Monday, February 28, 2022

Greatness of dharbha grass

#பிராமணனை காப்பாற்றும் ஆயுதம் தர்ப்பை...
வஜ்ரோ யதா சுரேந்த்ரஸ்ய சூலம் ஹஸ்த ஹரஸ்ய ச
சக்ராயுதம் யதா விஷ்ணோ: ஏவம் விப்ரகரே குச:
#அதர்வண_வேதம்
அதர்வண வேதம் தர்ப்பையின் பெருமையை பலவாறு கூறுகிறது...
இந்திரன் கையில் உள்ள வஜ்ராயுதம், சிவன் கையில் உள்ள சூலாயுதம், விஷ்ணு கையில் உள்ள சக்ராயுதம் ஆகியனவற்றுக்கு எவ்வளவு சக்தி உண்டோ அவ்வளவு சக்தி பிராமணன் கையில் உள்ள தர்ப்பைப் புல்லுக்கு உண்டு.
பாதாளத்தில் மூழ்கிக் கிடந்த பூமியை இந்த ஆதி ஸ்வேத வராஹ மூர்த்தி மேலே எடுத்து அதைத் தன் சக்தியால் ஜலத்தின் மீது நிலை நிற்கச் செய்தபோது, தன் சரீரத்தை உதறும் காலத்தில் அந்தச் சரீரத்திலுள்ள ரோமங்கள் பச்சை நிறமுடைய தர்ப்பங்களாகவும் நாணல்களாகவும் விளைந்தன.
அந்த தர்ப்பங்களாலும் நாணல்களாலும் யஜ்ஞங்களுக்கு விரோதிகளான ராக்ஷஸர்களை அழித்து ரிஷிகள் யஜ்ஞங்களால் பகவானை ஆராதித்தார்கள். ஆகவே தான் அவைகள் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது தர்ப்பை.
தர்ப்பையில் ஏழுவகை உண்டு...
அவை,
1) குசை
2) காசம்
3) தூர்வை
4) விரிகி
5) மஞ்சம்புல்
6) விசுவாமித்திரம்
7) யவை
என்பவை...
தோற்றத்தைப்பொறுத்து இவை ஆண், பெண், அலி என மூன்று வகைப்படும்.
நுனிப்பகுதி பருத்துக் காணப்படுவது பெண்தர்ப்பை....
அடிப்பகுதி பருத்திருந்தால் அது அலி தர்ப்பை...
அடிமுதல் நுனி வரை ஒரே சமமாக இருந்தால் ஆண் தர்ப்பை எனவும் கூறப்படுகிறது. 
பெரும்பாலும் யாரும் அலி தர்ப்பையை உபயோகப்படுத்துவது இல்லை.
ஆண்தர்ப்பையில் மிகவும் கூர்மையானது வசிஷ்டம் என்றும், மிருதுவாக இருப்பது விஸ்வா மித்ரம் என்றும் கூறுவார்கள். இவை இரண்டுமே விசேஷ குணம் உடையவை.
இந்த தர்ப்பையை எல்லாவிதமான கிரியைகளுக்கும் கை விரலில் மோதிரமாக அணிந்து கொள்ளும் வழக்கம் புராண காலத்திலிருந்தே உள்ளது. 
அதர்வண வேதம் சொல்கிறது,
பூதப் பிரேத பிசாசாஸ்ச யே சான்யே ப்ரம்மராக்ஷசா:
விப்ராங்குலி குசான் த்ருஷ்ட்வா தூரம் கச்ச அதோ முகா:
பிராமணன் விரலில் உள்ள
விப்ர + அங்குலி + குசான்
தர்ப்பையைப் பார்த்தவுடன் பூதங்கள், ஆவிகள், பிசாசுகள், பிரம்ம ராக்ஷஸர்கள் ஆகியோர் பயந்துகொண்டு தலை குனிந்தவாறு ஓடிப் போய் விடுவார்கள்.
கையில் தர்ப்பைப் புல்லுடன் உள்ள பிராம்மணன் அஹங்காரம் இல்லாமல் இருப்பானாகில், அக்னியைக் கண்ட பனி ஒழிவது போல அவன் பாபங்களை அழிப்பான் என்கிறது.
இதனாலேயே இந்த தர்ப்பையினால் செய்யப்படும் மோதிரம் போன்ற அமைப்பு பவித்ரம் என்று அழைக்கிறோம்.
பவித்ரம் என்றால் பரம சுத்தமானது என்று அர்த்தம்.
இந்த பவித்ரம் செய்யப்படும் கர்மாவுக்கு ஏற்ப தர்ப்பை புல்லின் எண்ணிக்கை மாறுபடுகிறது.
அவை :-
1) ப்ரேத கார்யங்களில் ஒரு தர்ப்பை
2) சுப கர்மாவில் 2 தர்ப்பை
3) பித்ரு கர்மாவில் 3 தர்ப்பை
4) தேவ கர்மாவில் 5 தர்ப்பை
5) சஷ்டியப்த பூர்த்தி போன்ற சாந்தி கர்மாவில் 6 தர்ப்பை
தேவ கார்யங்களுக்கு கிழக்கு நுனியாகவும் பித்ரு கார்யங்களில் தெற்கு நுனியாகவும் உபயோகப்படுகிறது.
ஹோமங்களில் பரிஸ்தரணம், ஆயாமிதம், ப்ரணீதா போன்றவைகளிலும் தர்ப்பங்கள் இடம் பெற்றுள்ளன. ச்ராத்த மற்றும் தர்ப்பண காலங்களில் ஸ்தல சுத்தி, ஆஸனம், கூர்ச்சம் போன்றவைகள் தர்ப்பங்களினால்தான் செய்யப்படுகின்றன.
குறிப்பாக தர்ப்பங்களில் தர்ப்ப கூர்ச்சத்தினால்தான் (அல்லது தர்ப்ப ஸ்தம்பம்) ப்த்ருக்களை ஆவாஹணம் செய்யச் சொல்லியுள்ளது.
கலச ஸ்தாபனம் போது மாவிலை கொத்து தேங்காயுடன் தர்ப்ப கூர்ச்சம் வைப்பது இன்றியமையாதது. ஏனென்றால் தர்ப்பை வழியாக ப்ராண சக்தி கும்பத்துக்குள் வருகிறது.
கல்யாணத்தில், கல்யாண பெண்ணிற்கும், சீமந்தத்திற்கும், அதே மாதிரி உபநயனத்தில் வடுவிற்கும் இடுப்பில் தர்ப்பங்களினாலான கயிற்றை மந்த்ர பூர்வமாக கட்டும் ப்ரயோகமும் இருந்து வருகின்றது.
உபயோகப்படுத்தும் தர்ப்பங்களின் நுனி உடையாமல் இருக்க வேண்டும். ப்ரயோகங்களில் நுனி இல்லாத தர்ப்பங்கள் ஆஸனத்தைத் தவிர மற்றதுக்கு உபயோகப் படுவதில்லை.
தர்ப்பத்தினாலான ஜப ஆஸனம் (பாய்) மிகவும் விசேஷம். தர்பாஸனத்தில் அமர்ந்து செய்யும் பூஜை மற்றும் ஜெபங்களுக்கு பலமடங்கு சக்தி உண்டு.
கர்மாக்களின் துவக்கத்தில் கணவன் ஸங்கல்பம் செய்யும் போது மனைவி கணவனை நேரிடையாக தொட்டுக் கொள்வதில்லை. தர்ப்பங்களினால் தான் கணவனை ஸ்பரிக்கச் சொல்லியுள்ளது. தர்ப்பங்கள் தான் அவர்களுக்கு அங்கே இணைப்பாக உபயோகப்படுத்தப்படுகிறது.
க்ரஹண காலங்களில் ( சூர்ய மற்றும் சந்திர ) இல்லத்தில் ஏற்கனவே பக்குவமாகி இருக்கும் பதார்த்தங்களிலும், குடிநீரிலும் தர்பங்களை போட்டுவைத்தால் எந்த வித தோஷமும் அவற்றுக்கு ஏற்படாது.
பிராமணனுக்கு தர்பை புல் ஓர் ஆயுதம். முனிவர்களும், ரிஷிகளும் தர்ப்பைப்புல், தண்ணீர், மந்திரசத்தி மூன்றையும் இணைத்து செயற்கரியா செயல்களை செய்தனர்.
வரம் கொடுத்தனர், சாபம் கொடுத்தனர், அஸ்திரங்களை பிரயோகிதனர்.
பிரபஞ்சத்தில் பிராணசக்தியை கடத்தும் சக்தி தர்ப்பைக்கு உண்டு. அதனாலேயே சங்கல்பத்தில் "தர்பான் தாரயமான:" என்று விரலில் இடுக்கிக் கொண்டு பிராணயாமம் செய்கிறார்கள்.
குசபாணி சதா திஷ்டேத் பிராம்மணோ டம்பவர்ஜித:
ச நித்யம் ஹிந்தி பாபானி தூல ராசிமிவாநல:
கையில் தர்ப்பைப் புல்லுடன் உள்ள பிராமணன் அகங்காரம் இல்லாமல் இருப்பானாகில், அக்னியைக் கண்ட பனி ஒழிவது போல அவன் பாவங்களை அழிக்கவல்லான்.
தர்பை ஒரு சிறந்த மின் கடத்தி.!
அது ஆற்றலையும் கடந்த வல்லது.!
தர்ப்பையை உபயோகப்படுத்திய பின், அதை நான்காக பிரித்து வடக்கு பக்கமாக போடவேண்டும். பின்பு கண்டிப்பாக ஆசமனம் செய்தால்தான், நாம் தர்பையை உபயோகித்து செய்த கர்ம பலன் அளிக்கும்.!
பிராமணனுக்கு ஆயுதமே தர்பை தான்...

Poorava janma story of Karna

பால.ரமேஷ்.




 *தினம் ஒரு குட்டிக்கதை.*




கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் உங்களுக்கு தெரியுமா ?

மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன் ஒரு பாண்டவ புத்திரன் என்ற இரகசியம் அவன் இறந்த பிறகே உலகம் அறிந்தது.

கொடைக்குப் பெயர் பெற்ற கர்ணனோ இறப்பதற்கு சில நாட்கள் முன்பு தான் அறிந்திருந்தான்.

அதுவும் கிருஷ்ண பகவானின் லீலையால்!

மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப்பட்ட ஒரு வாழ்வு?

இதற்கு விடை கர்ணனுடைய பூர்வ ஜன்ம இரகசியத்தில் உள்ளது.

ஆம்! பூர்வ ஜன்மத்தில் கர்ணன் சஹஸ்ர கவசன் என்ற அசுரனாக இருந்தான்.

தேவர்களை நிர்தாட்சண்யமின்றி தாக்கி வந்தான்.

பிரம்ம தேவனிடம் அவன் பெற்ற வரத்தின் படி அவனுடைய சரீரம் ஆயிரம் சட்டைகளால் போர்த்தப்பட்டிருந்தது.

எவரும் அந்த ஆயிரம் சட்டைகளை நீக்காமல் அவனைக் கொல்ல முடியாது.

அவனைத் தாக்க விரும்பும் வீரன் 12 வருடங்கள் தவமிருந்து விட்டு, அதன் பின்னர் 12 வருடங்கள் அவனுடன் தொடர்ந்து போர் புரிந்தால் ஆயிரம் கவசங்களுள் ஒன்றை அறுக்க முடியும்.

இவ்வாறு 24 வருடங்கள் வீதம் தவமும், போரும், யாகமும் செய்து ஆயிரம் கவசங்களை ஒன்றன் பின் ஒன்றாக அறுத்தெறிந்தால் சஹஸ்ர கவசன் மடிவான்.

எனினும், இதனைச் சாமான்ய மனிதர்களால் சாதிக்க இயலவில்லை.

எனவே, சஹஸ்ர கவசன் தேவர்களுக்கு செய்யும் கொடுமைகள் அனைத்தும் தொடர்ந்தன.

அமரர்கள் மகாவிஷ்ணுவை நாடி அசுர உபாதையை ஒழிக்க உதவுமாறு வேண்டினர்.

விண்ணவர் மீது இரக்கம் கொண்ட மகாவிஷ்ணு அசுரர் கொடுமையை ஒழித்து அமரவாசிகளுக்கு ஆறுதல் உண்டு பண்ணத் திருவுளம் கொண்டு நர நாராயணர்களாக (அதாவது நரனும் அவரே, நாராயணனும் அவரே) தனது சக்தியை இரண்டு விதத்தில் வடிவமைத்தார். இப்படியாக அவதரித்தார்.

ஸஹஸ்ர கவசனை ஸம்ஹரிப்பதற்கு அவர்கள் கூட்டு முயற்சி செய்தனர்.

நரன் 12 வருடங்கள் தவம் புரிய, நாராயணர் அசுரனுடன் போர் புரிந்து கவசமொன்றை அறுத்துத் தள்ளினார். இப்படிப் பல வருடங்கள் விடா முயற்சி செய்து 999 கவசங்களை நர, நாராயணர்கள் அறுத்து எறிந்தனர்.

இதற்குள் பிரம்ம பிரளயமே வந்து விட்டது.

எஞ்சி நின்ற ஒரு கவசத்துடன் சஹஸ்ர கவசன் சூரிய லோகம் போய்ச் சேர்ந்தான். 'தன்னைத் தேடி வந்து அபயம் கேட்டவன் அரக்கனாக இருந்தாலுமே! அவனுக்கு அடைக்கலம் அளிக்க வேண்டிய கடமை தன்னுடையது' என்பதை உணர்ந்த சூரிய தேவன். அவனைத் தனது சூரிய லோகத்தில் இருக்குமாறு பணித்தார்.

சஹஸ்ர கவசன் தனக்கு அடைக்கலம் அளித்த சூரிய தேவனையே தனது இஷ்ட தெய்வமாக பாவித்து வணங்கி வந்தான். சூரிய லோகத்திலேயே அவனது அப்பிறவி முடிந்தது.

இந்த சஹஸ்ர கவசனே அடுத்த ஜன்மத்தில் சூர்ய புத்திரனாக கர்ணன் என்ற பெயரில் மீதமுள்ள (பூர்வ ஜன்ம கவசம்) ஒரு கவசத்தோடு பிறப்பெடுத்தான்.

இந்தக் கவசமும் அறுக்கப்பட வேண்டியதே!

இந்தக் காரியத்திற்காகவே பகவான் மகாவிஷ்ணு நர ரூபத்தில் அர்ஜுனனாகவும், நாராயண அம்சத்தில் கிருஷ்ணனாகவும் ஜனித்தனர்.

12 ஆண்டுகள் பாண்டவர்கள் வனவாசம் செய்தது. அந்த நரனுடைய 12 வருடத் தவமேயாகும்.

ஒரு கவசத்தை இந்திரன் மூலம் நீக்கிய விஷயம் நாம் எல்லோரும் அறிந்ததே.

கவசம் நீங்கியதால் தான் அர்ஜுனனால் கர்ணணை கொல்ல முடிந்தது.

இதே போலத் தான், நம்முடைய இந்த ஜன்ம வாழ்க்கை நிகழ்வுக்கும் ஒரு காரணம் உண்டு.

நமது வாழ்வில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் காரணம், பூர்வ ஜன்மக் கர்மாக்கள் ஆகும்.

கர்ணனின் வாழ்க்கை அமைந்த விதம் இந்த உண்மையை நிரூபிக்கிறது. நாமும் கூட அப்படித் தான் காரணம் இல்லாமல் இந்த உலகத்தில் பிறக்க வில்லை. அதனால் வந்த வேலை முடியாமல் உலகத்தை விட்டுச் செல்ல முயற்சிக்கக் கூடாது (அதவாது வாழ்க்கை வெறுக்கும் படியாக சில தருணங்கள் அமைந்தாலும் தற்கொலை என்னும் முடிவை எடுக்கவே கூடாது. அது இறைவனுக்கு எதிரானது. இறைவன் அதனை விரும்பமாட்டார். இறைவன் நம்மிடம் ஒப்படைத்த ஒரு பொறுப்புள்ள வேலையை நாம் தட்டிக் கழித்து விடுவதற்கு சமானம் இது)

அதனால் வந்த வேலையை வெற்றிகரமாக முடிப்போம். இறைவன் அழைக்கும் வரை காத்திருந்து பக்குவமான நேரத்தில் அவன் அழைக்கும் சமயம் அவன் திருவடி சென்றடைவோம்.

-ஓம் நமோ நாராயணாய-

Excessive intelligence - Sanskrit story

*अत्यधिकं चातुर्यं कदाचिद् हानये भवति।*

एकदा कश्चन पुरुषः द्वारं पिधाय गृहे उपविशन् आसीत्। 
तदानीं साक्षात् मृत्युः तस्य गृहद्वारम् आगत्य तद् द्वारं नुन्नवान्। 

सः पुरुषः तदा द्वारम् उद्घाट्य तं दृष्ट्वा अपृच्छत् भवान् कः इति!

मृत्युः स्वपरिचयं दत्त्वा तस्मै सूचिं दर्शयित्वा अवदत् इदानीं त्वं मया सह चल। यतः मम सूच्यां तव नाम सर्वेभ्यः उपरि अस्ति, अर्थात् तव नाम प्रथमम् अस्ति इति। 

सः पुरुषः तदा भीतः सन् तं निवेदितवान् हे मृत्यो! अहम् इदानीं भवता साकं गन्तुं सज्जः न अभवम्। तावता भवान् मम गृहम् आगच्छतु। अहं भवते पानीयं दातुम् इच्छामि, तत् पिबतु इति। 

मृत्युः अस्तु इत्युक्त्वा तस्य गृहं प्रविष्टवान्। 

तदा सः पुरुषः पानीये जले निद्रायाः गुलिकां मिश्रयित्वा तस्मै मृत्यवे अददात्। 

मृत्युः तत् पानीयं पीत्वा निद्राम् अकरोत्। 
अत्रान्तरे च सः मृत्योः पार्श्वे स्थितायाः सूच्याः उपरि लिखितं तस्य नाम मार्जयित्वा सूच्याः अधः अलिखत्। 

अनन्तरं यदा मृत्योः निद्राभङ्गः अभवत् तदा सः तं पुरुषम् अवदत् भोः! त्वं महान् असि, अतः त्वां प्रथमं न नेष्यामि अपितु सूच्याः अन्तिमे यस्य नाम अस्ति तं प्रथमं नेष्यामि इति।

मृत्योः वचनं श्रुत्वा सः पुरुषः रोदनम् आरब्धवान् विलापं च कुर्वन् अवदत् हा हन्त! मया किं कृतम् इति।
*-प्रदीपः!*

Watch "Update on Maha Shivaratri 2022 Programme by The Ghanapati | Vedic Chants List" on YouTube

krishnAngAraka caturdazi punya kAlam

Tomorrow 01.03.2022 is krishnAngAraka caturdazi punya kAlam

You can do samudra snAnam, japa, tapa,dAnam followed by yama tarpanam which will give manifold benefits

दीपोत्सवचतुर्दश्यां कार्यं तु यमतर्पणम्।

कृष्णाङ्गारचतुर्दश्याम् अपि कार्यं सदैव वा॥

 

कृष्णपक्षे चतुर्दश्याम् अङ्गारकदिनं यदा।

 

तदा स्नात्वा शुभे तोये कुर्वीत यमतर्पणम्॥

`kRSNa caturdazI tithi` on a Tuesday is very sacred. Perform `tarpaNam` to Yama Dharamaraja.

