பரோபகாரம்
மஹாபெரியவா.
போன ஜன்மத்துப் பாவங்கள் ஒன்று சேர்ந்து வியாதியாக வந்து உன்னைப் படுத்துகிறது. பாவம் போகணுமானால் நீ தான தர்மம் செய்யணும்."
ஒரு நாள் மடத்திற்கு விலை உயர்ந்த வெளிநாட்டு கார் ஒன்று வந்தது.
அதிலிருந்து ஒரு தனவான் இறங்கினார்.
பிரபு என்று எவரையாவது சொல்ல வேண்டுமென்றால் இவரைத்தான் சொல்ல வேண்டும்.
அத்தனை கஞ்ச மகா பிரபு!
காசுக்குப் பஞ்சமில்லை. ஆனால், செலவழிக்க, அனுபவிக்க மனம்தான் இல்லை.
பெரியவர் தரிசனத்துக்கு வந்திருந்தார்.
வலதுகையால் வாயை மறைத்துக்கொண்டு உருக்கமாகச் சொல்ல ஆரம்பித்தார்.
"எனக்கு ரத்த அழுத்தம், டயாபடீஸ் இரண்டும் ரொம்ப நாளா இருக்கு. இப்ப கான்ஸர் வேறே வந்திருக்கு. ரொம்பக் கஷ்டமா இருக்கு.
பெரியவர்தான் பரிஹாரம் சொல்லணும்..."
"நான் சொன்னால் சொன்னபடி செய்வாயா?"
"செய்யறேன்."
"ரொம்பக் கஷ்டமா இருக்குமே.."
"இருக்கட்டும்.
வியாதி நீங்கினால் போதும்....
பெரியவர் என்ன உத்திரவு போட்டாலும், அதன்படி நடக்கிறேன்.. .
ப்ளட்பிரஷர், கான்ஸர், ஷூகர் எல்லாம் என்னை விட்டுவிட்டுப் போனால் போதும்..." என்று சொல்லி விட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
பொதுவாகவே,
அவ்யாஜ கருணை (காரணமில்லாத கருணை) பெரியவருக்கு.
இவரோ கண்ணீர் விட்டு சரணாகதி பண்ணுகிறார்.
கைவிட முடியுமா?
பெரியவர் சொன்னார்கள்:
1) கிணற்றில் தண்ணீர் இருக்கு. 'தண்ணீர் என்னுடையது தானே' என்று சொந்தம் கொண்டாடி, கிணறே தண்ணீரைக் குடித்து விடுவதில்லை.
2) மரத்தில் பழம் பழுக்கிறது. 'என் மரத்துப் பழம், நான்தான் சாப்பிடுவேன்' என்று மரம் பழங்களைச் சாப்பிடுவதில்லை.
3) பசுமாடு பால் கொடுக்கிறது. ஆனால் தான் சுரக்கும் பாலை பசுமாடு ஒருபோதும் குடிப்பதில்லை.
4) எத்தனையோ செடி-கொடிகள், காய்களைக் காய்க்கின்றன. ஒரு காயைக்கூட அவைகள் தமக்கு என்று வைத்துக் கொள்வதில்லை.
இப்படி ஓரறிவு-ஈரறிவு படைத்த பிராணிகளே கூட, பரோபகாரம் செய்கின்றன.
மனிதனுக்கு ஆறறிவு என்கிறார்கள்.
அவன் மற்றவர்களுக்கு எவ்வளவு உபகாரம் செய்யணும்?"
பலத்த அமைதி நிலவியது.
பெரியவர் அடுத்து என்ன சொல்லப்போகிறார் என்று அனைவரும் கூர்ந்து கவனித்தனர் அந்த தனவந்தர் உட்பட....
"உன்னிடம் பணம் இருக்கு. நீயும் சரியாக அனுபவிக்கல்லே, பரோபகாரம்-தர்மம் செய்யல்லே.
போன ஜன்மத்துப் பாவங்கள் ஒன்று சேர்ந்து வியாதியாக வந்து உன்னைப் படுத்துகிறது.
பாவம் போகணுமானால் நீ தான-தர்மம் செய்யணும்."
"இஷ்டா-பூர்த்தம்னு தர்ம கார்யம் தெரியுமோ?
குளம் வெட்டுவது, கோயில் திருப்பணி, ஏழைகளுக்கு உதவி, சொந்தக்காரர்களுக்கு உதவி, இப்படி நல்ல காரியங்களிலே பணத்தைச் செலவிடணும்.
அப்புறம்..
வியாதிகளால் கஷ்டப்படுகிற அநாதைகளுக்கு மருந்து வாங்கிக்கொடு.
அம்மா, அம்மான்னு ஒருத்தன் கை நீட்டினால், அவன் வெறுங்கையோட போகப்படாது என்ன?"
"உங்கிட்ட இருக்கிற பணத்துக்கு நீ டிரஸ்டி...அவ்வளவுதான். சொந்தக்காரன்னு நினைச்சுக்காதே..."
கஞ்ச மகாப்பிரபு குலுங்கிக் குலுங்கி அழுதார், இது வரை தான் வாழ்ந்த வாழ்வில் இருந்த பிழையினை உணர்ந்தார்.
கஞ்சனாக வந்தவர் கருணை நிறைந்த மனதுடன் விடைபெற்றார்.
பின்னர் கர்ண மகாப்ரபுவாக நெடுங்காலம் ஜீவித்திருந்தார்.
பெரியவர்
ஒரு ஸ்பெஷலிஸ்ட்-
எல்லா நோய்களுக்கும்
"நோய் நாடி, நோய் முதல் நாடி," நோயாளிகளின் உள்ளமும் நாடி அதற்கேற்ற மருந்து கொடுப்பார்.
மஹாபெரியவா திருவடிக்கே...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment