இராமேஸ்வரம் ஒரு புனித க்ஷேத்ரமா (அ) சுற்றுலா மையமா (Picnic Spot) ?
நமது ஸநாதன தர்மத்தில் கயைக்கு அடுத்தபடியாக காசியும், ராமேஸ்வரமும் பித்ரு கர்மா செய்வதற்கு முக்கியமான இடமாக சாஸ்த்திரம் விதித்துள்ளது. இதிலும் ஒருபடி மேலாக அந்த பித்ரு கர்மாக்களை செய்வதற்கு அருகதையில்லாதவர்கள்கூட (சாஸ்திர விறோதமாக - அதாவது பஞ்சமஹாபாதங்களைச் செய்தவர்கள் கூட) இந்த ஸேதுக்ஷேத்ரமான ராமேஸ்வரத்தில் வந்து முறைப்படியோ (அ) எந்த முறைப்படியில்லாமலேயே குளித்தாலேயே , பாபங்கள் விலகி சுத்தனாவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அப்பேற்பட்ட இந்த இராமேஸ்வர க்ஷேத்திரத்திற்கு வரும் லௌகீகர்கள், கர்மா செய்வதற்கு முறையாக வைதீகர்கள் கிடைக்கவில்லை என்று வைதீகர்களை குறை கூறினார்கள். என்ன விஷயம் என்று பார்த்தால் அந்த லௌகீகர்கள் ஊரை சுற்றிப் பார்ப்பதற்கு ஆயிரக் கணக்கில் செலவிட தயாராக உள்ளார்கள். ஆனால் அங்கு செய்ய வேண்டிய பித்ரு கர்மாக்களைச் செய்து வைப்பதற்கு வைதீகர்களுக்கு சில நூறு செலவழிக்க யோசிக்கிறார்கள் என்பது தெறிய வந்தது.
என்னைப் பொருத்தவரை இரண்டு பேரிடமும் சில சில விஷயங்களில் தவறு உள்ளது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் நம்மை போன்ற லௌகீகர்கள் கொடுக்கும் பணம்தான்.
அதாவாது சிலர் உழைப்புக்கு மீறி சம்பாதிக்கும் பணத்தை பெருமைக்காக இதுபோன்ற இடங்களுக்கு சுற்றுலா வந்துவிட்டு பணத்தை இஷ்டப்படி செலவு செய்கின்றார்கள். இதுபோன்று உழைக்காமல் சம்பாதித்த பணமானது அந்த வைதீகனை பாதிக்கின்றது. ஏனென்றால் அந்த வைதீகன் தபஸ்வி அல்ல, ஆகையால் அந்த பணத்தை பயன்படுத்தியதால்(சாப்பிட்டதனால்) அந்த வைதீகனுக்கும் உழைப்புக்கு மீறி சம்பாதித்து ஆடம்பரமாக வாழ வேப்ண்டும் என்று எண்ணம் வந்து இப்போது அது பூதாகாரமாக வளர்ந்து வருகின்றது. அந்த வைதீகர்களும் ஆசாரத்தை விட்டுவிட்டார்கள். இதைத் தடுப்பதற்கு ஒரே வழி நாம் நம் தர்மத்தை சரியாகத் தெறிந்து கொண்டு முடிந்தவரை முறையாகச் செய்ய ஆரம்பித்தால் அந்த வைதீகர்களும் மாறிவிடுவார்கள்.
நம்மைப் போன்ற லௌகீகர்கள் இதுபோன்ற (குறைந்த பக்ஷம் ராமாஸ்வரம், காசி, கயா) க்ஷேத்ரங்களுக்குச் செல்லும்போது ஆசாபாசங்களை க்கட்டுப்படுத்தி , உடலினை வருத்தி உணவு மற்றும் மனக்கட்டுப்பாட்டுடன், வயிற்றுக்கும், நாவிற்கும் அடிமையாகாமல் மனதைக்கட்டுப் படுத்தி கர்மாக்களைச் செய்ய முயற்சித்தால் மற்வைகள் தானாகவே நல்லபடியாக நடக்கும். நாம் கர்மாக்களை சிரத்தையாகச் செய்ய முயற்சித்தால், அதை பகவானே நல்லபடியாக நடத்திக் கொடுப்பார்.
நமக்கு முயற்சியும் நம்பிக்கையும் இருந்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும். இந்த மாதிரி புண்யக்ஷேத்ரங்களுக்கு செல்லும்போது சொந்த இல்லத்தில் வசிப்பது போல வசதிகளை எதிர்பார்க்க கூடாது. அதுவும் இந்த ராமேஸ்வரம், காசி, கயா க்ஷேத்ரங்களில் லௌகீக வசதிகளை குறைத்துக் கொள்ள வேண்டும். பணம் ஒருவரிடம் அதிகம் இருந்தால் பசித்தவுடனே பணத்தை சாப்பிட முடியாது. தர்மத்தை கடைபிடிப்பதற்கு வெட்கப்படக் கூடாது. நாம் சென்றிருப்பது நமது பெற்றோர்களுக்கு கர்மா செய்வதற்குதான். அதற்கு எல்லா வைதீக விஷயத்திலும் சிரத்தையாக இருக்க வேண்டும். இதனடிப்படையில் முடிந்தவரை இதுபோன்ற இடங்களில் குளியலறையில் குளிப்பதை தவிர்து, அந்தந்த க்ஷேத்ரத்தில் உள்ள நீர்நிலைகளிலோ (அ) குறைந்தபக்ஷம் அங்குள்ள கிணற்றிலோதான் ஜலம் எடுத்து பயன்படுத்த வேண்டும்.
உணவும் நாமே சமைத்து சாப்பிடுவதற்கு முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் ஆசாரம் குறையாமல் இருக்கும். ஆசாரமில்லாமல் செய்யப்படும் கர்மா பாழ்(அ) வீண். இதன் அடிப்படையில்தான் காஞ்சி மஹாஸ்வாமிகள் கூட தனது சிஸ்ரூஷைக்கு (உதவிக்கு) வேதாத்யயனம் முடித்தவர்களைவிட, தர்ம சாஸ்திரப்படி வேத அத்யயனம் முடிக்காத , ஆனால் முறைப்படி கன்யாதான விவாஹம் செய்தவர்களைத்தான் வைத்துக் கொண்டார்கள் என்று எனது தந்தை கூறுவார்கள்.
அதேபோல வேதாத்யயனம் செய்தவர்களும், முறைப்படி ஆசாரமாக வாழவேண்டும் என்பதை அவ்வப்போது வலியுறுத்துவார்களாம்.
"எவனொருவன் தன் தர்மத்தை காப்பாற்றுகின்றானோ, அவனை அந்த தர்மமே காப்பாற்றும்"
आचार: परमो धर्म: श्रुत्युक्त: स्मार्त एव च । तस्मादास्मन् सदा युक्तो नित्यं स्यादात्मवान् द्विज: ।। – Manusmruti, Chapter 1, Shloka 108
ஆசாரமே தர்மத்திற்கு முதன்மையானதாக (அடிப்படை தர்மமாக (அ) உயர்ந்ததாக) ஸ்ருதி (வேதங்கள்) கூறுகின்றது. இதையே ரிஷீகளின் வாக்கியங்களான ஸ்ம்ருதிகளும் கூறுகின்றன. அப்பேற்பட்ட இந்த உயர்ந்த தர்மத்தை (ஆசாரத்தை)முறையாக எவன் கடைபிடிக்கின்றானோ அவனே த்விஜன் (பிராஹ்ம்மணன்) என்று அழைக்கப்படுகின்றான்
"आचार हीनं न पुनन्ति. वेदाः"| " ஆசார ஹீனம் ந புநன்தி வேதா: " - இதன் பொருள் கற்றரிந்த வேதவித்வான்களாக இருந்தாலும் அவனிடம் ஆசாரமில்லையெனில் அவ னிடம் உள்ள வேதம் கூட அவனை சுத்தப்படுத்தாது. அவன் எந்த தர்மத்தை செய்வதற்கும் தகுதியில்லாதவனாகின்றான்.
E.B. KUMAR
S/o. E. Balasubramania Satstriga
No comments:
Post a Comment