விவேக சிந்தாமணி நங்கநல்லூர் J K SIVAN
யாரையா இந்த வினோத கவிஞர்?
ஒரு சின்ன கேள்வி. 'விவேக சூடாமணி தெரியுமா?"'எங்கோ கேள்விப்பட்டமாதிரி இருக்கிறதே. MKT பாகவதர் நடித்த படமா?''இல்லை சுவாமி. இது ஆதி சங்கரர்ஸம்ஸ்க்ரிதத்தில் எழுதிய வேதாந்த நூல். அது ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளி வந்துள்ளது.
''அப்படியா. ஓஹோ '''சரி இன்னொரு கேள்வி கேட்கலாமா?''.' ம்ம்ம் '.''சீவக சிந்தாமணி'' தெரியுமா?'' சத்தியமாக தெரியாது. ஸார் நான் உ.வே சாமிநாதையர் இல்லை. R .கோபால சாமி, சொல்லுங்கள்.கேட்கிறேன்''''இது திருத்தக்க தேவர் என்பவர் எழுதிய ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று.''''இது தெரிந்ததால் எண்ணில் எந்த மாற்றமுமில்லை ஸார்' ''சரி ஒரே ஒரு கடைசி கேள்வியோடு நிறுத்திக் கொள்கிறேன்.'விவேக சிந்தாமணி'' தெரியுமா ?''இல்லை ஸார், தெரியாது''என்னோடு பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பில் சிந்தாமணி என்ற செட்டியார் வீட்டுப் பெண்ணை த்தான் சின்ன வயசில் தெரியும்.''
' என்ன ஸார் இது? அற்புதமான பாடல்கள் எளிய தமிழில் இருக்கும் இந்த விவேக சிந்தாமணிஎன்ற நூலை யார் எழுதியது. என்ற கேள்விக்கு பதில் ஏன் யாருக்குமே இன்னும்தெரியவில்லை?'
சரி. யாராக இருந்தால் என்ன. எழுதிய ஆசாமி நன்றாகவே எழுதி இருக்கிறார். அதில் சில பாடல்களைஇனிமேல் சொல்வதாக இருக்கிறேன். பெண்களை உயர்வாக மதித்து போற்றி எழுதிய பாடல்கள் நிறைய தமிழில் இருக்கிறது. இந்த விவேகசிந்தாமணி ஆசிரியர் தான் யார் என்று காட்டிக்கொள்ளாததால் ஏதோ ஒரு தைரியத்தோடு ''பெண்களை நம்பாதேகண்களே பெண்களை நம்பாதே''..... என்று அல்லவோ பாடுகிறார். பாடல் எழுதியவிதத்தை மட்டும் நாம் ரசிப்போம். நிச்சயம் நாம் பெண்கள் எதிரிகள் அல்ல. அவர்கள் தயவு இல்லாமல்ஒன்றுமே நடக்காது. அடுத்த வேளை நாம் வீட்டில் சாப்பிடவேண்டாமா? இன்னும் கொரோனா முழுமையாக விலகாத சமயத்தில் வெளியேயும் எதுவும் கிடைக்காதே. வாங்கும் விலையிலும் எதுவும் இல்லை. யானை விலை, குதிரை விலை.
இது தான் அந்த பாட்டு. ''மங்கை கைகை (கைகேயி)சொற்கேட்டு மன்னர்
புகழ்தசரதனும் மரணம் ஆனான்
செங்கமலச்சீதை சொல்லை ஸ்ரீராமன்
கேட்டவுடன்சென்றான் மான் பின்;
தங்கைஅவள் சொல்லைக் கேட்டு இராவணனும்
கிளையோடும்தானும் மாண்டான்
நங்கையற்சொற் கேட்பதெல்லாம் கேடுதரும்
பேர்உலகோர் நகைப்பர்தாமே.''
''ஆண்களே ஜாக்கிரதை , பெண்கள் ஏதாவது சொன்னால் ''ஆஹா, இதோ'' என்று சொல்லி விட்டுஓடிவிடுங்கள். அவர்கள் பேச்சைக் கேட்டு எதையாவது செய்து எக்கச்சக்கமாகமாட்டிக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு முன்னே இப்படி அகப்பட்டசில அசடுகள் பெயர்கள் சொல்கிறேன். உங்களுக்கும் தெரிந்தவர்கள் தான். கைகேயி தனது கணவன் தசரதனை பிடித்து 'நாதா எனக்கு ரெண்டு வரம் தருவதாக சொன்னீர்களே, கொடுக்கிறீர்களாஎன்றாள் , ''அதற்கென்ன கண்ணே, நீ கேட்டு நான் இல்லை என்பேனா''அவள் கேட்ட வரத்தை கொடுத்த தசரதன் உயிரையே இழந்தான் .. ''நாதா அதோ அந்த அழகிய மான் குட்டியைபிடித்துத் தாருங்கள்'' என்றாள் . மானைத்தேடி ஓடி, மனைவியை இழந்து, மாநகரம் இலங்கை எரிந்து, நிறைய பேர் மடிந்துபோனார்கள். பத்து தலையில் பத்து மூளை இருந்தும் முட்டாள் ராவணன்.
