மகாபாரத்தில் மிகவும் அறியப்படாத ஒரு கதாபாத்திரம்!
யுயுத்சு என்கிற வீரனின் கதாபாத்திரம்!
.................................................................
அனைவருக்கும் எனது வினீதம்கூடிய அனேகநமஸ்காரங்கள்!
ஒருதடவை வியாசபகவான் அஸ்தினாபுரத்தில் விஜயம் செய்தார்!
மகாராஜன் திருதாஷ்டரன் அவரை வரவேற்கும் பொறுப்பை தனது கெட்டியோளாகிய காந்தாரியிடம் ஒப்படைத்தார்!
காந்தாரியின் விருந்து உபசரிப்பில் சந்தோஷித்து நெடுநாட்களாக கர்ப்பஸ்திரீ ஆகாமல் இருந்த காந்தாரிக்கு சந்தானபாக்கியம் நல்கினார்!
புத்திரபாக்கியம் வரவேண்டி அனுக்கிரம் செய்தார்!
ஆகையினால் அவளும் கர்ப்பிணிஸ்த்ரீ ஆகிவிட்டாள்!
அதேசமயம் குந்திதேவியோ பலரோடு கூடி ஐந்து புத்திரர்களை ஜனனம் கொடுத்துகொண்டிருந்தாள்!
காந்தாரிக்கு இரண்டுவர்ஷகாலம் ஆகியும் கர்ப்பம் இருந்தாலும் சிசு ஜெனிக்கவில்லை!
குந்திக்கு அழகான புத்திரர்கள் ஜெனிக்கின்றார்கள்!
,தனக்கு மட்டும் குழந்தைகள் ஜெனிக்கமாட்டேங்கின்றார்களே? என்று
குந்திதேவியின் மீது பொறாமை கொண்டு தனது கர்ப்பமான வயிற்றில் இரும்பு உலக்கைகொண்டு பலதடவை குத்தினாள்!
ஆகையினால் ரத்தபோக்கு ஏற்பட்டது! கர்ப்பம் சிதிலடைந்து போனது!
அதையறிந்த
வியாச முனிவர் ,
அந்த இரத்தபோக்கை நூறு பரணி குப்பியில் பிடித்து, மேலும் மற்றொரு குப்பியில் தனியாகவும் வைத்து இருட்டறையில் வைக்கசொன்னார் தாசிஸ்த்ரீமார்களிடம்
பரணிகுப்பியில் நூறு சிசுக்கள் வளரதொடங்கியது!
ஒவ்வொருவராக சிசுக்கள் ஜெனித்தார்கள்
முதலில் துரியோத னன் ஜெனித்தார்!
நூறு கௌரவன்மார்கள் ஜெனித்தார்கள்!
தனியாக வைக்கப்பட்ட குப்பியில் ஒரு பெண்குழந்தை ஜெனித்தது!
அவ்ளதான் " துச்சளை "
ஆகமொத்தம் நூறு புத்திரன்மார்களும் ,ஒரு மகளும் காந்தாரிக்கு ஜெனித்தார்கள்!
இரண்டுவர்ஷகாலம் கர்ப்பம் தாங்கியதாலும் கடுமையான உதிரபோக்கும் உண்டதாலும்!
நூற்றிஒன்று பிள்ளைகளை கவனிக்கவேண்டியும் அவளால் தனது கெட்டியாகிய திருதாஷ்டரனை கவனிக்கமுடியவில்லை!
அவரை கவனித்துகொள்ளவேண்டி ,
" சுகதா "என்கிற தாசிஸ்த்ரீயை வைத்தாள் காந்தாரி!
காலபோக்கில் திருதாட்ரனுக்கு அந்த தாசிஸ்த்ரீயோடு உறவு ஏற்பட்டது .
பார்வையில்லாமல் இருந்தாலும் சுகதா என்கிற ஸ்த்ரீயிடம் இருவரும் தாங்களின் சரீரத்தை பங்குவைத்தார்கள்!
அவர்களுக்கு ஜெனித்தவன் தான் "யுயுத்சு " என்கிற மகன்!
அச்சடித்ததுபோல் திருதாஷ்டரன் போல் இருந்தான்! அவனுக்கு கண்களில் எந்தவிதமான பார்வை குறைபாடுகள் இல்லாமல் ஜெனித்தான்!
அவனுக்கு திருதாஷ்டரன் தோற்றமும், ஆனாலும்கூட விதுரரின் நல்சுபாவமும் இருந்தது
அவன் வளர்ந்து ஒரு நல்லப்ராயம் அடைந்தான்
அவனுக்கு கௌரவன்மார்களோடும் ,பாண்டவன்மார்களோடும் சகோதரஸ்னேகம் ஒருபோல் பழகிவந்தான்!
மேலும் கண்ணனோடும் மிகபெரிய அபிமானம் கூடிய மரியாதை இருந்தது!
யுயுத்சு மற்ற கௌரவர்கள் போல் துஷ்டசுபாவசீலங்களோ? பாண்டவன்மார்களிடம் வஞ்சனை கோபமோ? கொண்டவனில்லை!
எப்போதுமே நியாயம் நீதியிலிருந்து தவறியவனும் இல்லை!
குருக்ஷேத்திரம் தொடங்கும்போது அன்றைக்கு யானைகளும், பரிவாரங்களோடு குதிரைகளும், பல்வேறுவிதமான மிருகங்கள், சைனிகஸேனகர்களும் குருக்ஷேத்திர யுத்தபூமியில் இரண்டு பக்கமும் கூடியிருந்தார்கள்!
அர்ஜீனன் சொன்னான்!
எதிரில் நிற்கின்ற எல்லா நூறு கௌரவன்மார்களும் கொல்லப்படவேண்டும் என்றான்!
ஆனால் மாதவனோ?
ஒரு கௌரவன் கொல்லப்படகூடியவில்லை என்றார்!
இதைகேட்ட அர்ஜீனன் கண்ணனை ஆச்சர்யம் கலந்த பார்வை பார்த்தான்!
கண்ணன் உத்தேசித்தது யுயுத்சுவை மனதில் வைத்துதான்!
யுதிஷ்ட்ரன் திடிரென ஒரு அறிவிப்பை யுத்தகளத்தில் உரக்கசொன்னார்!
இந்த பக்கம் இருக்கும் பாண்டவசேனைகளிலோ?
அல்லது கௌரவர்கள் சேனைகளையிலோ? யாருக்காவது? தங்களது மனதுபோல் எந்தபக்கம் என்பதை இப்போது தீர்மானிக்கலாம்!
இதை தவறாக பார்க்கப்படாது?
அவர்களை பழிவாங்குவதற்கும் உத்தேசம் இல்லை என்றார்!
அவரவர்கள் மனசாட்சி படி எந்த அணிகளில் மாறிகொள்ளலாம்? கடைசி சந்தர்ப்பம் கொடுக்கப்படுகின்றது!
இதைகேட்ட இரண்டு அணி வீரர்களும் மௌனம் காத்தார்கள்!
அப்போதுதான் அந்த அதிசயசம்பவம் நடந்தது!
கௌரவசேனையிலிருந்து ஒரு தேர் பாண்டவர்கள் பக்கம் நகர்ந்தது!
அதுயாருமில்லை! சாட்சாத் யுயுத்சுவின் தேர்தான்!
இதை கண்ட துரியோதன் கடும்கோபம்கொண்டான்!
அவனை பார்த்து அம்புகுறி வைத்தான்!
அதைகண்ட பீஷ்மரோ!
துரியோதனே அவனை ஒன்றும் செய்யயாதே!
அவன் ஒரு தர்மவீரன்!
ஆகையினால் தான் யுதிஷ்ட்ரன் வார்த்தையை கேட்டு அவர்கள் அணிக்கு செல்கின்றான்!
அவன் போனால்போகட்டும்!
அவன் ஒருவன் போவதால் நமக்கு ஒன்றுமே நஷ்டப்படவேண்டியதில்லை! என்றார்!
அவன் அங்கே சென்றவுடன் யுத்தங்கள் தொடங்கும்போது நம்முடைய கௌரவர்க படைவீரன் கொண்டு அவன் நிச்சயமாக கொல்லப்பட்டு விடுவான்! நீ பொறுமை காக்கவேண்டும்!
