Monday, June 15, 2015

PASUPATI

Courtesy:N.Ramesh Natarajan/S.Ramanathan/WB Kannan

11075292_1082684828415216_7083595540655995938_n
 
 
 

தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)

தேவதாமூர்த்திகள் அவதார புருஷர்கள்

பசுபதி

பரமேசுவரனுக்குப் பசுபதி என்று பெயர்இங்கு பசு என்று சொல்வது அவருடைய வாகனமாகரிஷபத்தையோ காவலாளான நந்தியையோ அல்லபசு என்பது நாம்தான்ஜீவர்களெல்லாம் பசுக்கள்.அவர்களுக்கு யஜமானனாக இருக்கும் ஈசுவரனே பசுபதி.

தழையைக் கண்ட இடமெல்லாம் ஒடுகிற பசுவைப் போல்இந்திரிய சௌக்கியத்தைத் தேடிஒடிக்கொண்டேயிருக்கிறோம் நாம்பசுவின் சொந்தக்காரன் அதைக் கட்டிப் போடுவதைப்போல்பசுபதியான ஈசுவரன் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறான்.

'
எங்கே கட்டியிருக்கிறான்கண்ணுக்குக் கட்டு எதுவும் தெரியவில்லையேஎன்று தோன்றும்.ஆனாலும் நம்மை அறியாமலேயே இந்தக் கட்டைப்பற்றி நாம் அவ்வப்போது பேசுகிறோம்ஒருகாரியத்துக்காக நாம் எத்தனையோ முயற்சி செய்கிறோம்அப்படியும் அது பலிதமாகவில்லை;இச்சமயத்தில், 'முடிந்ததெல்லாம் செய்தேன்ஆனால்கர்ம பந்தம் யாரை விட்டதுகாரியம்ஜயிக்கவில்லைஎன்று சமாதானம் சொல்லிக் கொள்கிறோம். 'பந்தம்என்பதுதான் 'கட்டு'. நம்முடையபூர்வ கர்மாவினால் நம்மைக் கட்டியிருக்கிறார் பசுபதி.

கயிற்றால் கட்டப்பட்ட பசுவுக்குஅந்தக் கட்டின்மீது கோபம்தான் வரும்ஆனால் கட்டைஅவிழ்ந்துவிட்டால் என்ன ஆகிறதுஅது அசலான் தோட்டத்தில் மேய்கிறதுஅவன் அதைவெளுவெளு என்று வெளுத்துக் கட்டுகிறான்பட்டியில் கொண்டுபோய் அடைக்கிறான்அப்போதுதான்பசுவுக்குத் தன்னைக் கட்டிப்போட்டிருந்தது எவ்வளவு நல்லது என்று தெரிகிறது.

இப்படியேதான் கர்மக் கட்டைப்பற்றி நமக்குக் கோபம் வருகிறதுஈசுவரன் இப்படி ஒரு கட்டைப்போட்டுவிட்டால் நமக்குத் தோல்விதுக்கம் இதெல்லாம் ஏற்படாதுதோல்வியும் துக்கமும்வருவதால்தான் நாம் இப்போது 'நமக்கு இவ்வளவுதான் பொசிப்புஎன்கிற புத்தியைப் பெற்றுஇருக்கிறமட்டும் திருப்தியுடன் நிம்மதியுடன் வாழக் கொஞ்சமாவது முயல்கிறோம்இவை இல்லாவிட்டால்நம்முடைய ஆசைக்கும்நாம் போடுகிற 'ப்ளானு'க்கும் முடிவே இராதுஇத்தனை பலமான கட்டும்இருக்கும்போதேநம்மில் ஒவ்வொரு தனி மநுஷ்யனின் ஆசைக்கும் இந்த சிருஷ்டி முழுவதையும்ஆஹுதி பண்ணினாலும் போதாமலிருக்கிறதுபூலோகம் போதாதென்றுஇப்போதே சந்திர மண்டலம்,மார்ஸ் என்று பேசுகிறோம்கட்டு இல்லாவிட்டால் கேட்கவே வேண்டாம்இப்போதே இத்தனைபோட்டிபொறாமைசண்டை என்றால் அப்போது எப்படியிருக்கும் என்று கற்பனை கூடச் செய்யமுடியாதுநம் ஆசை அவ்வளவையும் காரியத்தில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்யாதபடி கர்மம்நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறதோநாம் பிழைத்தோமோ!