एकैकेन तिलैर्मिश्रान् दद्यात् त्रींस्त्रीन् जलाञ्जलीन्।

संवत्सरकृतं पापं तत्क्षणादेव नश्यति॥

कृष्णपक्षे चतुर्दश्यां यां काञ्चित् सरितं प्रति।

यमुनायां विशेषेण नियतस्तर्पयेद् यमम्॥

यत्र क्वचन नद्यां हि स्नात्वा कृष्णचतुर्दशीम्।

सन्तर्प्य धर्मराजं तु मुच्यते सर्वकिल्बिषैः॥

दक्षिणभिमुखो भूत्वा तिलैः सव्यं समाहितः।

देवतीर्थेन देवत्वात् तिलैः प्रेताधिपो यतः॥

१. यमं तर्पयामि। (त्रिः)

२. धर्मराजं तर्पयामि।

३. मृत्युं तर्पयामि।

४. अन्तकं तर्पयामि।

५. वैवस्वतं तर्पयामि।

६. कालं तर्पयामि।

७. सर्वभूतक्षयं तर्पयामि।

८. औदुम्बरं तर्पयामि।

९. दध्नं तर्पयामि।

१०. नीलं तर्पयामि।

११. परमेष्ठिनं तर्पयामि।

१२. वृकोदरं तर्पयामि।

१३. चित्रं तर्पयामि।

१४. चित्रगुप्तं तर्पयामि।

Perform Japa of the following names—

यमो निहन्ता पितृधर्मराजो वैवस्वतो दण्डधरश्च कालः।

प्रेताधिपो दत्तकृतानुसारी कृतान्तः (एतद् दशकृज्जपन्ति)॥

Perform `namaskAraH`—

नीलपर्वतसङ्काशो रुद्रकोपसमुद्भवः।

कालो दण्डधरो देवो वैवस्वत नमोऽस्तु ते॥

 

Rare Rudra Stavam by Lord Brahma From Linga Puranam

Dear All,

Greetings and Namaste. As Sri Mahashivatri falls on 01-March-2022 (Tuesday), I am delighted to share a very rare hymn on Lord Rudra by Lord Brahma taken from Linga Puranam, Purva Bhaga and Chapter 72 titled Brahma Stavam. The brief Phalashruti at the end mentions that one who recites or listens to this sacred hymn begets the following benefits:
  • Eradication of all kinds of sins committed by body, mind, speech, etc.
  • Wealth, health, long life, comforts, education, victory over enemies, etc
  • One who recites this hymn at the time of prayer to ancestors (Shraddha) or to Devas (Puja) gets sojourn in the abode of Lord Brahma.
May We Pray To Lord Shiva with this most sacred hymn during Mahashivaratri!

With best regards & Pranams,
K. Muralidharan Iyengar (Murali)

Sunday, February 27, 2022

Sanskrit sound pictionary app

Mantras, rishis their inherent meanings

*மந்திரங்களுக்குள்* *மறைந்திருக்கும் அர்த்தங்கள்*

மந்திரமும் யந்திரமும் இறைசக்தியின் அருள்
பெறுவதற்கான சாதனங்கள்.

மந்திரம் என்பது, 'உச்சரிப்பவரை காக்கும் சொல்' என்ற பொருள் கொண்டது.

மந்திரங்கள் அவற்றின் பயன்களின் அடிப்படையில் தூய மந்திரங்கள், மாய மந்திரங்கள், ஆக்கும் மந்திரங்கள், காக்கும் மந்திரங்கள் உள்ளிட்ட பல நிலைகளில் அமைந்துள்ளன. 

எந்த ஒரு மந்திரமும் சப்த பிரபஞ்ச மண்டலத்தில், அதற்கான அலைவரிசையில் குறிப்பிட்ட அதிர்வுகளை ஏற்படுத்துவதன் மூலம் விளைவுகள் ஏற்படுகின்றன என்பது ஆன்மிக நியதி.

சப்த பிரபஞ்ச வடிவமாக உள்ள வேதங்களில் பொதிந்துள்ள மந்திரங்களை கண்டறிந்து வெளிப்படுத்தியவர்கள், 'ரிஷிகள்' ஆவார்கள். 

இந்த ரிஷிகளில், மகரிஷி, பிரம்மரிஷி, ராஜரிஷி, வைஸ்யரிஷி, ஜனரிஷி, தபரிஷி, ஸத்யரிஷி, காண்டரிஷி, தேவரிஷி, சூதரிஷி என்ற பல்வேறு வகையினர் உள்ளதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ரிஷிகள் கண்டறிந்த மந்திரங்களுக்கு 7 விதமான பண்புகள் உள்ளன. 

அவை, 1) 'ரிஷி' - மந்திரத்தை கண்டறிந்தவர் 

2) 'சந்தஸ்' - மந்திரம் உச்சரிக்கப்படும் முறை 

3) 'தேவதை' - மந்திரத்திற்குரிய கடவுள் 

4) 'பீஜம்' - மூல சக்தியாக உள்ள சொல் 

5) 'சக்தி' - அதன் சக்தி நிலை 

6) 'கீலகம்' - அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைக்கும் பகுதி 

7) 'நியாசம்' - உச்சரிப்பின்போது உடலின் பகுதிகளை ஒழுங்குபடுத்துவது ஆகியவையாகும். 

இந்த ஏழு விதமான பண்புகளைப் பற்றி 
இங்கே பார்க்கலாம்.


ரிஷி

எவரும் கண்டறியாத மறை பொருளாக இருந்து கொண்டிருந்த மந்திரங்களைக் கண்டுபிடித்து, அதனை நமக்கு அளித்தவர்கள் ரிஷிகள். 

எனவே அந்த ரிஷிகள், மந்திரத்துக்குரிய தேவதை, 'சந்தஸ்' எனப்படும் மந்திரம் உச்சரிக்கப்படும் முறை ஆகிய மூன்றும் போற்றப்பட வேண்டும் என்பது நியதி. 

ஆதி குருவான மந்திரத்தை கண்டறிந்த ரிஷி, அதை உபதேசித்த மானிட குரு ஆகியோரை வணங்குவதற்காக, வலது கையால் தலையை தொட்டு அதற்கு உரிய மந்திரம் சொல்வது 'ரிஷி நியாசம்' ஆகும்.

சந்தஸ்

குறிப்பிட்ட ஒரு மந்திரத்தின், சொல் அமைப்பு இதுவாகும். 

அந்த முறைக்கு வணக்கம் தெரிவிக்கும் முறையில், உதட்டின் வெளியே வலது கையால் தொட்டுக்கொள்ளும் முறை 'சந்தஸ் நியாசம்' ஆகும்.

தேவதை

மந்திரத்தின் மையப் பொருளாக உள்ள இறை சக்தியையே, 'தேவதை' என்கிறோம். 

அதை இதயத்தில் அமர்ந்திருக்கும் பாவனையுடன், இதய ஸ்தானத்தை தொட்டு வழிபடும் முறை 'தேவதா நியாசம்' ஆகும்.

பீஜம்

'பீஜம்' என்பதற்கு 'விதை' என்பது பொருள். சிறிய விதைக்குள் மாபெரும் மரம் வளர்வதற்காக காத்திருக்கும் நிலையை இது உணர்த்துகிறது. 

இந்தப் பிரபஞ்சமும் பஞ்ச பூதங்களும் சூக்கும நிலையிலிருந்தே தூலமான நிலைக்கு வந்தன.

இந்த பிரபஞ்சம் மற்றும் பஞ்சபூதங்கள் யாவும் அதன் சூட்சுமமான நிலையில் இருந்துதான் தற்போது பார்க்கப்படும் நிலைக்கு வந்துள்ளன. 

அந்தச் சூக்கும நிலைக்கு முன்பாக அதி சூக்கும நிலையிலிருந்தே வந்தன.

அதன் தோற்ற நிலைக்கு அடிப்படையாக உள்ள நுட்பமான ஒலி வடிவமே 'பீஜம்' ஆகும். 

 அதன் அடிப்படையில், ஒவ்வொரு தேவதைக்கும் தனித்தனியான 'பீஜ மந்திரம்' உள்ளது.

சக்தி

'பீஜம்' என்ற விதைக்குள் இருந்து வெளிப்பட 
காத்திருக் கும் அதன் பலன், 'சக்தி' என்று குறிப்பிடப்படுகிறது. 

இந்த சக்தியானது, வீரியம், தேஜஸ், பலம் என்ற நிலைகளிலும் வெளிப்படுகிறது.

கீலகம்

மந்திரத்தின் சக்தி சிதறாமல் பாதுகாப்பாக ஒருங்கிணைக்கும் வழிமுறை 'கீலகம்' ஆகும். 

ஓடும் தேரின் சக்கரத்திற்கு அச்சாணி அமைந்திருப்பதுபோல, ஒவ்வொரு மந்திரத்துக்கும் 'கீலகம்' என்ற ஒருங்கிணைப்பு
அவசியமானது.

நியாசம்

மந்திர உச்சரிப்பு மற்றும் அதன் அமைப்பு ஆகிய நிலைகளில் உடலின் பகுதிகளை சம்பந்தப்படுத்தி வணக்கம் தெரிவிக்கும் உடல்மொழி 'நியாசம்' எனப்படும். 

அவை 'அங்க நியாசம்', 
'கர நியாசம்' உள்ளிட்ட பல வகைகளில் அமைந்துள்ளன.

சொற்களின் சேர்க்கையாக உள்ள பல மந்திரங்களை பிரித்து, அர்த்தம் காண்பது இயலாது. 

இருந்தாலும், தன்னளவில் அவற்றின் சப்த அலைவரிசைக்கு சக்தி உள்ளதாக பல்வேறு 
ஆய்வுகள் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில், குறிப்பிட்ட உயர் எண்ணிக்கையில் ஒரு மந்திரத்தை இடம், பொருள், காலம் என்ற அளவீடுகளுக்குள் உட்பட்டு, உச்சாடணம் செய்யப்படும் நிலையில், மந்திரத்திற்கான உருவம், அதை உச்சரிப்பவருக்கு தென்படும் என்று ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட அந்த தேவதா உருவம், ஒரு சில காரியங்களை செய்யும் 
சக்தி படைத்தது என்றும் சொல்லப்பட்டுள்ளது. 

அப்படிப்பட்ட உருவங்களை தோற்றுவிக்கக்கூடிய 'பீஜாட்சரங்களை' கச்சிதமாக ரிஷிகள் தமது ஞான திருஷ்டியால் கண்டறிந்து, அவற்றை உலக நலனுக்காக அளித்துள்ளனர். 

குறிப்பிட்ட பீஜாட்சரங்களின் மூலம் மந்திரங்களை அமைத்து, அதற்குரிய தேவதையின் பெயரை அளித்து, அவற்றின் சக்தியையும் ரிஷிகள் காட்டிய வரலாறு உலகமெங்கும் சொல்லப்படுகின்றன.

மந்திர தேவதைகளில் சிறு தேவதைகள், தேவதைகள், அதிதேவதைகள் என்று மூன்று பிரிவுகள் உள்ளன. 

அதாவது, கருப்பணசாமி, குட்டிச்சாத்தான், யட்சிணி போன்ற தேவதைகள் சிறு தெய்வங்களாக சொல்லப்படுகின்றன. 

காளி, துர்க்கை, ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் போன்றவை 'தேவதைகள்' என்று குறிப்பிடப்படுகின்றன. 

சிவன், விஷ்ணு, பார்வதி, முருகன், கணபதி ஆகியோர் அதிதேவதைகள் என்று அழைக்கப்படுகிறார்கள். 

சம்பந்தப்பட்ட தேவதைக்குரிய உருவத்தை பார்த்துத் தரிசிக்கும் விதமாக மந்திரங்கள் செயல்படுகின்றன.

மந்திர உபாசனை பெற விரும்பும் ஒரு உபாசகர், 
அவரது உடல் மற்றும் உள்ளம் ஆகியவற்றின் அமைப்புக்கு ஏற்ற விதத்தில், சரியான குருவிடம் இருந்து தக்க சமயத்தில் மந்திர உபதேசம் பெற வேண்டும் என்பது ஆன்மிக நியதியாகும். 

ஆன்மிக முன்னேற்றம் அடைய விரும்புபவருக்கு அடித்தளங்களாக இஷ்ட தெய்வம், மந்திரம், தகுதிவாய்ந்த குரு ஆகிய மூன்று விஷயங்கள் அமைந்துள்ளன. 

அவற்றின் அடிப்படையில் மனதின் பக்குவத்துக்கு ஏற்ப இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்து, ஒரு குருவின் மூலம் பெறப்பட்ட அதற்கான மந்திரங்களை உச்சரித்து, 
உரிய முறையில் பூஜைகள் செய்தால் பலன் கிடைக்கும் என்று ஆன்மிக சான்றோர்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

மந்திரங்களின் ஆற்றல்

மந்திரங்கள் என்பவை சில எழுத்துக்களின் சோ்க்கை. பல மந்திரங்களுக்குப் பொருள் இல்லை. ஆயினும் அந்த மந்திரங்களின் சப்தங்கட்குச் சக்தி அதிகம். 

பீஜ மந்திரங்கட்கு என்ன பொருள் என்று சொல்ல முடியாது. ஆனாலும் அவற்றில் அளப்பரிய சக்தி அடங்கிக்கிடக்கிறது.

இந்த மந்திரங்களை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை அளவு உருப்போட்டால் அதற்கு உகந்த ஓா் உருவம் உண்டாகி அவ்வுருவம் ஜெபிப்பவனுடைய கண்ணுக்குத் தோற்றம் அளிக்கும் என்றும், அந்த உருவத்திற்குச் சில காரியங்களைச் செய்யக் கூடிய வலிமை உண்டாகும் என்றும் சொல்வா். 

இந்த உருவங்களைப் படைக்கக்கூடிய எழுத்துக்களை எவ்வாறு கண்டு பிடித்து இணைத்தனா் என்பது வியப்பான ஒன்று. 

இந்த எழுத்துக்களையே 
ஆரம்ப காலத்தில் பீஜ அட்சரம்
என்று குறிப்பிட்டனா்.

மேலே குறிப்பிட்ட பீஜாட்சரங்களின் மூலமாக மந்திரங்களை அமைத்து, ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு தேவதையின் பெயரை இட்டு, அவ்வகைத் தேவதைகளின் சக்தியை உணரச் செய்துள்ளனா்.

இத் தேவதைகளில் சிறு தேவதைகள், தேவதைகள், அதிதேவதைகள் என்ற மூன்று பிரிவுகள் உண்டு. 

குட்டிச் சாத்தான், யட்சிணி போன்ற தேவதைகள் சிறு தெய்வங்கள்: காளி, துா்க்கை, ஆஞ்சநேயா், நவக்கிரகங்கள் என்பன தேவதைகள்.

 சிவன், விஷ்ணு, பார்வதி, முருகன், கணபதி என்போர் அதிதேவதைகள்.

ஒவ்வொரு தெய்வத்தின் உருவத்தையும் நேரடியாகப் பார்த்துத் தரிசிக்க வேண்டுமானால் அதற்கு உபாயமாக ஒவ்வொரு மந்திரம் உள்ளது.

மந்திரம் என்பது ஒரு ஒலிக்கோவை. 
எழுத்துக்களின் கூட்டம்தான். 

ஒலி வடிவான எழுத்துக்களும் ஒளி வடிவான உருவங்களும் ஒரே உருவத்திலிருந்து வந்தவையே. 

அவை ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடா்பு உடையவை. 

விஞ்ஞானிகள் ஒரு குளக்கரையில் பலவிதமான சப்தங்களை எழுப்பிப் பார்தார்கள். 

அப்போது அவற்றின் அதிர்வுகள் (Vibrations) நீரின் மேலே மிதக்கின்ற இலேசான துகள்கள் வெவ்வேறு உருவங்களாக அமைந்ததைக் கண்டு நாதத்துக்கே உருவம் கொடுக்கிற சக்தி உண்டு என்பதைக் கண்டறிந்தார்கள்.

Ling, lot - Sanskrit grammar joke

*कार्तिक:* कुतः आगच्छसि रे ?
*रमणः* - लिङ्लोटौ स्वामीजी आश्रमतः 
*कार्तिकः* - किं नामधेयमेतत् ?
*रमणः* - किमपि पुच्छतु स: सदा वदति
 - _भवेत् भूयात्_ ... _भवेत् भूयात्_ 
इति अतः ...

Saturday, February 26, 2022

A discussion between JK & Satchidanandendra Saraswati.

https://youtu.be/wCaEAFVqpAM
A discussion between JK & Satchidanandendra Saraswati.

Greed - Sanskrit subhashitam

।। लोभः ।।*

*मधु यः केवलं दृष्ट्वा* 
          *प्रपातं नानुपश्यति ।*
*स भ्रष्टो मधुलोभेन* 
          *शोचत्येवं यथा भवान् ॥*

ज्याला तुटलेल्या कड्यास लटकणारे मधाचे पोळे दिसते , मात्र तो तुटलेला कडा दिसत नाही , तो मधाच्या लोभाने पुढे जाऊन खाली घसरतो आणि पश्चात्ताप करीत बसतो .

जिसे पत्थर के कडे से लटका हुआ मधु का छत्ता दिखता हैं किंतु वह कडा टूटा हैं यह नहीं दिखता वह मधु की लालसा में आगे बढकर निचे गिरता हैं और पछताता हैं ।

Who, in the greed of honey , sees the honeycomb hanging to the cliff but doesn't notice that the cliff is broken , faces the consequences and makes the regrets .

Story of Saligram

🌹🌺" *என்னை ஏமாற்றிய நீங்கள் யாராக இருந்தாலும் கல்லாகப் போவாயாக!" என்று ஸ்ரீ மகாவிஷ்ணுவை சாபமிட்ட பக்தை - விளக்கும் எளிய கதை* 🌹🌹
🌹🌺வடக்கே கங்கை நதிக்கரையில் ஒரு அழகு பிரதேசம். அதன் மன்னர் யவனராஜா. தீவிர விஷ்ணு பக்தர் . அவருக்கு ஒரே ஒரு செல்லமகள். 

🌺அவளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று பல நாள் யோசித்து ஸ்ரீ விஷ்ணுவிற்கு பிடித்த துளசி என்ற பெயரையே வைத்தார் . 

🌺பெண் வளர்ந்தாள் . தனக்கு ஸ்ரீ மகா விஷ்ணுவிற்கு பிடித்த துளசி என்ற பெயர் இருக்கும்போது தன்னையே ஸ்ரீ மகாவிஷ்ணுவிற்கு பிடிக்குமே. அவனை எப்படியாவது அடைய வேண்டும் என்று தவம் இருந்தாள் .

🌺அப்போது துளசியிடம் மஹா விஷ்ணு நான் உனக்கு காட்சி தருகிறேன் என்று அசிரிரியாக சொல்ல அந்த நாள் துளசி அவருக்காக காலையிலிருந்து காத்திருந்தாள். 

🌺வேடிக்கையாக ஸ்ரீ மகாவிஷ்ணு மாறு வேடத்தில் ஒரு முதியவராக சென்றதால் துளசிக்கு வந்தது தன்னுடன் பேசியது, யாரோ ஒரு முதிய பிராமணன் அல்ல , மஹா விஷ்ணு என்று தெரியவில்லை.  

🌺மனது ஒடிந்து போன துளசி தற்கொலை செய்துக்கொள்ள தயாரானாள். அந்த நேரத்தில் மஹாவிஷ்ணு அவளுக்கு தான் யாரென்று காட்டிக்கொண்டார்.

🌺துளசிக்கு மஹா விஷ்ணு இப்படி தன்னை ஏமாற்றியதில் அவர் மீது ரொம்ப கோபம். 

🌺"என்னை ஏமாற்றிய நீங்கள் யாராக இருந்தாலும் கல்லாகப் போவாயாக!" என்று சாபமிட்டாள். அந்த கல்தான் சாளக்கிராம கல்.

🌺உடனே மஹாவிஷ்ணு சாளக்ராமமாக மாறியதும் துளசி ரொம்ப பதறிப் போனாள் துளசி. ஐயோ என் தெய்வமே ஆத்திரத்தில் இப்படி சபித்துவிட்டேனே என்று கண்ணீர் உகுத்தாள் .  

🌺மஹா விஷ்ணு புன்னகை புரிந்தவராக ''அஞ்சாதே துளசி! கலங்காதே, எல்லாம் என் சித்தப்படியே தான் நடக்கிறது. உனக்குத் தெரியாததை ஞாபகப்படுத்துகிறேன் கேள்.  

🌺நான் கிருஷ்ண அவதாரம் எடுத்த போது பிருந்தாவனத்தில் நீ ஒரு கோபிகையாக இருந்தவள் . என்னை மணம் புரிய வேன்டும் என்று தவம் இருந்தவளும் நீயே.

🌺பூலோகத்தில் வாழும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கவே இத்தகைய லீலைகளும் நாடகங்களும் நடந்தேறுகின்றன. 

🌺 நீ என்னை கல்லாக மாறுமாறு நீ சபித்ததும் என் விருப்பபடிதான். என்னை தரிசனம் செய்ததால் உனது இந்த பிறவிக்கு முக்தி கிடைக்கிறது.

🌺இப்போது நீ கண்டகி நதியாகவும், துளசி செடியாகவும் மாறிவிடுவாய். என்னை கல்லாக மாறுமாறு சபித்து விட்டதால், நான் சாளக்கிராமக் கற்களாக மாறுகிறேன்.       
நீ என்னை மணக்க விரும்பியவள் அல்லவா?

🌺அதனால் நீ கண்டகி நதியாக ஓட, நான் உன்னில் கிடப்பேன், ஆம் சாளக்கிராமக் கற்களாக கிடப்பேன். என் பக்தர்களுக்கு கிடைப்பேன். அவைகளில் நான் இருக்கிறேன் என்பதற்கு ஆதாரமாக அந்த கற்களில் சங்கு, சக்கர சின்னங்களும் உண்டாகும்.

🌹சாளக்கிராமமாக நானே இருப்பதால், பக்தர்கள் அந்தக் கற்களை வணங்குவார்கள்.

🌺நாடெங்கும் எடுத்து சென்று தங்கள் வீடுகளில் வைத்து பூஜை செய்வார்கள்.

🌺சாளக்கிராம கற்கள் கிடக்கும் நதியான நீயும், புனித நதியாக கங்கையை போல் சிறந்த நதியாக போற்றி வணங்கப்படுவாய். 

🌺உன்னில் நீராடும் பக்தர்களுக்கு அவர்கள் கேட்டதை எல்லாம் நான் தருவேன்.

🌺இங்கே வர முடியாதவர்கள் எத்தனையோ பக்தர்கள் இருப்பார்களே. அவர்கள் உன்னை (துளசியை) எனக்கு அர்ச்சித்தால் போதும். துளசி தீர்த்தத்தை பருகினாலும் போதும். நான் மிகுந்த ஆனந்தம் அடைந்து அருள் பாலிப்பேன்" என்றார்.

🌺"யார் தங்களுடைய வீட்டில் சாளக்கிராம மூர்த்தியை வைத்து கொள்கிறார்களோ, அந்த வீட்டில் வைக்கப் பட்டு இருக்கும் சிறு இடத்தையே, கோயிலாகக் கொண்டு அங்கே நான் எழுந்தருள்கிறேன். 

🌺அந்த சாளகிராமத்தில் நான் எப்போதும் குடியிருப்பவன். அது இருக்கும் வீட்டில் தோஷமே கிடையாது.

🌺சாளகிராமம் இருக்கும் வீடுகளில் உள்ளவர்களுக்கு சந்தோஷம்,சௌபாக்கியம் முக்தி ஆகிய எல்லாவற்றையும் நான் தருவேன்" என்றும் மஹாவிஷ்ணு கூறினார்

🌺 தங்கமயமான ஒளியுடன் திகழும் "வஜ்ர கிரீடம்" என்னும் பூச்சியின் வடிவம் கொண்டு சாளகி ராம கல்லை குடைந்து அதன் மையத்தை அடைந்து, அங்கு உமிழ் நீரால் சங்கு சக்கர வடிவங்களையும், தனது அவதார ரூபங்களையும் விளையாட்டாக வரைகிறார்.

🌺இவைதான் சாளகிராம மூர்த்திகள்.
எதுவும் வரையப் படாமல் உருளை வடிவக் கற்களாகவும் இவை கிடைக்கும். 

🌹அவற்றுக்கு "ஹிரண்ய கர்ப கற்கள்" என்று பெயர். இவையும் பூஜைக்கு உகந்தவை. இந்த சாளகிராமங்கள், சங்கு, நத்தைகூடு, பளிங்கு போன்று பலவித வடிவங்களிலும் கிடைக்கின்றன.

Friday, February 25, 2022

Srirangam is an ocean

ஸ்ரீரங்கம் என்பது ஒரு கடல்.அதனைக் கடப்பது என்பது முடியாதது. அதனால் அதன் கரையில் இறுதி கொண்டு அனுபவிப்போம்.
"வைகுந்தம் அடைவது மன்னவர் விதி'
என்று ஆழ்வார் அருளியபடி எல்லோருக்கும் கடைசி ஆசை வைகுந்தம் அடையவேண்டும். வைகுந்தம் கிடைக்குமோ கிடைக்காதோ (ஏன் என்று நமக்கே தெரியும்),ஸ்ரீரங்கம் பூலோக வைகுந்தம். வைகுந்த அனுபவம் இங்கேயே கிடைக்கிறது என்றால் யாருக்குத் தான் ஆசை இருக்காது?
ஆதிசங்கரர் தன்னுடைய ரெங்கநாத அஷ்டகத்தில்
""இதம் ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம்
புனர் ந சாங்கம் யதி சாங்கமேதி!
பாணெள ரதாங்கம் சரணேsம்பு காங்கம்
யானே விஹங்கம் ஸயநே புஜங்கம்!!"
என்று ஸ்ரீரங்கத்தில் வாழ ஆசைபடுகிறார் என்றால் பாருங்கள்.ஆசைப்பட்டது எல்லாத்தையும் கொடுக்கும் இடம் ஸ்ரீரங்கம்.இங்கு உடலை நீத்தவன் பிறப்பதில்லை என்கிறார் ஆதிசங்கரர்..
அப்படி என்னையா ஸ்ரீரங்கத்தில் இருக்கு? ன்னு நீங்க கேட்கிறது எனக்குத் தெரியுது.
என்ன இல்லை ஸ்ரீரங்கத்தில்!
ஸ்ரீரங்கம் 108 திவ்விய ஸ்தலங்களில் முதலாவது ஆகும். ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த வைஷ்ணவ ஆலயங்களை திவ்விய ஸ்தலங்கள் என்பர். பதின்மர் பாடிய பெருமாள் அரங்கன்.
ஆராதஅருளமுதம் பொதிந்த கோயில்
அம்புயத்தோன் அயோத்தி மன்னற் களித்தகோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்குத் துணையாங்கோயில்
சேராத பயனல்லாஞ் சேர்க்குங் கோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்த கோயில்
தீராத வினையனைத்தும் திர்க்கும்கோயில்
திருவரங்க மெனத் திகழுங்கோயில் தானே!
என்று தன்னுடைய அதிகார ஸங்க்ரஹம் என்ற நூலில் ஸ்ரீரங்கத்தைப் பற்றி ஸ்வாமி தேசிகன் குறிப்பிடுகிறார்.
.ஸ்வயம் வ்யக்த ஷேத்ரம் மொத்தம் எட்டு.,அதாவது தானாகவே உண்டான ஷேத்ரங்கள் இவை.
தெற்கே வானமாமலை, தொண்டை நாட்டிலே ஸ்ரீமுஷ்ணம், தமிழ் நாட்டின் எல்லையில் திருவேங்கடம், ஸ்ரீரங்கம், வடநாட்டில் பதரிகாசரமம், சாலக்ராமம், ராஜஸ்தானில் புஷ்கரம், நைமிசராண்யம், என்பவை தான் அவை. வானமாமலையில் எண்ணெய் விசேஷம். அங்கு திருமடப்பள்ளியில் வரமிளகாய் பயன்படுத்துவதில்லையாம்.
பகவான் காடு ரூபமாக உள்ளார் நைமிசாரண்யத்தில். தண்ணிர் ரூபத்தில் உள்ளார் புஷ்கரத்தில். ஸ்ரீமுஷ்ணத்தில் மூலஸ்தானத்தில் வராஹமுர்த்தி தனியே கோயில் கொண்டுள்ளார்.
இந்த ஸ்வயம்வ்யக்த ஷேத்ரங்களில், ஸ்ரீரங்கம் ஒன்றில் தான் பெருமாள் சயனக் கோலத்தில் உள்ளார். மற்ற இடங்களில் நின்று கொண்டோ அல்லது அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். ஆக ஸ்ரீரங்கத்திற்கு விசேஷம் சயனக் கோலம்,
.ஆழ்வார்கள் பனிரெண்டு பேரும் எங்கே பிறந்தார்கள் பாருங்கள்.பொய்கை ஆழ்வார் காஞ்சியிலும், ,பூதத்தாழ்வார் மயிலாபூரிலும் பூதத்தாழ்வார் திருக்கடல்மல்லை என்று ஆழ்வார்கள் எல்லோரும் வெவ்வேறு இடத்தில் பிறந்து இருந்தாலும் சேர்ந்த இடம் ஸ்ரீரங்கம்.
எப்படிங்கிரிங்களா?
கணிதத்தில் சைபர் தெரியமா? அதுக்குத் தனியாளா என்ன மதிப்பு? ஒன்னும் கிடையாது.அதை எதாவது எண்ணுக்கு பின்னாலே போடுங்க, என்ன ஆறது பாருங்க, மதிப்பு கூடுதில்ல.
அந்தக் காலத்திலே கோள்களைப் பத்தி,
பாரதத்திலே எவ்வளவு ஆராய்ச்சி செய்து இருக்காங்க, ஆனா ஏதோ தாங்கத்தான் கண்டுபிடிச்சது போல சொல்லிக்கொண்டு இருக்காங்களே,
"பழி ஓரிடம், பாபம் ஓரிடம்" பழமொழி போல ஆழ்வார்கள் வெவ்வேறு இடத்திலே பிறந்தாலும்
"அடியவர்கள் வாழ, அரங்கநகர் வாழ" என்று அரங்கனைத்தான் வாழ்த்தினார்கள்.
அப்படிப் பெருமை பெற்றது ஸ்ரீரங்கம்.
இது மட்டுமா?
"இவ்வளவு நேரம் ஆயிடுச்சு, சயனம் கொள்ளுகிற நேரத்திலே எங்க கிளம்பிட்டிங்க" என்று அடியவர் திருமாலிருஜ் சோலை பெருமாளைப் பார்த்துக் கேட்கிறார்.
"இரும் அடியவரே, நாளைக் காலை தரிசனம் கொடுப்போம், பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் செல்கிறோம்" ,என்று சொல்லிவிட்டு கிளம்பினார் அழகார் மலை அழகன்.
அவர் மட்டுமா, திருவேங்கடத்தான்,
"எப்போது பொது சேவை முடியும்'
என்று அர்ச்சகரைப் பார்த்துக் கேட்கிறார்.
"ஏன் ஸ்வாமி" இது அர்ச்சகர்.
"பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும்" என்கிறார், பெருமாள் விக்கித்து நிக்கிறார் அர்ச்சகர். இப்படி எல்லா திவ்விய தேசத்து பெருமாளும் பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் வருகிறார்களாம். நான் சொல்லவில்லை , நாச்சியார் தன் நாச்சியார் திருமொழியில்,
"தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்
வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்
பள்ளி கொள்ளுமிடத்தடி கொட்டிட
கொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே"
என்று எல்லா திவ்விய தேசத்து
எம்பெருமான்களும் பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் வருகிறார்கள் என்று பாசுரத்தில் கூறுகிறார்
எத்தனை மகிமை ரங்கநாதனுக்கு!!`

Deciding Rules of Mahabharat war , a scene from Yuddha parva - Sanskrit article

*महाभारतम्, युद्धपर्व।*
महाभारतस्य युद्धारम्भात् प्राक्, अर्थात् पूर्वसन्ध्यायां पाण्डवानां माता कुन्ती विषण्णमनसा उपाविशत्।

महामन्त्री विदुरः तदा तत्र आगत्य ताम् अवदत् हे भ्रातृजाये! भवती अपि पाण्डवानां विजयाय भगवन्तं शिवं प्रार्थयतु। 

हे विदुर! पुत्रस्य दुर्योधनस्य पराजयं कथमहं कमितुं शक्नवानि? अहम् एवं कर्तुं न शक्नोमि विदुर!

हे भ्रातृजाये! अस्मिन् युद्धे कश्चिदपि निष्पक्षः भवितुं नार्हति। पाण्डवानां विजयः भवतु इत्यहं कामये, यतः धर्मः तैः सह अस्ति। यत्र धर्मः तत्र भगवान् श्रीकृष्णः। अतः सर्वेऽपि अस्मिन् युद्धे भागं गृह्णीयुः। भवती पाण्डवानां हिताय यदि प्रार्थनां न कुर्यात् तर्हि हस्तिनापुरस्य विजयाय भगवन्तं प्रार्थयतु।

 गङ्गापुत्रः भीष्मः, आचार्यः द्रोणः, कुलगुरुः कृपाचार्यः च तैः सह भगवान् श्रीकृष्णः, पाण्डवाः, पाण्डवानां सेनापतिः धृष्टद्युम्नः, शिखण्डी च तेषां मेलनम्।

गङ्गापुत्रः भीष्मः - हे पाण्डवसेनापतिधृष्टद्युम्न! कौरवाणां शिबिरे भवतां सर्वेषां स्वागतम्। भवन्तः सर्वे स्वीयं स्वीयं स्थानं गृह्णन्तु। 

शिखण्डी - अहमपि स्थानं गृह्णानि किं गङ्गापुत्र? 
भीष्मः- अहम् अतिथेः अपमानं कर्तुं न शक्नोमि, किन्तु इयं सभा पुरुषाणां वर्तते राजकुमार शिखण्डि।

शिखण्डी - अहं जानामि गङ्गापुत्र। भवादृशस्य महापुरुषस्य दर्शनार्थं ह्यहम् आगतवान्। आज्ञा अस्ति?
भीष्मः- हसन् अवदत्, अस्तु अस्तु, उपविशतु।

महाराजः द्रुपदः- कथमस्ति मित्र द्रोण? 
द्रोणाचार्यः- भगवतः शिवस्य कृपया अहं कुशली एवास्मि मित्र द्रुपद! 

द्रुपदपुत्रः धृष्टद्युम्नः - मम पितुः उपरि भगवतः शिवस्य कृपा नास्ति किम् आचार्य? 
आचार्यः द्रोणः किमपि न अवदत्, तूष्णीमेवासीत्।

इत्येवं पाण्डवाः सर्वे गङ्गापुत्रः भीष्मः, द्रोणः, कुलगुरुः कृपाचार्यः, च तान् प्रणम्य तेभ्यः आशीर्वादान् स्व्यकुर्वन्। 

भीष्मः - अहं मन्ये यद् वयम् अत्र व्यक्तिगतविचाराणाम् आदानप्रदानाय सम्मिलिताः न स्मः। 
 महत् दुर्भाग्यं यद् इदानीम् अस्माकं पार्श्वे रणभूमिं विहाय अन्यः विकल्पः कश्चिदपि नास्ति। अतः युद्धात् पूर्वं वयं युद्धस्य नियमान् कुर्याम!

