Monday, January 15, 2024

Ramayana in 108 lines

தசரதன் ஒரு சிறந்த 
ராஜ குமார                                          ராம்

அவரது தர்ம 
பத்தினிகள் மூவ                        ராம்

பலநாள் பிள்ளைப் பேறு 
இன்றித் தவித்தா                        ராம்

புத்திர காமேக்ஷ்டி யாகம்
ஒன்றைச்  செய்தா                      ராம்

நிவேதனப் பாயசம் 
துணைவிகள்  அருந்தின         ராம்

அதன் பலனாய் மகவு 
நால்வரைப் பெற்றன                ராம்

கோசலையின் தவப் 
புதல்வன் ஸ்ரீராமச்சந்திர         ராம்

கைகேயி மகன் 
பரதன் என்பவ                          ராம்

சுமத்திரை ஈன்றது 
லஷ்மண சத்ருக்னன               ராம்

நால்வரும் படிக்கக்
குருகுலம் சென்றன                 ராம்

பிள்ளைகளின் குரு
விஸ்வாமித்ர   முனிவ            ராம்

நால்வரும் ஆய கலைகள்
நன்கு கற்றன                            ராம்

முனிவர் யாகம் 
ஒன்று நடத்தினா                     ராம்

அதில் தடைகளை
ராட்சதர்கள் புரிந்தன              ராம்

இவர்களின் செயல்களை
அடக்க நினைத்தா                  ராம்
 
ராம லஷ்மணனைக்
கூட்டிப்போக வேண்டினா     ராம்

தசரதன் மகன்களை
அனுப்பத் தயங்கினா             ராம்

பின்னர் முனிவரின் 
விருப்பம் ஏற்றா                      ராம்

காட்டில் ராட்சதர்கள்
அதர்மம் செய்தன                  ராம்

ராமர் அவர்களை
அடக்கி அழித்தா                   ராம் 

மன்னன் பிள்ளைகளின்
வீரம் கேட்டா                           ராம்

மனதில் மட்டற்ற
உவகை அடைந்தா                 ராம்

ஜனகன் மிதிலை
தேசத்து மன்னவ                    ராம்

நிலத்தை உழுகையில்
சீதையைக் கண்டவ                ராம்

மகளைப் பண்புடன்
அழகாக வளர்த்தா                 ராம்

சீதையின் மாளிகையில்
சோதரிகளும்  நால்வ             ராம்

சீதைக்கு சுயம்வரம்
தந்நை நடத்தினா                   ராம்

சிவ தனுசை ஒடிக்க
நிபந்தனை விதித்தா              ராம்

முனிவரின் ஆசியுடன்
ராமரும் சென்றா                     ராம்

மிதிலையில் சீதையை
மாடத்தில் பார்த்தா                 ராம்

அண்ணலும் அவளும்
ஒன்றாய் நோக்கின                ராம் 
 
வில்லை எடுத்தது கண்டு 
இற்றது கேட்டன                    ராம்

மிதிலை மக்கள் 
மகிழ்ச்சியில் திளைத்தன     ராம்

ராமரும் ஜனகனின்
மருமகன் ஆனா                    ராம்

சீதா ராமன் ஆனந்தமாக
வாழ்வைத் துவக்கினா          ராம்

மகனுக்குப் பட்டமளிக்க
மன்னவன் நினைத்தா           ராம்

அரசவையைக் கலந்து
நல்ல நாள் குறித்தா               ராம்

மக்களிடம் மகிழ்ந்து
விழா குறித்துக்  கூறினா       ராம்

அனைவரும் அழகிய
தோரணங்கள் கட்டின            ராம்

பட்டாபிஷேகம் காண
ஜனங்கள் ஏங்கின                  ராம்

கைகேயியின் ஆருயிர்த்
தோழி கூனி என்பவ               ராம்

அவளது போதனையால்
கைகேயி மனம் மாறினா         ராம்

கணவன் தசரதனைக் 
கண்டு வெகுண்டா                   ராம்

முன்னரே தான் கேட்ட
இரு வரம் பற்றிக் கூறினா       ராம்

ஒன்றின்படி தன் மகன்
பரதன் மன்னவ                         ராம்

அடுத்தது ராமன் 
வனம் புக விழைந்தா                ராம்

மனைவியின் வாக்கினை
தசரதன் ஏற்றா                            ராம்

புத்திரனைப் பிரிந்த
சோகத்தில் ஆழ்ந்தா                 ராம்

சீதை தானும் கணவருடன்
வனம் வருவேன் என்றா          ராம்

லஷ்மணன் ராமனைப்
பிரிய மறுத்தா                           ராம்

சீதா ராமனுடன் தானும்
கானகம் தொடர்ந்தா                 ராம்

வழியில் ஆற்றைக் கடக்க
குகன் படகோட்டினா                ராம்

ராமன் குகனையும்
தம்பியாக ஏற்றா                       ராம்

கானகம் செல்லும் வழியிலே அகலிகை சாபம் தீர்த்தா          ராம்

பஞ்சவடி ஆசிரமத்தில்
அனைவரும் தங்கின               ராம்

காட்டில் சூர்ப்பனகை எனும்
