Wednesday, December 30, 2015

Muruga proverbs in tamil

Courtesy:Smt.Uma Balasubramanian

முருகன் குறித்த பழமொழிகள்
·         வேலை வணங்குவதே வேலை.
·         சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லைசுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
·         வயலூர் இருக்க அயலூர் தேவையா?
·         காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி.
·         அப்பனைப் பாடிய வாயால் - ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?
·         முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.
·         சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)
·         கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.
·         கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்
·         பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?
·         சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.
·         செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?
·         திருத்தணி முருகன் வழித்துணை வருவான்
·         வேலனுக்கு ஆனை சாட்சி.
·         வேலிருக்க வினையுமில்லைமயிலிருக்கப் பயமுமில்லை.
·         செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை.
·         கந்தன் பாதம் கனவிலும் காக்கும்

1 comment: