(ஸ்ரீ ராமாநுஜர் எம்பெருமானிடம் சரணாகதி அடையும் முன், முதலில் தாயாரை சரணடைகிறார்)
"ஓம் பகவான் நாராயண அபிமத அநுரூப ஸ்வரூப,
ரூப குண விபவ ஐஸ்வர்ய சீலாதி அநவதிக;
அதிசய அசங்க்யேய கல்யாண குண காணாம்,.பத்மவ நாலயாம் பகவதீம் ஸ்ரீயம் தேவீம் நித்ய,
அநபாயிநீம் நிர்வத்யாம் தேவ தேவ திவ்ய மஹிஷீம்:
அகில ஜகன் மாதரம் அஸ்மின் மாதரம் அசரண்ய,
சரண்யாம் அநந்ய சரணம் அஹம் ப்ரபத்யே"
-சரணாகதி கத்யம்
-
*ஸமஸ்த கல்யாண குணங்களுக்கு பரிபூரணனான ஸ்ரீமந் நாராயணனுக்கு உகப்பாயும் இருக்கிற - எல்லையில்லா குணங்களுடைய ஜஸ்வர்யம், சௌசீல்யம், வாத்ஸல்யம் இவைகளை கொண்டவளும், பகவானைவிட்டு பிரியாதவளும், கமலவனத்தை வாசஸ்தலமாக கொண்டவளும், பரிசுத்தமானவளும், ஜகத்துக்கெல்லாம் தாயானவளும், பெருமாளின் திவ்ய மஹிஷியுமான பிராட்டியை சரணடைகிறேன்!*
*தாயே! சரணாகதியானது அமைய வேண்டிய விதத்தில் ஒரு இடையூறும் இல்லாமல் இருக்க உன்னை சரணடைகிறேன்!*
(என்று சரணாகதி கத்யத்தில் பிரார்த்திக்கிறார். தாயாரும் அவ்வாறே ரக்ஷிக்கிறாள்!)
🙏🙏
No comments:
Post a Comment