ॐ श्री गुरुभ्यो नमः। सर्वेभ्यः सुप्रभातं नमस्कारः च। ஶ்ரீ குருப்யோ நம: அனைவருக்கும் நற்காலையும் வணக்கங்களும்!
Today's "amruta bindu" from Sri Chandrasekaramrutham - 22.01.21:
* ஒரே பராசக்தி தான் வெவ்வேறு வேஷங்களைப் போட்டுக்கொண்டு வெவ்வேறு காரியங்களைச் செய்கிறது.
* துர்கையாக வீரம், சக்தி எல்லாம் தருகிறது; லக்ஷ்மியாகி சம்பத்துக்களைத் தருகிறது; சரஸ்வதியாகி ஞானம் தருகிறது.
* சாக்ஷாத் பராசக்தியை காத்யாயனியாகவும், மஹாலக்ஷ்மியை பார்கவியாகவும் குழந்தைகளாக்கி, அந்த பா⁴வத்திலியே வழிபட்டால், நமக்கும் குழந்தைத் தன்மை சாக்ஷாத்கரித்து விடும். இந்த நாளில் waterproof என்று சொல்வது போல், நாம் "காம ப்ரூஃப், சோகப் ப்ரூஃப்" எல்லாமாக, சாந்தமாக ஆவோம்.
* "காத்தாயி" என்று சொல்கிற கிராம தேவதை காத்யாயனி என்பது என் ஊகம்.
* பட்டாரிகை என்று பெரிய ஶ்ரீவித்யா உபாசகர்கள் குறிப்பிடும் அம்பாளைத் தான், நம் கிராம மக்கள் "பிடாரி" என்று சொல்லி பூஜிக்கிறார்கள். பழைய செப்பேடுகளில் "பட்டாரிகா மான்யம்" என்பதைப் "பிடாரி மானியம்" என்று திரித்துக் குறிப்பிடுவதால் இதை உணரலாம்.
* இவ்வாறே, "பேச்சாயி" என்று சொல்கிற கிராம தேவதை பேச்சுக்கு ஆயியான (தாயான) வாக்தேவி சரஸ்வதியைத் தான் குறிப்பிடுகிறது.
* இங்ஙனம், துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ரூபமாக உள்ள அந்த பராசக்தியைப் பூஜித்து எல்லாச் சக்தியும், சம்பத்தும், நல்ல புத்தியும் பெறுவோமாக!
प्रदोष शङ्कर प्रत्यक्ष शङ्कर।
🙏🙏🙏🙏
No comments:
Post a Comment