Friday, December 5, 2025

Taking refuge in God

*Q*: [Given to Sri Ramana in the form of a written note]
They say one can obtain everything if one takes refuge in God wholly and solely, and without thought of anything else. 

Does it mean sitting still in one place and contemplating God entirely at all times, discarding all thoughts, including even thoughts about food, which is essential for the sustenance of the body?

Does it mean that one gets ill, one should not think of medicine and treatment, but entrust one's health or sickness exclusively to providence?

In the Bhagavad Gita it says: 'The man who sheds all longing and moves without concern, free from the sense of "I" and "mine", he attains peace' (2:71)

It means the discarding of all desires. Therefore should we devote ourselves exclusively to the contemplation of God, and accept food and water only if they are available by God's grace, without asking for them?

Or does it mean that we should make a little effort?  
Bhagavan, please explain the secret of this saranagati (surrender).

*A*. [After reading the note Sri Ramana addressed everyone in the room.]

*Ananya Saranagati* (complete surrender) means to be without any attachment to thoughts, no doubt, but does it mean to discard even thoughts of food and water which are essential for the sustenance of the physical body?

He asks, 'Should I eat only if I get anything by God's direction, and without my asking for it? Or should I make a little effort?'

All right.
Let us take it that what we have to eat comes of its own accord. But even then, who is to eat? Suppose somebody puts in our mouth, should we not swallow it at least? Is that not an effort? 

He asks, 'If I become sick, should I take medicine or should I keep quiet leaving my health and sickness in the hands of God?'

In the book *Sadhana Panchakam* written by Shankara, it is stated that for treatment of the disease called hunger one should eat food received as alms. But then one must at least go out and beg for it. If all people close their eyes and sit still saying if the food comes we eat, how is the world to get on? Hence one must take things as they come in accordance with one's traditions, but one must be free from the feeling that one is doing them oneself. 

The feeling that I am doing it is the bondage. It is therefore necessary to consider and find out the method whereby such a feeling can be overcome, instead of doubting as to whether medicine should be administered if one is sick or whether food should be taken if one is hungry. Such doubts will continue to come up and will never end. 

Even such doubts as 'May I groan if there is pain? May I inhale air after exhaling?' also occur. Call it Iswara [God] or call it Karma [destiny]; some karta [higher power] will carry on everything in this world according to the development of the mind of each individual. If the responsibility is thrown on the higher power things will go on of their own accord. We walk on this ground. While doing so, do we consider at every stepwhether we should raise one leg after the other or stop at some stage? Isn't the walking done automatically? The same is the case with inhaling and exhaling. No special effort is made to inhale or exhale. The same is the case with this life also. Can we give up anything if want to, or to do anything we please? Quite a number of things are done automatically without our being conscious of it. 

Complete surrender to God means giving up all thoughts and concentrating the mind on him, other thoughts disappear. If the actions of the mind, speech and body are merged with God, all the burdens of our life will be on him.

Pvalamalli aka paarijaatam flower

_*தேவலோக புனித மரம் பவளமல்லியின் மிரள வைக்கும் ரகசியம்!*_

* 🛕🛕🛕பவளமல்லி தெய்வீக மலராகக் கருதப்படுகிறது. தேவலோகத்தில் உள்ள ஐந்து புனிதமான மரங்களில் இதுவும் ஒன்றாகும். இது 'சவுகந்திகா' என்ற ஆபரணத்தைப் போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது. இதன் மற்றொரு பெயர் பாரிஜாதம். இது முன்னிரவில் பூத்து மணம் வீசிய பிறகு உதயத்திற்கு முன்பே மண்ணில் உதிர்ந்து விடும். பொதுவாக, மண்ணில் விழுந்த பூக்களை பூஜைக்குப் பயன்படுத்த மாட்டார்கள். ஆனால், பவளமல்லி இதற்கு விதிவிலக்கு.

மூன்று இலைத் தொகுப்பைக் கொண்ட இதன் இலையில் மும்மூர்த்திகள் உறைந்திருப்பதாக ஐதீகம். மத்தியில் மகாவிஷ்ணுவும், இடதுபுறம் பிரம்மாவும், வலதுபுறம் சிவனும் இருப்பதாக ஐதீகம். இதன் பூக்கள் எட்டு இதழ்களுடன் வெண்மையாகவும் காம்பு பவள நிறத்திலும் இருக்கும்.‌ இதன் கனிகள் உறை அமைப்பில் இருக்கும்‌.

இந்தச் செடியைப் பற்றி வாயு புராணத்தில் ஒரு கதை உள்ளது. பாரிஜாதம் என்ற இளவரசி சூரியனை திருமணம் புரிய விரும்பினாள். ஆனால், சூரியன் இதை ஏற்கவில்லை. அதனால் மனமுடைந்த அவள் தீயில் குதித்தாள். அவள் எரிந்த சாம்பலில் இருந்து பாரிஜாத செடி உருவானது.‌ சூரியன் பாரிஜாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் தன்னை கைவிட்ட சூரியனைப் பார்ப்பதைத் தவிர்த்து இரவில் மட்டுமே பூப்பதாகக் கூறப்படுகிறது.

திருமாலுக்கு உகந்த இந்த மரத்தின் வேரில் ஆஞ்சனேயர் குடியிருப்பதாக நம்பிக்கை. இந்த மரத்தினால் பாமா, ருக்மிணியான கிருஷ்ண பத்னிகளுக்குள் சண்டை மூண்டது. இத்தகைய பவழமல்லியிலிருந்து நம் முன்னோர்கள் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான மருந்துகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இம்மரத்தின் இலை, பட்டை, விதை எல்லாமே மருத்துவ குணம் வாய்ந்தது.‌ இது சிறுநீரகத்தைக் காப்பாற்றக்கூடிய மருத்துவத் தன்மை கொண்டது.‌ நீரிழிவு நோய்க்கும் நல்லது‌.

கால் மூட்டு வலி, இரத்தப்போக்கு, இடுப்பு வலி ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணியாக உள்ளது. பித்தத்தால் ஏற்படும் காய்ச்சலை குணப்படுத்தக்கூடியது. பவளமல்லி வேரை மென்று தின்றால் பல் ஈறுகளில் உருவாகும் வலி நீங்கும்.‌ விதைகளை பௌடராக்கி சாப்பிட சரும நோய்கள் தீரும். இலைச்சாறு குழந்தைகளுக்கு மலமிளக்கியாக உள்ளது. பவளமல்லி விதைப் பொடியை எண்ணெயில் குழைத்துக் தலையில் தடவ வழுக்கை மறைந்து முடி வளரும்.

தமிழகத்தில் திருக்களர் திருத்தலத்தில் உள்ள பாரிஜாதவனேஸ்வரர், மரக்காணத்தில் உள்ள பூமீஸ்வரர், சீர்காழி பிரம்மபுரீஸ்வரர், திருநாரையூர் சித்தநாதீஸ்வரர், திருத்தணிகை திருமால் கோயில் ஆகிய தலங்களில் இது தல விருட்சமாக உள்ளது. தில்லையில் பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாதருக்கும் சிவபெருமான் ஆனந்தத் தாண்டவ தரிசனம் தந்ததை அறிந்த துர்வாசர் தானும் அந்த பாக்கியத்தை பெற நினைத்தார். தேவலோக பாரிஜாத செடியை இங்கு நட்டார்.‌ நாளடைவில் இது பாரிஜாத வனமாகியது. அதன் பிறகு ஒரு சிவலிங்கத்தை பாரிஜாத மரத்தடியில் பிரதிஷ்டை செய்து பக்கத்தில் அம்மனையும் ஸ்தாபித்து தேவதச்சன் மூலமாக கோயில் ஒன்றை எழுப்பியதால் வரலாறு கூறுகிறது.

திருக்களர் திருத்தலத்தில் வழிபாடு செய்பவர்களுக்கு மோட்சம் கிடைக்கும்.‌ கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல இறைவனை வழிபட, தோஷம் நீங்கும். திருவண்ணாமலையில் உள்ள புத்ரகாமேட்டீஸ்வரர் திருத்தலத்தில் பவளமல்லி தல விருட்சமாக வணங்கப்படுகிறது.‌ இத்தலத்தில் குழந்தை இல்லாதவர்க்கு குழந்தைப்பேறு கிட்டும். இம்மரத்தின் காற்று உடல் நலத்தைப் பாதுகாக்கக் கூடியது.


🍁🍁🍁

Thursday, November 20, 2025

32 things in padukA sahasram

முப்பத்திரண்டு (32) அப்படிங்கற எண்ணுக்கு ஸ்ரீவைஷ்ணவத்துல ஒரு ஒசத்தி உண்டு. இந்த 32 விஷயங்கள் தான் ஸ்ரீவைஷ்ணவத்தை தாங்கி பிடிச்சுண்டிருக்க ஒசத்தியான அங்கங்கள்.

ஸ்ரீவைஷ்ணவ தத்வங்கள் 23 மற்றும் 9 கோட்பாடுகள் சேர்ந்தா முப்பத்தி ரெண்டு கூட்டுத் தொகை வரும். அந்த 9 கோட்பாடுகளுள் 3 ஜீவாத்மாக்களைப் பத்தி, 3 பெரிய பிராட்டியைப் பத்தி, 3 பெரிய பெருமாளை பத்தி.

பகவத் கீதையில் இருக்க பதினெட்டு அத்தியாயங்கள், பிரம்ம சூத்திரத்தில் இருக்க நாலு அத்தியாயங்கள் மற்றும் நம்மாழ்வார் திருவாயமொழிலே இருக்க பத்து அத்தியாயங்கள் - ஆக மொத்தம் 32 விஷயங்கள்

நம்மளோட உபநிஷதங்கள் மோக்ஷ வித்யைகள்ன்னு 32 விஷயங்களை சொல்றது

பெருமாள் திருவாராதனத்துல பண்ணக் கூடாத அபச்சாரங்கள்னு 32 விஷயங்கள் சொல்லப்பட்டுருக்கு

நம்மளை கரை சேக்கற விஷயமான பாதுகா சஹஸ்ரம் 32 அத்யாயங்களா பிரிக்கப்ட்டுருக்கு

பாதுகா சஹஸ்ரத்துலே வர்ற ஒவ்வொரு ஸ்லோகமும் பெரிய பெருமாளோட பாதுகையை வர்ணிக்கற அழகை இன்னிக்கெல்லாம் சேவிச்சுண்டு இருக்கலாம். பெருமாளோட திவ்ய திருமேனியின் அழகைப் பத்தி இல்லே, அவனோட சாத்துப்படியை பத்தி இல்லே, அவன் திருமேனிலே ஏள்ளியிருக்க திருவாபரணங்களை பத்தி இல்லே. இதெல்லாத்தையும் விட்டுட்டு நேரே அவரோட திருவடிகளைத் `தாங்கின்றுக்க பாதுகையை அணு அணுவா ரசிக்கற ஒசத்தியான விஷயம் தான் பாதுகா சஹஸ்ரம். பாதுகையே.. நீ இப்பிடி இருக்கியே.. நீ அப்பிடி இருக்கியே... அப்படின்னு ஒவ்வொரு ஸ்லோகமும் அர்த்தம் புரிஞ்சிண்டு சேவிச்சோமானால் மனசை உருக்கும்.

ஸ்ரீ வைஷ்ணவ கோயில்களுக்கு போறோம். அங்கே சடாரி சாதிக்கறது அப்படின்னு ஒரு வழக்கம் இருக்கு. பெருமாள் தாயார் ஆசார்யன் மற்றும் அந்தந்த சந்நிதிகள்ல ஏள்ளியிருக்க எம்பெருமான்களோட திருவடிகளை தலைல சேத்துக்கறதுக்கு பேர் தான் சடாரி சாதிச்சுக்கறது. பெருமாள் சந்நிதிக்கு போகும் போது அந்தப் பரமனோட திருவடிகளை கண்ணாரக் கண்டு 'இந்தத் திருவடிகள் தானே என்னை கரை சேக்கப் போறது' அப்படின்னு மனசார நினைச்சுக்க சொல்றா பெரியவா. நாமெல்லாம் அங்கேர்ந்து தான் வந்தோம். அங்கே தான் போய் சேர போறோம். சேரனும்.

தகுந்த அதிகாரி (ஆசான் - குரு) முகமா ஸ்ரீ பாதுகா சஹஸ்ரத்தை சந்த்தை சொல்லிண்டு பாராயணம் பண்றது அவசியம். பாதுகையை தலைல தாங்கிக்கறவாளைப் பார்த்து தேவர்களும் பயப்படறாளாம் எங்கே தங்களோட பதவியே பறிபோயிடப் போறதோன்னு. தாங்களும் ஓடி வந்து பெருமாளோட பாதுகையை தங்களோட சிரஸுல சேத்துக்கறாளாம்.

பாதுகா சஹஸ்ர ஸ்லோகங்களை சொல்றவாளுக்கு கிடைக்காத நல்ல பலன்களே இல்லேன்னு சொல்லலாம். பணம், பதவி, பட்டம், ஆரோக்கியம், பேர் புகழ், பரமபதம்னு இம்மைலையும் மறுமைலயும் எல்லாத்தயும் அனுக்கிரஹம் பண்ண வல்லது ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம். ராமனோட பாதுகைகளை தன்னோட சிரஸுல சேத்துண்டதுனால தானே பரதனுக்கு உயர்வு உண்டாச்சு.

பெருமாளோட திருவடிகள்ல தான் விஷயமே இருக்கு. அனுமன் சிறிய திருவடி ஸ்ரீ கருடன் பெரிய திருவடிங்கறோம். பெருமாளோட திருவடிகளுக்கு ஆபரணமா இருக்கறதுன்னா பாதுகைகளுக்கு எவ்ளோ சுகூர்த்தம் இருக்கணும். நம்மளோட சிறுமையை மனசார உணர்ந்தோம்னா, அவன் தான் பரமாத்மா அப்படின்னு மனசார புரிஞ்சுதுன்னா, சரணாகதி ஒண்ணு தான் கரை சேர்றதுக்கான வழி அப்படின்னு தெள்ளத் தெளிவா புரிஞ்சுதுன்னா, அவனோட திருவடிகளை விடவே மாட்டோம். அவனோட பாதுகையின் உயர்வை தெளிவா புரிஞ்சிண்டதுனால தான் நம்மளோட பெரியவாள்ளாம் நித்யம் கோவில்களுக்கு போய் பெருமாளை சேவிச்சுட்டு தீர்த்தம் சடாரி வாங்கிண்டு வந்தா. எவ்வளவோ சக்தியை தங்களுக்கு விடாமே சேத்துண்டு இருக்கா.

துரியோதனன் க்ருஷ்ணனோட தலைமாட்டுல நின்னதுனால தான் அந்தப் பரமனோட திருஷ்டி தன் மேல படாம தோத்துப் போனான். அவனோட திருவடிகளே ஒசந்தது அப்படின்னு விஷயம் தெரிஞ்சு திருவடிகள் பக்கமா உக்காந்துண்ட அர்ஜுனனனுக்கு ஜெயம் உண்டாச்சு. அவன் தலைக்கு மேலே யாராலயாவது ஏறி உட்காரத் தான் முடியுமா?

