Friday, May 7, 2021

Viswamithra & his greatness

#அஸ்திரங்களில் நிகரற்றவர் யார் 
#மன்னராய் பிறந்து ரிஷியாகி பின் இராஜ ரிஷி பிரம்ம ரிஷி என சப்தரிஷிகளில் ஒருவரான விஸ்வாமித்ரரே அவர் 
#நம் அனைவருக்கும் வசிஷ்டரின் கன்றுக்காக விஸ்வாமித்ரர் சண்டையிட்டது தெரியும் 
#ஆனால் யுத்தம் அவ்வளவு எளிதாக முடிந்துவிட வில்லை யுத்தத்தில் கௌசிகர் விடாத அஸ்திரம் இல்லை 
#ஆனால் அனைத்தையும் வசிஷ்டரின் பிரம்ம தண்டம் அடக்கியது இதன்பிறகே ரிஷியாகிறார் 
#இதன் பிறகு திரிசங்கு சொர்க்கம், அரிச்சந்திரன் என இருவருக்கும் இடையே நடைபெற்ற பனிப்போரை பலரும் அறிவோம் ஆனால் எதுவும் காரணம் இல்லாமல் நடக்கவில்லை 
#வசிஷ்டர் மற்றும் விஸ்வாமித்ரரின் பங்கு இராமவதாரத்தில் இன்றியமையாததாகும் 
#ராமபிரானுக்கு ஞானமளிப்பதில் வசிஷ்டரும் 
#அஸ்திரமளிப்பதில் விஸ்வாமித்ரரும் தங்களின் பணியை செவ்வனே செய்தனர் 
#இராமருக்கு வசிஷ்டர் அளித்த ஞானம் அளவிட முடியாதது ஆகும் அதில் யோக வசிஷ்டம் மிகவும் முக்கியமாகும் இது சரியாக 32,000 ஸ்லோகங்களை கொண்டது (வால்மீகி இராமாயணம் முழுதும் கூட 24000 மட்டுமே)
 #தனது 16 வயதிலேயே மனித வாழ்க்கையை கண்டு விரக்தி அடையும் ஸ்ரீ ராமருக்கு வசிஷ்டரின் உபதேசமே யோக வசிஷ்டமாகும்
#இதே போல அஸ்திர பயிற்சியில் விஸ்வாமித்ரரின் பங்கு அற்புதமானது 
#அவர் ஏற்கனவே பல அஸ்திரங்களை மன்னராய் இருக்கும் போது அறிந்ததே ஆனால் ரிஷியான பின்பும் இதை விட வில்லை
#பெரும் வேள்வி நடத்துகிறார் விஸ்வாமித்ரர் அதற்கு இராவணனே நேராக வந்து தடுக்க முடியாததால் மாரிசன் மற்றும் சுபாகுவை அனுப்பி வைக்கிறான் 
#இவ்விருவர்களும் சாமான்யர்கள் இல்லை ராமபிரானின் தந்தையாகிய தசரதரே 
#நான் மற்றும் என் நண்பர்கள் எங்களின் படையுடன் சேர்ந்து வந்து தடுத்தாலும் கூட அந்த இருவர்களில் ஒருவனை தடுப்பதே இயலாத காரியம் அவ்வாறு இருக்கையில் வெறும் பன்னிரண்டு வயதேயான என் மகன் ராமன் எவ்வாறு தடுப்பான் " என மறுக்கிறார் 
 #இதை கேட்ட வசிஷ்டர் பொங்கி எழுகிறார் 
" தசரதா 
#இராமன் சிறுவனாய் இருந்தால் என்ன ??
#இளைஞனாய் இருந்தால் என்ன ??
#தனுர்வித்தை பயின்றால் என்ன??
#பயிலாமல் இருந்தால் என்ன
#விஸ்வாமித்ரர் உடன் #இருக்கையில் நீ ஏன் பயம் கொள்கிறாய் எதிர்த்து வருபவன் மரணமற்றவராக இருந்தாலும் விஸ்வாமித்ரர் உடன் இருக்கையில் நீ அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை 
அவரால் ஆகாத காரியம் என்று இல்லை அவரே ராமனை அழைக்கிறார் என்றார் அதில் காரணம் இருக்கிறது 
இவர் தவத்திற்கு இருப்பிடம் 
இவர் அறிந்த அஸ்திரங்களை இதுவரை எவரும் அறிந்ததுமில்லை
இனி எவரும் அறிய போவதுமில்லை
இவர் அறியாத அஸ்திரமில்லை மேலும் தன் பலத்தினால் புதுபுது அஸ்திரத்தினை உருவாக்கும் திறனும் கொண்டவராவார் 
தக்ச பிராஜாதிபதியின் மகளான ஜயை மற்றும் ஸுப்ரபை இருவரும் க்ரிசாஸ்வரை மணந்து கொடுமையிழைத்த அசுரர்களை வதைக்க இருவரும் கடவுள்களை தவிர மற்றோரால் வெல்ல முடியாத 100 அஸ்திரங்களை பெற்றெடுத்தனர் அவை அனைத்தையும் இவர் அறிவார் 
மேலும் மும்மூர்த்திகளிடம் இருந்தும் பல அஸ்திரங்களை பெற்றவர் இவருடன் இராமனை அனுப்புவதே உனக்கு தகும் மேலும் அதுவே இராமனுக்கும் நன்மை பயக்கும் 
(பால காண்டம் 21வது சர்க்கம்)
⛅ பின் இராமனை அழைத்து செல்லும் விஸ்வாமித்ரர் பலா மற்றும் #அதிபலா வித்யைகளை அளிக்கிறார் இந்த வித்தைகளால் பலத்தில் எவரும் இணையாக மாட்டார்கள் மேலும் #பசி ,#தாகம், #நோய்களால் #இருவருக்கும் #பாதிப்பு #ஏற்படாது 
#இன்னும் பற்பல விசயங்கள் இவ்விரண்டு வித்தைகளால் சாத்தியம் மேலும் இதை அறிந்தவர் விஸ்வாமித்ரர் மட்டுமே இதை #பிரம்ம தேவர் #விஸ்வாமித்ரர்க்கு #உபதேசித்தார்
#தாடகையை வதைத்த பின்வரும் தேவர்கள் இதுவே சரியான நேரம் தாம் பாதுகாத்த அஸ்திரங்களை ஸ்ரீ ராமருக்கு அளிக்க வேண்டும் என வேண்ட அவ்வாறே #அளிக்கிறார்கள்.
அடியேன்🙏🏻#கிருஷ்ணனின்_சேவகன் #ஸ்ரீராமஜெயம்  
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி சந்திரா சேஷாத்திரி அவர்கள்

No comments:

Post a Comment