ராட்சசி ஒருத்தி கண்டன         ராம் 

லஷ்மணன் ராட்சசியின்
மூக்கை அறுத்தா                      ராம்

மூக்கறுபட்டவள் அலறி 
அண்ணனிடம் சென்றா           ராம் 

சீதையின் அழகைக் கூறி அண்ணனை மாற்றினா           ராம்

சிவ பக்தியில் இணையில்லா   இராவணன் இலங்கை மன்ன  ராம்

சீதை மேல் தணியாத
காதல் கொண்டா                        ராம்

வனத்தில் சீதையைத்
தொட நினைத்தா                       ராம்

சாபம் இருந்ததால்
தொலைவில் நின்றா                 ராம்

மாயமானை அனுப்பி
ராமரைப் பிரிக்க நினைத்தா     ராம்

பொன்மானைக் கண்ட சீதா
பிடித்துத்  தரக்  கேட்டா            ராம் 

ராமன் மறுக்க சீதை
கணவரைக் கேலி செய்தா        ராம்

மானைப் பிடிக்க ராமன் போக அபயக் குரல் கேட்டன             ராம்

தம்பியை உடன் செல்ல
சீதா கட்டளை இட்டா                ராம்

மீறின இலக்குவனை 
சீதை  கடிந்து கொண்டா           ராம்
                                  
மனமின்றி இலக்குவன்
கோடு ஒன்றை  வரைந்தா         ராம்

கோட்டைத் தாண்டாதிருக்க
அண்ணியை வேண்டினா         ராம்
          
அண்ணி சொல்லால்  தம்பி
ராமனைத் தேடிச் சென்றா       ராம்  

 ராவணன்  பர்ணசாலையோடு
சீதையைக் கவர்ந்தா                 ராம்
                         
வழியில் பறவை  ராஜா  
ஜடாயு  போர் தொடுத்தா          ராம்

போரில் தன் இரு
சிறகையும் இழந்தா                  ராம்

தசமுகன் சீதையை 
இலங்கையில் சிறை வைத்தா  ராம்

சீதையைப் பிரிந்த 
ராமன் துவண்டா                        ராம்

ஜடாயு கொடுத்த 
ஜடைவில்லை பெற்றா              ராம்

சீதையைக் கொண்டு சென்ற
ராவணன் பற்றி அறிந்தா          ராம்

உயிர் துறந்த ஜடாயுவிற்கு
ஈமக் கிரியைகள் செய்தா          ராம்

தேறுதல் சொன்ன
வானரர்களை மதித்தா              ராம்

சுக்ரீவன் அண்ணன் 
வாலி என்பவ                            ராம்

அத்துமீறி அட்டகாசம்
மிகப்  பல செய்தவ                  ராம்

சுக்ரீவன் மனம் மகிழ
வாலியைக் கொன்றா              ராம்

சீதையைத் தேடி வர
வானரங்களை அனுப்பினா  ராம்

வானரக் கூட்டத்தில்
அனுமன் என்று  ஒருவ         ராம்

ராம நாமத்தையே தனது
மூச்சாக வாழ்ந்தவ                   ராம்

சீதையைக் காணக்
கடல் தாண்டிச் சென்றவ         ராம்

இலங்கையில் சீதம்மாவை
அசோக வனத்தில் பார்த்தா   ராம்

சீதை ராமனிடையே நடந்த
உரையாடலைச் சொன்னா     ராம்

மகிழ்ந்த சீதை கொடுத்த
கணையாழியைப் பெற்றா     ராம்

இலங்கையில் தசமுக
ராவணனைக் கண்டா             ராம் 

தன் வாலில் வைத்த தீயால்
இலங்கையை  எரித்தா           ராம்

கண்டேன் சீதையை என்று
ராமனிடம் உரைத்தா               ராம்

வானரப் படைகள் கடலில்
பாலம் அமைத்தன                 ராம்

ராமன் தம்பியுடன்
இலங்கை சென்றா                  ராம்

படைகளுடன் இலங்கையை
முற்றுகை இட்டா                     ராம்

தம்பி கும்பகர்ணன் செஞ்
சோற்றுக் கடனால் மாண்டா   ராம்

ராவணன் தம்பி
விபீஷணன் என்பவ              ராம்

அண்ணனின் தகாத 
செயலை வெறுத்தவ              ராம்

அதனால் ராமனிடம் சரண்
அடைய நினைத்தா               ராம்

சரண் அடைந்த  எதிரியை
ராமன் ஏற்றா                           ராம்

போரில் ராவணன் 
அனைத்தும் இழந்தா            ராம்

இன்று போய் நாளை வா  
என்ற ராமன் சொல் கேட்டா  ராம்

இறுதியில் ராமனால்
வானுலகை எய்தினா            ராம்

ராமன் சீதையுடன் தம்பி
உடன்வர அயோத்தி வந்தா ராம்

சீதா ராமனாகப் பல்லாண்டு
அயோத்தியை ஆண்டா      ராம்

ராம ராம ஜெய ராஜா  ராம்
ராம ராம ஜெய சீதா                ராம்

நண்பர்களே படித்து விட்டீர்களா. நீங்களும் இன்று 108 முறை ராம நாமம் கூறியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி .    ராம நாமாவை சொன்னால் அனுமன் மிகவும் மகிழ்வார் தானே.

ராம் ராம் ராம் ராம்

No comments:

Post a Comment