Wednesday, August 7, 2019

Guru Purnima

குரு பூர்ணிமா ஸ்பெஷல் !

குருவருள்தான் திருவருள் !

குருவிடம் கற்றுக்கொள்ள வேண்டியதையெல்லாம் கற்று அறிந்தான் ஒரு மாணவன். அவனுக்கு கொஞ்சம் பெருமை பிடிபடவில்லை. குரு இல்லாவிட்டாலும் தான் கற்றுக்கொண்டு இருக்கலாம் என்றஆணவம் தலை தூக்கியது. 

குருவிடம் ஒரு நாள் மெதுவாக கேட்டான்" குருவே ஒருவனுக்கு குருவருள் வாழ்கையில் மிகவும் அவசியமா?, அது இல்லாமல் வாழ முடியாதா?" குரு சிறிது கண்ணை மூடி தியானம் செய்து மாணாக்கனின் செருக்கு நிலையை உணர்ந்தார்.தன் கையிலிருந்த உலோகத்திலான கமண்டலத்தை எதிரே இருந்த சிறிய குளத்தில் சீடனைப் போடச்சொன்னார். சீடன் அதை தண்ணீரில் போட்டதும் முழ்கியது.சீடன் சொன்னான் குருவே நீங்கள் சொன்னபடி செய்தேன் கமண்டலம் தண்ணீரில் முழ்கிவிட்டது என்றான். குரு உடனே தான் உட்கார்ந்திருந்த மரப்பலகையை எடுத்து சீடனிடம் கொடுத்து அதையும் தண்ணீரில் போடச் சொன்னார். சீடன் மரப்பலகையைப் போட்டதும் அது மிதந்தது முழ்கவில்லை.குரு சீடனிடம் முழுகிய கமண்டலத்தை எடுத்து அந்த மரப்பலகை மீது வைக்கச்சொன்னார் சீடன் வைத்ததும் பலகை மீது இருந்த கமண்டலமும் மிதந்தது.

குரு சொன்னார் சீடனே மனிதர்கள் சம்சார சாகரம் என்னும் பெருகடலில் முழுகாமால் இருக்க வேண்டுமானால் குருவருள் என்ற மரப்பலகை இருந்தால் முழுகாமல் கரை சேரலாம் என்றார். சீடனுக்கு குருவருளின் சிறப்பு புரிந்தது. 

உலக ஆசையைத் துறந்த பட்டினத்து அடிகள் இதை வலியுறுத்தி 
"குரு மார்க்கம் இல்லாக் குருடருடன் கூடிக் 
கருமார்க்கத்துள்ளே கருத்தழிந்து கெட்டேனே" ---என்கிறார் 

"ஆண்ட குருவின் அருளைப் மிகப் போற்றி 
வேண்டும் கயிலாய வீட்டுவழி பாராமல் 
பூண்டகுழல் மாதுநல்லார் பொய் மாய்கைக்கு உள்ளாகித் 
தூண்டில் அகப்பட்டுத் துடி கொண்டை(மீன்) ஆனேனே 

ஆக இந்த ஜன்மம் கடைத்தேற வேண்டுமனால் குருவின் திருவருள் 
இல்லாமல் முடியாது

No comments:

Post a Comment