Saturday, April 12, 2025

Ramanuja antaadi and its glory

உயர்ந்த குணத்துத் "திருவரங்கத்து 
அமுது" ஓங்கும் அன்பால்,
இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே !!
👏📣🎤📢🔔🔈👌👍🏻

அண்ணல் இராமானுசரை,
அநுதினமும் போற்றிப் பாட 108 ப்ரபன்ன காயத்ரி தந்த திருவரங்கத்து அமுதனார் திருநட்சத்திரம்-இன்று (12/03/2025)
--பங்குனி ஹஸ்தம்.
.'பெரிய கோயில் நம்பி'என்று அறியப்பட்ட இவர் பாடிய இராமானுச நூற்றந்தாதி அமுதம் போன்றிரு
ந்ததால், உடையவர் இவர'
"அமுதனார்"என்றுபோற்றினார்.

  ஹஸ்தமும்,தியாகமும்
   🙏🤚🙏🤚🙏🤚🙏🤚
ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில்,
ஹஸ்த நட்சத்திரத்தில் அவதரித்த மஹான்கள் எல்லோருமே பெரும் தியாகங்களைச் செய்துள்ளார்கள்.

இந்த வரிசையின் தலைவர் தியாகராஜர் என்று போற்றப்படும் காஞ்சி தேவப்பெருமாள்! பேரருளாளர் !!
அவர் யாக நெருப்பில் தம்மையே தியாகம் செய்து திருமேனி எங்கும் தீப்புண் பெற்றார்.தம்முடைய திருக்குமாரைப் போலப் பாவித்து, காத்து,வளர்த்து,தவராசன் ஆக்கிய இராமாநுசரை ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்குத் தியாகம் செய்தார்.
அவரோடு சேர்த்து கூரத்தாழ்வான், முதலியாண்டான் மற்றும் பல சிறந்த ஆசார்யர்களையும் தியாகம் செய்தார்.
தாமே பிள்ளை லோகாசார்யராக ஸ்ரீரங்கத்தில் அவதாரம் செய்தார்.

தை ஹஸ்தத்தில் அவதரித்த கூரத்தாழ்வான் "(ஸ்ரீவைஷ்ணவ)
தரிசனம் காக்க தம் தரிசனம் இழந்தார்"கிருமி கண்ட சோழனிடமிருந்து இராமாநுசரைக் காப்பாற்ற தம் இரு கண்களையும் தாமே பிடுங்கி எறிந்து தியாகம் செய்தார்.கூரத்தில் ராஜாவாக,மிகப் பெரிய செல்வந்தராக இருந்த ஆழ்வானும், அவர்தம் தேவியர் ஆண்டாளும் அனைத்து செல்வங்களை யும் ஒரு வினாடியில் துறந்து,உடுத்திய வஸ்திரத்துடன் வந்து இராமாநுசர் திருவடிகளில் சரணடைந்தனர். அமுதனாரே பாடியது போல,

"மொழியைக் கடக்கும் பெரும்புகழான்
லஞ்ச முக்குறும்பாம் (உயர்குடிப்பிறப்பு,ஞானம்,செல்வம் இவற்றால் இயற்கையாகவே உண்டாகும் அகங்ஹாரம்),
குழியைக் கடக்கும்(தியாகம் செய்த) நம் கூரத்தாழ்வான் !"(இரா.நூற்.7)

பங்குனி ஹஸ்தத்தில் அவதரித்த நம் திருவரங்கத்து அமுதனார், 'பெரிய கோயில் நம்பி' (பெரிய கோயிலின் தலைமை அதிகாரி/நிர்வாக அறங்காவலர்)என்னும் உயர்ந்த பொறுப்பையே இராமானுசருக்
காகத் தியாகம் செய்தார்.அந்தக் காலத்தில் மிகப்பெரிய கெளரவ
மான பதவி ! தம்மிடம் இருந்த கோயில் சாவியையும், நிர்வாகப்பொறுப்பையும் கூரத்தாழ்வான் மூலம் இராமாநுசர் வசம் ஒப்படைத்தார்.பெரிய கோயிலில் அவர் செய்து வந்த புரோகிதக் கைங்கர்யம்,பெற்று வந்த கோயில் மரியாதைகள் அனைத்தையும் தியாகம் செய்தார்.
இராமாநுசர் நியமனப்படி ஆழ்வானை ஆசார்யராக ஏற்றார்.

மேற்சொன்ன இராமாநுச நூற்றந்தாதிப் பாசுரத்தின் அடுத்த இரண்டு வரிகள் அமுதனாரின் தியாகத்தைச் சொல்வதாக உள்ளது.

"பழியைக் கடத்தும் இராமாநுசன் புகழ் பாடியல்லா,
வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தம் அன்றே !!"
(மேலும் பல பாசுரங்களிலும் அமுதனாரின் தியாகப் பான்மையைக் காணலாம்.)

அமுதம் அருளிய அமுதனார்:
🥭🍌🍇🍈🍉🍊🍋🍍🥥🍚🍚
ஆண்டாள், நாச்சியார் திருமொழியில்,
"என் அரங்கத்து இன்னமுதர் குழலகர் வாயழகர்,
கண்ணழகர்,கொப்பூழில் எழுகமலப் பூவழகர்"என்று அரங்கரைப் பாடுகின்றார்.

அது போல் அமுதனார் பாடிய,

"காவியத் தலைவர் அமுதம்,
சொல் அமுதம்,
பொருள் அமுதம்,
பாங்கு/பாவம் அமுதம்,
இன்புற்ற சீலம் அமுதம்,
அசை,இசை அமுதம்,
முன்னோர் மாண்பு அமுதம்,
தம் நைச்சியம் அமுதம் !!"

சாதாரணமாக நாம் உண்ணும் பிரசாதம் என்னதான் அமுதமாக இருந்தாலும் ஓரளவுக்கு மேல் தித்திக்கும்/திகட்டும்.ஆனால் அமுதனாரின் அமுதம் படிக்கப் படிக்க,பருகப்,பருக,இன்னும்,
இன்னும் என்று ஆர்த்தியைத் தூண்டும்.108 பாசுரங்களும்,
பாசுரத்தின் ஒவ்வொரு சொல்லும் அமுதமே.அப்படி ஒரு சொல் தான் 'கார்த்திகையானும்' என்று தொடங்கும்,22 ஆம் பாசுரத்தின் இறுதிவார்த்தை "சேமவைப்பே"

சேம வைப்பு என்பதை ஆங்கிலத்தில் Provident Fund என்பார்கள். வாழ்க்கையில் பணி செய்யும் காலம் முடிந்து,ஓய்வுகாலத்துக்கு உதவுவது தான் சேமவைப்பு.வாழும் காலமே முடிந்து, மீண்டும் பிறவாநிலை என்னும் மோட்சத்தை ஸ்ரீவைகுண்ட நாதரின் திருவடியில் அடைய வேண்டும் என்றாலும் ஒரு சேம வைப்பு தேவை.அநத சேமவைப்பே "இராமானுசன்"என்கிறார் அமுதனார். இதற்கான விளக்கத்தை 23 ஆம் பாசுரத்தில் சொல்கிறார்.

"வைப்பாய வான்பொருளென்று,
நல்லன்பர் மனத்தகத்தே ,
எப்போதும் வைக்கும் இராமானுசனை,
இருநிலத்தில் ஒப்பார் இல்லாத இருவினையேன்(??),வஞ்ச நெஞ்சில் வைத்து,
முப்போதும் வாழ்த்துவன்,
என்னாம் இது அவன் மொய்புகழ்க்கே!!!"

ஒருவகையில் பார்த்தால் இராமானுச நூற்றந்தாதியும் ஒரு இதிகாசமே.!!!
🙏🌺🍀🌸🙏🏿
இதிகாசம் என்பது காவியத்தலைவர் வாழ்ந்த காலத்திலேயே எழுதப்பட்டு,
அவர் செவிசாற்றி அருளிய உன்னத கிரந்தம்.அந்த வகையில் வால்மீகி முனிவர் இராமர் காலத்திலேயே இராமாயணம் பாட,ஶ்ரீ இராம பிரான்(தம் பிள்ளைகள் லவ,குசர்கள் மூலம்) கேட்டு மகிழ்ந்தார்.
வேதவியாசர் ஶ்ரீ கிருஷ்ணர் காலத்திலேயே மகாபாரதம் பாடினார். மகாபாரதத்தின் சத்தான விஷ்யமான 'விஷ்ணுசஹஸ்ரநாமம்' பீஷ்மரால் சொல்லப்படும் போதே ஶ்ரீகிருஷ்ணர் கேட்டு அருளினார்.
அதே போல் பெரிய கோயில் நம்பி என்றழைக்கப்பட்ட திருவரங்கத்து அமுதனார்,ராமானுசர்
காலத்திலேயே "இராமானுச நூற்றந்தாதி" இயற்றினார்.
அதை அவரே பாட இராமானுசர் கேட்டு மங்களாசாசனம் செய்தார்.

ஒரு நாள் இராமாநுசரை வர வேண்டாம் என்று நியமித்து,
பெரியபெருமாளே அமுதனாரைப் பாடச்சொல்லிக் கேட்டு மகிழ்ந்தார்!!.

ஆழ்வார்களின் அருளிச்செயல் வரிசையில் "இராமாநுச நூற்றந்தாதி"யையும்
 "நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில்" சேர்க்குமாறு பெருமாள் நியமித்தார்.

முக்கோல் முனிவருக்கு மூன்று சாற்றுமறைப் பாசுரங்கள் !!!
    👌👌👌👌👌👌👌👌👌👌
ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்களில் கடைசி இரண்டு பாசுரங்களும் சாற்றுமறைப் பாசுரங்களாக இரண்டு முறை சேவிக்கப் படும். ஆனால் அமுதனாரின் இராமாநுச நூற்றந்தாதியில் மட்டும் மூன்று பாசுரங்கள்- "இருப்பிடம்வைகுந்தம்"(106),
"இன்புற்ற சீலத்து இராமாநுச"(107),
"அங்கயல் பாய் வயல்"(108)
சாற்றுமறைப் பாசுரங்கள். இதற்குக் காரணம் அமுதனாரும் அவர் சீடர்களும் காட்டழகிய சிங்கர் சந்நிதியில் அமர்ந்து, இராமாநுச நூற்றந்தாதி எழுதிக் கொண்டிரு
ந்தனர்.105 ஆவது பாசுரம் முடித்து,106 தொடங்கும் முன்னர் அழகியசிங்கரைச் சேவிக்க உடையவரே அங்கு வந்து விட்டார். உடனே அவர்கள் அனைவரும் எழுந்து நின்று அவரைச் சேவித்தனர்.
சாற்றுமறைப் பாசுரங்களை எழுந்து நின்று சேவிப்பதால், எழுந்து நின்றதற்குப் பின்னால் சேவித்த மூன்று பாசுரங்களும் சாற்று மறைப் பாசுரங்கள் ஆயின!!!

