Tuesday, May 7, 2019

Akshaya tritheeya- what one should do?

வரும் செவ்வாய்க்கிழமை (07-0502019 ) அன்று அக்ஷய்ய திருதீயை புண்யகாலமாகும்.
அக்ஷய்ய திருதீயை
                           ॥ श्रीगुरुभ्यो नम:। धर्मो रक्षति रक्षित:|| 
अपार करुणा सिन्धुं ज्ञानदं शान्तरूपिणम् । श्री चन्द्रशॆखर गुरुं प्रणतॊऽस्मि मुदाऽन्वहम् ॥
वागीशाद्या: सुमनस: सर्वार्थानामुपक्रमे । यन्नत्वा कृतकृत्यास्यु: तं नमामि ग्जाननम् ॥
சித்திரை மாதத்து அமாவாசைக்கு பிறகு வரும் திருதீயை திதியை (வைசாக சுத்த திருதீயை)  அக்ஷய்ய திருதீயையாகக் கொண்டாடப்படுகின்றது. இதன் விசேஷம்
 இந்த அக்ஷய திருதீயை நன்னாளில் தான் நான்கு யுகங்களில் முதன்மையான்தான கிருத யுகம் தோன்றியது.
* இந்த அக்ஷய திருதீயை நன்னாளில் தான் துவாபரயுகத்தில் கிருஷ்ண பரமாத்மா குசேலருடைய தரித்ரத்தை போக்கி குறைவற்ற செல்வத்தை வழங்கினார்.
* இந்த அக்ஷய திருதீயை நன்னாளில் தான் கலியுகத்தில் ஆதிசங்கர பகவத்பாதாள் ஏழ்மையைப் போக்கும் கனகதாராஸ்தோத்திரம் இயற்றி அதன்வாயிலாக தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தார்.

இப்படிப்பட்ட நன்னாளில் நாம் ஒவ்வொருவரும் நல்மனதுடன் சாஸ்திர முறைப்படி கடமைகளைச் செய்து, தாராளமாக பலவிதமான தானங்களைச் செய்ய வேண்டும்.

அதாவது ஒவ்வொரு யுகத்திலும் நமது உடலின் ஒவ்வொரு பாகத்தில் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதன் அடிப்படையில்தான் நாம் அதிகபக்ஷ உயிர் வாழ்வது நிகழும்.

அதன்படி கிருதயுகத்தில் உடலின் எலும்பில் உயிர் இருக்குமாம். ஆகையால் அந்த யுகத்தில் வாழ்ந்தவர்கள் லக்ஷக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்தார்களாம். (அதாவது எலும்பு தேய்கின்றவரைக்கும்.)

அடுத்து வரக்கூடிய த்ரேதாயுகத்தில் உடலின் இரத்தில் உயிர் இருக்குமாம். ஆகையால் அந்த யுகத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்ந்தனராம்.( இரத்தம் சுண்டும் வரையிலும்)

அடுத்து வரக்கூடிய துவாபரயுகத்தில் உடலின் சதைப்பகுதியில் உயிர் இருக்குமாம். ஆகையால் அந்தயுகத்தில் பலநூறு ஆண்டுகள் வாழ்ந்தார்களாம். (சதை பலம் குறையும் வரை)

அடுத்து இறுதியாக வரக்கூடிய கலியுகத்தில் தான் மிகமுக்கியமாக நாம் உண்ணும் உணவில்தான் உயிர் இருகின்றதாம்.

இதன் ஆதிப்படையில்தான் இக்கலியுகத்தில் எல்லோருக்கும் உயிராக விளங்கக்கூடிய அன்னத்தை புநிதமாக கூறி, இந்த அக்ஷய திருதீயை போன்ற நன்னாட்களில் அன்னதானம் செய்ய வேண்டும் என்று சாஸ்த்ரம் கூறுகின்றம்.  அதிலும் உடனடியாக ப்ராணனைக் காப்பாற்றக் கூடிய ஜலம் என்று சொல்லக்கூடிய தீர்த்ததை அவசியம் தானமாகக் கொடுக்க வேண்டும். வங்கிக் கணக்கில் (நிலையான வைப்புக் கணக்கில் ) பணத்தை கட்டினால் பலவருடங்களுக்குப் பிறகு பன்மடங்காகத் தருவதாகக் கூறுகிறார்கள் . இந்த வைப்பு நிதியானது குறிப்படிட்ட அந்த பல வருடங்களுக்குப் பிறகு நாம் உயிரோடு இருந்தால்தான் அசலும், வட்டியுமாக நமக்குக் கிடைக்கும். அப்பணமும் இந்நாட்டில்தான் செல்லும். ஆனால் நாம் சாஸ்திரப்படி செய்யும் தானம், தர்மம் செய்யும் சுபச் செலவானது உண்மையான வாங்கியில் , பாதுகாப்பான பெட்டகத்தில் வைக்கப்பட்டு , நமக்கு எந்தப்பிறவியில் , எந்தலோகத்தில் , நமக்கு எந்த விதமாகாத் தேவைப்படுகிறதோ அந்த விதத்தில் (பொருளாகவோ,(அ) பணமாகவோ அசலுடன் பன்மடங்கு வட்டியுடன் கிடைக்கும்.

ஆகையால் இந்த அக்ஷய திருதீயை நன்னாளில் நம்மால் இயன்ற அளவு தானங்களைச் செய்து புண்யம் என்னும் வைப்பு நிதியில் சேமியுங்கள். இந்த வெயில் காலத்தில் பானகம், நீர்மோர் போன்றவைகளை எல்லோருக்கும் கொடுங்கள்.

No comments:

Post a Comment