Wednesday, August 24, 2022

Ramayana dhyana sloka with meaning

ஜெய் ஸ்ரீமன் நாராயணா.
ஸ்ரீ மத் ராமாயணம் பாராயண த்யான ஸ்லோகத்தில் அடியேனின் மனம் கவர்ந்த ஸ்லோகம் 
ய:கர்ணாஞ்சலி ஸம்புட்டை ரஹரஹ சம்யக் பிபத்யாதராத் வால்மீகே வதநாரவிந்த கலிதம் ராமாயணாக்யம் மது|
ஜன்ம வ்யாதி ஜரா விபத்தி மரணை அத்யந்த சௌபத்ரவம் சம்சாரம்ச விஹாய கச்சதி புமான் விஷ்ணோ:பதம் ஸாஸ்வதம்||
வால்மீகியின் திரு முகமாகிற தாமரையிலிருந்து பெருகும் ராமாயணம் என்கிற தேனை யார் ஒருவர் தன் காதுகளை குவித்து அஞ்சலி கைகளால் நாள் தோறும் விரும்பி நன்றாக பருகுகிறார்களோ அந்த புருஷன் பிறவி நோய் மூப்பு விபத்து மரணம் முதலிய கொடுந்துன்பம் நிறைந்த ஸம்ஸாரத்தை விட்டு விஷ்ணுவின் அழியாத சாயுஜ்ய சாமீப்யம் சரூப்யம் சாஸ்வதமான மோக்ஷ பதவியை அடைவான்.🙏🙏🙇‍♂️🙇‍♂️தாஸன் ஜோத்பூர் பாலாஜி.

No comments:

Post a Comment