ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - நங்கநல்லூர் J K SIVAN
நாமங்கள்: 10- 20
मनोरूपेक्षु-कोदण्डा पञ्चतन्मात्र-सायका ।
निजारुण-प्रभापूर-मज्जद्ब्रह्माण्ड-मण्डला ॥ ३॥
Mano Rupeshu Kodanda Pancha than mathra sayaka
Nijaruna prabha poora majjath brahmanda mandala
மநோரூபேக்ஷு கோதண்டா பஞ்சதந்மாத்ரஸாயகா |
நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா || 3
चम्पकाशोक-पुन्नाग-सौगन्धिक-लसत्कचा ।
कुरुविन्दमणि-श्रेणी-कनत्कोटीर-मण्डिता ॥ ४॥
Champakasoka – punnaga-sowgandhika-lasath kacha
Kuru vinda mani – sreni-kanath kotira manditha
சம்பகாசோகபுந்நாக ஸௌகந்திகலஸத்கசா |
குருவிந்தமணி ச்ரேணீகநத் கோடீரமண்டிதா || 4
अष्टमीचन्द्र-विभ्राज-दलिकस्थल-शोभिता ।
मुखचन्द्र-कलङ्काभ-मृगनाभि-विशेषका ॥ ५॥
Ashtami Chandra vibhraja – dhalika sthala shobhitha
Muka Chandra kalankabha mriganabhi viseshaka
அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா |
முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா || 5
वदनस्मर-माङ्गल्य-गृहतोरण-चिल्लिका ।
वक्त्रलक्ष्मी-परीवाह-चलन्मीनाभ-लोचना ॥ ६॥
Vadana smara mangalya griha thorana chillaka
Vakthra lakshmi –parivaha-chalan meenabha lochana
வதநஸ்மரமாங்கல்யக்ருஹதோரணசில்லிகா |
வக்த்ரலக்ஷ்மீபரீவாஹசலந்மீநாப லோசநா || 6
नवचम्पक-पुष्पाभ-नासादण्ड-विराजिता ।
ताराकान्ति-तिरस्कारि-नासाभरण-भासुरा ॥ ७॥
Nava champaka –pushpabha-nasa dhanda virajitha
Thara kanthi thiraskari nasabharana bhasura
நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா |
தாராகாந்திதிரஸ்காரிநாஸாபரண பாஸுரா || 7
ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 10-20
* 10 * मनोरूपेक्षुकोदण्डा - மநோரூபேக்ஷு கோதண்டா -
அவள் கையில் இருக்கும் கரும்பு வில் என்ன உணர்த்துகிறது? . அவள் இனிய மனத்தை தான் குறிப்பிடுகிறது. பக்தர்களை அன்போடு ரட்சிக்கும் தாயல்லவா? அதனால் ஒரு இடது கையில் கரும்பு வில். நல்லவர்க்கு கரும்பு. அதுவே தீயோர்க்கு இரும்பு !
* 11 * पञ्चतन्मात्रसायका -பஞ்சதந்மாத்ரஸாயகா -
தன்மாத்திரைகள் ஐந்து என்ன தெரியுமா? ஐம்புலன்களினால் நான் அனுபவிப்பது.
தொடுவது, நுகர்வது, கேட்பது, ருசிப்பது, காண்பது. இவற்றை அவள் அளித்த, மெய், வாய் கண் மூக்கு செவி எனும் இந்திரியங்களால் உணர்கிறோம். இவை ஐந்தும் ஐந்து வில்லாக ஏந்தியவள் . அவளின்றி நாம் ஏதும் செய்ய இயலாதவர்கள் என்று பொருள் தருகிறது அல்லவா?
12 * निजारुणप्रभापूरमज्जद्ब्रह्माण्डमण्डला - நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா -
உதய சூரியனை கண்டு ஆனந்தித்ததுண்டா? செக்கச்செவேலென கிழக்கே, பெரிய உருண்டை யாக, இன்னொரு உலகமோ என்று வியக்க வைக்கும் செந்நிறம் அம்பாளுடையது. அதில் இந்த புவனமே அடக்கம்., எல்லா மண்டலங்களுமே என்கிறார் ஹயக்ரீவர் அகஸ்தியருக்கு.
* 13 * चम्पकाशोकपुन्नागसौगन्धिकलसत्कचा -சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா -
அம்பாள் தனது சிரசில் என்னென்ன மலர்களை சூடிக்கொண்டிருக்கிறாள் என்று ஹயக்ரீவர் அறிவார் அல்லவா?. சொல்கிறார் அகஸ்தியருக்கும் நமக்கும். "செண்பகம், புன்னாகம், சௌகந்திகா, (இந்த நறுமண மலரைத் தேடிக்கொண்டு தான் பீமன் விண்ணுலகு சென்று வழியில் ஹனுமான் வாலை நகர்த்தமுடியாமல் தவித்தான்)
* 14 * कुरुविन्दमणिश्रेणीकनत्कोटीरमण्डिता -குருவிந்தமணி ச்ரேணீகநத் கோடீரமண்டிதா -
ஆஹா, வரிசை வரிசையாக பல வித வர்ணங்களில் கண்ணைப்பறிக்கும் நவரத்ன ஈடற்ற மணிகள் பதித்த பத்ம ராக, வைர வைடூர்ய, கோமேதக, மாணிக்கம் , முத்து, பவழ மணி மகுடம் தரித்திருக்
கிறாள் அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை. குருவிந்தமணியைத்தான் குந்துமணி என்று பிள்ளையாருக்கு கண்ணாக வைத்து விநாயக சதுர்த்தியில் களிமண் பிள்ளையார் வாங்குகிறோம். சிவப்பில் கருப்பு புள்ளி அழகோ அழகு.
* 15 * अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता -அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா -
அஷ்டமி அன்று ராத்திரி சந்திரன் கண்டு களித்ததுண்டா?ஒருநாள் மொட்டைமாடியில் நின்று ரசித்தால் தெரியும். அந்தமாதிரி ஒளியுள்ள, பூரண காந்தியான நெற்றிஅவள் முக லாவண்யத் திற்கு எடுப்பாக, பொருத்தமாக இருப்பவள்.
* 16 *मुखचन्द्रकलङ्काभमृगनाभिविशेषका - முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா --
எவ்வளவு விசாலமான அழகிய சந்திரன் போன்ற நெற்றி. அதில் அழகு சேர்க்கும் கஸ்தூரி திலகம், ஹயக்ரீவர் அது எப்படி இருக்கிறது என்று ஒரு உதாரணம் தருகிறார். நான் மேலே சொன்ன சந்திரனில் ஒரு கருப்பு நிழல் தெரியுமே அது போல , என்கிறார். சிலர் அதை பாட்டி உட்கார்ந்து தோசைக்கு மாவு அரைக்கிறாள் என்பார்கள், சிலர் முயல் என்பார்கள், சந்தாமா, அம்புலிமா, பத்ரிகை இந்த முயல்சின்னத்தை பிரபலமாக்கியது.
* 17 * वदनस्मरमाङ्गल्यगृहतोरणचिल्लिका -வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா --
இதோ அழகாக இருக்கிறதே இது தான் மன்மதன் வசிக்கும் இடமா என்று சந்தேகம் வருகிறதா? இல்லை, அத
No comments:
Post a Comment