வ வேத,
81. தேவி உபநிஷத் - அதர்வ வேத,
82. த்ரிபுர உபநிஷத் - ருக் வேத,
83. கடருத்ர உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
84. பாவந உபநிஷத் - அதர்வ வேத,
85. ருத்ரஹ்ருதய உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
86. யோக-குண்டலிநி உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
87. பஸ்ம உபநிஷத் - அதர்வ வேத,
88. ருத்ராக்ஷ உபநிஷத் - ஸாம வேத,
89. கணபதி உபநிஷத் - அதர்வ வேத,
90. தர்ஸந உபநிஷத் - ஸாம வேத,
91. தாரஸார உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
92. மஹாவாக்ய உபநிஷத் - அதர்வ வேத,
93. பஞ்சப்ரஹ்ம உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
94. ப்ராணாக்நிஹோத்ர உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
95. கோபாலதபணி உபநிஷத் - அதர்வ வேத,
96. க்ருஷ்ண உபநிஷத் - அதர்வ வேத,
97. யாஜ்ஞவல்க்ய உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
98. வராஹ உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
99. ஸாத்யாயநி உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
100. ஹயக்ரீவ உபநிஷத் - அதர்வ வேத,
101. தத்தாத்ரேய உபநிஷத் - அதர்வ வேத,
102. காருட உபநிஷத் - அதர்வ வேத,
103. கலிஸண்டாரண உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
104. ஜாபால உபநிஷத் - ஸாம வேத,
105. ஸௌபாக்ய உபநிஷத் - ருக் வேத,
106. ஸரஸ்வதீரஹஸ்ய உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
107. பஹ்வ்ருச உபநிஷத் - ருக் வேத,
108. முக்திக உபநிஷத்- ஸுக்ல யஜுர்வேத.

நூற்றியெட்டாம் உபநிஷத்தாகியதும், ஸ்ரீசிவபக்த இராமரால் ஆஞ்சநேயருக்கு உபதேசிக்கப்பட்டதுமாகிய 'முக்திகோபநிஷத்தைக்' கொண்டு விரிக்கப்பட்டது.