''அண்ணா உனக்கேற்றவள்அந்த சீதை, பேரழகி , அவளை யாரோ ஒரு மானுடன் மனைவியாக கொள்வது எவ்வளவு அநியாயம், உடனே சென்று அவளைஉங்களவளாக்கிக் கொள்ளுங்கள் என்றதால் சாமியார் வேஷத்தில் சென்று சாம்ராஜ்யம், உயிர்எல்லாவற்றையும் இழந்தான்.
ஆகவே தான் சொல்கிறேன் பெண்ணின் பேச்சை கேட்காதே . ஊர் உலகமெல்லாம் உன்னை பார்த்து சிரிக்கும்'' (அம்மணிகளே , இது நான்சொல்லவில்லை... யாரோ பேர் தெரியாத விவேக சிந்தாமணி எழுதிய கவிஞர் சொன்னது என்றுமுன்பே சொல்லி இருக்கிறேன்).
பெண்டுகள்சொல் கேட்கின்ற பேயரெனும்
குணம்மூடப் பேடி லோபர்
முண்**களுக்கு இணையில்லா முனை வீரர்
புருடரெனமொழியொணாதே
உண்டுலகம்உதிர்ப்பாருள் கீர்த்தியறம்
இன்னதென உணர்வே யில்லார்
அண்டினவர்தமைக் கொடுப்பா ர் அழிவழக்கே
செய்வதவர்அறிவுதானே
ஸாரி . இதை கொஞ்சம் ஸ்ட்ராங்காக, சற்று விரசமாக கூட எழுதியிருக்கிறார்கவிஞர்.
பெண்டாட்டி பேச்சுக்கு தலையாட்டுபவன் மனுசனா? குணம் கெட்டவன், முட்டாள், கருமி. விதவன்,(விதவைக்கு ஆப்போசிட்ஆக எடுத்துக் கொள்ளவும்) ஆம்பளையே இல்லை. அலி, உலகத்தில் வீரம்தர்மம் , கம்பீரம் எதுவென்று தெரியாத அறிவற்றவன். அநீதிக்கு துணை போகிறவன். அவனிடம்உதவிக்கு போகிறவனை ஆழமாக குழியில் தள்ளுபவன்..... (கவிஞருக்கு பெண்கள் மேல் என்னகோபமோ, வார்த்தைகள் கடினமாக இருக்கிறது) ''ஆலகால விடத்தையும்நம்பலாம்
ஆற்றையும்பெருங் காற்றையும் நம்பலாம்
கோலமாமத யானையை நம்பலாம்
கொல்லும்வேங்கைப் புலியையும் நம்பலாம்
காலனார்விடும் தூதரை நம்பலாம்
கள்ளவேடர் மறவரை நம்பலாம்
சேலைகட்டிய மாதரை நம்பினால்
தெருவில்நின்று தயங்கித் தவிப்பரே.''
ஐயா, நான் சொல்வதை காது கொடுத்துக் கேளுங்கள், இது அனுபவ அறிவுரைஎன்கிறார் கவிஞர்.
''ஆலகால கொடிய விஷத்தை கண்ணை மூடிக்கொண்டு நம்புங்கள். ஆழமான ஆற்றைநம்புங்கள், பெரும் சூறாவளி காற்றை தாராளமாக நம்புங்கள். மஹா பெரிய மதம் பிடித்த யானையைநம்புங்கள், இதில் எதுவுமே ஒன்றும் செய்யாது. அட, யானையை விடுமய்யா. வரிப்புலி இருக்கிறதே அதை 'வாடாதம்பி' என்று கொஞ்சி நம்புங்கள், கையில் பாசக்கயிற்றை எடுத்துக்கொண்டுநாய் பிடிப்பது போல் உங்களை பிடிக்க வருகிறானே எம தூதன் அவனைமுதலில் நம்புங்கள், திருடன் கொள்ளைக்காரன், குருவிக்காரன், போலீஸ் கார்ன் எவனை வேணுமானாலும்நம்புங்கள், ஆனால் ஆனால் ஆனால் சேலை கட்டிக்கொண்டு உங்கள் முன் நிற்கிறாளே , தெருவில் போகிறாளே , கண்ணில் படுகிறாளே , சிரித்துக்கொண்டு...ஐயய்யோ , அவளை மட்டும் நம்பவே நம்பாதீர்கள். அவ்வளவு தான் நீங்கள்..... ( இதைசினிமாவில் பழைய படத்தில் TMS பாடியிருக்கிறார். எந்த சினிமா கவிஞன் கண்ணில் இந்தபாட்டு பட்டதோ, காசு பண்ணி விட்டான்).
No comments:
Post a Comment