Tuesday, May 7, 2019

Brahmana dharmam

பிராமண தர்மம்

1.நாம் நமது தர்ம சாஸ்திரத்தை அவசியம் தெரிந்து கொண்டு முடிந்தவரை கடைபிடிக்க வேண்டும்.

 2. ப்ராஹ்மணர்களாகிய நாம் ஸுர்ய உதயத்தின்போதும் அஸ்தமனத்தும் போதும் தூங்ககூடாது.

3.நமது நித்யகர்மாக்களில் அடிப்படையான ஸந்தியாவனத்தை தவறாமல் செய்ய வேண்டும். 

4. ஆண்கள் வெள்ளை வேஷ்டி துண்டுடன் தான் கர்மாக்களைச் செய்ய வேண்டும்.

 5. கலர் மற்றும் தைத்த துணிகளைப் போட்டுக்கொண்டு அனுஷ்டானங்களைச் செய்யக்கூடாது.

 6. பெண்கள் வேத மந்திரங்களைச் சொல்லக்கூடாது.

 7. கர்மானுஷ்டானம் செய்யும்போது ஆண்கள் கச்சம் வைத்து வேஷ்டி கட்டிக் கொள்ள வேண்டும்.

 8.விவாஹம் ஆன பெண்கள் விளக்கேற்றும்போது மடிசார் வைத்து புடவை கட்டிக் கொள்ள வேண்டும்.

 9. ஒருவர் பயன்படுத்திய வஸ்திரம், செருப்பு, சாப்பிடு ம் தட்டு, படுக்கை, மாலை ஆகிவற்றை மற்றொருவர் பயன்படுத்தக்கூடாது. 

10. விதிக்கப்பட்ட அபர கர்மாவிற்கு தவிர மற்றைய நேரத்தில் ஈர வஸ்திரத்துடன் இருக்கக் கூடாது.

11. மற்ற கர்மாக்களை ஈரத்துணியுன் செய்யக்கூடாது.

12. விதிக்கப்பட்ட அபர கர்மாவைத் தவிர ஒருபோதும் தலைமுடி நுனியை கட்டாமல், விரித்து தொங்க விடக்கூடாது. 

13. எல்லா கர்மாவிற்கும் அவரவர் தனித்தனியாக தீர்த்தப்பாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும். 

14. எல்லா கர்மாக்களையும் பூமியில்தான் செய்ய வேண்டும்.  மாடியில் செய்யக்கூடாது.

15.கர்மாக்கள் இருவகை- நித்ய மற்றும் நைமித்திக கர்மாக்கள்.

16. நித்தியகர்மாக்களான ஸந்தியாவந்தனங்களைச் செய்யாவிட்டால் பாபம் வரும்.

 17. ஸந்தியாவந்தனம் செய்யாத பிராமணன் வேறு எந்த கர்மாக்களைச் செய்தாலும் பலன் இல்லை. 

18. ச்ராத்தத்தை எல்லா பிள்ளைகளும் தனி 
தனியாகத்தான் செய்ய வேண்டும்.

 19. எந்த கர்மா செய்தாலும் நடுவில் பேசக்கூடாது.

20. அம்மா அப்பா ச்ராத்தங்களை குறிப்பிட்ட முறைப்படித்தான் செய்ய வேண்டும்.

26. சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு ஆசார, அனுஷ்டானங்களைச் சொல்லித் தர வேண்டும். 

27. நாம் ஆடம்பர வாழ்க்கையைத் தவிர்க்க வேண்டும். 

28. நமது சரீர சிரமமில்லாத எந்த கர்மாவும் முழுப்பலன் தராது. 

29. நமது தர்மத்தை நாம் பின்பற்றி காப்பாற்ற வேண்டும்.

 30. ஆலயத்திலிருந்து பிரசாதாமாக வீபூதி, குங்குமம், துளசி மற்றும் வில்வம் போன்றவற்றைத் தவிர மற்றவற்றை பிரசாதமாகப் பெறக்கூடாது.

31. கிருஹஸ்தர்கள் அவசியம் வருடத்தில் இரண்டு பட்சத்திலாவது ஔபாஸனம் செய்து, பிரதமையன்று ஸ்தாலீபாகம் செய்ய வேண்டும்.

 32. நாம் ரிஷிகளின் பரம்பரையில் வருவதால், அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்மிருதிகளில் கூறப்பட்டுள்ள முறைகளைத்தான் கடைப்பிடிக்க வேண்டும். 

33. ஸ்மிருதி அல்லது தர்ம சாஸ்திரத்தை மாற்றுவதற்கு அதிகாரம் இல்லை.

34- தர்ம சாஸ்திரம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், நோயாளிகள், பிராமணர் அல்லாதவர் ஆகிய அனைவருக்ககும் தனித்தனியாக அந்தந்த காலத்திற்கேற்ப உள்ளது.

 35. எந்த ஒரு சூழ்நிலையிலும் ஆண் அல்லது பெண் விவாஹரத்து செய்து கொள்ள தர்ம சாஸ்திரத்தில் இடம் இல்லை.

36:- விவாஹம் ஆன பெண்ணுக்கு தர்மசாஸ்திர முறைப்படி ஒரே கோத்திரம் அல்லது வேறு தோஷம் அல்லது தீராத வியாதி இருப்பது தெரியவந்தால், அந்த மனைவியை தனது வீட்டிலேயே வைத்துக் கொண்டுதான், அந்த  ஆண் மறு விவாஹம் செய்து கொள்ள வேண்டும்.

 37. அப்பா அல்லது அம்மா அல்லது மற்றவர்களுக்காக செய்யும் அந்திமக்கிரியை முடிந்தவுடனோ அல்லது தாயாதிகளுக்கு பத்து தீட்டு கடைபிடிக்கும் போதோ மற்றும் கர்ப தீட்சை முடியும் போதோ ஆண்கள் வபநம் செய்து கொள்ள வேண்டும்.

 38. நாம் குடியேறும் அல்லது குடியிருக்கும் வீடு கீழ் தளத்தில் இருந்தால் தர்மசாஸ்திரப்படி கர்மானுஷ்டம் செய்ய முடியும்.

39. கணவன் இறந்துவிட்டால், மனைவி சாஸ்திரப்படி வபநம் செய்து கொண்டால்தான் அவர்களுக்கு இறப்பு தீட்டு விலகும். இல்லாவிடில் இவர்களிடமிருந்து இறப்புத்தீட்டு விலகாது. இந்த விதவைகள் இறப்புத்தீட்டு விலகாமல், ஐபம் செய்வதாலும், கோவிலுக்கு போவதாலும் அவர்களுக்கும் அந்த குடும்பத்திற்கும் மஹா பாபமாகும். கெடுதல் ஏற்படும். இறப்பு தீட்டு மகா சக்தி வாய்ந்ததாகும்.
அநாதை பிணத்தை ஸ்மஸ்கரிப்பதும்,  பூஜையில்லாத சிவலிங்கத்தை பூஜிப்பதும், ஏழை, குருடன் இவர்களுக்கு உதவுவதும் ஸகல பாபங்களையும் போக்கக்கூடியது. ஸ்மிருதி முக்தாபலம்.(வர்ணாச்ரம தர்ம காண்டம்).

40. எந்த வீட்டில் சாஸ்திர முறைப்படி வேத சப்தம் கேட்காமலும், சாஸ்திரப்படி கர்மானுஷ்டங்கள் நடை பெறாமலும், எந்த கிரஹத்திற்கு வேத விற்பனர்கள் அடிக்கடி வரவில்லையோ அந்த வீடு சுடுகாடாகும் என்று ஸ்மிருதி கூறுகிறது.

41. இன்று ஸ்நானம் செய்துவிட்டு வஸ்திரத்தை உலர்த்தி, மறுநாள் ஸ்நானம் செய்த பிறகு அதை உடுத்திக்கொள்வது நித்ய கர்மாவிற்கு மட்டுமே பொருந்தும்.

 42.மற்ற கர்மாக்களுக்கு, குறிப்பாக சிராத்ததிற்கு அன்று குளித்துவிட்டு உலர்த்திய வஸ்திரத்தைத்தான் உபயோகப்படுத்த வேண்டும்.

44.இரண்டு சூரியனுக்கு (அதாவது இரண்டு பகல்) மேல் பார்த்த (உலர்த்திய) வஸ்திரம் கட்டிக் கொண்டு கர்மாக்கள் செய்ய சுத்தமில்லை.

45. வேதம் படித்தவர்களை ஒரு போதும் குறை கூறக்கூடாது.

46. காஸ் அடுப்பை கர்மாக்கள் செய்யும் போது உபயோகப்படுத்தக்கூடாது. 

47. நாம் செய்யும் கர்மாவை நன்றாக தெரிந்து கொண்டு சிரத்தையாகச் செய்ய வேண்டும்.

48. வைதிகர்கள் தர்ம சாஸ்திரத்தைத் தெரிந்து கொண்டுதான் வைதிக கர்மாக்களைச் செய்து வைக்க வேண்டும். 

49.தர்ம சாஸ்திரத்திற்கு விரோதமாகச் கர்மாக்களை செய்து வைக்கும்போது, அதன் பாபம் தட்சிணை வாயிலாக அந்த வைதிகற்கே வந்து சேரும்.

50. வேதங்கள், சாஸ்திரங்கள் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு, அதில் சிறிதளவும்
அனுஷ்டானம் செய்யாத பிராமணனைவிட, தர்ம சாஸ்திர முறைப்படி நித்யகர்மாக்களான சந்தியாவந்தனாதிகளை மட்டும் செய்கின்ற பிராமணனே உத்தமன்.

No comments:

Post a Comment