ஸ்ரீ ஆண்டாள் சேவிச்சதைப் போல "செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ! திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல் அங்கனிரண்டுங் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேல்"

இந்த விஷயமறிஞ்சு தான் எப்பவும் ப்ரஹ்லாதாழ்வானும் தன்னோட கையை கூப்பிண்டு அந்த ந்ருஸிம்ஹனோட காலுங் கீழயே நின்னான். தன்னோட திருஷ்டி (பார்வை) படற இடத்துலே இருக்கறவாளை அவன் கண்கொண்டு பாக்காம இருப்பதில்லை. கடாக்ஷிக்காம விடுவதில்லை. அவனுடைய கடாக்ஷம் கெடைச்சுடுத்தானால் வேறென்ன வேணும்? வேண்டியதெல்லாம் தான் இருக்குமே. அவன் மட்டுமே வேணும்னு நெனைச்ச ப்ரஹ்லாதனுக்கு எல்லாம் கெடைச்சுதே. குடுத்தானே அந்தப் பரமன். கேட்டு கேட்டு குடுத்தானே அந்த ந்ருஸிம்ஹன். காருண்யன். பக்திப் பிரியன். அநாத ரக்ஷகன். ந்ருஸிம்ஹா.. ந்ருஸிம்ஹா.. உன் தாள் கண்டு கொண்டு என் சிரம் மேல் சூடிக் கொண்டேன்... சரணாகதோஸ்மி.tks Latha bhashyam

Difficulties in last moment

அந்திமக் காலத்தில் நாம் படும் சிரமங்கள்

முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார்

எருதைப் போலவே நாமும் பிறர்க்கென உழைத்து ஓடாய்த் தேய்ந்து சிரமப்படுகிரோம்.அந்திமக் காலத்தில் எழுந்திருக்க முடியாமல் போய்விடுகிறது.

அப்போது என்ன சிரமப்படுகிறோம் என்று சாஸ்திரம் சொல்கிறது பாருங்கள்.

வயதான காலம். உட்கார முடியவில்லை. எழுந்திருக்க முடியவில்லை. மூச்சு வாங்குகிறது. கண் தெரியவில்லை. இன்னொருத்தருடைய தயவிலே எப்போதும் இருக்க வேண்டியதாயிருக்கிறது. அந்த மாதிரி ஒரு நிலை ஏற்பட்டுப் போய்விடுகிறது. ஆதி சங்கர பகவத் பாதாள் சொல்கிறார்.

'எல்லாம் இவரை விட்டுப் போய்விடுகிறது. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் போக மாட்டேன் என்கிறது: ஆசை!"

அந்த அந்திமக் காலத்திலேயும் சிரமப்படுத்துகிறதே! உடல் கூனி, கேள்விக்குறி போல் போய்விடும் – அந்த மாதிரி ஒரு நிலை ஏற்படுகிறது.

இதுவே கஷ்டம் தான். இன்னொரு கஷ்டம் பாருங்கள்.

அந்திமக் காலத்திலே பத்தினி கூட இருக்க வேண்டும். ஆனால் பத்னியையும் இழந்து விட்டவர் கதி என்ன! அது இன்னமும் கஷ்டமான நிலை!

கல்யாணத்திலே பாணிகிரஹணத்திலே அதற்கு முன்னால் வருகிற சப்தபதி மந்திரத்தில், ' இந்த இளமையிலே உன்னைக் கை பிடித்தேன். பிடித்த இந்தக் கையை, எழுந்திருக்க முடியாமல் தொண்டு கிழம் ஆனாலும் நான் விடமாட்டேன். ஜீவிதாந்தம் நீயும் நானும் அப்படியே இருக்க வேண்டும்' என்று அமைந்திருக்கிறது.

ஆகவே அந்திமக் காலத்தில் பத்னியை இழந்து தவிப்பது இருக்கிறதே… அந்தச் சிரமத்தை சொல்லி முடியாது!

என்ன சிரமத்தைப் படுவார் அவர்?

அடுத்து அதைச் சொல்கிறது சாஸ்திரம்:

எல்லாவற்றுக்கும் பிள்ளைகளிடத்திலேயே கேட்க வேண்டும்! ஒரு தடவை கேட்டால் கொடுப்பார்கள். மறுதடவை கேட்டால் என்ன நினைப்பார்களோ என்று தயக்கம் வரும். பத்னியுமில்லை. உடம்பும் ஒத்துழைக்க மாட்டேனென்கிறது. மருமகள் ஏசுகிறாள். அந்த நச்சுப் பேச்சுக்களைத் தாங்கவே முடியவில்லை.

இப்படி விவரித்துக் கொண்டே வருகிற சாஸ்திரம் கடைசியாய்ச் சொல்கிறது.

இப்படி ஜீவித்துக் கொண்டேயிருப்பதை விட 'போய் சேர்ந்து விடுவதே நல்லது!'

அந்த மாதிரி ஒரு நிலை!

இப்படிப்பட்ட நிலையை அடையலாமா? அந்த மாதிரி நிலையை அடைந்தாலாவது விவேகம் வரவேண்டாமா?

அப்போதாவது கிருஷ்ணா, ராமா, கோவிந்தா என்று சொல்லக் கூடாதா?

சொல்லமாட்டார்! அந்த சமயத்திலேயும் விவேகம் வருவதில்லை. சாமான்ய விஷயத்தையே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகையினாலே அந்திமக் காலம் என்பது ரொம்ப சிரமம்.

அதையெல்லாம் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த மாதிரி ஒரு காலம் வரும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த மாதிரி நிலையில் பகவான் நம்மை வைக்கக் கூடாது என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அதற்கு நாம் என்ன பண்ண வேண்டும் என்பதையும் இப்போதே நிர்ணயம் பண்ணிக் கொள்ள வேண்டும்.

நமது நரம்புகளெல்லாம் நன்கு முறுக்கேறி மிடுக்குடன் இருக்கையிலேயே நிர்ணயம் பண்ணிக் கொள்ள வேண்டும்.

எல்லாம் போன பிற்பாடு என்ன பண்ணுவது? ஒன்றும் பண்ண முடியாது!

அப்போதைக்கிப்போதே சொல்லி வைக்க வேண்டும்.

'பிறர்க்கே உழைத்து' என்பதில் இன்னொரு அர்த்தமும் இருக்கிறது. 'பிறர்' என்பது பந்து மித்ரர்களைக் குறிக்கிறது போலவே 'தான்' அல்லாத தன் 'சரீரத்துக்கே' என்றும் குறிக்கும்.

இந்த சரீரம் நாமல்லவே! ஆத்மா தானே நாம். சரீரம் வெறும் உபகரணம். நாம் உயர்ந்து மேலே போய் உத்தம கதியை அடைவதற்காக இந்த கர்ண களேபரங்களையெல்லாம் பரமாத்மா நமக்குக் கொடுத்திருக்கிறான். இதைப் போய் நாம் சாச்வதம் என்று நினைக்கலாமா?

மாமிசத்தாலும் ரத்தத்தாலும் பிசைந்து கடையப்பட்ட சுவர் இது! இது நிற்பதற்கு உள்ளுக்குள்ளே ஸ்தம்பங்கள் எலும்புக்கூடு! அதற்கு மேல் கூரை வேயப்பட்டிருக்கிறது – ரோமங்களைக் கொண்டு! அதற்கப்புறம் வாஸ்து சாஸ்திர ரீதியாக நவத்வாரங்கள்!

பெரியாழ்வார் – இதை – உடலைப் பெரிய பட்டிணம் என்று சொல்கிறார்!

இந்த நகரத்துக்கு ஒன்பது வாயிற்படிகள் பரமாத்மா வைத்திருக்கிறான்.

இந்த வீட்டை நமக்குக் கட்டிக் கொடுத்து க்ஷேத்ரஜ்ஞன் என்று சொல்லக் கூடிய ஆத்மாவைக் கொண்டு வந்து இந்த வீட்டிலே உட்கார வைக்கிறான். க்ருஹப் பிரவேச சுபமுகூர்த்தம்!

வந்து உள்ளே உட்கார்ந்ததும் இது ஒரு தடவை உடலைப் பார்க்கிறது. பார்த்தவுடனே 'இதுதான் சாச்வதம் – இதுதான் நம்மை ரக்ஷிக்கிறது' என்று இந்த சரீரத்துக்கே உழைக்கிறது.

ஒருநாள், ஒவ்வொன்றாகக் குறைய ஆரம்பிக்கிறது. சரீரத்திலே இருப்பது ஒவ்வொன்றும் சொன்ன வார்த்தை கேட்காமல் வேறான திக்கிலே போகவே, இது நமக்கு சாச்வதமில்லை என்று தெரிந்து போகிறது. அப்போது 'வந்து திருவடியை அடைந்தேன்' என்று விழுகிறான்!

பகவானுடைய காருண்யத்தைப் பாருங்கள். நன்றாயிருக்கும் போது வரவில்லை. எல்லாம் போய்விட்ட பிறகு இப்போது 'உன்னிடத்திலே வந்தேன்' என்று சொன்னால் அவன் 'இப்போதாவது வந்தாயே' என்று ஏற்றுக் கொள்கிறான்.

'ஏன் முந்தாநாள் வரவில்லை; ஏன் நேற்று வரவில்லை; ஏன் முன்பே வரவில்லை? என்று அவன் கேட்கமாட்டான். வந்ததைக் கொண்டாடி அனுக்ரஹம் பண்ணுகிறான்!

இந்தக் குழந்தை நம்மிடத்திலே வந்ததே என்று அனுக்கிரஹம் பண்ணுகிறான்.

அதனாலே நினைத்து நினைத்து, நினைத்து நினைத்து வருந்த வேண்டும். பச்சாதாபப்படவேண்டும். கண்ணீர் விட்டுக் கதற வேண்டும்.

கண்களிலிருந்து விழக்கூடிய நீரைக் கைகளால் இரைத்து, வாரி வாரி விட வேண்டும்.

அது தான் நிர்வேதம்!

அந்த நிர்வேதம் யாருக்கு வரும்?

விவேகமுடையவனுக்குத்தான் வரும். 

விவேகமுடையவனுக்குத்தான் நிர்வேதம் வருமேயொழிய அவிவேகிகளுக்கு வருமா!

ஆகவே விவேகம் என்கிற முதல் படிக்கட்டை ஏறினால் தான் நிர்வேதம் என்கிற இரண்டாவது படிக்கட்டை ஏற முடியும்.

விவேகம் வரவில்லையானால் நிர்வேதம் வராது.

Wednesday, November 19, 2025

Kannappa nayanar - Story in tamil

ஈடற்ற பக்தி -- நங்கநல்லூர் J K SIVAN
பாரத தேசத்தில் உதித்த எண்ணற்ற பக்தர்களில் சிவபக்தர்கள் பலர். அதிலும் பெரிய புராணத்தில் அறுபத்து மூன்று பக்தர்களை, நாயன்மார்கள் எள்று பெயரிட்டு பாடல்களாக சேக்கிழார் பெருமான் அளித்திருக்கிறார். அதில் கண்ணப்பர் கதை ரொம்ப பிரபலம். எல்லோரும் அறிந்த கதை என்றாலும் இன்று அதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்.
பக்தர்கள் அனைவரும் பிராமணர்கள் அல்ல. அப்படி அவசியமும் இல்லை. யார் மனதில் பக்தி மிகுந்து இருக்கிறதோ அவர் இறைவனோடு ஒட்டி உறவாடுபவர். ஆழ்வார்கள் நாயன்மார்களில் அநேகர் பிராமணர்கள் இல்லை. பல குலங்களில் பிறந்து தெய்வீக தன்மை பெற்று நம்மால் வழிபடப்படும் மஹான்கள். உன்னதர்கள் அவர்கள், நமது புராணங்களில் பக்ஷிகள், விலங்குகள் கூட பக்தியால் மேம்பட்டு வழிபடப் படுவன. ஜடாயு, ஹனுமான், ஜாம்பவான், கருடன், நந்தி, மயில், யானை,சிம்மம், கஜேந்திரன்,ஆதிசேஷன் எல்லாமே மனிதர்கள் இல்லையே,
பொதப்பி என்ற ஆந்திர தேசத்தில் ஒரு ஊர். வேடுவர்கள் குடும்பங்கள் வாழ்ந்த இடம். அவர்களுக்கு நாகன் என்ற வேடன் தலைவன். அவன் மனைவி தத்தை. இருவருமே முருக பக்தர்கள். முருகனின் வள்ளியே வேடுவ குலத்தவள் தானே. முருகன் அருளால் நாகன் மனைவி தத்தை ஒரு ஆண் குழந்தையைப் பெற்று திடகாத்திரமான அந்த குண்டு பையனுக்கு 'திண்ணன்'' என்று பெயர். பதினாறு வயது வாலிபன் ஆகி அப்பா நாகனுக்கு பதிலாக வேடுவர் குல தலைவனானான். நண்பர்களோடு காட்டுக்குச் சென்று வேட்டையாடுவது வழக்கம்.
ஒருநாள் , வேட்டை நாய்கள் சகிதம் ஆயுதங்களோடு புறப்பட்ட திண்ணன் காட்டை வளைத்து அட்டகாகசமாக உள்ளே புகுந்து மிருகங்க ளை துரத்தினான். கரடி, புலி, மான் என பலவற்றை உயிரோடும் பிணமாகவும் பிடித்தான். அவன் கண்ணில் அப்போது ஒரு கொழுத்த காட்டுப் பன்றி தென்பட்டது. திண்ணன் அதைத் துரத்த அவனை அந்த மாய பன்றி எங்கெங்கோ இழுத்துக் கொண்டு ஓடியது. நாணன், காடன் இருவரும் களைத்துப் போய் மரநிழலில் அமர்ந்தார்கள். திண்ணன் களைப்பை பொருட்படுத்தாமல் மலையில் ஓடினான். பன்றி பிடிபட்டது. கொன்றான். அதை சுட்டு உண்ண தயாராயினர். ''தண்ணீர் வேண்டுமே குடிக்க. ரொம்ப தாகமாக இருக்கிறதே'' என்றான் திண்ணன்.
நாணன் மலை அருகே நின்ற ஒரு உயரமான தேக்குமரத்தை காட்டினான். ''திண்ணா , அந்த மரம் பக்கத்தில் ஒரு ஆறு ஓடுகிறது. அதில் நல்ல குடிநீர் கிடைக்கும். பன்றியைத் தூக்கிக்கொண்டு ஆற்றை நோக்கி நடந்தார்கள்.
எதிரே திருக்காளத்தி மலை திண்ணன் கண்ணில் பட்டது..
''நண்பர்களே அதோ பார்த்தீர்களா ஒரு மலை. அதன் மீது ஏதோ ஒரு கோவில் தெரிகிறதே வாருங்கள் அங்கே செல்வோம்.'' என்றான் திண்ணன்
''திண்ணா,அங்கே குடுமி நாதர் என்று சிவலிங்கம் இருக்கிறது. அழகான சின்ன கோவில். வா போகலாம். கும்பிடலாம்'' என்றான் நாணன். மலையை நெருங்கி மேலே செல்வதில் ஏனோ ஒரு உற்சாகம், மனதில் இனம்புரியாத ஒரு மகிழ்ச்சி திண்ணனுக்கு ஏற்பட்டது. ஏன்? அது தான் தெய்வ சங்கல்பம்.
பொன்முகலி ஆறு வந்தது. ''காடா, நீ இங்கே தீ மூட்டு பன்றியை சுடு. அதற்குள் நான் மலை மேல் நாணனோடு சென்று குடுமி தேவரை பார்த்து கும்பிட்டு விட்டு வருகிறேன்'' என்றான் திண்ணன்.
அப்போது உச்சி காலம். தேவர்கள் வந்து காளத்தீஸ்வரனை வழிபடும் நேரம். அவர்கள் துந்துபி போன்ற தேவ வாத்தியங் கள் முழக்கிய சப்தம் திண்ணன் காதில் மட்டும் ஒலித்தது. ஒரு வேலை திண்ணன் முற்பிறப்பில் அர்ஜுனன் என்று காளஹஸ்தி புராணம் சொல்கிறது.
''நாணா , அது என்ன சப்தம்?' என கேட்டான் திண்ணன்.'
நாணன் காதில் சப்தம் எதுவும் விழவில்லை. ''ஏதோ காட்டில் மரங்கள், மிருகங்கள்எழுப்பும் ஓசையை நீ கேட்டிருப்பாய் திண்ணா''
திண்ணன் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத குதூகலம். திண்ணன் மலையேறினான். மலையில் ஒரு கோவில். அதனுள் தீபம் எரிகிறது. பெரிய சிவலிங்கம். காற்றில் தீபம் அசைகிறது. கருவறைக்கு கதவே இல்லை. காற்றின் அசைவில் மணி டாண் டாண் என ஒலித்தது திண்ணன் செவிக்கு இன்பமாக '' வா திண்ணா , உனக்காக தான் காத்திருக்கிறேன்'' என்று சொல்வது போல் மனதில் அடிநாதமாக கேட்டது. தாயைக் கண்ட சேய் போல வேகமாக ஓடி அப்படியே குடுமித்தேவரை ஆலிங்கனம் செய்தான் திண்ணன்.
குடுமித் தேவர் தலையில், சிவலிங்கத்தில் பச்சிலை பூக்கள் தெரிந்தது. ''அடடா நான் இதுவெல்லாம் கொண்டுவர வேண்டும்'' என்று அறியவில்லையே?
நாணன் சொன்னான். ''திண்ணா நான் உன் தந்தையோடு ஒரு முறை முன்பு இங்கே வந்திருக்கிறேன். அப்போது ஒரு பார்ப்பனர் இங்கே வந்து இந்த சிவலிங்கத்துக்கு தண்ணீர் நிறைய தலையில் கொட்டினார். பிறகு இலைகளை போட்டார், பூக்களை பறித்து வந்து மேலே போட்டார். அது இந்த சாமிக்கு பிடிக்கும் போல் இருக்கிறது. இவரைக் கும்பிட வேண்டுமென் றால் நாமும் நாமும் அதெல்லாம் செய்யவேண்டுமடா?'''என்றான்
விட்டகுறை தொட்டகுறையோ? அன்று முதல் திண்ணன் கால்கள் தானாக அடிக்கடி காளத்தி மலைமேல் அவனை இழுத்து சென்றன. வாயில் நீர்சுமந்து வந்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வான். தலையில் நிறைய புத்தம் புது மலர்களை சுமந்து வருவான். இலைகளால் அவனுக்குத் தெரிந்த அர்ச்சனை செய்வான். சிவனுக்கு பசிக்குமே என்று தான் வழக்கமாக உண்ணும் பக்குவப்பட்ட பன்றி இறைச்சியை சிவனுக்கு மனமுவந்து படைப்பான்.
இதுவரை குடுமி நாதனை தரிசிக்க திண்ணன் வரும் நேரமும் வழக்கமாக பூஜை பண்ணும் சிவாச்சாரியார் வரும் நேரமும் வெவ்வேறாக இருந்தது. தனித்தனியாக தான் குடுமி நாதருக்கு அவரவர் வழியில் வழிபாடு நடந்தது.
முதல் முதலாக திண்ணன் இவ்வாறு காளத்திநாதரை தனது வழியில் பூஜித்து ''மாமிச நைவேத்தியம்'' அளித்த அன்று மாலை காளத்தி நாதரை அர்ச்சித்து பூஜை செய்யும் சிவகோசரியார் எனும் சிவாச்சாரியார் பூஜா திரவியங்களுடன் வந்தார். சாஸ்த்ர பிரகாரம் சிவலிங்கத்திற்கு ஆகமவிதிப்படி பசும் நெய்பூசி, மணமிகு பூக்களோடு வில்வம் தூவி, தூயாடைக் கட்டி, எங்கும் மணங்கமழும் வண்ணம் வாசனை திரவியமிட்டு, நேரந் தவறாமற் பூசை செய்பவராக சிவனுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஆகவே அன்று மாலை வந்த சிவாச்சாரியார்க்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது
வயதான காலத்திலும் சிவாச்சாரியார் கொம்பு ஊன்றிக் கொண்டு வந்து மூச்சிரைக்க மலை ஏறி தான் கொண்டுவந்த நைவேத்திய பொருள்கள், அபிஷேக சாமான்கள், துவைத்து உலர்த்திய வஸ்திரம், எல்லாம் தலையில் மூட்டையாக சுமந்து காளத்தி நாதனை அடைவார்.
இன்று அவர் மனம் கொதித்தது. ''யாரோ ஒரு மஹா பாவி இப்படி காளத்தீஸ்வரன் முன்பு இறைச்சி, எலும்பு எல்லாம் கொண்டு வந்து போட்டு இந்த பகவான் சந்நிதியை புனிதமற்றதாக செயகிறானே, ஏன் எதற்காக? என்ன கோவம் இந்த சிவன் மேல்? இதையெல்லாம் நீ எப்படி சகித்துக்கொண்டு இருக்கிறாய் சிவனே? என்று வருந்தினார் . மூன்று
கால பூசை வில்வத்தோடு பூசை செய்யவேண்டியவன் இந்த ரத்த வாடை நெடி அடிக்கும் மாமிசங்களை அப்புறப்படுத்தும் துர்பாக்கியம் எனக்கு இந்த வயதில் ஏன்? ஏதோ நான் எப்போதோ செய்த பாவத்திற்கு தண்டனையா பரமசிவா? என்னாலேயே தாங்கமுடியவில்லையே, நீ எப்படி இதை பொறுத்துக் கொண்டி ருக்கிறாய்? இங்கே வேடுவர்கள் நடமாட்டம் அதிகம். அவர்களில் யாரோ ஒரு துஷ்டன் தான் இதைச் செய்திருக்கிறான். அவனுக்கு தக்க தண்டனை கொடு ஈஸ்வரா .''
திண்ணனுக்கோ சிவன் மேல் ஒவ்வொரு கணமும் அன்பும் பாசமும் பக்தியாக பரிமளித்தது. ''இந்த காட்டில் தனித்து மலைமேல் இருக்கிறானே இந்த பரமசிவன் இவனுக்கு நானும் குளித்து விட்டு சாப்பிட ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டாமா?. ஒரு கையில் வில் அம்புகள், இன்னொரு கையில் நன்றாக நெருப்பில் வாட்டி சமைத்த பன்றி மாமிசம். அதை அங்கங்கு கொஞ்சம் கடித்து சுவைத்து நன்றாக வெந்து இனிக்கும் பாகத்தை சிவனுக்கு என் மனமுவந்து ஆகாரமாக கொடுப்பேன். அவனைக் குளிப்பாட்ட நீர் எப்படி எதில் கொண்டுவருவேன்? ஆஹா,அதற்கு தான் வாய் இருக்கிறதே. நிறைய அதில் நீர் நிரப்பிக் கொண்டு வருகிறேன்.'' வாயில் இருக்கும் நீரை காளத்திநாதன் மேல் உமிழ்ந்து தான் கொண்டுவந்த பச்சிலைகளை பூக்களை சிவலிங்கத்தின் மேல் போட்டு, உணவாக தான் கொண்டுவந்த இறைச்சியை சிவ லிங்கத்தின் முன் இலை மேல் வைத்து உபசரிப்பான். பேசுவான். பிறகு செல்வான். இப்படி தான் அவன் பூஜை நடந்து கொண்டிருந்தது.
திண்ணன் பாபியல்ல. துஷ்ட வேடன் அல்ல. உண்மையான அன்பும் பக்தியும் கொண்டவன். அவனுக்கு தெரிந்த வகையில் மனமுவந்து சிவனுக்கு தனது வழிப்பாட்டை செய்தவன். சிவாச்சார்யாருக்கு திண்ணனின் தூய பக்தியை தெரிவிக்க வேண்டாமா? அலகிலா விளையாட்டுடையவர் பரமேஸ்வரன் ஒரு திட்டம் வகுத்தார். .
''சிவாச்சாரியாரே, உமது வருத்தம் அர்த்தமற்றது. எனக்கு இப்படி விசேஷமாக பூஜை செய்பவன் இந்த காட்டை சேர்ந்த வேடர் குல தலைவன் நாகன் மகன் திண்ணன். இப்போதைய வேடர் தலைவன். நாளை சாயங்காலம் இங்கே அவன் வரும்போது அவன் கண்ணில் படாமல் ஒளிந்திருந்து என்ன நடக்கிறது என பாருங்கள். புரியும்'' என்று அவர் கனவில் காளத்தீஸ்வரர் உரைத்தார். சிவாச்சாரியார் திடுக்கிட்டு எழுந்தார். என்ன கனவு இது?. ஈஸ்வரன் கட்டளைப்படி செய்கிறேன் '' என்று மறுநாள் சீக்கிரமே போய் மலைமேல் காளத்தி நாதன் கோவில் அருகே ஒரு மரத்தின் பின் ஒளிந்து கொண்டு கவனித்தார். நெஞ்சு திக் திக் என்று அடித்துக்கொண்டது. என்ன நடக்கப்போகிறது? பகவானே!
அன்று காலையிலிருந்தே திண்ணனுக்கு ஏதோ நெஞ்சில் இனம் புரியாத ஒரு சஞ்சலம் உருத்தியது. சிவனுக்கு இன்று நல்ல உணவாகவே அளிப்போம் என்று சில புதிய மிருகங்களை கொன்று நெருப்பில் வாட்டி காட்டுத்தேன் நிறைய அதன் மேல் ஊற்றி, சிறிது சுவை பார்த்து. ''நன்றாக இருக்கிறது. இது சிறந்தது என்று தேர்ந்தெடுத்து ஒரு இலையில் சுற்றி எடுத்துக் கொண்டான். வாய் நிறைய நீர் வழக்கம்போல் நிரப்பிக்கொண்டு மலையேறினான். இதுவரை ஐந்து பகல், ஐந்து இரவு சிவனோடு தொடர்ந்த பாசமாக இப்படி அபிஷேகம் அர்ச்சனை நைவேத்யம் நீடித்தது.
காளத்தீஸ்வரர் முன் நின்ற திண்ணன் வாயினில் இருந்து நீர் உமிழ்ந்து சிவனை அபிஷேகித்தான். இலைகள் மலர்களை லிங்கத்தின் மேல் போட்டான். அப்போது தான் ஒரு அதிர்ச்சி. ஐயோ என்ன இது என் சிவனின் இடது ஒரு கண்ணிலிருந்து ரத்தம் பீறிட்டது 'தெய்வமே, என்ன ஆயிற்று உனக்கு? ஏன் ஒரு கண்ணில் ரத்தம் வடிகிறது? அவசரமாக தனது இடையில் உடுத்திய துணியை கிழித்து துடைத்தும் மேலும் மேலும் கண்ணிலிருந்து ஆறாக ரத்தம் பெருகியது. திண்ணனுக்கு தலை சுற்றியது. கை நடுங்கியது. கொண்டுவந்த இறைச்சி சிதறியது. துடித்தான்.
''என்ன செய்வேன்? துடைக்க துடைக்க ரத்தம் பெருகியதே தவிர நிற்கவில்லை. தனக்கு தெரிந்த பச்சிலை மருத்துவம் செய்தான். ரத்தப்பெருக்கு நிற்கவில்லையே.
திடீரென்று திண்ணனுக்கு ஒரு யோசனை. சிவனுக்கு இனி கண் குணமாகாது. எனக்கு தான் ரெண்டு கண் இருக்கிறதே. ஒன்றை கொடுத்தால் என்ன? மறுகணமே துளியும் தயங்காமல் கூரான அம்பினால் தனது இடது கண்ணை அகழ்ந்து ரத்தம் பெருகும் சிவனின் கண்ணில் மேல் வைத்து அப்பினான். அப்பப்பா சிவனின் கண்ணில் பெருகிய ரத்தம் நின்று விட்டது. திண்ணனின் கண் அங்கே சரியாக பொருந்தியது.
மிகவும் சந்தோஷம் திண்ணனுக்கு. ஆனால் அவன் அது நீடிக்கவில்லை. சிவனின் மறு கண்ணில் இப்போது ரத்தம் பீரிடத் துவங்கியது. ''அடாடா இது என்ன கஷ்டம்? சிவனே உனது துன்பத்தைப் போக்கினேன் என்றல்லவா சந்தோஷப் பட்டேன். இப்போது உன் இடக்கண்ணில் அதே துன்பம் நேரிட்டதே. பரவாயில்லை எனக்கு தான் வைத்தியம் தெரியுமே. என் னுடைய ரெண்டாவது கண்ணும் உனக்கு தான். அது சரி, எனக்கு இப்போது இருப்பதோ ஒரே ஒரு கண். அதையும் எடுத்து விட்டால் எப்படி உன்னை பார்ப்பேன்? அதை எடுத்து விட்டால் எப்படி குருடனாக சரியாக உனது இடது கண்ணில் அதை பொருத்துவேன். அட இது ஒரு பெரிய பிரச்னையா? உன் இடது கண் இருக்கும் இடம் தெரியவேண்டும் அவ்வளவு தானே. என் கால் எதற்கு இருக்கிறது?. இதற்கு உபயோகப்படட்டுமே. தனது ஒரு காலை சிவன் இடக்கண் மேல் அடையாளம் தெரிய வைத்துக்கொண்டு அம்பால் தனது இரண்டாவது கண்ணையும் அகழ ஆரம்பித்தான் திண்ணன்.
''திண்ணா நிறுத்து உன் செயலை ''
சிவனின் கட்டளை திண்ணன் காதில் கேட்டது. அதை லக்ஷியம் பண்ணவில்லை திண்ணன். அம்பால் தனது கண்ணை அகழ்வதில் கவனம்.
''நிறுத்தடா திண்ணா ''.... மூன்று முறை சிவன் கட்டளை அவனை கண்ணைத் தோண்டாமல் தடுத்து நிறுத்தியது. காளத்தீஸ்வரர் திண்ணன் முன் ப்ரத்யக்ஷமானார். சிவன் அருளால் திண்ணன் இழந்த கண்ணைப் பெற்றான்.
திண்ணன் மஹேஸ்வரனுக்கு தன் கண்களைக் கொடுக்க துணிந்ததால் உலகுக்கு இனி என்றும் அவன் கண்ணப்பன். அறுபத்து நாயன்மாரில் ஒருவராக சிவன் ஆலயங்கள் அனைத்திலும் பக்தர்களால் கண்ணப்ப நாயனார் வணங்கப் படுகிறார். இது சிவாச்சாரியார் கண் முன் நடந்த அதிசயம்.
ஆதிசங்கரர் சிவானந்தலஹரி யில் 63 வது சுலோகத்தில் பகவான் மேல் பக்தன் கொள்ளும் பக்தி பற்றுக்கு உதாரணமாக கண்ணப்ப நாயனார் பற்றி கூறுகிறார்.
मार्गावर्तितपादुका पशुपतेरङ्गस्य कूर्चायते, गण्डूषाम्बुनिषेचनं पुररिपोर्दिव्याभिषेकायते ।किञ्चिद्भक्षितमांसशेषकबलं नव्योपहारायते भक्तिः किं न करोत्यहो वनचरो भक्तावतंसायते ॥ ६३॥
Marga varthitha paduka pasupathe rangasya koorchayuthe, Gandoo shampoo nishechanam pura ripo divyabhishekaa yathe, Kinchid bhakshitha maams sesha kabalam navyopaharayathe, Bhakthi kim karoth yaho vana charo bhaktha vatam sayathe.
வழி மறித்து கொள்ளையடிக்கும் சண்டாளர்கள் கூட பசுபதீஸ்வரனின் சிரத்தை அலங்கரிக்கும் கூர்ச்சம், வில்வ தளமாகிறார்கள். அவர்கள் வாயால் உமிழும் எச்சில் ஜலம் கூட பரமேஸ்வரா உனக்கு கங்காபிஷேக தீர்த்தமாகிறது. த்ரிபுராந்தகா, உனக்கு அவர்கள் அளிக்கும் மாமிச துண்டு கூட நைவேத்தியமாகிறது. மனதில் நீ மட்டுமே குடி கொண்ட வேடநும் கூட உன் பக்தர்களில் ராஜாவாக முதன்மை ஸ்தானம் பெறுவது ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். பக்திக்கு நீ அளிக்கும் பரிசு எல்லையற்றதல்லவா?
சென்னையிலிருந்து ரெண்டு மூன்று மணிநேரத்தில் காளஹஸ்தி சென்றுவிடலாம். காளத்தீஸ்வரன் ஆலயம், பஞ்சபூதங்களின் ஆலயத்தில் வாயு க்ஷேத்திரம். விளக்கில் தீபம் ஆடிக்கொண்டே இருப்பதை காணலாம். மலைமேல் கண்ணப்பர் ஆலயம் இருக்கிறது. பொன்முகலி ஆறு பாதி நாள் தண்ணீரில்லாமல் ஓடுகிறது.

Wednesday, November 12, 2025

Maaya - story from yoga vasishta

நிழல் தான் நிஜமா? - நங்கநல்லூர் J K SIVAN 
இப்போ நான் ஒரு கதை சொல்றேன். நான் இட்டு க்கட்டி, சொந்தமாக யோசித்து சொல்ற கதை இல்லை.ஏழாயிரம் வருஷ பழங்கதை. ராமருக்கு அவர் குரு வசிஷ்டர் சொன்ன கதை. வசிஷ்டர் ராமருக்கு சொன்ன விஷயம் எல்லாம் ''யோக வாசிஷ்டம்'' அதில் வரும் சம்பவங்கள் நமக்கு பழசாக , புரியாத விஷயமாக இருக்கலாம். ஆகவே யாரும் அதிகம் இதெல்லாம் படிப்பதில்லை, பேசுவதில்லை.  
கதி ஒரு நல்ல சாது பிராமணன். கோசல ராஜ்யத்தில் வாழ்ந்தவன். வாழ்க்கை வெறுத்து போய் குடும்பத்தை விட்டு காட்டுக்கு போய்விட்டான். அங்கே ஒரு காட்டாறு. அதில் கழுத்தளவு நீரில் நின்று எட்டு மாதம் தவம் செய்தான். அந்த காலத்தில் கடும் தவம் செய்தால் கடவுள் நேரே வந்து வரம் தருவார் என்ற நம்பிக்கை.வீண் போனதில்லை. ஆகவே மஹா விஷ்ணு நேரில் வந்தார். 
''அப்பா, கதி, எதற்கு இப்படி கஷ்டப்பட்டு என்னை வேண்டிக்கொண்டு தவம் செய்கிறாய்?''கதி தண்ணீரிலிருந்து வெளியே வந்து மஹாவிஷ்ணு காலில் விழுந்தான்.
''பரமாத்மா, மஹாவிஷ்ணு, நீங்கள் இந்த லோகத்தை, மாயையை, படைத்து, , எல்லோரும் அதில் சிக்கி தவித்து ஜனன மரண துன்பம் அடைய செய்துவி ட்டீர்கள். எனக்கு ப்ரம்மத்தோடு ஐக்கியமாகி மோக்ஷம் பெற அருளவேண்டும். அதற்கு தடங்கலாக இருக்கும் மாயையை நான் அறிந்து, புரிந்து கொள்ள வும் அதை வெல்லவும் அருளவேண்டும்'' 
'பக்தா, நீ விரும்பியபடியே, மாயையை அறிந்து, உணர்ந்து அதன் பிடியிலிருந்து தப்பும் அனுபவம் சீக்கிரமே உண்டாகும்''வரமளித்து விட்டு மஹா விஷ்ணு மறைந்து விட்டார். 
''ஆஹா நான் கேட்டதை மஹா விஷ்ணு அருளிவிட் டார்' என்ற பேரானந்தத்தோடு கதி ஆற்றில் மறுநாள் காலை வழக்கம் போல் நீராடபோனான். மனதில் மஹா விஷ்ணு சொன்ன வார்த்தைகளே திரும்ப திரும்ப ஒலித்ததால் அவன் மனது நித்ய கர்மாநுஷ்டா னத்தில் ஈடுபடவில்லை. தலையைக் கவிழ்த்து தண்ணீரில் முங்கினான் .
மனதில் சினிமா காட்சி ஓடியது. .....அவன் வீட்டில் அவன் ஏதோ வியாதி வந்து செத்து கிடக்கிறான். அவன் மனைவி கதறுகிறாள். சொந்தம் பந்தம் எல்லாம் வந்து வருந்துகிறது. கூட்டமாக நிற்கிறது . அவன் அம்மா அவன் உடல் மேல் புரண்டு புரண்டு அழுகிறாள். வாத்தியார்கள் வந்தாயிற்று சுடுகாட்டில் கட்டைகள் அடுக்கி அவனை வைத்து எரித்து சாம்ப லையும் கரைத்து அவனை எல்லோரும் மறந்து கூட போயாச்சு. (இது அத்தனையும் கதி, தலையை தண்ணீருக்குள் முக்கி எடுப்பதற்குள் தோன்றிய காட்சிகள். இன்னும் தொடர்கிறது) கதி இப்போது அடுத்த பிறவி எடுக்கிறான். யாரோ ஒரு அழுக்கு காட்டுவாசி பெண் கருவில் உருவாகிறான். அந்த காலத்தில் வழக்கத்தில் இருந்த தாழ்ந்த வகுப்பு'' பெண் ஒருத்தி கருவில் பிறந்து வளர்ந்து அதே வகுப்பு பெண்ணை மணந்து குழந்தைகள் பெற்று சந்தோஷ மாக குடும்பம் நடத்துகிறான். சில காலம் அவனைத் தவிர எல்லோரும் மரணம் அடைந்தார்கள். அவன் சோகமாக தனிமனிதனாகி, மனம் கலங்கி வாடி எங் கெல் லாமோ அலைகிறான். கீரா என்கிற ராஜ்ஜியம் வருகிறான். அவன் அங்கே வந்த சமயம் கீரா ராஜ்ய மன்னன் மரணமடைந்து விட்டான். வாரிசு இல்லை என்பதால் மந்திரி பிரதானிகள் அடுத்த ராஜாவை தேர்ந்தெடுக்க ஏற்பாடு நடக்கிறது. கதி தாழ்ந்த குலத்தவனாகதெருவில் நடக்கிறான். எதிரே தும்பிக் கையில் மாலையோடு வந்த பட்டத்து யானை கதியின் கழுத்தில் மாலையிட்டு ராஜாவாகிறான். மந்திரி பிரதானிகள் அவனை அலங்கரித்து மரியா தை யோடு சிம்மாசனத்தில் அமர்த்தி அவன் நேர்மை யோடு ஆளாகிறான். எட்டு வருஷம் ஓடியது. 
ஒரு நாள் அரண்மனையிலிருந்து தெருவை பார்க்கி றான். அவன் சாதிக்காரர்கள் ஏற்கனவே தெரிந்தவர் க ள், நாய் மாமிசம் உண்பவர்கள் தெருவில் கூட்டமாக செல்கிறார்கள். அவன் அவர்களை நோக்கி ஓடுகி றான். ராஜ உடை, நகை கிரீடம் எல்லாம் எறிந்து விட்டு தனது கூட்டத்தாரோடு சேர்கிறான். அவர்களும் அவனை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். அவனை அணைத்து முடித்தமிடுகிறார்கள். அவனுக் கும் அவர்களைக் கண்டதில் பரம சந்தோஷம். 
இதெல்லாம் அரண்மனை உப்பரிகையிலி ருந்து பார்த்த ராஜகுல பெண்மணிகள் அதிர்ச்சி அடைந்து '' ஒரு நீசனா , தாழ்ந்தவனா, நமக்கு ராஜா? அதற்குப் பிறகு எவரும் ராஜா அருகில் போகவில்லை . இப்படி ஒரு தவறு யானையால் நிகழ்ந்ததற்கு நாமெல் லோரும் பரிகாரமாக தீக்குளிப்போம் என்று மந்திரி பிரதானிகள் ராஜ வம்சத்து ராணிகள் தீக்குளித்து விட்டார்கள். ராஜா அழுது கொண்டு தானும் நெருப்பில் விழுந்து சாம்பலானான்.
++++
''அட, அட , அட, என்ன விசித்திரம் கதி ஆற்றில் தண்ணீருக்குள்ளிருந்து தலையை வெளியே எடுத்து மலங்க மலங்க சுற்று முற்றும் பார்த்தான். தன் உடம்பையே வெறித்துப் பார்த்தான். இது வா எரிந்த து? நானா சண்டாளன்? நானா ராஜா?சில நாழிகை களில் எது மாயை, நிஜம்போல் நம்மை வாட்டுகிறது என்று புரிந்து போயிற்று கதி என்ற அந்த துறவிக்கு. மஹா விஷ்ணு மாயையின் சக்தியை புரிய வைத்து விட்டார். மாயை எவ்வளவு வலிமை கொண்டது?.'
' +++
கதி காட்டில் சிலநாட்கள் மீண்டும் தவம் புரிந் தான். ஒருநாள் அவன் குடிசைக்கு ஒரு துறவி வந்தார். அவரை உபசரித்து, தேன் , கிழங்குகள், பழங்கள் கொடுத்தான். அப்போது சாயம் சந்தியா காலம். பொன்னிற சூரியன் எல்லாவற்றையும் தங்க நிறமாக்கி இருந்தான். சந்தியா வந்தனம் பண்ணி விட்டு இருவரும் அவன் ஆஸ்ரமத்துக்கு திரும்பினார் கள். ஆத்ம விசாரம், வேதாந்த விஷயங்கள் எல்லாம் பேசினார்கள். கதி அந்த துறவியிடம் அப்போது கேட்டான்;
''சுவாமி உங்கள் தேகம் ஏன் இப்படி எலும்பும் தோலுமாக வற்றி, வாடி இளைத்து காண்கி றது?'
'''அதை ஏன் கேட்கிறீர்கள். கீரா என்கிற தேசத்துக்கு போனேன். அந்த ஊரில் ஒரு நல்ல ராஜா பட்டத்து யானையால் தேர்ந்தெடுக் கப்பட்டு நேர்மையாக எட்டு வருஷம் ஆண்டானாம். ஒருநாள் தாழ் குலத்த வன் காட்டு வாசி என்று ஊர்மக்களுக்கு, தெரிந்து அனைவரும் பாபம் தீர அக்னி பிரவேசம் பண்ணிவிட் டார்களாம். அந்த ராஜாவும் தீயில் இறங்கி சாம்பலா னா னாம். அந்த ஊரில் சென்ற பாபத்துக்காக நான் பிரயாகை சென்று த்ரிவேணியில் ஸ்னானம் பண்ணி விட்டு அதுவரை எதுவும் ஆகாரம் சாப்பிடவில்லை.''
'கதி ஆச்சரியப்பட்டான். ஆஹா இந்த துறவி என் கதையை அல்லவா சொல்கிறார்?. அப்படியென்றால் நடந்தது எல்லாம் நிஜம் தானா? மனதின் கற்பனை யில் லையா? மாயை நிஜமா? அப்படித்தான் எல்லோரு ம் நம்புகிறோமா?.
 கதி தானும் கீரா ராஜ்ஜியம் சென்றான் விசாரித் தான். தான் பிறந்த இடம், தாழ் குலத்தோர், யானை வந்து மாலை அணிவித்து. ராஜாவானது, நீச உறவுக ளை சந்தித்தது, அக்னி பிரவேசம் .... எல்லாமே அந்த ஊர் மக்கள் சொல்வது நிஜம் என அறிந்தான். இருந்தாலும் தான் நீச குலத்தவன் இல்லையே, துறவியாக இருப்பதும் மஹா விஷ்ணு அளித்த வரத்தால் அவனுக்கு மாயை தான் அதெல்லாம் என புலப்பட்டது. 
 கதி மீண்டும் தவத்தில் ஈடுபட்டான். மறுபடியும் மஹா விஷ்ணு தரிசனம் கிட்டியது. அவரிடம் கேட்டான்.
''பரமாத்மா, உங்கள் அருளால் மாயை புரிந்து கொண் டேன். எப்படி அது நிஜமாகவே உருவமெடுக்கிறது. நம்பாமல் இருக்க முடியவில்லையே. எப்படி ஏன்?''
''அன்பா, கதி, சொல்கிறேன் கேள். இந்த பிரபஞ்சம், உலகம், அதில் காணும், நிகழும், சர்வமும் உண்மை யல்ல, இருப்பவை அல்ல, இல்லாதவை. மனத்தால் உருவாகுபவை. மனது செயலழிந்தவனுக்கு உலகம் பிரபஞ்சம், மக்கள் எதுவும் எவரும் கிடையாது. மனம் செயல் படாதவனை, எதிலும் நிலைக்காதவனை பித்தன், பைத்யம் என்கிறோம். அலையும் மனதில் தான் உலகம் பிரபஞ்சம் திகழ்கிறது. நிகழ்கிறது. அதுவே உன்னை மரணமடைய வைத்தது, நீசனாக் கியது, ராஜா வாக் கியது, தீக்குளிக்க வைத்தது, மீண்டும் நீ கதி எனும் துறவி என்றும் புரியவைத்தது. 
உன் மனதில் என்னைப் பதிய வைத்துக் கொண்டால் மற்ற காட்சிகள் மறையும். உன்னிடமிருந்து நீ அனுபவித்த மாயக் காட்சிகள் உன்னை சந்திக்க வந்த துறவிக்கும் ஒட்டிக்கொண்டு அவரும் அதை நிஜமென நம்பினார். காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை இது. உன்னால் துறவி மட்டும் அல்ல உன் அனுபவத்தை பங்கேற்ற எல்லோருமே அந்த அனுபவம் அடைந்தவர்களாக காணப்பட்டார்கள். கனவு ஒன்று நிஜமாக காணப்பட்டது. 
உண்மையில், நிஜமாக, எல்லாமே நான், என்னில் அனைத்தும், அனைத்துமே நான் என உனக்கு புரிந்தால் மற்ற காட்சிகளுக்கு மனதில் இடம் ஏது? நீ யார் என்பதை புரிந்து கொள்ளாமல் மற்றவைகள் எல்லாம் நீ என்றும் மற்றவை என்றும் பிரித்து பார்த்து அவஸ்தை பட்டாய்.''
மோகம் என்னும் மாய சக்ரத்தின் அச்சாணி தான் மனம். மனம் வெறுமையானால் அதில் எதுவும் உருவாகாது. அது தான் மனோநாசம் DESTRUCTION OF MIND. புரிந்து கொண்டாயா? எழுந்திரு மீண்டும் பத்து வருஷம் மலைக்குகையில் அமர்ந்து தவம் செய்து மனதை அடக்கு. ஆத்ம ஞானம் பிறக்கும். ''
மஹா விஷ்ணு மறைந்தார். 
கதி மீண்டும் தவம் செய்ய புறப்பட்டான். பத்து வருஷம் ஆனது. ப்ரம்ம ஞானியாக மௌனி யாக வெளி வந்தான்.பேரானந்தத்தில் திளைத்தான். அவன் மனத்தில் பௌர்ணமி போல் ஞான ஒளி. ஜீவன் முக்தன். 
யோக வாசிஷ்டத்தில் ஒரு கதை இது. எப்படி இருக்கிறது. இன்னும் சொல்லட்டுமா?

Tuesday, November 11, 2025

Whom to follow in this world? - HH Sri Bharati Teertha Mahaswamigal

*ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்*  

உலகத்திலே மனிதனாக பிறப்பது மிகவும் துர்லபம்.. அப்பேற்பட்ட துர்லபமான பிறவி நமக்குக் கிடைத்துள்ளது..  இதில் ஆஸ்திகம் இல்லை  தர்மாசரணங்கள் இல்லை என்று சொன்னால் அப்போது இந்த மனிதப் பிறவிக்கு அர்த்தமேயில்லை..  ஆனால், பவித்ரமான இந்த பாரதத்திலே இந்த மாதிரியான பவித்ரமான ஜென்மத்தை எடுத்துள்ளோமென்று சொன்னால் நாம் இதை ஸார்த்தகமாக்கிக்கொள்ள வேண்டும்.. மனிதனுடைய ஸ்வபாவம் என்னவென்றால் தான் யாருடைய சகவாஸத்திலே இருப்பானோ,  அவர்களுடைய ஸ்வபாவமே இவனுக்கும் வரும்..  தான் துஷ்டர்களுடைய சகவாஸத்திலே இருந்தால் அந்த துஷ்டர்களுடைய ஸ்வபாவமே இவனுக்கும் வரும்.. அதானலே,  "நான் எப்பொழுதும் ஸத்புருஷர்களோடுதான் இருக்க வேண்டும் என்கிற ஒரு பாவனையை வைத்துக்கொள்ள வேண்டும்.. இப்படி இருந்தால் நீ செளக்கியமாக இருக்கலாம்"  என்று பகவத்பாதாள் நமக்கு உபதேசித்தார்..  இப்பேற்பட்ட தர்ம மார்க்கத்திலே நாம் இருந்தால்தான் இந்த பவித்ரமான பாரதத்தில் ஜென்மம் அடைந்ததற்கு, இந்த ஸநாதன தர்ம பரம்பரையில் பிறந்ததற்கு அர்த்தம் வரும்.. இல்லாவிட்டால், நான் அப்போது சொன்ன மாதிரி பிராணிகளுக்கு சமானம் ஆகிவிடும்..  அப்படி ஆகக் கூடாது..  இந்த ஜென்மம் ஸார்த்தகமாக வேண்டும்.. இந்த தர்மத்தை ஆசாரணம் பண்ணுகிற விஷயத்திலே யார் மஹான்களோ அவர்களைத்தான் நாம் எப்பொழுதும் ஆதர்சமாக வைத்துக்கொள்ள வேண்டும்..

Monday, November 10, 2025

Contentment - HH Bharathi Teertha Mahaswamigal

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

சந்தோஷமான வாழ்க்கைக்கு திருப்தி அத்யாவசியமானது. எவ்வளவு ஐஸ்வர்யம் அல்லது க்ஷேமங்கள் வந்தாலும் திருப்தியற்ற மனிதனுக்கு சந்தோஷம் கிடைக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. 

இன்ப வஸ்துக்களை விரும்புபவன் அவைகளைப் பெறுவதற்கு கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்: அது ஒன்றும் இன்பமயம் அல்ல. பிறகு அவைகளை தக்கவைத்துக்கொள்ள கடுமையாக போராட வேண்டும் : அதுவும் இன்பம் தரக்கூடிய காரியம் இல்லை. ஏதேனும் ஒரு காரணத்தினால் கஷ்டப்பட்டு சேகரித்த உடைமைகள் நம்மிடமிருந்து பிடுங்கப்பட்டால், இருந்த கொஞ்ச நஞ்ச இன்பமும் போய், முடிவில் வேதனைதான் மிஞ்சும். 

ஆகவே உடைமைகளுக்கு ஆசைப்படுவது நல்லதில்லை. பழங்காலத்தில் வனத்தில் இருந்த ரிஷிகளுக்கென்று சொந்தம் ஏதும் கிடையாது. ஆனால் அவர்கள் சந்தோஷமாக இல்லையா என்ன? திருப்தி என்ற ஒன்றினால் தான் அவர்கள் அவ்வாறு இருந்தார்கள். 

புராணங்கள் பரம சிவபெருமானை ஒரு காளையின் மீது அமர்ந்து இருப்பவராகவும் புலித்தோலை உடுத்தி இருப்பவராகவும் மற்றும் உடலில் விபூதி பூசி இருப்பவராகவும் வர்ணிக்கின்றன. நாம் இந்த்ரியஸுகங்களிலிருந்து மனதை மறக்க வேண்டும் என்பது இதன் தாத்பரியம். நாம் எவ்வளவு செழிப்பாக வாழ்ந்தாலும் எளிய வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு இன்பம் கிடைக்கும். 

தனம் தானாகவே வந்தால் அதை நல்ல அல்லது தார்மீக காரியங்களுக்காக உபயோகப்படுத்தி வாழ்க்கையை சமநிலையில் நடத்தி வரவேண்டும். "இவ்வுலகில் யார் பணக்காரன், யார் ஏழை" என்ற கேள்விக்கு பதில் உண்டு. ஆசைகளற்றவனும் திருப்தி நிரம்பிய மனதுள்ளவனும் தான் பணக்காரன். இந்த குணம் இல்லாத மற்ற எல்லோரும் உண்மையில் ஏழைகள். 

ஆதலால் திருப்தி என்ற லக்ஷியத்தை உயர தாங்கி, இன்பத்துடன் செழிப்பாக வாழ்வது மிக்க நல்லது.

Saturday, November 8, 2025

Cleaning kamandalu - sanskrit story

||ॐ||
।।गुरूणाम् कथा।। { बोधकथा}
''भासमानः कमण्डलुः'' (१५)
श्रीरामकृष्णः परमहंसः प्रतिदिनं स्वस्य कमण्डलुं बहना संसक्तेन भस्मना मृत्तिकया च घर्षयित्वा प्रकाशमानं करोति स्म |
प्रतिदिनं कृतेन परिश्रमेण कमण्डलुः प्रकाशमानः दृश्यते स्म | रामकृष्णस्य शिष्यः प्रतिदिनं एतादृशं श्रमं, कमण्डलो घर्षणं च दृष्ट्वा विचित्रम् अनुभवति।
संशयस्य निवारणं कर्तुं तेन रामकृष्णः पृष्टः —भवतः कमण्डलुः भासमानः एव दृश्यते, कमण्डलौ वयं चित्रं अपि द्रष्टुम् शक्यते तर्हि किमर्थं प्रतिदिनं कमण्डलुं भस्मना, मृत्तिकया घर्षयति ? किं प्रतिदिनं एतादृशः श्रमः आवश्यकः ?
गुरुः श्रीरामकृष्णपरमहंसः मन्दं मन्दं हसित्वा अवदत् – पुत्र! कमण्डलोः भासमानता केवलं एकस्मिन् दिने परिश्रमं कृत्वा न प्राप्ता | कमण्डलोः उपरि यत् किट्टम् [मलं] अस्ति, तस्य अपाकरणाय प्रतिदिनं श्रमः आवश्यकः | एवमेव जीवने असमीचीनं तत्त्वम् अपि अस्ति , असमीचीनं संस्कारं अपाकर्तुं अस्माभिः प्रतिदिनं संकल्पपूर्णः परिश्रमः कर्तुम् आवश्यकः।
 मलस्य अपामार्जनम् आवश्यकम् खलु | कमण्डलु स्यात् अथवा व्यक्तेः जीवनम् । असमीचीनान् मलान् अपाकर्तुं प्रतिदिनं कठोरः परिश्रमः अत्यावश्यकः | यथा अयं कमण्डलुः प्रकाशते तथैव व्यक्तेः जीवनम् अपि कान्तिमत् भविष्यति |
प्रस्तुता कथा अस्मान् किं बोधयति ?
[१] प्रत्येकं जनेन स्वस्य असमीचीनं मलं अपाकर्तुं सदैव प्रयासः करणीयः|
[२] तुच्छं कार्यमपि मनोयोगेन यदि क्रियते तर्हि तत्रापि वैशिट्यपूर्णां भासमानताम् उत्पाद्य आकर्षणं निर्मितुं शक्यते |
सामान्यं कर्म अपि असामान्यत्वं प्राप्यते यदा एकाग्रतया मनोयोगेन च किञ्चित् कार्यं क्रियते |
'' अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया |
चक्षुरुन्मीलितं येन 
तस्मै श्रीगुरुवे नमः |''
  ॐॐॐॐॐ
डॉ. वर्षा प्रकाश टोणगांवकर
पुणे / महाराष्ट्रम्
----------------------
       🍫🍫🍫🍫🍫🍫

Thursday, October 23, 2025

Advice from a teacher

தனது மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை:

"ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க வசதியான படகு ஒன்று மாத்திரமே இருக்கிறது.
மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார். கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக....
இந்த இடத்தில் என்ன சொல்லியிருப்பார்???" என்று மாணவர்களை நோக்கி ஆசிரியை கேட்டார். 

எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும் போது ஒரு மாணவன் மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.....
"ஏம்பா நீ சைலண்டா இருக்க......"

'நம்ம கொழந்தைய பத்திரமா பாத்துக்கங்கன்னு சொல்லிருப்பாங்க டீச்சர்'

"எப்பிடிப்பா கரெக்டா சொல்ற, ஒனக்கு முன்னாடியே இந்த கதை தெரியுமா?"

'இல்ல டீச்சர், எங்கம்மாவும் சாவுறதுக்கு முன்னாடி அப்பாக்கிட்ட இதையேதான் சொன்னாங்க...'

பலத்த மௌனத்திற்கு பிறகு ஆசிரியை கதையை தொடர்ந்தார்.

தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த மனிதன் வளர்த்து வந்தார். அவரின் மரணத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண் தனது தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது. தாய்க்கு உயிர் கொல்லி நோய் இருந்திருப்பது அப்போதுதான் அவளுக்கு தெரிய வந்தது. கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார்.

' உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும்... நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். நான் என்ன செய்ய, நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியிருந்தது'.

கதையை இதோடு முடித்து விட்டு அந்த ஆசிரியை கூறினார்:

'வாழ்க்கைல நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாத்துக்கும் காரணம் இருக்கும் ஆனா சில நேரங்கள்ல உங்களால் புரிஞ்சிக்க இயலாம போகலாம்.

அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா
புரிஞ்சிக்காமலோ யார் மேலயும் முடிவுக்கு வந்துடக்கூடாது.'

*'நம்ம ரெஸ்டாரண்ட் போனா, ஒருத்தன் காசு கொடுக்க முன்வந்தா அவன் பணக்காரன் என்று அர்த்தமில்ல, பணத்த விட நம்ம நட்ப அதிகமா மதிக்கிறான்' னு அர்த்தம்.

*'முதல்ல மன்னிப்பு கேக்கிறாங்கன்னா அவங்க தப்பு பண்ணிருக்காங்கன்னு அர்த்தமில்ல, ஈகோவ(Ego) விட உறவ மதிக்கிறாங்க' னு அர்த்தம்.

'நம்ம கண்டுக்காம விட்டாலும் இருந்திருந்து நமக்கு கால் பண்றாங்கன்னா அவங்க வேல வெட்டி இல்லாம இருக்காங்கன்னு அர்த்தமில்ல, நம்ம அவங்களோட மனசில இருக்கம்னு அர்த்தம்'.

பின்னொரு காலத்தில நம்ம பிள்ளைங்க நம்மகிட்ட கேட்கும்,,,,,
'"யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கல்லாம்???"'

ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம் ' அவங்க கூடத்தான் சில நல்ல தருணங்கள நாங்க கழிச்சிருக்கோம்' 

படித்து பகிர்ந்து

Wednesday, October 22, 2025

Old age home - story

என்னை மிகவும் பாதித்த பதிவு !

படிக்கும்போதே உயிர் பிரிவதைப் போன்றவோர் உணர்வு.

அப்பா, நேத்து கேட்டேனே, 
எக்ஸாம் பீஸ் எடுத்துக்கவா...?

கேட்டுக் கொண்டே அப்பா நேற்று போட்டிருந்த சட்டைப் பாக்கெட்டில் கை விடுகிறான்.

டேய், அப்பா வந்து எடுத்து தருவாங்க, பாக்கெட்டில் கை விடறது என்ன பழக்கம்...? 
டஅம்மாவின் அதட்டலுக்கு...

என் அப்பா பாக்கெட்டில் நான் கை விடறேன், உனக்கு ஏம்மா வயிறு எரியுது...?

அம்மாவிற்கு பதில் சொல்லிக் கொண்டே, எடுத்ததை தன் பாக்கெட்டில் நுழைத்தவாறு, தேங்க்ஸ்பா, பாய்... சொன்னவாறு ஓடிப் போனான், மூன்றாமாண்டு பொறியியலில் இயந்திரவியல் படிக்கும் ராஜா.

எல்லாம் நீங்க கொடுக்கற செல்லம். எதுக்கும் ஒரு அளவு இருக்குதுங்க, பொறிந்தாள் அப்பளம் பொறித்தபடி.

சிரித்தபடியே தலைதுவட்டிக் கொண்டு வெளியே வந்த குமாரசாமி, 

நேத்து ஒரு ஃப்ரெண்ட் கேண்டீன்ல செலவு பண்ணியிருப்பான், இவன் ஒருநாள் செலவு பண்ண ஆசைபடுவான், இதுக்கெல்லாம் உங்கிட்ட கணக்கு சொல்லமுடியுமா?

அதுவுமில்லாம நீ பயப்படற மாதிரிலாம் தப்பா நீ வளர்க்கலய மகா...! காலையிலய கோபப்படாதடா, டாக்டர் சொன்னாரில்லையா... என்றபடி மனைவியின் கன்னத்தில் செல்லமாய் தட்டியபடி... ரூமிற்குள் நுழைந்து புறப்பட தயாரானார் அலுவலகத்திற்கு.

யாரு டாக்டரு, உங்க ஃப்ரெண்ட் தானே...

நீங்க சொல்லிக் கொடுக்கறத, அப்படியே வந்து ஒப்பிப்பாரு, எனக்குத்தெரியாதா?
ஒங்க ரெண்டு பேர பத்தியும்...

சொல்லிக் கொண்டே காபியுடன் வெளிவந்த மகாவை...

என்னம்மா, காலையிலயே என்னை போட்டுட்ட மிக்ஸியில... சொல்லியபடி உள்ளே நுழைந்தார் பக்கத்து வீட்டு டாக்டரும் குமாரசாமியின் பால்ய நண்பருமான ரத்னவேல்.

மகா, நாக்கை கடித்துக்கொண்டு அசடு வழிந்தபடி, இந்தாங்கண்ணா, உங்களுக்குத்தான் காபி, என்றாள்.

நம்பாதடா, நம்பாதடா, இவ்ளோ நேரம் அவ்ளோ திட்டு திட்டினாள் உன்னை, சிரித்தபடி வெளியே வந்த குமாரசாமியிடம், 

என் தங்கை என்னை திட்டினா, திட்டட்டும், என்னைத் தானே திட்டறா, உனக்கென்ன என்றார் ரத்னவேல் சிரித்துக்கொண்டே.

ஒன்னு அசடு வழியுது...
ஒன்னு வெட்கமே இல்லாம பேசுது...

ஆளை விடுங்க சாமி, என்றபடி தன்னிடம் தந்த காபியை வாங்கி குடிக்கத் தொடங்கினார். 

திடீரென அரண்டு எழுந்தார் குமாரசாமி.

#கனவு.

திரும்பி செல்போனை எடுத்து நேரம் பார்த்தார்.

5:20.

பத்து நிமிடம் கழித்து எழுந்து கொள்ளலாம் என நினைத்தபடி, ஈரமான கண்களை துடைத்தபடி திரும்பி படுக்கிறார். 

தன் மருமகள் மகனிடம் பேசுகிறாள்...

என்னங்க, நான் சொல்றது கேட்பீங்களா, கேட்க மாட்டீங்களா...? 

என்ன ஷீலா, நீ சொல்லி நான் எதை கேட்கல...?
காலையிலயே கோபப்படற‌. 

பின்ன என்னங்க, நானும் மூனு மாசமா சொல்றேன், செய்யறீங்களா...?

எதை சொல்ற...?

ஹூம்... அது மட்டும் மறந்துடுமே...

உங்கப்பாவை எங்கயாவது தூரமான ஊருல முதியோர் இல்லத்தில சேருங்கனு சொல்லிக்கிட்டு இருக்கேனே... அதைத்தான்.

இந்த மாசம் ஏற்பாடு பண்றேன் ஷீலா, கொஞ்சம் பொறுத்துக்கோடா.... என்கிறான்.

குமாரசாமியின் கண்களின் பக்கவாட்டில் நீர் வழிந்து, காதுகளை தொடுகிறது. 

துடைத்துக் கொண்டே நினைத்துக் கொள்கிறார்.

ஏங்க, எனக்கு ஒங்கள நெனச்சாதாங்க கவலையா இருக்கு...?

இவுங்ககிட்ட உங்களால தாக்கு பிடிக்க முடியுமானு தெரியலையே...?

உங்கள அனாதையா விட்டுட்டு போறேனே... 

ஏங்க, சீக்கிரம் வந்துடுங்க... நான் உங்களுக்கா காத்துகிட்டு இருப்பேன், சரியா...!

எல்லாரையும் உள்ளங்கையில வைச்சித் தாங்கனீங்க, ஆனால் ...

மேற்கோண்டு பேச முடியாமல் தேம்பும் மனைவியின் கண்ணைத் துடைத்தபடி, 

உனக்கு ஒன்னும் இல்லையாம்டா...
இப்போதான் ரத்னம் சொல்லிட்டுப் போறான்...

நீ இன்னும் ஒரு வாரத்துல எழுந்து அவனுக்கு காபி போட்டு கொடுப்பியாம், சொன்னான்.

அழுகையை அடக்கிய படி ஆறுதல் சொல்ல, 

எல்லாத்தையும் நானும் கேட்டுட்டேங்க...!

எனக்கு நான் போவதை பத்திலாம் கவலையே இல்லங்க... உங்கள நெனச்சாதான். 

தன் மடியில் மனைவி தன்னை விட்டுப் போனதை நினைத்துப் பார்த்தபடி படுத்திருக்கிறார்.

ஏங்க, மணி 7:20 ஆகுது, உங்கப்பாவை எழுப்புங்க, நியூஸ் போயிடுச்சினா, உலகமே இரண்ட மாதிரி ஆயிடுவாரு உங்கப்பா.

என்னவோ இவர கேட்டுதான் உலகமே இயங்கற மாதிரி...

சொல்லிக்கொண்டே மனைவி தந்த காபியை வாங்கிக் கொண்டு போய்... அப்பா, காஃபி... என்றவாறே அவர் அருகிலிருந்த டீப்பாயின் மீது வைத்து விட்டு உள்ளே போய்விட்டான்.

அய்ந்து நிமிடம் கழித்து வெளியே வந்தவன், காபி எடுக்காததை கண்டு, 

அப்பா, அப்பா...
இரண்டு தடவை கூப்பிட...

பதில் வரவில்லை.

ஒரே குரலுக்கு பதில் தரும் அப்பாவிற்கு என்ன ஆயிற்று...?

உடம்பு சரியில்லையோ...?

மெல்ல குனிந்து அப்பாவின் கையை தொட்டு உலுக்குகிறான் அப்பா, அப்பா...!?!?!

சற்றே அதிர்ச்சியோடு தற்போது கன்னத்தை இருபுறமும் பிடித்து...
தலையை ஆட்டுகிறான், அப்பா, அப்பா...!

இவன் கத்தும் சத்தம் கேட்டு ரத்னவேல் உள்ளே வருகிறார், 
என்ன ராஜா...?

தெரியல அங்கிள், நாலஞ்சு தடவை கூப்பிட்டும் எந்திரிக்கவே மாட்டேங்கிறாரு...?

ரத்னவேல் மெல்ல உட்கார்ந்து...

கையைத் தூக்கி பல்ஸ் பார்க்கிறார்.

கையை கீழே வைத்தபடி...

தன் நண்பனை மெல்ல குனிந்து முகத்தைப் பார்க்கிறார்.

மேலும் குனிந்து குமார், குமார் என குரல் கொடுத்தபடி...

இரண்டு கன்னத்திலும் முத்தமிட்டு விட்டு எழுகிறார்.

என்ன அங்கிள்...?

திரும்பி கண்ணாடியை கழட்டுகிறார். 

#கண்ணீர்_அதற்குள்_கழுத்தை_தொடுகிறது.

அவன் தோளை தட்டியபடி, அவன் மகாகிட்ட போயிட்டாம்பா... 
சொல்லிக் கொண்டே வெளியேறுகிறார்.

மாலை 4 மணி.

இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்த ரத்னவேலுவை நோக்கி, 

பால்ய நண்பர்கள் ஆறேழு பேர் வருகின்றனர்.

டேய், நீ ஒரு டாக்டரு, இவ்ளோ நாளா அவனை செக் பண்ணாமயாட இருந்த...? எரிச்சலோடு சேகர் கேட்கிறார்.

நிமிர்ந்து ஒரு பார்வை. அவ்வளவுதான்.

ஒட்டிப்பிறந்த ரெட்டையனுங்க மாதிரியே சுத்தித் திரிஞ்சிங்களேடா...
அவனுக்கு ஹார்ட்ல பிராப்ளம் இருக்கிறது உனக்குத் தெரியாமலா இருந்தது...? பாலாவின் கேள்வி.

அவன்கிட்ட கூட காசை எதிர்பார்த்தியோ...? சம்பத்.

எதற்கும் பதிலில்லை.

சிவா அவரைப் பிடித்து திருப்புகிறார்.
என்னடா, நாங்க கேட்டுகிட்டே இருக்கோம், அவனை அனுப்பற வேலையிலயே இருக்க...? 

அவர் கண்கள் முழுக்க கண்ணீர்...!

சிவாவின் தோளை பாலா தொட்டார்.
சிவா அமைதியாயிருடா. 

அவன், அவங்கம்மா செத்ததுக்கே கலங்காதவன். 
எப்படி அழறான், பாரு.
அவனை பேச வை.
எனக்கு பயமாயிருக்கு... பாலா தவிப்போடு சொல்ல,

பேசுடா, என்ன நடந்ததுன்னு சொல்லுடா... உலுக்குகிறார் சிவா.

அவன் செத்து மூனு வருஷமாச்சு.

நாமதான் லேட்டா கண்டுக்குறோம்... என்கிறார் ரத்னவேல்.

எல்லோரும் அதிர்ச்சியாகி பார்க்க...

ஆமாம்டா... அவன் செத்து மூனு வருஷமாச்சு.

மூன்று
ஆண்டுகளுக்கு முன்னால்... 
மகா போனபோதே அவனும் போயிட்டான்.
நாமதான் கவனிக்கல...!

அதுக்கப்புறம், "சாப்பிட்டியா?"
என்று கேட்க கூட யாரும் இல்லாத 
நேரத்திலேயே அவன் செத்துட்டான்; ஆனால் நாமதான் கவனிக்கல...!?!

"பொண்டாட்டி போனதுமே போய்த் தொலைய வேண்டியதுதானே" 
என்று தம் காதுபடவே - மருமகள் பேசியபோதே அவன் போயிட்டான்; அப்போதும் நாமதான் கவனிக்கல...!

'தாய்க்குப் பின் தாரம்... 
தாரத்துக்குப் பின் வீட்டின் ஓரம்...!'
என்று அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு 
வாழும்நிலை வந்தபோதே 
அவன் போயிட்டான்; நாமதான் யாருமே கவனிக்கல...!

"காசு இங்கே மரத்திலேயா காய்க்குது" என்று மகன் அமில வார்த்தையை 
வீசியபோதே அவன் போயிட்டான்;
நாமதான் கவனிக்கல...!

நேத்து விடிகாலம் வாக்கிங் போகறதுக்காக, 
அவனை எழுப்ப கதவை தட்டப் போனேன்...
அப்போ...

"என்னங்க... ரொம்ப தூரத்திலே இருக்குற முதியோர் இல்லத்திலே விட்டுவிட்டுத் தலைமுழுகிட்டு வந்திடுங்க...!" என்று மருமகளின் சுடுசொற்கள் 

என் காதில் விழுந்தது போல் அவனும் கேட்டிருப்பானு நெனைக்கிறேன்.

அதான் போயிட்டான், தூரமா...!
என்று கதறிய ரத்னவேலை...

பாலா தழுவிக்கொண்டே தட்டிக் கொடுத்தார்.

நேத்து பழைய ரிமோட்ட கையில வச்சிகிட்டு உட்கார்ந்திருந்தான், சேனலை மாத்துடா, என்னடா இந்தி பாட்டு கேட்கிற...? என்றபோது... 

அதோ இருக்கு பாரு ரிமோட்டு, மாத்திக்கோ என்றான்.
நீ வச்சிருக்கயே அது என்னடா? என்றபோது...

இது போயிட்டிச்சி, ஆனா மகா யூஸ் பண்ணது என்றான்.

#பார்க்கும்_எல்லாவற்றிலும்_அவன்_மகாவோடு_வாழ்ந்தான்.

ஒருவேளை மகன் நம்மை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டால்....? என்று நினைக்கும்போதே செத்துட்டிருப்பான்...!

அவனுக்கு ஒரு பிராப்ளமும் இல்லடா...! என்று கதறும் ரத்னத்தை ஆற்றுப்படுத்த வழியின்றி....

எல்லோரும் அழுகின்றனர்...!🙏

தோழர்களே...!

நீங்கள் செல்லும் வழியிலும்
இப்படி யாராவது
இறந்து கொண்டிருப்பார்கள்... 

ஓரிரு மணித் துளிகளாவது 
நின்று பேசிவிட்டுச் செல்லுங்கள்...! 

இல்லையேல்...

உங்கள் அருகிலேயே - 
உங்கள் வீட்டிலேயே இறந்து கொண்டிருப்பார்கள்... 
புரிந்து கொள்ள முயலுங்கள்...!

வாழ்க்கை என்பது... 
வாழ்வது மட்டுமல்ல...! 
வாழ வைப்பதும்தான்...!

சுடுசொற்களால், புறக்கணிப்பால்... 
பலர் 
உயிருடனேயே இறந்து விடுகின்றனர். 
புதைக்கத்தான்... 
சில ஆண்டுகள் ஆகின்றன...!🙏

இந்தக் கதையை படிக்கும் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள்...!

நிச்சயம் இது உங்களுக்கான கதை அல்ல.
நம்புகிறேன்...!

உங்களுக்கானதாக மாறிவிடக் கூடாது என்று வேண்டுகிறேன்.

Saturday, October 18, 2025

Thula snaan

துலா ஸ்னானம் -  


துவங்கும் ஐப்பசி மாதத்தில் 
ஸூர்யன் துலா ராசியில் சஞ்சரிப்பதால் 
ஐப்பசி துலா மாதம் எனப்படுகிறது.

இதில் விசேஷம் என்னவென்றால் 
வடக்கே உள்ள பெரிய ஜீவநதிகளான  
கங்கை யமுனை கோதாவரீ முதலிய 
அனைத்து புண்ய நீர்களும் தெற்கே  
காவேரிக்கு வந்து ஐக்யமாகிறது.  
சும்மா வரவில்லை. கங்கா யமுனா 
கோதாவரி எல்லாம் அவர்களது  
பாபங்களை போக்கிக்கொள்ள 
காவேரியில் ஸ்னானம் பண்ண 
வருகிறார்கள். 

ஆகவே ஐப்பசி 30 நாளும் காவேரியில்
 முறைப்படி ஸ்னானம் செய்து நமது  
பாபங்களை போக்கிக்கொள்ள வழி 
இருக்கிறது.  

பாபம் போவது இருக்கட்டும். 
முதலில் மன நிம்மதி பெறலாம்.  
மாயவரம், திருச்சி ஸ்ரீரங்கம் போன்ற 
காவேரி நதி தீரத்தில் வசிப்பவர்களுக்கு 
யோகம். நாம் முடிந்தால் போய் வரலாம்.  
ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்திலிருந்து 
தங்க குடத்தில் ஜலம் எடுத்து 
ரங்கநாதருக்கு துலா ஸ்னான 
அபிஷேகம் நடக்கிறது. 

மாயவரத்தில் காவிரிக்கரையில் 
துலா கட்டம் இருக்கிறது. சுற்று
வட்டார எல்லாக் கோயில்களிலும்  
உள்ள உத்ஸவ மூர்த்திகள் தீர்த்த
வாரிக்காகக் காவிரிக்கு வருவார்கள்.  
ஆகவே பக்தர்கள் கூட்டத்துக்கு 
கேட்கவே வேண்டாம். திருச்சியில் 
அம்மா மண்டபத்திலும் எண்ணற்ற 
பக்தர்கள் குழுமுவார்கள்.  

ஐப்பசி முழுதும் காவேரி ஸ்னானம்
 கங்கா ஸ்நானத்தை விட அதிக 
புண்யம் வாய்ந்ததாகிறது. 
கங்கையும் காவேரியோடு இணைந்து
விடுகிறாளே.

காவேரி துலா ஸ்னானம் பண்ணும்
போது சொல்கிற ஒரு மந்திரம்; 

नमस्ते तटितां मुख्ये निगमागम सम्स्तुते 
पापकायं पारिशुध्यं आयुरारोग्य मेव च । 
सौभाग्यमपि सन्तानं ज्ञानं देहि मरुदूधे ।।

நமஸ்தே தடிதாம் முக்2யே 
   நிக3 மாக3ம ஸம்ஸ்துதே
பாபகாயம் பாரிசு'த்4யம் 
    ஆயுராரோக்2ய மேவ ச
ஸௌபா4க்2யமபி ஸந்தானம் 
   க்ஞானம் தே3ஹி மருத்3 வ்ருதே4

நதிகளில் புண்யம் மிகுந்த 
காவேரியம்மா, வேத மந்த்ரங்கள்
 போற்றும் காவேரி மாதா,  
பாபங்கள் நிறைந்த என்னுடை 
தேகத்தையம், உன்னை பருகும்
போது என்னுள்ளே இருக்கும்  
பாபங்களையும் போக்கி 
பரிசுத்தமாக்கி அருள்வாய்.

मरुद्र्धे महादेवि महाभागे मनोहरे ।
श्री कावेरि नमस्तुभ्यं मम पापं व्यपोहय

மருத்3 வ்ருதே4! மஹாதே3வி ! 
மஹாபா4கே3! மநோஹரே! 
ஸ்ரீகாவேரி! நமஸ்துப்4யம் 
மமபாபம் வ்யபோஹய

சௌபாக்கியவாதி ஸ்ரீ காவேரி 
மாதா, உன்னை ஸ்னானம் செய்து 
நமஸ்கரிக்கிறேன். என் சகல 
பாபங்களையும் போக்கி அருள்வாய். 

" நமஸ்தே தவிதாம் முக்யே 
நிகமாகம ஸம்ஸ்துதே   
பாபகாயம் பாரிஸூத்யம் 
ஆயுராரோக்ய மேவ ச
ஸெளபாக்யமநி ஸந்தானம்
 க்ஞானம் தேஹி மருத்வ்ருதே"

எங்களுக்கு பாபத்தை போக்குவதோடு,  
பரிசுத்தம் பெற, ஆயுள், ஆரோக்கியம் 
பெற, சகல சௌபாக்யங்களோடு வாழ,  
சந்தான அபிவிருத்தி பெற, ஞானம் 
பெற அருள்வாய் தாயே. '' 

குளிக்கும்போதே எல்லாவற்றுக்கும் 
தலை முழுகிவிட்டு நல்லதையே  
பிடித்துக் கொள்ள அருமையான 
மந்திரம்அல்லவா ?  

துலா என்றால் தராசு, இப்போதுள்ள 
 டிஜிட்டல் எடை வருவதற்கு முன்  
பழங்காலத் தில், கடைகளில்  
ரெண்டு பக்கம் தட்டுகள் கொண்ட 
தராசு மேலே தராசுக்கோல் நடுவில் 
முள்ளோடு ரெண்டுபக்கம் சரி 
சமமாக காட்டும். ஒரு தட்டில் எடைக்கல் , 
மற்றொரு தட்டில் நமக்கு தேவையான 
பொருள். கண்ணெதிரில் சரியான 
எடையில் கிடைக்கும். 

துலாம் மாசம்,இரவு பகல் ரெண்டுமே 
சரி சமமாக தலா 12 மணி நேரம் 
கிடைக்கும். 

கங்கை யமுனை கோதாவரி தவிர 
ஈரேழு பதினான்கு லோகங்களிலும்
 உள்ள ஆறு கோடி தீர்த்தங்களும் 
ஐப்பசி மாதத்தில் காவிரியில் வந்து
 கலப்பதாக ஐதீகம்.

ஐப்பசி மாத 30 நாட்களும் காவேரி 
ஸ்னானம் பண்ண கொடுத்து 
வைத்தவர்கள் அஸ்வமேத யாகம் 
பண்ணிய பலன் பெற்றவர்கள்.  
நம்மால் வணங்கத்தக்கவர்கள் 
என்று தோன்றுகிறது.  

ஐப்பசியின் அனைத்து நாட்களிலும் 
காவிரியில் நீராடினால் அஸ்வமேத 
யாகம் செய்த பலன் கிடைக்கும்.  
விடிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் 
ஸ்னானம் பண்ணினாள் மஹா 
விஷ்ணுவின் அருள் பெறலாம்.

 ஐப்பசி மாதத்தில் காவிரி கரையில் 
முன்னோர்களுக்கு செய்யப்படும்  
தர்ப்பணம், சிராத்தம், பிண்ட 
தானம், ஆகியவை கல்ப கோடி 
வர்ஷபர்யந்தம் பித்ருக்களை 
திருப்திபடுத்தக் கூடியதாகும்.

ஐப்பசி துலா ஸ்னானம் நாம் 
மட்டும் பண்ணவில்லை. சிவன், 
பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்
மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி 
தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும், 
சித்தர்களும் காவிரியில் சூரிய 
உதயத்துக்கு முன்பே ஸ்நானம் 
பண்ணுகிறார்கள். 

 சரஸ்வதி, லட்சுமி, கெளரி, 
இந்திராணி என்று பல தேவியரும்   
இங்கே நம்மோடு காவேரி 
ஸ்னானம் பண்ணுகிறார்கள். 

கூட்டம் ரொம்ப ஜாஸ்தி.

ஐப்பசி 1ம் தேதி திருப்பராய்த்
துறையிலும், ஐப்பசியின் கடைசி
 நாளில் மயிலாடுதுறையிலும் 
காவிரியில் நீராடுவது மிகவும் 
விசேஷமான பலனை தரக் 
கூடியதாகும். நம்மைப்போல் 
முப்பது நாளும் ஸ்னானம் பண்ண 
முடியாதவர்கள் ஒரு மூன்று நாலாவது
 காவேரி ஸ்னானம் பண்ணலாம். 
இன்னொரு வழியும் உண்டு. 
ஐப்பசி கடைசி நாள் அன்றாவது  
துலா ஸ்னானம் பண்ணலாம். 
கடைமுகம், என்று அதற்கு பெயர்.

அதுவும் முடியாத பொது ஒரு நாள்  
அதிகப்படி எக்ஸ்டென்ஷன் கூட  
இருக்கிறது. கார்த்திகை முதல் நாள். 
அதற்கு முடவன் முழுக்கு என்று பெயர்.  

அதற்கு பின்னால் ஒரு கதை ;

எல்லோரும் காவேரி ஸ்னானம் 
பண்ண போகிறார்களே நாமும் 
பண்ணவேண்டாமா என்று வயதான 
முடவருக்கு ஆசை. அவர் இருந்த 
கிராமம் மாயவரத்துக்கு ரொம்ப 
தூரம். கால் ஊனமுற்ற அவர் எந்த 
வண்டியில் வந்து சேர்வார். மெதுவாக 
நொண்டி நொண்டி நடந்தே வந்தார்.  
அவர் வரும் நத்தை வேகத்தில்  
ஐப்பசி மாதமே முடிந்து போய்விட்டது. 
 ஒருவழியாகி காவேரி கரைக்கு 
வந்தபோது கார்த்திகை முதல் தேதி.  

''அம்மா காவேரி, கடை முழுக்காவது 
கிடைக்கும் என்று ஆசைப்பட்டேன். 
மஹா பாவி எனக்கு, முடியாமல் 
போய்விட்டதே'' என்று அழுதார் 

''அப்பனே அழாதே நானே வெகு 
தூரத்தில் இருந்து தான் இங்கே 
வந்து காவேரி அக்காவோடு 
இணைந்தேன். நான் போகிற 
வேளையில் நீ வந்திருக்கிறாய். 
உன் மனோதிடத்தை நான் மெச்சுகிறேன். 
முடியாமல் நொண்டி நொண்டி  
நடந்து ஐப்பசி முடிவதற்குள் வர 
முயற்சித்தாய். ஒரு நாள் அதிகமாகி 
விட்டதே என்று கவலைப்படாதே. 
உனக்காக நான் ஒருநாள் இன்று 
இங்கே இருந்து நீ ஸ்னானம் 
பண்ணிய பிறகு நாளைக்குள் 
போகிறேன்.

அந்த முடவர் புண்யத்தால் நாமும்  
கார்த்திகை 1ம் தேதியாவது 
காவேரியில் முடவன் முழுக்கு 
போட்டு புண்யம் சம்பாதிக்கலாம்.

"காவேரி நமஸ்தேஸ்து, 
மகா பாவநாசினி, 
புண்யம் தத் துலா ஸ்நானே,
 ப்ரதேஹி பரமேஸ்வரி.

கங்கை ச யமுனே சைவ 
கோதாவரி சரஸ்வதி, 
நர்மதே சிந்துஹ் காவேரி 
ஜலேஸ்மின் ஸந்நிதிம் குரு"

நீரில் மூழ்குவதாக எண்ணி தலையில் 
ஒரு மக் MUG தண்ணீர் விட்டு 
நனைத்துக் கொள்வோம். அம்புட்டு
தான் நம்மால் முடிந்தது.

-------------------

Thula month snaana & glory of Kaveri


*ஐப்பசி மாத பிறப்பினை* *முன்னிட்டு ஐப்பசி மாத* *காவிரி துலா ஸ்நானம்* *ஸ்பெஷல் பதிவு* !

*எண்ணத்தை ஈடேற்றித்* *தரும் ஐப்பசி மாத* *காவிரி துலா* *ஸ்நானம்*

ஐப்பசி மாதம் முழுவதும் துலாமாதம் எனப்படும். 

இந்தக் காலங்களில் சூரியோதயத்தில் செய்யும் புனித ஸ்நானம் துலா ஸ்நானம் என்று போற்றப்படுகிறது. 

திருச்சி, தஞ்சை திருவாரூர் முதலான மாவட்டங்களில் ஐப்பசி மாதம் சூரியோதயத்தில் செய்யும் புனித ஸ்நானத்தை *துலா காவிரி ஸ்நானம்*என்றே அழைப்பார்கள்.

இந்தப் பூவுலகில், அறுபத்தாறு கோடி தீர்த்தங்கள் உள்ளன எனச் சொல்கிறது புராணம். 

துலாமாதமான ஐப்பசியில் உலகிலுள்ள அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும் காவிரியில் சங்கமமாகின்றன என்பது ஐதீகம்.

அவை மட்டுமா?

பதினான்கு லோகங்களிலுள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும் காவிரி நதியில் சங்கமமாவதால், ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது மகத்தான பலன்களை வழங்கும் என்கிறார்கள். 

பொதுவாகவே நதி நீராடுதல் என்பது விசேஷம். 

அதிலும் காவிரியில் நீராடுவது இன்னும் விசேஷம். 

அதைவிட மகா புண்ணியம்... ஐப்பசியில் காவிரியில் நீராடுதல்!

துலா மாதத்தில் காவிரியில் நீராடினால், நம்முடைய எல்லாவிதமான
விருப்பங்களும் நிறைவேறும். 

இறுதிக்காலத்தில் எமவாதனையின்றி 
முக்தியும் அடையலாம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ஐப்பசி மாதத்தில் இரவு 
நேரமும் பகல் நேரமும் 
சமமாக இருப்பதால், இதற்கு 'துலா(தராசு) மாதம் என்று பெயர்.

'ஐப்பசி முதல் தேதி அன்று காவிரியில் நீராடுவது புண்ணியம்' என்கின்றன ஞான நூல்கள். 

துலா மாதத்தில் இதர நதிகளும் புண்ய தீர்த்தங்களும் காவேரியில் சேர்ந்து விளங்குகின்றன. 

ஆதலால் அப்போது ஸ்நானம் செய்பவர்கள் பஞ்ச மகா பாதகங்களிலிருந்தும் விடுபடுகின்றனர். 

அதில் ஸ்நாநம் செய்தவர்கள் அச்வமேத யாகம் செய்த பலனையும் அடைகின்றனர்.

துலா மாதத்தில் காவேரிக் கரையில் எவனோருவன் பித்ருக்களை உத்தேசித்து ச்ராத்தம், பிண்டதானம், தர்ப்பணம் இவற்றைச் செய்கிறானோ அப்படிச் செய்யப்பெற்ற அவை கல்ப கோடி வர்ஷபர்யந்தம் பித்ருக்களை த்ருப்தி செய்விக்க வல்லவையாகின்றன. 

பிரம்மா முதலான ஸகல தேவர்களும், ஸரஸ்வதி, கெளரி, லக்ஷ்மி, இந்த்ராணி முதலியவர்களும் அப்ஸர ஸ்த்ரீகளும் துலா மாதத்தில் காவிரியில் ஸ்நானம் செய்ய விரும்பி வருகின்றனர். 

காவேரிக் கரைகளில் 
பிறந்து வளர்ந்த பசு பக்ஷி முதலானவையும் அதன் காற்றினால் பரிசுத்தங்களாக ஆகி, மோக்ஷத்தை அடைகின்றன என்றால் 
பக்தி ச்ரத்தையுடன் ஸ்நானம் செய்தவர்கள் அடையும் பலனைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

மேலும் மஹான்களின் பெருமை, துளஸியின் மஹிமை, கங்கையின் ப்ரபாவம், துளஸியைக் கொண்டு செய்யப்படும் அர்ச்சனையின் வைபவம், ஸாளக்ராமத்தின் ஆராதன மஹிமை, காவேரியின் பெருமை இவற்றை உபதேசிக்கக் கேட்பவர்கள் மஹாபாக்கியசாலிகள். 

ஐந்மாந்தரங்களில் புண்யம் செய்தவர்களே காவேரியைக் காணும் பாக்கியத்தையும் அதில் ஸ்நாநம் செய்ய யோக்யதையையும் பெற்றவர்களாக ஆகின்றனர். 

ஸாமான்யமானவர்களுக்கு இது கிட்டாது. 

நதிகளில் மஹாவிஷ்ணுவின் திருவடியிலிருந்து உண்டான கங்கை எப்படி உயர்ந்ததோ, புஷ்பங்களில் துளஸி எவ்வாறு மேற்பட்டதோ, வ்ரதங்களுக்குள் ஏகாதசி வ்ரதம் எப்படி உயர்ந்ததாக உள்ளதோ, க்ருஹஸ்தர்கள் செய்ய வேண்டிய கர்மாக்களுள் 
பஞ்ச மஹாயஜ்ஞங்கள் எவ்வாறு உயர்ந்தவையோ, சுத்திகளுக்குள் மனசுத்தி எப்படி உயர்ந்ததோ, தேவதைகளுள் ஸ்ரீமந்நாராயணன் 
எவ்வாறு உயர்ந்தவராக விளங்குகிறாரோ,
அக்ஷரங்களுக்குள் ஓங்காரம் எவ்வாறு உயர்ந்ததோ, வேதங்களுள் ஸாமவேதம் எப்படி உயர்ந்ததாகக் கருதப் பெறுகிறதோ, பதினோரு ருத்ரர்களுக்குள் சங்கரம் எப்படி உயர்ந்தவராக உள்ளாரோ, ப்ராஹ்மண ஸ்த்ரீகளுள் அருந்ததி எவ்வாறு மேம்பட்டவளோ, ஸ்த்ரீகளுக்குள்மஹாலக்ஷ்மி எப்படி உயர்ந்தவளோ, தானங்களுக்குள் அன்னதானம் எப்படி உயர்ந்ததோ அதேபோல் நதிகளுக்குள் உயர்ந்தது காவேரி நதி என்று புராணங்கள் கூறுகின்றன.

ஐப்பசி முதல் நாளன்று திருப்பராய்த்துறையிலும் ஐப்பசி கடைசி நாள் மயிலாடுதுறையிலும் நீராடுவது விசேஷமாகக் கருதப்படுகிறது.

துலா மாதமாகிய ஐப்பசியில் பிரம்ம முகூர்த்தத்தில் காவிரி நதியில் நீராடினால், மகாவிஷ்ணுவின் அருள் கிட்டும்.

துலா மாதத்தில் சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை நேரத்திற்குமுன் காவிரியில் மும்மூர்த்திகளும், முப்பது முக்கோடி தேவர்களும், 
68 ஆயிரம் ரிஷிகளும், முனிவர்களும் சித்தர்களும் நீராடுவதாக சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

துலா மாதத்தில் காவிரியில் நீராடுவது புனிதமானது என்று சாஸ்திரம் சொல்லும் அதே வேளையில் இயலாத நிலையில் 'கடைமுகம்' என்று சொல்லப்படும் ஐப்பசி 
30ந் தேதி நீராடி பலன் பெறலாம். 

அன்றும் நீராட முடியாதவர்கள், 'முடவன் முழுக்கு' என்று சொல்லப்படும் கார்த்திகை முதல் தேதி நீராடினாலும்
புனிதம் பெறலாம் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

'ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது காசியில் ஓடும் கங்கை நதியில் நீராடுவதற்கு சமம்' என்று புராணங்கள் கூறுகின்றன. 

ஏனெனில் ஐப்பசி மாதமானது துலா மாதத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான பாரதத்தில் ஓடும் நதி தேவதைகள் அனைத்தும் காவிரியில் நீராடி, தங்களிடம் மானிடர்கள் கரைத்துச் சென்ற பாபக்கறைகளைப் போக்கிக் கொள்கின்றது என்று காவிரி மகாத்மியம் என்னும் நூல் கூறுகிறது.

மக்கள் தங்களுடைய பாவங்களை போக்க கங்கையில் நீராடி நீராடி கங்கைக்கே பாவம் அதிகமாக சேர்ந்து தோஷம் ஏற்பட தன் பாவங்கள் தீர என்ன செய்ய வேண்டும்? என்று விஷ்ணு பகவானிடம் கேட்டாள் கங்கை. 

அதற்கு ஸ்ரீமகாவிஷ்ணு, "நீ காவேரி நதியில் நீராடு. உன் பாவம் நீங்கும்" என்றார்.

அன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்யக்ஷேத்ரே விநச்யதி |
புண்ய க்ஷேத்ரே கிருதம் பாபம் வாரனாச்யாம் விநச்யதி |
வாரனாச்யாம் க்ருதம் பாபம் கும்பகோனே விநச்யதி |
கும்பகோனே க்ருதம் பாபம் காவேரி ஸ்நானே விநச்யதி |

என்று காவேரி ஸ்நானத்தின் மகிமையை வேதம் போற்றுகிறது.

அதன்படியே ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசையன்று கங்காதேவி காவேரியில் நீராடி மக்கள் தன்னிடம் கரைத்த பாவங்களைப் போக்கிக் கொள்கிறாள் என்று 
புராண இதிகாசங்களில் போற்றப்படுகின்றது

துலா மாதத்தில் காவிரியில் ஒருமுறை நீராடுபவன் ஸ்ரீமன் நாராயணனாக மாறுகிறான். 

மற்ற விரதங்களில் ஏதாவது சிறு தவறு ஏற்பட்டாலும் அதற்கு பிராயச்சித்தம் செய்ய வேண்டும். 

ஆனால், காவிரி துலா ஸ்நானத்திற்கு அப்படி எதுவுமில்லை.

'மக்களுக்கு புத்தியும் முக்தியும் அளிக்கும் துலா மாதத்தில் காவிரியில் நீராடுபவர்கள் தன்னையும், தங்கள் குடும்பத்தினரையும், முன்னோர்களின் பாபங்களையும் போக்கிக் கொள்வதுடன் வளமான வாழ்வு காண்கிறார்கள்' என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

'துலா காவிரி நீராடல் அழகு, ஆயுள், ஆரோக்கியம், செல்வம், கல்வி, மாங்கல்ய பாக்கியம், குழந்தைப்பேறு, வலிமை ஆகியவற்றை தரும். 

எனவே, காவிரியை நினைத்தாலும், சிறப்பைக் கேட்டாலும், பாபங்கள் விலகும்' என்றார் பிரம்மா, நதி தேவதைகளிடம்.

ஐப்பசி மாதத்தில் 
காவிரியில் நீராடி 
நீர்க்கடன் செலுத்துவோரின் முன்னோர்கள் சொர்க்கத்தை அடைகிறார்கள். 

காவிரி தேவியை வணங்கி துதிப்பவர்கள் சொர்க்க லோகம் செல்லும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள். 

தன்னில் நீராடுபவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வளமான வாழ்வு தருபவள் என்கிறது காவிரி புராணம்.நதி தேவதைகளும்,

தேவர்களும், மானிடர்களும் துலா மாதத்தில் காவிரியில் நீராடி தங்களிடம் உள்ள பாபங்களைப் போக்கிக்கொண்டதும், 
அந்தக் கறைகள் அனைத்தையும் காவேரி போக்கிக்கொள்ள திருமங்கலக்குடி திருத்தலத்திலும், 
மாயூரத்தில் (மயிலாடுதுறை) உத்தர வாகினியாக (தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்வது) இருந்து காவிரி போக்கிக்கொள்கிறாள் என்பது ஐதீகம்.

ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் அருள்புரியும் ரங்கநாதருக்கு ஐப்பசியில் தங்கக்குடங்களில் ஸ்ரீரங்கத்தின் தென்பகுதியில் உள்ள அம்மா மண்டபம் காவிரி நதிக்கரைப் படித்துறையிலிருந்து புனிதத் தீர்த்தத்தை சேகரித்து யானை மீது எடுத்து வந்து அபிஷேகம் செய்வர். 

மற்ற மாதங்களில் ஸ்ரீரங்கத்தின் வடக்கில் உள்ள கொள்ளிடத்தில் இருந்து வெள்ளிக் குடங்களில் தீர்த்தம் கொண்டுவந்து அபிஷேகம் செய்வார்கள்.

துலா காவேரி மஹாத்மியம்:

ஆதியில் உமாதேவிக்கு ஸ்ரீ பரமேச்வரன் சொன்ன காவேரி மகாத்மியத்தை, தேவ வன்மன் என்ற அரசனுக்கு,சுமத்திரங்கி என்ற ரிஷி சொல்லத் தொடங்குகிறார். 

ஒரு சமயம் பார்வதி-பரமேச்வரர்கள் 
ஒரு நந்தவனத்தில் தங்கியிருந்தபோது அங்கு பறவைகள் வடிவில் வந்த நதி தேவதைகள், துலா மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய்துவிட்டு அவ்விருவரையும் தரிசிக்க வந்தன. 

அவர்கள் வேண்டிய வரங்கள் எல்லாவற்றையும் தந்த ஈச்வரன், மேலும் கூறலானார்:

"கங்கைக்கு நிகரான காவிரியில் நீராடினாலும், தரிசித்தாலும், அதனை பக்தியுடன் தொட்டாலும் அதன் கரையில் தானம், தர்ப்பணம் செய்தாலும் எல்லா பாவங்களும் விலகி, புண்ணியம் கிட்டும். 

இதன் கரைகளில் காசிக்கு சமமான ஸ்தலங்களும் இருக்கின்றன. 

நினைத்ததைத் தரும் சிந்தாமணியான காவேரியின் பெருமையை இன்னும் சொல்கிறேன் கேள்" என்றார். 

அஸ்வமேத யாகம் செய்யத் தொடங்கிய அரிச்சந்திர மகாராஜாவை, முனிவர்கள், பிராயச்சித்தமாக துலா மாதத்தில் காவிரியில் நீராடிவிட்டு வரச்சொன்னார்கள்.

நாதசந்மா என்பவன், பரம பதிவ்ரதையான அனவித்யை என்பவளுடன் காவேரி ஸ்நானம் செய்வதற்காகவும் இருவரும் மோக்ஷ சாம்ராஜ்யத்தைப் பெற வேண்டியும், கௌரி மாயூர க்ஷேத்திரத்தை நோக்கி வந்தான். 

முனிவர்கள், தங்கள் பத்தினிகளுடனும், புத்திரர்களுடனும் தங்கி, ஹோமாக்னி செய்து, பலவித தானங்களை செய்துவரும் அந்த மோக்ஷ புரியில் நாமும் தங்கி நற்கதி பெறுவோம் என்றான் நாதசன்மன். 

அப்படியானால். காவேரி, 
மற்ற எல்லா தீர்த்தங்களை 
விட எவ்வாறு உயர்ந்தது 
என்று, அனவித்யை கேட்க, 
நாத சந்மனும் கூறத்தொடங்கினான்.

காவிரி உருவான கதை:

காவேரன் என்ற அரசன், தனக்குப் புத்திர பாக்கியம் இல்லாததால் பிரம்மாவைக் குறித்துத் தவம் செய்தான். 

பிரம்மாவானவர், "உனக்குப் புத்திர பாக்கியம் இல்லாவிட்டாலும், ஒரு குழந்தையை அளிக்கிறேன்" என்று கூறி, தன மனத்தால் 
ஒரு பெண் குழந்தையை உண்டாக்கி அவனிடம் அளித்தார். 

காவேரி என்ற பெயரில் அவனிடம் வளர்ந்த அப்பெண், தகுந்த கணவனை வேண்டித் தவம் செய்யலானாள். 

பின்னர்,அகஸ்த்திய முனிவரைக் கண்ட காவேரியானவள், இவரே 
தனது மணாளர் ஆவார் என்று நினைத்து, லோபாமுத்ரா என்ற பெயருடன் அவரை திருமணம் செய்துகொண்டவுடன், அவள் விரும்பியபடியே, நதி ரூபமாகி, பிற நதிகளுக்கும் மனிதர்களுக்கும் ஏற்பட்ட பாவங்களை நீக்கவும், மோக்ஷத்தை அளிக்கவும் 
மறு அம்சமாகத் திகழுமாறு, அகஸ்திய மஹரிஷி அருளினார்.

துலாக் காவேரியின் நீர்த்திவலைகள் ஒவ்வொன்றும் புண்ணிய தீர்த்தமாகும். அதிலுள்ள மணல்கள் எல்லாம் தேவதைகள். 

அதனால்தான் உலகிலுள்ள புனித நதிகள் அனைத்தும் துலா மாதத்தில் காவேரியில் நீராடி, மக்கள் தங்களிடம் கரைத்த பாவக் கறைகளைக் கழுவி புனிதமடைகின்றன.

துலா மாதத்தில் காவேரியில் நீராடுபவர்கள், தங்கள் குடும்பத்தினரையும் 
சேர்த்து, மூன்று கோடி உறவினர்களையும் கடைத்தேற்றுகிறார்கள்.

துலா மாதத்தில் காவேரியில் நீராடி, முன்னோர்களுக்கு பிதுர்பூஜை செய்து அன்னதானம், ஆடை தானம் அளித்தால் பித்ருக்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள்.

அழகு, ஆயுள், ஆரோக்கியம், சொல்வளம், கல்வி, வாழ்வில் சுகம் என எல்லாம் கிட்டு மென்று துலாக் காவேரி மகாத்மியம் கூறுகிறது.

ஆதி, இடை, கடை என்னும் மூன்று அரங்கங்களையும் தன்னகத்தே கொண்டு, சதாசர்வ காலமும் இறைவன் நாராயணனின் திருவடியைத் தழுவி வணங்கும் காவேரியின் பேறும் பெருமையும் தன்னிகரற்றது.

தட்சிணகங்கை என்று போற்றப்படும் காவேரிக்கு பொன்னி, விதிசம்பூதை, கல்யாணி, சாமதாயினி, கலியாண தீர்த்தரூபி, உலோபமுத்ரா, சுவாசாஸ்யாமா, கும்பசம்பவ வல்லவை, விண்டுமாயை, கோனிமாதா, தக்கணபதசாவணி என பல பெயர்கள் உள்ளன.

காவேரியில் துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதரை வழிபட்டதன் பலனாக சந்தனு மகாராஜா பீஷ்மரை புத்திரனாக அடைந்தார்;

அர்ச்சுனன், துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதப் பெருமாளை துதித்து சுபத்ராவை மணம் புரிந்தான் என்று புராணம் கூறுகிறது.

முரன் முதலான அசுரர்களை அழித்ததால் மகாவிஷ்ணுவிற்கு
பற்றிய "வீரஹத்தி' தோஷம் போக்க, காவேரியில் ஐப்பசி மாதம் நாக சதுர்த்தியன்று 
துலா ஸ்நானம் செய்து, தோஷம் நீங்கப்பெற்றார் 
என்று துலாக் காவேரி மகாத்மியம் கூறுகிறது

ஐப்பசி முதல் தேதி திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பராய்த்துறையிலும், இரண்டாவது நீராடலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையிலும்,
கடைசி தேதியன்று மயிலாடுதுறை நந்திக் கட்டத்திலும் முழுக்குப் போட வேண்டும் என்பது ஐதீகம்.

தலைக்காவேரி, ராமபுரம், ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, திருவானைக்காவல், சப்தஸ்தானம், திருவையாறு, புஷ்பாரண்யம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, மயிலாடுதுறை, கும்பகோணம், திருவிடைமருதூர் முதலிய காவேரி நீர்த்துறைகள் துலா மாதத்தில் நீராட சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.

துலாக் காவேரி ஸ்நானம் செய்பவர்கள், காவேரி நதிக்குப் பூஜை செய்து வழிபடுவதுடன், அருகில் அரசமரம் இருந்தால் அதற்கு நீர் வார்த்து, அதை வலம்வந்து வணங்குவது புண்ணிய பலன் தரும்.

காவேரிக் கரையில் கோமாதா பூஜை செய்தால் மேன்மேலும் புனிதம் கிட்டும்.

துலா காவேரி ஸ்நானம் செய்யும்முன் தகுந்த புரோஹிதர்களை கொண்டு ஸ்நான ஸங்கல்பம் செய்துக்கொள்வது சிறந்தது. 

முடியாதவர்கள் கீழ்கண்ட ஸ்லோகத்தை கூறி துலா ஸ்நானம் செய்வது உசிதம்.

*கங்கேச யமுனே* *சைவ*
*கோதாவரி சரஸ்வதீ*
*நர்மதே சிந்து காவேரீ*
*ஜலேஸ்மின் சன்னிதிம் குரு*"

Thursday, October 16, 2025

Pants - joke

✈️
The plane going from Vadodara to Dubai had just taken off when suddenly the pilot shouted loudly from the cockpit…

"Oh my God!"

A terrible silence prevailed in the plane.

The passengers were scared and started looking at each other after remembering a recent incident.

Everyone's face turned pale.

😳😱

After a while the pilot apologized to everyone –

🙏

"Passengers, please forgive me. Actually, hot coffee fell on my pants. By mistake the mic was left on and you all heard my scream. If you don't believe me, you can come and see my pants…"

Then an uncle said –

"Come here and see our pants!" 😆🤣

Tuesday, October 14, 2025

9 pearls from Mahabharata

Understand the Essence of the Mahabharata, Which Contains Five Lakh Verses, in Just Nine Lines:

Whether you are a Hindu or from any other religion,
Whether you are a woman or a man,
Whether you are poor or rich,
Whether you are in your country or abroad,in short,
If you are a human being, read & understand the valuable "9 Pearls" from the Mahabharata below:

1. If you do not control your children's unreasonable demands & desires in time, you will end up helpless in life... *"Kauravas"*
2. No matter how strong you are, if you support unrighteousness, your strength, weapons, skills, & blessings will all become useless... *"Karna"*
3. Do not make your children so ambitious that they misuse their knowledge & cause total destruction... *"Ashwatthama"*
4. Never give such promises that you have to surrender to the unrighteous... *"Bhishma Pitamah"*
5. The misuse of wealth, power, authority, & the support of wrongdoers ultimately leads to total destruction... *"Duryodhana"*
6. Never hand over the reins of power to a blind person, meaning someone who is blind by selfishness, wealth, pride, knowledge, attachment, or lust, as it will lead to destruction... *"Dhritarashtra"*
7. If wisdom accompanies knowledge, you will surely be victorious... *"Arjuna"*
8. Deceit will not lead you to success in all matters at all times... *"Shakuni"*
9. If you uphold ethics, righteousness, & duty successfully, no power in the world can harm you... *"Yudhishthira"*

       *Jai Shree Ram*