அதைகேட்ட துரியோதன் அம்பை அம்பறாத்தூணியில் வைத்துகொண்டான்!
கண்ணன் சொன்னான்!
அல்லயோ! அர்ஜீனனே!
இந்த யுயுத்சு ஒரேநேரத்தில் ஆறாயிரம் வீரர்களை ஒரேநேரத்தில் அழிக்ககூடியவன்!
ஒருமுறை உங்களின் பால்யகாலத்தில் துரியோதன் பீமனை கொல்லவேண்டி கிணற்று குடிக்கும் நீரில் விஷம் கலந்துகொடுத்தான்!
அதை பீமனிடம் சொல்லி அவனை ரக்ஷித்தவன்தான் யுயுத்சு ஆவான்! என்றார்!
ஆகையினால் இவனை ரக்ஷிக்ககூடிய உத்தரவாதம் பாண்டவன்மார்கள் ஆகிய உங்களுக்கும் உண்டு!
அவனை கடைசிவரைக்கும் அவனை காக்கவேண்டியதும் என் கடைமையாகும் என்றார்
அன்றைக்கு முதல்நாளில் யுத்தங்கள் முடிந்தபின்னர் அனைவரும் தாங்களின் பாசறைக்கு சென்றுவிட்டார்கள்!
அங்கே கண்ணன் யுயுத்சுவையும் கூட்டிகொண்டு பாண்டவன்மார்கள் பக்கம் வந்து!
இவன் திருதாஷ்டரன் போல் தோற்றம் கொண்டிருந்தாலும் அவனின் சுபாவகுணங்கள் பார்க்கும்போது விதுரர் போல் நேர்மை தவறாதவன்!
விதுரர் ஒரு தாசிஸ்த்ரீக்கு தான் ஜெனித்தார்!
அதேபோல்தான் இவனும் ஒரு தாசிஸ்த்ரீக்குதான் ஜெனித்தான்!
அர்ஜீனன் கேட்டான்!
அல்லயோ?
கண்ணனே!
கடைசிவரைக்கும் அவனின் ஜீவனை ரக்ஷிக்கவேண்டும் என்றீர்கள்! எந்த உத்தேசத்தில் சொன்னீர்கள்? என்றான்!
அர்ஜீனனே! இது தர்மயுத்தம், இந்த யுத்தத்தில் நிச்சயமாக நாம் விஜயிப்போம்! கௌரவன்மார்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள்!
கடைசியாக கடைசிகாலத்தில் திருதாஷ்ட்ரனக்கும் மரணம் வரும், அப்போது திருதாஷ்டரன் மரணசடங்குகளில் அவருக்காக அந்திம கர்ம்மங்கள் செய்ய ஆள் வேண்டாமா?
ஒரு மகன் வேண்டாமா? என்றார்.
மாதவன் சொன்னதும் அர்ஜீனக்கும் சரியாக பட்டது!
அதேபோல் யுத்தத்தில் பாண்டவன்மார்கள் விஜயித்து யுதிஷ்ட்ரன் பதவிப்ரமாணம் ஏற்றுகொண்டு அஸ்தினாபுரத்தில் ஆட்சியை நடத்திகொண்டு இருந்தபோது பாண்டவன்மார்கள் அனைவரும் சொர்க்கம் சென்றபோது யுயுத்சு தான் ராஜபதவியை ஏற்றெடுத்து நல்லாட்சி நடத்தினார்!
அதன்பிறகு அபிமன்யு புத்திரனாகிய பரீக்ஷத் வளரும்வரை யுயுத்சுவே ராஜபரணமும் நடத்திவிட்டு அதன்பிறகு ராஜபதவியை பரீக்ஷததிடம் ஒப்படைத்துவிட்டு தன்னுடைய தாயாராகிய சுகதாவை கூட்டிகொண்டு அஸ்தினாபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்றுவிட்டான்!
அதன்பிறகு
அதன்பிறகு அஸ்தினாபுரத்தில் திரும்பவேயில்லை!
இவன்.
ஸ்னேகம்கூடிய
அஜய்குமார்
No comments:
Post a Comment