Wednesday, August 24, 2022

On mattapalli by mukkoor

மட்டப்பல்லியில் மலர்ந்த மறைபொருள் ( தொடர்ச்சி ) 115
முக்கூர் லஷ்மி நரஸிம்ஹாசாரியார்
" திருவின் கேள்வனின் திருவிளையாடல்கள் "
7. ஸ்ரீசக்ரி கதை
சக்ரி என்கிற குயவன் மட்டபல்லியில் வசித்து வந்தான். ஸ்ரீமட்டபல்லி தம்பதிகளிடம் அளவு கடந்த பக்தியுடையவன்.. எம்பெருமான் ஸ்ரீராஜ்யலக்ஷ்மியுடன் தினமும் அவனது குடிசைக்குள் சென்று அவனுடன் பேசி மகிழ்வான். அவனுக்கு மோக்ஷமளிக்கிறேன் என்றான் எம்பெருமான். அவனோ ஆஞ்சனேயர் போல மட்டப்பல்லி நாதனை எங்கும் எப்போதும் காண விரும்பினான். எம்பெருமானும் அவனது பக்தியைக் கண்டு மெச்சி அவனை ஒரு சிறு கல்லாக்கிக் கர்ம க்ருஹத்தில் தன திருடிக்கொண்டன அருகில் வைத்துக் கொண்டான். ஹே கந்தர்வர்களே! நீங்களும் அக்கல்லை பார்த்தீர்களல்லவா? இதுதான் சக்ரி ஸ்ரீசக்ரியை ( சக்ராயுதத்தை உடையவனை ) அடைந்த கதை.
8. ஸ்ரீயமன் மோஹிநத்த கதை
யமதர்ம ராஜா ஒரு முறை ஒரு ப்ராணன் அபகரிப்பதற்க்காக மட்டப்பல்லிக்கு பாசக் கயிறுடன் வந்தான். வந்தவன் வந்த வேலையை மறந்துவிட்டு எம்பெருமானை ஸேவிக்கப் சென்றான். போனான் போனான் தான் !! எம்பெருமான் முன் மெய்மறந்து நின்று விட்டான். ப்ரதமம்புஷ்பம் பண்ணிக் கொண்டே இருக்கிறான். கணக்கெழுதும் சித்ரகுப்தன் யமன் தேடி மட்டப்பல்லி வந்து அவனும் ப்ரதக்ஷணம் பண்ண ஆரம்பித்து விட்டான்.யம் தன் தொழில் மறந்து மோஹித்து நின்றான். யமனையே மோஹித்து வைத்தவன் மட்டப்பல்லி எம்பெருமான். இவன் ம்ருத்யுவிற்க்கும் ம்ருத்யு. இவனிருக்குமிடத்தில் யமன் என்ன செய்ய முடியும் ?
எம்பெருமானுடைய திருவிளையாடல்கள் அநேகம் உள்ளன. அவற்றில் சிலவற்றைக் கூறினேன். மற்றவற்றை சமயம் வரும்போது கூறுகிறேன் என்றார் நாரதர். கந்தர்வர்கள் கதைகளைக் கேட்டு பரமானந்தம் அடைந்தனர்.
ஸிம்ஹாந்ருஸிம்ஹா! ஸிம்ஹாந்ருஸிம்ஹா!
( தொடரும் )
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி நளினி கோபாலன் அவர்கள்.

No comments:

Post a Comment