Saturday, October 12, 2024

Bridge Arjuna Hanuman - spiritual story

அகந்தை வேண்டாம்.-   நங்கநல்லூர்   J K  SIVAN
என் கதைகளில் அடிக்கடி கிருஷ்ணன் வருவான். இந்த  சின்ன கதையை முன்பே ஒரு  முறை எழுதின  ஞாபகம் இருக்கிறது. அதனால்  என்ன. இன்னொருதடவை  நானும்  இதை எழுதி உங்களோடு படிக்கிறேன்.ஹே  கிருஷ்ணா,  இதை  எழுத வைத்த  உனக்கே  இதை அர்ப்பணித்து உன்  பிரசாதமாக  என் முகநூல் நண்பர்களுக்கு  வழங்குகிறேன்.
அர்ஜுனன்  தீர்த்த யாத்திரை  கிளம்பி  முதன் முறை யாக  தெற்கு நோக்கி  நடக்கிறான். தென்கோடி தமிழகம் வந்துவிட்டான். ''அட  இது என்ன ஊர்.  ராமேஸ்வரம்....''ஓஹோ  இங்கு தான்  ராமருக்காக  வானர சைன்யம்   சேது  பாலத்தைக்  கட்டியதா?'' சுற்றிப்  பார்த்தான்.  அவனுக்குள்ளே  ஒரு எண்ணம்  பளிச்சிட்டது 
ஸ்ரீ  ராமன் சிறந்த வில்லாளியாச்சே.  அவனால்  தனது அம்புகளை கொண்டே  சிறந்த பாலம்  அமைக்க  முடியுமே?   ஏன்  வானர சைன்யத்தின்  உதவியை  நாடினான்? என்னாலேயே  இத்தகைய  பாலத்தை   சரங்களால் அமைக்க  முடியுமே?. ஒருவேளை   ராமனுக்கு எனக்கு  என் வில் வித்தையில் நம்பிக்கை  இருப்பதை போல்   தன்னுடைய  வில்வித்தையில்  நம்பிக்கை  இல்லையோ? நம்பிக்கை  குறைவோ?   இதற்கு யார் பதில் சொல்வார்கள்?  ராமேஸ்வரம்  வரை  நடந்து சென்றவன்  ஒரு  காட்டில்  ஒரு  சிறு கோவில ருகில்  செல்லும்போது அங்கிருந்து  ராம்  ராம்  என்று நாம   ஜபம்  கேட்கிறது.   அர்ஜுனன்  நேராக அந்த கோவிலுக்குள்  நுழைந்தான்.  என்ன  ஆச்சர்யம்!.  அவனுக்காகவே  அங்கு  காத்திருந்தது போல  ஆஞ்சநேயர்  அமர்ந்துகொண்டு   ராம நாம ஜபம்  செய்து கொண்டிருந்தார். அவரே  தக்க  ஆசாமி என்று  தன்னுடைய கேள்வியை  அவரிடம்  கேட்க  என்று அர்ஜூஜனுக்கு தோன்றியது.
''வா  அர்ஜுனா'' இந்தா  ராம பிரசாதம்''
''நமஸ்காரம்  ஹனுமான் அண்ணா, எனக்கு ஒரு சந்தேகம்?  கேட்கலாமா? 
''கேள்  முடிந்தால்  தீர்த்து வைக்கிறேன்''
''ஏன்  ராமர்  தன்னுடைய அம்புகளால் சேது பாலம் அமைக்காமல்  வானர சைன்யங்களின் உதவியை நாடினார்?''
" ஏன்  ராமர் அம்பு பாலம்  கட்டவில்லை என்று  கேட்டாயே அது வானர சைன்யங்களின்  பலத்தை  தாங்க கூடியதில்லை!!.  
"ஆஞ்சநேயா,  அப்படிச் சொல்லாதீர்கள்.   நான் கட்டும்  அம்பு பாலம்  எந்த  பாரத்தையும்  தாங்கக்கூடியது.  எத்தனை வானர சைன்யங்களும்  அதன் மீது  செல்லலாம்?
" நீ சொல்வதை நான்  நம்பவில்லை, அர்ஜுனா!".
அர்ஜுனனுக்கு தனது வில்  வித்தையைப்  பழித்து யாராவது பேசினால்  கடும் கோபம் வரும். கொல்லக் கூட  தயங்க மாட்டான்.
"என்ன  போட்டி  ஹனுமான்,  உங்களுக்கும்  எனக்கும்.  நான் கட்டிய அம்பு பாலம்  நொறுங்கினால்  நான்  உடனே  தீ  மூட்டி  அதில் மாள்கிறேன்.  நீங்கள்   தோற்றால்  உங்களுக்கும்  அதே  விதி.  சரியா?? சவால்  விட்டான்  அர்ஜுனன். 
ஆஞ்சநேயர் ஒப்புக்கொண்ட பின் அர்ஜுனன்   வில்லை எடுத்தான். கண் இமைக்கும் நேரத்தில்   அவனது சரங்கள் ஒரு பாலத்தை எதிரே  அமைத்தது.' 'பார்த்தீர்களா ஹனுமான்?' இப்போது என்ன சொல்கிறீ ர்கள்?'''
' அர்ஜுனா,   உன்   சீட்டு கட்டு  பாலம்  என்  ஒருவனை
யே  தாங்காதே எப்படி  ராமரின் வானர சைன்யத்தை  தாங்க முடியும்?  இதோ பார் வேடிக்கையை.  "ஜெய் ஸ்ரீ ராம்" என்று  ஆஞ்சநேயன் தன் வாலால்  அந்த பாலத்
தை  ஒரு  தட்டு தட்ட  அது  பொடிப் பொடியாய் நொறுங் கியது.  தோல்வியை  ஒப்புக்கொண்ட  அர்ஜுனன்  தீ மூட்ட தொடங்கினான்.
"கிருஷ்ணா, நான்  தோல்வியடைந்து  விட்டேனடா,   உன்னை  இனி பார்க்க எனக்கு  முகமே  இல்லை" .என்று  தீயில்  குதிக்கு முன்  அங்கு ஒரு பெரியவர் வந்தார். 
"என்ன  நடக்கிறது இங்கே?"  என்று  ஆஞ்சநேயரை கேட்க  அவன் விவரம்  சொன்னான்
."இது தவறு, உங்கள்  போட்டிக்கு  யார்  சாட்சி?"  "ஒருவருமில்லை"  
"சாட்சியில்லாத  போட்டி  செல்லாது. நீங்கள்  மீண்டும்  போட்டி போடுங்கள்  நானே  வேண்டுமானால்  சாட்சி யாக இருக்கிறேன்"  என்றார் பெரியவர்.
"சரி, எ ன்று  இருவரும்  ஒப்புக்கொண்டு அர்ஜுனன்  மீண்டும் அம்பு பாலம்  அமைக்க ரெடி! . அவன்  உள் மனதில்  தோல்வி  நிச்சயம்  என்று  பட்டது.  
"ஹரே,  கிருஷ்ணா உன்னை  வணங்கி  ஏதோ ஆரம்பிக்கிறேன்  தோற்றால்,  அடுத்த  ஜன்மத்தில் சந்திப்போம்"-   
அர்ஜுனன் சரங்களால் பாலம்  கட்டிவிட்டான். ஆஞ்சநேயன்  சிரித்து கொண்டே அதன் மீது தன் வாலால் தட்டினான்.  அசையவில்லை.  காலால் உதைத்தான். கால் தான் வலித்தது. அதன் மீது   ஏறி முழு  பலத்துடன் குதித்தான். பாலம்  இம்மியும்  அசைய வில்லை.  ஆஞ்சநேயன்  ஆச்சர்யமுடனும்  அதிர்ச்சி யுடனும்  முகம் கவிழ்ந்து  யோசித்தான். என்ன  ஆயிற்று?. பெரியவர்  முடிவை கூறி விட்டார்: .
"அர்ஜுனனால்  முதலில் அம்புகளால்  பாலம்  கட்ட முடிந்தது.  அப்போது  ஆஞ்சநேயனால் அந்த  பாலத்தை  நொறுக்க முடிந்தது. காரணம்  என்ன  தெரியுமா?.   அது அர்ஜுனன்  தன்  வில் வித்தை கர்வத்தால்  கட்டிய பாலம்   அது.   ஆகவே ஆஞ்சநேயன்  ஸ்ரீ  ராமனின் நாமத்தை  சொல்லி வாலாலேயே நொறுக்க முடிந்தது. இப்போது  ஆஞ்சநேயன்  தன்  பலத்தின் மீது  இருந்த  கர்வத்தால்   அர்ஜுனன்  ஸ்ரீ  கிருஷ்ணனை வேண்டி அமைத்த பாலத்தை நொறுக்க முயற்சித்தது தோற்றது. இவ்வளவே."  
இருவரும்  பெரியவர்  காலில் விழுந்து வணங்கி  எழுந்தபோது  அங்கு பெரியவரை காணோம்!
 ஸ்ரீ  கிருஷ்ண பரமாத்மா  அங்கே அவர்கள்  எதிரே நின்று கொண்டு  இருவரையும்  "என் இரு கண்கள்  நீங்கள் அகம்பாவம்  வேண்டாம் உங்களுக்கு" என்று  அருளினார்    
கிருஷ்ணனின் அறிவுரை  நமக்காக  மட்டுமே  என்று  புரிந்து கொள்வோமா?  சர்வம்  கிருஷ்ணமயம் ஜகத். அவனன்றி  ஓர்  அணுவும் அசையாதே .

Dadhipanda moksham

ததிபாண்டனின் மோக்ஷம்  

ததிபாண்டன் ஒருமுறை ஒருவரின் இறந்த வீட்டுக்கு சென்று வந்த பிறகு யோசித்தான்,

"நாமும் இறந்தால் இவ்வுலகம் விட்டு சென்று விடுவோமா?உயிர் போனால் போகுது. ஆனால் கண்ணன் இல்லாமல் இருக்க முடியாதே" என்று கண்ணீர் மல்காத குறையாக நினைத்து கொண்டு இருந்தான். 

அந்த நேரம் ததிபாண்டன் ஒரு ரிஷியை எதேச்சையாக பார்த்தான். அவரின் கால்களில் விழுந்தான். 
"சாமி என்னை ஆசீர்வதியுங்கள்"
"ஆசிர்வதித்தேன். சொல் மகனே, உனக்கு என்ன வேண்டும்"
"எனக்கு ஒரே ஒரு ஆசைதான் சுவாமி"
"கேள் மகனே"
"எப்போதும் கண்ணனுடன் இருக்கனும். நான் இறந்த பிறகும் அவனிடம் எப்பவும் இருக்கனும்"
"அட மோக்ஷத்தை இவ்வளவு எளிதாக கேட்டு விட்டாயே"
"அப்படினா"
"மோக்ஷம் என்றால்...இறைவன்.. திருவடி.. சரணடைதல்.. கருணை" என்று வேதாந்த தத்துவங்களை  விளக்கி கொண்டே போனார். உடனே ததிபாண்டன்,
"சாமி, எனக்கு எதுவுமே புரியல. மோக்ஷத்தை அடைந்தால் எப்போதும் கண்ணனுடன் இருக்க முடியுமா?"
"கண்டிப்பா. அதுவே நித்யம்"
"அது எங்கே கிடைக்கும். உங்களால் கொடுக்க முடியுமா"
ரிஷி சிரித்து கொண்டே, "என்னால் முடியாது தம்பி."
"அப்படினா இதை யார்ட்ட கேக்குறது"
"பரப்பிரமத்தை பக்கத்தில் வைத்து கொண்டே என்னிடம் கேட்கிறாயே"
"புரியல சாமி"
ரிஷி அவன் வெகுளித்தனத்தை ரசித்தார். 
 "நீ யாரிடம் எப்போதும் இருக்க ஆசை படுகிறாயோ அவனிடமே கேள். உனக்கு கிடைக்கும்."
"அட நம்ம கண்ணனா. இத முதல்லயே சொல்ல கூடாதா"
"அவ்வளவு எளிதில் அவன் கொடுக்க மாட்டான் தம்பி"
"அத நான் பாத்துக்கிறேன் சாமி. அவன் என் கண்ணன். என் நண்பன். எனக்காக எதுனாலும் செய்வான்"

ரிஷி அவனை கண்டு வியந்த படியே அங்கிருந்து சென்றார். 

அன்று கண்ணன் ததிபாண்டன் வீட்டிற்குள் ஓடினான் . அப்போது ததிபாண்டன் அதை பார்த்து,

"கண்ணா, எங்கே இந்த பக்கம்"
"அட ததிபாண்டா . நண்பனே என்னை காப்பாற்று"
"நானா. உன்னையா. நீதான் பெரிய வித்தை காரன் ஆயிற்றே"
"அடேய் ததிபாண்டா. இப்போது பேச நேரம் இல்லை"
"என்ன நடக்குதுன்னு சொல்லு கண்ணா. தலையும் புரியல வாலும் புரியல"
"அடேய் வழக்கம் போல வெண்ணை திருடி மாட்டிகிட்டேன். அம்மா துரத்திட்டு வராங்க" 
"சரி"
"நான் இந்த பானைக்குள ஒளிஞ்சிக்கிறேன். நீ அம்மா வந்தா நான் இங்க இல்லன்னு சொல்லிடு"
"சரிடா கண்ணா. போய் ஒளிஞ்சிக்கோ"
"அடேய் நான் ஒளியிறேன். கண்ணன் பானைக்குள இருக்கான். அவன் இங்க இல்லைன்னு சொல்ல சொன்னான்னு மதுமங்கள் மாதிரி உளறி கொட்டிடாதே. சரியா "
"சரி சரி. நீ போய் ஒளிஞ்சிக்கோ"
கண்ணன் பானைக்குள் போய் ஒளிந்து கொள்ள, ததிபாண்டன் ஒரு தட்டை வைத்து மூடினான்.

யசோதா பிரம்புடன் வந்து ததிபாண்டனிடம்,
"கண்ணனை பாத்தியா"
"இல்லம்மா"

யசோதா சென்ற பின் ததிபாண்டன் அந்த பானையின் மேல் உட்கார்ந்து விட்டான். 
கண்ணன்,
"அடேய் ததிபாண்டா, என்ன செய்யுற. மூச்சு மூட்டுது பானையை திறந்து விடு"
"மாட்டேன்"
"ஏன்டா"
"நான் உன்னிடம் ஒன்னு கேப்பேன். அது தரணும். உன்னால் மட்டும்தான் தர முடியுமாம். ஒரு சாமி சொன்னார்"
"சரிடா. தரேன். என்னன்னு சொல்லு  "
"மோக்ஷம் தா"
"அடேய் மோக்ஷமா. அது என்னனு தெரியுமா? எளிதாக கேட்டுட்டியே"
"அதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு மோக்ஷம் குடுத்தா உன்ன அம்மாட்ட காட்டி குடுக்க மாட்டேன்"
"சரி சரி. குடுக்கிறேன்."
"அப்படியே இந்த பானைக்கும் மோக்ஷம் குடு. உன்ன காப்பாத்தி இருக்குல்ல"
"சரிடா ததிபான்டா. வெளிய விடு"

கண்ணன் வெளிய வர, ததிபாண்டன் அவனை கட்டி கொண்டு,
"கண்ணா, இனிமே எப்போதும் உன்னுடன்தான் இருப்பேன்." என்று சந்தோசமா சொல்லி கொண்டே ஓடினான். கண்ணன் கண்களில் நீர் கொட்டியது.

கண்ணனுக்கு அனைத்தும் தெரியும். அவனால் பானையை விட்டு வெளியே வர முடியாதா?. இருந்தும் தன் பக்தன் ததிபாண்டனின் வெகுளித்தனத்தை ரசித்தான். அவன் பக்திக்கு மெச்சி அவனுக்கு உயர்ந்த மோக்ஷத்தை அருளினான்.

