Sunday, January 8, 2023

how to overcome anger - Osho

கோபம்
அவமானம்
ஒஷோ.

குர்ட்ஜிப் தன் வாழ்க்கையை ஒரு சிறிய விஷயம் முழுமையாக மாற்றியதாக சொல்கிறார்.

அவரது தந்தை மரணப்படுக்கையில் 
மகனை அழைத்தார்.

குருட்ஜிப்புக்கு ஒன்பதே வயது தான்.

அவர் தன் மகனிடம் நான் எதுவும் 
அதிகமாக உனக்கு கொடுப்பதற்கு இல்லை. 
 
ஆனால் என் தந்தை தனது மரணப்படுக்கையில் எனக்கு 
கொடுத்த அறிவுரை ஒன்று உள்ளது. 

அது எனக்கு மிகப் பெரிய அளவில் 
நன்மை அளித்துள்ளது.  
 
அது ஒருவேளை உனக்கு கூட 
பயனுள்ளதாக இருக்கலாம்  

இப்பொழுது நீ இதை புரிந்து 
கொள்ளமுடியும் என்று நான் நினைக்கவில்லை. 

மிகவும் இளமையாய் இருக்கிறாய்.

இதை நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்.
 
உனக்கு இது புரியும் பொழுது 
உனக்கு உதவிகரமாய் இருக்கும்.
 
ஒரு விஷயம் மட்டும் ஞாபகம் 
வைத்துக் கொள்.
 
நீ கோபம் இருப்பதாக உணர்ந்தால் 
24 மணி நேரம் காத்திருக்கவும்.
 
அப்புறம் எதை வேண்டுமானாலும் 
நீ செய்ய விரும்புவதை செய்.
 
ஆனால் 24 மணி நேரம் 
மட்டும் காத்திருக்கவும்.
 
யாராவது அவமானப்படுத்தினால் 
அவரிடம் நீ சொல்.

நான் 24 மணி நேரம் கழித்து வருகிறேன.
 
அப்புறம் தேவைப்படுகிறது 
எதுவோ அதை செய்கிறேன்.
 
தயவுசெய்து எனக்கு சிந்திப்பதற்கு சிறிது நேரம் கொடுங்கள் என்று சொன்னார்.
 
ஆனால் 9 வயதேயான குர்ட்ஜிப்பால் 
அது என்னவென்று புரிந்து கொள்ள முடியவில்லை.
 
ஆனால் அவர் அதை பின்பற்றினார்.
 
வெகுவிரைவில் அதன் மாபெரும் தாக்கத்தை புரிந்து கொண்டார்.
 
அவர் முழுமையாக உருமாற்றம் செய்யப்பட்டார்.
  
ஏனென்றால் அவர் இரண்டு விஷயங்களை நினைவு கொள்ள வேண்டியிருந்தது.
 
ஒன்று அவர் விழிப்புணர்வோடு இருந்து கொண்டு கோபிக்காமல் இருப்பது.
 
தன்னை யாராவது அவமானப்படுத்தினால் கோபம் அடையாமல் இருப்பது.
 
பிறரால் தான் கையாளப்படுவது தகாதது.
24 மணி நேரத்திற்கு அவர் காத்திருக்க வேண்டும.
 
ஆகவே யாராவது ஒருவர் அவருக்கு 
எதிராக ஏதாவது சொன்னால் அவர் விழிப்புணர்வோடு எதுவும் பாதிக்கப்படாமல் அப்படியே தங்கி இருக்க வேண்டும்.
 
தான் பாதிக்கப்படாத வகையில் 
அவர் தங்கியிருக்க வேண்டும்.
 
24 மணி நேரங்களுக்கு அடக்கமாகவும் அமைதியாகவும் தான் தங்கியிருப்பதாக மரணப்படுக்கையில் இருந்த தன் தந்தைக்கு வாக்களித்திருந்தார்.

வெகு விரைவில் அவர் 
அந்த தகுதியை பெற்றுவிட்டார்.

அதன்பின் 24 மணி நேரங்களுக்கு பின்னால் அது தேவைப்படவில்லை என்பதை புரிந்து கொண்டார்.
 
24 மணி நேரத்திற்குப் பின்பு 
கோபப்பட முடியாது.
 
24 நிமிடங்களுக்கு பின்னாலும் 
கோபப்பட முடியாது.
 
24 விநாடிகளுக்கு பின்னாலும் 
கூட கோபப்பட முடியாது.

ஒன்று உடனடியாக இருக்கும்.
 
இல்லையென்றால் இருக்காது.

நீங்கள் விழிப்புணர்ச்சி இல்லாமல் இருக்கும்போது மட்டுமே கோபம் செயல்படுகிறது.
 
24 வினாடிகள் காத்திருந்து பிறகு கோபப்படலாம் என்னும் இந்த அளவு விழிப்புணர்வு உங்களுக்கு இருந்தால் 
கூட போதும் - முடிந்தது.

ஆம் நீங்கள் அப்போது கோபப்பட முடியாது.

அந்த கணத்தை தவற விட்டு விட்டீர்கள் அல்லவா?
 
நீங்கள் ரயிலை கோட்டை விட்டு விட்டீர்கள்.
 
பிளாட்பாரத்தை விட்டு ரயில் சென்று விட்டது.

இருபத்து நான்கு வினாடிகள் கூட போதும்.
 
அதற்கு முயற்சி செய்து பாருங்களேன்.

ஓஷோ.

No comments:

Post a Comment