சாளக்கிராம பூஜை
சாளக்கிராம பூஜை செய்பவன்
சித்தம் சுத்தமாகும்.
சாளக்கிராம பூஜை செய்பவன்
விஷ்ணுவாகவே ஆகிவிடுகிறான்.
சாளக்கிராம சிலாவின் பிம்ப தரிசனம்
கொலை செய்தவனின்
பாபத்தையும் போக்கும்.
சாளக்கிராமத்தை நினைத்தாலும்,
தரிசித்தாலும், பூஜை செய்தாலும்,
சிங்கத்தை கண்டு மற்ற மிருகங்கள்
தெறித்து ஓடுவதுபோல.
பாபங்கள்_கழன்று_ஓடும்.
இதனை பக்தியுடனோ அல்லது
பக்தியேஇல்லாது அல்லது
எதிர்பாராமல் திடீரென பூஜை செய்ய
நேர்ந்தாலும்_முக்தி_உண்டு.
சாளக்கிராம பூஜை செய்பவனுக்கு
எமபயமில்லை.
சந்தனம், புஷ்பம், தீபம், தூபம்,
நைவேத்தியம்
இப்பூஜையினை_செய்பவர்கள்
விஷ்ணுலோகத்தில் அனந்தகாலம்
வாழ்வார்கள்.
சாளக்கிராமத்தை
பக்தியுடன்_நமஸ்கரித்தவன்
தேவனாகிறான்...!
அவன் சாதாரண மனிதன்
அல்லன்...!
சாளக்கிராமம்- பகவான் இருக்குமிடம்.
சர்வ பாபங்களையும நாசம்_
செய்யவல்லது.
பாபங்கள் செய்தவர்கள் கூட
சாளக்கிராம பூஜையினால் பரகதி
அடைகிறார்கள்.
பக்தியோடு
செய்பவர்கள் முக்தியடைகிறார்கள்.
அரணி கட்டையில் அக்னி
உண்டாவதுபோல, சாளக்கிராமத்தில்
ஹரி இருக்கின்றார். லஷ்மி மற்றும்
வைகுண்டத்தில் இருப்பதைவிட
ஹரி சாளக்கிராமத்தில் மிகவும்
பிரசன்னமாகவே உள்ளார்.
சாளக்கிராமத்தை பூஜை செய்தால்
அக்னிஹோத்தரமும் பூதானமும்
செய்த பலன்.
இராஜசூய யாகம் ஆயிரம் செய்தாலும்,
ஒரு நாள் சாளக்கிராமத்தை பூஜை
செய்த பலனுக்கு ஈடாகாது.
பன்னிரெண்டு சாளக்கிராமம்
கொண்டு பூஜை செய்தால்
பன்னிரெண்டு கோடி சிவலிங்கங்களை பன்னிரெண்டு கல்பகாலம்
பூஜை செய்தபலன்
ஒரே நாளில் கிடைக்கும்.
காமக்குரோதம் உள்ள மனிதன்கூட
சாளக்கிராம பூஜையினால்
முக்திபெறுவான்.
தீர்த்த யாத்திரையோ,
யாகமோ
செய்யாமலே சாளக்கிராம
பூஜையினால் முக்தியடைவான்.
சாளக்கிராம தீர்த்தத்தாலே சர்வ
புண்ய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த
பலனும்,
சர்வ யக்ஞம் செய்த பலனும்
கிடைத்துவிடும்.
பல புண்ணிய தீர்த்த தேவதைகள்
சாளக்கிராமத்தில் சூட்சுமாமயிருந்து
.அருள்பாலிக்கின்றனர்.
விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம்
செய்துகொண்டே சாளக்கிராம பூஜை செய்பவன் விஷ்ணுபதம்அடைகிறான்.
சாளக்கிராமம் இருக்குமிடத்தில்
சமஸ்த லோகங்களும்,
சமஸ்த தேவதைகளும் இருப்பதாக
ஐதீகம்.பஞ்சகவ்யம் ஏன் சாப்பிட வேண்டும்..
சாளக்கிராம தீர்த்தமே போதுமே நம்
உள்ளும் புறமும் சுத்தமாகுமே.
ஒரு திவலை சாளக்கிராமம் தீர்த்தம்
சாப்பிட்டாலே போதுமே, மீண்டும்
பிறவாநிலை கிடைத்துவிடும்
.......................................................................
சாளக்கிராம கல்லை தினமும்
வழிபடுவதால் தீரும் பிரச்சனைகள்....
* சாளக்கிராமத்திற்கு தினமும் பூஜை செய்து வழிபட்டு வந்தால், அவர்களின் மனம் தெளிவடையும். அப்படி தொடர்ந்து பல வருடங்களாக பூஜித்து வரும் ஒருவன், தானே விஷ்ணுவாகவே மாறிப்போவான் என்கிறது புராணம்.
* சாளக்கிராமத்தில் காணப்படும் உருவங்களின் தரிசனம், கொலை பாவத்தைக் கூட போக்கும் சக்தி படைத்தது. சாளக்கிராம கல்லை தரிசித்தால், பூஜை செய்தால்தான் பலன் என்றில்லை. அந்த கல்லைப் பற்றி நினைத்தாலே, நம்முடைய பாவங்கள் அனைத்தும் விலகி ஓடும்.
* இதனை பக்தியே இல்லாமல் ஒருவர் வழிபட்டாலும் சரி, எதிர்பாராத விதமாக திடீரென பூஜை செய்ய நேர்ந்தாலும் சரி, அவருக்கு சாளக்கிராம வழிபாட்டினால் முக்தி உண்டு.
* சாளக்கிராம பூஜை செய்பவர்களுக்கு எமபயம் கிடையாது. இதற்கு சந்தனம் பூசி, மலர் சூடி, தீப மற்றும் தூப ஆராதனைகள் செய்வதோடு, நைவேத்தியமும் படைத்து வழிபட்டு வந்தால், அவர்களுக்கு விஷ்ணு லோகத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கும்.
* சாளக்கிராமம் இருக்கும் இடமானது, இறைவன் இருக்கும் இடத்திற்குச் சமமானது. எனவே அங்கிருக்கும் தீவினைகள் எல்லாம் அகன்று விடுவதோடு, சாளக்கிராம பூஜையைச் செய்பவர்கள், சாதாரண மனிதர்களாக கருதப்பட மாட்டார்கள்.
* சாளக்கிராமத்திற்கு பூஜை செய்தால், யாகமும், தானமும் செய்த பலன் கிடைக்கும். ஆயிரம் ராஜசூய யாகம் செய்தாலும், ஒரு நாள் சாளக்கிராம பூஜை செய்த பலனுக்கு இணையாகாது.
* 12 சாளக்கிராமங்களைக் கொண்டு வழிபாடு செய்தால், 12 கோடி சிவலிங்கங்களை வைத்து, 12 கல்ப காலம் பூஜை செய்த பலன், ஒரே நாளில் கிடைக்கப்பெறும்.
* ஒருவர் முக்தி பெற தீர்த்த யாத்திரையும், யாகமும் அவசியம். ஆனால் சாளக்கிராமை வழிபடுபவர்களுக்கு அது தேவையில்லை. சாளக்கிராமத்திற்கு செய்யும் அபிஷேக தீர்த்தத்தை தலையில் தெளித்து, பருகினாலே புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் வந்துசேரும்.
* விஷ்ணு சகஸ்ரநாமத்தை படித்தபடியே, சாளக்கிராம பூஜை செய்பவர்கள் விஷ்ணுவின் திருவடியை அடைவதாக நம்பிக்கை.
No comments:
Post a Comment