Tuesday, June 17, 2025

Why 32 days in aani month?

ஆனி மாதத்தில் மட்டும் ஏன் 32 நாட்கள் வருகிறது தெரியுமா?

ஆனி மாதத்தில் சூரியன் வடதிசை நோக்கிய பயணமான உத்தராயண காலத்தின் கடைசி மாதாக வருகிறது. மிதுன ராசியில் சூரியன் சஞ்சரிக்கக்கூடிய காலம் என்பதால், இதை மிதுன மாதம், வட மொழியில் ஜேஷ்ட மாத என அழைக்கப்படுகிறது. தமிழ் மாதங்களில் பெரிய மாதமாக இருக்கும் ஆனி மாதத்தில் 32 நாட்கள் இருப்பதைப் பார்க்க முடியும்.

முக்கிய அம்சங்கள்:
ஆனி மாதத்தில் சூரியன் வடதிசை நோக்கிய பயணமான உத்தராயண காலத்தின் கடைசி மாதாக வருகிறது.
மிதுன ராசியில் சூரியன் சஞ்சரிக்கக்கூடிய காலம் என்பதால், இதை மிதுன மாதம், வட மொழியில் ஜேஷ்ட மாத என அழைக்கப்படுகிறது.
தமிழ் மாதங்களில் பெரிய மாதமாக இருக்கும் ஆனி மாதத்தில் 32 நாட்கள் இருப்பதைப் பார்க்க முடியும்.
ஆனி மாதத்தில் மட்டும் ஏன் 32 நாட்கள் வருகிறது தெரியுமா?

ஆங்கில மாதங்களைப் போல, தமிழ் மாதங்கள் சமமாக 30, 31 தேதிகளுடன் இருப்பதில்லை. பங்குனி மாதத்தில் 30 நாட்கள் என்றால், சித்திரை மாதம் 31 நாட்கள் என இருக்கும்.
கார்த்திகை, மார்கழி போன்ற மாதங்களில் 29 நாட்கள் கூட இருக்கும். அதே சமய ஆனி, ஆவணி மாதத்தில் 32 நாட்கள் கொண்டாதாக இருக்கின்றன.

ஆனி மாதம் :
ஆனி மாதத்தில் சூரியன் வடதிசை நோக்கிய பயணமான உத்தராயண காலத்தின் கடைசி மாதாக வருகிறது. நம் நாட்டில் நீண்ட பொழுது கொண்ட மாதமாகவும் ஆனி மாதம் அமைகிறது. கிட்டத்தட்ட 12 மணி நேரம் 38 நிமிடம் வரை கூட பகல் பொழுது நீண்டிருக்கும்.

மிதுன ராசியில் சூரியன் சஞ்சரிக்கக்கூடிய காலம் என்பதால், இதை மிதுன மாதம் என்றும் அழைப்பதுண்டு. வட மொழியில் ஜேஷ்ட மாத என அழைக்கப்படுகிறது. ஜேஷ்டா என்றால் பெரிய அல்லது மூத்தது என்று பொருள்.
இந்த ஆனி மாதம் தேவர்களுக்கு பகல் பொழுதின் இறுதிப் பகுதியாகும். அதாவது தேவர்களுக்கு மாலைப் பொழுதாகவும், மனிதர்களுக்கு ஆனி மாதமாகிறது. இந்த மாதத்தில் 32 நாட்கள் கொண்டுள்ளது.

ஆனியில் 32 நாட்கள் :
தமிழ் மாதங்களில் பெரிய மாதமும் இதுவே. பிற மாதங்களில் இல்லாத வகையில் இந்த ஆனி மாதத்தில் 32 நாட்கள் இருப்பதைப் பார்க்க முடியும்.
ஜோதிடத்தின் படி மிதுன ராசி சற்று பெரிய ராசி என்பதால், இதைக் கடக்க சூரியனுக்கு சற்று கூடுதல் காலம் தேவைப்படுகிறது என்பதால் ஒரு நாள் கூடுகிறது. இதன் காரணமாக இந்த மாதத்தில் பகல் பொழுதின் அளவும் அதிகரிக்கிறது.

ஜேஷ்டாபிஷேகம் விழா:
ஆனி மாதத்தில் வரக்கூடிய கேட்டை நட்சத்திர நாளில் ஜேஷ்டாபிஷேகம் விழா ஆலயங்களில் நடைபெறுவது வழக்கம்.
கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்ட நட்சத்திரம் என்ற பெயர் உண்டு.. இந்த நட்சத்திரத்திற்கான அதி தேவதை இந்திரன். தேவர்களின் தலைவன் இந்திரன், தலைமை பொறுப்பினை தக்க வைத்துக் கொள்ளவும், தலைமைப் பொறுபை நிர்வகிக்கும் திறனை புதுப்பித்துக் கொள்ள இறைவனை வழிபட்டு, நன்றி செலுத்தும் விதமாக, ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தன்று விசேஷ அபிஷேக, ஆராதனை செய்யப்படுகிறது.

ஆனி மூலம் நட்சத்திரம் அரசாளும்:
ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரமும், பௌர்ணமியும் பெரும்பாலும் சேர்ந்து வரும். பௌர்ணமி அன்று பிறக்கும் குழந்தை பிரகாசமாகவும், அரசாளும் யோகத்தையும், ஆளுமைத் திறன் பெற்றிருப்பார். அதனால் ஆனி மூலம் அரசாளும் என்ற பழமொழியும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment