Tuesday, June 5, 2018

Let everyone be happy-Sanskrit subhashitam

இன்றைய நற்செய்யுள்:

न त्वहं कामये राज्यं न स्वर्गं नापुनर्भवम् I
कामये दुःखतप्तानां प्रणिनां आर्तिनाशनम् II"

"ந த்வஹம் காமயே ராஜ்யம் ந ஸ்வர்கம் நாபுனர்பவம் I
 காமயே து:கதப்தானாம் ப்ராணினாம் ஆர்தினாசனம் II"

பொருள்: ஆள்வதற்கு ஓர் அரசோ, அனுபவிக்க சொர்க்கமோ, வீடுபேறோ எனக்கு வேண்டாம்; என் ஒரே வேண்டுதல் உலகெலாம் துயருறும் உயிர்களின் வாதையை நீக்கு இறைவா என்பதுதான்.

ஒப்பீடு: 

"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!" 

- தாயுமானவ ஸ்வாமிகள்

No comments:

Post a Comment