Wednesday, June 18, 2025

Sundara moorthy nayanar story part 2

தம்பிரான் தோழர் -   நங்கநல்லூர்  J K  SIVAN 

''நானும்  இறந்து போகிறேன்'' 
பரவை நாச்சியாரையும் சுந்தரரையும்  இணைக்க    தரகனாக பரமேஸ்வரன்  பல நாட்கள் நடந்து அலைந்து சந்தோஷமாக இருவரையும்  சேர்த்து வைத்த  விஷயம் பல  சிவபக்தர்கள்  காதுகளை நிரப்பியதில் அவர்கள் அதிசயித்து மகிழ்ந்தார்கள்.  ஆனால் இந்த விஷயம்  தனது காதில் காய்ச்சிய சூடான  ஈயமாக இறங்கி ஒருவர் படு பயங்கர கோபத்தில் இருந்தார்.  அவர் பெயர்  ஏயர் கோன் கலிக்காம நாயனார்.                                                                

''அடடா,   என்  பரமேஸ்வரனை,  பரவை  என்பவளிடம்  பலமுறை தூது  அனுப்பிய சுந்தரரை  நான் விட்டேனா பார் '' என கோபத்துடன் கிளம்பினார் .

 காவிரி நதியின் வடகரையில் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு கிராமம் திருப்பெருமங்கலம் .அங்கே வேளாளர் ஒருவர்  சிறந்த சிவபக்தர். அவர் தான் மேலே  சொன்ன ஏயர்கோன்  கலிக்காம நாயனார்.  அறுபத்து மூன்று சிவனடியார்களில்  ஒருவர். எல்லா சிவாலயங்களிலும்  வரிசையாக நிற்பவர்களில்  ஒருவர்.   ஏயர்கோன் என்பது குலப்பெயர். அவர் பெயர் கலிக்காமன் . மானக்கஞ்சார நாயனார்  பெண்ணை மணந்தவர்.   நந்தனார் சென்று வழிபட்ட  திருப்புன்கூர்  சிவலோகநாதன் ஆலயத்திற்கு நிறைய  திருப்பணிகள் புரிந்தவர்.
பெருமூச்சு விட்டார்  கலிக்காமர்.  ''என்ன  துணிச்சல் இந்த சுந்தரனுக்கு?  என் பகவானை ஆண்டவனை தொண்டனாக தூது செல்ல ஏவுபவனும் ஒரு பக்தனா? இது என்ன பாவம்! இப்பெரும் பிழையை  சுந்தரன் செய்தான் என்று காதால் கேட்டும் இன்னும் உயிரோடு இருக்கிறேனே. மஹா பாவி நான். பெண்ணாசை பிடித்த  ஒருவனுக்காக, அவன் பக்தன்  என்பதால், அவன் ஏவியதற்காக  ஓரிரவெல்லாம் தேரோடும் வீதியில் வருவதும்   போவதுமாக  என்  பரமசிவன்  அலைந்தானா? நான்முகன்.  மால் ஆகிய தேவரெல்லாம் தொழும் தேவாதி தேவன் தூது செல்ல இசைந்தாலும் அவ்வாறு  சுந்தரன்  சிவனை  ஏவலாமா? இப்பாவச் செயலைச் செய்த   சுந்தரனை நேரில் பார்த்தால்  என்ன செய்வேன் என்று எனக்கே தெரியவில்லை  என்று பொருமினார்  கலிக்காமர்.
இந்த  விஷயம் சுந்தரர் காதில் விழுந்தது.  பகவானே, சிறந்த சிவபக்தர்  கலிக்காமர்  மனம் நோவாமல் இருக்க, கோபம் தீர,  நீ தான் உதவவேண்டும் என்று வேண்டிக்கொண்டார். 
திருவாரூர்  தியாகேசன் மனம் இளகியது. இருவரையும் நேசிப்பவர் அவர். அவர்களை நல்ல நண்பர்களாக்க திட்டம் தீட்டினார்.  
திடீரென்று  கலிக்காம நாயனாருக்கு தாங்கமுடியாத  வயிற்று வலி, சூலை நோய் வாட்டியது. எந்த மருந்தும் உதவ வில்லை.  வருத்தம் தாங்காது சிவபெருமான் திருவடியை நினைத்து சூலை நீங்கும்படி வேண்டினார். அப்போது சிவபெருமான் அவர் முன் தோன்றினார்.
"கலிக்காமா, உன்னை வருத்தும் சூலை வன்றொண்டன் சுந்தரன் தீர்த்தாலன்றித் தீராது" எனக் கூறினார். அதுகேட்ட கலிக்காமர்
 "வழிவழி அடியனான என் வழியை,  வருத்தத்தை வம்பனான அவ்வன்றொண்டன்  சுந்தரனோ தீர்ப்பவன்? அவன் தீர்க்க  என் வலி  தீர்வதைக் காட்டிலும் என்நோய் என்னை வருத்துதலே நன்று' என்றார் கலிக்காமர்.
சிவபெருமான் வன்றொண்டர் முன் தோன்றினார் .''சுந்தரா,  என்  எண்ணத்தால், ஏயர்கோன் உற்ற சூலைநோயை நீயே  நேரில் சென்று தீர்ப்பாய்' எனக்  கட்டளையிட்டார்
 நம்பியாரூராரும்  பரமேஸ்வவரனை வணங்கிப்  பணிந்து விரைந்து தாம் சூலைநோய் மாற்ற வருஞ் செய்தியை ஏயர்கோனார்க்குச் சொல்லியனுப்பினார். அதனைக்  கேட்ட கலிக்காமர்  வெகுண்டு, 
 'மற்றவன் வந்து நீக்குதன் முன்னமே என்னை நீங்காப் பாதகச் சூலை தன் உற்ற இவ் வயிற்றி னோடும் கிழிப்பேன்'' என்று தனது உடைவாளால் தன வயிற்றைக் கிழித்தார்.  உடைவாளால் வயிறு கிழிந்து  கலிக்காமரின் சூலை நோய்,   அவர்  உயிர்  ரெண்டுமே  தீர்ந்து போய்விட்டது.
கலிக்காமர் இறந்ததைக்  கண்ட  அவரது  மனைவி   அக்கணமே  உடனுயிர் விடத்துணிந்தாள் . அப்பொழுது சுந்தரமூர்த்தி சுவாமிகள்  வீட்டு வாசலுக்கு வந்து விட்டார் என்று   கூட இருந்தவர்கள்  சொல்லக் கேட்டார். தம் கணவர் உயிர் துறந்த செய்தியை மறைத்து நம்பியாரூரரை எதிர் கொள்ளும் படி சுற்றத்தார்களை ஏவினார். அவர்களும் நம்பியாரூரரை எதிர்கொண்டு அழைத்து வந்து ஆசனத்தில் இருத்தி வழிபட்டுப் போற்றினர். அவர்களது வழிபாட்டினை ஏற்ற சுந்தரர் 'கலிக்காம ருடைய சூலைநோயை நீக்கி அவருடன்  சேர்ந்து இருப்பதற்கு மிக ஆவலாக  இருக்கிறேன்' என்றார். 
அப்பொழுது கலிக்காமரது மனைவியார் ஏவலால் வீட்டிலுள்ள பணியாளர்கள் வணங்கி நின்று 'சுவாமி! அவருக்கு  இப்போது சூலைநோயோ வேறு எதுவுமோ இல்லை. உள்ளே பள்ளி கொள்கின் றார்' என்றனர். 
இதைக் கேட்ட சுந்தரர்,  '' கலிக்காமருக்கு  ஒரு தீங்கும் இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். இருப்பினும் என் மனம் தெளிவு பெறவில்லை.   நான் அவரை  உடனே  பார்க்க வேண்டும்  அழைத்து வாருங்கள் ' என்றார். 
''வாருங்கள் என்று  சுந்தரரை உள்ளே கிடந்த  கலிக்காமர் உடலருகே அழைத்து சென்றார்கள்.  கலிக்காமர் குடல்   சரிந்து உயிரற்ற  பிணமாக  கிடப்பதைக்  கண்ட சுந்தரர் 
''ஆஹா, இப்படியா  நிகழ்ந்தது  என்று நடந்ததை அறிந்தார்.  நானும் இவரைப் போலவே   இறந்து போவது தான் நல்லது ''  என்று  அருகே இருந்த  உடைவாளை  பற்றினார். 
அப்பொழுது அங்கே ஒரு ஆச்சர்யம் நடந்தது.   பரமேஸ்வரன்  அருளால் கலிக்காமர் உயிர் பெற்றெ ழுந்து "கேளிரேயாக்கிக் கெட்டேன்" என்று சுந்தரர் கையிலுள்ள வாளைப் பிடித்துக்கொள்ள, ஆரூரர் விழுந்து வணங்கினார்.
கலிக்காமரும் வாளை விட்டெறிந்து நம்பியாரூரர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். இருவரும் எழுந்து ஒருவரை ஒருவர் அன்பினால் தழுவிப் பிரியாத நண்பராகித் திருப்புன்கூர்ப் பெருமான் சிவலோகநாதன்   திருவடிகளை வணங்கிப் போற்றினர். 
அப்புறம்  நம்பியாரூரருடன் சென்று திருவாரூர்ப் பெருமானை வழிபட்டு அங்குத் தங்கிய ஏயர்கோன் கலிக்காமர் ஆரூரர் இசைவு பெற்றுத் தம்முடைய ஊருக்குத் திரும்பினார். அங்கு தமக்கேற்ற திருதொண்டுகள் புரிந்திருந்து சிவபெருமான் திருவடியைச் சேர்ந்து இன்புற்றார்.

Tuesday, June 17, 2025

Koorathaazhwan story part2

வைணவ விண்ணொளி -  நங்கநல்லூர்  J K  SIVAN கூரத்தாழ்வான்.        
''அருமையான குருவும் அபிமான சிஷ்யனும் ''-2 
ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ராமானுஜருக்கு நீண்ட நாள் பிரிந்திருந்த குழந்தைகளை மீண்டும்  பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி. விரைவில் ஸ்ரீ ராமானுஜரின் பிரதம சிஷ்யனானார் கூரேசர். ஆச்சர்யனின் வலது கரமாகவும், கண்ணாகவும், செவியாகவும் ஏன், மனசாட்சியாகவுமே சேவை சாதித்தார். சுருக்கமாக சொன்னால், கூரேசர் ஸ்ரீ ராமானுஜரின் நிழலானார்!. 
ஸ்ரீ ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அனேக வைஷ்ணவர்கள் பின் பற்றினர். அடியார் கூட்டம் பலத்தது,  ஒரு சித்தாந்தம், கோட்பாடு,  தத்துவம் கொள்கை, சீர் பட வேண்டுமெனில் முறை ஒன்று தேவை அல்லவா?. எனவே ஸ்ரீ ராமானுஜர் "ஸ்ரீ ராமானுஜ தர்சனம்" எழுத ஆரம்பித்தார். 4 முக்ய சீடர்கள் (கூரேசர், தாசரதி, தேவராட், எம்பார்) உதவினர் இரவும் பகலும் வேத சாஸ்த்ரங்கள், சூத்ரங்கள் திருவாய் மொழி போன்று  பல நூல்களை எல்லாம் ஆராய்ந்து  அலசினர். விசிஷ்டாத்வைத சித்தாந்தம் படிப்படியாக உரு பெற்றது. ஸ்ரீ ராமானுஜர் வியாசரின் பிரம்ம சூத்ரத்துக்கும் பாஷ்யம் எழுத தொடங்கினார். 

" கூரேசா, நீ தான், நான் சொல்ல சொல்ல என்னுடைய  பாஷ்யத்தை எழுதணும். நான் எதாவது தடம் மாறி சொன்னா எழுதறதை நிறுத்தணும். உடனே நான் புரிஞ்சிப்பேன்". 

இப்படி தான் ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீ பாஷ்யம் தோன்றியது. ஒருநாள் ஸ்ரீ ராமானுஜர் ஜீவாத்மா பற்றிய விளக்கம் சொல்லிக்  கொண்டு வந்தபோது கூரேசர் எழுதுவதை நிறுத்தினார். குருவை நோக்கி னார்.  பல நாட்கள் இரவுகள் சிந்தித்த எண்ண ஓட்டம் தடை பட்டதில் ஆசார்யனுக்கு கோபம் வந்தது. வயதாகி விட்டதல்லவா? எழுதுவது நின்றால் சிந்தனை தொடரில் பிசகு என்றல்லவா அர்த்தம்? வெடித்து விட்டார்  ஆசார்யன்.

"கூரேசா, என்னைக்காட்டிலும் நீ வியாசரின் சூத்ரத்துக்கு பாஷ்யம் சரியாக எழுதுவதாக நினைத் தால் நீயே எழுது. போ"" என்று கூரேசரை விரட்டினார். மற்ற சீடர்கள், "ஏன் கூரேசா,  இவ்வாறு செய்தாய்?" என வினவினர்.   என்ன விபரீதம் இது என நடுங்கினர். "நண்பர்களே,  கவலை வேண்டாம். நான் ஆசார்யனின் அடிமை. அவர் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், செய்யலாம்." 

இதற்கிடையில் கூரேசர் எழுதியிருந்ததைப்  படித்த ஸ்ரீ ராமானுஜர் தான் சொல்லிக் கொண்டுவந்த வாசகத்தில் ஓரிடத்தில் முரண்பாடு இருந்ததையும் கூரேசர் அதை சுட்டிக்  காட்டியது சரி என்பதையும் உணர்ந்தார். ஜீவாத்மா தனித்வம் கொண்டதாக இருந்தாலும் இறைவனிடம் சேஷத்வம் கொண்டது என்று தான் கூரேசன் திருத்தியபடி இருக்கவேண்டும் என தனது தவறை அறிந்தார். "அடேடே , வெளிச்சத்தை பற்றி சொல்லும்போது அதற்கு காரணமான சூரியனை மறந்து போனேனே" என்று வருந்தினார், மஹா புருஷரல்லவா?.

"என் மகனே, கூரேசா,  நீ சுட்டிக் காட்டியது சரி தான். ஜீவாத்மா ஸ்வரூபத்தை நீ விளக்கியவாறே எழுது. மேலே தொடர்வோம்" 

இவ்வாறே ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீ சம்ப்ரதாயம், ஸ்ரீ பாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த சாரம், வேதார்த்த சங்க்ரஹம், கீதா பாஷ்யம் எல்லாம் உருப்  பெற்றது . எங்கேயோ ஒரு நிரடல் ஸ்ரீ ராமானுஜருக்கு. விசிஷ்டாத்வைத சித்தாந்தம் பூரணமாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டு மானால் வியாசரின் " போதாயன வ்ருத்தி" என்கிற ஓலை சுவடு நூல் அவசியம். அதிலிருந்து மேற்கோள் காட்ட வேண்டும். அதை எங்கே தேடுவது? காஷ்மீரத்தில் ராஜாவுடைய லைப்ரரியில் கிடைக்குமா ? மற்ற பாஷ்ய காரர்களின் உரை ( குகதேவர், பருசி, தங்கா, திராமிடர்) எல்லாம் கூட ஒரே இடத்தில் காஷ்மீரத்தில் கிடைக்கலாமே. 

ஸ்ரீ ராமானுஜர் வயதான காலத்திலும் கால்நடையாக திக்விஜயம் கிளம்பினார். போகுமிடமெல்லாம் விசிஷ்டாத்வைத பிரசாரம்!  வழியில்  எங்கெங்கெல்லாம் தங்கினாரோ அங்கெல்லாம் ராமானுஜ கூடங்கள், மடங்கள் எல்லாம் உருவாயின. கூரேசன் முதலான சிஷ்ய கோடிகள் ஸ்ரீரங்கத்திலிருந்து அவரைப் பின் தொடர்ந்தனர். காஷ்மீர் ராஜா அவ்வளவு சீக்கிரத்தில் ராமானுஜரையும் விசிஷ்டாத்வைத சித்தாந்தமும் ஏற்றுக் கொள்வானா? நாட்கணக்கில் பண்டிதர்களுடனும், வேதாந்திகளுடனும் விவாதம். முடிவில் ராமனுஜரின் மகிமை பெருமை எல்லாம் ராஜா உணர்ந்தான். கூரேசனுக்கு ராஜாவின் லைப்ரரியில் வேண்டிய ஓலைச் சுவடி தேட அனுமதி கிடைத்தது. தோற்றுப் போன  அரண்மனை பண்டிதர்களுக்கு பொறாமை ஞாயம் தானே? போதாயன வ்ருத்தி ஓலைச்சுவடி கிடைக்காதபடி செய்ய எண்ணம் வந்தது. ஓலைச்சுவடி லைப்ரரியை  விட்டு வெளியே நகரக்கூடாது. அங்கேயே படிக்கப்பட வேண்டும் என்று ராஜாவின்  அனுமதி பெற்றார்கள்.  ஸ்ரீ ராமானுஜரும் கூரேசரும் அங்கேயே படிக்க ரெடி. ஓலைச்சுவடியிலிருந்து குறிப்பு எடுக்கக் கூடாது என்று மற்றொரு கெடுபிடி.   விடுவாரா கூரேசர்?. ஆஹா அப்படியே அன்று முதல் அனைத்து ஓலைச்சுவடிகளையும் மனப்பாடம் செய்ய ஆரம்பித்தனர் இருவரும். வேறு வழியில்லை இந்த இருவரையும் கொல்வது தான் முடிவு என பண்டிதர்கள் தீர்மானிக்க இருவரும் காஷ்மீரை விட்டு வெளியேறினர். 

ஸ்ரீரங்கம் திரும்பியதும் ஸ்ரீ பாஷ்யம் எழுதத்  தொடங்கினர். கூரேசரின் அபார ஞாபக சக்தியால் ஓலைச்சுவடியின் அத்தனை விஷயங்களும் எழுத்தில் மிளிர்ந்தது. பல வருஷங்கள் ஆயிற்று இந்த அதிசயத்தை பூர்த்தி செய்ய. ஸ்ரீ ராமானுஜருக்கு பரம திருப்தி. கூரேசனின் புத்தி கூர்மையால் தான் தன் எத்தனையோ வருட கனவு நிறைவேறியது என மன நிறைவு. ஸ்ரீ வைஷ்ணவமும் ராமானுஜ ப்ரபாவமும் நாடெல்லாம் இப்போது பரவியது. அநேக சிஷ்யர்களும் தொண்டர்களும் அவர் பின் இப்போது. ராமானுஜர் வாசம் செய்த ஸ்ரீ ரங்கம் தான் வைஷ்ணவத்தின் தலைநகர் என ஆயிற்று. ஆசார்யனுக்கு தனது குருவுக்கு வாக்களித்ததை நிறைவேற்றியதில் களிப்பு.

Sundaramoorthi nayanar story part 1

தம்பிரான் தோழர் - நங்கநல்லூர் J K SIVAN சுந்தரமூர்த்தி நாயனார் 
பரவையிடம் தூது

ஒரு மனைவி இறைவன் அருளால் தனக்கு கிடைத்த கணவன் மீது அளவற்ற அன்பும் காதலும் கொண்டவள், வெகுநாளாக யாத்திரை சென்றவன் திரும்பி வருகிறான் என்று அறிந்தால் எவ்வளவு சந்தோஷம் அடைவாள்? இதைத் தெரிந்து கொள்ள நாம் இப்போது திருவாரூர் செல்கிறோம். அங்கே பரவை பரிபூர்ண ஆனந்தத்தில் இருப்பதைக் காண்கிறோம். அன்று ரெண்டு சூரியன். ஒன்று வானத்தில், இன்னொன்று பரவை வதனத்தில்.

'' அம்மா, அய்யா ஊருக்கு வந்துகிட்டு இருக்கிறாரு '' என்று பரவையிடம் தோழியர்கள் சொல்லும் போது தான் மேலே சொன்ன ரெண்டு சூரியனைப் பார்த்தோம். அடுத்த கணம் அங்கே ஒரு கிரஹணம் நடந்ததையும் பார்க்க வேண்டி இருக்கிறதே.  
 'அப்பா, எவ்வளவு நாளாச்சு அவரைப் பார்த்து. உடனே தட புடலா அவரை வரவேற்கணும்.  
''ஆனால் அம்மா......''''
''என்னடி .. ஆனால் என்று இழுக்கிறாய்.... என்ன சொல்ல நினைக்கிறாய் சொல். தயக்கமே வேண்டாம்...''
''அம்மா, ஐயா வந்துட்டாரு ... ஆனால், கூடவே ஒரு பொண்ணும் அவரோடு வருது. 
''யாரு அது '
''அவரு தாலி கட்டின மனைவியாம். ... சங்கிலின்னு பேராம் '''
''என்ன சொல்கிறாய் நீ? என் சுந்தரர் இன்னொரு பெண்ணுக்கு தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டாரா..? பறவைக்கு எதிரே உலகம் படபடவென்று வெடித்து சிதறி, சுழன்றது. ஒரு இருள் சூரியனைக் கவ்வியது. எங்கும் வெள்ளம் 'ஓ' வென்ற பேரிரைச்சலுடன் உலகத்தை மூடியது. பரவை, காது கேட்ட இடியில் வாடி கண்ணீரால் நிரம்பினாள். கடலில் மூழ்கி எங்கோ ஆழத்தில் மூச்சு திணறுகிறாள். துக்கம் தொண்டையை அடைத்து பேச்சு வரவில்லை. பரவையைச் சேர்ந்தவர்கள் கோபம் கொண்டு சுந்தரரை பரவையின் வீட்டை நெருங்க விடவில்லை.
சுந்தரர் விஷயம் அறிந்து திகைத்தார். சில பெரியவர்களை அனுப்பி பரவையைச் சமாதானம் செய்ய சொல்லியும் எந்த பயனுமில்லை. முயற்சி தோல்வியில் முடிந்தது.

''தியாகராஜா, எல்லாம் உன் திருவிளையாடல். நான் ஒரு துரும்பு. என்னை ஆட்டுவிப்பது நீ தானே. இந்த கணம் வரை எல்லாம் உன் சித்தப்படி தான் என் வாழ்வில் நடக்கிறது. இனிமேலும் உன் சித்தம் எவ்வாறோ அப்படியே நடக்கட்டும்.'' என நெக்குருகி வேண்டினார். இரவெல்லாம் சிவனை வேண்டி கண்ணீர் வடித்தார் சுந்தரர்.    
''சுந்தரா, எல்லாமே உனக்கு நல்லதாக நடக்கும் கவலைப் படாதே. பொறுமையாக இரு'' என்கிறார் சிவன்.

மறுநாள் காலை யாரோ கதவை தட்ட பரவை வீட்டு வாசல் கதவை திறக்கிறாள் . எதிரே ஒரு முதிய பிராமண சிவனடியார் நிற்பதைக் கண்டு உபசரித்தாள். அன்றாடம் எத்தனையோ பேர் வருவார்கள். உணவளிப்பாள் .

தான் ஊரில் விஷயம் கேள்விப்பட்டதை அறிந்து பரவையை சமாதானப் படுத்தி சுந்தரரையும் சங்கிலியையும் ஏற்றுக் கொள்ள பரவையிடம் சிபாரிசு செய்தார். பரவையின் பிடிவாதம் வென்றது. தோல்வி கண்ட முதியவர் சுந்தரரிடம் சென்று நிலைமையை எடுத்துச் சொன்னார்.
''வேறு வழி இல்லையென்றால் நான் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்'' என்று கலங்கினார் சுந்தரர்.
''மீண்டும் சென்று சொல்லிப் பார்க்கிறேன்'' என்கிறார் முதியவர். 

மீண்டும் வீட்டுக்கு வந்த அந்த பெரியவரை பரவை கோபத்துடன்
 ''சிவபெருமானை இந்த அல்ப விஷயத்துக்கு இழுத்து அவமதிக்காதீர்கள். அவர் இதற்கெல்லாம் உடன்படுபவர் அல்ல''
''ஓஹோ, அப்படியா. நான் சொல்வதை பரமேஸ்வரன் சொல்வதாக ஏற்றுக் கொள் அம்மா . மறுக்காதே. வேண்டுமானால் அவரையே நீ நேரில் கண்டு கேளம்மா'' என்று முதியவராக தூது வந்த பரமேஸ்வரன் பரவைக்கு காட்சி தந்து அருள்கிறார்.  
''ஈஸ்வரா, தாங்களா ப்ராமண முதியவராக வந்து என்னை சோதித் தது. அடியேன் செய்த பெரும் பிழையை மன்னித்தருளவேண்டும். என் குடிசைக்கு வந்து என்னை ஆசிர்வதித்த உங்கள் சொல்லை மறுப்பேனா. என் தவறை புறக்கணித்து என் மீது கருணை காட்டவேண்டும் தியாகராஜ ப்ரபோ''.
என்று காலில் விழுந்து வணங்கினாள் பரவை .
 ''ஆஹா, என்ன பாக்கியவான் சுந்தரர், உங்களை நள்ளிரவும் பகலும் என்னைத் தேடி அவருக்காக தூது செல்ல வைப்பதற்கு. அவரது பக்திக்கு முன் நான் ஒரு துரும்பு. அவர் திருவடிகளில் வீழ்ந்து என் தவறை மன்னித்து ஏற்றுக் கொள்ள செய்கிறேன்.''
சிவன் மறைந்து விட்டார்.
பரவை சுந்தரரை நோக்கி ஓடுகிறாள். அதற்குள் முதியவர் சுந்தரரை சந்தித்து ஆறுதல் சொல்கிறார்:
''சுந்தரா, இனி நீ பரவை இல்லத்தை நோக்கி செல்லலாம் . உங்கள் இருவரையும் வரவேற்க காத்திருக்கிறாள். ஒருவாறு அவளைச் சமாதானப் படுத்தி விட்டேன் '' 

முதியவரை வணங்கிய சுந்தரர் நிமிர்வதற்குள் பிராமணர் மறைகிறார். சுந்தரர், தனக்கு தூதுவனாக வந்த முதியவர் தியாகராஜரே என அறிந்து நன்றியால் கண்ணீர் வடிக்கிறார். பரவை சுந்தரர் திருவடிகளில் விழுந்து வணங்கி அவரை வரவேற்று தனது தவறுக்கு வருந்துகிறாள். குடும்பம் ஒன்று சேர்ந்தது.

சுந்தரர் சங்கிலியை வேற்றூரில் மணந்தது, திருவாரூர் திரும்பிய அவரையும் சங்கிலியையும் பரவை வெறுத்தது, இணைய மறுத்தது பிறகு சிவனையே தூது செல்ல வைத்து சுந்தரர் பரவையுடன் மீண்டும் இணைந்த செய்தி காட்டுத்தீ போல் அந்த சிறு திருவாரூர் கிராமத்தில் மட்டுமல்ல அண்டை அசல் ஊர்களிலும் பரவியது.

எல்லோரும் இதெல்லாம் கேட்டு ஆச்சரியப்பட இந்த செய்தி ஒருவர் காதில் மட்டும் காய்ச்சிய ஈயம் போல் நுழைந்து அவரை துடிக்க வைத்தது. அவர் ஒரு சிறந்த சிவ பக்தர். சிவனையே மூச்சாகக் கொண்டு வாழ்ந்த ஒரு சிவனடியார்.  

'என்ன அநியாயம் இது.? ஸாக்ஷாத் சிவபெருமானையே வா அந்த சுந்தரர் இவ்வாறு ஏவி அற்பமாக நடத்தினார்? என்னால் இதை ஜீரணிக்க முடியவில்லை...'' என்று நெருப்பை, அனலை மூச்சாக வெளி விட்டார். அவ்வளவு கோபத்துடன் அவர் என்ன செய்தார்?
தொடரும்

koorathaazhvaan

வைணவ விண்ணொளி -  நங்கநல்லூர்  J K  SIVAN கூரத்தாழ்வான்.        
''அருமையான குருவும் அபிமான சிஷ்யனும் ''- 3 
கூரேசருக்கு ஒரே  ஒரு குறை. தனக்கு புத்ர பாக்யம் இல்லையே  என்று.    ஸ்ரீ ரங்கத்தில்  அவரது வாழ்க்கை   எளிமையாக குரு  ஸ்ரீ ராமானுஜருக்கு சேவை செய்வதிலும்    நித்ய   உஞ்சவ்ரத்தியிலுமாக  சென்று கொண்டிருந்தது. ஒருநாள் கொட்டும் மழை நிற்கவில்லை. எனவே கூரேசரால்  உஞ்சவ்ரத்திக்கு வெளியே போக முடியாததால்  அன்று அவருக்கும்  அவர் மனைவிக்கும்  உணவில்லை. துளசி ஜலம் தான் ஆகாரம். அன்றிரவும் வாயு பக்ஷணம் தான் போலும்.   இதில் கூரேசருக்கு வருத்தமே இல்லை. பரம சந்தோஷம். ஆஹா,  இன்று திருவாய் மொழி படிக்க நிறைய நேரம் கிடைத்ததே என்று ஆனந்தம்.!. ஆண்டாளுக்கோ நெஞ்சிலும் வயிற்றிலும் வலி. தனக்கு பசி என்பதற்காக அல்ல,  அருமையான  ஒரு காலத்தில்  ராஜாவாக இருந்த  தன்னுடைய  கணவர்  இப்படி  பட்டினி கிடக்க  நேர்ந்ததே  என்று.!. 
நேரம் ஓடியது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மணி சாயந்தர நைவேத்ய பூஜையை அறிவித்தது. ஆண்டாள் அம்மாள் கண்களில் தாரை தாரையாக கண்ணீர். அவள் மனம் என்ன வேண்டியது தெரியுமா? 
 "ஹே!! ரங்கநாதா உன் பக்தன் இங்கே ஆகாரமின்றி வாட உனக்கு மட்டும் உண்ண மனம் வருகிற தா?" 
ரங்கன் இதை கேட்டு சும்மாவா இருப்பான்?  அன்றிரவு   கோவில் பிரதான பட்டாச்சார்யர் உத்தம நம்பியின் செவியில் ஒரு குரல் ஒலித்தது : 

"உடனே பிரசாதங்களுடன் கூரேசன் வீட்டுக்கு போ. பசியோடு உள்ளான். என் ஆசிகளையும் பிரசாதத்துடன் அனுப்பினேன் என்று சொல்". 

உத்தம நம்பிக்கு உடல் சிலிர்த்தது வியர்க்க விருவிருக்க ஓடினார். மேள தாளங்களுடன் ரங்கனின் நைவேத்ய பிரசாதங்களுடன் அனைவரும் புடை சூழ நள்ளிரவில் கூரேசன் வீட்டுக்கு நடந்தார். வெறும் ஜலம் அருந்தி படுத்திருந்த கூரேசன் திடுக்கிட்டார். உத்தம நம்பி சொன்னதை அவரால் நம்பவே முடியவில்லை. ரங்கனின் கருணை அவரை திக்குமுக்காட வைத்தது. ஆண்டாள் அம்மா மனதில் நன்றியுடன் ரங்கனை வணங்கினாள். 
''இது ரங்கன் அனுப்பியது. அவசியம் நீங்கள் ஏற்றுகொள்ள வேண்டும்" என்றாள். கூரேசன் மனதில் ஒரு ஐயம். இது ஆண்டாளின் வேலையோ? என்று. அவரது கேள்விகளுக்கு விடையாக, தான் ரங்கனிடம் முறையிட்டதை சொன்னாள். 

"ஆண்டாள்,  நீ என்ன காரியம் செய்து விட்டாய் ஒரு கவளம் சோற்றுக்காக அந்த பேர் அருளாளனை சோதிக்கலாமா? "இரவு ரங்கன் கூரேசன் கனவில் தோன்றினான்.
 " கூரேசா! நான் உனக்கு அனுப்பியது வெறும் சோறு மட்டும் அல்ல. உனக்கும் ஆண்டாளுக்கும் பிறக்கப்போகிற இரண்டு குழந்தைகளுக்கான வரப்ரசாதமும் கூட . அவர்கள் எம் குழந்தைகளும் ஆவர். எம்மை அவர்களில் நீங்கள் இருவரும் காண்பீர்"கூரேசர் குதித்து எழுந்தார். 

"அடியே ஆண்டாள், இந்த அதிசயத்தை கேள்" என்று கூரேசர் அவளை எழுப்பி விவரம் சொன்னதில் அவளது சந்தோஷத்தை எழுத எனக்கு வார்த்தை இல்லை. ராமானுஜருக்கு விவரம் சென்றது. ஒரே வருடத்தில் இரு பிள்ளைகள் பிறந்தன. ராமானுஜரே அவர்களுக்கு "வியாச பட்டர்" " பராசர பட்டர்" என நாமகரணம் செய்வித்தார். பிற்காலத்தில் பராசர பட்டரே ராமானுஜரின் வாரிசாக ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ சம்பிரதாய ஆன்மீக சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்தியவர்.

ஸ்ரீ ராமானுஜருக்கு வயது ஆகிவிட்டது. ஸ்ரீ வைஷ்ணவம் எங்கும்  வேரூன்றி விட்டது. எண்ணற்ற வைஷ்ணவர்கள் அவரைப்  போற்றினாலும் சில எதிரிகளும் முளைத்தனர். சைவ சமயம் அவரை எதிர்க்காவிட்டாலும் சில சைவர்கள் அவர் வளர்ச்சியில் கவலை கொண்டனர். கங்கைகொண்ட சோழ புரத்தில் ஒரு கிளர்ச்சி. அவருக்கும் ஸ்ரீ வைஷ்ணவத்துக்கும் தீவிர எதிர்ப்பாக அமைந்தது. அந்த காலத்தில்  சோழ தேசத்தை ஆண்ட  சோழ ராஜா குலோத்துங்கன் வம்சத்தில் வந்த  , கிருமி கண்ட சோழன் ஒரு வீர சைவன். தனது ராஜ்யத்தில் வைஷ்ணவத்தை  பூண்டை வேரோடு அழிக்க நினைத்தான். அது ராமானுஜரை அழித்தால் மட்டுமே முடியும். 

"அழைத்து வாருங்கள் அந்த ராமானுஜனை இங்கே" , கட்டளை பிறந்தது. ராமானுஜரை தனது சைவ குருமார்களுடன் விவாதம் செய்ய வைத்து தோற்கடிக்க வேண்டும் வைஷ்ணவத்தை விட்டு சைவத்தை ஏற்க செய்யவேண்டும், மறுத்தால் கொன்றுவிடவேண்டும். இந்த எண்ணம் செய்தியாக கசிந்து சில பக்தர்கள் ராமானுஜரிடன் ஓடினர். எக் காரணம் கொண்டும் நீங்கள் கங்கைகொண்ட சோழபுரம் செல்ல கூடாது. உடனே சோழநாட்டை விட்டு வெளியேறுங்கள்" என்று கெஞ்சினர். அரசனின் ஆட்கள் வந்துவிட்டனர் ராமானுஜரை தேடி. கூரேசர் எப்படியோ ராமானுஜரை சம்மதிக்க வைத்து, தான் அரசனை சந்தித்தார். விரக்தியுடன் ராமானுஜர் சிலருடன் மட்டும் கர்நாடகாவில் மேல் கோட்டையை (திருநாராயணபுரம்) நோக்கி நகர்ந்தார். அங்கு பன்னிரண்டாண்டுகள் அந்த முதியவருக்கு வனவாசம் விதி வசமாகியது. மீண்டும் ஆரம்பத்திலிருந்து ஸ்ரீ வைஷ்ணவத்தை அங்கு பரப்பினார். ஸ்ரீ சம்பத் குமாரன் கோயில் கட்டினார். அவரது விடா முயற்சியில் மேல்கோட்டை ஸ்ரீ ரங்கத்துக்கு அடுத்ததாக சிறந்த ஸ்ரீ வைஷ்ணவ ஸ்தலமாகியது.

Why 32 days in aani month?

ஆனி மாதத்தில் மட்டும் ஏன் 32 நாட்கள் வருகிறது தெரியுமா?

ஆனி மாதத்தில் சூரியன் வடதிசை நோக்கிய பயணமான உத்தராயண காலத்தின் கடைசி மாதாக வருகிறது. மிதுன ராசியில் சூரியன் சஞ்சரிக்கக்கூடிய காலம் என்பதால், இதை மிதுன மாதம், வட மொழியில் ஜேஷ்ட மாத என அழைக்கப்படுகிறது. தமிழ் மாதங்களில் பெரிய மாதமாக இருக்கும் ஆனி மாதத்தில் 32 நாட்கள் இருப்பதைப் பார்க்க முடியும்.

முக்கிய அம்சங்கள்:
ஆனி மாதத்தில் சூரியன் வடதிசை நோக்கிய பயணமான உத்தராயண காலத்தின் கடைசி மாதாக வருகிறது.
மிதுன ராசியில் சூரியன் சஞ்சரிக்கக்கூடிய காலம் என்பதால், இதை மிதுன மாதம், வட மொழியில் ஜேஷ்ட மாத என அழைக்கப்படுகிறது.
தமிழ் மாதங்களில் பெரிய மாதமாக இருக்கும் ஆனி மாதத்தில் 32 நாட்கள் இருப்பதைப் பார்க்க முடியும்.
ஆனி மாதத்தில் மட்டும் ஏன் 32 நாட்கள் வருகிறது தெரியுமா?

ஆங்கில மாதங்களைப் போல, தமிழ் மாதங்கள் சமமாக 30, 31 தேதிகளுடன் இருப்பதில்லை. பங்குனி மாதத்தில் 30 நாட்கள் என்றால், சித்திரை மாதம் 31 நாட்கள் என இருக்கும்.
கார்த்திகை, மார்கழி போன்ற மாதங்களில் 29 நாட்கள் கூட இருக்கும். அதே சமய ஆனி, ஆவணி மாதத்தில் 32 நாட்கள் கொண்டாதாக இருக்கின்றன.

ஆனி மாதம் :
ஆனி மாதத்தில் சூரியன் வடதிசை நோக்கிய பயணமான உத்தராயண காலத்தின் கடைசி மாதாக வருகிறது. நம் நாட்டில் நீண்ட பொழுது கொண்ட மாதமாகவும் ஆனி மாதம் அமைகிறது. கிட்டத்தட்ட 12 மணி நேரம் 38 நிமிடம் வரை கூட பகல் பொழுது நீண்டிருக்கும்.

மிதுன ராசியில் சூரியன் சஞ்சரிக்கக்கூடிய காலம் என்பதால், இதை மிதுன மாதம் என்றும் அழைப்பதுண்டு. வட மொழியில் ஜேஷ்ட மாத என அழைக்கப்படுகிறது. ஜேஷ்டா என்றால் பெரிய அல்லது மூத்தது என்று பொருள்.
இந்த ஆனி மாதம் தேவர்களுக்கு பகல் பொழுதின் இறுதிப் பகுதியாகும். அதாவது தேவர்களுக்கு மாலைப் பொழுதாகவும், மனிதர்களுக்கு ஆனி மாதமாகிறது. இந்த மாதத்தில் 32 நாட்கள் கொண்டுள்ளது.

ஆனியில் 32 நாட்கள் :
தமிழ் மாதங்களில் பெரிய மாதமும் இதுவே. பிற மாதங்களில் இல்லாத வகையில் இந்த ஆனி மாதத்தில் 32 நாட்கள் இருப்பதைப் பார்க்க முடியும்.
ஜோதிடத்தின் படி மிதுன ராசி சற்று பெரிய ராசி என்பதால், இதைக் கடக்க சூரியனுக்கு சற்று கூடுதல் காலம் தேவைப்படுகிறது என்பதால் ஒரு நாள் கூடுகிறது. இதன் காரணமாக இந்த மாதத்தில் பகல் பொழுதின் அளவும் அதிகரிக்கிறது.

ஜேஷ்டாபிஷேகம் விழா:
ஆனி மாதத்தில் வரக்கூடிய கேட்டை நட்சத்திர நாளில் ஜேஷ்டாபிஷேகம் விழா ஆலயங்களில் நடைபெறுவது வழக்கம்.
கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்ட நட்சத்திரம் என்ற பெயர் உண்டு.. இந்த நட்சத்திரத்திற்கான அதி தேவதை இந்திரன். தேவர்களின் தலைவன் இந்திரன், தலைமை பொறுப்பினை தக்க வைத்துக் கொள்ளவும், தலைமைப் பொறுபை நிர்வகிக்கும் திறனை புதுப்பித்துக் கொள்ள இறைவனை வழிபட்டு, நன்றி செலுத்தும் விதமாக, ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தன்று விசேஷ அபிஷேக, ஆராதனை செய்யப்படுகிறது.

ஆனி மூலம் நட்சத்திரம் அரசாளும்:
ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரமும், பௌர்ணமியும் பெரும்பாலும் சேர்ந்து வரும். பௌர்ணமி அன்று பிறக்கும் குழந்தை பிரகாசமாகவும், அரசாளும் யோகத்தையும், ஆளுமைத் திறன் பெற்றிருப்பார். அதனால் ஆனி மூலம் அரசாளும் என்ற பழமொழியும் கூறப்படுகிறது.

Monday, June 16, 2025

Amar chitra katha in sanskrit

seeing inside

*சிதாகாச தரிசனம் என்கிற உள்முக* *தரிசனம்*

இதை சிதாகாய தாரணை எனவும் கூறலாம். 

இது தன்னைத்தானே உள்ளே பார்க்கும் [அந்தர்முக] தியானமாகும். 

உள்ளே உள்ள இடைவெளிகளை பார்ப்பது ஆகும். 

ஆனால் இது உடலில் தலையில், வயிற்றில் உள்ள வெற்றுவெளி அல்ல. 

இந்த சிதாகாசம் என்பது உணர்வுகள் இருக்கும் உற்பத்தி ஆகும் சூன்ய பிரதேசம். 

இது ஆக்ஞா சக்கரத்தின் மூலமாக காணக்கூடிய இருண்ட வெளியாகும். 

இதுதான் மனத்தின் தொடர்பை ஏற்படுத்தகூடியது. 

இந்த தொடர்பினால் மனிதன் தன் மனதை அடையவும் உள்மனதை அடையவும் அதையும் மீறி அதற்கப்பால் உள்ள மிக நுண்ணிய உணர்வுள்ள மகா உள்மனதையும் தொடர்புகொள்ள முடியும். 

இந்த நிலையை சிதாகாச தாரணை மூலம் எட்டலாம். 

இது உங்களது உள் உணர்வுகளின் ரகசியங்களையும் மனதின் நிலைகளையும் உள்ளத்தின் நிலைகளையும் தெரிந்துகொள்ள ஓர் அற்புதமான ரகசியத்தை வெளிக்கொணர அமைந்த திறவுகோலாகும். 

இந்த சிதாகாச தரிசன சூட்சுமம். இந்த சாதனையை முடிப்பவர்கள் அரும்பெரும் காட்சிகளை காணக் கூடிய சித்தர்களாக ஆகி விடுவார்கள்.

சிதாகாச தரிசன சாதனை பயிற்சி முறை

அமைதியாக ஓர் ஆசனத்தில் முதுகு தண்டு வளையாமல் நேராக நிமிர்ந்து உட்கார்ந்து கைகளை இரு முழங்கால்கள் மீதோ அல்லது மடியில் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து உட்காரவும். 

இவ்வாறு அசையாமல் உட்காரவேண்டும். 

அமைதியாக கண்களை மூடிக் கொண்டு காதில் என்ன சப்தம் கேட்கிறது என கவனிக்க வேண்டும். 

மற்ற சப்தங்கள் கேட்ககூடும். 

இந்த வெளிநிலையில் இருந்து விலகி இனி உடல் அசைவற்று நிச்சலனமாக உட்கார்ந்து இருப்பதை மட்டும் நினைக்க வேண்டும் உணர வேண்டும். 

அமைதியாக உட்கார்ந்து இருப்பதையும் சுவாசம் உடலில் உள்ளே போய் வெளியே வருவதையும் மட்டுமே உணர்ந்து கொண்டு இருக்கவும். 

வேறு எந்த எண்ணமும் இருக்கக் கூடாது. 

நீங்கள் சுவாசம் விட வேண்டும் என்கிற அவசியமில்லை. 

ஆனால் சுவாசம் தன்னிச்சையாக நடந்து கொணடே இருக்கும். 

ஒரு சமயம் உள்ளே அதிக சுவாசம் போகும் வெளிவரும். 

ஒரு சமயம் உள்ளே சுவாசம் குறைந்து வரும். 

உள்ளே வெளியே வந்து போய் கொண்டிருக்கும் அதை அப்படியே கவனித்து வரவும். நீங்கள் சுவாசத்தை இழுக்கவோ வெளியேற்றவோ செய்ய வேண்டாம். இயற்கையாக சுவாசம் அதுவாக உள்ளே போய் வருவதை மட்டும் கவனிக்கவும். 

இப்போது உடல் அசையாமல் இருந்து கொண்டிருப்பதை மட்டும் உணர்ந்து கொண்டிருக்கவும்.

இனி சிதாகாசத்தை உணரவும். 

உங்கள் உள்ளே உள்ள வெளியை, அதாவது சூன்யத்தை இந்த வெளியானது சரீரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் சரீரம் முழுவதுமே பரவிக் கிடக்கும். 

இது உங்கள் தலையில் உள்ளதோ நெஞ்சில் உள்ள இடைவெளியோ வயிற்றில் உள்ளதோ அல்ல. 

ஆனால் சரீரம் முழுவதும் பரவி இருக்கும் வெளி ஆகும். 

இது ஸ்தூல சூட்சுமத்தில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் இருக்கும். 

உங்கள் மொத்த உருவத்திலும் இருக்கக் கூடியது இந்த சிதாகாசமாகும். 

இந்த சிதாகாசத்தை பார்த்தல் அல்லது தாரணை அல்லது சிதாகாச உணர்வு என்பது சரீரம் முழுவதுமே உள்ள சிதாகாசத்தை வெளியை சூன்யத்தை உணர்வதாகும். 

இது முதலில் இருண்டு கிடக்கும்.

உங்களது உருவில்லாத அருவத்தை உணரவும். 

இந்த உருவ அருவ தோற்றம் இருண்டே இருக்கும். 

இதன் வண்ணம் அதாவது சிதாகாச வண்ணம் கருமை அல்ல. 

ஆனால் பல வண்ணங்கள் மாறி மாறி வண்ணப் புள்ளிகளாக தோன்றி மறைந்து கொண்டே இருக்கும். 

வண்ண வண்ண நிறங்கள் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். தோன்றும் மறையும். 

எதுவும் நிரந்தரமாக நிற்காது. 

இந்த வண்ணத் தோற்றத்தையும் மறைவையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டே இருக்கவும். 

அப்போது பல நிறங்கள் உடனே தோன்றி உடனே மறைந்து கொண்டே இருக்கும். 

மணிக்கு மணி நாளுக்கு நாள் அதன் போக்கில் வண்ணங்கள் தோன்றி மறைந்து கொண்டே இருக்கும். 

இந்த சிதாகாசம் என்பது ஓர் அரூபமாகும். 

இவ்வாறு சிதாகாசத்தில் மாறி மாறி வந்து மறையும் நிறங்களை கவனித்து வர வேண்டும். 

இந்த வண்ணங்கள் தான் சரீரத்தில் உள்ள ஜீவசக்திகளின் பிரதிபலிப்புகளாக விளங்குகின்றன. 

இந்த சிதாகாசமானது சரீர முழுவதுமே வியாபித்து இருக்கிறது. 

இந்த சிதாகாசமானது சரீரம் அல்ல. 

ஆனால் சரீரமானது சிதாகாசத்திற்குள் இருக்கிறது. 

மனம் சர்வமும் ஒடுங்கி ஒரு நிலைப்பாட்டு உள்ளே பார்க்கும் போது ஒரு சூன்ய வெளி தோன்றும். அதுவே சிதாகாசம். 

இது சரீரம் முழுவதும் பரவி கிடக்கிறது. 

இவைகளை மானசீகமாக உணர்ந்து வர வேண்டும். 

இவைகளை பயிற்சி செய்யும் போது பலவித ஒளிகளை பல ரூபங்களில் காணலாம்.

இப்போது உங்கள் உணர்வுகளை புருவமத்தியிலே நிறுத்தி வைத்து அங்கேயே கவனமாகப் பார்க்கவும். 

அப்போது உங்கள் மானசீக உருவத்தை அங்கே பார்க்கவும். 

சிந்தனையை சிதாகாசத்தில் வைத்திருக்கும் போது உங்கள் புருவத்தில் ஒரு குகை மாதிரி வட்டத்தில் பார்க்கவும். 

அந்த வழி மிகச் சிறியதாகத் தெரியும். 

இப்போது ஸ்தூல தேகத்தைப் பார்த்து விட்டு, சூட்சும சரீரத்தை காண முயற்சி செய்யவும். 

அப்போது உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்படும். 

அப்போது உங்கள் சிதாகாசத்தை கண்டு உணரலாம். 

பல வண்ணங்கள் புள்ளி புள்ளிகளாகதோன்றி உடனே மறையும். 

இப்படியே வண்ணங்கள் வந்து போய் கொண்டே இருக்கும். வினாடிக்கு வினாடி இதன் வேகம் அதிகரிக்கும்.

இதன்பின் நிதானமாக கவனத்துடன் வண்ணங்களில் லயித்து இருக்கவும். 

இப்போது புருவ மத்தியை கவனித்தால் அங்கு குகை போல ஒரு துவாரம் இருக்கும். 

அந்த குகையை பார்த்தால் ஒரே இருட்டாக இருக்கும். 

மேலும் நீங்கள் அதனுள் பிரவேசித்து விட்டால் ஒரே இருட்டு மயமாகத் தான் உணர்வீர்கள். 

இருட்டில் போய்கொண்டே இருப்பதை உணர்வீர்கள். 

அதுதான் சிதாகாசம். 

இப்போது ஓம் ஓம்என 7 தடவை மனதில் உச்சரிக்கவும். 

இந்த நிலையில் உங்களை சுற்றி ஓர் இருண்ட பிரதேசம் இருப்பதை உணர்வீர்கள். 

உங்கள் உடலானது மின்மினி போல் விட்டு விட்டு சிறிய துகள்களாக பிரகாசித்து மறையும். 

இதன் பின் நிதானமாக வெளியே வரவும். 

நீங்கள் உட்கார்ந்து இருப்பதையும் சுவாசம் விடுவதையும் உணரவும். 

இப்படியாக நிதானமாகவும் பொறுமையுடனும் இப்பயிற்சியை செய்து வந்தால் இதனுடைய அருமையான பலன்களை உணர முடியும். 

இந்த சிதாகாச தரிசனம் கிடைத்து விட்டால் நீங்கள் ஒரு பெரிய சாதகராக ஆகிவிடலாம்.

இதுதான் பிண்டத்தில் அண்டம் எனும் அண்டவெளிபோல் சிதாகாசவெளி என்பது ஆகும். 

அமைதியாக உட்கார்ந்து கண்களை மூடி புருவமத்தியில் பார்வையை வைத்து அதன் காட்சிகளை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். 

அதே சமயத்தில் கேசரி முத்திரையில் இருந்து கொண்டு உஜ்ஜயி பிராணயாமம் செய்து கொண்டே உள்வெளி ஜோதியை பல வர்ணத் துகள்களாக பார்க்கலாம். 

இதன் பலன்கள் மிக அற்புதமானவை. 

உங்கள் உடலின் ஒவ்வொரு அணுவும் புதுப்பிக்கப்பட்டது போல அற்புதமாக இயங்கும். 

நோயற்ற வாழ்வுடன், நினைத்ததை முடிக்கும் வலிமையும் உண்டாகும்.

Monday, June 9, 2025

Children singing Thevaram pidi athan uru umai

On the holy day of Mahashivratri 7 feb 25
a mini Thevaram slot was allocated for the children at Dharumapuram adheenam , T Nagar Chennai.

Naalvar vanakkam & pidi athan uru umai Thevaram 

Friday, June 6, 2025

Surrender to guru - Spiritual story

பரிபூரண சரணாகதி.....!!!

ஒருசமயம் ராமானுஜர், ஸ்ரீரங்கத்தில் 'கிருஷ்ணாவதாரம்' பற்றி தாம் செய்த உபன்யாசத்தில் கிருஷ்ணன், சலவைத் தொழிலாளியிடம், சலவை செய்த தமது துணிகளைக் கேட்டபோது, அவன் தர மறுத்ததாகக் கூறினார்!
அன்றிரவு, ஒரு சலவைத் தொழிலாளி ராமானுஜரிடம் வந்து, கிருஷ்ணனுக்கு சலவை செய்த துணிகளைத் தர மாட்டேன் எனக் கூறிய அந்த சலவைத் தொழிலாளிக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அதற்காக ரங்கநாதரின் துணிகளை இனி, நானே துவைத்துத் தருகிறேன்" எனக் கூறினான்.
அப்படியே செய்" எனக் கூறினார் ராமானுஜர்!
அந்த சலவைத் தொழிலாளியும் அடுத்த நாள் முதல் ரங்கநாதரின் துணிகளை வாங்கிச் சென்று பளிச்செனத் துவைத்து, ராமானுஜரிடம் காட்டி, பிறகு கோயிலில் கொடுத்து வந்தான். ராமானுஜரும் அவனை மனமாறப் பாராட்டுவார்.
ஒரு நாள் அவன் ராமானுஜரிடம், நீங்கதான் என்னைப் பாராட்டறீங்க… ஆனால் ரங்கநாதர் பாராட்டலியே" என்றான்.
அது கேட்டு ராமானுஜர் அவனை ரங்கநாதரிடம் அழைத்துச் சென்று, உங்களுக்காக இவன் தினமும் சிரத்தையாக, துணிகளைத் துவைத்துக் கொண்டு வந்து கொடுக்கிறான்! ஒருநாள் அவனிடம் பேசினால்தான் என்ன?" எனக் கேட்டார்.
உடனே ரங்கநாதர் அவனிடம், உனக்கு என்ன வேண்டும் கேள்?" என்றார்.
சாமி, கிருஷ்ணாவதாரத்திலே, உங்களுக்கு துவைத்த துணிகளைத் தர மாட்டேன்னு சொன்னானே… அவனை மன்னித்து அவனுக்கு நீங்கள் முக்தி அளிக்க வேண்டும்!" என்றான்.
அவனை மன்னித்து விட்டேன். அப்பொழுதே அந்த விஷயத்தை மறந்தும் விட்டேன்" என்றார் ரங்கநாதர்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த ராமானுஜர் கிருஷ்ணாவதாரத்தில் தவறு செய்த ஒருவனுக்காக முக்தி கேட்டியே, உனக்காக நீ ஏன் ஒண்ணுமே கேட்கலே" எனக் கேட்டார்.
அதற்கு அந்தச் சலவைத் தொழிலாளி, அதை நீங்க பார்த்துக்குவீங்க சாமி" என்றான். இதனைக் கேட்ட ராமானுஜர், மனம் நெகிழ்ந்து அவனை ஆசீர்வாதம் செய்தார்.
உண்மையான பக்தர்கள் மற்றவர்களைப் பற்றித் தான் கவலைப்படுவார்கள். தம்மைப் பற்றி நினைப்பதில்லை. அதை குருவிடம் விட்டு விடுவார்கள்

Samsara is not real

*Jivatvam is mithyā - References from the Veda and Vedavyasa*

In Vedanta, the jiva is an appearance, being a product of ignorance. Brahman, the only Pure Consciousness alone appears as the jiva out of ignorance. When the due process of shravana, etc. is carried out, the truth emerges and the jiva-aspirant realizes that he was never ever bound and is ever free. Here are some references where the jiva bhāva is stated to be a superimposition and not absolutely real:

The Bhagavatam, annotating the famous Dvā suparṇā mantra of the Mundakopanishat says:


आत्मानमन्यं च स वेद विद्वान्
अपिप्पलादो न तु पिप्पलादः ।
योऽविद्यया युक् स तु नित्यबद्धो
विद्यामयो यः स तु *नित्यमुक्तः* ॥ ७ ॥

The one who realizes himself as the bird that does not eat — he is the wise one, the one who does not enjoy karma-phala. One with ignorance is always bound (nitya-baddha), due to avidyā, the one with knowledge is ever-free *(nitya-mukta)*. This shows that the jiva is in truth is never bound at all. Samsara, being an appearance, is annulled by right knowledge, as the above Bhagavatam verse says: vidyāmaya: nityamukta:. Vidya puts an end to the wrong notion that one is a jiva.   

There are many references across the Upanishads and the Bhagavatam, etc. that say that the samsara is not real, it's only an appearance/erroneous notion, like a dream, etc. which mean that jivatvam is not native to the Atman. Below are some references where the term jivatvam is directly available:   

योगशिखोपनिषत् Yogashikhopanishat:

चैतनस्यैकरूपत्वाद्भेदो युक्तो न कर्हिचित् । 
जीवत्वं च तथा ज्ञेयं रज्ज्वां सर्पग्रहो यथा ॥ ४.१॥ 
रज्ज्वज्ञानात्क्षणेनैव यद्वद्रज्जुर्हि सर्पिणी ।
भाति तद्वच्चितिः साक्षाद्विश्वाकारेण केवला ॥ २॥

Since Consciousness is one nature alone, there can't be any distinctions in it like jiva-Ishwara, etc. Hence jivatvam is to be known as a superimposition, an error of perceiving a serpent in a rope. Just as the rope ignorance quickly projects the snake cognition, so too the Pure consciousness, out of ignorance, appears as the variegated world, in which jiva/iivatva too is contained.  

योगशिखोपनिषत्सु चतुर्थोऽध्याय: -
यद्वन्मृदि घटभ्रान्तिः शुक्तौ हि रजतस्थितिः । 

तद्वद्ब्र्ह्मणि जीवत्वं वीक्षमाणेविनश्यति ॥१३॥

  Just as the illusion of a pot exists in clay, and the appearance of silver is imagined in mother-of-pearl,
In the same way, the notion of jīva-hood (individuality) in Brahman vanishes upon inquiry.  

यथा मृदि घटो नाम कनके कुण्डलाभिधा । 

शुक्तौ हि रजतख्यातिर्जीवशब्दस्तथा परे ॥१४॥

  As the name "pot" is merely a designation for form in clay, and "earring" a name for form in gold,
As the appearance of silver is imagined in nacre (mother-of-pearl) — so too is the term jīva merely a label upon the Supreme.

The above statements of this Upanishad on clay and gold are there in the Chandogya Upanishad, 6th chapter. The Advaitic interpretation thereof alone is endorsed by the Yogashikhopanishat. 


परिव्राट् उपनिषद् (नारदपरिव्राजक)/उपदेशः ६ 

स्पृष्ट इति चेन्न । जीवाभिमानेन क्षेत्राभिमानः । शरीराभिमानेन जीवत्वम् । जीवत्वं घटाकाशमहाकाशवद्व्यवधानेऽस्ति । व्यवधानवशादेव हंसः सोऽहमिति..

The Parivrāt upanishad (Narada parivrajaka upanishad) says: it is due to jiva abhimāna does one have identification with the body-mind complex. The body identity is what is jivatvam. The infinite space alone appears as the pot-space. Space is non-differentiated. 

श्रीरामहृदयम् Adhyatma Rāmāyanam:

साभासबुद्धेः कर्तृत्वमविच्छिन्नेऽविकारिणि। 
साक्षिण्यारोप्यते भ्रान्त्या जीवत्वं च तथाऽबुधैः ॥ ४ ॥ 
आभासस्तु मृषाबुद्धिरविद्याकार्यमुच्यते। अविच्छिन्नं तु...

Doership, kartrutvam, belongs to the reflected consciousness in the intellect. This is wrongly superimposed on the Pure Witness consciousness, so also the idea of being a jiva. Therefore jivatva is not real.    


स्कन्दपुराणम्/खण्डः ३ (ब्रह्मखण्डः)/ब्रह्मोत्तर खण्डः/अध्यायः १

सर्वोपनिषदात्मना ॥ लेभिरे मुनयः सर्वे परं ब्रह्म निरामयम्॥१३॥ 
नमस्कारेण जीवत्वं शिवेऽत्र परमात्मनि ॥ 
ऐक्यं गतमतो मंत्रः परब्रह्ममयो ह्यसौ ॥ १४ ॥ भवपाशनिबद्धानां...

The Skanda purana says: By absolute devotion/surrender to Shiva, the jivatva merges into/with Shiva. This shows that jivatva is not a real attribute of the jiva/Atman.  

Here is a composition of Sri Sadashiva Brahmendra (17th Century) on the various analogies for Jivatvam: 


ओम् तत् सत्

Thursday, June 5, 2025

Sphatika mala of bhishma - spiritual story

விஷ்ணு சகஸ்ர -நாமத்தை-- சாகதேவன் மூலம் இந்த உலகுக்கு அறிய வைத்த கங்கை -பாரத --போர் உடல் முழுவதும் அஸ்திரங்கள் எய்ய பட்டு அம்பு படுக்கையில் இருந்தார் பீஷ்மர் ---அவரை சுற்றி கண்ணன் --பாண்டவர்கள் --கௌரவர்கள் --என யாவரும் கவலையுடன் நின்றிருக்க --பீஷ்மரோ அம்பு படுக்கையிலும் கம்பீரமாக படுத்து கணீர் குரலில் நல்ல உபதேசங்களை கூறி கொண்டிருந்தார் ---அவரின் உபதேசங்களை காது குளிர கேட்டு மகிழ்ந்த பாண்டவர்களில் ஒருவரான தருமர் ---பாட்டனாரே உங்கள் உபதேச கருத்துக்கள் யாவும் மனிதன் போற்றி வாழ கூடிய ஒன்று ---ஆனால் வாழ்வில் இவையெல்லாம் ஒரு மனிதன் கடைபிடித்து வாழ்வது என்பது கடினமன்றோ --அதனால் எளிமையான உபதேசங்கள் எவையேனும் இருந்தால் அதை பற்றி கூறுங்களேன் என்று வேண்ட ----தருமர் கூறியதை கேட்ட பீஷ்மர் ---தன் இரு கண்களால் கண்ணனை பார்த்து கொண்டே தன் இரு கரம் கூப்பி கண்ணனை வணங்கி கொண்டே --ஆயிரம் ஆயிரம் பாவங்களை போக்க வல்ல ஆயிரம் அனந்தனின் நாமத்தை கூறுகிறேன் கேட்டு உயர்வு பெறுங்கள் என்று கூறி கொண்டே கூறியதுதான் விஷ்ணு -சகஸ்ர நாமம் ---அனந்தனின் ஆயிரம் நாமங்களையும் கேட்டு மனம் பூரிப்படைந்தனர் யாவரும் ஆனால் சகாதேவன் மட்டும் ஏதோ யோசனை செய்து கொண்டிருக்க அதை கவனித்த கண்ணன் சகாதேவனை தனியே அழைத்து சென்று அவனது யோசனைக்கு காரணம் கேட்க ----சகாதேவன் --பரமாத்மா அனைத்தும் அறிந்தவன் நீ என் யோசனை என்னவென்று அறியாதவனா நீ சரி நானே கூறுகிறேன் ---கண்ணா ---பீஷ்மர் கூறிய உனது ஆயிரம் நாமங்களை கேட்டு நாங்கள் மன-பாரம் குறைந்தோம் --மனம் தெளிவுற்றோம் என்பது எல்லாம் உண்மையே ஆனால் நங்கள் கேட்ட இந்த புண்ணிய விஷ்ணு -சகஸ்ர -நாமம் ஆயிரத்தையும் இனி வரும் மக்கள் யாவரும் கேட்கும் வண்ணம் அதை நாங்கள் குறிப்பெடுத்து வைக்கமுடியாமல் போயிற்றே அதை நினைத்து தான் நான் யோசனை செய்தேன் --என்று வருந்தி கூற --கண்ணன் ---சகாதேவா ---வருந்தாதே --பீஷ்மரின் கழுத்தில் ஒரு ஸ்படிக மாலை உள்ளது அவர் உடல் எரியூட்ட படுவதற்கு முன் அந்த ஸ்படிக மாலையை அணிந்து கொள் --அவர் கூறிய சகஸ்ர --நாமம் ஆயிரமும் உன் சிந்தனையில் தோன்றும் --நீ அதை எழுத்து வடிமாக உருவாக்கி வியாசர் மூலம் இந்த உலகுக்கு தந்து விடு என்றான் கண்ணன் --சகாதேவன் சிரித்து கொண்டே ---கண்ணா பீஷ்மரின் ஸ்படிகமாலைக்கு அவ்வளவு சக்தியா அப்படி என்ன சக்தி அதில் இருக்கிறது என்று கேட்க ----கண்ணன் --சகாதேவா--முன்பொருமுறை பீஷ்மர் இளைஞராக இருக்கும் போது கங்கை கரை நோக்கி சென்று ---கங்கை மாதாவை வணங்கி --தாயே என் தந்தை சாந்தனுவுக்காக என் வாழ்வில் எந்த பெண்ணையும் திருமணம் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்து சபதம் செய்துள்ளேன் எவருமே சொல்ல தயங்கும் இந்த வார்த்தையை நான் என் தந்தைக்கு சத்தியம் செய்து கொடுத்ததால் தேவர்களும் -முனிவர்களும் ---என்னை வாழ்த்தி --பிதாமகன் பீஷ்மர் என எனக்கு பட்டம் அளித்துள்ளனர் ---ஆனாலும் இந்த இளமையில் --காதலும் காமமும் என்னை ஆட்கொள்ளாமல் இருக்கவும் என் தந்தைக்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றவும் தாங்கள் தான் எனக்கு அருள வேண்டும் தாயே என்று வேண்டி அழுதார் பீஷ்மர் ---குழந்தை அழுதால் தாய் பொறுப்பாளா என்ன ---தன் மகன் அழுததை பொறுக்காத கங்கை மாதா பீஷ்மர் முன் தோன்றி ---மகனே தேவவிரதா இல்லை இல்லை --மகனே பீஷ்மா அப்படித்தானே யாவரும் உன்னை அழைக்கிறார்கள் உன் இரு கரங்களையும் நீட்டு என்றாள் கங்கை மாதா --பீஷ்மரும் தன் இரு கரங்களையும் நீட்ட ---கங்கை நீர் பீஷ்மரின் இரு உள்ளங்கையிலும் சில துளிகள் விழுந்து பின் அதுவே ஒரு ஸ்படிக -மாலையாக மாறியது ---ஸ்படிக -மாலையை ஆச்சிரியதுடன் பார்த்து கொண்டிருந்த பீஷ்மரிடம் --கங்கை மாதா கூறலானாள்---மகனே --திருமாலின் வாமன அவதாரத்தில் அவரின் பாத கமலத்தில் ---பிரம்ம-தேவரின் கமண்டலத்தில் உள்ள நீரால் --- அபிஷேகம் செய்யப்பட்டு பெருக்கெடுத்து பூலோகம் வரும் வேளையில் சிவபெருமான் தன் சடையில் அந்த நீரின் வேகத்தை தாங்கி --சூடி கொள்ள --பின் பகீரதன் தவத்துக்கு இணங்கி சிவபெருமான் அந்த நீரை சடையில் இருந்து அவிழ்த்து பூலோகத்தில் பெருக்கெடுத்து ஓட செய்து அந்த நீரான எனக்கு கங்கை எனவும் பெயர் சூட்டி அழைத்தார் ----இப்படி மும்மூர்த்திகளின் ஸ்பரிசத்தால் பூலோகம் வந்ததால் பாவங்களை போக்கும் புண்ணிய நதி என்ற பெயர் எனக்கு உருவானது ---அப்படியே உன் கையிலும் இருக்கும் இந்த ஸ்படிகமாலையம் புனிதமாக இருக்க வைக்கும் உன்னை செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற---நீ நினைக்கும் --கூறும் நல்ல உபதேசங்கள் யாவும் இந்த ஸ்படிகமாலையில் பதிந்து விடும் அப்படியே--- உனக்கு பின் இந்த ஸ்படிக மாலையை யார் அணிகிறார்களோ அவர்களுக்கு உன் உபதேச மொழிகள் யாவையும் இந்த ஸ்படிக மாலை அவர்களின் உள்ளத்தில் புகுத்தி அவர்களையும் புனித படுத்திவிடும் --என்று கூறி கங்கை மறைந்தாள் ---பீஷ்மர் கண்ணீருடன் தன் தாயின் கருணையை எண்ணி ஸ்படிகமாலையை அணிந்து கொண்டார் என்று கண்ணன் சகாதேவனிடம் கூறி முடிக்க ---சகாதேவன் கண்ணனிடம் கண்ணா எங்கள் எல்லோர் மனதிலும் நீயே கேள்விகளை எழுப்பி அதற்க்கு நீயே விடைகளையும் கூறிவிடுகிறாய் ----உன் ஆயிரம் திருநாமங்களை கொண்ட இந்த விஷ்ணு சகஸ்ரநாமம் கங்கையை போலவே யாவர் பாவங்களையும் நீக்க வல்லது ---பீஷ்மரின் ஸ்படிகமாலையை அணிந்து ---வியாசர் உதவியுடன் விஷ்ணு சகஸ்ரநாமத்தை எழுதி இந்த உலகுக்கு அளிப்போம் அதை படித்து யாவரும் புனிதமடையட்டும் அதுக்கு அருள் புரிவாயே கண்ணா --என்று சாகதேவன் கண்ணனை வணங்கி நின்றான் ----*ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ*🙏🏻

Tuesday, June 3, 2025

Why one should not chant sanskrit mantras in tamil?

ஸம்ஸ்க்ருத மந்திரங்கள் – கவனம் தேவை:-

1. மந்திரங்களில் வரும் ந மற்றும் ந: ( நஹ ) இரண்டிற்கும் பொருள் வேறுபாடு இருக்கிறது.

ந: என்றால் எங்களுக்கு. ந என்றால் இல்லை/வேண்டாம்.

காயத்ரி மந்திரத்தில் வரும்
தியோ யோ ந: ப்ரசோயதாத் என்பதில் 

நஹ என்று ஸ்பஷ்டமாகச் சொன்னால் 'எங்கள் புத்தியைத் தெளிவாகப் பிரகாசிக்கச் செய்யட்டும்'. ந என்று உச்சரித்தால் 'பிரகாசிக்கச் செய்ய வேண்டாம்' என்ற பொருள் வந்துவிடும்.

2. Express bus, fast food என்பதை தமிழில் துரித பேருந்து, துரித உணவு என்று எழுதுகிறார்கள். 

அது துரித அல்ல. த்வரித என்றிருக்க வேண்டும். 'த்வரித' என்றால் உடனடி/விரைவு.

அப்படியென்றால் துரித என்றால் என்ன பொருள்?
பாபம் என்று பொருள்.

சங்கல்ப மந்திரத்தில் வருமே, மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா

கடவுள் பூஜைக்கு வேண்டியது ஸம்ஸ்க்ருதமா, தமிழா? 

தமிழில் பூஜிப்பதாக முயற்சி செய்தாலும் பெருவாரியான துதிச் சொற்களும் மூல மந்திரங்களும் ஸம்ஸ்க்ருதத்தில்தான் இருக்கும்.

ஆதி வீர சைவர்கள் சார்பாக என்றுச் சொல்லிக் கொண்டு சிலர் தமிழில் தான் துதிக்க வேண்டும் என்று அரசியல் செய்கிறார்கள். 

அவர்களுக்கு தமிழே சரிவரத் தெரியாது என்று புரிய வரும்.

சிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரச் சொல்லாம் 'நமச்சிவாய' என்பதும்,

 விஷ்ணுவுக்கான எட்டெழுத்து மந்திரமான 'ஓம் நமோ நாராயணாய' இரண்டுமே ஸம்ஸ்க்ருதம் தான்.

அது 'நமச்சிவாய' அல்ல நமஹ சிவாய. 'சிவன் வணக்கம்', 'சிவனுக்கு வணக்கம்' என்று பொருள். 

தமிழில், 'சிவனே', 'சிவா' உண்டே தவிர சிவாய என்று வராது. 

இந்த ய என்பது ஸம்ஸ்க்ருத மொழியின் நான்காம் வேற்றுமை உருபாகும்.

'ஓம் நமோ நாராயணாய' வில் வரும் ய வும் 'ஓம் நாராயண வணக்கம்' அல்லது 'ஓம் நாராயணனுக்கு வணக்கம்' என்ற பொருளில்.

சம்ஸ்க்ருதத்தின் சொல் புணர்ச்சி (ஸந்தி) விதிப்படியே நமஹ நாராயணாய என்பது நமோ நாராயணாய என்று மாறி வருகிறது.

தீவிர சைவ சித்தாந்தத்தின் ஆதி ஆகமம் எனப்படும் தமிழ் நூலான திருமந்திரத்தில் சிவாய என்று ஸம்ஸ்க்ருத வடிவமே வந்துள்ளது. 

மந்திரம் என்பதே வடசொல்தான்.

 திருமந்திரம் நூல் முழுவதிலும் 75℅க்கும் மேலாக ஸம்ஸ்க்ருதச் சொற்களே அமைந்துள்ளன.

ஸம்ஸ்க்ருதம் இல்லாமல் மந்திரம் இல்லை.: சிவா & ஸ்ரீ ராம ஜெயம் :

1. டாக்டர் சிவா என்று ஒரு திரைப்படம் வந்திருந்தது நினைவிருக்கலாம். 

சிவா என்று எழுதினால் ஸம்ஸ்க்ருதச் சொல் அமைப்பின்படி அது முதலாம் வேற்றுமை அமைப்பின்படி பெண்பால் சொல்லாகும். 

சிவா, ராமா என்பவை விளி வேற்றுமை என்னும் 8 ஆம் வேற்றுமையும் ஆகாது. தமிழில் 8 ஆம் வேற்றுமைக்கு சிவனே, ராமனே என்றே வரும். ஸம்ஸ்க்ருதம் ஆயின் ஹே சிவ, ஹே ராம என்றே வரும்.

சிவா, ராமா என்று சொன்னால் அது பெண்பால் பெயர்கள் ராதா, கீதா என்பது போல. சிவ, ராம என்றே எழுதுவோம்.

2. நோட்புக்கில், திருமண அழைப்பிதழ் களில், வீட்டு பூஜையறையில், வாசலில் கோலம் போடும் போது
ஸ்ரீ ராம ஜெயம் என்று பலர் எழுதுகின்றனர்.

அது ஜெயம் அல்ல. ஜயம்.
ஜயம் என்றால் வெற்றி, வெல்வது.

ஜெயம் என்றால் வெல்லப் படுவது (தோல்வி அடைவது). 

ஸம்ஸ்க்ருதத்தில் 'எ' உயிரொலி கிடையாது. 'ஏ' எனும் நெட்டொலி மட்டுமே.

 எனவே ஜெயம் என்று எழுதினால் ஜேயம் என்று ஒலித்து தோல்வியை வேண்டுவதாய் பொருள் வந்துவிடும்.

ஸ்ரீ ராம ஜயம் என்றே எழுதுவோமாக.

ஜயம் தமிழில் எப்படி ஜெயம் ஆகிப் போனது?

அது சில நூறு வருடங்களுக்கு முன்னர் இங்கு மதம் பரப்ப வந்த பாதிரியார்கள் தமிழ் கற்று பைபிளை தமிழில் எழுதிப் பிரசுரம் செய்த பணியில் நேர்ந்த ( கூடவே, தெலுங்கு, மலையாள, கன்னட மொழி உச்சரிப்பின் கலப்பினாலும்) நேர்ந்துவிட்ட அவலம். 

யேசுவின் ரத்தம் ஜயம் என்பதை ஐ, ஜ வேறுபாட்டைக் காட்டுவதாக நினைத்து யேசுவின் ரத்தம் ஜெயம் (தோல்வி) என்று எழுதிவிட்டனர்.

பலம் பெலம் ஆயிற்று. றக்கை ரெக்கை ஆயிற்று. ரவி ரெவி ஆயிற்று. சிந்தூரம் செந்தூரம் ஆயிற்று. ஜன்மம் ஜென்மம் ஆயிற்று.

ஜயம் சரி. ஜெயம் தவறு.

இது என் சொந்த பதிவல்ல.

படித்ததை பகிர்ந்தேன்!!

Sunday, June 1, 2025

Sanskrit Sandhi niyamAH

सन्धिनियमाः.pdf attached

Saturday, May 31, 2025

Guru - HH Chandrasekhara Bharathi Mahaswamigal

Here is an instance in the life of Jagadguru Sri , the 34th Jagadguru of Sringeri. 

Once the Swamiji visited the local Veda patasala, Where a picture of Sri Adi Shankaracharya was prominently adorning the wall. The Swamiji was reverently received by the head teacher. With an intention to pay respect to the Jagadguru, he called out to the students who were outside the hall :"Hey Vidhyarthis! Come here quickly... "

The next moment the Jagadguru addressed him, "Calling them vidhyarthis, do you intend projecting both of us as the gurus? Here, Sri Adi Shankara Bhagavatpada alone is the guru and every one else, even you and me, are just Vidyarthis! "

The jagadguru's humility and devotion to Sri Sankara taught the teacher a valuable lesson on how one should behave even in the presence of picture of the Adi Guru.! 

*Reproduced from Tathvaloka Dec 2016 Issue. Page 69.with humble pranams*

Friday, May 30, 2025

Upadesam not required - HH Chandrashekhara Bharati Mahaswamigal

*Continued from yesterday's posting*
 
*Source: ஸ்ரீ குருகிருபா விலாஸம்-இரண்டாம் பாகம்*
 
*இரண்டாம் பாகம்*
*ஞானப் பிரஸூனங்கள்*
 
*8.எல்லோரிடத்தும் அன்பு*
 
ஒரு வாலிபர் சிருங்கேரிக்கு வந்திருக்கையில், தன்னுடன் வந்த சிலர் ஒவ்வொருவரும் ஸ்ரீமத் ஆசார்யாரிடம் ஏதேனும் உபதேசம் செய்து கொள்கிறார்கள் என்று அறிந்து, தனக்கும் உபதேசம் வேண்டுமென்று எண்ணினார்.
 
வாலிபர்: எனக்கு ஏதாவது தாங்கள் உபதேசம் செய்து அநுக்ரஹித்தால் மிகவும் பாக்கியவானாவேன்.
 
மஹா: என்ன உபதேசம் வேண்டும்?
 
வாலிபர்: இது வேண்டும், அது வேண்டும் என்பது எனக்கு இல்லை. தாங்களாக எனக்கு எது நல்லது என்று அனுக்ரஹிக்கிறீர்களோ, அதைப் பெற்றுக்கொள்ள ஸித்தமாயிருக்கிறேன்.
 
மஹா: உம் தகப்பனாரிடமிருந்து உமக்கு காயத்ரீ உபதேசம் ஆகியிருக்கிறதோ இல்லையோ?
 
வாலிபர்: ஆகியிருக்கிறது.
 
மஹா: உமக்கு வேதாத்யயனமும் அவரே செய்து வைத்திருக்கிறார் அல்லவா?
 
வாலிபர்: ஆம். சொல்லி வைத்திருக்கிறார்.
 
மஹா: சிவ பஞ்சாக்ஷரீ மந்திரமும் உமக்கு அவர் உபதேசம் செய்திருக்கிறாரல்லவா?
 
வாலிபர்: ஆம். 
 
மஹா: உம் தகப்பனார் உமக்கு தேகத்தைக் கொடுத்திருக்கிறார், காயத்ரீயை கொடுத்திருக்கிறார், வேதத்தை கொடுத்திருக்கிறார், சிவ பஞ்சாக்ஷரீயையும் கொடுத்திருக்கிறார். 
 
வாலிபர்: ஆம்.வாஸ்தவம்.
 
மஹர் அப்படியிருக்க, வேறு குருவோ வேறு மந்திரமோ எதற்கு உமக்கு? உம் தகப்பனார் உமக்கு குருவுக்கு மேலாகவே இருக்கின்றார். அவருக்கு கீழ்ப்படிந்து அவர் சொல்லும் புத்திமதியையும் உபதேசங்களையும் பின்பற்றி நடந்து வாரும். அதுவே போதும். வேறு உபதேசம் ஒன்றும் உமக்குத் தேவையில்லை.
 
இவ்விதம் ஸ்ரீமத் ஆசார்யார் உத்தரவிட்டபோது அங்கிருந்த எங்களில் சிலருக்கு இந்த வாலிபர் ஸம்ஸ்கிருத காவியங்களில் கொஞ்சம் பரிச்சயம் செய்துவிட்ட காரணம் கொண்டு சாஸ்திர ஞானமில்லாத வைதிகராயிருந்த தன் தகப்பனாரைவிட தான் உயர்ந்தவன் என்ற எண்ணமுள்ளவர் என்பது தெரியும். ஸ்ரீமத் ஆசார்யார் இப்பொழுது நல்ல பருவத்தில் செய்த இந்த உபதேசமும் இவ்வாலிபரின் மனப்பான்மையையே முற்றிலும் மாற்றி விட்டது. அன்று முதல் தன் தகப்பனாரிடம் மிக்க மரியாதையோடு நடந்து வரும்படியும் செய்தது.
 

Thursday, May 29, 2025

How to remember sAma,DAna, bhEda & danda - HH Chandrashekhara Bharati Mahaswmigal

*Source: ஸ்ரீ குருகிருபா விலாஸம்-இரண்டாம் பாகம்*
 
*இரண்டாம் பாகம்*
*ஞானப் பிரஸூனங்கள்*
 
*8.எல்லோரிடத்தும் அன்பு*
 
ஸ்ரீமத் ஆசார்யாரின் அன்பு மிகவும் பரந்தது. எல்லோரிடத்திலும் செல்லக்கூடிய இயல்பு வாய்ந்தது. இவ்வன்பைப் பெறுபவர்கள் தங்கள் தங்கள் யோக்கியதைக்கு தகுந்தபடி அதை அனுபவிக்கக்கூடிய நிலைமையிலேயே எளிதில் அமைந்து உதவும்.
 
ஒரு ஸமயம் ஒரு சிறுவன் ஸ்ரீமத் ஆசார்யாரை தரிசிக்க நேர்ந்தது.
 
மஹா: இப்பொழுது என்ன புஸ்தகம் வாசிக்கிறாய்? சிறுவன்: ஹிதோபதேசம்.
 
மஹா: உபாயங்கள் எதெல்லாம்? சிறுவன்: ஸாமம், பேதம், தண்டம்.
 
மஹா: இன்னொன்று உண்டு.
 
சிறுவன்: ஆம். தானம்.
 
மஹா: சரியாகிவிட்டது. ஆனால் உபாயங்கள் நான்கு என்று மாத்திரம் தெரிந்து கொண்டிருக்கிறாய். அவைகளுக்குள் கிரமமாக ஒரு வரிசையுண்டு. அந்த வரிசைக்கும் தாத்பர்யமுண்டு, என்று தெரிந்துகொள்ளவில்லை யென்று தெரிகிறது. நீ அதையும் தெரிந்து கொண்டிருந்தால் இந்த தயக்கம் ஏற்பட்டிராது.
 
சிறுவன்: வரிசைக்கு என்ன தாத்பர்யம்?
 
மஹா: இப்போது ஒரு சிறிய சுலோகம் சொல்கிறேன். அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வாயானால், உபாயங்களின் வரிசைக் கிரமம் தவறாது. ஞாபகத்தில் வைத்துக் கொள்வாயா?
 
சிறுவன்: அப்படியே ஆகட்டும். என்ன சுலோகம்?
 
 மஹா: *अधीष्व बालकाधीष्वः* [வாசி, குழந்தாய், வாசி.]
 
*दास्यामि तव मोदकान्* [(வாசித்தால்) உனக்கு கொழுக்கட்டைகள் தருவேன்.]
 
*अस्याः मैं वा प्रदास्यामि* [(இல்லையானால்) அவைகளை வேறு யாருக்கேனும் கொடுத்து விடுவேன்.)
 
*कर्णावुत्पाटयामि ते* ( (அது மாத்திரமல்ல) உன் காதுகள் இரண்டையும் திருகுவேன்.]
 
இந்நான்கினுள் முதலாவது ஸாமம் (பிரியத்தோடு செய்யும் உபதேசம்), இரண்டாவது தானம் (வெகுமதி பெற ஊக்கமளிப்பது), மூன்றாவது பேதம் (பிளவை உண்டாக்க. முயல்தல்), நான்காவது தண்டம் (பலாத்காரம்) என்று தெரிகிறதோ இல்லையோ? இதுதான் இயற்கையாக ஏற்பட்ட வரிசைக் கிரமம். ஆகையால்தான் இவ்வரிசையில் உபாயங்கள் கூறப்படுகின்றன. அவை நான்கு என்பது மாத்திரமின்றி இவ்வரிசையில் அமைந்துள்ள நான்கு என்று அறிந்துகொள்ள வேண்டும். இந்த சுலோகத்தை மறக்காமல் ஞாபகத்தில் நன்கு வைத்துக் கொள்ளவும்.
 
*தொடரும்…*

Wednesday, May 28, 2025

Justification after writing - HH Chandrashekhara Bharati Mahaswamigal

*Source: ஸ்ரீ குருகிருபா விலாஸம்-இரண்டாம் பாகம்*
 
*இரண்டாம் பாகம்*
*ஞானப் பிரஸூனங்கள்*
 
*8.எல்லோரிடத்தும் அன்பு*
 ஒரு வேதாந்த வித்யார்த்தி தான் எழுதியிருந்த ஒரு வியாஸத்தை (கட்டுரை) ஸ்ரீமத் ஆசார்யாரிடம் வாசித்துக் காட்டி அனுமதிபெற நினைத்து அதை வாசித்துக் காட்டிக் கொண்டிருக்கையில், மிருகங்களைப் பற்றி குறிப்பிட வேண்டிய ஸந்தர்ப்பத்தில் *गवाश्वमहिषादय:* (பசுக்கள், குதிரைகள், எருமைகள் முதலியன) என்ற சொற்றொடர் வந்தது.
 
மஹா: பசுக்களுக்கும் எருமைகளுக்கும் இடையில் குதிரைகளை விட்டதில் என்ன தாத்பர்யம்? பசுக்களும் எருமைகளும் ஒரே மாட்டு இனத்தைச் சேர்ந்தவைகளல்லவா?
 
வித்யார்த்தி: அது தவறுதான். "பசுக்கள், குதிரைகள் முதலியன" என்பதே போதும்.
 
மஹா: நீ இப்போது வித்யார்த்தி. சீக்கிரம் வித்வானாக ஆக வேண்டியவன். வித்வானுக்கு முதல் லக்ஷணம், எதையும் எழுதுவதற்கு முன் நன்றாக ஆலோசனை செய்து எழுத வேண்டும் என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு வேளை நன்கு யோசிக்காமல் எழுதிவிட நேர்ந்து விட்டாலும், எழுதினதை ஸமர்த்தனம் செய்ய ஸித்தமாயிருக்க வேண்டும். இது வித்வானுடைய இரண்டாவது லக்ஷணம். இப்போது நீ எழுதியாகிவிட்டது. எழுதினதை ஸமர்த்தனம் செய்வதற்குப் பார்.
 
வித்: என்னால் ஸாத்தியமில்லை. எருமைகளைச் சேர்த்தது அவசியமில்லை. தவறும் கூடத்தான்.
 
மஹா: வித்வான் ஆவதற்கு வழி இதல்ல. உனக்காக நான் அதை ஸமர்த்தனம் செய்யட்டுமா?
 
வித்: அதெப்படி? 
 
மஹா: இதற்கு முன்னுள்ள வாக்கியத்தில் உலகம் முழுவதும் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களால் வியாபிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லியிருக்கிறாய். அந்த நியாயம் மிருகங்கள் விஷயத்திலும் உண்மையாகத் தானே இருக்க வேண்டும்? ஆகையால் ஸத்வ குணத்திற்குப் பசுக்களையும், ரஜோ குணத்திற்கு குதிரைகளையும், தமோ குணத்திற்கு எருமைகளையும் உதாஹரணமாகக் காட்டியிருக்கிறாய். குணங்களின் ஸ்வபாவமான வரிசைக் கிரமத்தை அனுஸரித்து உதாஹரணங்களை அமைத்திருக்கிறாய். ஆகையால் பசுவுக்கும் எருமைக்கும் மத்தியில் குதிரை வர வேண்டியது தானே நியாயம் ? இப்பொழுது சரியாகி விட்டதா?
 
வித்: அந்த சொற்றொடரை எழுதும்போது நான் இவ்விதமாக நினைக்காமல் போனாலும், அது சரிதான் என்று இப்பொழுது தெரிகிறது.

மஹா: ஆகையால் அது மிகவும் சரியாகவே அமைந்திருக்கிற படியால் அது அப்படியே இருக்கலாம், மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று தெரிந்து கொண்டாயா?
 
வித்: ஆம், தெரிந்து கொண்டேன்.
 
மஹா: அப்படியானால், குணங்கள் மூன்றுதானே உண்டு. அவைகளுக்கு உதாஹரணங்களும் மூன்றுதானே தேவை? அப்படியிருக்க "முதலியன" என்று போட்டிருப்பதற்கு ஸமாதானம் எப்படி?
 
வித்: தாங்கள் செய்து கொடுத்த ஸமர்த்தனத்தின்படி "முதலியன" என்ற சொல் பொருந்தாது என்று இப்போது தெரிகிறது. அதற்கு ஸமாதானம் சொல்ல முடியாதுதான்.
 
மஹா: வித்வானுக ஆக வேண்டியவன் இவ்வளவு எளிதாக விட்டுக் கொடுத்து விடக் கூடாது என்பதை மறந்து விட்டாய்.
 
வித்: "முதலியன" என்ற சொல் அவசியம்தான் என்று எப்படி ஸமாதானம் சொல்ல முடியும்?
 
மஹா: உனக்காக நான்  ஸமாதானம் சொல்லிப் பார்க்கட்டுமா?
 
வித்: அபிப்பிராயப்படி செய்கிறது.
 
மஹா: "பசுக்கள் முதலியன", "குதிரைகள் முதலியன" "எருமைகள் முதலியன" என்று சொல்ல உத்தேசித்து மூன்றையும் சேர்த்து ஒரே பதமாக அமைக்க நினைத்தால், அப்பதம் எப்படி அமையும்? சொல்லு பார்ப்போம். "பசுக்கள் முதலியன குதிரைகள் முதலியன எருமைகள் முதலியன" என்று அப்படி அப்படியே தொடுத்து அனாவசியமாய் நீண்டு விகாரமாயுள்ள பதத்தைச் சொல்வாயா? அல்லது மூன்றையும் ஒருங்குபடுத்தி சுருக்கமாக "பசுக்கள், குதிரைகள், எருமைகள் முதலியன" என்று மாத்திரம் சொல்வாயா?
 
வித்: அவசியம் பின்னால் சொன்ன மாதிரி சுருக்கித்தான் சொல்வேன்.
 
மஹா: இப்போது நன்றாகத் தெரிந்ததா? உபயோகித்திருக்கும் சொற்றொடர் ஸந்தர்ப்பத்திற்கு உசிதமாகவும் எளிதில் ஸமர்த்தனம் செய்யக் கூடியதாகவே அமைந்திருக்கிறதென்று. இவ்வளவு தூரம் ஏன் உனக்கு சொல்கிறேன் என்றால், எதையும் எழுதுவதற்கு முன்னால் நன்கு யோசனை செய்ய வேண்டும். எழுதின பின்னர் ஸமாதானம் தேடிக்கொண்டு தடுமாறக் கூடாது என்பதை வற்புறுத்துவதற்காக.
 
*தொடரும்…*

Tuesday, May 27, 2025

Chandramouleeshvara abhisheka teertham & our sins- HH Chandrrashekhara Bharati Mahaswamigal

*Source: ஸ்ரீ குருகிருபா விலாஸம்-இரண்டாம் பாகம்*
 
Section 2
 
*ஞானப் பிரஸூனங்கள்*
 
*7.உண்மையான அஹிம்ஸை*
 
ஒரு நாள் முற்பகலில் காத்துக் கொண்டிருந்த சிஷ்யர்களுக்கு ஸ்ரீமத் ஆசார்யார் அபிஷேக தீர்த்தம் விநியோகம் செய்துவிட்டு ஸ்நாநம் செய்கிற வழக்கம்போல் மாத்யாஹ்நிக ஸ்நாநம் செய்த பிறகு இரண்டாவது ஸ்நாநம் செய்ய தயார் செய்து கொண்டிருந்தார். அன்று அவர்களுக்கு தேகத்தில் கொஞ்சம் ஸௌக்கியக் குறைவு இருந்தது. அப்படியிருந்தும் இரண்டாம் தடவை செய்தால் ஆரோக்கியம் இன்னமும் கெடுமே என்ற பயத்துடன் ஸ்ரீமடத்தைச் சேர்ந்த ஓர் அந்தரங்க அதிகாரி இரண்டாம் ஸ்நாநத்தை நிறுத்திவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்வதற்காக ஸ்ரீமத் ஆசார்யார் இருக்குமிடம் விரைந்து சென்றார்.
 
அதிகாரி: இரண்டாம் ஸ்நாநத்திற்கு இப்பொழுது என்ன அவசியமோ?
 
மஹா: ஸ்நாநம் செய்ய வேண்டுமென்று தோன்றுகிறது. 
 
அதிகாரி: அவ்விதம் தோன்றக் காரணம் என்ன?
 
மஹா: (அவர்களுக்குரிய புன்சிரிப்புடன்) ஏன், எனது மனது தான்.
 
அதிகாரி: மனதில் அவ்விதம் தோன்றக் காரணம் என்ன? ஏதேனும் காரணம் இருக்க வேண்டுமே?
 
மஹா: இருக்கத்தான் வேண்டும்.
 
அதிகாரி: அது என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா? 
 
மஹா: அவசியமில்லை. அவ்விதம் எனக்குத் தோன்றுகிறது என்பதே போதும். 

இந்தப் பதிலால் அவ்வதிகாரி மேலே ஸ்ரீமத் ஆசார்யாருடன் வாதாடுவது நியாயமுமில்லை, ஸாத்தியமும் இல்லை என்று உணர்ந்து தடைப்பட்டும்கூட, அவர்களுடைய ஆரோக்கியத்தைக் கருதி இத்துடன் விஷயத்தை விட்டுவிடவும் மனமில்லாமல் திகைத்தார். தனக்குள்ளேயே ஆலோசித்தார். பிறகு,
 
அதிகாரி: தீர்த்தம் கொடுக்கும்போது ஏதேனும் விசேஷமான தீட்டு அல்லது வேறு அசுத்தி ஏற்பட்டதா? அதனால்தான் ஸ்நாநமா?
 
இவ்விதம் நேரடியான கேள்வி எழுந்ததும்,
 
மஹா: ஆம்.
 
அதிகாரி: ஏற்பட்ட ஸம்பவம் என்ன?
 
மஹா: அதைப்பற்றி என்ன? அது முக்கியமில்லை.
 
மீண்டும் அதிகாரி தனக்குள் ஆலோசித்தார். பிறகு,
 
அதிகாரி: தீர்த்தம் வாங்கிக் கொள்வதற்காக இன்னார் வந்தாரே? அதனால்தானா?
 
மீண்டும் இவ்விதம் நேரடியான கேள்வி எழுந்ததும், 
 
மஹா: ஆம்.
 
அதிகாரி: இது அசுத்திக்குக் காரணமாயிருக்குமானால், முன்னமேயே என்னிடம் சொல்லியிருந்தால், தங்களிடம் அவர் வருவதை தடுக்க ஏற்பாடு செய்திருப்பேனே?
 
மஹா: எதற்காக தடுக்க வேண்டும்? வருகிறவர் எவ்வளவு தோஷத்துடன் கூடியிருந்தாலும், ஸ்ரீ சந்திர மௌலீசுவரரின் அபிஷேக தீர்த்தத்தின் மஹிமையில் நம்பிக்கையுள்ளவராயிருந்தால், அவருக்கு அதை நான் கொடுக்க மறுப்பதற்கு எவ்வித நியாயமும் இல்லை. 
 
அதிகாரி: தங்களிடமிருந்து நேராகப் பெறாமல், வேறொரு வரிடமிருந்து தீர்த்தத்தைப் பெறும்படி ஏற்பாடு செய்திருப்பேன்.
 
மஹா: அந்த தீர்த்தத்தை என் கையிலிருந்து வாங்கிக் கொண்டால் அதற்கு விசேஷ மதிப்பு என்று அவர் நினைக்கும்போது, நீங்கள் சொல்வதுபோல் செய்வது உசிதமாகுமோ?
 
அதிகாரி: தங்களுடைய தற்கால ஆரோக்கிய நிலைமையில் இரண்டாம்முறை ஸ்நாநம் செய்யவேண்டிய அவசியம் ஏற்படுகிறதே என்பதற்காகத்தான்.
 
மஹா: இது மிகவும் அல்ப விஷயம். இதுவும் என்னைப் பொறுத்ததுதானே? மேலும், அபிஷேக தீர்த்தம் ஆத்ம சுத்தியை உண்டாக்கக்கூடிய பொருள் என்று நாம் எல்லோரும் நம்பி வருகிறோமல்லவா? தீர்த்தம் பெறுபவன் செய்துள்ள பாவம் அதிகமாக உயர உயர, தீர்த்தம் வாங்கிக் கொள்ள வேண்டிய அவசியமும் அதற்குத் தகுந்தாற்போல் உயரும் என்பது நியாயமாகத் தெரியவில்லையா? அதாவது, ஒருவனிடம் பாபங்கள் அதிகமாக அதிகமாக அவனுக்கு பரிசுத்தியேற்பட வேண்டிய அவசியமும் அதிகமாகத்தானே ஆகும்? இப்படியிருப்பதால், இவரைக் காட்டிலும் குறைந்த தோஷமுள்ளவர் களைவிட இவருக்கே தீர்த்தத்தின் அவசியம் அதிகம். அதை இவருக்குக் கொடுக்க மாட்டேன் என்று எந்த காரணத்தைக் கொண்டு நான் சொல்ல முடியும்?
 
*தொடரும்…*

Meaning of vedic mantras

Monday, May 26, 2025

Ahimsa - Cow - HH chandrashekhara Bharati Mahaswamigal

*Source: ஸ்ரீ குருகிருபா விலாஸம்-இரண்டாம் பாகம்*
 
Section 2
 
*ஞானப் பிரஸூனங்கள்*
 
*7.உண்மையான அஹிம்ஸை*
 
ஒரு நாள் மாலை ஸ்ரீமத் ஆசார்யாரிடம் நான் இருக்கும் ஸமயம் சாந்தி நிலவும் மௌன நிலையில் வெகுநேரம் ஆழ்ந்து இருந்து விட்டார்கள். பிற்பாடு அந்நிலை கலைந்ததும் என்னை நிமிர்ந்து பார்த்தார்கள்.
 
மஹா: உங்கள் பிரதேசத்தில் சி என்ற கிராமத்தில் சில நாட்களுக்கு முன், அக்கிரஹாரத்தில் இறந்து கிடக்கும் பசுக்களின் உடல்களை பஞ்சமர்கள் எடுத்துச் செல்ல மறுத்துவிட்டபடியால், பிராஹ்மணர்களே அவைகளை கைவண்டியில் ஏற்றி நதிக்கரைக்குச் சென்று, அங்கு அவைகளை தங்கள் கையாலேயே புதைத்தார்களாமே? அது வாஸ்தவம் தானா ?
 
இந்த ஸமாசாரம் எப்படி ஸ்ரீமத் ஆசார்யாரின் காதிற்கு எட்டியது என்று மிகவும் ஆச்சரியத்துடன் நான் (கிருஷ்ணஸ்வாமி) "ஆமாம்" என்றேன்.
 
மஹா: வெகு நாளாக நடந்துவந்த வழக்கத்தை அப்பஞ்சமர்கள் இவ்விதம் புறக்கணித்ததைப்பற்றி அங்குள்ள பிராஹ்மணர்களுக்கு வருத்தமும் கோபமும் அதிகமாகவே இருக்குமென்று எண்ணுகிறேன்.
 
கி: மிக்க வருத்தம்தான்.
 
மஹா: அவர்களைப் பார்க்கும்போது அவர்களிடம் "நீங்கள் வருந்த வேண்டிய அவசியமில்லை. இந்த ஸம்பவத்தை நன்மையாகவே கருதுங்கள்" என்று எனக்காகச் சொல்வீரா?
 
கி: சொல்கிறேன். ஆனால் எப்படி நன்மையோ?
 
மஹா: தற்காலத்து தாய்மார்களிடம் தம் குழந்தைகளுக்குக்கூட போதிய பால் இருப்பதில்லை. ஆதலால், குழந்தைகள் பசுவின் பாலால்தான் வளர்கின்றன. மேலும், சிறுவர், கிழவர் முதலிய எல்லோருக்கும் ஆஹாரத்தில் முக்கிய அம்சமாக பால் இருந்து வருகிறது. பகவானை பூஜை செய்வதற்கு வேண்டிய பாலையும் பசுவே கொடுக்கிறது. பசுவைப் பற்றி சாஸ்திரங்கள் மிகவும் பரிசுத்தமானதும் பூஜிக்கத்தக்கதுமான பிராணி என்று சொல்கின்றன. உண்மையாகவே, பசு நமக்கெல்லாம் தாய்போலவே ஆகும். இத்தகைய பசுவிற்கு கடைசியில் நம் கையாலேயே ஸம்ஸ்காரம் செய்யும் பாக்கியம் கிடைத்தால், நாம் செய்நன்றியுள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டாமா? இது ஒரு பெரிய புண்ணிய கர்மாவேயாகும். அதை நாம் ஸந்தோஷத்துடன் செய்ய வேண்டுமல்லவா?
 
கி: இதுவரை அனுஷ்டானத்திலிருந்துவந்த ஒரு வழக்கத்தைக் கைக்கொண்டவர்களுக்கு, அதைவிட்டு வேறொரு புதிய வழக்கத்தை ஆரம்பிக்க மனம் இடம் கொடுப்பது சிரமம் இல்லையா?
 
மஹா: சிரமமாக இருக்கலாம். ஆனாலும் அவ்விதம் செய்வதால் நிச்சயமாய் விசேஷமாக ஒரு லாபம் கிடைக்கும் என்று தெரியும்போது, அப்படிச் செய்து பார்ப்பதுதானே சிலாக்கியம்? மேலும், பஞ்சமர்கள் பசுவின் உடலை எடுத்துச் செல்லும்போது, அதன் மாம்ஸத்தை யெல்லாம் அவர்கள் சாப்பிடுவார்கள் என்று பிராஹ்மணர்களுக்கு நன்றாய் தெரியுமல்லவா?
 
கி: ஆம், நன்றாய் தெரியும்.
 
மஹா: பிராஹ்மணர்கள் பஞ்சமர்களைக் கூப்பிட்டு "பசுவின் உடலை எடுத்துச் செல்லுங்கள்'' என்று சொல்வது "பசுவின் மாம்ஸத்தைச் சாப்பிடுங்கள்'' என்று சொல்வதற்கு ஸமானமேயாகும். பசுவின் மாம்ஸ பக்ஷணத்தினால் ஏற்படக்கூடிய பாபத்தில் இவ்விதம் சொல்லும் பிராஹ்மணர்களுக்கும் பங்கு இருந்தே தீரும். அதற்கு இடம் கொடுக்காமல் இவர்களே அந்த சரீரத்தை புதைத்துவிடும் பக்ஷத்தில், பிறர் பசு மாம்ஸ பக்ஷணம் செய்வதற்கு இவர்கள் அனுமதிக்க அவகாசமில்லாமல் ஏற்படுமல்லவா? இதுவே ஒரு பெரிய அனுகூலமல்லவா? அந்த கிராம ஜனங்களை ஸந்திக்க நேர்ந்தால், இவ்விரண்டு விதமான நன்மைகளையும் எடுத்துச் சொல்லி, இப்பொழுது ஏற்பட்ட மாறுதல் இறுதியில் அவர்களுக்கு நன்மையையே பயக்கும் என்ற காரணத்தினால் அதைக்குறித்து வருத்தப்பட வேண்டியதில்லை என்று சொல்லவும்.