Friday, October 11, 2024

Karana and kaarya - cause and effect

Sri Gurubhyonamaha,

*Upanishad Saara - Jnana dhaara*

*161. Jiva Tattva - Sharira Thraya Viveka* 

*Karana Sharira*

So far we had seen the overview of technical terms that are used to define Karana sharira. Now, we will see every term in detail:

First term is *śarīradvayasya kāraṇamātraṁ:*

- When we see a Mango tree, we know that it has a mango seed as its cause. 

- *If a huge Mango tree has to originate from a Mango seed* - then what Vedanta says is that the *entire Mango tree is present in a hidden, dormant, latent, potential, unmanifest, form i.e. in the (Mango) seed form*.

- If the Mango tree was not already present in a potential form, then there is no way the Mango tree could have grown from this Mango seed.

- That is the reason, if we sow a coconut it doesn't grow into a Mango tree or if we sow a stone, no sprout comes from it. Only when we sow a Mango seed will it grow into a Mango tree.

- Hence the entire tree, i.e. trunk, branches, flowers, leaves, everything is present within a seed. However all these can't be seen when we see the Mango seed, because they are all present in an unmanifest form. 

- This can be extended to everything we see in the creation; everything we see has to be in potential form in its respective cause.

- In Sanskrit, the *potential form is called Karana* and *whatever originates from Karana is called Karya*.

Hari Om Tat Sat
Sri Ramakrishnaarpanamasthu 🙏🏻

distance between us & perumal - Mukkoor

நமக்கும் பெருமாளுக்கும் எவ்வளவு தூரம்?

முக்கூர் ஸ்ரீமதழகியசிங்கர் ஸாமான்யமான லௌகிக விஷயங்களின் மூலம் ஆழமான ஸம்ப்ரதாயக் கருத்துக்களை சிஷ்யர்களின் மனதில் பதிய வைப்பதில் வல்லவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் அடியேன் காதில் விழுந்தவற்றில் ஒன்று பின்வருமாறு:

ஒரு ஸமயத்தில் சிஷ்யர் ஒருவா் ஸ்ரீமதழகியசிங்கரிடம் விண்ணப்பித்தாராம். ஸ்வாமி! விஞ்ஞானத்தின் அபரிதமான வளர்ச்சியால் சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தை அளக்க முடிகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தை அளக்க முடிகிறது. இதே போல் பெருமாளுக்கும் நமக்கும் உள்ள தூரத்தை அளப்பது ஸாத்யமா? என்றாராம்.

ஸ்ரீமதழகியசிங்கரும் ,ஆஹா! அளக்கலாமே! 

நாளை வரும்போது ஒரு பேப்பரும் பேனாவும் கொண்டு வா! என்றாராம். 

அந்த சிஷ்யரும் மறுநாள் பேப்பா் ,பேனா ஸகிதமாக வந்தார். 

ஆசார்யனும்,இந்த பேப்பரில் என்னுடையவை என்று ஒரு தலைப்பு போட்டுக் கொண்டு, என் பத்நீ, என்புத்ரன், என் வீடு, என் கார், என் பேனா, என் கடிகாரம், என் வேஷ்டி என்று உன் உடமைகளாக நீ நினைப்பவை 
எல்லாவற்றையும் ஒரு பட்டியலிடு. 

எல்லாம் முடிந்தபின் கடைசியில் போனால் போகிறதென்று என்னுடைய பெருமாள் என்று எழுதிக் கொள் என்று ஸாதித்தாயிற்றாம். 

சிஷ்யனும் ஆசார்யனின் கட்டளையை சிரமேற்கொண்டு என் பத்நீ,என் புத்ரன் என்று ஆரம்பித்து என்னுடைய பெருமாள் என்று எழுதி முடித்தாராம்.

அடுத்து என்ன செய்வது? என்று ஆசார்யனை பார்த்தாராம். 

ஆசார்யன் சிஷ்யனைப் பார்த்து இப்போது அந்தப் பட்டியலில் இருந்து என்னுடையது என்று ஆரம்பித்து நீ எழுதியவை எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக அடித்துக் கொண்டு வா!

உனக்கும், நீ கடைசியாகப் பட்டியலில் எழுதிய பெருமாளுக்கும் இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வரும்.
 
கடைசியில் உன்னுடையது என்று எதுவுமே இல்லாமல் நீயும் பெருமாளுமே எஞ்சியிருப்பீர்கள். 

இதுதாண்டா உண்மை நிலை! 

நான் எனது உடமை என்கிற நிலை மாறி, யானும் நீயே! எனது உடமையும் நீயே! என்று உனக்கும் பெருமாளுக்கும் உள்ள தூரம் குறைவது மட்டுமல்ல, தூரமே இல்லாமல் போய்விடும் என்று ஸாதித்தாயிற்றாம்.

அஹங்கார, மமகாரங்களை விட்டொழிக்க வேண்டும் என்பதனை எத்தனை அழகாக, தெளிவாக விளக்கினர் ஸ்ரீமதழகியசிங்கர்.

Stitha pragya

கீதாசாரம்-அத்தியாயம் 2 தொடர்ச்சி

ப்ரஜஹாதி யதா காமான் ஸர்வான் பார்த்த மனோகதான் |
ஆத்மன்யைவாத்மனா துஷ்ட: ஸ்தித ப்ரக்ஞஸ்ததோச்யதே||

மனதில் தோன்றும் எல்லா ஆசைகளையும் அறவே துறக்கிறானோ மேலும் ஆத்மாவிலேயே ஆனந்தம் கொண்டவனாக  இருக்கிறானோ அவனே ஸ்தித ஸ்தித ப்ரக்ஞன் எனப்படுகிறான்.

இதன் பொருள் என்னவென்றால், துஷ்ட: என்றால் திருப்தி அடைந்தவன் என்று பொருள். எப்போது மனிதன் திருப்திடயடைந்தவனாக  ஆகிறான்? உதாரணமாக பிள்ளை வேண்டும் என்று  ஆசையுள்ளவன் பிள்ளை பிறந்தபோது ஆனந்தம் அடைகிறான் . அது எது வரையில்?வேறு எந்த ஆசையும் வராமல் இருக்கும் வரைதானே?இது எதைக்குறிக்கிறது என்றால்  ஆனந்தம் என்பது ஆசை பூர்த்தி ஆனதும் வருவது அல்ல ஆசையே இல்லாமல் இருக்கும்போது வருவதுதான் என்று தெரிகிறதல்லவா?