श्रीकृष्णः - हे कुरुशिरोमणि! वयम् अत्र किमपि निश्चितं कर्तुं न आगतवन्तः! कौरवाः भवतः पौत्राः, अपिच पाण्डवाः अपि। अतः भवान् यान् नियमान् करिष्यति तानेव नियमान् पालयित्वा पाण्डवाः युद्धं करिष्यन्ति।

भीष्मः - ममोपरि एतस्य भारं न स्थापय माधव! ममैव शिबिरे बहवः सन्ति ये चिन्तयन्ति यद् अहं पाण्डवानां पक्षे अस्मि। 
परन्तु त्वं तु जानासि माधव यद् मादृशाः बहवः वृद्धजनाः केवलं हस्तिनापुरस्य पक्षे सन्ति। 

श्रीकृष्णः - भवान् कुरुश्रेष्ठः अस्ति, भवान् शूरवीरः अस्ति, अपिच भवान् कौरवसेनायाः प्रधानसेनापतिः अप्यस्ति। एवञ्च प्रत्येकं दृष्ट्या अस्माकं कृते भवान् आदरणीयोऽस्ति।
तदर्थं हि अस्य युद्धस्य नियमान् भवानेव कुर्यात्। एतस्य दायित्वं भवतः एवास्ति। 

भीष्मः - सत्यं तु एतदस्ति वासुदेव, यत् प्रत्येकं युद्धस्य एक एव नियमः यद् युद्धं धर्मानुसारं भवेत्। (क्रमशः)
*प्रदीपः!*

I can't leave Bhagavan - Spiritual story

ஜெய் ஸ்ரீ மன் நாராயணா.
ஒரு பால சன்யாசி நதி ஓரத்தில் மண்ணை பிசைந்து கோவில் கட்டி மனம் போன திசையில் ஆடி பாடி குதூகலமாக விளையாடி கொண்டு இருந்தது.அது சமயம் அவ்வழியே ஒரு அரசன் சென்று கொண்டிருந்தார்.பால சன்யாசியின் ஆட்டம் பாட்டத்தை கண்டு அந்த பாலகனிடம் நீ என்னுடன் அரண்மனை க்கு வா உன் இஷ்டப்படி அனுபவிக்கலாம் வருகிறாயா என்றார்.பால சன்யாசி நான் உன்னுடன் வருகிறேன் ஆனால் ஒரு நிபந்தனை என்ன என்றார்.பாலகன் நான் நன்றாக தூங்குவேன் நீ தூங்க கூடாது சரியா
அடுத்து நான் நன்றாக சாப்பிடுவேன் விருப்பமானதை நீ சாப்பிட கூடாது.நான் நல்ல நல்ல துணிகள் ஆபரணங்கள் அணிந்து கொள்வேன் நீ அணிந்து கொள்ள கூடாது.மற்றும் நீ எப்போதும் என்னுடனேயே பக்கத்தில் இருக்கனும் இதற்கு சம்மதம் இருந்தால் சொல்லுங்கள் உங்களுடன் வருகிறேன் என்றான் பால சன்யாசி.அரசனுக்கு கோபம் வந்தது என்ன பைத்தியக்காரத்தனம் நான் உன்னுடனே இருந்தால் ராஜ்ய காரியங்கள் யார் பார்ப்பார்கள்.ஆடை ஆபரணங்கள் அணியாமல் இருந்தால் என்னை ராஜாவென்று யார் நினைப்பார்கள் என்று அதட்டினார்.உங்களால் முடியாது அரசே.இதோ என்னுடனேயே இருக்கிறார் என் பகவான்.நான் தூங்குகிறேன் அவர் தூங்குவது இல்லை.நான் நன்றாக சாப்பிடுகிறேன் அவர் உண்பது இல்லை ஆடை ஆபரணங்கள் நான் அணிந்து கொண்டாலும் அவருக்கு என்று எதுவுமே வேண்டாம்.இப்படி என் ஆராத்ய தேவன் என்னுடன் இருக்கும் போது இவரை விட்டு விட்டு உன்னுடன் எப்படி
வருவேன்.இவரை போல் உன்னாலும் முடியாது.என்று கூறிய படி அந்த பால சன்யாசி குதூகலமாக விளையாடி கொண்டு இருந்தான்.குழந்தையின் பேச்சிலும் பகவானிடம் உள்ள பக்தியையும் பார்த்து வெட்கித் தலை குனிந்தார். தாஸன் ஜோத்பூர் பாலாஜி 🙏🙏🙇‍♂️🙇‍♂️

Thursday, February 24, 2022

Visesha dharma - spiritual story

மரணத்துக்குப் பின்,தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த கர்ணன் சூரியனிடம்,

"தந்தையே! நான் என் நண்பன் துரியோதனனுக்கு, செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில், அவன் பக்கம் போர் புரிந்தேன்...

ஆனால் வஞ்சகன் கண்ணன் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!" என்று புலம்பினான்...!

அப்போது சூரிய பகவான்,
"இல்லை கர்ணா! கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே. நீ ஒரு தவறு செய்துவிட்டாய். 

செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை...!

ஆனால் கண்ணனோ சாமானிய தர்மங்களை விட, உயர்ந்த விசேஷ தர்மமாக விளங்குபவன்....!

"க்ருஷ்ணம் தர்மம் ஸனாதனம்" என்று அதனால்தான் சொல்கிறோம்...!

அந்தக் 'கண்ணன்' என்ற விசேஷ தர்மத்துக்கும், 

செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் என்ற சாமானிய தர்மத்துக்கும்,முரண்பாடு வருகையில், விசேஷ தர்மத்தை கைக்கொள்ள வேண்டும். 

நீ அதை விட்டுவிட்டுச் சாமானிய தர்மத்தை கைக்கொண்டு,விசேஷ தர்மத்தைக் கைவிட்டாய். அதனால்தான் அழிந்தாய்...!

தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை என்பது உயர்ந்த தர்மம் தான்...!

அதற்காக இரணியனின் பேச்சைக் கேட்டுப் பிரகலாதன் நடந்தானா?
நரசிம்மர் என்ற விசேஷ தர்மத்தை அல்லவோ கைக்கொண்டான்....!

விபீஷணனும் தன் அண்ணன் ராவணனுக்கு நன்றி பாராட்டுதலாகிய சாமானிய தர்மத்தை விட்டு, விசேஷ தர்மமான ராமனை வந்து பற்றவில்லையா?

தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்பதற்காக, கைகேயியின் ஆசைக்கு பரதன் உடன்பட்டானா? 

மகனே! சாமானிய தர்மங்களை நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை...!

ஆனால் விசேஷ தர்மத்தோடு அதற்கு முரண்பாடு ஏற்படும் சூழ்நிலையில், விசேஷ தர்மத்தையே முக்கியமாகக் கைக்கொள்ள வேண்டும். 

அவ்வகையில் கண்ணனே அனைத்து தர்மங்களுக்கும் சாரமான, விசேஷ தர்மம் என உணர்வாயாக!" என்றார்...!

வடமொழியில் 'வ்ருஷம்' என்றால் தர்மம் என்று பொருள். 'வ்ருஷாகபி:' என்றால் தர்மமே வடிவானவர் என்று பொருள்...!

கர்ணனுக்கு சூரியன் உபதேசித்தபடி, தர்மமே வடிவானவராகத் திருமால் விளங்குவதால் 'வ்ருஷாகபி:' என்றழைக்கப்படுகிறார்....!

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 102வது திருநாமம்...! "வ்ருஷாகபயே நமஹ" என்ற திருநாமத்தை தினமும் சொல்லி வந்தால், 

முரண்பாடான சூழ்நிலைகளில் நாம் சிக்கிக் கொள்ளும்போது, சரியான முடிவெடுக்கும் ஆற்றலை, திருமால் நமக்குத் தந்தருள்வார்....!

ஸ்ரீக்ருஷ்ணா ...
உன் திருவடிகளே சரணம்..!

இறைவன் நினைவு இனிய இரவாகாகட்டும்.....!!

sivan pazham

*இந்திரன்பழம்*,
*பிரம்ம பழம்*,
*விஷ்ணு பழம்*,
*சிவன் பழம்*,பற்றி உங்களுக்கு தெரியுமா?

இந்திரன்பழம்,பிரம்ம பழம்,விஷ்ணு பழம்,சிவன் பழம்,பற்றி இணையத்தில் படித்த அருமையான ஆன்மிக விளக்கங்கள்:

பிரம்மா - இவர் விஷ்ணுவின் தொப்புள் தாமரையில் தோன்றியவர். இவருக்கு அன்னையில்லை.

விஷ்ணு - அனாதியானவர். ஆதி என்று ஒன்று இல்லாதவர். பத்து அவதாரங்கள் எடுத்த போதிலும் அன்னையின் பரிபூரண அரவணைப்பைப் பெறாதவர். 

ராமாவதாரத்தின் போது ராமர் ராஜகுமாரனாக வளர்ந்ததனால், அன்னையிடம் இருந்ததை விட, மற்றவர்களிடம் இருந்ததே அதிகம். 

பெற்ற கோசலையை விட, கைகேயியையே தாயாக மதித்தவர். 

கிருஷ்ணராக அவதாரம் செய்த போது, பெற்ற தாயான தேவகியை விட, வளர்த்த யசோதையிடம் அதிக அன்பு பெற்றவர்.

சிறு வயதில் கிருஷ்ணருக்கு விஷமங்கள் செய்வதற்கே நேரமிருந்தது. 

யசோதைக்கும் கிருஷ்ணரைக் கண்டிக்கவே நேரம் போதவில்லை.

சிவன் - இவருக்கும் பிறப்பு என்று ஒன்றே இல்லை.

சிவன் சிலை வடிக்கும் போது, தொப்புள் இல்லாமலே சிவனை வடிப்பார்கள்.

ஏனெனில், இவர் தொப்புள் கொடி உறவில் பிறக்கவில்லை என்பதை உணர்த்துவதற்காக தொப்புள் இல்லாமலே சிவன் சிலையை வடிப்பார்கள்

விஷ்ணு எடுத்தது"அவதாரம்" (பிறப்பு முதல் இறப்பு வரை உண்டு) எனில் சிவன் எடுத்தது"அவஸரம்"
(பக்தர்களுக்கு காட்சி தந்து விட்டு மறைந்துவிடுதல்).

சிவன் தாமே முன் வந்து "அம்மே" என்று அழைத்தது காரைக்கால் அம்மையாரை மட்டுமே!

இந்த மூவருக்கும் ஒரு சமயத்தில், நாம் யாருக்காவது குழந்தையாக மாட்டோமா என்ற நினைப்பு வந்துள்ளது.

தாயின் பரிபூரண அரவணைப்பில் அணைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியவுடன், மூவரும் தமக்கு ஒருவர் தாயாக, பக்தி சிரத்தையில் சிறந்த ஒருவரைத் தேர்ந்தெடுக்க முனைந்தனர்.

அவர்கள் கண்களில் ஒரு ரிஷி பத்தினி தெரிந்தாள். அவள்தான் அனசூயை.

அனசூயை - மஹா தபஸ்வினி. அத்ரி மஹரிஷியின் தர்ம பத்னி.

அத்ரி மஹரிஷியின் தவத்தில் பெரும் உதவிகள் செய்து, தாமும் சதா சர்வ காலமும் பக்தி சிரத்தையுடன் இருந்தாள். 

அத்ரியும் அனசூயையும் தங்களுக்கு முப்பெருந்தேவர்களின் அம்சங்களாக ஒரு குழந்தை வேண்டும் என்றும் ஏற்கனவே வரம் பெற்றிருந்தார்கள். 

அந்த வரத்தை மெய்ப்பிப்பதற்காக பிரம்மா, விஷ்ணு, சிவன் அத்ரி அனசூயை தம்பதியரிடம் குழந்தையாக வளர சித்தம் கொண்டார்கள்.

அதன்படி, பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒரு நாள் அத்ரியின் ஆசிரமம் சென்று, அநசூயையைத் தாயாகப் பெற வேண்டி நின்றார்கள்.

அநசூயையும் பெரும் மகிழ்வு கொண்டு, தன் கணவரின் கமண்டலத்திலிருந்த தீர்த்தத்தைக் கொண்டு மூவரையும் சிறு குழந்தையாக்கினாள்.

அநசூயை தாயாக, முப்பெருந்தேவர்களும் மூன்று குழந்தைகளாக அத்ரி ஆசிரமத்தில் மிக மகிழ்வாக இருந்து வந்தனர்.

அநசூயையின் அளவற்ற, எல்லைகள் இல்லாத, களங்கம் எதுவும் இல்லாத நிர்மலமான, நிர்வாணமான அப்பழுக்கற்ற பாசத்தினை - குழந்தைகளான பிரம்ம விஷ்ணு சிவன் அனுபவித்து வந்தனர்.

நெடுநாட்களாக - பிரம்மன் இல்லாமல் பிரம்ம லோகம் இருண்டது.

விஷ்ணுவின் வைகுந்தம் வெறிச்சோடியது.

ஈஸ்வரனின் கைலாயம் இயல்பாக இல்லை.

பிரம்மாவின் தேவியாகிய சரஸ்வதியும், விஷ்ணுவின் தேவியாகிய லக்ஷ்மியும், சிவனின் தேவியாகிய பார்வதியும் தமது கணவர்களைத் தேடியலைந்தனர்.

வெகுநாட்கள் தேடிய பின்னர் மூவரும் அத்ரியின் ஆசிரமத்தில் இருப்பதைக் கண்டறிந்தனர்.

முப்பெருந்தேவியர்களும் தமது கணவர்களை அழைத்துச் செல்ல அத்ரியின் ஆசிரமத்தை அடைந்தனர்.

இவர்களின் வருகை குழந்தைகளாக இருந்த மூவருக்கும் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) அதிர்ச்சியளித்தது.

அன்னை அநசூயையைப் பிரிய மனம் இல்லாதவர்கள் ஆனார்கள். 

குழந்தை வடிவில் இருந்த பிரம்மா,விஷ்ணு,சிவன் மூவரும், தங்களைத் தாய் அநசூயையிடமிருந்து இருந்து பிர்த்துவிடுவார்களோ என்ற எண்ணி, மூவரும் அத்ரியின் ஆசிரமத்திற்குப் பின்னிருந்த வாழைத தோட்டத்தில் மறைந்து கொண்டனர்.

ஒவ்வொருவரும் ஒரு வாழை மரத்தின் பின் ஒளிந்தனர்.

அவர்கள் ஒவ்வொருவரும் ஒளிந்துகொண்ட வாழை மரம் அவர்களின் அம்சம் பெறலாயிற்று.

பிரம்மா மறைந்துகொண்ட வாழை மரத்திலிருந்து பெறக்கூடிய வாழைப்பழம் தான் பூவன் பழம்.

 பூவன் - பூவில் அமர்பவன். பிரம்மா பூவில் அமைந்திருக்கக் கூடியவர். பூவன் பழமே பிரம்ம பழம்.

விஷ்ணு மறைந்துகொண்ட வாழை மரத்திலிருந்து பெறக்கூடிய வாழைப்பழம் தான் முகுந்தன் பழம் அல்லது மொந்தன்பழம்.

 விஷ்ணுவுக்கு முகுந்தன் என்ற பெயரும் உண்டு. மொந்தம்பழமே விஷ்ணு பழம்.

சிவன் மறைந்துகொண்ட வாழை மரத்திலிருந்து பெறக்கூடிய வாழைப்பழம் தான் பேயன்பழம்.

சிவபெருமான் ருத்ரபூமியாகிய பேய்கள் உலாத்தக் கூடிய சுடுகாட்டில் உறைபவர். அவருக்கு பேயாண்டி என்ற பெயரும் உண்டு. பேயன்பழமே சிவப் பழம்.

பிரம்ம, விஷ்ணு, சிவன் மறைந்து கொண்ட வாழை மரங்களிலிருந்து பெறக்கூடியது தான் பூவன் பழம், மொந்தன்பழம், பேயன்பழம் ஆகும்.

முப்பெருந்தேவியரும் அநசூயையிடம் அத்ரியின் ஆசிரமத்தில் குழந்தைகளாக இருந்த தங்கள் கணவர்களை திரும்ப அனுப்புமாறு மன்றாடினர்.

 அநசூயைக்கு குழந்தைகளைப் பிரிய மனமில்லை. குழந்தைகளுக்கும் அன்னையைப் பிரிய மனமில்லை.

பாசக் கயிறு குழந்தைகளையும், அன்னையையும் பிணைத்திருந்தது.
அநசூயை நெஞ்சம் கனக்க பிரம்ம, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் சுய ரூபம் அடைய அனசூயை பிரார்த்தனை செய்தாள். 

அதன்படியே மூவரும் தங்கள் தனித்த உருவம் அடைந்தனர்.

மஹாவிஷ்ணுவிடம் அநசூயை பெற்ற வரத்தின் படி, பிரம்ம அம்சம், விஷ்ணு அம்சம், சிவாம்சம் இணைந்ததான குழந்தையை மும்மூர்த்திகளும் உருவாக்கி, அத்ரியிடம் தத்தம் (வழங்குவது) அளித்தனர்.

அவரே தத்தாத்ரேயர்.

அத்ரி மஹரிஷியின் மகனாக வாய்த்ததனால் அவர் ஆத்ரேயர். 

தத்தம் கொடுத்ததால் தத்தாத்ரேயர்.

மும்மூர்த்திகளின் அம்சமும் கொண்ட தத்தாத்ரேயர் அத்ரி - அநசூயை தம்பதிகளிடம் வளர்ந்தார்.

அன்னையின் பாசம் முழுக்கப் பெற்றார்.

தந்தையின் ஞானம் அனைத்தையும் பெற்றார்.

உலகில் உள்ள அனைத்துக் கலைகளையும் கற்று, பெரும் ஞானவான் ஆனார்.

ஸ்ரீ வித்யா உபாஸகர்களுக்கு, சாக்த உபாஸகர்களுக்கு தத்தாத்ரேயர் தான் பரமார்த்த குரு.

ஏனெனில், தாயைப் போற்றும், தெய்வத்தைத் தாய் நிலையில் கொண்டு போற்றும், உலகமனைத்தையும் ஈன்றெடுத்த அன்னையைப் போற்றும் வகையில் அமைந்த ஸ்ரீ வித்யா உபாஸனையை உலகுக்குக் கொண்டுவந்தவர் தத்தாத்ரேயர்தான்.

தத்தாத்ரேயருக்கு பரம ஞான சக்தியாக விளங்குவது ஸாக்ஷ¡த் ஸ்ரீ மஹா திரிபுரசுந்தரியே தான்.

தத்தாத்ரேயர் ஸ்ரீ புர உபாஸனை அல்லது ஸ்ரீ நகர பூஜை அல்லது ஸ்ரீ வித்யா தந்திரத்தை 18000 ஸ்லோகங்களில் மிக விரிவாக வடித்தார்.

அதுவே தத்த ஸம்ஹிதை எனப் போற்றப்பட்டது.

தத்தாத்ரேயரின் பிரதான சிஷ்யராக விளங்கியவர் பரசுராமர்.

இந்த பரசுராமர் தத்த ஸம்ஹிதையை 6000 ஸ்தோத்திரங்களாக தொகுத்தார்.

அதுவே பரசுராம கல்பம் எனப்பட்டது. 

தற்காலத்தில் அம்பிகைக்கு செய்யப்படும் அனைத்து பூஜைகளும் பரசுராம கல்பத்தை ஒட்டியே செய்யப்படுகின்றது.

பின்குறிப்பு(நேந்திரம் பழம்) : சரஸ்வதி, பார்வதி, லக்ஷ்மி மூவரும் அத்ரியின் ஆசிரமத்தை அடையும் முன்பாக, தேவ நாயகனாகிய இந்திரனை அழைத்து, தமது கணவர்களை அழைத்துவரச் சொன்னார்கள்.

இந்திரனும் அத்ரியின் ஆசிரமம் அடைந்து, விபரம் அனைத்தையும் அறிந்து, அவனும் தாய்ப் பாசத்தினைப் பெற வேண்டி, தானும் ஒரு குழந்தையானான். 
.
இந்திரனைக் காணாமல் நெடுநேரமாகியதைக் கண்ட தேவியர் நேரில் ஆசிரமம் வர, இந்திரனும் வாழைத் தோட்டத்தில் உள்ள ஒரு வாழை மரத்தில் ஒளிந்து கொள்கின்றான். 

தேவியர் மூவரும் விபரம் அறிந்து, ஆசிரமத்தில் இருக்கும் வாழைத் தோட்டத்திற்கு நுழைகையில் இவர்களின் கண்களில் முதலில் பட்டது இந்திரன் தான். 

இந்திரனின் அம்சமாக இருந்த குழந்தையை இவர்கள் அழைக்க, இந்திரன் வடிவில் இருந்த குழந்தை, அன்னையின் பாசத்திற்குக் கட்டுண்டு தான் இந்திரன் இல்லை (ந: இந்திரன்) என்றது. 

இந்திரன் நின்ற வாழைமரத்திலிருந்து பெறப்படுவது தான் நேந்திரன் பழம்.

இந்த பதிவை எனது நண்பர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பதிவிட்டுள்ளேன்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Mahabharatam part20 in tamil

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-20
..
ஆதிபர்வம்
..
துருபதன் சிறை பிடிக்கப்பட்டான்
வைசம்பாயனர் தொடர்ந்தார்,
"பாண்டவர்கள் மற்றும் திருதராஷ்டிரன் மகனின் ஆயுதத் தேர்ச்சியைக் கண்ட துரோணர், தனது கூலியைக் {தக்ஷிணையைக்} கேட்கும் தருணம் வந்ததெனக் கருதினார்.
 ஆசானான துரோணர், ஒரு நாள், தனது சீடர்களை அழைத்து, அவர்கள் அனைவரிடம் இருந்தும் தன் தக்ஷிணையைப் பெறும் வகையில்,
"பாஞ்சால மன்னன் துருபதனிடம் போரிட்டு அவனைச் சிறைபிடித்து என்னிடம் கொண்டு வாருங்கள். அஃதுவே உங்களிடம் எனக்குக் கிடைக்கும் மிக ஏற்புடைய கூலியாக இருக்கும்" என்று கூறினார்.
 அந்த வீரர்களும், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, ஆசானுக்குக் தங்கள் காணிக்கையைக் கொடுக்க எண்ணி, அவரையும் அழைத்துக் கொண்டு வேகமாகத் தங்கள் தேர்களில் ஏறிப் புறப்பட்டனர்.
அந்த மனிதர்களில் காளைகள், போகும் வழியெங்கும் பாஞ்சாலர்களை தாக்கியபடியே சென்று, பெரும் பலம்வாய்ந்தவனான அந்தத் துருபதனின் நகரத்தை முற்றுகையிட்டுத் தாக்கினர்.
துரியோதனன், கர்ணன், பெரும் பலம்வாய்ந்தவனான யுயுத்சு, துச்சாசனன், விகர்ணன், ஜலசந்தன், சுலோசனன் ஆகியோரும்,
பெரும் ஆற்றலைக் கொண்ட க்ஷத்திரிய இளவரசர்கள் பலரும் சேர்ந்து தாக்குதலில் முதன்மையானவனாக ஒருவருக்கொருவர் போட்டியிட்டுச் சென்றனர்.
 முதல் தரமான தேர்களில் சென்ற அந்த இளவரசர்கள், தங்கள் குதிரைப்படையைத் தொடர்ந்து எதிரியின் தலைநகருக்குள் {காம்பில்யத்திற்குள்} நுழைந்து, அந்த நகரின் தெருக்களில் முன்னேறினர்.
 அதே நேரத்தில், அந்தப் பாஞ்சால மன்னன் {துருபதன்}, பெரும் படையைக் கண்டும், பலத்த ஆரவாரத்தைக் கேட்டும், தனது சகோதரர்களுடன் அரண்மனையைவிட்டு வெளியே வந்தான்.
மன்னன் யக்ஞசேனன் {துருபதன்} நல்ல படைபலத்துடன் இருந்தாலும், போர்க்குரலை எழுப்பியபடியே தங்கள் கணைகளை மழையெனப் பொழிந்த அந்தக் குரு குலப் படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டான்.
எனினும், வெல்லப்பட முடியாத போர்வீரனான அந்த யக்ஞசேனன் {துருபதன்}, தனது வெண்ணிற தேரில் குரு குலத்தவரை அணுகித் தாக்கி, களத்தைச் சுற்றிலும் தனது கடும்கணைகளை மழையெனப் பொழிய ஆரம்பித்தான்.
அந்தப் போர் தொடங்குவதற்கு முன்னரே, தங்கள் ஆற்றலில் செருக்கு கொண்ட கௌரவ இளவரசர்களைக் கண்ட அர்ஜுனன், தனது குருவான பிராமணர்களில் சிறந்த துரோணரிடம்,
 "இவர்கள் தங்கள் ஆற்றலைக் காட்டியபிறகு, நாங்கள் இம்முயற்சியில் இறங்குகிறோம். போரில் இவர்களில் எவராலும் பாஞ்சால மன்னனை அணுக முடியாது" என்றான்.
 தனது சகோதரர்களால் சூழப்பட்டிருந்த பாவங்களற்ற குந்தியின் மகன் அர்ஜுனன், இப்படிச் சொல்லிவிட்டு, நகரத்திற்கு வெளியே ஒரு மைல் தொலைவில் காத்திருந்தான்.
 அதே நேரத்தில் துருபதன் கௌரவப் படையைக் கண்டு, அவர்களிடம் விரைந்து, சுற்றிலும் கொடும் கணைகளை மழையெனப் பொழிந்து, குரு படையணிகளைப் பயங்கரமாகப் பீடித்தான்.
போர்க்களத்தில் பெரும் நளினத்தோடு அவன் {துருபதன்} நகர்ந்தான். எந்த ஆதரவுமின்றித் தனித் தேரில் அவன் போரிட்டாலும், கௌரவர்களுக்குப் பல துருபதர்கள் அவர்களை எதிர்த்து நிற்பது போலத் தோன்றிற்று.
பாஞ்சாலர்களின் வீடுகளிலிருந்து சங்கு, பேரிகை, துந்துபியின் அச்சமூட்டும் ஒலிகள் கேட்கும் வரை, அந்த ஏகாதிபதியின் கடுமையான கணைகள் அனைத்துப் பக்கங்களிலும் பாய்ந்தன. அந்தப் பெரும்பலம் வாய்ந்த பாஞ்சாலன் சிங்க முழக்கம் செய்தான். அவனது வில்லின் நாணொலி வானுலகையே அடைவது போலக் கேட்டது.
 பாஞ்சாலர்களுடைய வில்லின் நாணொலி ஏற்படுத்திய பெருமுழக்கம் வானத்தையே பிளப்பதைப் போலத் தெரிந்தது. அப்போது, துரியோதனன், விகர்ணன், சுபாஹூ, தீர்க்கலோசனன்,துச்சாசனன் ஆகியோர் கடும் கோபம் கொண்டு, தங்கள் எதிரியின் மீது கணைகளை மழையெனப் பொழிந்தனர். ஆனால், போரில் வெல்லப்பட முடியாத அந்தப் பெரும் வில்லாளியான பிருஷதனின் மகன் {துருபதன்}, எதிரிகளின் கணைகளால் துளைக்கப்பட்டாலும்,எதிரிப்படையணிகளைப் பெரும் வலிமையுடன் துன்புறுத்தினான்.
நெருப்புச் சக்கரம் போல அந்தக் களத்தில் சுழன்ற துருபதன், தனது கணைகளால் துரியோதனன், விகர்ணன் மற்றும் பலம்வாய்ந்த கர்ணனையும் மற்றும் பல வீர இளவரசர்களையும், எண்ணற்ற வீரர்களையும், அடித்து, அவர்களின் போர்த் தாகத்தைத் தணித்தான்.
பிறகு அந்நாட்டுக் குடிமக்கள் அனைவரும், மேகமானது பூமியின் மீது தனது மழைத்துளிகளைப் பொழிவது போலக் கௌரவர்கள் மீது பல்வேறு ஏவுகணைகளைப் பொழிந்தனர்.
இளைஞர்களும், முதியவர்களும் களத்திற்குள் நுழைந்து கௌரவர்களைப் பெரும்பலத்துடன் தாக்கினர்.
 போர் தங்களுக்கெதிராக உக்கிரமடைவதைக் கண்டக் கௌரவர்கள், போர் செய்வதை விடுத்துப் பாண்டவர்களை நோக்கி ஓடினர். பாண்டவர்கள், தோற்றவர்களின் பயங்கரமான கதறல்களைக் கேட்டு,
துரோணரை வணங்கி, தங்கள் தேர்களில் ஏறினர். அர்ஜுனன் அவசரமாய் யுதிஷ்டிரனை அழைத்துப் போரில் அவன் ஈடுபட வேண்டாம் என்று சொல்லித் தடுத்துவிட்டு, விரைவாக முன்னேறினான். அவன் தனது தேர்ச்சக்கரங்களுக்குக் காவலாய் மாத்ரியின் மகன்களை (நகுலன், சகாதேவன் ஆகியோரை) நியமித்தான். போரில் எப்போதும் முன்னணியில் நின்று போரிடும் பீமசேனன் அந்தப் படைகளுக்கு முன்பாகக் கையில் கதையுடன் ஓடினான்.
தனது சகோதரர்களுடன் சென்ற அந்தப் பாவங்களற்ற அர்ஜுனன், எதிரிகளின் முழக்கத்தைக் கண்டு, அவர்களை நோக்கி முன்னேறி, அந்த முழுக்களத்தையே தன் தேர்ச்சக்கரங்களின் ஒலியால் நிரப்பினான்.
வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான பீமன், மகரம் ஒன்று கடலுக்குள் நுழைவதைப் போல, கையில் கதாயுதத்துடன் பாஞ்சாலர்களின் படைக்குள் புகுந்து, புயலால் கலங்கிய சமுத்திரமெனக் கூச்சலிட்டு, இரண்டாவது எமனாகக் காட்சியளித்தான். கையில் கதையுடனிருந்த பீமன், எதிரிகளின் யானைப்படையை நோக்கி முன்னேறினான். போர்த்திறன் வாய்ந்த அர்ஜுனன், தனது கரத்தின் பலத்தால் அந்த எதிரிப் படையைத் தீவிரமாகத் தாக்கிய அதே நேரத்தில், பீமன், பெரும் எமனைப் போலத் தனது கதையைக் கொண்டு யானைகளைக் கொல்லத் தொடங்கினான்.
 பீமன், மலையை நிகர்த்த அந்தப் பெரும் விலங்குகளைக் கதையால் அடித்து, அவற்றின் தலைகளைச் சிதறடித்தான். இரத்த ஊற்றில் நனைந்த அவை, இடியால் தகர்ந்த மலைப்பாறைகள் போலத் தரையில் விழுந்தன
பாண்டவர்கள், ஆயிரக்கணக்கான யானைகளையும், குதிரைகளையும், ரதங்களையும் தரையில் விழ வைத்தனர். பல காலாட்படை வீரர்களையும், பல தேர் வீரர்களையும் கொன்றனர்.
 உண்மையாக, கானகத்தில் ஒரு மேய்ப்பன் ஒரு தடியை வைத்துக் கொண்டு எண்ணிலடங்கா மாடுகளை எளிதாக ஓட்டுவதுபோல, விருகோதரனும் {பீமனும்}, எதிரிகளின் பல தேர்களையும், யானைகளையும் ஓட்டிச்சென்றான்
 அதேநேரத்தில் துரோணருக்கு நன்மையை விரும்பிய அர்ஜுனன், துருபதனை கணை மழையால் தீவிரமாகத் தாக்கி, அவன் அமர்ந்திருந்த யானையிலிருந்து அவனை விழவைத்தான்.
 யுகத்தின் முடிவில் அனைத்தையும் எரிக்கும் கடும் நெருப்பைப் போல இருந்த அர்ஜுனன், குதிரைகளையும், தேர்களையும், யானைகளையும் ஆயிரக்கணக்கில் தரையில் வீழ்த்தினான்
 பாண்டவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட பாஞ்சாலர்களும், சிருஞ்சயர்களும், பல்வேறு வகையான ஆயுதங்களின் மழையால் அவனை எதிர்கொண்டனர்.
அவர்கள் பெருங்குரலெழுப்பி அர்ஜுனனுடன் மூர்க்கமாகப் போரிட்டனர். பார்வைக்கு அந்தப் போர் கடுமையானதாகவும் பயங்கரமானதாகவும் தெரிந்தது. எதிரிகளின் குரலைக்கேட்ட இந்திரனின் மகன் {அர்ஜுனன்} பெரும் கோபம் கொண்டு,
எதிரிகள் மீது தனது அடர்த்தியான கணைகளை மழையெனப் பொழிந்து, புத்துயிரூட்டப்பட்ட பலத்துடன் கடுமையாகப் போரிட்டான்.
 அவன் கணைகளைத் தொடர்ந்து செலுத்திக் கொண்டே இருந்ததால், அந்த நேரத்தில் அர்ஜுனனைக் கண்டவர்கள், கணையை அவன் நாணில் பூட்டுவதற்கும், அதைத் தொடுப்பதற்கும் உள்ள இடைவெளியைக் காணவில்லை.
 அங்கே எழுந்த குரல்கள் பேரொலி கொண்டவையாக இருந்தன. சில குரல்கள் உற்சாக அங்கீகரிப்பாகவும் இருந்தன. அப்போது, பாஞ்சால மன்னன் தனது தளபதி சத்தியஜித்துடன், அர்ஜுனனை நோக்கி, சம்பராசுரன் {சம்பரன்} தேவர்த்தலைவனை நோக்கி வருவது போல வந்தான். அர்ஜுனன் அந்தப் பாஞ்சால மன்னனைத் தனது கணை மழையால் மறைத்தான்.
அப்போது பாஞ்சாலர்களின் அணியில், தலைமை யானையை எதிர்த்து வரும் சிங்கத்தைக் கண்ட மற்ற யானைகளின் பிளிறல் போல ஒரு பயம் கலந்த கூச்சல் எழுந்தது.
 பாஞ்சால மன்னனைச் சிறைப்பிடிக்க வரும் அர்ஜுனனைக்கண்ட பெரும் வீரம் கொண்ட சத்யஜித், அவனை நெருங்கிச் சென்று தாக்கினான்.
இந்திரனையும், அசுரன் விரோசனனின் மகனையும் {பலிச் சக்கரவர்த்தியையும்} ஒத்திருந்த அந்த இரு வீரர்களும் போருக்காக ஒருவரையொருவர் விரைவாக அணுகி ஒருவர் படையை மற்றவர் கலங்கடித்தனர்.
பிறகு அர்ஜுனன் பெரும் பலத்துடன் ஆற்றல்வாய்ந்த பத்து கணைகளால் சத்தியஜித்தைத் துளைத்தான். இதைக்கண்ட பார்வையாளர்கள் ஆச்சரியமடைந்தனர்.
ஆனால் சத்தியஜித்தோ, நேரத்தை வீணடிக்காமல் நூறு கணைகளால் அர்ஜுனனைக் கடுமையாகத் தாக்கினான். பிறகு நகர்வதில் நளினமும், வேகமும் கொண்ட, அந்தப் பெரும் தேர்வீரனான அர்ஜுனன், இப்படிக் கணைகளின் மழையால் மறைக்கப்பட்ட போது, தனது கணைகளின் பலமும், வேகமும் கூடுவதற்காகத் தனது வில்லின் நாணை உருவித் தேய்த்தான். அப்போது எதிரியின் வில்லை இரண்டாகப் பிளந்த அர்ஜுனன், பாஞ்சால மன்னனை நோக்கி விரைந்தான்.
ஆனால் சத்தியஜித் இன்னும் விரைவாக மேலும் கடுமையான வில்லை எடுத்து, பார்த்தனையும் {அர்ஜுனனையும்}, அவனது தேரையும், அவனது தேரோட்டியையும், குதிரைகளையும் தனது கணைகளால் துளைத்தான்.
இப்படிப் பாஞ்சால வீரனால் போரில் கடுமையாகத் தாக்கப்பட்டவனும், எதிரிகளை மன்னிக்காதவனுமான அர்ஜுனன், அவனை {சத்தியஜித்தை} விரைவாகக் கொல்ல விரும்பி, எண்ணற்ற கணைகளால் எதிரியின் குதிரையையும், கொடியையும், வில்லையும், வில்லைப் பிடித்த (இடது) கையையும், தேரோட்டியையும், தேரின் பின் இருந்த பணியாளையும் துளைத்தான். தனது விற்கள் தொடர்ந்து இரண்டாகப் பிளக்கப்படுவதையும்,
குதிரைகள் கொல்லப்படுவதையும் கண்ட சத்தியஜித், போரை நிறுத்தித் திரும்பினான். தனது தளபதி தாக்குதலில் இருந்து பின்வாங்கியதைக் கண்ட பாஞ்சால மன்னன் {துருபதன்}, அந்தப் பாண்டவ இளவரசன் {அர்ஜுனன்} மீது, தானே கணைகளின் மழையைப் பொழியத் தொடங்கினான். பிறகு, வெற்றியால் அலங்கரிக்கப்பட்ட வீரர்களில் முதன்மையான அந்த அர்ஜுனன், கடுமையாகப் போரிடத் தொடங்கி,
எதிரியின் வில்லை இரண்டாகப் பிளந்து, அவனது கொடிக்கம்பத்தை வீழ்த்தி, அவனது குதிரைகளையும், தேரோட்டியையும் ஐந்து கணைகளால் துளைத்தான்.
பிறகு தனது வில்லை ஒரு புறமாகத் தூக்கியெறிந்த அர்ஜுனன், அம்பறாத்தூணியை எடுத்து, அதிலிருந்த முனை அகன்ற கொடுவாளை எடுத்து, உரக்க முழங்கி,
 திடீரெனத் தனது தேரில் இருந்து எதிரியின் தேருக்குக் குதித்தான். அங்கே அச்சமற்று நின்று, கடலின் நீரைக் கலங்கடித்து, பெரும்பாம்பைப் பிடிக்கும் கருடனைப் போல, துருபதனைச் சிறைப் பிடித்தான். இந்தக் காட்சியைக் கண்ட பாஞ்சாலப் படையினர் பல திசைகளிலும் தப்பி ஓடினர்.
பிறகு இருதரப்பு படைகளுக்கெதிரேயும் தனது கரத்தின் பெரும்பலத்தை வெளிப்படுத்தி அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, உரத்த சிங்க முழக்கம் செய்து, பாஞ்சாலர்களிடமிருந்து வெளியே வந்தான்.
 அவன் (சிறைபிடிக்கப்பட்டவனுடன்) திரும்பி வருவதைக் கண்ட இளவரசர்கள் துருபதனின் தலைநகரை நிர்மூலமாக்கத் தொடங்கினர்.
அவர்களிடம் அர்ஜுனன், "ஏகாதிபதிகளில் சிறந்த இந்தத் துருபதர், குரு குல வீரர்களின் உறவினனாவார். எனவே, ஓ! பீமரே, அவரது வீரர்களைக் கொல்லாதீர். நமது குருவுக்கான காணிக்கையை மட்டும் நாம் கொடுப்போம்" என்றான்".
 இப்படி அர்ஜுனனால் தடுக்கப்பட்ட பீமசேனன், தனது போர்ப்பயிற்சியில் {இந்தப் போரினால்} நிறைவடையவில்லை என்றாலும், எவரையும் கொல்லாமல் திரும்பினான்.
பிறகு அந்த இளவரசர்கள் சிறைபட்ட துருபதனை அவனது நண்பர்கள் மற்றும் ஆலோசகர்களுடன் அழைத்துச் சென்று, துரோணரிடம் ஒப்படைத்தனர்.
 அவமதிக்கப்பட்டு, செல்வம் பறிக்கப்பட்டு, முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட துருபதனைக் கண்ட துரோணர், அந்த ஏகாதிபதியுடனான பழைய பகையை நினைத்து, அவனிடம்,
"உன் அரசும், உனது தலைநகரமும் என்னால் நிர்மூலமாக்கப்பட்டன. ஆனால் உன் உயிர் உன் எதிரியை நம்பி இப்போது இருந்தாலும், அதற்காக நீ அஞ்சாதே. இப்போது நீ (என்னுடனான) உனது நட்பை மீட்டுயிர்ப்பிக்க விரும்புகிறாயா?" என்று கேட்டார்.
 இதைச் சொல்லிச் சிறிது புன்னகைத்து மறுபடியும், "வீர மன்னா! உனது உயிருக்கு அஞ்சாதே! பிராமணர்களாகிய நாங்கள் எப்போதும் மன்னிப்பவர்களே.
 துருபதா, குழந்தைப் பருவத்திலிருந்து உன்னுடன் ஆசிரமத்தில் விளையாடியதால், நான் உன்னிடம் கொண்ட பாசமும், அன்பும் வளர்ந்தே வந்திருக்கிறது.
 எனவே, ஓ! மன்னா, நான் உனது நட்பை மறுபடியும் கேட்கிறேன். உனக்கு ஒரு வரமாக, (முன்பு உனதாக இருந்த) பாதி நாட்டைக் கொடுக்கிறேன்.
 மன்னன் அல்லாதவன் ஒரு மன்னனுக்கு நண்பனாக இருக்க முடியாது என்று நீ முன்பு சொன்னாய். ஓ! யக்ஞசேனா {துருபதா}, அதனாலேயே நான் உன் நாட்டில் பாதியை நான் வைத்துக் கொள்கிறேன்.
பாகீரதிக்கு {கங்கை ஆறு} தெற்கேயுள்ள நாட்டுக்கு நீயே மன்னன். அதே வேளையில், அந்த நதிக்கு வடக்கே இருக்கும் நாட்டுக்கு நான் மன்னன். ஓ! பாஞ்சாலா {துருபதா}, உனக்கு விருப்பமிருந்தால், என்னை உனது நண்பனாக அறிந்து {ஏற்றுக்} கொள்வாயாக" என்றார்.
இந்த வார்த்தைகளைக் கேட்ட துருபதன், "உன்னத ஆன்மாவையும், பெரும் ஆற்றலையும் கொண்டவர் நீர். எனவே, ஓ! பிராமணரே {துரோணரே}, நீர் செய்யும் இச்செயலால் நான் ஆச்சரியமடையவில்லை. நான் உம்மிடம் பெரும் மனநிறைவு கொண்டேன். நான் உம்மிடம் அழியா நட்பை விரும்புகிறேன்" என்றான்".
, "அதன்பிறகு, துரோணர் பாஞ்சால மன்னனை சில வழக்கமான மரியாதைகளுடன் மகிழ்ச்சியாக விடுவித்து, பாதி நாட்டையும் அவனுக்கு அளித்தார்.
அன்றிலிருந்து துருபதன், கங்கைக் கரையில் பல நகரங்களுடன் கூடிய மகந்தி மாகாணத்தில் உள்ள காம்பில்யத்தில் கவலையுடனே வசித்து வந்தான்.
துரோணரிடம் பெற்ற தோல்விக்குப் பிறகு, துருபதன், சர்மண்வதி ஆற்றின் கரை வரை இருந்த தென் பாஞ்சால நாட்டை ஆட்சி செய்தான்.
 பிரம்மசக்தியில் {ஆன்ம பலத்தில்} தாழ்ந்தவனாக இருக்கையில், வெறும் க்ஷத்திரிய பலத்தால் மட்டுமே துரோணரை வெல்லமுடியாது என்று நினைத்த துருபதன்,
தனது பிராமண எதிரியை அடக்க ஒரு மகனைப் பெறுவதற்காக உலகம் முழுவதும் திரிந்தான். அதே நேரத்தில், துரோணர் அஹிச்சத்திராபுரியிலேயே தொடர்ந்து வசிக்கலானார்.
 இப்படியே நகரங்களும், பட்டணங்களும் அடங்கிய அஹிச்சத்திராபுரி அர்ஜுனனால் அடையப்பட்டு, துரோணருக்கு அளிக்கப்பட்டது" என்றார் வைசம்பாயனர்
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள் 9789374109

Wednesday, February 23, 2022

Varadarajan & Nambi - Perumal eating remnants...?- Spiritual story

#ஓம்_நமோ_நாராயணா

சென்னைக்கு அருகே உள்ள பூவிருந்தவல்லியில் அவதரித்த மகான் திருக்கச்சி நம்பிகள். 

அவர் காஞ்சி வரதராஜப் பெருமாளுடன் நேரே பேசும் பாக்கியம் பெற்றிருந்தார்.

 ஒருமுறை அவர் வரதராஜப் பெருமாளுக்குச் சாமரம் வீசிக் கொண்டிருந்தார். 

அப்போது தலைமேல் ஒரு பாத்திரத்தோடு அங்கே வந்த அர்ச்சகர் திருக்கச்சி நம்பிகளிடம், "பெருமாளுக்கு நிவேதனம் செய்வதற்காகச் சர்க்கரைப் பொங்கல் கொண்டு வந்திருக்கிறேன்.

 இதைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

 மடப்பள்ளிக்குச் சென்று புளியோதரையையும் எடுத்து வந்து விடுகிறேன்!" என்று சொல்லி விட்டு மடப்பள்ளியை நோக்கிச் சென்றார்.

அப்போது பெருமாள் திருக்கச்சி நம்பிகளிடம், "நம்பி! கொஞ்சம் சர்க்கரைப் பொங்கலை எடுத்து எனக்கு ஊட்டி விடுங்கள்!" என்றார்.

 பெருமாளின் கட்டளையைச் சிரமேற்கொண்ட நம்பி, பாத்திரத்திலிருந்து சர்க்கரைப் பொங்கலை எடுத்துப் பெருமாளுக்கு ஊட்டினார். 

பெருமாளும் அமுது செய்தார். 

"ஆஹா! நன்றாக இருக்கிறதே! இன்னும் கொஞ்சம் தாருங்கள்!" என்று கேட்டார் பெருமாள். நம்பியும் எடுத்து ஊட்டினார்.

அதற்குள் புளியோதரையுடன் அங்கே வந்த அர்ச்சகர், பாத்திரத்தில் பாதி சர்க்கரைப் பொங்கல் காலியாகி இருப்பதையும், திருக்கச்சி நம்பியின் கையில் சர்க்கரைப் பொங்கல் ஒட்டிக் கொண்டிருப்பதையும் கண்டார். 

"என்ன காரியம் ஐயா செய்தீர்? பெருமாள் உண்ட மிச்சத்தைச் சாப்பிட வேண்டிய நாம் அவருக்கென்று வைத்த பிரசாதத்தைச் சாப்பிடுவது நியாயமா?" என்று கேட்டார் அர்ச்சகர்.

 "சுவாமி! அடியேன் எதையும் சாப்பிடவில்லை. பெருமாள் தான் கேட்டார்! அவருக்கு ஊட்டி விட்டேன்!" என்றார் நம்பி. 

"இதென்ன புதுக்கதை! பெருமாள் என்றைக்கு ஐயா சாப்பிட்டிருக்கிறார்? நீர் தின்றுவிட்டு அவர் மேல் பழிபோடாதீர்!" என்றார் அர்ச்சகர்.

செய்தியைக் கேள்வியுற்ற கோயில் அதிகாரிகள் அங்கே விரைந்து வந்தனர்.

 பெருமாளுக்கென்று வைத்திருந்த பிரசாதத்தை நிவேதனத்துக்கு முன் எடுத்து உண்ட திருக்கச்சி நம்பிகள் இனிமேல் கோயிலுக்குள்ளேயே வரக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி அவரை வெளியே அனுப்பினார்கள்.

வருத்தத்துடன் வீடு திரும்பினார் திருக்கச்சி நம்பிகள். இச்செய்தி ஊர் முழுவதும் பரவியதால், மக்கள் அனைவரும் திருக்கச்சி நம்பிகளைப் பலவாறு ஏசத் தொடங்கினார்கள்.

 "வரதா! மக்கள் என்னைத் தூற்றுவதைப் பற்றிக் கூட எனக்குக் கவலையில்லை! ஆனால் இப்படி ஒரு லீலை செய்து நான் உனக்குச் செய்துவரும் தொண்டை நடக்கவிடாமல் செய்துவிட்டாயே!" என்று பெருமாளிடம் மனமுருகி வேண்டினார்.

சில நாட்கள் கடந்தன. திருமலையிலிருந்து சில பக்தர்கள் வரதராஜப் பெருமாளுக்கு 100 கங்காளம் பொங்கலும் 100 கங்காளம் புளியோதரையும் சமர்ப்பிப்பதாக வேண்டிக் கொண்டிருந்தார்கள். 

அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றும் பொருட்டு கோவிலுக்கு வந்து பிரசாதத்தை வரதராஜனுக்குச் சமர்ப்பிக்கையில் பெருமாள் அர்ச்சகரிடம், "திருக்கச்சி நம்பிகளை வரச்சொல்லுங்கள்! அவர் வந்தால் தான் நான் நிவேதனம் கண்டருள்வேன்!" என்றார். 

வேறு வழியில்லாமல் பூவிருந்தவல்லியிலிருந்து திருக்கச்சி நம்பிகளைக் காஞ்சிக்கு அழைத்து வந்தார்கள்.

நூறு கங்காளம் பொங்கலும், நூறு கங்காளம் புளியோதரையும் பெருமாளின் முன்னே இருந்தன. திருக்கச்சி நம்பிகளைக் கண்டதும் வரதராஜப் பெருமாள், "இவர் மட்டும் என்னுடன் இங்கே இருப்பார். மற்ற அனைவரும் இங்கிருந்து செல்லுங்கள்!

 நாங்கள் ரகசியமாகப் பேசிக்கொள்ளப் போகிறோம்!" என்றார்.

 அனைவரும் விலகிச் சென்றார்கள். கதவு தாளிட்டுக்கொண்டது.
சிறிது நேரம் கழித்து, "இப்போது உள்ளே வாருங்கள்!" என்ற குரல் வானிலிருந்து ஒலித்தது. 

கதவைத் திறந்துகொண்டு பக்தர்கள் அனைவரும் உள்ளே சென்றார்கள். பார்த்தால் இருநூறு கங்காளங்களிலிருந்த பிரசாதமும் காணாமல் போயிருந்தது.

அனைத்தையும் உண்ட களைப்பில் வியர்த்துப் போயிருந்த வரதனுக்குத் திருக்கச்சி நம்பிகள் சாமரம் வீசிக்கொண்டிருந்தார்.

 "இருநூறு கங்காளங்களில் உள்ள உணவை ஒரு மனிதனால் இவ்வளவு சீக்கிரமாகச் சாப்பிட முடியுமா? உண்டவன் நான் தான்!" என்றார் வரதராஜன்.

திருக்கச்சி நம்பிகள் குற்றமற்றவர் என்பதைக் கோயில் அதிகாரிகளும் பொதுமக்களும் உணர்ந்தார்கள்!!

 "திருக்கச்சி நம்பிகள் எப்போதும் போல் எனக்குச் சாமரம் வீசும் கைங்கரியத்தைத் தொடர்ந்து செய்வார்!" என்று பெருமாள் திருவாய் மலர்ந்தருளினார்.

தன்மீது ஒருமடங்கு அன்புகாட்டும் அடியவர்களின் மேல் பல்லாயிரம் மடங்கு அன்புகாட்டும் எம்பெருமானின் கருணையை எண்ணி மனமுருகி ஆனந்தக் கண்ணீர் வடித்தார் திருக்கச்சி நம்பிகள்!!

ஓம் நமோ நாராயணா

Apamanam...? - Sanskrit story

मृत्तिकया निर्मितं कलशं कश्चन पृच्छति भोः! त्वम् एवं किं पुण्यम् अकरोः यस्य प्रभावेण इदानीं मनुष्याणां शिरसि विराजसे?

कलशः वदति महोदय! यदा अहं मृत्तिकारूपेण आसं तदा कुम्भकारः तां मृत्तिकां बहुधा मोडित्वा मोडित्वा मम निर्माणम् अकरोत्। 
तदनन्तरं सः माम् अग्निना अतापयत्। 
एतावन्तम् अपमानं सोढ्वा हि इदानीं मनुष्याणां शिरसि विराजेऽहम्। 

मनुष्यः स्वजीवने अपमानं विषवद् न मन्येत। अपितु तम् अपमानम् अमृतवद् मन्यताम्। 
*-प्रदीपः!*

