Sunday, July 14, 2013

அல்ஜீரியாவில் அபயமளித்தார் மஹா பெரியவர்

Courtesy:Sri.Mayavaram guru




பின் தங்கிய நாடாகிய அல்ஜீரியாவில் ரயில்வேயை மேம்படுத்த திட்டம் வகுத்தார்கள். அதற்கு அந்நாட்டு ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுத்த்து நம் இந்திய இரயில்வேத்துறைப் பொறியாளர்களை. (எல்லா நாடுகளிலும் வெறியாளர்கள் இருப்பார்கள்; ஆனால் பாரதத்தில் தான் பொறியாளர்கள் கிடைப்பார்கள்!)

பல கோடி ரூபாய் திட்டம்; பல் வகையான இயந்திரங்கள் !
பொறியாளர்களும் பணியாளர்களுமாக அந்த நாட்டில் 1986 மே 17ம் தேதியன்று காலடி வைத்தோம்.

முதுனிலைப் பொறியாளனான என்னிடம் , இயந்திரங்ளை இயக்குவது, செப்பனிடுவது, சரி பார்ப்பது என்ற பணிகள் ஒப்படைக்கப்பட்டன.

எங்கள் போதாத காலம் போலிருக்கிறது... இயந்திரங்கள் அடிக்கடி பழுதடைந்தன; வாரம் தவறாமல் ஒரு விபத்து ! இந்தத் தொழிலாளிக்குத் தலையில் அடி; அவர் கீழே விழுந்து கால் உடைத்துக்கொண்டார்; அந்தப்பகுதி இடிந்து விழுந்தது...! என்பன போன்ற "மகிழ்ச்சிகரமான " செய்திகள்.

குறித்த காலத்திற்குள் வேலையை முடித்துவிட முடியுமா என்பது ஒருபுறமிருக்க, எங்கள் குழுவைத்தேர்ந்தெடத்த இந்திய இரயில்வே வாரியத்தினர் எங்களைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்ற மனக்குறையும் சேர்ந்துகொண்டது.

இனி, எங்ளுக்கு தெய்வமே துணை என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தோ.

மேம்பாட்டுத்திட்; முதன்மை அதிகாரி திரு. செல்வம் அவர்களுக்கும், தலைமை செயற்பொறியாளர் திரு. ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் கலக்கம் வந்துவிட்ட்து

"ராமச்சந்திரன் , என்ன செய்யலாம் ? "

" தெய்வமே துணை..."

" ரொம்ப சரி. நாங்களும் அப்படித்தான் நம்பிக்கொண்டிருக்றோம். இப்போ, நீங்கள் தெய்வத்தைக் காட்டுங்கள்...."

" உங்களுக்கே தெரியும் சார் ! உங்கள் அறையில் அந்த ஒரு படத்தை மட்டும் தானே வைத்திருக்கிறீர்க. அந்த நடமாடும் தெய்வம் தான் நமக்குத்துணை..."

" வெரிகுட் ஜடியா !"

அடுத்த நாளே ஒரு நீண்ட கடிதம் எழுதினோம் பரமாச்சாரியாருக்கு எங்கள் இன்னல்கள், துயரங்கள், சோகங்கள், இயந்திரக்கோளாறுகள, விபத்துகள்,... திட்டம் குறித்த காலத்தில் நிறைவேறி, வெற்றியுடன் தாய்நாடு திரும்பவேண்டும் – என்ற பிரார்த்தனையோடு.

பதினைந்தாம் நாள் , ஆசீர்வாத கடிதமும் பிரசாதமும் வந்தன – காஞ்சி ஸ்ரீ மடத்திலிருந்து.

சனிக்கிழமைதோறும், மாலையில் எங்கள் முகாமில் இறைவழிபாடு நடை பெறும். அந்தவார பூஜையின் போது எல்லாருக்கும் பெரியவாள் அனுக்ரஹித்த பிரசாதம் கொடுத்தோம். எல்லார் நெற்றியிலும் திருநீறு ஜொலித்தது.

என்ன விந்தை !!

அதற்குப்பின் ஒரு சிறு விபத்துகூட ஏற்படவில்லை! இயந்திரங்கள் இயந்திரகதியில் சுழலத்தொடங்கின. தொழிலாளர்கள் பயமில்லாமல் பணி செய்தார்கள்.

மேம்பாட்டுப்பணி, பற்பல இடங்களில் (site) நடைபெற்றது. ஒவ்வோர் இடத்திலும் வேலையைத் துவக்கும்முன், எனக்கு நிச்சயமாக அழைப்பு வரும் – பூஜை செய்வதற்காக.
குறிப்பிட்டிருந் காலத்திற்கு முன்னதாகவே, எங்கள் பணி சிறப்பாக நிறைவேறியது. பிரெஞ்சு, அல்ஜீரிய அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக எங்கள் குழுவைப் பாராட்டினர்.

பாராட்டைக் கேட்டுக்கொள்ளும் கடமை எங்களுக்கு இருந்தது.

உரிமையாளர் காஞ்சிபுரத்திலிருதார் !

அது எங்களுக்கு மட்டுமே தெரியும்!

No comments:

Post a Comment