இராமாநுச நூற்றந்தாதி உற்சவம் !!
🔕🙏💐🔕🙏💐🔕🙏💐🔕🔕
பங்குனி பிரம்மோற்சவத்தின் பத்தாம் நாளான இன்று இரவு (அமுதனார் அவதரித்த ஹஸ்த நட்சித்திரத்தில்),"சப்தாவரணம்" 
(சப்தம் இல்லாமல் பெருமாள் வீதி உலா வருவது) நடைபெறும்.
பெருமாள், வீதி புறப்பாடு நடக்கும்போது அத்யாபக கோஷ்டியாரை இராமானுச நூற்றந்தாதி பாசுரத்தைக் கோஷ்டியில் சாதிக்கச் சொல்லித், தானும் மற்ற அனைத்து மக்களும் காதுகுளிரக் கேட்பதற்காகப் பெரிய மேளத்தை, விடுத்து சிறிய மிருதங்கத்தை இசைக்கச் சொல்லி கட்டளையிட்டார். இந்த காரணத்தினால் இந்த விழா சப்தாவரணம் எனப்படுகிறது.
ஸ்ரீ ரங்கா! ரங்கா கோபுரத்திலிருந்து புறப்படும் போது சில வினாடிகள் வாத்தியம் ஒலிக்கப்படும்.பின்னர் உத்திர வீதியின் நான்கு மூலைகளிலும் பெருமாள் எழுந்தருளும் போது சில வினாடிகள் ஒலிக்கப்படும்.(பெருமாள் புறப்பாட்டில் எழுந்தருள்கிறார் என்று அந்தந்த வீதிகளில் உள்ளோர் அறிகைக்காக).மற்றபடி மிக அமைதியாக அத்யாபகர்கள் இராமாநுச நூற்றந்தாதி சேவிப்பது மட்டும் கேட்கும்.பெருமாளும் தம் "உடையவரின்" பெருமையைப் கவனமாகக் கேட்டு இன்புற்று வருவார்.

இந்த திருநாளில் பெருமாள் வீதி வலம் வந்தபின், தாயார் சந்நிதியில் திருவந்திக்காப்பு கண்டருளி, உடையவர் சந்நிதிக்கு எழுந்தருள்வார். இராமாநுசரும் கைத்தலமாக (அர்ச்சகர் கையில் தாங்கியபடி) சந்நிதி திருமுற்றத்தில் எழுந்தருளி,பெருமாளைக்
கண்குளிரச் சேவிப்பார். பெருமாள் இராமாநுசருக்கு உடுத்துக் களைந்த பீதக ஆடை,மாலை,சந்தனம்,தீர்த்தம்,
சடாரி சாதிப்பார். இராமாநுசர் பெருமாளுக்கு இளநீர் அமுது நைவேத்யம் செய்வார்.
பெருமாள் போனகம் செய்த சேடத்தை புனிதமாக ஸ்வீகரித்துக் கொள்வார் இராமாநுசர்.

இந்த இராமாநுச நூற்றந்தாதி சப்தாவரணம் விழா பங்குனி உற்சவத்தில் மட்டுமல்லாது,
தை,மற்றும் சித்திரை உற்சவங்களின் பத்தாம் நாளன்றும், இதே போல நடைபெறுகிறது.

"நயந்தரு பேரின்பம் எல்லாம் பழுதென்று நண்ணினர்பால்,
சயந்தருகீர்த்தி இராமானுசமுனி 
தாளினைமேல்,
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்து அமுது,ஓங்கும் அன்பால்,
இயம்பும்,கலித்துறை அந்தாதி ஓத,இசைநெஞ்சமே!!"

திருவரங்கத்தமுதனார் வாழி திருநாமம் !!
👌🥁🎸🎺🎻🎷👌🔔

"எந்தாதை கூரேசன் இணையடியோன் வாழியே !
எழில் மூங்கிற்குடி விளங்க இங்கு வந்தோன் வாழியே !
நந்தாமல் எதிராசர் நலம் புகழ்வோன் வாழியே !
நம் மதுரகவி நிலையை நண்ணினான் வாழியே !
பைந்தாம் அவ்வரங்கர் பதம் பற்றினான் வாழியே !
பங்குனியில் அத்த நாள் பாருதித்தோன் வாழியே !
அந்தாதி நூற்றெட்டும் அருளினான் வாழியே !
அணியரங்கத்து அமுதனார் அடியிணைகள் வாழியே !!!"

(அடியேன் பார்த்தசாரதி இராமாநுசதாசன்)

No comments:

Post a Comment