Mahabharatam part19 in tamil

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-19
..
ஆதிபர்வம்
..
அர்ஜுனனும்,கர்ணனும் நேருக்கு நேர் போட்டி
..
வைசம்பாயனர் சொன்னார்,
"ஓ! பாரதகுலத்தோனே, திருதராஷ்டிரன் மற்றும் பாண்டுவின் மகன்கள் ஆயுதத் திறமையை அடைந்து விட்டதைக் கண்ட துரோணர், கிருபர், சோமதத்தன், பாஹ்லீகர், மற்றும் பீஷ்மர், வியாசர், விதுரன் ஆகியோரது முன்னிலையில் மன்னன் திருதராஷ்டிரனிடம்,
 "ஓ! குரு மன்னர்களில் சிறந்தவரே, உமது மகன்கள் தங்கள் கல்வியை முடித்துவிட்டனர். ஓ! மன்னா, உமது அனுமதியுடன் அவர்கள் தங்கள் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தட்டும்" என்றார்.
இதைக்கேட்ட மன்னன் இதயம்நிறைந்த மகிழ்ச்சியுடன்,
 "ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, நீர் பெரும் செயலைச் சாதித்திருக்கிறீர். பரிசோதனை நிகழும் இடத்தையும் நேரத்தையும், அஃது எப்படி நடக்க வேண்டும் என்பதையும் எனக்குக் கட்டளையிடுவீராக.
 என் குருட்டுத் தன்மை, எனக்கு ஏற்படுத்தியிருக்கும் துயர், எனது பிள்ளைகளின் ஆயுத வீரத்தைக் காணும் பாக்கியமுள்ளோரிடம் என்னை பொறாமை கொள்ள வைக்கிறது.
 ஓ! விதுரா, துரோணர் சொல்வதையெல்லாம் செய்து கொடுப்பாயாக.
 என்றான்.
மன்னனுக்குத் தேவையான உறுதிகளைக் கொடுத்துவிட்டு, விதுரன் தனது பணியைச் செய்யப் புறப்பட்டான். பெரும் ஞானம் கொண்ட துரோணர், கிணறுகளும், நீரூற்றுகளும் கொண்ட, மரங்கள் மற்றும் அடர்த்தியான புதர்களற்ற ஒரு நிலத்தை அளந்தார். அப்படி நிலத்தை அளந்த துரோணர், நல்ல நட்சத்திரம் கொண்ட ஒரு சந்திர நாளில், நடக்கும் காரியத்திற்குச் சாட்சியாக அங்கே கூடி நிற்கும் குடிமக்களுக்கு மத்தியில் தேவர்களுக்குக் காணிக்கை கொடுத்தார்.
அதன்பிறகு, மன்னனின் சிற்பிகள், அந்த இடத்தில், பல்வேறு ஆயுதங்களுடன் தரமான ஒரு பெரிய அரங்கத்தைச் சாத்திரங்களில் சொல்லியுள்ளபடி அமைத்தனர். மேலும் அவர்கள் மற்றுமொரு பெரிய அரங்கத்தைப் பெண் பார்வையாளர்களுக்காக அமைத்தனர்.
 குடிமக்களும் அவர்களுக்குத் தகுந்தது போல மேடைகளைத் தங்களுக்கு அமைத்துக் கொண்டனர். செல்வந்தர்கள் அகலமாகவும், விசாலமாகவும் குடில்களைத் தங்களுக்கு அமைத்துக் கொண்டனர்.
நிச்சயிக்கப்பட்ட அரங்கேற்ற நாள் வந்ததும், தெய்வீக அழகுடன் சுத்தமான தங்கத்தால் கட்டப்பட்டு, முத்துச் சரங்களாலும், விலைமதிப்பில்லா வைடூரியம் போன்ற கற்களாலும் அலங்கரிக்கப்பட்ட அந்த அரங்கத்தினுள், பீஷ்மர், கிருபர், குருக்களில் முன்னவர்கள் ஆகியோரை முன் நடக்க விட்டு, மன்னன் {திருதராஷ்டிரன்} தனது அமைச்சர்களுடன் நுழைந்தான்.
 நற்பேறு அருளப்பட்ட காந்தாரி, குந்தி மற்றும் அரச குடும்பத்தின் மற்ற மகளிர் ஆகியோர் பகட்டான ஆடையுடுத்தி, தெய்வீக மங்கையர் சுமேரு {மேரு} மலைமீது ஏறுவது போலப் பணிப்பெண்களுடன் இன்பமாக அம்மேடையில் ஏறினர். பிராமணர்கள், க்ஷத்திரியர்களுடன் கூடிய நால்வகை மக்களும், இளவரசர்களின் ஆயுதத் திறனைக் காணும் ஆவலில், நகரத்தை விட்டகன்று, அந்த இடத்திற்கு ஓடி வந்தனர். அந்தக் காணற்கரிய காட்சியைக் காண அனைவரும் அமைதியற்றுக் காத்திருந்தனர். ஒரு நொடிப் பொழுதில் அங்கே பெரும் கூட்டம் கூடியது.
 துந்துபி மற்றும் பேரிகைகளின் ஒலியும், பல குரலொலிகளும் சேர்ந்த ஒலி, கலங்கும் சமுத்திர ஒலியைப் போலிருந்தது
இறுதியாக, துரோணர் வெண்ணிற ஆடையுடன், பூணூல் பூட்டி, வெண்ணிறத் தாடியுடன், வெள்ளை மாலை அணிந்து, வெண்ணிற சந்தனக் குழம்பை மேனியில் பூசிக் கொண்டு தனது மகனுடன் அரங்கத்தினுள் நுழைந்தார்.
அக் காட்சியானது, மேகமற்ற வானில் சந்திரன் செவ்வாய்க்கிரகத்துடன் காட்சியளிப்பது போல இருந்தது. அந்தப் துரோணர் உள்ளே நுழைந்ததும், நேரத்தில் பூஜை செய்து, மந்திரங்கள் நன்கறிந்த பிராமணர்களை மங்கலச் சடங்குகளைச் செய்ய வைத்தார்.
இனிமையான இசையுடன் பரிகாரச் சடங்குகள் செய்து அவை நிறைவடைந்த பிறகு, பல்வேறு ஆயுதங்களுடன் சிலர் அந்த அரங்கின் உள்ளே நுழைந்தனர்.
இடுப்புக் கச்சையை வாரினால் வாரிக் கட்டிக் கொண்டவர்களும், பெரும் தேர்வீரர்களுமான அந்தப் பாரதக் குலத்தவர் (இளவரசர்கள்), தங்கள் கைகளில் கவசக் கையுறைகளை அணிந்து, விற்களுடனும் அம்பறாத்தூணிகளுடனும் உள்ளே நுழைந்தனர்.
 யுதிஷ்டிரனைத் தலைமையாகக் கொண்ட அந்தத் துணிவுமிக்க இளவரசர்கள், தங்கள் வயதுக்குத் தகுந்த வரிசையில் உள்ளே நுழைந்து, ஆயுதங்களில் தங்கள் அற்புதமான திறன்களைக் காட்சிப்படுத்தினர்.
 அப்போது, சில பார்வையாளர்கள் கீழே இறங்கும் அம்புகளுக்கேற்ப அச்சத்தால் தங்கள் தலையைக் கீழே சாய்த்தனர். சிலர் அச்சமில்லாமல் அக்காட்சியை ஆச்சரியமாகப் பார்த்தனர்.
அந்த இளவரசர்கள், குதிரையை லாவகமாகச் செலுத்தித் தங்கள் பெயர் பொறித்த குறித்த இலக்குகளைத் தங்கள் கணைகளால் அடித்தனர்
வில் மற்றும் கணையைப் பயன்படுத்துவதில் தங்கள் இளவரசர்களின் ஆற்றலைக் கண்ட பார்வையாளர்கள், தாங்கள் கந்தர்வர்களின் நகரத்தைக் காண்கிறோமோ என்று நினைத்து வியப்பில் ஆழ்ந்தனர்.
 திடீரெனச் சில நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் "நன்று செய்தீர்! சரியாகச் செய்தீர்!" எனத் தங்கள் கண்களை அகலவிரித்து ஆச்சரியக் கூக்குரலிட்டனர்.
 தங்கள் திறமைகளையும், வில் மற்றும் கணையைப் பயன்படுத்துவதில் தங்கள் கைத்திறனையும், தேர்களைக் கட்டுப்படுத்தும் திறனையும், குதிரை மற்றும் யானையின் முதுகில் இருந்து போரிடும் திறனையும்
தொடர்ச்சியாகச் செய்து காட்டிய அந்தப் பெரும் பலம் கொண்ட வீரர்கள், தங்கள் வாட்களையும், கேடயங்களையும் எடுத்துக் கொண்டு அந்த ஆயுதங்களுடன் விளையாடத் தொடங்கினர்.
பார்வையாளர்கள் இளவரசர்களின் சுறுசுறுப்பையும், கட்டுடலையும், கருணையையும், அமைதியையும், வலுவான பிடியையும், வாள் மற்றும் கேடயத்தில் அவர்கள் கொண்ட திறனையும் கண்டு அதிசயித்தனர்.
பிறகு, பீமனும், துரியோதனனும், போரின் தன்மையை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்து, கையில் கதாயுதங்களுடன் ஒற்றைச் சிகர மலைகள் இரண்டைப் போல அரங்கத்தினுள் நுழைந்தனர்.
 அந்தப் பெரும் பலம் கொண்ட வீரர்கள் தங்கள் இடுப்புக் கச்சைகளை இறுகக் கட்டிக் கொண்டு, தங்கள் சக்தி அத்தனையையும் வரவழைத்து, இரண்டு சினம் கொண்ட யானைகள் ஒரு பெண் யானைக்காகப் போட்டியிட்டு முழங்குவதைப் போலவே முழங்கினர்.
 சினம் கொண்ட யானைகளைப் போல இருந்த அந்தப் பலம்வாய்ந்த வீரர்கள் இருவரும், அரங்கத்தை வலமாகவும், இடமாகவும் சுற்றினர்.
விதுரன் இளவரசர்களின் சாதனைகளையெல்லாம் திருதராஷ்டிரனுக்கும், பாண்டவர்களின் தாய்க்கும் {குந்தி}, காந்தாரிக்கும் விவரித்துச் சொன்னான்"
"பலம் பொருந்திய குரு மன்னனும், பீமனும் அரங்கத்தினுள் நுழைந்ததும், பார்வையாளர்கள் தங்கள் மனவேற்றுமையால் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக இருபிரிவாகப் பிரிந்தனர்.
சிலர், "குருக்களின் வீர மன்னனைப் பாருங்கள்", சிலர், "பீமனைப் பாருங்கள்!" என்றும் கூவினர். இப்படிப்பட்ட கூவல்களின் காரணமாக அங்கே திடீரெனப் பெருங்கூச்சல் எழுந்தது.
 அந்த இடம் ஒரு கலங்கிய கடலைப் போலக் காட்சி அளித்ததைக் கண்ட புத்திசாலியான துரோணர், தனது மகன் அஸ்வத்தாமனை அழைத்து,
 "பயிற்சியில் தேர்ந்தவர்களும், பெரும்பலம் கொண்டவர்களுமான இவ்விரு வீரர்களையும் தடுத்து நிறுத்துவாயாக. பீமனுக்கும், துரியோதனனுக்குமான இந்த மோதலால் கூட்டத்தின் கோபம் தூண்டப்படக் கூடாது" என்றார்".
 "பிரளயகாலத்தில் உருவாகும் காற்றினால் கொந்தளிக்கிற இரு கடல்களைப் போலத் தங்கள் கதாயுதங்களை உயர ஓங்கியபடி இருவரும் நிற்கையில், குரு மைந்தன் {அஸ்வத்தாமன்} அவர்களைத் தடுத்து நிறுத்தினான்.
 அப்போது துரோணர் அரங்கத்தினுள் நுழைந்து, இசைக்கலைஞர்களைத் தங்கள் இசையை நிறுத்தச் சொல்லி, மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலில் இந்த வார்த்தைகளைச் சொன்னார்,
"என் மகனிடம் நான் கொண்டுள்ளதைப் போன்றே என் அன்புக்குரியவனும், அனைத்து ஆயுத திறன்மிக்கவனும், இந்திரனின் மைந்தனும், இந்திரனின் தம்பிக்கு (விஷ்ணு) ஒப்பானவனுமான இந்தப் பார்த்தனைப் {அர்ஜுனன்} அனைவரும் காண்பீராக" என்றார்
பரிகாரச் சடங்குகளை மனநிறைவாகச் செய்த அந்த இளைஞன் பல்குனன் {அர்ஜுனன்}, தனது கையுறை கவசத்தையும், தங்கத்தாலான உடற்கவசத்தையும் தரித்து, அம்பறாத்தூணியில் கணைகளை நிறைத்துக் கைகளில் வில்லேந்தி, அரங்கிலிருந்த கூட்டத்தின் முன்பு, மாலை நேர சூரியனின் கதிர்களால் வானவில்லின் நிறம்பெற்ற, மின்னலுடன் கூடிய மேகம் போலக் காட்சியளித்தான்.
 மொத்தக் கூட்டமும் அர்ஜுனனைக் கண்டதும் பெருமகிழ்ச்சி அடைந்து, தங்கள் சங்குகளை எடுத்து முழக்கினர். இன்னிசை வாத்தியங்களும் இசைக்கப்பட்டன.
"குந்தியின் அழகிய மகன் இவன்", "இவனே பாண்டவர்களில் நடுவன் (மூன்றாமவன்)", "இவனே பெரும்பலம்வாய்ந்த இந்திரனின் மகன்", "இவனே குரு குலத்தைக் காக்கப் போகிறவன்",
 "இவனே ஆயுதந்தரித்தவர்களில் முதன்மையானவன்", "இவனே அறத்தைக் கடைப்பிடிப்பவர்களில் முதன்மையானவன்", "இவனே சரியான நடத்தையுள்ளவர்களில் முதன்மையானவன்", "இவனே ஞானக் காரியங்களின் பெரும் கொள்கலன்" என்று கூட்டத்தில் இருந்து ஆச்சரியக் கூச்சல்கள் எழுந்தன.
இந்தப் பாராட்டுகளைக் கேட்டதால், குந்தி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.
 மனிதர்களில் முதல்வனான திருதராஷ்டிரன் இந்தக் கூச்சல்களால் காதடைத்து, மகிழ்ச்சியுடன் விதுரனிடம்,
"ஓ! க்ஷத்ரி {விதுரா}, கலங்கிய பெருங்கடல் போல, வானுலகிற்கே கேட்குமளவு ஏன் இப்படித் தீடீரெனக் கூச்சல் எழுகிறது?" என்று கேட்டான்.
விதுரன், "ஓ! பெரும்பலம்வாய்ந்த ஏகாதிபதியே, பாண்டு மற்றும் பிருதையின் {குந்தியின்} மகனான பல்குனன் {அர்ஜுனன்}, தனது கவசங்களை அணிந்து கொண்டு அரங்கத்தினுள் நுழைந்திருக்கிறான். அதனால்தான் இந்தக் கூச்சல் எழுகிறது" என்றார்.
திருதராஷ்டிரன், "ஓ! பெரும் ஆன்மா கொண்டவனே, புனித நெய்யைப் போன்றிருக்கும் பிருதையிடம் உதித்த இந்த மூன்று நெருப்புகளாலும், உண்மையில் அருளப்பட்டவனாகவும், கருணை செய்யப்பட்டவனாகவும், பாதுகாக்கப்பட்டவனாகவும் என்னை நான் உணர்கிறேன் " என்றான்".
வைசம்பாயனர் தொடர்ந்தார்,
"மகிழ்ச்சியில் திளைத்திருந்த பார்வையாளர்கள் தங்கள் சுய உணர்வு அடைந்தனர்.
அர்ஜுனன், ஆயுதங்களில் தனது கரநளினத்தைக் அரங்கத்திலுள்ளோருக்குக் காட்சிப்படுத்தினான்.
அவன், ஆக்னேய ஆயுதத்தால் நெருப்பை உண்டாக்கினான், வாருண ஆயுதத்தால் நீரை உண்டாக்கினான், வாயவ்யா ஆயுதத்தால் (வாயு அஸ்திரம்} காற்றை உண்டாக்கினான். பர்ஜன்ய ஆயுதத்தால் {மேகாஸ்திரம்) மேகங்களை உண்டாக்கினான்.
மேலும் அவன், பௌமா ஆயுதத்தால் நிலத்தை உண்டாக்கினான், பர்வதேய ஆயுதத்தால் {பர்வதாஸ்திரம்} மலைகளை உருவாக்கினான். பிறகு அவன், அந்தர்தான ஆயுதத்தால் முன்பு உண்டாக்கிய அனைத்தையும் மறையவைத்தான்.
அர்ஜுனன் ஒரு நொடியில் உயர்ந்து காணப்பட்டான், மறுநொடியில் தாழ்ந்து {குள்ளமாகக்} காணப்பட்டான். ஒரு நொடியில் தேர்த்தட்டிலும், மறுநொடியில் தேரின் நடுவிலும், அதற்கடுத்த நொடியில் தரையிலும் அவன் காணப்பட்டான்.
 கரங்களைத் திறமையாகப் பயன்படுத்த பயிற்சி பெற்ற அந்த வீரன், பல கணைகளைக் கொண்டு சில மென்மையான, சில கடுமையான, சில அடர்த்தியான இலக்குகளை அடித்துக் காட்டினான்.
நகர்ந்து கொண்டே இருக்கும் இரும்புப் பன்றியின் வாயில் ஐந்து கணைகளை ஒரே கணை போலத் தடையில்லாமல் தனது வில் நாணிலிருந்து எய்தான்.
 கயிற்றில் தொங்கியபடி அங்குமிங்கும் ஆடிக்கொண்டிருக்கும் துளையிடப்பட்ட மாட்டின் கொம்பில் இருபத்தியொரு கணைகளைச் செலுத்தினான்.
 இப்படி அர்ஜுனன், வாள், வில், கதை ஆகிய ஆயுதங்களில் தனக்கு உண்டான ஆழமான நிபுணத்துவத்தைக் காட்டி அந்த அரங்கத்தை வலம் வந்தான்.
அந்தக் கண்காட்சி நல்லபடியாக முடிந்ததும், அரங்கத்திலிருந்த பார்வையாளர்களின் குதூகலம் அடங்கியது. இசைக்கருவிகளின் ஒலி நின்றது, அப்போது, வாயிலருகே கைதட்டும் ஒலி கேட்டது. அவ்வொலியானது, தட்டுபவரின் பலத்தையும், சக்தியையும் முன்னறிவிக்கும் வகையில் இடிச்சத்தம் போலக் கேட்டது.
அங்கே கூடியிருந்த கூட்டமானது, அந்நொடியில் இவ்வொலியைக் கேட்டு, "பூமியின் மலைகள் பிளந்தனவா? அல்லது பூமியே பிளந்துவிட்டதா? அல்லது வானத்தில் மேகங்கள் கூடி முழங்குகின்றனவா?" என்று நினைத்த பார்வையாளர்கள் அனைவரும் வாயிலை நோக்கினர்.
ஐந்து நட்சத்திரங்களின் கூட்டமான ஹஸ்த நட்சத்திரத்துடன் கூடிய சந்திரன் போலத் துரோணர், குந்தியின் மைந்தர்களான ஐந்து சகோதரர்கள் சூழ நின்றிருந்தார்
எதிரிகளைத் தண்டிப்பவனான துரியோதனன், செருக்குள்ள தனது நூறு சகோதரர்களுடனும், அஸ்வத்தாமனுடனும் பரபரப்புடன் எழுந்து நின்றான்.
 ஒங்கிய ஆயுதங்களுடன் கூடிய தனது நூறு சகோதரர்கள் சூழவும், கையில் கதாயுதத்துடனும் நின்றிருந்த அந்த இளவரசன் {துரியோதனன்}, தானவர்களை எதிர்த்து போரிடச் செல்கையில் தேவர்களால் சூழப்பட்ட புரந்தரன் {இந்திரன்} போல இருந்தான்"
