Tuesday, May 14, 2019

Be careful with your food

*ஒருவன் தூய்மையான மனமில்லாமல் மற்றவர்களுக்கு அன்னமிட்டால்....................*

*அந்த எண்ணம் உண்டவனின் ரத்தத்தில் கலந்துவிடும்*

*இது 'பீஷ்மர்' சொன்னது:*  

*"நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால் எனக்குள் அவனது தீய குணமே #குடிகொண்டு_விட்டது!".*

*பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தவாறே, உத்திரியான புண்ய காலத்தை எதிர்நோக்கிக்கி, காத்திருந்தார்.*

*அவர் மரணமடைவதற்கு முன் , அவரிடமிருந்து நீதி, நேர்மை, அரசியல் தர்மம் முதலியவற்றைக் கேட்டு தெரிந்து கொள்ள தர்மர் விரும்பினார்.*

*தனது சகோதரர்கள் நால்வரையும் அழைத்துக் கொண்டு பாஞ்சாலியுடன் பிதாமகரிடம் சென்றார்.*

*பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி "தாங்கள் எங்களுக்கு நீதி, நேர்மை, அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும்" என்று கேட்க , பாஞ்சாலி மட்டும் பலமாகச் சிரித்தாள்.*

*அதில் கேலி கலந்திருப்பதை உணர்ந்த தர்மர், "நம் தந்தைக்கு இணையான பிதாமகரைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் ? " என்று கடுமையாகக்கேட்டார்.*  
பா சூரியா      வழங்கும்  
*"துரியோதனனின் சபையில் துச்சாதனன் என்னை மானபங்கம் செய்த போது, கண்ணன் மட்டும் வந்து #காப்பாற்றியிருக்காவிட்டால் என் கதி #என்னவாகியிருக்கும்?*

*தர்மம் தெரிந்த பீஷ்மர், அந்தச் சபையில் அமர்ந்து, வேடிக்கை பார்த்துக் கொண் டிருந்தாரே தவிர , #துரியோதனனை எதிர்த்து 
#ஒரு_வார்த்தையாவது பேசினாரா ?*

*இப்படிப்பட்டவரிடம் நீங்கள் அரசியல் தர்மத்தைப் பற்றி கேட்கிறீர்களே என்று நினைக்கும் போது #சிரிக்காமல் என்ன #செய்வது ? " என்று சொல்ல,*

*பாண்டவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் #அமைதியாக இருந்தார்கள்.*  
*அப்பொழுது பீஷ்மர்பேசினார்.*

*"பாஞ்சாலி சொன்னது #முற்றிலும்_உண்மை. அவள் கேள்விக்கு நான் பதில் சொல்லியே ஆக வேண்டும். அப்போதுதான் #உங்களுக்கும் , #உலகத்துக்கும் உண்மை #என்னவென்று தெரியும்.*

*துரியோதனன், #அன்னமிடுவதில் #உயர்ந்தவன். எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்கள் வயிறு நிறைய உபசரிப்பான்.*

*ஆனால், அவன் செய்யும் #அன்னதானம் #பரிசுத்தமான 
#மனதுடன்செய்யப்பட்டதல்ல.*

*சுயநலத்துக்காக அன்னதானம் என்ற பெயரில் உணவிட்டு, அவர்களை தன் காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்வான்.*

*உண்டவர்கள் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, வேறு வழியில்லாமல் அவன் சொல்படி நடப்பார்கள் . இதற்கு #சல்லியன் ஓர் #உதாரணம்.*

*"ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன், மற்றவர்களுக்கு அன்னமிட்டால், அந்த எண்ணம் உண்டவனின் ரத்தத்தில் கலந்துவிடும்.*

*நான் துரியோதனன் இட்ட சோற்றை #உண்டதால் எனக்குள் அவனது தீயகுணமே 
#குடி_கொண்டு_விட்டது.*

*அதனால்தான் பாஞ்சாலியை மானபங்கம் செய்தபோது எதுவும் பேச முடியாமல் #வாயடைத்து அமர்ந்திருந்தேன் ."*

*" ஆனால் இப்போது , பார்த்தன் அமர்த்திக் கொடுத்த அம்புப்படுக்கையில் படுத்த பிறகு எனது உடலிலிருந்த #கெட்ட ரத்தம் முழுவதும் #வெளியேறி_விட்டது.*

*அத்தோடு தீயசக்தி களும் #வெளியேறிவிட்டன . இப்போது என் உடலில் #தூய்மையான_ஆன்மா மட்டும்தான் #இருக்கிறது.*

*எனவே நான் அரசியல் தர்மத்தைப் பற்றிப் #பேசத்தகுதியுள்ளவன் . கேளுங்கள் " என்று சொல்லி பாண்டவர்களுக்கு அரசியல் தர்மத்தை #உபதேசம் செய்தார்.*

*அதனால்தான் அந்தக் காலத்தில் விவரம் தெரிந்த சான்றோர்கள், சாதுக்கள், பண்டிதர்கள் #பரான்னத்தை அதாவது வெளியில் சாப்பிடுவதை #விரும்பமாட்டார்கள்.*

*வாழ்க வளமுடன்*

No comments:

Post a Comment