என்று கேட்டனர்.
"அதற்கென்ன உங்களுக்கு ராதையை பார்க்கும் விருப்பம் இருந்தால் அவ்வாறே ஒருநாள் அவளை இங்கு வரவழைக்கிறேன்" என்றான் கிருஷ்ணன்.
எனவே தான் ராதை ஒருநாள் துவாரகைக்கு வந்தாள். ஆயர்குல மங்கை, ஆடையோ ஆபரணங்களோ ஒன்றும் விலையுயர்ந்தவை அல்ல. சாதாரணமாகவே இருந்த அவளிடம் அப்படி என்ன கிருஷ்ணன் ஸ்பெஷலாக கண்டான்? . ஏன் இப்படி ஒரு மோகம்? அடக்கமாக இருந்த ராதை அவர்களுடன் அன்பாக பேசினாள். மூச்சுக்கு முன்னூறு தடவை கிருஷ்ணனை புகழ்ந்து கொண்டிருந்தாள். வந்தவளுக்கு உபசாரம் செய்யக்கூட மறந்து போய்விட்டனர் ருக்மணியும் மற்ற அனைத்து மனைவியரும்.
வெகுநேரம் அவர்களோடு பேசி முடித்த ராதா நான் விடை பெறுகிறேன் என்று சொன்னதும் தான் ராணிகளுக்கு சுரீர் என்று உரைத்தது. வந்தவளுக்கு ஒரு உபசாரமும் செய்யவில்லையே? திடீரென்று ருக்மணி உள்ளே ஓடி வெகுவேகமாக பாலைகாய்ச்சி எடுத்து கொண்டு வந்தாள் . பேசிக்கொண்டே ராதையிடம் அந்த கொதிக்கும் பாலை கொடுத்தாள்.
" கிருஷ்ணனின் பிரியையான உனக்கு கிருஷ்ணனுக்கு பிடித்த பசும் பாலே கொண்டு வந்திருக்கிறேன். இது கிருஷ்ணனின்
பிரசாதமாக ஏற்று குடி". என்றாள்.
அவர்களது பால்ய வாழ்க்கை ப்ருந்தாவனத்தில் எவ்வாறெல்லாம் இருந்தது என்ற இனிய நினைவுகளை ராதா ருக்மணியுடனும் மற்ற மனைவியருடனும் மகிழ்ச்சியோடு பரிமாறிக்கொண்டிருந்தாள் அப்போது. அவளது வார்த்தைகளில் கிருஷ்ணனின்
மீது அவள் கொண்டிருந்த பற்றும், பாசமும், தூய அன்பும், தியாகமும் பிரேமையுமே வெளிப்பட்டது. இந்த நேரத்தில் சுடச் சுட ஆவி பறக்கும் கொதிக்கும் பாலை ருக்மிணி "இந்தா கிருஷ்ணபிரசாதம்" என்று கொடுத்த அடுத்த கணமே ராதா அந்த கொதிக்கும் நெருப்பு போன்ற சூடான பால் அத்தனையும் ஒரே வாயில் ஆனந்தமாக பருகினாள். பிறகு சிறிது நேரத்தில் ராதா அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு பிருந்தாவனம் சென்று விட்டாள். ராதையின் வரவு ருக்மிணிக்கும் மற்ற மனைவியருக்கும் அவள் மீது முன்பிருந்த வெறுப்பை கொஞ்சம் குறைத்திருந்தது. அவர்கள் ராதையுடன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் கிருஷ்ணன் அங்கு இல்லை. தனது அறையில் உறங்கி கொண்டிருந்தான்.
ராதை சென்றவுடன் ருக்மிணியும் மற்றோரும் கிருஷ்ணனின் அறைக்கு சென்றனர். உறங்கி எழுந்த கிருஷ்ணன் படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்த போது சிரமத்துடன் இருப்பதையும், வாய் பேசமுடியாமல், வாய் முதல் கால்வரை கொப்புளங்களுடன் காட்சியளிப்பதையும் கண்டு திகைத்தனர்.
"கிருஷ்ணா, உனக்கு என்ன ஆயிற்று, என்ன செய்தாய்? எங்கு சென்றாய், ஏன் உடல் தீயில் வெந்தது போல் ஆகிவிட்டது?" என்று பதறினாள் ருக்மணி. அனைவருமே ஆடிப்போய் விட்டனர்.
"ஒன்றுமில்லையே, நான் எங்கும் செல்லவில்லையே"
"எதற்கு உன் வாய் உடல் எல்லாம் வெந்து இருக்கிறது, கால் வரை கொப்புளங்கள்?"
"சூடான என்னுடைய பிரசாதம் செய்த வேலையாயிருக்கும்" பரவாயில்லை ஒன்றிரண்டு நாட்களில் சரியாகிவிடும்" என்றான் கிருஷ்ணன்.
யாரோ மண்டையில் சம்மட்டியால் அடித்தது போல் ஆயிற்று ருக்மணிக்கு. கொதிக்கும் பாலை சற்று நேரத்துக்கு முன் அவள் தானே கவனிக்காமல் "கிருஷ்ண பிரசாதம் உனக்கு" என்று ராதைக்கு கொடுத்தாள் . ராதை அதை சந்தோஷமாக பருகினாளே. அவளுக்கு ஒன்றுமே ஆகவில்லையே?"
"கிருஷ்ணா, நீ எப்போது சூடான பால் பருகினாய். ராதைக்கல்லவோ நான் பாலை கொடுத்தேன்"
"ஒ அப்படியா. அது ஒன்றுமில்லை. ஒருவேளை நீங்கள் அனைவரும் ராதைக்கு அளித்த சூடான பால் அவள் வாயிலும்
வயிற்றிலும் இறங்கி அதன் வேலையை எனக்கு காட்டி விட்டிருக்கலாம்"
கிருஷ்ணனும் ராதையும் வேறல்ல. தன் பக்தை பருகிய சூடான கொதிக்கும் பால் அவளை ஒன்றும் செய்யாமல் அவள் பூஜிக்கும் கிருஷ்ணனின் வாயிலும் உடலிலும் மட்டுமே தீக் கொப்புளங்கள் உண்டாக்கிய அதிசயத்திலிருந்து அவர்கள் உறவு எவ்வளவு தெய்வீகமானது என்று புரிந்துகொண்டு அனைவரும் கிருஷ்ணனை வணங்கினர். தங்கள் தவறுக்கு வருந்தினர்
No comments:
Post a Comment