Monday, June 11, 2018

Destiny - spiritual story

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
_____________________________________
 ‌.     🌙 *கொடிக் கவி!*🌙
       உமாபதி சிவாச்சாரியார்.
______________________________________
உமாபதி சிவாச்சாரியர் என்பார் சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் முக்கியமானவர்.

நாயன்மார்களுக்குப் பின் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைப் பரப்பியவர்களுள் முக்கியமானவராக இவர் விளங்குகிறார்.

பதிமூன்றாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும், பதினான்காம்  நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த இவர் சிதம்பரத்திலே தில்லைவாழ் அந்தணர் மரபில் பிறந்தவர்.

இவர் மெய்கண்ட தேவரின் மாணவரான மறைஞான சம்பந்தரைக் குருவாகக் கொண்டு சைவ நூல்களைப் பயின்றவர்.

சிதம்பரம் கோயிலில் பூசை செய்யும் உரிமை கொண்ட தில்லை மூவாயிரவர்களுள் ஒருவர்.

இவர் தீட்சிதர் அல்லாதவரான ஒருவரைத் தனது குருவாகக் கொண்டார். 

இதனால் தில்லைவாழ் அந்தணர்கள் இவரைத் தங்கள் சமுதாயத்திலிருந்து நீக்கினர்.

தில்லை கோயிலில் பூசை செய்யும் உரிமையையும் மறுத்தனர்

ஒருமுறை கோயில் கொடியேற்றத்தின்போது இவரின் முறையை வேறொரு அந்தணருக்கு வழங்கியிருந்தனர்.

ஆனால், அவர் கொடியேற்றும்போது கொடி ஏறவில்லை.

அச்சமயத்தில் ஈசனின் அருளால் உண்மையை உணர்ந்தவர்கள் உமாபதி சிவத்தை அழைத்தனர்.

தாங்களே வந்து கொடியேற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

அப்போது உமாபதி சிவம் ஏறாதிருந்த கொடியை ஏற்றி வைத்ததோடு கொடியேறுவதற்காக நான்கு பாடல்களை கொடிக்கவி எனும் பெயரில் பாடினார்.

இந்த பாடல்கள் மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றாக திகழ்கின்றது.

கீழேயுள்ள கொடிக்கவியை நெஞ்சில் பக்தியோடு பாடி தில்லைக் கூத்தனின் திருவடி படர்வோமாக!. 

🔔ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன்
றொளிக்கு மெனினு மிருளட ராதுள்ளுயிர்க் குயிராய்த்
தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே
குளிக்கு முயிரருள் கூடும் எபடிக் கொடி கட்டினனே.

🙏ஒளியும் இருளும் தமக்குள் வேறுபடுபவையாவன. ஆனால், திருவருளாகிய ஒளியும், ஆணவ மலமாகிய இருளும், ஆன்மாவாகிய ஒரே இடத்தில் இருக்கின்றன.

இவற்றுள் ஒன்று மேலோங்கும்போது, மற்றது அடங்கி நிற்கும்.

ஆனாலும், அவை ஆணவ மலம் திருவருள் அடங்கியிருக்கும் போது, அதைப் பற்றி கொள்ளாது.

திருவருள் எல்லா உயிர்களுக்கும் உயிராக இருக்கும்.

அறிவிருந்தாலும் கூட உயிர் முன் வினை காரணமாக மும்மலங்களில் மூழ்கும்.

திருவருள் ஆன்மாவில் வந்து சேரும்படி கொடியை நான் கட்டுகிறேன்.

🔔பொருளாம் பொருளேது போதேது கண்ணே
திருளாம் வெளியே திரவே  தருளாளா
நீபுரவா வையமெலா நீயறியக் கட்டினேன்
கோபுர வாசற் கொடி.

🙏எல்லா பொருளிலும் நீங்காதிருக்கும் சில பொருள் ஏது?

சூரியனின் கிரணம் போன்று சிவனின் சத்தித் திருவருள் ஏது?

சூரியனால் காணப்பெறும் கண்போலத் திருவருளால் செயல்படும் ஆன்மா ஏது?

அஞ்ஞான இருள் ஏது?

முழு கருப்பு ஏது?

அருளாளனே! நீ காக்கும் உலகமெலாம் நீ சாட்சியாக உன் கோபுர வாசலில் கொடி கட்டினேன்.

🔔வாக்காலு மிக்க மனத்தாலு மெக்காலுந்
தாக்கா துணர்வரிய தன்மையனை  நோக்கிப்
பிறித்தறிவு தம்மிற் பிறியாமை தானே
குறிக்குமரு ணல்கக் கொடி.

🙏வாக்கு மனங்களால் ஒரு காலத்திலும் தாக்காமல் அறிந்து உணர்வதற்கு அரிய தன்மையை உடையவன் ஈசன்.

ஈசனைப் பற்றி விசாரித்துப் பார்த்து, பகுத்து, ஆராய்ந்து அவன் அறிவுக்கறிவாய்ப் பொருந்திப் பிரியாமல் இருப்பதை உணர்ந்து கொண்டேன்.

இந்த உணர்வதற்கு அருள் நல்க வேண்டிக் கொடி கட்டினேன்.

🔔அஞ்செழுத்து மெட்டெழுத்து மாறெழுத்து நாலெழுத்தும்
பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்தும் நெஞ்சழுத்திப்
பேசு மெழுத்துடனே பேசா வெழுத்தினையுங்
கூசாமற் காட்டாக் கொடி.

🙏அஞ்செழுத்து பஞ்சாட்சர முதலான மந்திர எழுத்துக்களை உச்சரிக்கும் முறையில் உச்சரித்து, அந்த மந்திரங்களின் அட்சர சொரூபங்களான சக்தியையும், சிவத்தையும், நெஞ்சில் நிறுத்தினால், சக்தியும் சிவமும் ஆன்மாவில் கூடும்.

இவ்வாறு கூட்டுவிக்க அருள வேண்டும் என கொடி கட்டினேன்.

🔔அந்த மலமறுத்திங் கான்மாவைக் காட்டியதற்
கந்த அறிவை அறிவித்தங்  கிந்தறிவை
மாறாமல் மாற்றி மருவு சிவப் பேறென்றுங்
கூறாமல் கூறக் கொடி.

🙏அந்த ஆணவ மலத்தை அறுத்து, ஆன்மாவை எப்படி என்று காட்டி, அதற்குரிய அறிவை அறிவித்து, சகலநிலையில் உள்ள சிற்றறிவை மாறுபாடில்லாமல் மாற்றி, இதனால் தோன்றும் சிவமாகிய பேறு தானே கிடைப்பது கருதிக் கொடியைக் கட்டினேன்.


             திருச்சிற்றம்பலம்.
இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில் திருக்கோபுர திருப்பணி நடந்து கொண்டிருக்கிறது.

ஒருமாத காலமாக, அடியார்கள், பக்தர்கள், வணிகர்கள் எல்லோரும் பதிவுகளைக் காணப்பெற்று, திருக்கோபுரம் உயர்வதற்கு உபயம் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஈசனின் திருவுளப்படி வங்கிக் கணக்கில் உபயம் பெருகி வருகிறது.

ஈசனருளினாலும், உங்கள் உபயத்தாலும் திருக்கோபுரம் தடையின்றி வளர்ந்து, அதை நாம் அன்னாந்து பார்த்து *சிவ சிவ, சிவ சிவ* மொழிந்து வணங்கும் காலத்தை நெருங்கி வருகிறோம்.

தில்லை மூவாயிரத்தாரால் ஆலயத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட உமாபதி சிவாச்சாரியாரை, ஈசன் அருட்கொண்டு, அதே தில்லை மூவாயிரத்தாரால் அழைக்க விளைந்து, சிதம்பரம் கோயிலிக்கு வந்து  கொடிக் கவி பாட கொடியேற்றுதல் நடந்தேறியது.

அதுபோல, இராஜபதி ஆலய திருக்கோபுரம் வளர்ந்து, இக்கோபுரத்திற்கு உபயம் அளித்த அத்தனை உள்ளன்பர்களும், கோபுரத் திருப்பணியின்போது, வந்திருந்து இணைந்து தரிசித்திட, எல்லாம் பரம்பொருளான ஈசனிடம் விண்ணப்பம் செய்திருக்கிறோம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கோபுரத் தரிசனம் கோடி புண்ணியம்! இதை கோபுரத்தை காணும்போதெல்லாம் நமக்குத் தோன்றும்.

இதே கோபுரத் திருப்பணிக்கு பங்கெடுத்தீர்களென்றால், எத்தனை கோடி புண்ணியம்? மில்லியன் கணக்குதான் போங்க!

இதனால் புண்ணியம் தனமாகும். எதிர்காலத்தில் நம் பிள்ளைகளை அது காக்கும்!

புண்ணியம் எங்க செய்ய என்று தேடவேண்டாம். நீங்கள் வாசிக்கின்ற இந்த பதிவுக்கு கீழே இருக்கிறது.

இதில், உங்கள் உபயத்தை ஆலய வங்கி கணக்கில் செலுத்தி, புண்ணிய ரசீதை பெற்றுக் கொள்ளுங்கள்!

இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில் திருக்கோபுரம் அமைய உபயம் அனுப்பி விட்டீர்களா?

அனுப்பாதோர் உபயம் அனுப்பி, புண்ணியத்தை தனமாக்கிக் கொள்ளுங்கள்.

ஈசனுக்கு, நம்மால் முடிந்த, நம் பொருளாதார சூழ்நிலைக்குத் தகுந்த உபயத்தை அனுப்பி, ஈசனின் புண்ணியத்தை தனமாக்கி, வருங்கால நம் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லுங்கள்.

இதுவரை உபயம் அனுப்பிய அனைவருக்கும் 'நன்றி' என்று ஒரு வார்த்தையுடன் முடிக்காமல், ஈசனின் கருணை உங்களுக்கு பிரவாகமாக, ஈசனிடம் விண்ணப்பம் செய்து கொண்டோம்.

இனியும் இந்தச் செய்தியை அறிந்து உணர்ந்திருந்தவர்கள், தங்களால் இயன்றதை திருக்கோபுரம் அமைய உபயம் அளிக்குமாறு அனைவரின் பாதகமலங்களில் அடியேன் சென்னிமோதி பணிந்துதெழுந்து வணங்கிக் கேட்கிறேன்...

உபயம் அளியுங்கள்!
உபயம் அளியுங்கள்!!
உபயம் அளியுங்கள்!!!

நீங்கள் அளிக்கும் உபயம், உங்கள் கர்ம வினைகளை ஒழிக்கும். புண்ணியம் சேமிப்பாகும்.

நீங்கள் அளிக்கும் உபயங்கள், திருக்கோபுரத்தில், செங்கற்களாய், காரைபூச்சுக்காளாய், வர்ணங்களாய் உங்கள் பெயரைக் கூறிக் கொண்டிருக்கும்.

ஏன், ஆலயத் தரிசனத்திற்கு செல்லும்போது திருக்கோபுரத்தைக் கடந்து போவேமே!, அப்போது ஒவ்வொருவர் மீதும், உங்கள் உபயம், கோபுர நிழலாய் பதியுமே. இதனால் அவர்களுடைய ஆசி உங்களுடைய விதியை நல்வழிக்கு இழுத்துச் செல்லும்.

இப்புண்ணியம் எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு தனமாகத் திரும்பும்.

*மனம் நினைக்க மகேசன் அருளாவான்!*
*உபயம் ஒன்றளிக்க, உமாவும் அபயமாவாள்!*

உபயம் அனுப்பாதவர்கள் கூடிய விரைவில் அனுப்பி ஈசனின் புண்ணியத்தை தனமாக்கிக் கொள்ளுங்கள்.

புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே!

இப்போது, இராஜகோபுரத்திற்கு இரண்டாவது நிலைகைளைத் தாங்கி நிற்கும் சூழ்நிலை நடந்து கொண்டிருக்கிறது.

பணத்தை வங்கி கணக்கில் அனுப்ப வேண்டிய முகவரி.

*கைலாஷ் டிரஸ்ட்*
*Kailash Trust*
*இந்தியன் வங்கி.*
*Indian bank*
**கோவில்பட்டி கிளை*
*Kovilpatti branch*
*A/Ç no: 934827371*
*IFSC code: IDIBOOOKO51*
*Branch code no: 256*
-----------------------------------------------------------
நன்கொடை உபயம் செய்பவர்கள், செக்/டி.டி யாகவும் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்.

செக்/டி.டி - 
"கைலாஷ் டிரஸ்ட்" என்ற பெயர் இடவும்.

*செக்/டி.டி அனுப்ப வேண்டிய முகவரி:*

கைலாஷ் டிரஸ்ட்.
94/207, தனுஷ்கோடியாபுரம் தெரு.
கோவில்பட்டி.
Pin.628 501
தூத்துக்குடி மாவட்டம்.
Cont..98422 63681

மற்றும்,

*கோவை.கு.கருப்பசாமி.*
69.B, பெரியசாமி லே அவுட், இரண்டாவது வீதி,
இரத்தினபுரி போஸ்ட்,
கோயமுத்தூர். 641 027
தொலைபேசி: 99946 43516

சிதம்பரம் சென்று வழிபட்டால் முக்தி! திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி! காளையார் கோயிலில் காலடி வைத்தால் முக்தி! திருவாரூரில் பிறந்தால் மோட்சகம்! அது போல, எந்த ஒரு சிவ தல திருக்கோபுரத்திற்கு உபயம் செய்தால் வினை அழியும், புண்ணியம் நல்கும்!

இராஜபதி இராஜகோபுரப் பணிக்கு பங்களிப்பு செய்யும் அடியார் பெருமக்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் என்பதும், அவர்களின் குடும்பம் சந்ததி சந்ததியாக சகல வளங்களும் பெற்று வாழ்வார்கள் என்பதும் ஆன்றோர்களின் வாக்காகும்.

அதற்கிணங்க  இராஜபதி ஆலயத்தில் அமையவிருக்கின்ற இராஜகோபுரத்தால், கோடான கோடி புண்ணியப் பலனை பெறுகின்ற புனிதப் பணிக்கு தாங்கள் மனமுவந்து அளிக்கின்ற ஒவ்வொரு பங்களிப்பும் எம்பெருமான் திருவருளினால் தங்களையும் தங்களின் சந்ததியையும் வாழ வைக்கும் என்பதில் சிறிதேனும் சந்தேகமில்லை. இது நிறுதிடமான உண்மை. சத்தியம்.

எனவே எம்பெருமானின் பாதார விந்தமாக விளங்குகின்ற இந்த இராஜபதி இராஜகோபுரப் புனிதப் பணிக்கு கிள்ளியாவது வழங்குங்கள்! அருளைப் பெறுங்கள்!!

நம் மேல் அடியெதுவும் விழுந்தால் 'அம்மா' என அலறுவோம். அதேபோல வீட்டு நிலையில் இடிச்சுக்கிட்டா, 'சிவ சிவ' என்போம்!

வாசல் நிலையில் தலையை இடிச்சுக்கிட்டா, உடனே 'சிவ சிவ' 'சிவ சிவ' என மொழிவார்களாம். 

அவன் நாமத்தைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே, வாயிலின் நிலை உயரத்தை குறைவாக வைத்திருந்தார்களாம்.

இப்போது உயரஉயரமாய் வைக்கிறோம். நிமிர்ந்து செல்கிறோம். நிலை இடிப்பதில்லை, சிவ சிவ என சொல்வதில்லை.

இனியேனும் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு வேளைக்கும் சிவ சிவ, சிவ சிவ, என மொழிவோமாக!

சிவ சிவ என்றால் தீவினை
மாயும்!

அதற்காக சிவனே என்று இருந்து விடாதீர்கள். ஈசன் கோபுர உபயம் கொஞ்சம் ஞாபகம் இருக்கட்டும்.
----------------------------------------------------------
*🏜இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில் தல வரலாறு:*
அகத்திய முனிவருக்கு, சீடராகிய உரோமச மகரிஷி சிவமுக்தி வேண்டி சிவபெருமானை வேண்டினார்.

ஈசன் அருளால், அகத்திய முனிவர் உரோமச மகரிஷியை அழைத்து அவர் கையில் ஒன்பது தாமரை மலர்களை கொடுத்து, தாமிரபரணி நதி தொடங்கும் இடத்தில் வடுமாறு கூறினார்.

அப்படி இந்த ஒன்பது மலர்கள் ஒதுங்கும் இடத்தில் சிவபூஜை செய்து வந்தால் உனக்கு முக்திபேறு கிடைக்கும் என்று அருளினார்.

உரோம மகரிஷியும் அவ்வாறே  சிவபூஜை செய்து  முக்திபேறு பெற்றார்.

நவகிரகங்களும் இந்த ஒன்பது ஆலயங்களை வழிபட்டு, அவரவர்களுடைய அருட்சக்தியை பெற்றன.

உரோமச மகரிஷி வழிபட்டு முக்திபேறு பெற்றமையால், இந்த ஆலயங்கள் நவ கைலாயங்கள் எனப் பெயர் பெற்றது.

இந்த நவகைலாங்கள் மிகவும் பழமை வாய்ந்தவை.

இந்த நவ கைலாயங்களில், எட்டாவது தலமாக விளங்குவது *இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில்* ஆகும்.

சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு, தாமிரபரணி ஆற்றின் வெள்ளப் பெருக்கில், முற்றிலும் அழிவுற்றது.

இதன்பிறகு, கோவில்பட்டி கைலாஷ் டிரஸ்ட் மூலம், நிலம் கையகப்படுத்தி இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டில் பூமி பூஜை செய்து, இரண்டாயிரத்து பத்தாவது ஆண்டில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

வடக்கே காளத்திநாதர் என்றால், இங்கே கைலாசநாதர்.

திருமண, புத்திரபாக்கியம், வியாபாரம், விவசாயம், தொழில் விருத்தி, போன்றவைகளை நிவர்த்தி செய்கிறார் கைலாசநாதர்.

இவ்வாலயத்தில், இராகு, கேது தோஷம், திருமணத் தடை போன்றவைகளுக்குப் பரிகாரமும் செய்யப்படுகிறது.

இவ்வாலயத்தில் பதினாறு பிரதோஷம் பார்த்தால், நினைத்த காரியம் கைகூடும்.

இவ்வாலயத்தில் கண்ணப்ப நாயனார் சந்நிதியும் அமைந்திருக்கிறது.

இங்கு வந்து மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் அபிஷேகம் செய்தால், கணவன் மனைவி ஒற்றுமை கூடும்.

நவலிங்க சந்நிதியில் பக்தர்களே தங்கள் திருக்கரங்களால், அபிஷேகம் செய்து, தோஷ நிவர்த்தி பெறலாம்.
____________________________

No comments:

Post a Comment