Courtesy:Smt.Uma Balasubramanian
முருகன் குறித்த பழமொழிகள்
· வேலை வணங்குவதே வேலை.
· சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
· வயலூர் இருக்க அயலூர் தேவையா?
· காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி.
· அப்பனைப் பாடிய வாயால் - ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?
· முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.
· சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)
· கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.
· கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்
· பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?
· சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.
· செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?
· திருத்தணி முருகன் வழித்துணை வருவான்
· வேலனுக்கு ஆனை சாட்சி.
· வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.
· செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை.
· கந்தன் பாதம் கனவிலும் காக்கும்
muruga charanam
ReplyDelete