Friday, May 21, 2021

Ranga mandir at Mathura

கண்ணன் அல்லால் இல்லை
கண்டீர் சரணது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்கு
தற்கே வடமதுரைப் பிறந்தான்
திண்ண மாநும் முடைமை
யுண்டேல் அவனடி சேர்ந்துய்ம்மினோ
எண்ண வேண்டா  நும்ம
தாதும் அவனன்றி மற்றில்லையே

பொருள் : பூமியின் பாரம் நீக்குவதற்காக வடமதுரையில் அவதரித்தான். அவனன்றி வேறு புகல் இல்லை. அவன் திருவடிகளில் சேர்ந்து உய்யுங்கள். வேறு ஒரு சிந்தனையும் அவசியமில்லை. நீங்கள் உங்களுடையதாக என்று நினைத்திருக்கும் அனைத்துப் பொருள்களும் அவனுடையனவே ஆகும். அதற்கு மாறாக வேறு ஒன்றுமில்லை.

திருவடமதுரை – மதுரா ( ப்ருந்தாவனம் , கோவர்த்தனம்)

மூலவர் – கோவர்த்தநேசன், பாலக்ருஷ்ணன், நின்ற திருக்கோலம், கிழக்கே திரு முக மண்டலம்.
தாயார் – ஸத்யபாமா  நாச்சியார்
தீர்த்தம் – இந்த்ர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், யமுனா நதி
கோவர்த்தன விமானம்

ரங்க மந்திர் என்ற கோவில் தென்னாட்டுப் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. குன்று குடையாய் எடுத்த கோவர்த்தனகிரி மலை அருகாமையில் உள்ளது.

ஸ்ரீ கிருஷ்ண அவதார ஸ்தலம். ராமனின் தம்பி சத்ருக்ணன் வம்சம் ஆட்சி செய்த நகரம் மதுரா. ஜன்மாஷ்டமிக்கு ஒரு வாரம் முதல் ஊர் களை கட்டிவிடும்.

மங்களாசாஸனம்
பெரியாழ்வார் – 16,277,399,264-74,341,430
ஆண்டாள் – 478,538,539,560,569,617,624,637-46,634,638
தொண்டரடிப்பொடி ஆழ்வார் – 916
நம்மாழ்வார் – 3439,3499,3559-66  மொத்தம் 50 பாசுரங்கள்

No comments:

Post a Comment