Friday, January 13, 2023

Naandi sraaddham

நாந்தியைபற்றி ஒரு சில வார்த்தைகள் இங்கு பார்ப்போம்.

நாந்திக்கு மற்றொரு பெயரும் உண்டு. அப்யுதயம் எனவும் இதை அழைப்பார்கள். அப்யுதயம் என்றால் 'வ்ருத்தி' எனவும் அர்த்தம் செய்து கொள்ளலாம். இது ஒரு மங்களகரமான கர்மா.

கர்ப்பாதானம், பும்ஸவனம், சீமந்தம், ஜாதகர்மம், நாமகரணம், அன்னப்ராஸனம், உபநயனம், வ்ரதம், விவாஹம், க்ருஹ பிரவேஸம் மற்றும் இவைகள் போன்ற ஒரு சில விசேஷங்களின்போது நாந்தீ ச்ராத்தம் செய்ய சொல்லியுள்ளது. 

அதாவது நாந்தீ ச்ராத்தம் நினைத்தபோதோ அல்லது வருஷாவருஷம் தனியாகவோ செய்வதில்லை. மங்கள சுப கார்யங்களில் அங்கமாகதான் செய்யப்படும், 

மங்கள பொருளேந்தி சந்ததியினரை ஆசீர்வதித்து செல்ல பித்ருக்கள் வருவதனால் இவர்களை நாந்தீமுகர்கள் என அழைக்கப் படுகின்றனர்.

பொதுவாக ச்ராத்தத்தில் இடம்பெறும் ப்ராசீனாவீதி, எள்ளு, வெள்ளை அரிசி போன்றவைகள் எதுவும் இதில் இராது.
 
பதிலாக உபவீதிதான். கோலம் போடுதல், மங்களாக்ஷதை, புஷ்ப சந்தனாதிகள் போன்றவைகள் நாந்தியில் இருக்கும். 

சுறுக்கமாக சொன்னால் நமது இல்லங்களில் நடைபெறும் மங்கள சுப கார்யங்களில் சந்ததியினருக்கு மங்களகரமாக ஆசி வழங்க வரும் பித்ருக்களை வரவேற்று உபசரிக்கும் கர்மாவே நாந்தீ ச்ராத்தம். 

குடும்ப வ்ருத்திக்காக செய்யப்படும் இந்த அப்யுதய ச்ராத்தத்தை நன்கு ச்ரத்தையோடு செய்வது குடும்பத்திற்கு ஸ்ரேயஸ்ஸை தரும் என்பதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment