*ஶ்ராத்தம் செய்பவரின் நியமம்*
यस्मिन्मासि मृताहस्यात् तन्मासं पक्षमेव वा । क्षुरकर्म न कुर्वीत परान्नं च रतिं त्यजेत् ॥
யஸ்மிந்மாஸி ம்ருதாஹஸ்யாத் தந்மாஸம் பக்ஷமேவ வா ।
க்ஷுரகர்ம ந குர்வீத பராந்நம் ச ரதிம் த்யஜேத் ॥
எந்த மாஸத்தில் ச்ராத்தம் வருகிறதோ, அதற்கு முன் ஒரு மாஸம் முழுவதும், அல்லது பதினைந்து தினம் முழுவதுமாவது முடிவெட்டி கொள்வதும், பரான்னத்தை புஜிப்பதும் (மற்றவர் அன்னத்தை புஜிப்பது ) ஸ்த்ரீ ஸங்கம் இவைகளை விடவேண்டும்.
சக்தியற்றவர்கள் மூன்று தினமாவது பரான்னத்தை வர்ஜிக்க வேண்டும் ச்ராத்த தினத்திற்கு முதல் நாளிலும், மறு நாளிலும், ச்ராத்த தினத்திலும்
நண்பன், குரு, அம்மான், ஸஹோதரி, மாமனார், மாமியார், இவர்களின் அன்னம் பரான்னமாக கருதப்படாது. இவர்களின் அன்னத்தை புஜிப்பதில் தோஷமில்லை.
*வைத்யநாத தீக்ஷிதீயம்*
No comments:
Post a Comment