துறவறம் - வினோபாஜி அளித்த விளக்கம்
சபர்மதி ஆஸ்ரமத்தில் ஒரு நாள் உணவில் பாவைக்காய் பரிமாறப்பட்டது. வினோபாவிற்குப் பாவைக்காயைப் பிடிக்காது. தட்டில் போட்டதை என்ன செய்வது? அனைத்தையும் எடுத்து ஒரே வாயில் போட்டு விழுங்கி விட்டார். இதைக் கவனித்த காந்திஜி, "உனக்கு பாவைக்காய் பிடிக்குமா? இந்தா" என்று மேலும் பாவைக்காயை வினோபாவின் தட்டில் பரிமாறுகிறார்.
வினோபா எழுதுகிறார் : "துறவறம் என்பது பிடித்ததை விடுவது மட்டுமல்ல, பிடிக்காததையும் ஏற்றுக் கொள்வது'
- ஜெயந்திஸ்ரீ பாலகிருஷ்ணன் உரையிலிருந்து
No comments:
Post a Comment