 அதனால் ஆனந்தமாக் இருக்க வேண்டுமானால் ஒரு இஷ்டம் பூர்த்தி ஆனதும் இன்னொன்று வராமல் தடுப்பதுதான். ஒரு ஆசைக்கும் இன்னொன்றிற்கும் உள்ள இடைவெளியே ஆனந்தத்தைத் தருகிறது.
ஸ்வாமி சின்மயானந்தர் இதை ஒரு சமன்பாடு (equation)மூலம் தெளிவு படுத்துகிறார்
  
Number of desires fulfilled (நிறைவடைந்த ஆசைகள் (1)
------------------------------------    =  the quotient of happiness.(ஆனந்தத்தின் அளவு)(3)
Number of desires entertained( மனதில் எழும் ஆசைகள்)(2)
.(2) =0 ஆனால் (1)=~ எந்த எண்ணையும் 0 வால்வகுத்தால் கிடைப்பது ~ அதாவது அனந்தம், அளவில்லாதது. அதனால் மனதில ஆசைகளே இல்லை என்றால் கிடைக்கும் ஆனந்தம் அளவில்லாதது. இதை எளிதில் புரிந்துகொள்ளலாம் .

 ஒரு குழந்தை ஆனந்த்மாகா இருக்கிறது ஏனென்றால் அதற்கு ஆசைகளே இல்லை. எப்போது ஆசைப்பட ஆரம்பிக்கிறதோ அதிலிருந்து ஆனந்தம் குறைய ஆரம்பிக்கிறது.சென்றைய தலைமுறையில் குழந்தைப்பருவம் ஆனந்தமாக இருந்தது. ஏனென்றால் ஆசைகளே இல்லை அல்லது அற்ப ஆசைகள்தான். எளிய வாழ்க்கையில் ஆனந்தம் அடைந்தவர்களாக இருந்தோம். இப்போதைய குழந்தைகளைப் பார்த்தால் ஆசை என்பது குழந்தைப்பருவத்திலேயே  பெற்றோர்களாலேயே அறிமுகப்படுத்தப் படுகிறது. வளர வளர ஆசைகள் நிறைவிற முடியாத அளவில் வளர்கின்றன.குடிசை வாசியானாலும் மாளிகை வாசியானாலும் இது ஒரே மாதிரி உள்ளது. உலகத்திலேயே சிறந்த பணம் படைத்தோரும் ஆசையற்று இருப்பதில்லை.

SARASWATHI POOJA AS PER DHARMA SHASTRAM

🕉️

*SARASWATHI POOJA AS PER DHARMA SHASTRAM*

_Muleshu sthapanam devyah purvashadhasu pujanam_
_Uttarasu balim dadhyat shravanena visarjanam_

मूलेषु स्थापनं देव्याः पूर्वाषाढासु पूजनम् ।
उत्तरासु बलिं दध्यात् श्रवणेन विसर्जनम् ॥

Dharma shastra clearly tells us how we should do Saraswathi avahana and pooja. The meaning of this sloka is as below:

*Do avahana of Saraswati Devi on the day of Mula Nakshtram, continue the pooja on the following day during Purvashadha (pooradam) nakshatram, on Uttarashadha (uttaradam) nakshatra make special neivedhyam which includes items made of Urad dal (ulundu) like vada etc and on Shravana (thiruvonam) Nakshtra, do the visarjanam*

So on the day of Mula nakshatra we should put a palaka (wooden plank) and draw kolam on it. Gather all spiritual, vedic books, school books of your children, college books, office books etc. Apply chandanam and kumkumam on cover page of each of these books and stack them one above another on the palaka (wodden plank). Cover it with a white cloth (new white dhoti or silk cloth in white if you have). If you have a Saraswati idol or a photo, keep it over these books. In olden days, they would keep a mud Saraswati idol, which on last day they will do visarjanam in water (also mentioned at the end of the sloka). Offer a garland over these books, idol and perform avahana (invocation) and pooja of the book stack. Shastra says that Goddess Saraswati comes and resides in these books during these 3-4 days, reads your books and blesses them. Devi Saraswati likes white flowers, so your archanai can include white flowers.  As per Shastra, we should not read any books during these days as they are read by Goddess Saraswati and she blesses these books when she leaves on the last day. 

As per South Indian custom, however, we have not followed this and we keep books on Navami and then on Vijayadashmi, we perform Vidhyarambam and we read these books kept in the pooja on Vijayadashami day. Though Shastra recommends continuous daily pooja from Mula nakshatra to Sharavana, but due to certain reasons probably such as our children having to go to school daily, we having to go to office daily, compulsion of reading books everyday for exams, tuitions, office meetings etc, we have created our own Shastra and follow the current practice. So those who can follow the real recommendations of Shastras as per Shastra Pramaana are welcome to do so as per this article. 

On the last day of Vijayadashmi (Vidhyarambam) day, ensure all members of family assemble near the Sarawati pooja place. Perform pooja, harathi and then those members of the house whose books you have kept including yours, make them read their books and your read your books. Read 1-1 paragraph or 1-1 line from each book. This will stimulate your intelligence and ability to succeed, as these books were blessed by Saraswati because she stayed in them, accepted your poojas during these 3-4 days and after her, you are reading it on this auspicious day. Before reading the books one by one, chant the below sloka and then start reading:

सरस्वति नमस्तुभ्यं वरदे कामरूपिणि ।
विद्यारम्भं करिष्यामि सिद्धिर्भवतु मे सदा ॥

_Saraswati namastubhyam varade kamarupini_
_Vidyarambham karishyami siddhirbhavatu me sada_

Veda Ghosham strives to get people practise the real Shastra Pramaanita Anushtanam. Veda Ghosham runs special Anushatanam classes on Zoom and has students learning all across the globe. 

*Saying that I am Hindu is not of that relevance unless you practise Sanatana Dharma in true sense and become a practising Sanatani*

Email us to know more: vedaghosham@gmail.com

Follow us on Social media:

*Facebook:*





_Saraswathyay Namaha_

🕉️

Thursday, October 10, 2024

Why Dividend Stocks Are Very Important?

