Tuesday, July 12, 2016

Sankalpa

சங்கல்ப தாத்பர்யம் 

ஞாணேந்த்ரியங்கள்,கர்மேந்த்ரியங்கள
ப்ரதி ஜீவிக்கும் இருக்கும் ,

அதனால்தான் நித்திரை மைதுணம் அனைத்து ஜீவனுக்கும் சமமானதாய் 
இருக்கும்.

ஆனால் சங்கல்ப விகல்பத்திர்கு காரணமானது மனஸ் ,இது 11ஆவது 
இந்த்ரியம் .

இது மானிடனுக்கு மாத்ரமே இருக்கும் 
இதனால் தர்மம் எது ,அதர்மம் எது என 
நிர்ணயம் செய்து கொள்வான்.

மனஸ் சஞ்சலமானது ,அதற்க்கு ஸ்திரத்வம் இருக்காது ,அதனால்தான் 
மனமானது குரங்கை போல் என்றனர் .

குரங்கு ஒரு கிளையில் இருந்து மறு கிளைக்கு தாவுவதை போல் ,

மனமானதும் ஒரு விஷயத்தில் இருந்து மரு விஷயத்திர்க்கு தாவுகின்றது ,

மனதை நிஷ்சலம் செய்ய தெரி்ந்தவன் சமாதி ஸ்திதி வந்தவனாவான் ,

மனஸ் என்பது காமனா சக்தியாகும் ,

அதன் அதிஷ்டானன் மன்மதன் ,

மனஸ்சில் மன்மதன் 11 கர்மகாரகமாக உள்ளான் .

1>காமம்

2>சங்கல்பம்

3>விகல்பம்

4>ஸ்ரத்தா

5>சத்யம்

6>த்ருதி

7>அத்ருதி

8>ஸ்ரீஹி

9>ஹ்ரீஹி

10>பீBheஹி

11>தீDheஹி #

இதை கொண்டு அவனவன் கர்ம பலத்திர்க்கு ஏற்ப மனமான மன்மதன் 
மாயகடலில் சாதாரண மானிடர்களை மூழ்கடிப்பான் ,

இந்த மன்மதனை ஒடுக்கும் சக்தி சாட்சாத் பரமேஷ்வரீ பரமேஷ்வரனே .

அம்பிகையின் இடது கையில் கரும்பு தனுஸும் ,பரமேஷ்வரரின் வலது கையில் பாணமுமாக ,

தன்னை உபாசிக்கும் பக்தனை நெருங்காதே என்பது மன்மதனுக்கு அம்பிகை சொன்ன வாக்கு .

ஏன் ஸ்ரீவித்யையில் மன்மதனுக்கு ப்ராமுக்யம் என்பது புரிகிறதா,

சரி இதற்க்கு மேல் சொல்ல விரும்பவில்லை ,

சங்கல்பத்திர்கு வருகிறேன் ,

இடது கை ஜீவாத்மா ,வலது கை பரமாத்மா,

இடது உள்ளங்கை மேல் வலது உள்ளங்கைய்யை மூடினால் 
அதனுள் ஈரேழு பதினான்கு லோகங்களும் அடக்கம் ,

அதை வலது காலின் பாகம் மேல் வைத்தால் ,ஜீவ ப்ரம்ம ஐக்ய தத்வம் ,
பரமேஷ்வரி பரமேஷ்வர ஐக்யமத்யம் ஆகும் ,

அங்கு போய் இங்கு போய் நமது இரு கையிலேயே ஸ்ரீசக்ர ரஹஸ்யம் புலப்படுகிறதா,

சங்கல்ப முத்திரையை சரியாக வைத்து மனதில் ஒரே எண்ணமாக எதை நினைகிரீர்களோ அது நிச்சயம் நிறைவேரும் ,

நினைக்கும் முன் பரமேஷ்வர ப்ரீத்யர்தம் என்று சொல்வதே சரி ,

சில பேர் நாராயண ப்ரீத்யர்தம் ,என கூறுவது அதமம் .

இந்த சங்கல்ப முத்திரையை ஸ்தித ப்ரக்ஞனாக ஒரே திடமாக எண்ணியதை நினைத்தாலே அது நிறைவேரும் 

No comments:

Post a Comment