பூர்வ புண்ணியம்
*இருந்தால்*
*எல்லாரும் சுகமாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார் பகவான்;ஆனால், எல்லாருமே சுகமாக இருக்க முடிவதில்லை.
*காரணம்,அவரவர் கர்மவினைகளுக்குத் தகுந்தபடி தான், வாழ்க்கை அமைகிறது.
*பூர்வ புண்ணியம் இருந்தால், செல்வம், சுக போகங்களை இந்த ஜென்மாவில் அனுபவிக்கலாம்.
*புண்ணியம் இல்லாவிடில், சிரமப்பட வேண்டியது தான்; பணக்காரனை பார்த்து, பெருமூச்சு விட வேண்டியது தான்.
*ஆயிரம் பேருக்கு, இலவசமாக சாப்பாடு போடுவதை, \"சகஸ்ர போஜனம்' என்பர்.
*ஆயிரத்துக்கும் அதிகமானால் பரவாயில்லை; குறையக் கூடாது.சாப்பாடு என்றால் ஏதோ,"போட்டதை சாப்பிட்டு விட்டு போ...' என்பது மாதிரியல்ல;வயிறு நிறைய சாப்பாடு.
*பல வித பதார்த்தங்கள், லட்டு, ஜிலேபி, பாயசம், அக்காரவடிசல்... இப்படி ஏகப்பட்ட அயிட்டம், சகஸ்ர போஜனத்தில் உண்டு.
*எல்லாரும் சந்தோஷமாக சாப்பிட வருகின்றனர்.அதில், ஒருவனுக்கு வயிற்று வலி.ஒரு உருண்டை சாம்பார் சாதம் உள்ளே போனாலே, வயிற்று வலி வந்து விடும்.
*இவனால் எப்படி நன்றாக சாப்பிட முடியும்?மற்றொருவனுக்கு சர்க்கரை வியாதி. இவனால் லட்டு, ஜிலேபி, பாயசம் எதையும் சாப்பிட முடியாது. இவனாலும் ஆசை தீர, வயிறு நிறைய சாப்பிட முடியாது.
*அடுத்தவன், உடல் நலமில்லாதவன். நாட்டு மருந்து சாப்பிடுகிறான். பூசணிக்காய், பாகற்காய், மாங்காய், வாயு பதார்த்தங்களை, சாப்பிடக் கூடாது என்பது, வைத்தியரின் உத்தரவு.
*இவனாலும், திருப்தியாக சாப்பிட முடியாது."எல்லாரும், வேண்டியதைக் கேட்டு, திருப்தியாக சாப்பிடுங்கள்' என்றார் சாப்பாடு போடும் அன்பர்.
*ஆனால், அப்படி சாப்பிட முடியாதவர்களும் இருக்கின்றனரல்லவா...இதைப் போலத் தான் பகவான், எல்லாரும் சுகமாக இருக்க வேண்டும் என்று விரும்பி, அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தாலும், இவர்களுடைய தீவினை காரணமாக, சுகத்தைப் பெற முடிவதில்லை.இதற்கு, பகவான் என்ன செய்ய முடியும்?
*போனது போகட்டும்...இந்த ஜென்மாவிலாவது, நல்ல காரியங்களை செய்து, புண்ணியத்தை தேடிக் கொள்.
*அடுத்த பிறவியிலாவது செல்வச் செழிப்புடன் சுகமாக இருக்கலாம், என்கின்றனர் தவசீலர்கள்.
*ஆனால், நம்மில் பலருக்கு, பணம் தான் கண்ணுக்குத் தெரிகிறது; புண்ணியம் தெரிவதில்லை.
*அதனால், கண்ணுக்குத் தெரிந்த பணத்தின் மீது ஆசை!சேர்த்து சேர்த்து வைத்து, எண்ணி எண்ணி பார்த்து, சந்தோஷப்படு கிறான்.
*புண்ணித்தை தேடிக் கொள் என்றால்,"போங்க சார்... புண்ணியத்தை எவன் கண்டான்...' என்கின்றனர்.
*ஆனால், கண்ணுக்குத் தெரியாத புண்ணியம் தான் பரலோகத்திலும்,அடுத்த பிறவியிலும், கை தூக்கி விடும் என்பதை, புரிந்துகொள்ள
வேண்டும்....
No comments:
Post a Comment