*Why dividend stocks are most important*

1) If you're going to be in the market for a long period of time, you might as well be getting paid.

2) If your portfolio drops in value, the dividends will help make up for some of the unrealized losses.

3) Cash flow is king. When you get paid a dividend the money is yours. You can only make money with non-dividend paying stocks when you sell. 

4) You have to hold the stock to get the dividend. This solidifies a long term investing mindset. That's powerful. Very few people can hold onto their stocks for long terk.

5) Dividends are quiet. You could be making 10k/month in dividends and nobody would know.

6) Dividends give you more dry powder to buy more shares at a discount. When the market drops, you'll be happy to have the extra capital.

7) Waking up to a dividend just hits different. It's money you've earned for doing zero work. You were getting paid in your sleep.

8) Your portfolio will keep on growing plus you will get dividends every month to fund your expeneses. You will get dual benefits.

So average investor, yes you.

Build a dividend portfolio from 2022-27 So it can pay your bills from 2027-rest of your life.

Snake & rope

What you see as 'snake' is in reality 'rope'.

The word substratum commonly used by advaitins can sometimes create confusions. 

The student may wrongly understand that there is a world and underneath the world, there is Consciousness.  
In other words, there is the world above and there is Consciousness below supporting the world.

But, with this wrong understanding, he will end up in dvaitam. It is like saying, 'underneath the snake, there is the rope'. 

What you see as 'snake', is in reality 'rope'.  
By right cognition, the imagined snake is displaced by the real rope. 

We don't retain snake and introduce the rope. We displace the snake by the rope. 

Similarly,  Brahma Jnanam displaces the world, by the knowledge of Brahman. 

Hence, Brahma Jnanam should displace the world, if not, the fight with the world will continue. 
The student wants to get Brahma Jnanam and use it to fighting worldly problems. Unfortunately, he will never win the fight with the world. 

The jnani should understand that there is no world to fight at all. 

Swamiji concludes, "Stop the fight. You have won".

Naishkarmya siddhi talks - Sw Paramarthananda

Wednesday, October 9, 2024

12 temple of srividya

ஶ்ரீத்ரிபுரா ரஹஸ்யத்தில் ஶ்ரீஹரிதாயனர் நாரதருக்குக் கூறிய ஶ்ரீவித்யா த்வாதச க்ஷேத்ரங்கள் :

அந்த க்ஷேத்ரங்களின் வைபவம் பின்வருமாறு

காஞ்சீபுரே து காமாக்ஷீ மலயே ப்⁴ராமரீ ததா² 
கேரலே து குமாரீ ஸா அம்பா³(ஆ)நர்தேஷு ஸம்ʼஸ்தி²தா. 

கரவீரே மஹாலக்ஷ்மீ: காலிகா மாலவே ததா
ப்ரயாகே³ லலிதா தே³வீ விந்த்⁴யே விந்த்⁴யநிவாஸினீ. 

வாரணஸ்யாம்ʼ விஶாலாக்ஷீ க³யாயாம்ʼ மங்க³லாவதீ
 வங்கே³ஷு ஸுந்த³ரீ தே³வீ நேபாலே கு³ஹ்யகேஶ்வரீ. 

இதி த்³வாத³ஶரூபேண ஸம்ʼஸ்தி²தா பா⁴ரதே ஶிவா 

 -- த்ரிபுரா ரஹஸ்யே மாஹாத்ம்ய காண்டம்

காஞ்சிபுரத்தில் ஶ்ரீகாமாக்ஷி 

மலயமலையில் ஶ்ரீப்ரமராம்பிகா

கேரளத்தில்(கன்யாகுமரி) ஶ்ரீகன்யாகுமாரி

ஸௌராஷ்டரத்தில் ஶ்ரீஅம்பா தேவி

கரவீரமெனும் கோல்ஹாபுரத்தில் ஶ்ரீமஹாலக்ஷ்மி

மாளவத்தில் ஶ்ரீகாளிகா

ப்ரயாகையில் ஶ்ரீலலிதா பரமேஶ்வரி

விந்த்யாசலத்தில் ஶ்ரீவிந்த்யாசலவாஸினி

காசி க்ஷேத்ரத்தில் ஶ்ரீவிஶாலாக்ஷி

கயா க்ஷேத்ரத்தில் ஶ்ரீமங்கலாவதி

வங்காளத்தில் ஶ்ரீஸுந்தரி தேவி

நேபாளத்தில் ஶ்ரீகுஹ்யஸுந்தரி

இந்த த்வாதஶ மஹாபீடங்களை ஸ்மரித்த க்ஷணத்திலேயே ஒருவன் மஹாபாபங்களிலிருந்து விடுபட்டு ஶ்ரீபராஶக்தியின் கருணைக்கு பாத்திரமாகிறான்

Speaking truth - HH Sri Abhinava vidyateertha Mahaswamigal

*4. Spotlight on Speaking the Truth*

A person stole some goods. He was accosted and made to take an oath that he would answer truthfully. He said, "As long as there is life, I shall speak the truth." He was then cross -examined. He flatly denied that he had stolen anything. On the basis of his testimony, he was let off. A friend of his, who had participated in the vile act, asked him," Why did you utter falsehood so brazenly in spite of the oath that you took?" The man nonchalantly replied, "I did not lie. All that I said was true. I agreed to spell out the truth as long as there was life. I had an insect in my hand. Before I started answering, I crushed the insect to death. Hence my statement, 'I shall speak the truth as long as there is life', continued to hold."

This is an example of sophistry. When a person has something in mind but makes equivocal or confusing statements so as to cause the listener understand something else, he is guilty of having deviated from the truth. To speak the truth, as insisted upon by the scriptures, one's words should accord with one's thoughts. The next point to be noted with regard to veracity is that one should speak what is pleasant. But uttering what is pleasant does not imply speaking what is not factual. 

A mischievous person decided to fool a friend of his. He went to his friend and said in an excited voice, "Are you not aware that you have won ten lakhs in a lottery? How can you sit here so calmly?" The friend was dumbfounded. When his amazement decreased a little, he began to build castles in the air. In the meantime, the prankster left. Finally, the man took up a newspaper to have the pleasure of seeing his lottery-ticket number there. When he could not find it, his exultation have way to total dejection. This is an example of pleasant untruth. 

One should not irresponsibly verbalize a distressing truth. Following a massive heart-attack, a person was convalescing in a hospital. One day, his son was involved in a road accident and died. A person who had witnessed the accident rushed to the hospital and exclaimed to the heart-patient, "Do you know what has happened? Your son has died!" The person, who was very fond of his son, could not bear the terrible news. As his heart was already weak, he breathed his last. The conduct of the person who conveyed the bad news was blameworthy. 

To sum up, one should speak the truth. Further, one's words should be pleasant and beneficial to others. Distressing truths ought not to be irresponsibly verbalized and words should not be chosen so as to mislead others. 

*(Source: From Sorrows to Bliss - Motivating Narratives.*
*Published by the Centre for Brahmavidya, Chennai).*

Carry your own heaven - spiritual story

**Carry Your Heaven Within You 
- A Beautiful Sufi Story** 

The Sun and the Cave

One day the sun and a cave struck up a conversation. The sun had trouble understanding what *"Dark"* meant and the cave didn't quite get the hang of *"light and clear"* so they decided to change places. 

The cave went up to the sun and said, *"Ah, I see, this is beyond wonderful. Now come down and see where I have been living."*

The sun went down to the cave and said, *"Gee, I don't see any difference."*
                         🌞 
When the sun went down, it took its light along and even the darkest corners were illuminated. That's why the sun couldn't see any difference. 

One of the quotes says *"The enlightened ones can never be sent to hell or pushed into darkness. They carry their heaven on their shoulders all the time"*.

We were under the impression that heaven is a place where we should go, now we realize it is our state of mind which imagines heaven or hell. 

If you are full of darkness, full of negativity, fear and doubt, you become a cave unknowingly. It's a hell within and no matter how much you accumulate, you still remain hollow. 

On the other hand If you are illuminated like the sun, then the darkness of the cave wouldn't matter. You could be in the worst of circumstances, yet you be will still be able to find a blessing somewhere.

*Carry your heaven within you!!*

Tuesday, October 8, 2024

Srimad Ramayana Aranya kandam part 17a in sanskrit

*श्रीरामायणकथा, अरण्यकाण्डम्!*
(सप्तदशः सर्गः)
कबन्धवधः।
(द्वितीयः खण्डः)

तदा सः कबन्धराक्षसः चीत्कारं कुर्वन् भूमौ अपतत्। भूमौ पतित्वा सः अपृच्छत् हे वीरौ! युवां कौ? लक्ष्मणः तदा  तयोः सम्पूर्णं परिचयम् अददात्।
रामलक्ष्मणयोः परिचयं प्राप्य सः राक्षसः रामम् अवदत् हे महाबाहो राम! पूर्वम् अहम् अत्यन्तं पराक्रमी आसम्, किन्तु पराक्रमी सन्नपि राक्षसरूपं धृत्वा ऋषीन् सर्वदा भायये स्म। 
एकदा स्थूलशिरा-नामकः महर्षिः कुपितः भूत्वा मह्यं शापम् अददात् यद् अहं राक्षसः भवेयम् इति। तस्मात् शापात् मुक्तये यदा अहं प्रार्थये स्म तदा सः अवदत्, यदा रामः तव हस्तौ कर्तयेत् तदा तव मुक्तिः भविष्यति। हे पुरुषश्रेष्ठ! भवान् मह्यं राक्षसयोनेः मुक्तिं प्रदाय मम महान्तम् उपकारम् अकरोत्। इदानीम् इतोपि एकम् उपकारं करोतु यद् भवान् स्वयं मम दाहसंस्कारं करोतु।

कबन्धस्य प्रार्थनां श्रुत्वा रामः अवदत् हे राक्षसराज! अहं तव इच्छाम् अवश्यं पूरयिष्यामि। अहं त्वत् काञ्चित् सूचनां प्राप्तुम् इच्छामि, आशासे यत् त्वम् अवश्यं दास्यसि।  मम अनुपस्थितौ दण्डकारण्यात् लङ्कापतिः रावणः मम पत्नीम् अपहृत्य अनयत्।  अहं तस्य बलम्, पराक्रमः, स्थानं च इत्यादीनां विषये ज्ञातुम् इच्छामि। यदि त्वं जानासि तर्हि कथय।

रामस्य प्रश्नं श्रुत्वा कबन्धः अवदत् हे रघुनन्दन! रावणः महान् बलवान् शक्तिशाली च नरेशः अस्ति। तस्मात् देवः, दानवः, यक्षः, गन्धर्वः च इत्येते सर्वे भीताः भवन्ति। तं पराजेतुं भवान् बुद्ध्या कार्यं कुर्यात्। भवान् इतः पम्पासरोवरं गच्छतु। तत्र ऋष्यमूकपर्वते वानराणां राजा सुग्रीवः तस्य चतुर्भिः वीरैः सह निवासं करोति। सः अत्यन्तं वीरः पराक्रमी तेजस्वी बुद्धिमान् धीरः नीतिनिपुणः चास्ति। तस्य विशालपराक्रमिसेना अप्यस्ति, यस्याः साहाय्येन भवान् रावणस्य उपरि विजयं प्राप्तुं शक्नुयात्।

तस्य ज्येष्ठभ्राता बालिः तस्य राज्यं पत्नीं च अपाहरत्। यदि भवान् सुग्रीवेण सह मित्रतां कुर्यात् तर्हि भवतः उद्देश्यं सफलीभवेत्। सः राक्षसानां सर्वमपि स्थानं जानाति। तेषां मायामपि सः सम्यग् अवगच्छति। अस्मिन् समये तस्यापि कस्यचन विश्वस्तपराक्रमिमित्रस्य  आवश्यकता अस्ति।