3 narasimhas

காட்டழகிய, மேட்டழகிய, ஆற்றழகிய நரசிம்மர்களை பற்றி தெரியுமா?
காட்டழகிய சிங்கர், மேட்டழகிய சிங்கர், ஆற்றழகிய சிங்கர் ஆகிய மூன்று நரசிம்மர்கள் அருள் புரியும் தலமாக விளங்குகிறது 

 திருச்சியில் ஒரே நாளில் தரிசிக்கக் கூடிய நரசிம்மர் கோயில்கள்
 நமது ஜாதகத்தை மூன்று நரசிம்மர் கோவிலிலும் வைத்து எடுத்தால் உடனடி திருமணம் நடக்கும் 

காட்டழகிய சிங்கர்:

காட்டழகிய சிங்கர் கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமான் கோவிலில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு நரசிம்மர் எட்டு அடி உயரத்தில் கட்சி தருகிறார். பதினைந்து நூற்றாண்டுகள் பழமையான ஆலயமாகத் திகழ்கிறது. சுவாதி நட்சத்திரம் பெருமாளின் ஜென்ம நட்சத்திரம் அன்று பெருமாளுக்கு சிறப்பாக திருமஞ்சனம் செய்யப்படுகிறது. இந்த நாளில் வழிபடுவோர்களுக்கு கேட்ட வரம் கிடைக்கும், தீராத நோய் தீரும் என்பது நம்பிக்கை. பிரதோஷ நேரத்தில் இவரை வழிபட்டால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை வரம் நிச்சயம் என்பது நம்பிக்கை. நினைத்த கோரிக்கைகளை நிறைவேற்றிவைக்கும் நரசிம்மப் பெருமாளுக்கு மிகவும் பிடித்தமான பானக நைவேத்தியம் இங்கே சிறப்பு. வெல்லம், சுக்கு, ஏலக்காய் முதலியவற்றை பெருமாள் சந்நிதியில் நைவேத்தியத்துக்குக் கொடுத்தால், சந்நிதியில் அர்ச்சகர்கள் பெருமாளுக்காக எடுத்து வைத்த தீர்த்தத்தில் பானகம் கரைத்து அதை பெருமாளுக்கு நிவேதனம் செய்து தருகிறார்கள். அந்த பானக பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்கினால், பிரார்த்தனை நிறைவேறும் என்பது நம்பிக்கை.

மேட்டழகிய சிங்கர்:

ஸ்ரீரங்கத்தில் உள்ள மற்றொரு முக்கியமான கோவில் மேட்டழகிய சிங்கர் கோவில். தரைமட்டத்தில் இருந்து உயர்த்தப்பட்ட இந்த ஆலயம், தாயார் சந்நிதிக்கு அப்பால் உள்ள மதில் சுவரைத் தாண்டியவுடன் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது சோழர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோவிலின் சிறந்த அம்சம் முழுவதும் ஓவியங்கள் தான். அவை பெரும்பாலும் நாயக்கர்களால் வரையப்பட்டவை. கம்பராமாயண அரங்கத்தின்போது அதைக் கேட்டு மகிழ்ந்தவர் இவர். அதனால் தான் கம்பர், வால்மீகி ராமாயணத்தில் இல்லாத இரணியன் வதைப்படலத்தை கம்பராமாயணத்தில் சேர்த்தாகப் பெரியோர்கள் கூறுவர்.

ஆற்றழகிய சிங்கர்:

திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 10 நிமிட நடைபயணத்தில் இந்தக் கோவில் உள்ளது. திருச்சி சிந்தாமணி அண்ணாசிலையிலிருந்து, ஸ்ரீரங்கம், திருவானைக்கா நோக்கி வண்டிகளில் பயணம் செய்வோர், காவிரி புதுப்பாலத்தின் மேல் ஏறாமல் அதற்கு சற்று முன்பே, வலதுபுறமாக கீழிறங்கி திரும்பிச் செல்லும் தனி வழிபாதையில் 200 அடிகள் சென்றால் உடனடியாக இந்தக்கோவிலை அடையலாம்.

காவிரி நதியை ஒட்டி சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கோவில் கொண்டுள்ள ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப்பெருமாளை வேண்டினால், திருமணத் தடை விலகும் என்பது ஐதீகம். இக்கோவிலின் பின்புறக்கதவைத் திறந்து ஒரு ஐந்து படி இறங்கினால் போதும், பெருமகிழ்ச்சியுடன் பொங்கிப் பெருகிவரும் காவிரியில் நாம் இறங்கிப் புனித நீராடிட முடியும். சுவர்க்கத்தின் வாசல் போன்ற கோவிலின் பிரதான நுழைவாயிலுக்குள் செல்லும் நமக்கு இடதுபுறம் கருடனும், வலது புறம் ஹனுமனும் காட்சியளிக்கிறார்கள்.

இந்த மூன்று நரசிம்மர்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்தால், வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழலாம் என்பது நம்பிக்கை.

Simsubaa tree - Periyavaa

*"ஆஞ்சநேயர் அசோக வனத்திலே எந்த மரத்தின் மேலே உக்காந்துண்டு சீதையை தேடினார்?"* - பெரியவா *ⓀⓃ*

( சுந்தரகாண்டம் நூறாவது உபன்யாசம் நிகழ்த்தப் போகும் ஒரு உபன்யாசகருக்கு விளக்கம் கொடுத்த பெரியவா)

சுந்தரகாண்டம் நூறாவது உபன்யாசம் நிகழ்த்தப் போகும் ஒரு உபன்யாசகர், அறிஞர், 
பத்திரிகையை எடுத்துக் கொண்டு போய், நமஸ்காரம் பண்ணுகிறார்.

என்ன செய்யப் போறே? என்றார் பெரியவா.

பத்திரிகையிலேயே போட்டிருக்கே, சுந்தரகாண்டம் நூறாவது உபன்யாசம் என்று. அப்புறம் ஏன் பெரியவா கேட்கிறா?

வேறு ஒன்றும் இல்லை. சுந்தரகாண்டம் என்று பெரிதாக போடவில்லை. நூறாவது உபன்யாசம் இன்னார் செய்கிறார் என்பது பெரிதாக, சுந்தரகாண்டம் என்று சிறிய எழுத்துக்களில் இருந்ததால், சூசகமாக தெரிவித்தார் பெரியவா. புரிந்து கொண்டார் உபன்யாசகர்.

நூறு தடவை சுந்தரகாண்டம் சொன்ன உன் கிட்ட தான் கேட்கணும்.

ஆஞ்சநேயர் அசோக வனத்திலே எந்த மரத்தின் மேலே உக்காந்துண்டு சீதையை தேடினார்?

தெரியலேயே பெரியவா...

சிம்சுபா மரம்...

அசோக வனத்திலே என்ன மாதிரி விருக்ஷம் எல்லாம் இருந்தது ன்னு வால்மீகி விஸ்தாரமா சொல்றார்.

காஞ்சநீம் ஸிம்ஸுபாமேகாம் ததர்ஸ ஹனுமான் கபி:

சரி, அவர் ஏன் இந்த சிம்சுபா மரத்தின் மேலே இருந்து பார்த்தார், வேறே நிறைய மரம் எல்லாம் இருந்ததே?

இதெல்லாம் யாருக்கு தெரியும்? பெரியவாளைத் தவிர?

சொன்னால் தெரிஞ்சுக்கறேன் பெரியவா... என்றார் அடியார்.

அந்த சிம்சுபா வோட இலை, கிளை, பட்டை எல்லாம் ஸ்வர்ணமயமா இருந்ததாம். வால்மீகி சொல்றார்.

ஆஞ்சநேயர் எப்படி பட்டவர்?

காஞ்சனாத்ரி கமனீய விக்ரகம்... தன்னோட உடம்பு தங்கம் மாதிரி தகதக ன்னு ஜொலிக்கிறவர்...

அப்படியாப் பட்டவர் ஒரு பச்சை, இல்லே வேறு நிறத்திலே இருக்கிற மரத்திலே உட்கார்ந்துண்டா எல்லார் கண்ணுலயும் பட்டுடுவார். அதனால தங்க நிறத்திலே இருக்கிற இந்த சிம்சுபா மரத்திலே இருந்து சீதையை தேடினார்.

பச்சோந்தி என்கிற ஜந்து எந்த மரத்திலே இருக்கோ, அந்த நிறத்துல மாறிக்கும்.

மிலிடரில செடி, கொடி, மலை இதுல எல்லாம் எதிரிகளை ஏமாற்ற வேறே வேறே கலர்ல டிரஸ், தொப்பி, கவசம், மூஞ்சில வர்ணம் ன்னு எல்லாம் போட்டுக்கறாலே, அது Camouflage தானே?

அது சுந்தர காண்டத்திலேயே இருக்கு. அது உனக்கு தெரியணும். இதை நீ நிறைய பேருக்கு சொல்லணும்.

நம்ப புராண இதிகாசம் எல்லாம் வெறும் புளுகு மூட்டை இல்லே, அதை புரிஞ்சுக்கிற அறிவு நமக்கு இல்லே தானே தவிர, அதை பண்ணின பெரியவா எல்லாம் ரொம்ப அறிவானவா...

இன்னும் ஆயிரம் ப்ரவசனம் பண்ணி பரம க்ஷேமமா இருப்பே. 

என்று நிறைவு செய்தது அந்த ராமச்சந்திர மூர்த்தியின் ப்ரத்யக்ஷ பிரதி உருவம்.

Sunday, May 25, 2025

3 charama shlokas of vaishnavites

மங்களமான சரம ஸ்லோகங்கள் பற்றி ....
சரம என்றால் இறுதி  ultimate எனப் பொருள்.  அந்தணர்கள் இறந்தவர்மீது இரங்கல் ஸ்லோகம் சொல்வது வழக்கம். அவர் பெயரை வைத்து இயற்றப்படும்.  அதற்கு சரம ஸ்லோகம் என பெயர். நமக்கு அது எதற்கு. நாம் பகவான் தனது இறுதியான உறுதியான உத்தரவாதம் தந்துள்ள ஸ்லோகங்களை பார்ப்போம். அவையும் சரம ஸ்லோகங்கள் எனப்படும். (மங்களம் எனத்தான் மேலே ஆரம்பித்து உள்ளேன்) 

ஶ்ரீமந் நாராயணர் பக்த வத்ஸலர். ஸரணாகத வத்ஸலர். அவர் தனது பக்தர்களுக்கு புராணங்களில் தான் கட்டாயம் அவர்களை காப்பதாக உறுதி அளிக்கும் 3 சரம ஸ்லோகங்கள் உள்ளன. ஶ்ரீ வைஷ்ணவர்கள் அவற்றை கொண்டாடுவதில் வியப்பு என்ன!  

1. ஶ்ரீராமர் விபீஷண ஸரணாகதி கட்டத்தில் சொன்ன சரம ஸ்லோகம்

ஸக்ருதேவப் ப்ரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே
அபயம் ஸர்வ பூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம

~ என்னை ஒரேமுறை சரண் அடைந்து நான் உன்னைச் சேர்ந்தவன் காப்பாற்று என ஒரு உயிரினம் யாசித்தால்,  அவர்களுக்கு அபயம் கட்டாயம் கொடுப்பேன். இது எனது விரதம்

2. ஸர்வ தர்மான் பரித்யஞ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:

இது கண்ணன் கீதையில் தந்த வாக்குறுதி.
வேறு தர்மங்களை செய்யாமல் விட்டுவிட்டாலும் கவலை கொள்ளாதே. என்னை சரணாகதி அடைந்தாலே போதும். நான் தர்மம் கைவிட்டதால் உண்டான பாவங்களை நீக்கி ஸத்கதி தருவேன்

இந்த ஶ்ரீராமரும் கண்ணனும் அவர்களை சரண் அடைய சொல்கிறார்கள். ஆனால் நம் வராஹ ஸ்வாமி அருளிய மூன்றாவது சரம ஸ்லோகத்தை கொஞ்சம் பார்ப்போம்

3. ஸ்லோகம்
~~~~
ஸ்திதே மனஸி ஸுஸ்வஸ்த்தே ஸரீரே ஸதி யோ நர:
தாது ஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வரூபம் ச மாமஜம் !
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண ஸன்னிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் !!

~~~~|~|||

ஓ பக்தர்களே. நீங்கள் கபம் வாதம் பித்தம் என்ற மூவகை தாதுக்கள் ஸம அளவில் நிற்க,  உடம்பு நலமாக உள்ளபோது உங்கள் மனம் ஆரோக்யமாக ஸாந்தமாக உள்ளபோது பிறப்பற்ற என்னை என் விஸ்வரூபத்தை எப்போதும் நினைத்து பூஜியுங்கள்.
அவ்வளவு தான் உங்கள் வேலை. மனிதனாக பிறந்த வருக்கு இறப்பு நிச்சயம். அது நெருங்குங்கால் உங்கள் உடலானது மரக்கட்டை மற்றும் பாறைபோல அசைய இயலாது கிடக்கும்.  என்னை நினைக்கும் நினைவோ ஸக்தியோ முயற்சியோ இயலாது போகலாம். கவலை வேண்டாம். நான் உன் நிலை அறிவேன். என் பக்தனின் கோரநிலையை நான் நினைப்பேன். உத்தம கதி தந்துவிடுவேன்.

~~~  ஶ்ரீராமரும் க்ருஷ்ணரும் கூட பரமபதம் பற்றி குறிப்பிடவில்லை. ஶ்ரீ பூவராஹரே அந்த பரம புருஷார்த்தத்தை தானே முன் வந்து தருவதாக ப்ரதிஞ்ஞை செய்கிறார்.  அவர்கள் சொன்னது போல  அல்லாது தானே நம்மை நினைப்பதாக சொல்வது மேன்மைதானே !!!.

மூவரும் ஶ்ரீமஹாவிஷ்ணுவின் விபவங்கள் அவதாரங்கள் தான். எனவே ஶ்ரீமந் நாராயணரை ஸரணம் அடைவோம். பாவங்களை தொலைப்போம். நல்ல புத்தி பெறுவோம். இறுதியில் நற்கதி அடைவோமாக~~~~~~~~ வனமாலி

Saturday, May 24, 2025

Never underestimate anybody; Stay Humble - Real incident

*Never underestimate anybody; Stay Humble.* 

THE SALES GIRL IN CHENNAI GIRI STORE, THROUGH THE EYES OF "WASHINGTON POST."

After the Temple Darshan at the Kapaleeswarar Koil at Mylapore, Chennai, we entered the "Giri Trading Stores" 
and started searching for a book on "Thatva Bodha".

We found many people buying various Books and CDs and from their smart walks and accumulation of CDs from Abhang to Aruna Sairam and Bhajans to Bombay Jaishree, sent a nice feeling in us, that we have come to the right place indeed.

I was looking for this Book while my wife started collecting Bharathiar's songs and MS's Music CDs. I searched 
everywhere for this Book.

There was this Girl, standing next to the Cashier, sincerely watching all our movements. A dark complexioned girl, should be from a nearby village, might be 17 or 18 years of age, should not have crossed 8th Std. Might be out of poverty she is here. All my Journalist brain unnecessarily calculated about this Gullible Girl, and though she was repeatedly
watching me, I ignored her and started searching for "Thathva Bodha".

I saw many books from "Sandhya Vandanam" to Swami VIvekananda's "Chicago Speech" after having spent a 
good 40 minutes. I looked at her, she also looked at me curiously.

I did not ask her, knowing fully well that such a girl cannot have any idea of anything, leave alone "Thathva Bodha".

"Sir, may I help you?" (in Tamil)
"Yes. I am looking for 'Thatva Bodha'.
"Sanskrit Text or English/Sanskrit?"
God..she knows. "Sanskrit & English"
"Do you like to have the Publication from Chinmaya Mission or Indu Publications or by Ramakrishna Mutt?"
"I don't know..I just want to only learn. You see.. I don't really know, indeed"
"Do you read Tamil Sir?" "Yes, I am a Tamilian " (thinking to myself how most of mylife time I like to act in most other places that I am not). "Then Sir, you can take this"..she ran to the shelf where I had searched for 30 minutes, removed the books in
the front and came out with a Book in Tamil. "This one in Tamil by N.Sivaraman by Indu Publications. Infact it is simple and wonderful. You have the Sanskrit Text too inside."

My God! Why did I under estimate such a Genius girl? Just because of my arrogance that I am an NRI or just 
because I presumed such a black, dark complexioned gullible girl, who would have come for this job out of absolute poverty, wouldn't have any idea of "Thatva Bodha"?

I decided to change my attitude and realized that I am absolutely an 'Idiot' at this moment in front of this wonderful girl and submitted myself in all humility. "Madam, I really don't have any idea of even who wrote 'Thatva 
Bodha' till yesterday. I just attended a lecture on this subject and was fascinated by the lecture and hence....."

"Did you attend Goda Venkateswara Sastri's lecture in Bharathiya Vidya Bhavan?" 
"Oh God. How did she know?"
He regularly takes classes on such subjects. In fact he is one of the best Sir, in the city on such subjects.
You are interested in such subjects?
Yes Sir, I read a lot about Swami Vivekananda and Ramakrishna and Thathva Bodha incidentally is my favourite Subject.
Do you mean to say you have read "Thatva Bodha?" 
I have read this one by Sivaraman. Once you read it you won't feel like keeping that book on the table at all."

Why what is so great about this Book? Sir, you must be joking that you don't know about 'Thatva Bodha'.
Really. I accept my ignorance.

My wife was watching from the corner, admiring all her CD collections.

Sir, according to me, if you read this it gives the entire Vedanthic Saramsam and to say it in one word you become a bit more humble in life, leaving Ahamkaram once for all.

Is it a fact that reading this simple book one would get so humble?
Of course one should be involved totally into the text. Needs a lot of conviction and devotion.

My wife joined the conversation and she felt this girl is indeed a very very talented, intelligent girl, so she told 
me, "Why don't you interview her for Washington Post?" Why at all you should think of Paris Hilton?

I also felt that I owe something to her. So, I asked her whether she can spare sometime for an interview.

She politely refused, saying "My boss has to give me permission". Besides, many people are looking for guidance 
or help, like you and hence I have to go.

What is your name?
"Kalaivani."

My wife's admiration for her devotion to duty and her total involvement in her work, made her go direct to the Boss and said, "Sir, that girl Kalaivani."
"Yes, very hard working Girl."
"This is my husband Viswanath."
"Nice meeting you Sir".
"He is the Senior Journalist in Washington Post."
The Boss stood up." Washington Post?"
"Yes Sir. I would like to interview this girl. I am highly impressed with her ethics."

The Boss called her. The time was 5:45 PM. "Kalaivani, they have come all the way from USA., They would like 
to spend some time with you. Can you?"

"Sir, there are so many customers waiting for some guidance as it is a rush time. If they can come again 
tomorrow, I can.
"Okay. I can come again tomorrow."
I came back next day morning leaving all my appointments with 'Times of India 'and "Madras Press Club just to see this girl. It was not a rush hour. 

My wife and myself found out, Kalaivani is from a small village near Arcot. She has five sisters, and she is the eldest. Her father was a drunkard and he died a few years ago caring for none of them. Her mother used to work as 
a helper in masonry work and passed away two years back, leaving all the six on the streets.

This girl who had completed her 9th Std. decided to search for a job and 'Giri Trading' came forward to help her out. She brought up all her five sisters with her and with her meagre salary. She is taking care of them. All the five sisters are going to a nearby Chennai Corporation School.

Kalaivani, when did you get this enthusiasm to learn about 'Thatva Bodha'?"

"Sir after joining here, I decided that the best way to be of help to the customers is to know the Subject first. I took small Books on Ramana, Ramakrishna, Swami Vivekananda and started reading. I found the subject so fascinating.
I decided to read other books in Tamil like Bhagavad Gita, and Viveka Choodamani. Thats how...."

"What is your salary?"
"Rs 2,500/ a month, Sir."
"Are you able to manage all your expenses with the 5 sisters?"
"Not at all Sir, but the Boss helps me a lot."
"What is your aim in Life ?"
"I want all my sisters to get education. Then they would easily get employment. Is it not Sir?"
"If I give you Rs. 10,000 per month, for meeting all your expenses, would that suffice?"
"It is indeed too much, but I would accept it only through my Boss."
We took her to the Boss and told him that we would like to send Rs.10,000 every month so that all her sisters' education would be completed.

The Boss said "She deserves it Sir. You can trust me - I will hand over the amount to her every month 
or alternately you can open an account in her name and start transferring to the account."

My friend John Paul, who is the Regional Manager of 'Times of India' had also come with me. He said, "You have done a good thing."
My wife said, "I pray that 'Karpagambal' helps Kalaivani to become an expert in 'Vedantha' and start giving lectures in USA . We can arrange for her lectures."

We left wonder struck! If we go into the interiors of India, how many more 'Jewels' like Kalaivani can 
be found!!

I really became humbled!
Really the above incident teaches you an important lesson. Be humble and open always. Never underestimate others without knowing them. It can be misleading.

Soundarya lahari - Lakshmidhara bhashyam

ஸ்ரீ வித்யா ஸமய மத வைபவம் :

ஸ்ரீஸௌந்தர்யலஹரிக்கு ஸ்ரீலக்ஷ்மீதரர் இயற்றிய "லக்ஷ்மீதரா" பாஷ்யம்

41வது ச்லோகத்திற்கான லக்ஷ்மீதரரின் பாஷ்யத்தில் சிறிது ஸ்ரீவித்யா ஸமயாச்சார மதமே பரம ஸத்யம் என்பதும், அதனுடைய வைபவமும்,

1) அத꞉ ஸமயபூஜகா꞉ ஸமயின꞉ . தேஷாம்ʼ ஷட்சக்ரபூஜா ந நியதா, அபி து ஸஹஸ்ரகமல ஏவ பூஜா. ஸஹஸ்ரகமலபூஜா நாம ஸஹஸ்ரகமலஸ்ய பை³ந்த³வஸ்தா²னத்வேன தன்மத்⁴யக³தசந்த்³ரமண்ட³லஸ்ய சதுரஶ்ராத்மனா, தன்மத்⁴யபி³ந்தோ³꞉ பஞ்சவிம்ʼஶதிதத்த்வாதீதஷட்³விம்ʼஶாத்மகஶிவஶக்திமேலனரூபஸாதா³க்²யாத்மனா ச அனுஸந்தா⁴னம். 

"ஸ்ரீவித்யா ஸமய மத ரீதியில் ப்ரஹ்மோபாஸனையில் விளங்குவோர், ஸமயர் எனப்படுவர். அவர்கள் ஷடாதாரங்களைக் காட்டிலும், முக்யமாக ஸஹஸ்ராரத்திலேயே ஸ்ரீபராசக்தியை வழிபடுவர். ஸஹஸ்ராரமே மஹாபிந்து. சந்த்ர மண்டலமே சதுரச்ரம். பிந்து ஸ்தானத்தில் இருபத்தைந்து தத்வங்களுக்கு அப்பாலுள்ள இருபத்தாறாவது தத்வமான அகண்ட ஸச்சிதாநந்தமான சிவசக்தி ஐக்யத்தை ஸாதாக்யா எனும் ஷோடஸி கலையாக த்யானிப்பர்

2) அத ஏவ ஸமயிமதே பா³யாராத⁴னம்ʼ தூ³ரத ஏவ நிரஸ்தம். ஷோட³ஶோபசாரரூபபூஜாங்க³கலாபஶ்ச தூ³ரத ஏவ..
ததா²ஹி - ஆதா⁴ராதி³ஷட்சக்ராணாம்ʼ த்ரிகோணாதி³ஷட்சக்ரத்வேன தாதா³த்ம்யம், பி³ந்து³ஸ்தா²னஸ்ய ஸஹஸ்ரகமலத்வேன தாதா³த்ம்யம்ʼ, பி³ந்து³ஶிவயோஸ்தாதா³த்ம்யம். ஏவம்ʼ தே³வீஶிவயோஸ்தாதா³த்ம்யமிதி தாதா³த்ம்யத்ரயம். சக்ரமந்த்ரயோ꞉ ஐக்யம்ʼ பூர்வமேவோக்தமிதி, தேன ஸஹ சதுர்தா⁴ ஐக்யம்ʼ ஸமயினாம்ʼ ஸமயாராத⁴னமிதி மஹத்ரஹஸ்யம்..
அத்ர கிஞ்சித் உச்யதே.

"ஸமயம் எனும் மஹாமதத்தில் பாஹ்யாராதனம் முக்யமில்லை. ஷோடஷோபசாரம் முதலானவையும் முக்யமில்லை. ஆறு ஆதாரங்களும், த்ரிகோணம் முதலிய ஆறு சக்ரங்களுடன் தாதாத்ம்யம் ஆகிறது. ஸாக்ஷாத் பிந்துவே ஸஹஸ்ரார சக்ரம். பிந்துவே சிவனுடன் தாதாத்ம்யமாகிறது. தேவிக்கும் சிவனுக்கும் தாதாத்ம்யம். ஸ்ரீசக்ரத்திற்கும் ஸ்ரீவித்யைக்கும் தாதாத்ம்யம். இந்த ஐக்யாநுஸந்தானமே பூஜை.

3)ஸமயினாஞ்சதுர்விதை⁴க்யானுஸந்தா⁴னமேவ ப⁴க³வத்யா꞉ ஸமாராத⁴னமித்யேதத் ஸர்வஸம்மதம். கேசித்து ஷோடா⁴ ஐக்யமாஹு꞉ யதா² - நாத³பி³ந்து³கலாதீதம்ʼ பா⁴க³வதம்ʼ தத்த்வமிதி ஸர்வாக³மரஹஸ்யம். நாத³꞉- பராபஶ்யந்தீ-மத்⁴யமா- வைக²ரீரூபேண சதுர்வித⁴ இதி ப்ராகே³வோக்தம் . பரா த்ரிகோணாத்மிகா, பஶ்யந்தீ அஷ்டகோணசக்ரரூபிணீ, மத்⁴யமா த்³வித³ஶாரரூபிணீ, வைக²ரீசதுர்த³ஶாரரூபிணீ. ஶிவசக்ராணாம்ʼ அத்ரைவ அந்தர்பா⁴வ꞉

"இந்த சதுர்வித ஐக்யாநுஸந்தானமே ஸமயிகளுக்கு முக்யமாகும். இதைத் தவிற ஆறுவித ஐக்யமும் ஸமயிகளுக்கு முக்யம் (ஆறுவித ஐக்யத்தைப் பற்றி ஸுபகோதயத்தில் 12 வது ச்லோகத்தில் உள்ளது. பின்னர் விரிவாய்க் காணலாம். நாத பிந்து கலைகளின் ஐக்யபாவமே இது)

ஆனால் பகவதியின் ஸ்வரூபம் நாத பிந்து கலைகளுக்கு அப்பாற்பட்டது. ஆயினும் நாத பிந்து கலைகளுடனும் அம்பாள் ஐக்யபாவமாக விளங்குகிறாள்

நாதத்தின்‌ ஐக்யம் இங்கே விளக்கப்படுகிறது

நாதம் நான்கு வகைப்படும். பரா, பச்யந்தி, மத்யமா, வைகரீ

பரா -- த்ரிகோணத்தில் ஐக்யம்

பச்யந்தி -- அஷ்டகோணத்தில் ஸமன்வயம்

மத்யமா -- இரண்டு தசாரங்களில் தாதாத்ம்யம்

வைகரீ -- சதுர்தசாரத்தில் தாதாத்ம்யம்

இவையெல்லாம் சக்தி சக்ரங்களாயிற்றே. சிவசக்ரங்களுடன் எவ்வாறு நாதம் ஸம்மேளனம் ஆகிறது என்றால் நவசக்ரங்களிலும், மேற்குறிப்பிட்ட ஐந்து சக்தி சக்ரங்கள், மற்ற நான்கு சிவசக்ரங்களுடனும் அபின்னமாகி விளங்குவதால், நவகோணத்மகாமான மஹாஸ்ரீசக்ரம் நாதத்துடன் ஸமன்வயமாகிறது.

4) ஷட்சக்ராணி மூலாதா⁴ரஸ்வாதி⁴ஷ்டா²னமணிபூரானாஹதவிஶுத்³த⁴யாஜ்ஞாத்மகானி பி³ந்து³ஶப்³த³வாச்யானி பூர்வமேவ உக்தானி. கலா꞉ பஞ்சாஶத், ஷஷ்ட்யுத்தரத்ரிஶதஸங்க்²யாகா வா . ஏவம்ʼ நாத³பி³ந்து³கலாதீதா ப⁴க³வதீதி.
ஸஹஸ்ரகமலம்ʼ பி³ந்த்³வதீதம்ʼ பை³ந்த³வஸ்தா²னாத்மகம்ʼ ஸுதா⁴ஸிந்த்⁴வபரபர்யாயம்ʼ ஸரகா⁴ஶப்³த³வாச்யம். நாதா³தீததத்த்வம்ʼ து த்ரிபுரஸுந்த³ர்யாதி³ஶப்³தா³பி⁴தே⁴யம் 'த³ர்ஶாத்³ருʼஷ்டா த³ர்ஶதா' இத்யாத்³யபரபர்யாய - 'கஏஈல ஹீம்' இத்யாதி³மந்த்ரவர்ணநாமக - பஞ்சாஶத்³வர்ணாத்மக - ஷஷ்ட்யுத்தரத்ரிஶதஸங்க்²யாபரிக³ணிதமஹாகாலாத்மக - பஞ்சத³ஶகலாதீதா ஸாதா³க்²யா ஶ்ரீவித்³யாபரபர்யாயா சித்கலாஶப்³த³வாச்யா ப்³ரஹ்மவித்³யாபரபர்யாயா ப⁴க³வதீதி நாத³பி³ந்து³கலாதீதம்பா⁴க³வதம்ʼ தத்த்வமிதி தத்த்வவித்³ரஹஸ்யம். 

"மூலாதாரம் முதற்கொண்டு ஆஞ்ஞா பர்யந்தம் விளங்கும் ஆறாதாரங்களைத் தாண்டிய ஸஹஸ்ராரம் என்பது பிந்துவைக் கடந்த மஹா பைந்தவஸ்தானமே. அம்ருதகடல் எனவும் ஸுரகா எனப்படுவதும் இதே. நாதாதீதம் எனப்படுவது த்ரிபுரஸுந்தரி முதற்கொண்ட நித்யைகளும், க ஏ ஈ ல ஹ்ரீம் எனப்படும் மந்த்ர எழுத்துக்களுமே. இவளே மஹாவித்யை. ப்ரஹ்மவித்யை. ஐம்பது அக்ஷர வடிவான மாத்ருகாம்பா. 360 கிரண வடிவான ரச்மி மாலா தேவதைகளும் இவளே. பதினைந்து கலைகளுக்கப்பாற்பட்ட பதினாறாவது மஹாகலா. ஸாதாக்ய கலா, சித்கலா என பற்பல விதமாக உணரப்படுபவள்.

பிந்துவைக் கடந்து விளங்கும் ஸஹஸ்ராரத்தில் விளங்குவதாலும், பதினைந்து கலைகளுக்கு அப்பாற்பட்டு விளங்குவதாலும் இவள் பிந்துவிற்கும் கலைகளுக்கும் அப்பாற்பட்டவள். 

நாதத்தைக் கடந்தவள் என்பது முன்னால் கூறப்பட்டது.
 ஆக, நாதம் பிந்து கலை ஆகியவற்றைக் கடந்த ப்ரஹ்மஸ்வரூபிணி ஸாக்ஷாத் மஹாவித்யா த்ரிபுரஸுந்தரி.

4) நிஷித்வாசாரோயம் நிகம விரஹோ அநிந்த்ய சரிதே

"நிஷித்வமான ஆசாரத்தையுடையோர்களால் மூலாதார ஸ்வாதிஷ்டானாதிகளை மட்டும் லக்ஷ்யமாயுடைய பூஜையில் பகவதி த்ருப்தியடைவதில்லை"

5)அத்ர நாத³பி³ந்து³கலானாம்ʼ பரஸ்பரைக்யானுஸந்தா⁴னம்ʼஷோடா⁴ ப⁴வதீதி ஷோடா⁴ ஐக்யமாஹு꞉.. ஏவம்ʼ ப⁴க³வதீ ஷட்³விதை⁴க்யேன ஸம்பா⁴வ்ய பூஜயித்வா ஸாதா³க்²யாயாம்ʼ விலீனோ ப⁴வதி. தத³னந்தரம்ʼ ஷட்³விதை⁴க்யானுஸந்தா⁴னமஹிம்னா கு³ருகடாக்ஷஸஞ்ஜாதமஹாவேத⁴மஹிம்னா ச ப⁴க³வதீ ஜ²டி³தி மூலாதா⁴ரஸ்வாதி⁴ஷ்டா²னாத்மகசக்ரத்³வயம்ʼ பி⁴த்வா மணிபூரே ப்ரத்யக்ஷம்ʼ ப்ரதிபா⁴தி

"நாத பிந்து கலைகளுக்கு அப்பாற்பட்டு விளங்குபவள் பகவதி. ஆனால் நாத பிந்துக்களின் ஐக்யத்திலும் விளங்குகின்றாள். ஸகலத்தையும் ஐக்யப்படுத்தி ஸாதாக்ய கலையில் விலீனமடைவதே மோக்ஷம். இந்த ஐக்யானுபாஸ்தியாலும், குருகடாக்ஷத்தினால் ப்ரஹ்மமாகவே ஆகிற ஸ்திதியினாலும், பராசக்தி மூலாதாரத்திலும், ஸ்வாதிஷ்டானத்திலும் துளையிட்டுப்புகுந்து மணிபூரகத்தில் ப்ரத்யக்ஷமாகிறாள்

-- தொடரும்

ப்ரஹ்மவித்யா ஸ்வரூபிணி காமாக்ஷி பராபட்டாரிகா சரணம்

-- ஸர்வம் லலிதார்ப்பணம்