Tuesday, January 10, 2023

Raghuttama teerthar

ரகூத்தம தீர்த்தர்

ரகூத்தம தீர்த்தர் உத்திராதி மடத்தின் மத்வ பீடாதிபதி. 1548 ஆம் வருஷம் பீஜப்பூர் சமஸ்தானத்தில் இருந்த மன்னூர் என்ற ஊரில் ஒரு செல்வந்தருக்கு மகனாகப் பிறந்தார். தன்னுடைய ஏழாவது வயதில் உபநயனம் செய்யப்பட்டு அப்பொழுதே சன்யாச தீக்ஷை பெற்றுக்கொண்டார். அப்பொழுது உத்திராதி மடத்தின் பீடாதிபதியாக இருந்த ரஹுவர்ய தீர்த்தர் சித்தியடையவே அப்பொழுதே அம்மடத்தின் பீடாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 

கும்பகோணம் மத்வ மட பீடாதிபதியான விஜயேந்திர தீர்த்தரும், உடுப்பி மத்வ மட பீடாதிபதியுமான வாதிராஜ தீர்த்தரும் இவருடைய சம காலத்தவர்கள்.

ரகூத்தம தீர்த்தர் மத்வாசாரியார், ஜெய தீர்த்தர், மற்றும் வியாச தீர்த்தரின் நூல்களுக்கு மொத்தமாக ஒன்பது விரிவுரைகள் எழுதியுள்ளார். இவருடைய உரைகள் தெளிவாகவும், சுருக்கமாகவும் இருந்ததால் பிற்காலத்தில் பெரிதும் போற்றப்பட்டன. தென் இந்தியாவின் பல க்ஷேத்திரங்களுக்கும் சென்று ஸ்வாமியை வழிபட்டு மக்களுக்கு நல்ல உபதேசங்களை எளிய முறையில் உரைத்தார்.

மகாவிஷ்ணுவின் லீலா விநோதங்களை மக்கள் மனத்தில் பதியும் வண்ணம் எடுத்துரைத்தார். அவரவர் நற்குணங்களே ஜாதி வேறுபாடில்லாமல் தங்களை மேம்படுத்தும் என்று விளக்கினார். முப்பத்து 
ஒன்பது வருஷங்கள் மத்வ சம்பிரதயாத்திற்கு மடாதிபதியாகவும், வித்யா ஆலோசகராகவும், உரையாசிரியராகவும் மகத்தான சேவை புரிந்த பின்பு திருக்கோயிளுரில் 1595 ஆம் வருஷம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் தியானத்தில் அமர்ந்தார். தன்னைச் சுற்றி பிருந்தாவனம் எழுப்பச்செய்து மஹான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளைப் போலவே ஜீவ பிருந்தாவனஸ்தரானார். இன்றும் அவர் அவ்விடத்தில் இருந்து கொண்டு பக்தர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்கு சுபத்தை நல்குகிறார்.

---அடியேன் ஸி.எஸ்.நாகராஜன்

No comments:

Post a Comment