பசுவைக் கட்டிப் போடாவிட்டால் அது பயிரையும் பாழாக்குகிறதுதானும் அடிபடுகிறதுஅதுபோல்கர்மாவால் ஈஸ்வரன் நம்மைக் கட்டிப் போடாவிட்டால் நம்மையும் கெடுத்துக் கொண்டுலோகத்தையும் கெடுத்து விடுவோம் - இப்போதே கெடுக்கிறோம்துர்பலத்திலேயே இவ்வளவுகெடுத்தால்சுயேச்சை பலம் பூரணமாக இருக்கும்போது எவ்வளவு கெடுப்போம்கயிறு போட்டுக்கட்டுவதால்தான்ஏதோ ஒரு சமயத்திலாவது பசுவுக்குக் கட்டுத் தறியிடம் வந்து படுக்க முடிகிறது.கர்மம் கட்டுவதால்தான்நாமும் எப்போதாவது அதற்கு முளையான ஈசுவரனிடம் சித்தத்தைப் படுக்கவைக்கிறோம்இல்லாவிட்டால்பகவானை அடியோடு மறந்துஇப்படியே சம்ஸாரத்தில்உழன்றுகொண்டு தானிருப்போம்.

நம்முடைய க்ஷேமத்துக்காகநமே நமக்கு அதிக உபத்திரவத்தை உண்டாக்கிக் கொள்ளாமல்இருப்பதற்காகபகவான் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறார். 'எப்பொழுது அவிழ்த்து விடுவீர்?' என்றுஅவரைக் கேட்டால், 'ஒருவருக்கும் ஒரு தீங்கும் செய்யாமல்அதனால் உனக்கும் பாபம் உண்டாக்கிக்கொள்ளாமல் இருக்கிற பக்குவம் வந்தால்அவிழ்து விடுவேன்என்கிறார்.

குழந்தை விஷமம் செய்தால்கட்டிப் போடுகிறோம்நம்மிடம் 'ஆசைஎன்ற விஷமம் இருப்பதால்,நம்மைப் பசுபதி கட்டிப் போட்டிருக்கிறார்குழந்தைக்கு விஷம புத்தி போய் விட்டால் அப்புறம்கட்டமாட்டோம்நமக்கு ஆசை போய்விட்டால் ஈசுவரனும் நம்மை அவிழ்த்து விடுவார்.ஆசையினால்தான் பலருக்குப் பலவிதக் கஷ்டங்களை உண்டாக்கிநாமும் கஷ்டப்படுகிறோம்ஆசைபோய்விட்டால்யாருக்கும் நம்மால் கஷ்டம் இல்லைஅப்போது கட்டும் இல்லைஅவிழ்த்துவிடுவார்.'

கட்டு போய்விட்டது என்பதால் அசலான் தோட்டத்தில் மேயமாட்டோம்ஏனென்றால்அசலான்தோட்டத்தில் மேயாத புத்தி நமக்கு வந்த பிறகுதான் பசுபதி கட்டையே எடுக்கிறார்கட்டு போனபின்நாம் கட்டுப்பட்ட நிலையிலிருந்து உயர்ந்து கட்டியவனின் நிலைக்கே போய்விடுவோம்கட்டுஇருக்கிற வரையில் நாம் வேறுஸ்வாமி வேறு என்று பூஜிக்கிறோம்கட்டு போய்விட்டால் நாமேஅவன் என்று தெரிந்து கொள்வோம்அப்புறம் பூஜைகூட வேண்டாம்.

ஒரு நிலை வரையில் ஜீவன் பசு என்று சுருதியும் சொல்கிறதுஅது எந்த நிலை?


