Thursday, March 3, 2016

Thirumangai azhwar vedupari

Courtesy:Sri.GS.Dattatreyan

திருமங்கை மன்னன் வேடுபரி காணொளி

வைகுண்ட ஏகாதசி இராப்பத்து எட்டாம் திருநாள் இந்த வேடுபரி உத்சவம் ...

365 நாட்களில் உற்சவங்கள் இல்லா நாட்கள் கைவிரலில் எண்ணாலாம் என்பது போன்று திருவிழா கொண்டாடும் அரங்கன் திருக் கோவில்..

இந்த விழா மிக மிக விநோதமானது ..

வெளியூர் வாசிகள் பலருக்கு இதன் கானொளியில் (பலர் பதிவிட்டு உள்ள ) கோணவையாளி (சுழண்டு செல்லும் காட்சி மட்டும் கண்டு இருப்பீர்கள் !!) பார்த்து அது மட்டும சிறப்பு என்று எண்ணி இருப்பீர்கள்... (இது எல்லா தேர் திருவிழாவின் முதல் நாள் உண்டு !!)

இது ஒரு புனிதமான நாடகம் .. திருமங்கை மன்னன் அரங்கனை கொள்ளை கொண்டு பின்னர் அரங்கன் பாதம் சிரசில் பட்டு தன் நிலை உணர்ந்து ...மனம் வாடி ("வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்") விண்ணப்பிக்கும் ....விழா

எல்லா கோவில் விழாவிலும் யாராவது நடிக்கும் நாடகம் போடுவார்கள் !!

இந்த நாடகத்தில் அரங்கனே (ஆம் அவரே நடிக்கும் ...) நடிகராக கள்வனை துரத்திக்கொண்டு ஓடி ..

திருமங்கை ஆழ்வார் மூன்று முறை வேடம் மாற்றி (முதலில் வில் அம்புடன் நோட்டமிட .. பின்னர் வாள் கேடயம் ஏந்தி அரங்கன் பொருள் அனைத்தும் களவாடி சென்று .. பின்னர் ஆழ்வாராக வேல் மட்டும் ஏந்தி சரணாகதி அடைந்து !!)

அரங்கனின் காவலர்கள் பொருள்களை தேடி சென்று கண்டுபிடித்து .. ஒப்படைத்து.. கோவில் கணக்கர் திருட்டு அரங்கன் பொருள் கணக்கு படித்தல் ...

இது ஒரு 25 நிமிட அரங்கனே நடிக்கும் நாடகம் .. பொறுமையாக பாருங்கள் !!!

இதன் காணொளி

================================>>>>>>>>>>>>>>>>>>

https://www.youtube.com/watch?v=Hw9vw5Kg1JE&feature=youtu.be

<<<<<<<<<<<<<<<<<<<<<<===========================


No comments:

Post a Comment