Wednesday, April 30, 2025

Akshaya thruteeyai

அட்சய திரிதியை...
புண்ணிய தினம்..
(30.04.25 புதன்கிழமை)

1. பரசுராமர் அவதரித்த திருநாள்

2. கங்கை நதி இவ்வுலகிற்கு வந்த திருநாள்

3. பக்தன் சுதாமர் துவாரகாவில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இல்லத்திற்கு சென்ற நாள்.

4. பாண்டவர்கள் சூரியதேவனிடம் இருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள்,

5. வியாச தேவரால் மஹாபாரதம் இன்று தான் எழுதப்பட்டது.

6. திரேதாயுகம் தொடங்கிய நாள்.

7. "கனகதாரா ஸ்தோத்ரம்" ஆதிசங்கராச்சாரியாரால் இன்று இயற்றப்பட்டது.

8. குபேரருக்கு இன்று செல்வத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது, 

9. அன்னபூரணிதேவி தோன்றிய நாளாகக் கருதப்படுகிறது.

10. இந்நன்னாளில் ரதயாத்திரைக்கான ரதம் செய்யும் பணி தொடங்கும்.

11. கீர்ஷோர் கோபிநாத் (ரெமுன, ஒரிஸா), மதன மோகன், கோவிந்தா மற்றும் கோபிநாத் விக்ரகங்களுக்கு சந்தன் யாத்திரை தொடங்கும் நாள்.

12. பார்லி தோன்றிய நாள் (யாகத்திற்கு உபயோகப்படுத்தும் பொருள்)

13. பத்திரிநாத்திலுள்ள கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோயில் குளிர் காலங்களில் நடையடைத்து அட்சய திரிதியை சுபதினத்தில் மீண்டும் பக்தர்கள் தரிசிப்பதற்காக கோவில் நடை திறக்கபடும்.

ஹரே கிருஷ்ண ஹரே 
கிருஷ்ண கிருஷ்ண 
கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம 
ராம ராம ஹரே ஹரே...

No comments:

Post a Comment