'
தேவதாம் அன்யாம் உபாஸதே'

என்று சொல்லியிருக்கிறதுஇதற்குப் பொதுவாக, 'இஷ்ட தேவதையை விட்டுவிட்டு அதற்குஅந்நியமான தேவதையை உபாஸிக்கிறவன் 'பசுஎன்று பொருள் சொல்வார்கள்அது தவறு. 'தான்பூஜிக்கிற தேவதை தனக்கு அந்நியமானது என்று நினைத்து எவன் பூஜை செய்கிறானோ அவன் 'பசு'என்பதே சரியான அர்த்தம்இப்படி பகவான் வேறுபக்தன் வேறு என்ற பேத புத்தி இருக்கிற வரையில்கர்மா உண்டுகர்மா உள்ள வரையில் கட்டும் உண்டு.

அதற்காகஇப்போதே நமக்கு பேத புத்தி போய்விட்டதாக நாம் பிரமை கொள்ளக் கூடாதுபாசாங்குபண்ணக்கூடாதுஉண்மையாகவே பேத புத்தியைப் போக்கிக் கொள்ள வேண்டும்அப்படிப் போகாதவரையில் சாஸ்திரோக்தமான கர்மங்களைச் செய்யத்தான் வேண்டும்.

'
ஸ்வாமிகள் என்ன இப்படிச் சொல்கிறார்இத்தனை நாழி கர்மா இருந்தால் கட்டும் உண்டு என்றுசொன்னார்இப்போது இவரே அநுபவத்தில் அபேத ஞானம் வருகிற சாஸ்திரம் விதிக்கிறகர்மத்தைச்செய்யத்தான் வேண்டும் என்கிறாரேஇந்தக் கர்மம் மட்டும் கட்டிப் போடாதா?' என்று உங்களுக்குத்தோன்றும்.

இதற்க்கு பதில் சொல்கிறேன்ஆசை வாய்ப்பட்டுச் செய்கிற கர்மங்களின் கட்டை அவிழ்ப்பதற்கேசாஸ்திரம் விதிக்கிற தர்ம காரியங்களின் கட்டு உதவி செய்கிறதுஅதெப்படி ஒரு கட்டு இன்னொருகட்டை அவிழ்க்க உதவும் என்று கேட்கலாம்ஒரு திருஷ்டாந்தம் சொல்கிறேன்ஒருத்தன்விறகுகளைக் கட்டிக் கொண்டு வருகிறான்மணி முடிச்சாகக் கட்டிவிட்டான்கயிற்றை அவிழ்க்கமுடியவில்லைஅப்போது என்ன செய்வார்கள் தெரியுமாஅந்தப் பழைய கட்டுக்குப் பக்கத்திலேயேஅதைவிட இறுக்கமாக மற்றொரு கயிற்றைச் சுற்றி நெருக்குவார்கள்இந்த இரண்டாவது கயிற்றைமுடிச்சுப் போடமாட்டார்கள்அப்படியே கெட்டியாக விறகுகளைச் சுற்றி இறுக்கிப் பிடித்துக்கொள்வார்கள்இந்த இறுக்கலில் பழைய மணி முடிச்சுக் கட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகத் 'தொளதொளஎன்று நெகிழ்ந்து கொடுக்கும்அதை அப்படியே அலாக்காக விறகுச் சுமையிலிருந்து கழற்றிவிடுவார்கள்பிறகு புதிதாக இறுக்கிப் பிடித்துக் கொண்ட கயிற்றையும் விட்டுவிடுவார்கள்ஆகபுதியகட்டு பழைய கட்டை அவிழ்க்க உதவி விட்டதுஅப்புறம் இதையும் சுலபமாக எடுத்துப் போட்டு விடமுடிந்தது.

சாஸ்திரம் சொல்கிற தர்ம காரியங்களின் கட்டுஇரண்டாவது கயிறு போன்றதுஅது முடிச்சுப்போட்டுக் கட்டுவது அல்லகட்டுகிற மாதிரி இருக்கும்சாஸ்திர விதிகள் ரொம்பவும் கறாராக,கண்டிப்பாக கட்டுப்படுத்துகிற மாதிரிதான் இருக்கும்ஆனால் இந்திரியங்கள் போடுகிற மணிமுடிச்சான ஆசைக்கட்டிலிருந்து விடுபட்டுகடைசியில் பூரண நிம்மதிசௌக்கியம்விடுதலை பெறவேண்டுமானால்இந்தக் கட்டு இருந்தேயாக வேண்டும்.

ஆசைக்கட்டுப் போனபின் சாஸ்திரக் கட்டும் போய்விடும்ஆனால் முதலில் அது போவதற்காக இந்தஇரண்டாவது கட்டை நாமாகப் போட்டுக் கொள்ள வேண்டும்தார்மிகமாக மநுஷ்ய காரியம்,தேவகாரியம்பூஜையக்ஞம்பரோபகாரம்ஜீவாத்ம கைங்கரியம் எல்லாம் பண்ண வேண்டும்ஆசைபோனபின் இந்தத் தெய்வ காரியங்கள்வைதிக காரியங்கள்சமூக காரியங்கள் எல்லாம் கூடநின்றுவிடலாம்.

இந்த நிலையை ஒருவன் அடைகிறபோது தேவதைகளுக்கெல்லாம் இப்படிப்பட்ட சாதகனிடம் கோபம்வருமாம். (தேவதைகள் வேறுதெய்வம் எனறு பொதுவில் சொல்லப்படும் ஸ்வாமி வேறு.) * மனிதன்வைதிக காரியம் செய்தால்தான் தேவதைகளுக்கு ஆஹுதி கிடைக்கும்இல்லாவிட்டால் அவர்கள்பட்டினிதான்எனவே இவன் கர்மாவை விட்டுயக்ஞம்தர்ப்பணம்பூஜை இவற்றை நிறுத்தி விட்டால்தேவர்களுக்குச் சாப்பாடு கிடைக்காதுஎனவேத்தான் கோபம் வரும்மாடு கறவை நின்றுவிட்டால்அப்புறம் அது பிரயோஜனம் இல்லை என்று தீனி போடுவதை நிறுத்தி விடுகிறோம் அல்லவா?மனிதனின் ஆசையெல்லாம் நின்று விட்டால்எந்த தேவதையின் அநுக்கிரகமும் இவனுக்குவேண்டாம் என்றாகிஅவற்றுக்கு இவன் ஆஹுதி தருவதும் நின்றுவிடும்மனிதனின் கர்மம்நின்றுவிட்டால் அப்புறம் தேவதைகளுக்கு அவனால் பிரயோஜனம் இல்லைஇது காரணமாகத்தான்,புராணங்களில் பல ரிஷிகள் பிரம்ம ஞானத்தை அடையத் தபஸ் செய்த போது தேவதைகள்பிரதிபந்தகம் (இடையூறுவிளைவித்த தாகப் பார்க்கிறோம்.

இதனால்தான் ஸம்ஸ்கிருதத்தில் அசட்டுக்கும் அஞ்ஞானிக்கும், 'தேவனாம் ப்ரியன்என்றே ஒருபெயர் ஏற்பட்டிருக்கிறது. 'தேவனாம் ப்ரியன்என்றால் 'தேவதைகளுக்கு இஷ்டமானவன்என்றுஅர்த்தம்அது ஏதோ புகழ்ச் சொல் போலத் தோன்றும். 'தேவனாம் ப்ரிய அசோக்என்று அசோகச்சக்கரவர்த்திக்கூடக் கல்வெட்டுகளில்ஸ்தூபிகளில் எல்லாம் தம்மை வர்ணித்துக் கொண்டிருக்கிறார்.ஆனால்உண்மையில் எவன் தேவதைகளுக்கு திருப்தி செய்கிற நிலைக்கு மேற்பட்ட ஞானத்தை ஒருநாளும் தேடிப் போகாமல்கர்மத்திலேயே உழலுகிற அசடோஅவனே 'தேவனாம் ப்ரியன்'.

பழைய காலத்தில் ஞானம் வந்தவர்களும்கூட சாஸ்திரக் கர்மாவை விடத் தயங்கினார்கள்.மற்றவர்களுக்கு வழி காட்டுவதற்காகஇவற்றை தங்களுக்கு அவசியமில்லாமலும் கூடத் தொடர்ந்துசெய்து வந்தார்கள்நாமோசிறிது கூடத் தயக்கமில்லாமல்ஹாய்யாக சகல சாஸ்திரதர்மங்களையும் விட்டுவிட்டோம்ஆனால் ஞானியாகத்தான் ஆகவில்லை.

