Wednesday, February 21, 2024

Eight kaalams - which work to do? at what time?

#எட்டுகாலங்கள் ......
⭕விடியலுக்கு முன் 3 மணி முதல் 6 மணி வரை #பிரம்மமுகூர்த்தம்.
⭕அதிகாலை 6 மணி முதல் 7 மணி வரை #தேவர்கள்காலம்.
⭕முற்பகல் 9 மணி முதல் 12 மணிவரை #ரிஷிகளின்காலம்.
⭕நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை #பிதுர்க்களின்காலம்.
⭕பிற்பகல் 3 மணி முதல் 6 மணிவரை #சந்தியாகாலம்.
⭕முன் இரவு 6 மணி முதல் 9 வரை பூத காலம். நடு இரவு 9 மணி முதல் 12 மணி வரை #பிரேதகாலம்.
⭕பின் இரவு 12 மணி முதல் 3 மணிவரை #ராக்ஷசகாலம் 
🌺 இதில் பிரம்ம முகூர்த்த காலத்தில் யாவற்று சுபகாரியங்களும் திதி,நக்ஷத்ரம் ,சரியில்லாவிட்டாலும் செய்யலாம்.
🍑 உதய காலம் தேவர்களுடையதால் வேளையும், நக்ஷத்ரமும் உகந்ததாய் இருக்க வேண்டும்.
🔥 ரிஷிகளின் காலத்தில் நற்காரியங்கள் செய்ய நல்ல ஓரை,திதி, நக்ஷத்ரம் , வேளை அடுத்தபடியாகவும், தேர்ந்து செய்ய வேண்டும்.
🍁 பிதுர்க்களின் காலத்தில் திதியினை பிரதானமாகவும் , நக்ஷத்ரத்தை அடுத்தபடியாகவும் தேர்வு செய்ய வேண்டும்.
🌑சந்தியா காலத்தில் மனித விருப்பங்கள், கேளிக்கைகள் போன்ற எக்காரியமும் செய்யாது, இறை வழிபாட்டிற்கும்,ஜெபம், தவம், போன்றவற்றை மட்டுமே செய்ய வேண்டும்.
🌞 நடுப்பகல் சரியாக 12 மணி அல்லது , நடு இரவு சரியாக 12 மணியில் எந்தக் காரியத்தையும் துவங்கவோ , முடிக்கவோ கூடாது.🙏

No comments:

Post a Comment