"பார்வையாளர்கள் கண்கள் விரிய ஆச்சரியத்தில் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, எதிரிகளின் நகரை அடக்கும் கர்ணன், இயற்கை கவசத்தாலும் காதுக்குண்டலங்களாலும் முகம் பிரகாசித்துத் தனது வில்லை எடுத்து, வாளைச் சுற்றிக் கட்டிக் கொண்டு, மலைப்பாறை நடந்து வருவது போல அந்த அகன்ற அரங்கத்திற்கு வந்தான்.
வெகு தூரத்திற்குப் புகழ் கொண்டு எதிரிகளை அழிக்கும், அகன்ற கண் கொண்ட அந்தக் கர்ணன், பிருதைக்கு {குந்திக்கு} அவளது கன்னிப்பருவத்தில் பிறந்தவனாவான். சிங்கம், காளை அல்லது யானைக்கூட்டத்தின் தலைமை யானையைப் போன்ற வீரம் கொண்ட அவன், வெப்பக்கதிர் உமிழும் சூரியனின் ஒரு பகுதியுமாவான். அவன் பிரகாசத்தில் சூரியனையும், அழகில் சந்திரனையும், சக்தியில் நெருப்பையும் போல இருந்தான்.
 சூரியனால் பெறப்பட்ட அவன், தங்கப் பனை மரம் போல் நெடிதுயர்ந்து இருந்தான். சிங்கத்தைக் கொல்லும் இளமையின் வல்லமையைப் பெற்றிருந்த அவன், எண்ணிலடங்கா சாதனைகளைச் செய்து, அழகான குணநலன்களுடன் இருந்தான்.
பெரும்பலம் வாய்ந்த கரம் கொண்ட அந்த வீரன், அரங்கத்தைச் சுற்றி நோட்டம் விட்டுத் துரோணருக்கும் கிருபருக்கும் {அதிகம் மதியாதவனைப் போல} அலட்சியமாக வணக்கம் செலுத்தினான்.
 அந்த மொத்தக்கூட்டத்தினரும் நடப்பதை அசைவில்லாமல் பார்த்து, "யார் இவன்?" என்று நினைத்து, அந்த வீரனைப் பற்றி அறிந்து கொள்ளப் பேராவல் கொண்டனர்.
 நாவன்மை மிக்க மனிதர்களில் முதன்மையான அந்தச் சூரிய மைந்தன் {கர்ணன்}, மேகங்களைப் போன்ற ஆழமான உரத்த குரலில், அசுரரை அழிக்கும் பகனின் {இந்திரனின்} மகனும், தன்னால் அறியப்படாதவனுமான தன் தம்பியிடம், "ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நீ செய்து காட்டியதை விஞ்சும் வகையில் நான் இந்தச் சபையின் முன் அருஞ்செயல்கள் செய்வேன். அவற்றை நீ கண்டால் வியப்பில் மலைத்துவிடுவாய்" என்றான்.
அவன் அப்படிப் பேசி முடிப்பதற்குள், பார்வையாளர்கள் அனைவரும் ஏதோ ஒரு கருவியின் துணை கொண்டு மொத்தமாக எழுப்பப்பட்டவர்கள் போல எழுந்து நின்றனர்.
அக்கணத்தில் அர்ஜுனன் கோபமும், நாணமும் கொண்ட போது, துரியோதனன் மகிழ்ச்சியால் நிறைந்தான்.
கர்ணன், துரோணரின் அனுமதியுடன், பார்த்தன் முன்பு செய்து காட்டிய அனைத்து அதிசயங்களையும் செய்து காட்டினான்.
 துரியோதனன் தனது தம்பிகளுடன் சென்று கர்ணனை மகிழ்ச்சியுடன் கட்டித் தழுவி கொண்டு அவனிடம்,
 "ஓ! பெரும்பலம் வாய்ந்த வீரனே, நீ வரவேற்கப்படுகிறாய். நான் என் நற்பேறின் நிமித்தமாகவே உன்னை அடைந்திருக்கிறேன். ஓ! பண்பட்டவனே, நீ உன் விருப்பப்பட்ட படியே, எனக்கும், எனது அரசுக்கும் ஆணையிடுவாயாக" என்றான்.
அதற்குக் கர்ணன், "நீ இப்படிச் சொன்னதே போதும், நீ கூறியவற்றை அடைந்தவனாகவே என்னை நான் கருதுகிறேன். உனது நட்பையே விரும்புகிறேன். ஓ! தலைவா {துரியோதனா}, அர்ஜுனனுடன் தனிப்போரிடுவதே எனது ஆவல்" என்றான்.
துரியோதனன், "என்னுடன் சேர்ந்து வாழ்வின் நன்மைகளை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பாயாக! உனது நண்பனுக்கு நன்மை செய்வாயாக, ஓ! எதிரிகளை அடக்கி ஒடுக்குபவனே, அனைத்து எதிரிகளின் தலையிலும் உனது பாதத்தை வைப்பாயாக" என்றான்.
 "இதன்பிறகு, அர்ஜுனன், தான் அவமதிக்கப்பட்டதாகக் கருதி, தன் சகோதரர்களுக்கு {துரியோதனாதிகளுக்கு} மத்தியில் மலையென நின்ற கர்ணனிடம்,
"அழைக்கப்படாமல் வருபவர்களும், கேட்கப்படாமல் பேசுபவர்களும் செல்லும் பாதை {உலகம்} உன்னுடையதே. என்னால் கொல்லப்பட்ட பிறகு நீ அங்கேதான் போகப் போகிறாய்" என்றான்.
கர்ணன், "இந்த அரங்கம் அனைவருக்கும் பொதுவானது, ஓ! பல்குனா {அர்ஜுனா}, இஃது உனக்கு மட்டும் சொந்தமானதல்ல. பலத்தில் மேன்மையானவர்களே மன்னர்கள். க்ஷத்திரியர்கள் பலத்தை மட்டுமே மதிப்பார்கள்.
வாய்ச்சண்டை எதற்கு? அது பலவீனமானவர்களின் வழியாகும். ஓ! பாரதா, குருவின் முன்னிலையில் நான் இன்று உனது தலையைக் கொய்யும் வரை உனது கணைகளால் என்னிடம் பேசுவாயாக" என்றான்".
"சகோதரர்களால் விரைவாகத் தழுவி அனுப்பப்பட்டவனும், எதிரிகளின் நகரங்களை அடக்குபவனுமான பார்த்தன் {அர்ஜுனன்}, துரோணரின் அனுமதியுடன் போருக்கு முன்னேறினான்.
மறுபுறத்தில், துரியோதனனாலும், அவனது சகோதரர்களாலும் தழுவப்பட்ட கர்ணன், தனது வில்லையும் கணைகளையும் எடுத்துக் கொண்டு போருக்குத் தயாராக நின்றான்.
 அப்போது, மின்னலுடன் கூடிய மேகங்களால் வானம் மூடப்பட்டது. இந்திரனின் வண்ணமயமான வில் {இந்திர தனுசு, வானவில்}, பிரகாசமான ஒளிக் கதிர்களைப் பொழிந்தது. அப்போது வரிசையாகச் சிறகு விரித்துப் பறந்து சென்ற வெண்ணாரைகளைப் பார்த்து, வானத்தை மறைத்துக் கொண்டிருந்த மேகங்கள் சிரிப்பது போல் இருந்தது
இந்திரன், தன் மகன் மீது கொண்டிருந்த அன்பினால் அந்த அரங்கத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். சூரியனும் மேகங்களைக் கலைத்துவிட்டுத் தனது வாரிசையே பார்த்துக் கொண்டிருந்தான்.
பல்குனன் மேகங்களின் ஆழத்தில் {உள்ளே} மறைந்திருந்தான். கர்ணன் சூரியக் கதிர்களால் சூழப்பட்டுப் பார்வையில் தெரிந்தான்.
திருதராஷ்டிரனின் மகன் {துரியோதனன்} கர்ணனுக்கு அருகிலேயே நின்றிருந்தான். துரோணர், கிருபர் மற்றும் பீஷ்மர் ஆகியோர் பார்த்தனுக்கு அருகில் நின்றனர்.
அங்கே கூடியிருந்த கூட்டம் இரு பிரிவுகளாகப் பிரிந்திருந்தன. பெண் பார்வையாளர்களும் அப்படியே பிரிந்திருந்தனர். அப்போது, நடக்கும் காரியங்களின் நிலை தெரிந்த குந்திபோஜனின் மகளான {வளர்ப்பு மகளான} குந்தி இதைக் கண்டு மூர்ச்சையடைந்தாள்.
அனைத்துக் கடமைகளிலும் அறிவுடைய விதுரன், பெண் பணியாட்களின் துணையுடன் அங்கே வந்து, அவள் மீது சந்தனத்தையும், நீரையும் தெளித்து மூர்ச்சை தெளிவித்தார்.
சுயநினைவு மீண்ட குந்தி, கவசம் அணிந்த தனது இரு மகன்களையும் கண்டாள். அவளால் செய்யக்கூடியது எதுவுமில்லையாகையால் (அவர்கள் இருவரையும் காக்க வழியில்லாததால்) பயத்தால் பீடிக்கப்பட்டிருந்தாள்.
இரு வீரர்களும் கரங்களில் வில் வைத்திருப்பதைக் கண்டவரும், அனைத்துக் கடமைகளை அறிந்தவரும், நேருக்கு நேராக இருவர் போரிடும் முறைகளையும் நன்கறிந்தவருமான சரத்வானின் மகன் {கிருபர்}, கர்ணனிடம்,
 "குந்தியின் இளைய மகனான இந்தப் பாண்டவன், கௌரவக் குலத்தைச் சார்ந்தவன். அவன் உன்னுடன் தனியாகப் போர் புரிவான்.
ஆனால், ஓ! பெரும்பலம்வாய்ந்த கரம் கொண்டவனே, நீயும் உனது குலத்தைக் கூற வேண்டும். உனது தந்தை, தாய் மற்றும் எந்த அரசு வழியை அலங்கரிப்பவன் நீ என்பது போன்றவற்றைக் கூற வேண்டும்.
இதையெல்லாம் அறிந்த பிறகே, பார்த்தன் {அர்ஜுனன்} உன்னுடன் போரிடுவான், இல்லையென்றால் போரிடமாட்டான். மன்னர்களின் மைந்தர்கள், புகழற்ற குலத்தில் பிறந்த மனிதர்களுடன் நேருக்கு நேர் தனியாகப் போரிட மாட்டார்கள்" என்றார்".
 "இப்படிக் கிருபரால் சொல்லப்பட்டதும், கர்ணனின் முகம், மழைக்காலத்தின், மழைநீரால் தைக்கப்பட்டுக் கசக்கிக் கிழித்தெறியப்பட்ட தாமரை போல் ஆனது.
அப்போது துரியோதனன், "ஓ! குருவே, அரசகுல ரத்தம் கொண்டவர்கள், வீரர்கள் மற்றும் படைகளுக்குத் தலைமையான படைவீரர்கள் ஆகிய மூன்று வகை மனிதர்கள் அரசுரிமை கோரலாம் என்று சாத்திரங்கள் சொல்கின்றன.
பல்குனன் {அர்ஜுனன்} அரசனாக இல்லாத ஒருவனிடம் போர் புரிய விரும்பவில்லை என்றால், நான் கர்ணனை அங்க தேசத்தின் மன்னனாக்குகிறேன்" என்றான்".
 "அந்நொடியிலேயே, தங்க ஆசனத்தில் அமர்த்தப்பட்டு, உலர்ந்த நெல், மலர்கள், நீர், தங்கம் ஆகியவற்றைக் குடங்களில் கொண்டு, மந்திரங்கள் அறிந்த பிராமணர்களால் கர்ணன் அங்க நாட்டு மன்னனாக நிறுவப்பட்டான். அவன் தலைக்கு மேல் அரச குடை பிடிக்கப்பட்டது. அந்தச் சந்தேகமில்லாத வீரனுக்குச் சுற்றி நின்று சாமரம் வீசப்பட்டது.
மகிழ்ச்சி நிறைந்த அந்த மன்னன் {கர்ணன்} கௌரவத் துரியோதனனிடம், "ஓ! ஏகாதிபதிகளில் புலியே, நாட்டைப் பரிசாகக் கொடுக்கும் உனக்கு, அதற்குச் சமமாக நான் என்ன கொடுக்கப்போகிறேன்?
 ஓ! மன்னா, நீ சொல்வது அனைத்தையும் நான் செய்வேன்" என்றான்.
துரியோதனன் கர்ணனிடம், "நான் உனது நட்பையே விரும்புகிறேன்" என்றான்.
அதற்குக் கர்ணன், "அப்படியே ஆகட்டும்" என்றான். அவ்விருவரும் மகிழ்ச்சியால் ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொண்டு பெரு மகிழ்ச்சி கொண்டனர்"
"அதன்பிறகு, மேலாடை நழுவிய நிலையில், வேர்த்து விறுவிறுத்து நடுக்கத்துடன் ஒரு கோலை ஊன்றித் தன்னைத் தாங்கிக் கொண்டு ஓர் அதிரதன் {தேரோட்டி} அந்த அரங்கத்தினுள் வந்தான்.
 அவனைக் கண்டதும், பட்டமேற்பினால் நனைந்திருந்த தலையுடன் இருந்த கர்ணன், தனது வில்லைவிட்டு, மகனுக்குரிய மரியாதையுடன் தலைவணங்கினான் {அவனது பாதங்களில் தன் தலையை வைத்தான்}.
 அந்தத் தேரோட்டி பரபரப்புடன் தனது பாதங்களை ஆடையால் மூடிக் கொண்டு, வெற்றி மகுடம் சூடிய கர்ணனை "மகனே!" என்று அழைத்தான்.
 மேலும் அவன் அன்பின் மிகுதியால் கர்ணனை ஆரத்தழுவிக் கொண்டு, அங்கதேசத்தின் மன்னனாக முடிசூடப்பட்டு நனைந்திருந்த அவன் தலையில், தனது கண்ணீரைப் பனித்துளியாக்கி மேலும் நனைத்தான்.
அந்தத் தேரோட்டியைக் கண்ட பாண்டவ பீமன், கர்ணனை தேரோட்டியின் மகனாகக் கருதி, ஏளனமாக,
"ஓ! தேரோட்டி மகனே, பார்த்தனின் கைகளால் மரணத்தைப் பெறும் தகுதி உனக்கில்லை. உனது குலத்துக்கு ஏற்ற வகையில் சாட்டையை {சவுக்கை} உடனே எடுத்துக் கொள்வாயாக.
ஓ! மனிதர்களில் தாழ்ந்தவனே, வேள்வி நெருப்பினருகில் இருக்கும் நெய்யைப் பெற ஒரு நாய்க்கு எவ்வாறு தகுதியில்லையோ, அவ்வாறே அங்கநாட்டை ஆட்சி செய்ய உனக்கும் தகுதியில்லை" என்றான்.
இப்படிச் சொல்லப்பட்ட கர்ணன், நடுங்கும் உதடுகளுடன், பெருமூச்சுவிட்டுக்கொண்டு, வானிலிருக்கும் பகலவனைக் {சூரியனைக்} கண்டான்.
 தாமரைக்கூட்டத்திற்கு இடையிலிருந்து மதம்பிடித்த யானை எழுவது போலத் தனது சகோதரர்களுக்கு மத்தியில் இருந்து கோபத்துடன் எழுந்த துரியோதனன்,
பயங்கரச் செயல்களைப் புரியும் பீமசேனனிடம், "ஓ! விருகோதரா {பீமா}, இது போன்ற வார்த்தைகளைப் பேசுவது உனக்குத் தகாது.
பலமே க்ஷத்திரியனுக்கு இதயப்பூர்வமான அறமாகும். பிறப்பால் தாழ்மையுற்றிருப்பினும், போர்புரியத் தகுதி வாய்ந்தவன் க்ஷத்திரியனே. தெய்வீக ஆறுகளின் தோற்றுவாயும் {பிறப்பிடமும்}, பெரும் வீரர்களின் மூலமும் {பிறப்பிடமும்}, எப்போதும் அறியப்படுவதில்லை.
 உலகத்தையே சுட்டெரிக்கும் நெருப்பு, நீரிலிருந்தே எழுகிறது. தானவர்களைக் கொல்லும் இடி {வஜ்ரம்} ததீச முனிவரின் எலும்பால் ஆனது.
 சிறப்பு மிகுந்த குஹதேவன் {முருகன்}, பல தேவர்களின் பகுதிகளைக் கொண்டு பிறந்ததால், அவனது மூலம் யாருக்கும் தெரியாது. சிலர் அவனை அக்னியின் மகன் என்றும், சிலர் கிருத்திகையின் மகனென்றும், சிலர் ருத்திரனின் மகன் என்றும், சிலர் கங்கையின் மகனென்றும் சொல்கின்றனர்
க்ஷத்திரியர்களாகப் பிறந்தவர்கள் பிராமணர்களாக ஆனதைப் பற்றி நாம் கேள்விப்படுகிறோம். விஷ்வாமித்திரரும், மற்றவர்களும் (மற்ற க்ஷத்திரியர்களும்) நித்தியமான பிரம்மத்தை அடைந்துள்ளனர்.
 ஆயுதம் தாங்கியவர்களில் முதன்மையான நமது குரு துரோணர் நீர்க்குடத்தில் பிறந்தவர், கோதம {கௌதம} குலத்தில் பிறந்த கிருபர் நாணற்கட்டிலிருந்து உதித்தவர்
பாண்டவர்களே, உங்கள் பிறப்பைக் குறித்தும் நான் அறிவேன். சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் அனைத்து அதிர்ஷ்டக்குறிகளையும் கொண்டு, இயற்கைக் கவசமும், காதுகுண்டலங்களும் கொண்ட (கர்ணனைப் போன்ற) ஒரு புலியை ஒரு பெண்மானால் பெற முடியுமா?
 இந்த இளவரசன், தனது கரத்தின் பலத்தாலும், அவன் செய்யும் அனைத்துச் செயல்களிலும் அவனது ஆணைக்குக் கீழ்ப்படிய நான் ஏற்றிருக்கும் உறுதியாலும், அவன் அங்கதேசத்தை மட்டுமல்ல, முழு உலகத்தின் மனிதர்களையும் ஆளும் தகுதி உடையவன்.
நான் கர்ணனுக்குச் செய்திருக்கும் இந்தக் காரியத்தைப் பொறுக்காத எவரும் இங்கே இருந்தால், அப்படிப்பட்டவன் தனது காலின் உதவியால் தேரில் ஏறி, வில்லை வளைக்கட்டும்" என்றான்".
 "துரியோதனனின் பேச்சை அங்கீகரிப்பது போலப் பார்வையாளர்கள் மத்தியில் குழப்பமான முணுமுணுப்பு எழுந்தது. சரியாக அந்த நேரத்தில் கதிரவனும் மறைந்தான்.
 அப்போது, கர்ணனின் கரங்களைப் பற்றிக் கொண்ட துரியோதனன், எண்ணற்ற விளக்குகளின் வெளிச்சத்தில் அவனை வெளியே அழைத்துச் சென்றான்.
துரோணர், கிருபர், பீஷ்மர் ஆகியோர் புடைசூழப் பாண்டவர்களும் தங்கள் வசிப்பிடத்திற்குத் திரும்பினர்
அங்கிருந்த மக்களில் சிலர் "அர்ஜுனனே வெற்றியாளன்" என்றும், சிலர் கர்ணனே வெற்றியாளன்!" என்றும், சிலர் "துரியோதனனே வெற்றியாளன்!" என்றும் பேசிக்கொண்டு திரும்பினர்.
 கர்ணனிடம் சில மங்கலக்குறிகளைக் கண்ட குந்தி, அவனைத் தனது மகனாக அடையாளம் கண்டுகொண்டாள். அங்கதேசத்தின் அரசுரிமையைத் தன் மகன் அடைந்ததைக் கண்டு, தாய்ப்பாசத்தால் மிகவும் மகிழ்ந்து போனாள்.
 கர்ணனை இவ்வழியில் அடைந்த துரியோதனன், அர்ஜுனனின் ஆயுதத்திறமை மீது கொண்டிருந்த அச்சத்திலிருந்து விடுபட்டான்.
 ஆயுதத் திறமை கொண்ட வீரனான அந்தக் கர்ணன், தனது இனிமையான பேச்சால் துரியோதனனை மனநிறைவு கொள்ளச் செய்தான். அதேவேளையில் யுதிஷ்டிரன், கர்ணனுக்கு நிகரான போராளி இந்த உலகத்திலேயே இல்லை என்று நம்பத் தொடங்கினான்" என்றார் வைசம்பாயனர்
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள் 9789374109