ஞானியில்லை என்றால், 'தேவனாம் ப்ரியர்'களாகவாவது இருந்தால்அவர்களுடைய பிரீதியால்நாம்செத்துப்போன பின் தேவலோகத்துக்குப் போகலாம்தேவலோகம் என்பது ஒரு கேளிக்கை லோகம்.அது மோக்ஷமல்லமோக்ஷம் என்பது இந்திரியங்களுக்கு எட்டாத ஆத்மானந்தத்தை சாசுவதமாகத்தருவதுதேவலோகம் என்பது நம் வைதிக கர்மாவினால் கிடைத்த புண்ணியம் தீருகிற காலம்வரைக்கும் மட்டுமே போக போக்கியங்களைத் தருகிற இடம்புண்ணியம் தீர்ந்தபின் பூலோகத்துக்குத்திரும்பத்தான் வேண்டும்மோக்ஷ சுகத்துக்கும்தேவலோகம் என்கிற ஸ்வர்கத்தின் இன்பத்துக்கும்,அஜகஜாந்தரம்இருந்தாலும் துக்கமும் கஷ்டமும் நிறைந்த மநுஷ்ய லோகத்திலிருந்து நாம் தேவலோகத்துக்காவது போனால் விசேஷம்தான்நாம் இதற்காகவே வழி பண்ணிக் கொண்டிருக்கிறோமா?அதுவும் இல்லைதேவதைகளுகக்குத் திருப்தி தருகிற வைதிக கர்மங்களை விட்டுவிட்டபின்அவர்களுக்கு எப்படிப் பிரியமானவர்கள் ஆவோம்நாம் 'நரகவாஸீனாம் ப்ரியர்'களாகவேஇருக்கிறோம் - நரகத்திலிருப்பவர்கள்நமக்குத் துணையாக இவர்களும் வரப் போகிறார்கள் என்றுநம்மைப் பற்றிப் பிரியமான எண்ணுகிற ஸ்திதியில்தான் இருக்கிறோம்.

துஷ்டர்களாக இருப்பதைவிடஅசடுகளாக ஆவது சிலாக்கியம்முதலில் நாம் அசடுகளானதேவனாம்பிரியர்களாக ஆகவேண்டும்அப்புறம் பசுபதி கொஞ்சம் கொஞ்சமாக் கட்டை அவிழ்த்துவிடுவார். (தேவலோகத்தை விரும்பாமல்பற்றின்றி கர்மா செய்தால்இக்கர்மாவே சித்த சுத்தி தந்துஞானத்துக்கு வழிகோலும்.) அப்புறம் தேவதைகளின் பிரியத்தையும்அப்பிரியத்தையும்பொருட்படுத்தாத ஞானி ஆகலாம்அப்போது பசு (ஜீவன்) - பாசம் (கயிறு) - பதி (ஈசுவரன்என்கிறமூன்றில் பசுவும் பாசமும் போய்பதி மட்டுமே இருக்கும்பசுவான நாமே பதியாகி இருப்போம்.

சைவ சித்தாந்தத்தில் பசு - பதி - பாசம் என்று எதைச் சொல்கிறார்களோஅதுதான் ஆதிசங்கரரின்அத்வைத வேதாந்தத்தில் ஜீவன் - பிரம்மம் - மாயை என்று சொல்லப்படுகிறதுசங்கரரும் பசு - பாசம்என்ற பதங்களையே 'ஸெளந்தரிய லஹரிசுலோகம் ஒன்றில் பிரயோகித்திருக்கிறார்.

சிரம் ஜீவந்நேவ க்ஷபித பசு பாச வ்யதிகர:

பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம த்வத் பஜனவான்

(
அம்பிகேஉன்னை எவன் பூஜிக்கிறானோ அவன் பசுபாசம் என்கிறவற்றின் சேர்க்கையால்உண்டாகிற விபரீதத்தைப் போக்கிக் கொண்டு ஸதா காலமும் பரமாநந்தம் என்ற ரஸத்தையேருசிக்கிறான்.)

No comments:

Post a Comment