यदि भवान् तस्य सखा भवेत् तर्हि सः वानरान् प्रेषयित्वा सीतायाः अन्वेषणं कारयेत्, सममेव सः सीतां प्रत्यानेतुं भवतः साहाय्यं करिष्यति। 
एतावद् उक्त्वा राक्षसः कबन्धः स्वीयान् प्राणान् अत्यजत्। रामचन्द्रः तस्य अन्तिमसंस्कारं कृत्वा लक्ष्मणेन सह पम्पासरोवरं प्रति प्रस्थानम् अकरोत्। पम्पासरोवरस्य निकटे हि तौ कञ्चन सुन्दरं सरोवरम् अपश्यताम्। तस्मिन् सरोवरे तौ उभावपि स्नानम् अकुरुताम्।
*-प्रदीपः!*

Soundaryalahari sloka 19

soundharyalahari 

19. mukham bindhum krthvaa 
    kuchayugam aDhasthasya thadhaDho
    haraarDham Dhyaayeth yo 
    haramahishi the manmaTha kalaam
    sa sahyaH samkshobham nayathi
    vanithaa ithyathilaghu
   thrilokeem apyaaSu bhramayathi
   raveendhusthanayugaam

முக²ம்ʼ பி³ந்து³ம்ʼ க்ருʼத்வா குசயுக³மத⁴ஸ்தஸ்ய தத³தோ⁴
ஹரார்த⁴ம்ʼ த்⁴யாயேத்³யோ ஹரமஹிஷி தே மன்மத²கலாம் .
ஸ ஸத்³ய꞉ ஸங்க்ஷோப⁴ம்ʼ நயதி வனிதா இத்யதிலகு⁴
த்ரிலோகீமப்யாஶு ப்⁴ரமயதி ரவீந்து³ஸ்தனயுகா³ம் .. 19..

    
Oh the consort of Hara, one who meditates on your face as the bindhu at the centre of Srichakra and your breasts and the bottom which is half body of Siva, ( that makes the triangle of Srichakra , I think), and contemplates on the kaamakalaa beejam , kleem , brings with in his power the kama shakthi devathas easily. And he will enchant even the damsel of three worlds having the Sun and the moon as her breasts.

haramahishi- Oh the consort of Hara

yo krthvaa- one who making
mukham- your face

bindhum krthvaa-as the bindhu of srichakra

kuchayugam- and the breasts 

thasya aDhaH- which is below that

thath aDhaH- and that below

haraarDhyam- which is the half of Siva 

Dhyaayeth- meditates

the  manmaTha kalaam—your kaamlkalaa( represented by kleem)

saH -he

sadhyaH- at once 

samkshobham nayathi-brings under his power 

vanithaaH – the kaamashakthis

ithi athi laghu- very easily.

Bhramayathi- also enchants

aaSu- quickly

thrilokeem api- even the three worlds as a woman

raveendhusthanayugaam- having the Sun and the Moon as her breasts.

20. kirantheem angebhyaH kiraNa nikurumbamrtharasam
      hrdhithvaam aaDhatthe himakaraSilaamoorthim iva yaH
      sa sarpaaNaam dharpam samayathi sakunthaaDhipa iva
jvaraplushtaan  dhrshtyaa sukhayathi suDhaaDhaarasirayaa

கிரந்தீமங்கே³ப்⁴ய꞉ கிரணனிகுரம்பா³ம்ருʼதரஸம்ʼ
ஹ்ருʼதி³ த்வாமாத⁴த்தே ஹிமகரஶிலாமூர்திமிவ ய꞉ .
ஸ ஸர்பாணாம்ʼ த³ர்பம்ʼ ஶமயதி ஶகுந்தாதி⁴ப இவ
ஜ்வரப்லுஷ்டான் த்³ருʼஷ்ட்யா ஸுக²யதி ஸுதா⁴தா⁴ரஸிரயா .. 20..

One who meditates on you in his heart oozing stream of nectar from your limbs like an embodiment of moonstone quells the power of the serpents like Garuda  and cures those afflicted with fever by his glance which is endowed with nectarine veins.

yaH aaDhatthe- one who holds 

thvaam- you

hrdhi-in his heart 

kirantheem-oozing 

angebhyaH –from your limbs

kiraNa nikurumbamrtharasam-nectar in the form of cluster of rays

himakaraSilaamoorthim iva-like the moonstone

sa Samayathi-he quells 

dharpam- the power (pride) 

sarpaaNaam-of the serpents

sakunDhaadhipa iva- like Garuda

sukhayathi- make well

jvaraplustaan- those afflicted by fever

dhrshtyaa- by glance 

suDhaadhaara sirayaa-which is with nectarine veins.
 

21.thatillekhaathanveem thapanaSasivaiSvaanaramayeem
    nishaNNaam shaNNaam apyupari kamalaanaam thava 
                                                                              kalaam
    mahaapadhmaatavyaam mrdhithamalamaayena manasaa
    mahaanthaH paSyanthaH dhaDhathi
                                                   paramaahlaadhalahareem

தடில்லேகா²தன்வீம்ʼ தபனஶஶிவைஶ்வானரமயீம்ʼ
நிஷண்ணாம்ʼ ஷண்ணாமப்யுபரி கமலானாம்ʼ தவ கலாம் .
மஹாபத்³மாடவ்யாம்ʼ ம்ருʼதி³தமலமாயேன மனஸா
மஹாந்த꞉ பஶ்யந்தோ த³த⁴தி பரமாஹ்லாத³லஹரீம் .. 21..

The great souls who see the subtle light of You  like the ray of lightning and which gives power  to Sun, Moon and Fire and which settles at sahasrara on the top of the six lotuses(chakras) in the great forst of lotuses with purified minds will experience the waves of supreme bliss

mahaanthaH-the great souls

paSyanthaH- who see
manasaa – with mind

mrdhitha malamaayena- purified of all imperfections like desire, anger etc.,

thava kalaam- your kala known as saadhaa

thatillekhaathanveem – which is subtle like the line of lightning
( sookshmathejas)

thapanaSasivaiSvaanaramayeem- which shines in the Sun, Moon and Fire

nishaNNaam- which settles 

upari- on the top 

shaNNaam kamalaanaam- of the six lotuses, meaning the chakras , the light of the Devi travelling trough the six chakras and settling down at sahasrara where she unites with Siva.

mahaapadhmaatavyaam- in the great forest of lotuses

dhaDhathi- enjoy

paramaahlaadha lahareem-waves of supreme bliss.