அஷ்டபதி 13
p
அஷ்டபதி 13
சகி கண்ணனைப் பார்த்துவிட்டு திரும்பி வரும்போது பிருந்தாவனத்தில் பூரண சந்திரன் பிரகாசித்தது. ராதை விரஹதாபத்தினால் துன்பமடைந்து சகி இன்னும் வராததைக் குறித்து வருந்துகிறாள்.
1. கதிதஸமயே அபி ஹரி அஹஹ ந யயௌ வனம்
மம விபலம் இதம் அமலரூபம் அபி யௌவனம்
ஹரி- ஹரியானவன்
கதிதஸமயே அபி– வருவதாகச் கூறிய வேளையில்
ந யயௌ-வரவில்லை
இதம்- இந்த
மம- என்னுடைய
யௌவனம் – இளமையும்
அமலரூபம் அபி –அழகும்
விபலம் – வீண்
யாமி ஹே கம் இஹ சரணம் ஸகீஜன வசனவஞ்சிதா (த்ருவபதம்)
சகீஜனவசனவஞ்சிதா-( கண்ணனை அழைத்து வருவேன் என்ற) சகியின் வார்த்தையும் பொய்யாக
கம் – யாரை
இஹ – இங்கு
சரணம் யாமி – சரணமடைவேன்?
2. யதனுகமனாய நிசி கனம் அபி சீலிதம்
தேன மம ஹ்ருதயம் இதம் அஸமசரகீலிதம் (யாமி)
யதனுகமனாய- யார் வரவிற்காக
கஹனம் அபி- இருளடர்ந்ததாயினும் இந்தக் காடு
நிசி- இரவில்
சீலிதம் – அடையப்பட்டதோ
தேன – அவனால்
மம ஹ்ருதயம் – என் இதயம்
அஸமசரகீலிதம் – மன்மதனின் பாணங்களால் கிழிக்கப்பட்டதாயிற்று.
3.மம மரணம் ஏவ வரம் இதி விததகேதனா
கிமிதி விஷஹாமி விரஹானலம் அசேதனா (யாமி)
அசேதனா- ஆள் அரவமற்ற
விததகேதனா – வீணான இந்த இடத்தில்( கண்ணன் வராததால்)
கிம் இதி- எதற்காக
விரஹானலம்- பிரிவுத்தீயை
விஷஹாமி – நான் பொறுத்துக்கொள்ள வேண்டும்?
மம- எனக்கு
மரணம் ஏவ- மரணமே
வரம் இதி- மேலானது
4. மாம் அஹஹ விதுரயதி மதுரமதுயாமிநீ
காபி ஹரிம் அனுபவதி க்ருத ஸுக்ருத காமிநீ (யாமி)
மதுரமதுயாமிநீ – இந்த இனிமையான வசந்தகால இரவு
மாம்- என்னை
விதுரயதி- வருத்துகிறது
காபி ஸுக்ருதகாமினி – யாரோ ஒருத்தி புண்ணியம் செய்தவள்
ஹரிம் அனுபவதி – ஹரியுடன் சுகம் அனுபவிக்கிறாள்.
அதனால் தான் அவன் வரவில்லை என்று எண்ணுகிறாள்.
5. அஹஹ கலயாமி வலயாதிமணிபூஷணம்
ஹரிவிரஹதஹன வஹனேன பஹுதூஷணம் (யாமி)
வலயாதிமணிபூஷணம்- வளைகள் முதலிய ஆபரணங்கள் ( கண்ணனை சந்திப்பதற்காக பூண்டவை)
ஹரிவிரஹதஹன வஹனேன- கண்ணனின் விரஹத்தால் நெருப்புபோல சுடுவதால்
பஹுதூஷணம்- வெறுக்கத்தக்கவையாக
கலயாமி- எண்ணுகிறேன்
6. குஸும ஸுகுமார தனும் அதனுசர லீலயா
ஸ்ரகபி ஹ்ருதி ஹந்தி மாம் அதிவிஷமசீலயா(யாமி)
குஸுமஸுகுமாரதனும் மாம் - மலரைப்போல மெல்லிய என் உடலை
ஹரதி- மார்பில் உள்ள
ஸ்ரக் அபி – பூமாலை கூட
அதிவிஷமசீலயா- மிகக்கொடியவையான
அதனுசரலீலயா- மன்மதனுடைய அம்பானதால்
மாம் – என்னை
ஹ்ருதி- ஹ்ருதயத்தில்
ஹந்தி –வேதனை உண்டாக்குகிறது.
7. அஹமிஹ நிவஸாமி நகணிதவனசேதஸா
ஸ்மரதி மதுஸூதன:மாம் அபி ந சேதஸா (யாமி)
ந கணித வனவேதஸா- இந்த மூங்கில் காடுகளை பொருட்படுத்தாமல்
அஹம் – நான்
இஹா- இங்கு
நிவஸாமி- இருக்கிறேன்,
மதுஸூதன: - மதுசூதனன்
மாம் – என்னை'
சேதஸா அபி – மனதால் கூட
ந ஸ்மரதி- நினைப்பது இல்லை
ஹரிசரண ஸரண ஜெயதேவகவிபாரதீ
வஸது ஹ்ருதி யுவதிரிவ கோமளகலாவதீ(யாமி)
ஹரிசரண ஸரண- ஹரியின் பாதசேவையில் ஈடுபட்ட
ஜயதேவகவிபாரதி – ஜெயதேவகவியின் கவிதை
கோமளகலாவதீ-அழகும் கலைத்திறனும் வாய்ந்த
யுவதிரிவ – பெண்மணியைப்போல
ஹருதி- ஹ்ருதயத்தில்
வஸது- வசிக்கட்டும்
No comments:
Post a Comment